search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அத்திப்பழம்"

    • உடல் எடையை பராமரிக்க உதவுகிறது.
    • நாள்பட்ட நோய் தாக்கும் ஆபத்தைக் குறைக்கிறது.

    அத்திப்பழத்தில் நம் உடலுக்கு தேவையான வைட்டமின், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் அதிகமாக உள்ளது. இந்த பழம் இயற்கையாகவே இனிப்பாக இருப்பதோடு நமது செரிமான செயல்பாடு ஆரோக்கியமாக இருப்பதற்கும் உடல் எடையை பராமரிக்க உதவக்கூடிய நார்ச்சத்தையும் கொண்டுள்ளது. நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் வைட்டமின் ஏ, ரத்தம் உறைவதற்கும், எலும்பு ஆரோக்கியத்திற்கும் உதவும் வைட்டமின் கே மற்றும் மூளையின் செயல்பாட்டிற்கு உதவும் வைட்டமின் பி6 போன்றவை அத்திப்பழத்தில் அதிகமாக உள்ளது.

    இதுதவிர நமது இதய ஆரோக்கியம், தசை செயல்பாடு, எலும்பு அடர்த்தி அகியவற்றுக்கு உதவும் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்றவையும் அத்திப்பழத்தில் உள்ளது. இதில் உள்ள பாலிபீனால் என்ற ஆண்டி ஆக்ஸிடெண்ட் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை ஒழுங்குப்படுத்தி நாள்பட்ட நோய் தாக்கும் ஆபத்தைக் குறைக்கிறது.

    குளிர்காலத்தில் ஏன் அத்திப்பழத்தை சாப்பிட வேண்டும்?

    அத்திப்பழத்தை அப்படியே பிரெஷாகவும் சாப்பிடலாம் அல்லது உலர வைத்தும் சாப்பிடலாம். இதிலிருக்கும் இனிப்புச் சுவையை ரசித்து உண்ணும் போது நமக்கு எந்த குற்றவுணர்ச்சியும் ஏற்படுவதில்லை. மேலும் அத்திப்பழத்தில் உடலை சூடுபடுத்தும் தன்மை உள்ளது.

    இதன் காரணமாக குளிர்காலத்தில் உடலுக்கு தேவையான வெதுவெதுப்பை கொடுத்து தேவையற்ற உடல்நலக் கோளாறுகளில் இருந்து நம்மை காக்கிறது. நமது தினசரி டயட்டில் அத்திப்பழத்தை பயன்படுத்தி வரலாம்.

    • குடல் இயக்கங்கள் சீராக நடைபெறுவதற்கு நார்ச்சத்து முக்கியமானது.
    • அத்திப்பழத்தில் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளன.

    உடல் எடையை குறைப்பதற்கும், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கும் பலரும் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள். உடல் எடையை கட்டுக்கோப்பாக பராமரிக்க விரும்புபவர்களுக்கு அத்திப்பழம் சிறந்த தேர்வாக அமையும். அதில் இருக்கும் நார்ச்சத்து வயிறு நிறைந்த உணர்வை தரும். பசியை தடுக்கும். அதனால் அதிகம் சாப்பிடத்தோன்றாது.

    மேலும் அத்திப்பழத்தில் இயற்கையாகவே கலோரிகள் குறைவாக இருப்பதால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க துணை புரியும். உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுவதோடு பல்வேறு உடல் நல நன்மைகளை அத்திப்பழம் வழங்குகின்றன. அவை ஒட்டுமொத்த உடல் நலனை காப்பதில் நிகழ்த்தும் மாயஜாலங்கள் குறித்து பார்ப்போம்.

    செரிமானத்தை எளிதாக்கும்

    அத்திப்பழத்தின் தனித்துவமான பண்புகளில் ஒன்று, நார்ச்சத்து அதிகம் கொண்டிருப்பதுதான். குடல் இயக்கங்கள் சீராக நடைபெறுவதற்கு நார்ச்சத்து முக்கியமானது. தொடர்ந்து அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவி புரியும். அதனால் செரிமானம் மேம்படும். இதில் இருக்கும் எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்து கழிவுப்பொருட்களுடன் பிணைக்கப்பட்டு அவை குடல் வழியாக விரைவாக வெளியேற உதவும்.

    அத்திப்பழத்தில் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளன. அவை ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராடுவதற்கும், உடலில் தீங்கு விளைவிக்கும் ஃபிரீ ரேடிக்கல்களை கட்டுப்படுத்துவதற்கும் உதவி புரியும். இந்த ஆன்டி ஆக்சிடென்டுகளில் கிவெர்செடின், கேடசின்கள் மற்றும் அந்தோசயின்கள் போன்ற பாலிபினால்கள் அடங்கும். இவை இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்க உதவும்.

