என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    • உடல்நலம் பாதிக்கும்போதுதான் அதற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்.
    • சத்தான சாப்பாடு, நல்ல உறக்கம் மிகவும் அவசியமானது.

    இப்போதெல்லாம் வேலையால் சரியான தூக்கம் இல்லை, சாப்பாடு இல்லை என பலரும் சொல்கின்றனர். ஆனால் சம்பாதிப்பதே சாப்பாடுக்காகத்தான் என்பதை மறக்கின்றனர். ஒருகட்டத்தில் உடல்நலம் பாதிக்கும்போதுதான் அதற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். நல்ல ஆரோக்கியமான உடல் நலத்திற்கென்று தனியாக எதுவும் செய்ய வேண்டாம். சத்தான சாப்பாடு, நல்ல உறக்கம் என்பதை சரியாக செய்தாலேபோதும். ஆனால் இதைத்தான் அனைவரும் செய்ய மறுக்கின்றனர்.

    காலையில் அரக்க பரக்க எழுந்து, பாதி உடல் நனைந்தும், நனையாமலும் குளித்து, அரைவயிறு கூட நிரம்பாமல் அவசரமாக சாப்பிட்டு அலுவலகம் செல்கின்றனர். சிலர் அதைக்கூட சாப்பிடுவது இல்லை. பின்னர் இரவு வந்து சோம்பேறித்தனமாக இருக்கிறது எனக்கூறிவிட்டு கடையில் உணவு வாங்கி சாப்பிடுவது... இடையில் டீக்குடித்து வயிறை நிரப்பிக்கொள்வது. பின்னர் மொபைல் ஃபோனை பார்த்துக்கொண்டே நள்ளிரவில் தூங்குவது. சரியான உணவு, சரியான தூக்கம் இல்லை என்றால் மனித உடல் என்னென்ன விளைவுகளை சந்திக்கும் என்பதை பார்ப்போம்.

    உணவை தவிர்ப்பதால் வரும் ஆபத்துகள்

    பெரும்பாலும் அலுவலகம் செல்பவர்கள், பள்ளி செல்லும் மாணவர்கள் அனைவரும் காலையில் சாப்பிடமாட்டார்கள். இதனால் பல்வேறு பாதிப்புகள் உண்டாகும். மாணவர்கள் பசியால் சரியாக பாடத்தில் கவனம் செலுத்த இயலாது. பெரியவர்களும் வேலையில் கவனம் செலுத்த இயலாது. காலை உணவைத் தவிர்ப்பவர்கள், அடுத்தவேளை அளவுக்கதிகமாக சாப்பிடுவார்கள். இடையில் உட்செல்லும் நொறுவைகளும் அதிகமாகும். இதனால் உடலுக்கு கிடைக்கும் கலோரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதன்மூலம் உடல் எடை உயரும். உணவைத் தவிர்ப்பதால் உடலில் சுரக்கும் 'டோபமைன்' (Dopamine) மற்றும் செரடோனின் (Serotonin) ஹார்மோன்களின் அளவுகள் குறையும். இந்த இரண்டு ஹார்மோன்களும் மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவுபவை. இதன் காரணமாக பிறரிடம் எரிச்சல், கோபத்தை காட்டுவது என இருப்போம். குளுக்கோஸிலிருந்து அதிக ஆற்றலை எதிர்பார்ப்பது மூளைதான். சாப்பிடாமல் இருப்பதால், குளுக்கோஸ் பற்றாக்குறை ஏற்பட்டு, மூளைக்குத் தேவைப்படும் ஆற்றல் முழுமையாகக் கிடைக்காமல் மறதி அதிகரிக்கும். அறிவாற்றலும் குறையும். செய்யும் வேலையிலும் முழு ஈடுபாடு இருக்காது. இதனால் காலை உணவு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. 


    தூக்கமின்மை தலைவலிக்கு வழிவகுக்கும்

    தூக்கத்தை தவிர்ப்பதால் வரும் ஆபத்துகள்

    மனதுக்கும், உடலுக்கும் தூக்கம் மிகவும் அவசியம். அதனால்தான் சரியாக தூங்காவிட்டால் நாம் சோர்வாக தெரிவோம். தூக்கமின்மை நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய், மனநோய், டிமென்ஷியா, எடை அதிகரிப்பு, மனச்சோர்வு, பதட்டம், மன அழுத்தம் போன்றவைகளுக்கு வழிவகுக்கிறது. மேலும் முக்கிய ஹார்மோன் மற்றும் வளர்சிதை மாற்ற செயல்முறைகளை சீர்குலைக்கிறது. ஒரு நாளைக்கு எட்டு மணிநேர தூக்கம் என்பது கண்டிப்பாக அவசியமாகிறது. இந்த எட்டு மணிநேர தூக்கம் ஐந்து அல்லது ஆறு மணிநேரம் எனும் குறையும்போது நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கிறது. ஹார்மோன் ஒழுங்குமுறையில் மாற்றம் ஏற்படுவதால் உடல் பருமன் அதிகரிக்கிறது. சரியான தூக்கம் இல்லாதது தலைவலிக்கு வழிவகுக்கும். மன அழுத்தம் ஏற்படும். தூக்கமின்மையின் போது வேலை செய்ய முயற்சிப்பது வேலை செயல்திறனை கணிசமாக பாதிக்கும். சரியான தூக்கம் இல்லாவிட்டால் உடல் முழுவதும் நடைபெறவேண்டிய செயல்முறைகள் சரியாக இருக்காது. இதனால் மூளையில் உள்ள நியூரான்கள் அதிகமாக வேலை செய்து, சிந்தனையை பலவீனப்படுத்தி, உடல் எதிர்வினைகளை மெதுவாக்கி, மக்களை உணர்ச்சி ரீதியாக சோர்வடையச் செய்கின்றன. நாள்பட்ட தூக்கமின்மை இன்னும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் அனைவரும் உணவு மற்றும் உறக்கத்தில் தகுந்த கவனம் செலுத்த வேண்டும். 

    • உணவு ஒவ்வாமை சுமார் 4-8% குழந்தைகளை பாதிக்கிறது.
    • முட்டை, பால், கோதுமை மற்றும் சோயா ஒவ்வாமைகள் 5 வயதிற்குள் மறைந்துவிடும்.

