என் மலர்
ஆரோக்கியம்
பச்சிளம் குழந்தைகளையும், ஓரளவுக்கு வளர்ச்சி அடைந்த குழந்தைகளையும் தூக்கும்போது பெற்றோரும், உறவினரும் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.
குழந்தைகளைத் தூக்குவதற்கென்று சில வழிமுறைகள் இருக்கின்றன. முக்கியமாக, பச்சிளம் குழந்தைகளையும், ஓரளவுக்கு வளர்ச்சி அடைந்த குழந்தைகளையும் தூக்கும்போது பெற்றோரும், உறவினரும் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். ஏனென்றால் குழந்தைகளுடைய கழுத்து எலும்பு, முதுகு தண்டுவடம், கை, கால் மூட்டு இணைப்புகள் முழு வளர்ச்சி அடைந்திருக்காது. மிக மிக மென்மையாக இருக்கும்.
பச்சிளம் குழந்தைகளின் தலை நேராக நிற்பதற்கு நான்கிலிருந்து ஆறு மாத காலம் வரை ஆகலாம். எனவே, அந்தச் சமயத்தில் இன்னும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளின் கழுத்துக்குக் கீழே கையை சப்போர்ட்டாக வைத்தவாறுதான் தூக்க வேண்டும். அப்படி தூக்காதபட்சத்தில் கழுத்தில் சுளுக்கு, வலி ஏற்படும்.
தண்டுவட எலும்புகள் அதனுடைய இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு நகர்ந்துவிடவும் கூடும். சுவாசக்கோளாறு ஏற்பட்டு, மூச்சுவிட சிரமப்படுவதும் நடக்கலாம். இத்தகைய சிரமங்களை அனுபவிக்கும் குழந்தை அழத் தொடங்குவதில் அதை உணர்ந்து கொள்ளலாம். குழந்தைகளை உயரே தூக்கும்போது, பூக்களை நுகர்வதைப்போல் நம் மூக்குக்கு நேராகக் கொண்டு போகும் பொசிஷனில் தூக்குவதே பாதுகாப்பானது. அப்படி செய்தால்தான் குழந்தையின் மூச்சுக்குழாய் பாதைக்கு இடையூறு எதுவும் ஏற்படாமல் இருக்கும். குழந்தைகளின் மூச்சுக்குழாய் முன்புறமோ, பின்புறமோ வேகமாக அசையக் கூடாது.
குழந்தைகளைத் தூக்கும்போது, இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்வது நல்லது. அதாவது, வீணையை எப்படி பெரிதாக இருக்கும் பகுதி மேல்புறமாகவும், சிறிதாக உள்ள பகுதி கீழ்புறமாகவும் இருக்கும் வகையில் தூக்குவோம் இல்லையா? அதேபோன்று தலை மேல்நோக்கி இருக்குமாறும், கால்கள் இரண்டும் கீழே இருக்கும் நிலையிலுமே குழந்தைகளைத் தூக்க வேண்டும். பெரும்பாலானோர் குழந்தைக்கு பால் கொடுத்த பிறகு, ஏப்பம் வர வேண்டும் என்பதற்காக தோளில் தூக்கி வைத்துக்கொண்டு முதுகில் தட்டிக் கொடுப்பார்கள்.அவ்வாறு செய்யக் கூடாது.
பச்சிளம் குழந்தைகளின் தலை நேராக நிற்பதற்கு நான்கிலிருந்து ஆறு மாத காலம் வரை ஆகலாம். எனவே, அந்தச் சமயத்தில் இன்னும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளின் கழுத்துக்குக் கீழே கையை சப்போர்ட்டாக வைத்தவாறுதான் தூக்க வேண்டும். அப்படி தூக்காதபட்சத்தில் கழுத்தில் சுளுக்கு, வலி ஏற்படும்.