    இதய ஆரோக்கியம்

    இதயத்திற்கு உகந்த பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அத்திப்பழத்தில் உள்ளன. ரத்த அழுத்தத்தை பராமரிக்க தேவையான எலக்ட்ரோலைட்டுகள் இதில் ஏராளம் உள்ளன. கூடுதலாக, மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் ரத்த நாளங்களின் செயல்பாடுகளை அதிகரிப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை பலப்படுத்துகின்றன. ரத்த அழுத்தத்தை சீராக்குவதற்கும் உதவி புரிகின்றன.

    எலும்பு ஆரோக்கியம்

    அத்திப்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் இருப்பதால் எலும்பு உருவாக்கம் மற்றும் பாதுகாப்பிற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. எலும்பு அடர்த்தியை மேம்படுத்தி ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு தொடர்பான பிரச்சினைகளின் அபாயத்தை குறைக்க உதவுகின்றன.

    சர்க்கரை அளவு

    அத்திப்பழம் மிட்டாய் போன்று லேசான இனிப்பு சுவையை கொண்டிருந்தாலும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டவை. அதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவை நிர்வகிப்பதற்கு பொருத்தமானதாக இருக்கும். இதில் இருக்கும் நார்ச்சத்து, சர்க்கரை உறிஞ்சப்படுவதை தடுக்க உதவி புரியும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த நினைப்பவர்களுக்கு பொக்கிஷமாக அத்திப்பழம் அமையும்.

    சரும நலன்

    அத்திப்பழம் சரும நலனையும் பாதுகாக்கக்கூடியது. ஆன்டி ஆக்சிடென்டுகளுடன் வைட்டமின் ஏ, பி போன்றவை இருப்பதால் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராட உதவும். கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க தூண்டும். சருமத்தில் கோடுகள், சுருக்கங்கள் தோன்றுவதை குறைத்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அத்திப்பழத்தில் இருக்கும் சத்துக்கள் இயற்கையாகவே சருமத்திற்கு பளபளப்பு சேர்க்கக்கூடியவை.

    சுவாச ஆரோக்கியம்

    அத்திப்பழத்தில் மூச்சுக்குழாய் அழற்சி பண்புகளுடன் கூடிய சேர்மங்கள் உள்ளன. இவை சுவாச பிரச்சினைகளுக்கு நன்மை பயக்கும் குவெர்செடின் மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவற்றுடன் தொடர்புடையவை. அவை நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தி ஆஸ்துமா போன்ற பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.

    நோய் எதிர்ப்பு தன்மை

    அத்திப்பழத்தில் உள்ள சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும். குறிப்பாக வைட்டமின் சி போன்ற வைட்டமின்கள், துத்தநாகம் போன்ற தாதுக்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதிலும், தொற்றுநோய்களிடம் இருந்து உடலை பாதுகாப்பதிலும், நோய்களை குணப்படுத்த உதவுவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    • ஓமலூர், பெரியேரிபட்டி, வேடப்பட்டி, தும்பிபாடி, டேனீஸ்பேட்டை ஆகிய பகுதிகளில் சம்பு மற்றும் நாட்டு அத்தி மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது.
    • ஓமலூர் வட்டாரத்தில் ஒரு சில விவசாயிகள் அத்தி மரம் நடவு செய்து, அத்திப்பழத்தை சாகுபடி செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி வட்டாரத்தின் எல்லையில் சேர்வராயன் மலைத்தொடர் உள்ளது. இந்த மலைத்தொடரில் உள்ள உள்கோம்பை, டேனீஸ் பேட்டை, பண்ணிகரடு ஆகிய பகுதிகளில் அத்திப்பழ மரங்கள் உள்ளது.

    மேலும், ஓமலூர், பெரியேரிபட்டி, வேடப்பட்டி, தும்பிபாடி, டேனீஸ்பேட்டை ஆகிய பகுதிகளில் சம்பு மற்றும் நாட்டு அத்தி மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த மரங்களில் தற்போது தித்திக்கும் அத்திப்பழங்கள் கொத்துகொத்தாக காய்த்து பழுத்து தொங்குகிறது. அத்தி மரம் ஆண்டுக்கு 3 முறை காய் பிடிக்கிறது.

    பழங்கள், பலா பலத்தை போன்று மரத்தின் கிளைப்பகுதியில் இருந்து உச்சி வரை காய்கள் காய்த்து அழகாக காட்சி அளிக்கிறது. இந்த பழம் ரத்தம் அழுத்தம், சர்க்கரை, இருதயம் தொடர்பான பல்வேறு நோய்களை தீர்க்கும் சக்தி கொண்டது.

    மேலும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்குகிறது. அதனால், அனைவரும் விரும்பி வாங்கி செல்கின்றனர். இந்த பழம் வணிக ரீதியாக லாபம் தரும் என்பதால் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் அத்தி மரங்களை நடவு செய்து பராமரித்து லாபம் பெறலாம் என்று தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர் துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர்.