    குழந்தை வளர்ப்பு என்பது ஒரு சவாலான விஷயம். இதற்கு பல காரணங்கள் உள்ளன. இதில் முக்கியமானது, உணவு ஒவ்வாமை. உணவு ஒவ்வாமை ஏற்பட்டால் குழந்தைகள் சத்துள்ள பொருட்களை சாப்பிட முடியாது, உடல் எடை குறையும், உடல்நலம் பாதிக்கப்படும். உணவு ஒவ்வாமை சுமார் 4-8% குழந்தைகளை பாதிக்கிறது. அந்த வகையில், குழந்தைகளுக்கு உணவு ஒவ்வாமை ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதைக் குணப்படுத்தும் முறைகளைக் காண்போம். 

    குழந்தைகளுக்கு உணவு ஒவ்வாமை இருப்பதை எவ்வாறு கண்டறிவது?

    வளரும் குழந்தைகளுக்கு புதிதாக உணவுகளை பழக்கப்படுத்த வேண்டும் என கொஞ்சம் கொஞ்சமாக சாதம், முட்டை, வேர்க்கடலை, அவித்த உருளைக்கிழங்கு, ஆப்பிள் போன்றவற்றை பெற்றோர்கள் கொடுக்க தொடங்குவார்கள். அப்படி இந்த பொருட்கள் ஒத்துகொள்ளவில்லை எனில் சாப்பிட்ட சிறிதுநேரத்திலேயே குழந்தைகள் வாந்தி எடுத்துவிடுவார்கள். அல்லது வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும். அரிப்பு, தோல் வெடிப்புகள், வீக்கம் போன்ற அறிகுறிகள் தென்படும். சிலநேரங்களில் மூச்சு விடுதலில் சிரமம் இருக்கும். மேலும் சில உணவுகளை குழந்தைகள் சாப்பிடவே மாட்டார்கள். அப்போது அது காலப்போக்கில் சரியாகிவிடும் என பெற்றோர் விட்டுவிடுவார்கள். குழந்தைக்கு உணவு ஒவ்வாமை இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், உடனடியாக குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச்செல்ல வேண்டும். அது ஒவ்வாமைதானா என உறுதிப்படுத்தி அதன்பின் அதற்கான சிகிச்சையை மருத்துவர்கள் வழங்குவர். மேலும் குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவை வேறு எந்த முறையில் கொடுக்கலாம் எனவும் அறிவுறுத்துவர். 


    குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுகள்

    ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொதுவான உணவுப் பொருட்கள்...

    • பால்
    • முட்டை
    • வேர்க்கடலை
    • மரக்கொட்டைகள்
    • மீன்
    • கோதுமை
    • சோயா
    • ஷெல்ஃபிஷ்

    மேற்கூறிய 8 உணவுகள்தான் 90% உணவு ஒவ்வாமைகளை ஏற்படுத்துகின்றன. 

    ஒவ்வாமை பிரச்சனைகளுக்கு என்ன செய்வது?

    முட்டை, பால், கோதுமை மற்றும் சோயா ஒவ்வாமைகள் 5 வயதிற்குள் மறைந்துவிடும். ஆனால் சில ஒவ்வாமைகள் தொடர்ந்து நீடிக்கும். தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், வேர்க்கடலை மற்றும் குழந்தைக்கு ஒவ்வாமை கொடுக்கும் பொருட்களை உங்களின் வழக்கமான உணவின் ஒரு பகுதியாக ஆக்குங்கள். குழந்தைக்கு முட்டை அவித்து கொடுத்தால் ஒவ்வாமை ஏற்படுகிறது என்றால், மாற்று வழியில் எவ்வாறு அதனை கொடுக்கலாம் என மருத்துவரிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். பின்னர் தொடர்ந்து அதனை கொடுத்துவரும்போது இந்த பொருட்களால் ஏற்படும் ஒவ்வாமை கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கும். 

    ஒவ்வாமையை தடுக்க என்ன செய்யலாம்?

    ஒரு உணவுப்பொருள் குழந்தைக்கு ஒவ்வாமையை கொடுக்கிறது என்றால் அதை கொஞ்ச நாட்கள் தவிர்க்கவேண்டும். குழந்தையை பார்த்துக்கொள்பவர்களிடமும், பள்ளியிலும் அவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுப்பொருட்கள் குறித்து தெரிவித்தல் நல்லது. ஒவ்வாமை இருப்பவர்கள் எப்போதும் வெளியில் செல்லும்போது எபிநெஃப்ரின் ஆட்டோ-இன்ஜெக்டரை எடுத்துச் செல்வது நல்லது. குழந்தையின் பள்ளி அல்லது பகல்நேர பராமரிப்பு மையத்திலும் குழந்தைக்கு தேவையான மருத்தை வழங்குவது நல்லது. 

    • வாங்கும் நேரத்தில் அவற்றை ஸ்கேன் செய்தால் அவை உண்மையானதா அல்லது போலியானதா என்பதை அறிந்து கொள்ளலாம்.
    • சந்தேகம் இருந்தால், வாங்குபவர்கள் தங்கள் மொபைல் போன்களில் உள்ள செயலி மூலம் சரிபார்க்கலாம்.

    போலி மருந்துகள் அதிகரித்து வருகின்றன. எது உண்மையானது எது போலியானது என்று தெரியாமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். இந்தப் பிரச்சினையை உணர்ந்த மத்திய அரசு, அனைத்து வகையான மருந்துகளிலும் கியூஆர் குறியீடுகளை அச்சிட நடவடிக்கை எடுத்துள்ளது.

    இந்த முறையில் கியூஆர் குறியீடு மற்றும் பார் குறியீட்டை ஸ்கேன் செய்தால் அது போலியானதா அல்லது உண்மையானதா என்பதை அறிந்து கொள்ள முடியும்.

    நற்பெயரைக் கொண்ட மற்றும் நன்றாக விற்பனையாகும் முன்னுரிமை பிராண்ட் மருந்துகள், குறியீடுகள் மற்றும் பார் குறியீடுகளை வைத்திருப்பது கட்டாயமாகும்.

    வாங்கும் நேரத்தில் அவற்றை ஸ்கேன் செய்தால் அவை உண்மையானதா அல்லது போலியானதா என்பதை அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருந்தால், வாங்குபவர்கள் தங்கள் மொபைல் போன்களில் உள்ள செயலி மூலம் சரிபார்க்கலாம்.

    ஒரு மருந்தை ஸ்கேன் செய்தால் தனித்துவமான தயாரிப்பு அடையாளக் குறியீடு மருந்தின் பொதுவான பெயர்கள் பிராண்ட் பெயர் உற்பத்தி செய்யும் பகுதி, தேதி, தொகுதி எண் போன்ற விவரங்கள் தெரியும்.

    மருந்து பேக்கேஜிங்கில் பார் குறியீடு அல்லது கியூஆர் குறியீடு இல்லாவிட்டாலும் அல்லது ஸ்கேன் செய்த பிறகு விவரங்கள் தெரியவில்லை என்றாலும் அது போலியானது என்று அடையாளம் காணப்பட வேண்டும் என்று மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • தெளிவான மற்றும் ஆரோக்கியமான சருமம் தன்னம்பிக்கையை அதிகரித்து மனநிலையை மேம்படுத்துகிறது.
    • ஆரோக்கியமான உணவும், நல்ல உறக்கமும்தான் உடலையும், அழகையும் பராமரிக்கும்.

    பெண்கள் மட்டுமின்றி ஆண்கள் உட்பட அனைவரும் விரும்புவது அழகான ஒளிரும் முகமே. தெளிவான மற்றும் ஆரோக்கியமான சருமம் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது மற்றும் மனநிலையை மேம்படுத்துகிறது. ஆனால் அழகான, ஒளிரும், மென்மையான சருமத்தை பராமரிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. நம் சருமத்தை எப்போதும் ஆரோக்கியமாக, அழகாக வைத்திருக்க உதவும் சில எளிய வழிமுறைகளை பார்ப்போம்.

    தேங்காய் எண்ணெய்!

    வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு தேங்காய் எண்ணெய் நன்கு உதவும். தேங்காய் எண்ணெய், சருமத்தில் ஈரப்பதத்தை உண்டாக்கி, சூரியனின் புற ஊதா கதிர்களிலிருந்து பாதுகாப்பு வழங்கி, ஆரோக்கியமான சரும அமைப்பை மேம்படுத்துகிறது. எண்ணெயை லேசாக சூடாக்கி, முகம் மற்றும் கழுத்தில் தடவவும். எண்ணெய் தடவி முகத்திற்கு மசாஜும் கொடுக்கலாம். மறுநாள் காலையில் எழுந்து முகத்தை கழுவினால் வறண்ட சருமத்தினருக்கு நல்ல வித்தியாசம் தெரியும். முகம் மென்மையாக இருக்கும்.

    கற்றாழை...

    பளபளப்பான சருமம் மற்றும் ஆரோக்கியமான கூந்தலுக்கு கற்றாழை ஒரு சிறந்த மருந்தாகும். கற்றாழை, முகப்பரு மற்றும் சுருக்கத்தை குறைக்கும். முகத்தில் இருக்கும் எண்ணெய்ப்பசையை நீக்கி, எப்போதும் முகத்தை ஹைட்ரேட்டாக வைத்திருக்கும். கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி, 15-20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவினால் போதும். 3 நாட்களிலேயே மாற்றத்தை உணர்வீர்கள்.


    அனைவரும் விரும்புவது அழகான ஒளிரும் முகமே!

    பால்...

    பச்சைப்பாலில் காட்டன் துணியை நனைத்து முகத்தை துடைக்கவேண்டும். அப்போது முகத்தில் உள்ள அழுக்கு, கரும்புள்ளிகள் நீங்கி பளபளப்பான சருமம் கிடைக்கும்.

    தேன்!

    முகப்பரு, தழும்பு, முக வடுக்கள் உள்ளிட்டவற்றை தேன் குறைக்கும். சருமத்தை எப்போதும் ஹைட்ரேட்டாக வைத்திருக்கும். இளமையான தோற்றத்தை தக்கவைக்கும். தேனை அப்படியே எடுத்து கையால் முகத்தில் அப்ளை செய்து மசாஜ் கொடுக்கவேண்டும். பின்னர் ஒரு 5 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவேண்டும். 

    • சமூகமே பெண் உணர்ச்சிவசப்பட முக்கிய காரணியாக இருக்கிறது.
    • எல்லாவற்றிலும் சுதந்திரமாக இருக்கும் ஆண், உணர்ச்சிகளை வெளிப்படுத்த மட்டும் சமூகம் அனுமதிப்பதில்லை.

    சின்ன விஷயத்திற்கு எல்லாம் அழுவாள். எப்போதும் புலம்பிக்கொண்டே இருப்பாள். எதாவது பேசிக்கொண்டே இருப்பாள் என பெண்ணை தங்கள் கணவன்மார்களோ அல்லது குடும்பத்தினரோ கூறுவர். இதனால் பெண் மிகவும் உணர்ச்சிமிக்கவள் என அனைவரிடமும் ஒரு பொதுக்கருத்து நிலவியுள்ளது. ஆனால் அது உண்மையல்ல. பெண்போல ஆணும் உணர்ச்சியுள்ளவனே. பாலினம் என்பதை பார்க்கமால் இங்கு ஆண், பெண் இருபாலருக்கும் உணர்ச்சிகள் உண்டு என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். இங்கு குறிப்பிட்டு பார்க்கவேண்டிய விஷயம் என்னவென்றால், பெண்கள் தங்கள் உணர்ச்சிகளை உடனே வெளிப்படுத்துவார்கள். ஆண்கள் தாங்கள் 'ஆண்கள்', தங்களுக்கென்று சமூகத்தில் ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது எனக்கூறி உணர்ச்சிகளை அனைவரது முன்பும் வெளிப்படுத்தமாட்டர்கள். இதனாலேயே பெரும்பாலும் பெண்கள் அதிக உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் என நாம் கூறுகிறோம். மேலும் இங்கு எதனால் பெண் உணர்ச்சிவசப்படுகிறாள் என்பதையும் கவனிக்க வேண்டும். பெண்கள் மீதான சமூகத்தின் பார்வை, சமூகம் அவர்களை செய்ய வைத்திருக்கும் வேலை, கலாச்சார எதிர்பார்ப்புகள் இவையனைத்துமே ஒரு பெண் உணர்ச்சிவசப்பட முக்கிய காரணங்களாக அமைகின்றன.

    பாலினம்...