    ஓமலூர் வட்டாரத்தில் ஒரு சில விவசாயிகள் அத்தி மரம் நடவு செய்து, அத்திப்பழத்தை சாகுபடி செய்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும், அத்திக்காய்களை கொண்டு சாம்பார், பொரியல் செய்வதற்காகவும் விற்பனை செய்யப்படுகிறது. அத்திப்பழம் மற்றும் காய்கள் ரகத்தை பொருத்து கிலோ 200 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரம் மலைப்பகுதியில் மரங்களில் பழுத்துள்ள அத்திப்பழங்கள், பறவைகள் சாப்பிட்டது போக மீதி அனைத்தும் வீணாகி வருகிறது.

    • ஏற்காடு மலை கிராமங்கள் மற்றும் தனியார் காபி தோட்டங்களில் காபி செடியுடன் அத்திமரம் சாகுபடி செய்யப்படுகிறது.
    • மருத்துவ குணம் கொண்ட ருசி மிகுந்த இந்த பழத்தில் நார்ச்சத்துடன், இரும்புச்சத்து அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

    ஏற்காடு:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக ஏற்காடு திகழ்கிறது. இதன் பரப்பளவு 382.67 ச.கிமீ ஆகும்.

    ஏற்காடு மலை கிராமங்கள் மற்றும் தனியார் காபி தோட்டங்களில் காபி செடியுடன் அத்திமரம் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது அத்தி மரங்களில் பழங்கள் கொத்து கொத்தாக பழுத்து தொங்குகிறது. நன்கு கனிந்த பழங்கள் தானாகவே கீழே விழுகின்றன. பழத்தில் இருந்து வெளிப்படக்கூடிய வாசனை கவர்ந்திழுப்பதாக உள்ளது. இதனை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் கிலோ கணக்கில் வாங்கிச் செல்கின்றனர். ஒரு சில தோட்ட உரிமையாளர்கள் அத்திப்பழங்களை சேகரித்து உலரவைத்து பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்கின்றனர்.

    சேலம், கோவை, சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

    மருத்துவ குணம் கொண்ட ருசி மிகுந்த இந்த பழத்தில் நார்ச்சத்துடன், இரும்புச்சத்து அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் வைட்டமின் ஏ மற்றும் சி அடங்கியுள்ளன. மருத்துவ குணமிக்க அத்திப்பழங்கள் ஏற்காட்டில் உள்ள கடைகளில் கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • தேயிலைத் தோட்டங்களில் ஊடுபயிராக காபி, ஏலக்காய் விவசாயமும் மேற்கொள்ளப்படுகிறது
    • 'பைகஸ் கேரிகா' என்ற தாவரவியல் பெயா் கொண்ட அத்திப்பழம் ஆஸ்திரேலியா, மலேசியாவை அடுத்து இந்தியாவில் அதிக அளவில் விளைகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக காய்கறி விவசாயம் முக்கியத்தொழிலாக விளங்கி வருகிறது.

    மேலும் தேயிலைத் தோட்டங்களில் ஊடுபயிராக காபி, ஏலக்காய் விவசாயமும் மேற்கொள்ளப்படுகிறது. இதுதவிர ஆரஞ்சு, கொய்யா, சீதா, அத்தி, எலுமிச்சை உள்ளிட்ட பழ வகைகளும் பயிரிடப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் குன்னூா் மற்றும் மஞ்சூரில் உள்ள தனியாா் தேயிலைத் தோட்டங்களில் அத்திப் பழங்கள் கொத்து கொத்தாக விளைந்துள்ளன.

    இதனை உள்ளூா் மக்கள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளும் ஆா்வத்துடன் வாங்கிச் செல்கின்றனா்.

    ஒருசில தோட்ட உரிமையாளா்கள் அத்திப்பழங்களை பறித்து, உலர வைத்து பாக்கெட்டுகளில் அடைத்து ஊட்டி, குன்னூா், கோவை உள்ளிட்ட சந்தைகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வருகின்றனா்.

    'பைகஸ் கேரிகா' என்ற தாவரவியல் பெயா் கொண்ட அத்திப்பழம் ஆஸ்திரேலியா, மலேசியாவை அடுத்து இந்தியாவில் அதிக அளவில் விளைகிறது. இந்த பழத்தில் நாா்ச்சத்துடன் இரும்புச்சத்து அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த பழத்தில் 45 சதவீத கலோரி உள்ளது. இதில் வைட்டமின் ஏ மற்றும் சி அடங்கியுள்ளன. மருத்துவ குணமிக்க அத்திப்பழங்கள் கோடை சீசனின் இறுதி நிகழ்ச்சியாக குன்னூா் சிம்ஸ் பூங்காவில் வருகிற சனிக்கிழமை நடக்க உள்ள 63-வது பழக்கண்காட்சியில் இடம்பெற உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

    ×