    குழந்தை, சிறுமி, இளம்பெண், மனைவி என ஒவ்வொரு நிலையிலும் அவர்களின் உணர்வுகளை வெவ்வேறு விதமாக வெளிக்காட்ட கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் அவர்களாக இருக்க சமூகம் அனுமதிப்பதில்லை. இளம்பெண் என்றால் விளையாடக்கூடாது, இதுபோல உடையணியக்கூடாது, இதை செய்யக்கூடாது, இவர்களுடன் பேசக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள். தங்கள் சுதந்திரம் அனைத்தும் அடைக்கபடும்போது அந்த உணர்ச்சிகள் வேறுவிதமாக வெளிப்படும். இதற்கு நேர்மார் ஆண்களின் வாழ்க்கை. எல்லாவற்றிற்கும் சுதந்திரம் பெறும் ஆண், உணர்ச்சிகளை வெளிப்படுத்த மட்டும் சமூகம் அனுமதிப்பதில்லை. ஆண்கள் அழக்கூடாது என்பதுபோல. இதனால் பெண்கள் அதிக உணர்வுமயமானவர்கள் என்ற தோற்றம் ஏற்படுகிறது. 

    கலாச்சாரம்

    பெண்கள் என்றாலே சாந்தி. சாந்தமாக இருந்தால்தான் அவள் பெண். இல்லையென்றால் அடங்காப்பிடாரி, ராட்சசி, பொம்பளையா அவ என பல்வேறு பட்டங்கள். கலாச்சாரங்கள்படி பெண்கள் என்றால் அனுதாபம் கொள்ள வேண்டியவர்களாகவும், பாதுகாக்கப்படவேண்டியவர்களாகவும் காட்டப்படுகிறது. உணர்வுமயமாக இருப்பதுதான் பெண்களின் குணம் என்பதுபோல சித்தரிக்கப்படுகிறது. இப்படி இருந்தால்தான் அவள் பெண் என்ற பிம்பங்கள். கலாச்சாரத்தில் பெண்களுக்கு இருக்கும் சடங்குகளை ஒப்பிட்டால், ஆண்களுக்கு சடங்குகளே இல்லை. வயதுக்கு வந்தால் ஒரு சடங்கு, திருமணம் என்றால் ஒரு சடங்கு, குழந்தை தரித்தால் ஒரு சடங்கு, கணவன் இறந்தால் ஒரு சடங்கு இப்படி பெண்ணின் அனைத்து நிகழ்வுகளுக்கும் ஒரு சடங்கு. ஆனால் ஆண்களுக்கு இதுபோன்று எத்தனை சடங்குகள் உள்ளன? மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது என்றால் அந்தப் பெண்ணை சுற்றி அவ்வளவு பேர் இருப்பார்கள். மாதவிடாய் என்பது அப்போதுதான் அவளுக்கு முதலில் வந்திருக்கும். அதுகுறித்தே முழுதாக தெரியாமல் ஒருவித அச்ச, குழப்ப உணர்வில் இருப்பாள். எல்லோரும் தங்களை கொண்டாடுவதால் ஒரு சந்தோஷமும் இருக்கும்.


    பெண் தன் உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்துவாள்!

    அப்போது விழா நடத்துகையில் உறவினர்கள் மத்தியில் தான் மட்டும் கவனிப்படுவது ஒரு கூச்ச சுபாவத்தை கொடுக்கும். இதனை வெட்கம் எனக்கூறுவது. ஒரு ஆணை 100 பேருக்கு மத்தியில் உட்காரவைத்து அவனை மட்டும் பார்த்தால் அவனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் வெட்கம்தான் வரும். அதுபோல வளையலணி விழா. தான் அம்மாவாகப்போவதை நினைத்து சந்தோஷத்துடன் பெண் இருப்பாள். ஆணும் அப்படித்தான் இருப்பான். ஆனால் பெண்ணுடைய உணர்வை மட்டும் இங்கு வெளிப்படுத்துவோம். அதுபோல இறப்பு சடங்கு. தன்துணை இறந்த சோகமே தாளாமல் இருக்கும்போது அவரை உட்காரவைத்து பூ, பொட்டு அழிப்பது. இது இன்னும் வலியை கொடுக்க அவள் அழுவாள். இப்படித்தான் இருபாலருக்கும் இருக்கும் உணர்வுகளை சமூகமே கலாச்சாரம் என்ற பெயரில் பெண்களுக்கு மட்டும் சாத்துகிறது. அதுபோல பெண்ணை சகுனமாக சித்தரிப்பது, இவள் ராசியில்லாதவள், இவள் வந்தால் விளாங்காது, அப்பாவை விழுங்கியவள், கணவனை விழுங்கியவள் என்று... ஆனால் நாம் என்றுமே ஒரு ஆணை ராசியில்லாதவன் எனக் கூறியதே இல்லை. 

    அன்பு...

    அன்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் பெண் உடனே தனது உணர்ச்சியை வெளிப்படுத்துவாள். சத்தமாக சிரிப்பது, பூரிப்படைவது, அன்பு கிடைக்காதபோது அதிகம் ஏங்குவது, உடைந்து அழுவது, கோபமாக கத்துவது என சூழ்நிலைக்கு ஏற்ப வெளிபடும் உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்துவாள். ஆனால் ஆண் எப்போதும் அனைத்து உணர்வுகளைவும் மனதுக்குள்ளேயே அடக்கிகொள்வான். வெகு சில நேரங்களிலேயே ஆண்கள் அழுவதை பார்க்கமுடியும். இதுபோன்ற காரணங்களால்தான் பெண்கள் அதிக உணர்ச்சிமிக்கவர்கள் எனக் கூறுகிறோம். ஆனால் ஆண்களுக்கும் உணர்ச்சிகள் உள்ளது.   

    • இது டயட் இருப்பவர்களுக்கும், கொழுப்பைக் குறைக்க விரும்புவோருக்கும் மிகவும் நல்லது.
    • ஸ்டீமர் முறையில் சமைக்கும்போது எண்ணெய் ஒரு துளி கூட பயன்படுத்தப்படுவது இல்லை.

    பாரம்பரிய பார்சி உணவு வகைகளில் ஒன்றாகத் திகழும் பத்ராணி மச்சி, அதன் அலாதியான சுவை மற்றும் குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மைகளால் குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் பெரும் புகழ் பெற்று விளங்குகிறது. இது, மீனை எண்ணெயில் பொரித்தோ அல்லது குழம்பாக வைத்தோ சமைக்கப்படும் வழக்கமான முறை கிடையாது. மாறாக, மீன் துண்டுகளில் காரசாரமான பச்சை சட்னியைப் பூசி, அவற்றை வாழை இலையில் நேர்த்தியாகச் சுருட்டி, பின்னர் ஆவியில் வேக வைத்து தயாரிக்கப்படுகிறது. இந்த வித்தியாசமான மீன் ரெசிபியை சமையல் கலைஞர் செஃப் கதிரவன் நமக்காக செய்து காட்டியுள்ளார். 

    செய்முறை

    * மீன் துண்டுகளை சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும். அதில் சிறிதளவு உப்பு மற்றும் அரை லெமன் சாறு சேர்த்து நன்கு கிளறி ஊற வைக்கவும்.

    * ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து சூடாக்கி, அது லேசாக கொதிக்க ஆரம்பித்தவுடன், சுத்தம் செய்து வைத்துள்ள கொத்தமல்லி மற்றும் புதினா தழைகளைப் போட்டு 2 நிமிடங்கள் வைத்து எடுத்து, ஆற வைக்கவும்.

    * ஆறிய தழைகளுடன், நீளமாக நறுக்கிய 4 பச்சை மிளகாய், ஒரு சிறிய துண்டு இஞ்சி, 10 பல் பூண்டு மற்றும் கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து மிக்ஸியில் பாதியாக அரைக்கவும். பிறகு, துருவி வைத்துள்ள ஒரு கப் தேங்காயையும் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.

    * அரைத்த மசாலாவில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், புளிப்புக்கு ஏற்ற அளவில் லெமன் ஜூஸ் ஆகியவற்றைச் சேர்த்து கையால் நன்கு கிளறவும்.

    * இந்தக் காரசாரமான மசாலாவை, ஏற்கனவே உப்பு மற்றும் லெமன் சேர்த்து ஊற வைத்துள்ள மீன் துண்டுகளுடன் நன்கு கலக்கவும்.

    * ஒரு சுத்தமான வாழை இலையின் நடுவில் மசாலா தடவிய மீன் துண்டை வைத்து, அதை நான்கு பக்கங்களிலும் மடித்து, ஒரு பார்சல் போல சுற்றவும்.

    * சுற்றப்பட்ட வாழை இலை பார்சல்களை ஸ்டீமரில் (ஆவியில் வேக வைக்கும் பாத்திரம்) வைத்து, மீன் நன்கு வேகும் வரை சுமார் 15 நிமிடங்கள் வரை ஆவியில் வேக வைக்கவும்.

    * வேகவைத்த மீனை ஸ்டீமரில் இருந்து எடுத்து, வாழை இலையை கவனமாகப் பிரித்து, ஒரு பரிமாறும் தட்டில் மாற்றி, உடனடியாகப் பரிமாறவும்.

    சுத்தம் செய்து வைக்கப்பட்டுள்ள மீன் துண்டுகள் 

    பத்ராணி மச்சியின் சிறப்புகள்

    * ஸ்டீமர் முறையில் சமைக்கும் போது எண்ணெய் ஒரு துளி கூட பயன்படுத்தப்படுவது இல்லை. ஆவியில் வேக வைப்பதால், இது டயட் (உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள்) இருப்பவர்களுக்கும், கொழுப்பைக் குறைக்க விரும்புவோருக்கும் மிகவும் நல்லது.

    * வாழை இலையில் சுற்றி சமைக்கப்படும்போது, இலையின் அலாதியான சுவை மற்றும் மணம் உணவுடன் கலந்து, வேறு எந்த சமையல் முறையிலும் கிடைக்காத ஒரு தனித்துவமான அனுபவத்தை அளிக்கிறது.

    * இதில் பயன்படுத்தப்படும் பச்சை சட்னிதான் இந்த உணவின் மற்றொரு சிறப்பம்சம். பூண்டு, பச்சை மிளகாயின் காரம், புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளின் கூட்டுச் சுவை மிகவும் அற்புதமாக இருக்கும். இந்த மூலிகைகளின் சத்துக்கள் மீனுடன் சேர்ந்து ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றன.

    * இந்த சமையல் முறையை மீன்களில் மட்டுமல்லாமல், பன்னீர் மற்றும் கறித் துண்டுகளிலும் கூட முயற்சி செய்யலாம்.

    ப்ளேட்டிங் செய்யப்பட்டுள்ள பத்ராணி மச்சி

    இந்த அற்புதமான பத்ராணி மச்சி உணவை தோசை, சப்பாத்தி, ரொட்டி அல்லது சாதம் மற்றும் காய்கறி தன்சக் (Vegetable Dhansak) உடன் சேர்த்து சைடிஷ்ஷாக சாப்பிடும் பொழுது, அதன் சுவை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும். ஆரோக்கியம் மற்றும் பாரம்பரியம் இணைந்த இந்த பார்சி உணவை நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள்!

    • உணவில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக்கொள்வதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறையும்.
    • கொள்ளில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதம் நீண்ட நேரம் பசி எடுக்காமல் நிறைவாக உணர வைக்கும்.

    தேவையான பொருட்கள்:

    கொள்ளு - 1 கப்

    கடலை பருப்பு - 1 தேக்கரண்டி

    காய்ந்த மிளகாய் - 3

    பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி

    உளுந்து - 1 தேக்கரண்டி

    தேங்காய்த் துண்டுகள் - 1 கப்

    புளி - 10 கிராம்

    கடுகு - 2 தேக்கரண்டி

    எண்ணெய் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    வாணலியில் கொள்ளை சேர்த்து வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.

    அதே வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடலைப் பருப்பு, சிறிதளவு உளுந்து, காய்ந்த மிளகாயை போட்டு வறுக்கவும்.

    வறுத்து வைத்திருக்கும் கலவையை மிக்ஸியில் போட்டு அத்துடன் தேங்காய்த் துண்டுகள், புளி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து அரைக்கவும்.

    கடைசியாக கடுகு, கறிவேப்பிலையை தாளித்துக் கொட்டி சூடான சாதத்தில் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட சுவை அமோகமாக இருக்கும்.




    நீங்கள் உண்ணும் உணவில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக்கொள்வதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறையும்.

    உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறைவதால் எடை இழப்பு ஏற்படும்.

    கொள்ளில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதம் நீண்ட நேரம் பசி எடுக்காமல் நிறைவாக உணர வைக்கும். இதனால் நீங்கள் உட்கொள்ளும் உணவின் அளவும் குறையும்.

    கொள்ளு துவையலாக மட்டுமில்லாமல், கொள்ளை வேகவைத்து சுண்டலாகவும், கொள்ளு தோசை, கொள்ளு சூப், கொள்ளு ரசம் முதலானவற்றை செய்து சாப்பிடலாம்.

    • இரு பெரு விரல் நகங்களிலும், உச்சந்தலையிலும் தடவி விடலாம்.
    • தொப்புளை சுற்றி விளக்கெண்ணெய் தடவியும் மசாஜ் செய்யலாம்.

    பருவநிலை மாற்றம் காரணமாகவோ, உடலில் ஏற்படும் பிரச்சனைகள், அதற்கு உட்கொள்ளும் மருந்துகள் மூலமாகவோ பலருக்கு உடல் சூடு ஏற்படுவதுண்டு. ஆனால் உடல் சூட்டை கட்டுப்படுத்த முடியாமல் சிலர் சிரமப்படுவதுண்டு. உடல் சூட்டை எப்படி தவிர்க்கலாம் என்று பார்க்கலாம். 

    * மருந்து உட்கொள்வதால் ஏற்படும் உடல் சூட்டை சரியான உணவுமுறையின் மூலமாகத்தான் சரி செய்ய முடியும்.

    * பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் உடல் சூட்டை சில பழக்க வழக்கங்களால் மாற்ற முடியும்.

    * இரவில் தூங்கும்போது விளக்கெண்ணெயை உள்ளங்கால்களில் தடவி மசாஜ் செய்யலாம்.



    * இரு பெரு விரல் நகங்களிலும், உச்சந்தலையிலும் தடவி விடலாம்.

    * தொப்புளை சுற்றி விளக்கெண்ணெய் தடவியும் மசாஜ் செய்யலாம்.

    * விளக்கெண்ணெய் மசாஜ் உடலின் மையப்பகுதியில் நிலவும் வெப்பத்தை குறைக்கும் என நம்பப்படுகிறது.

    * விளக்கெண்ணெய் இயற்கையான மலமிளக்கியாக செயல்படக்கூடியது.

    * உடலில் உள்ள கழிவுகள், நச்சுக்களை நீக்கி உடல் சூட்டை குறைக்க உதவுகிறது.

    * எண்ணெய் மசாஜ் எவ்வளவு சிறந்ததோ அதே அளவு முக்கியமானது போதுமான அளவு தண்ணீர் குடிப்பது.

    * இரவு தூங்க செல்வதற்கு முன் ஒரு டம்ளரில் சிறிதளவு சோம்பை ஊறவைத்து விட்டு காலையில் எழுந்தவுடன் அந்த நீரைப் பருக உடல் சூடு குறையும்.

    உங்கள் உடலின் தன்மையை முதலில் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உங்கள் உடல் சூடான தன்மை கொண்டதா அல்லது குளிர்ச்சியான தன்மை கொண்டதா என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

    ஒருவேளை உங்கள் உடல் சூடான தன்மை கொண்டது என்றால் நீங்கள் தினமும் காலையில் எழுந்ததும் சிறிதளவு வெந்தயம் சாப்பிடலாம். அல்லது வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை காலையில் வெறும் வயிற்றில் பருகலாம். இதை தொடர்ந்து செய்துவர உடல் சூடு ஏற்படுவது முற்றிலும் நின்றுவிடும்.

    ஆனால் குளிச்சியான உடல் வாகு கொண்டவர்கள் தொடர்ந்து வெந்தயம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்கு மாறாக பால் மற்றும் தேன், புதினா டீ முதலானவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

    முக்கியமாக காரமான, பொரித்த உணவுகளை தவிர்த்துவிட வேண்டும். இவற்றை தவிர்த்தால் மட்டும் தான் உடல் சூட்டை தவிர்க்க துணைபுரியும்.

    • உடல் அமைப்பை மேம்படுத்த விரும்புவோருக்கு உடற்பயிற்சி பயனுள்ளதாக அமையும்.
    • உடலுக்கு வைட்ட மின் டி அதிகம் கிடைக்க செய்யும்.

    தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை தொடரும்போது உடலானது, கொழுப்பை எரிக்கும் செயல்முறையை விரைவுபடுத்தும். உடலில் படிந்திருக்கும் தேவையற்ற கொழுப்பு சத்துக்களை உறிஞ்ச தொடங்கும். உடல் அமைப்பை மேம்படுத்த விரும்புவோருக்கு இது பயனுள்ளதாக அமையும். குறிப்பாக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் தங்கள் உடற்பயிற்சி வழக்கத்தில் 30 நிமிடங்கள் விறுவிறுப்பான நடைப்பயணத்தையும் மேற்கொள்ளலாம்.

    தினமும் 30 நிமிடம் நடந்தால் கிடைக்கும் நன்மைகள்...

    * இதய நோய் அபாயத்தை குறைக்க உதவும்.

    * உடல் எடையை சீராக பராமரிக்கலாம்.

    * மன அழுத்தம் குறையும்.

    * உடல் ஆற்றலை அதிகரிக்கும்.

    * மனநிலை மேம்படும்.

    * ரத்த ஓட்டம் சீராகும்.

    * உடல் பருமனை தடுக்கும்.

    * பதற்றத்தை தணிக்கும்.

    * நுரையீரலின் செயல்திறன் கூடும்.

    * உடலுக்கு வைட்ட மின் டி அதிகம் கிடைக்க செய்யும்.

    * புற்றுநோய் அபாயத்தை குறைக்கும்.

    * தூக்க தரத்தை மேம்படுத்தும்.

    * சுய பாதுகாப்புக்கு நேரம் ஒதுக்க வைக்கும்.

    * உடல் சமநிலையை பேண உதவிடும்.

    * வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும்.

    * நீரிழிவு நோய் ஆபத்தை குறைக்கும்.

    * படைப்பாற்றல் திறனை தூண்டும்.

    * எலும்புகள் மற்றும் தசைகளை பலப்படுத்தும்.

    * ரத்த அழுத்தத்தை சீராக்கும்.

    * நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும்.

    • நுரையீரலுக்கு மட்டும் வெளிப்புற சூழலுக்கு நேரடி தொடர்பு உள்ளது.
    • இருமல் மருந்துகளை பொறுத்தமட்டில் பல்வேறு வகைகள் உள்ளன.

    மத்திய பிரதேசத்தில் 'கோல்ட்ரிப்' எனும் இருமல் மருந்து குடித்ததால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக குழந்தைகள் உயிரிழந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு பெரும் பேசு பொருளாகி உள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்திலும், இதே இருமல் மருந்து குடித்ததால் 6 வயது சிறுவன் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.

    மத்தியபிரதேச அரசு இந்த மருந்தை பயன்படுத்த அம்மாநில மக்களுக்கு தடை விதித்துள்ளது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக 2 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்க வேண்டாம் என மத்திய அரசும் அறிவுறுத்தி உள்ளது.

    கோல்ட்ரிப் இருமல் மருந்தை குழந்தைகள் மட்டுமின்றி எந்த வயதினரும் பயன்படுத்த வேண்டாம் என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார். இருமல் மருந்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியதா? இருமல் மருந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாமா? வேண்டாமா? இருமல் மருந்தால் மட்டுமே இருமலை குணப்படுத்த முடியுமா? என்பது குறித்து சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் எஸ்.தங்கவேலு கூறியதாவது:-

    'இருமல்' நமது உண்மையான நண்பன் என சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். முதலில் இருமல் நல்லதா? கெட்டதா? என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். இதயம், மூளை, கல்லீரல் போன்ற உடலின் முக்கிய உறுப்புகளுக்கும், வெளிப்புற சூழலுக்கும் எந்தவித நேரடி தொடர்பும் கிடையாது.

    நுரையீரலுக்கு மட்டும் வெளிப்புற சூழலுக்கு நேரடி தொடர்பு உள்ளது. அதாவது, நாம் சுவாசிக்கும் காற்று நுரையீரலுக்கு செல்கிறது. அவ்வாறு நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள மெல்லிய தூசு போன்ற ஏதேனும் ஒரு பொருள் நுரையீரலில் படியும்போது இருமல் உருவாகிறது. பெரும்பாலானோருக்கு ஏற்படும் இருமலுக்கு இதுதான் முக்கிய காரணம்.

    நுரையீரலில் ஒட்டிய அந்த பொருளை வெளியேற்றும்படி, நமக்கு ஒரு அனிச்சை செயல் மூலம் அறிவுறுத்துவதுதான் இருமல். இதன்படி பார்த்தால் இருமல் வருவது நல்லதே.

    பொதுவாகவே, இதுபோன்ற இருமல் 2 வாரங்களுக்கு இருக்கும். அதன்பின்பு தானாகவே சரியாகி விடும். அதற்கு மேல் நீடித்தால் அதற்கான பிற காரணங்களை கண்டறிந்து உரிய மருத்துவம் பெற வேண்டும். இருமலை பொறுத்தமட்டில் அது ஒரு உயிருக்கு ஆபத்தான பிரச்சினை கிடையாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    'குழந்தைகளுக்கு இருமல் மருந்து வேண்டாம்' என்பது எனது திடமான கருத்து. வெளிநாடுகளில் 10 வயது வரை குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்கப்படுவது இல்லை. குறைந்தபட்சம் 6 வயது வரையிலாவது இருமல் மருந்தை பரிந்துரைக்காமல் இருப்பது நல்லது.

    'குழந்தைகளுக்கு, இருமல் உடனடியாக சரியாகி விட வேண்டும்' என்ற பெற்றோரின் மனநிலையை கருத்தில் கொண்டு தான் பெரும்பாலான டாக்டர்கள் இருமல் மருந்தை பரிந்துரைக்கின்றனர்.

    இருமல் மருந்துகளை பொறுத்தமட்டில் பல்வேறு வகைகள் உள்ளன. இந்த இருமல் மருந்துகள் பல்வேறு வேதிப்பொருட்களின் கலவையாகவே உள்ளன. பொதுவாக மருந்தை பயன்படுத்துவோருக்கு முக்கியமான ஒரு விஷயத்தை தெரிவிக்க விரும்புகிறேன்.

    ஒருமுறை பயன்படுத்திய மருந்தை, ஓரிரு வாரங்கள் அல்லது மாதங்கள் கழித்து பயன்படுத்துவது என்பது கூடவே கூடாது. சிரப் போன்ற மருந்துகளை பொறுத்தமட்டில் ஒருமுறை அவற்றை திறந்து பயன்படுத்திய பின்பு அப்படியே வைத்து விட்டால் அதன் தன்மை மாற தொடங்குவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.

    எனவே, ஒருமுறை பயன்படுத்திய மருந்தை கண்டிப்பாக மீண்டும் பயன்படுத்தக்கூடாது. அதுமட்டுமல்லாமல் டாக்டர்கள் அறிவுறுத்திய அளவை தவிர கூடுதல் அளவில் தாங்களாகவே மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

    சரி... இருமலுக்கு மருந்தே எடுத்துக்கொள்ளாமல் தானாகவே சரியாகி விடுமா? என்று கேட்டால், ஆம்... கண்டிப்பாக இரு வாரங்களுக்கும் சரியாகி விடும் என்பதுதான் எனது பதில். இதற்கு கொஞ்சம் பொறுமை தேவை.

    இன்னும் சொல்லப்போனால் இருமல் இருக்கும்போது வெதுவெதுப்பான தண்ணீரை அருந்துவது, தேனில் எலுமிச்சை கலந்த நீரை எடுத்துக்கொள்வது போன்றவற்றின் மூலம் குறுகிய காலத்துக்குள் இருமலை சரி செய்து விடலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறுநீரக கற்கள் அனைத்தும் ஒரே படிகங்களால் ஆனவை அல்ல.
    • சிறுநீரக கற்கள் உருவாகுவதற்கு ஆக்சலேட்டுகள் காரணமாக அமைந்திருக்கின்றன.

    தக்காளி அதிகம் சாப்பிட்டாலோ, சமையலில் அதிகம் சேர்த்தாலோ சிறுநீரக கற்கள் உருவாகும் என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது. ஆனால் தக்காளி சிறுநீரக கற்களை உண்டாக்கும் என்பது கட்டுக்கதையே. ஏனெனில் உலகளவில் பொதுவாக உண்ணப்படும் காய்கறிகளுள் ஒன்றாக தக்காளி விளங்குகிறது. அதனை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அப்படியானால் சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக அல்லவா இருக்க வேண்டும்.

    சிறுநீரக கற்கள் படிவதை தடுப்படி எப்படி?

    உடலில் நீரிழப்பு ஏற்படுவதே சிறுநீரக கற்கள் படிவதற்கு முதன்மையான காரணமாக இருக்கிறது. அலுவலகத்தில் ஓரிடத்தில் அமர்ந்து வேலை செய்தாலும் சரி, கடுமையான உடல் உழைப்பு கொண்ட வேலையில் ஈடுபட்டாலும் சரி தினமும் குறைந்தது 2.5 லிட்டர் முதல் 3 லிட்டர் தண்ணீர் பருகுவதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.

    சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என்றாலோ, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலோ புரதம் குறைவாக உள்ள உணவுகளை சாப்பிடுவது நல்லது.

    உணவு வழக்கத்தை மாற்றுவதன் மூலம் சிறுநீரக கற்களை தடுக்க முடியுமா?

    சிறுநீரக கற்கள் அனைத்தும் ஒரே படிகங்களால் ஆனவை அல்ல. கால்சியம் ஆக்சலேட் உள்பட பிற ஆக்சலேட் படிகங்கள், யூரிக் அமிலம், ஸ்ட்ரூவைட் கற்கள், சிஸ்டன் கற்கள் போன்றவற்றின் காரணமாகவும் சிறுநீரக கற்கள் உருவாகலாம். இருப்பினும் ஆக்சலேட் படிகங்கள் மூலம் சிறுநீரக கற்கள் உருவாகுவது அதிகமாக இருக்கிறது. தக்காளியில் ஆக்சலேட் இருப்பதால் அதனை சிறுநீரக கற்களுடன் முடிச்சு போட்டுவிட்டனர்.

    இந்த கட்டுக்கதை எப்படி தோன்றியது?

    தக்காளியில் ஆக்சலேட்டுகள் உள்ளன. பொதுவாக சிறுநீரக கற்கள் உருவாகுவதற்கு ஆக்சலேட்டுகள் காரணமாக அமைந்திருக்கின்றன. தக்காளியில் அவை இருப்பதால் இந்த கட்டுக்கதை தோன்றிவிட்டது. இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், 100 கிராம் தக்காளியில் சுமார் 5 மில்லி கிராம் அளவுக்கே ஆக்சலேட்டுகள் உள்ளன. அவை சிறுநீரக கற்களை ஏற்படுத்த போதுமானதல்ல.

    சில அசைவ உணவுகள் சாப்பிடுவது சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்ற கருத்து உண்மையா?

    இதுவும் தவறான கருத்து. உடலில் அதிகப்படியாக யூரிக் அமிலம் சேர்வது காரணமாக சிறுநீரக கற்கள் ஏற்பட்டால் மருத்துவர்கள் மருந்துகளை பரிந்துரைப்பார்கள். மீன் மற்றும் விலங்கு இறைச்சியிலுள்ள புரதங்கள் உள்ளிட்ட பியூரின் நிறைந்த உணவுகளை குறைவாக சாப்பிட வேண்டும். எனினும் இந்த விஷயத்தில் உணவு முறை முக்கிய பங்கு வகிக்காது. மருத்துவர்களின் ஆலோசனையும், மருந்துமே கைகொடுக்கும்.

    எதனால் ஏற்படுகிறது?

    அடிப்படை உடல்நலப்பிரச்சனை, சில நொதிகளின் குறைபாடு அல்லது வளர்சிதை மாற்றப்பிரச்சனைகள் காரணமாக சிறுநீரக கற்கள் உருவாகக்கூடும். குறிப்பாக சிறுநீரகங்கள் உடலில் இருந்து கால்சியம் ஆக்சலேட் படிகங்களை சிறுநீர் வழியாக வெளியேற்றுவதை நிறுத்தும்போது ஆக்சலோசிஸ் என்னும் பாதிப்பு உருவாகும். இது அரிய வகை வளர்சிதை மாற்றக்கோளாறு ஆகும். இது சிறுநீரகங்களின் செயல்பாட்டை நிறுத்தி ஆக்சலேட் படிகங்கள் உருவாகுவதற்கு வழிவகுத்துவிடும்.

    • இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
    • சில இயற்கை சேர்மங்களை கொண்டிருப்பதால் முடி உதிர்தல் தடுக்கப்பட்டு, அடர்த்தியாக முடி வளர உதவுகிறது.

    உலக அளவில் புற்றுநோய் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் திராட்சை விதையை மூலப்பொருளாக கொண்டு புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தும் மருந்துகளை தயாரிக்கின்றன.

    திராட்சை விதைகளில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்து காணப்படுகின்றன. இதில் அதிக அளவில் ஆக்சிஜனேற்ற பண்புகள் காணப்படுவதால், அவை உடலில் ஏற்படும் அழுத்தத்தை எதிர்த்து போராடி வீக்கத்தைக் குறைக்கின்றன.

    உடலின் செல்களை பாதுகாக்கும் சில கூறுகள் திராட்சை விதையில் இருப்பதால், இது இதயம் மற்றும் மூளை பகுதியில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதனால், இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

    திராட்சை விதைகள் காயங்களை ஆற்றும் கொலாஜன்கள் என்ற வலைப்பின்னல் உடலில் உருவாக உதவுகிறது. இதன் மூலம் உடலில் ஏற்படும் காயங்கள் விரைவில் குணமாகும் மற்றும் தோலின் அழகு அதிகரிக்கும். சில இயற்கை சேர்மங்களை கொண்டிருப்பதால் முடி உதிர்தல் தடுக்கப்பட்டு, அடர்த்தியாக முடி வளர உதவுகிறது.

    திராட்சை விதையில் இருந்து பெறப்படும் சாறு மூளை செல்களை சேதத்தில் இருந்து பாதுகாக்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வயதான காலத்தில் ஏற்படும் மூளை நரம்பு சிதைவு மற்றும் நினைவுத்திறன் இழப்பை கட்டுப்படுத்த திராட்சை விதையை மென்று உண்பது பலன் தரும் என்று கூறப்படுகிறது.

    மனித உடல் எப்போதும் உடலில் நுழையும் நுண்ணுயிர்களுக்கு எதிராக போராடி உடலைப் பாதுகாக்கும் நுட்பமான வேலையை தொடர்ந்து செய்கிறது. திராட்சை விதை சாறு உடலில் நுழையும் பல்வேறு பாக்டீரியாக்கள், பூஞ்சைகளின் வளர்ச்சியை தடுக்கும் ஆற்றலை கொண்டுள்ளது என்றும், தொடர்ந்து திராட்சை விதைகளை உணவாக உட்கொள்ளும் போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    விதையில்லாத பழங்களை விட விதையுள்ள பழங்கள் அரிய பல ஆற்றல் கூறுகளை கொண்டவை என்பதற்கு திராட்சை விதை ஒரு உதாரணம்.

    ×