தண்டுவட எலும்புகள் அதனுடைய இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு நகர்ந்துவிடவும் கூடும். சுவாசக்கோளாறு ஏற்பட்டு, மூச்சுவிட சிரமப்படுவதும் நடக்கலாம். இத்தகைய சிரமங்களை அனுபவிக்கும் குழந்தை அழத் தொடங்குவதில் அதை உணர்ந்து கொள்ளலாம். குழந்தைகளை உயரே தூக்கும்போது, பூக்களை நுகர்வதைப்போல் நம் மூக்குக்கு நேராகக் கொண்டு போகும் பொசிஷனில் தூக்குவதே பாதுகாப்பானது. அப்படி செய்தால்தான் குழந்தையின் மூச்சுக்குழாய் பாதைக்கு இடையூறு எதுவும் ஏற்படாமல் இருக்கும். குழந்தைகளின் மூச்சுக்குழாய் முன்புறமோ, பின்புறமோ வேகமாக அசையக் கூடாது.
குழந்தைகளைத் தூக்கும்போது, இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்வது நல்லது. அதாவது, வீணையை எப்படி பெரிதாக இருக்கும் பகுதி மேல்புறமாகவும், சிறிதாக உள்ள பகுதி கீழ்புறமாகவும் இருக்கும் வகையில் தூக்குவோம் இல்லையா? அதேபோன்று தலை மேல்நோக்கி இருக்குமாறும், கால்கள் இரண்டும் கீழே இருக்கும் நிலையிலுமே குழந்தைகளைத் தூக்க வேண்டும். பெரும்பாலானோர் குழந்தைக்கு பால் கொடுத்த பிறகு, ஏப்பம் வர வேண்டும் என்பதற்காக தோளில் தூக்கி வைத்துக்கொண்டு முதுகில் தட்டிக் கொடுப்பார்கள்.அவ்வாறு செய்யக் கூடாது.
தோளில் வைத்திருக்கும்போது, குழந்தையின் வயிற்றுப்பகுதி அழுந்தாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளைத் தூக்கும்போது, தலை அசையாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்வதும் அவசியம். ஆறிலிருந்து எட்டு மாதங்கள் ஆன பிறகுதான் குழந்தை தானாக உட்கார ஆரம்பிக்கும். அந்தச்சமயங்களில் குழந்தைகளைத் தூக்கும்போது இரண்டு கைகளால் அக்குள் பகுதியை பிடித்தவாறு தூக்க வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒரு கையால் குழந்தையைத் தூக்கக் கூடாது. அதேபோல் குழந்தையை ஒரு கையை மட்டும் பிடித்து இழுக்கவும் கூடாது.
இதையும் படிக்கலாம்... உடல் பருமனை குறைக்க உதவும் காய்கறி, பழங்கள்
உணவை பொறுத்தவரை சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், அதிக மாவுச்சத்து, கொழுப்பு, எண்ணெய் உள்ள உணவு வகைகள், பானங்களை தவிர்க்க வேண்டும்.
உடல் பருமன் காரணமாக உடலில் ஏற்படும் பாதிப்புகள் பல. அவற்றுள் முக்கியமானவை:-
டைப்-2 சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, மூச்சுத்திணறல், மூட்டு வலி, முதுகு வலி, இடுப்பு வலி, குதிகால் வலி, மார்பக புற்றுநோய், குடல் புற்றுநோய், பித்தப்பை கற்கள், குடலிறக்கம், குறட்டை, ‘ஸ்லீப் ஏப்னியா’ எனும் உறக்க சுவாசதடை, மலச்சிக்கல், மலட்டுத்தன்மை, மாதவிலக்கு பிரச்சினைகள், சினைப்பை நீர்க்கட்டி, மூலநோய், மனச்சோர்வு. எனவே உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகிய இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்தினால் உடல் எடையைக் குறைப்பது எளிது.
உணவை பொறுத்தவரை சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், அதிக மாவுச்சத்து, கொழுப்பு, எண்ணெய் உள்ள உணவு வகைகள், பானங்களை தவிர்க்க வேண்டும்.
கொழுப்புள்ள உணவை தேவைக்கு மேல் சாப்பிட நேர்ந்தால், உடனுக்குடன் வேலையோ-உடற்பயிற்சியோ செய்து அதை ஜீரணிக்க வைத்துவிட வேண்டும். உண்ணும் உணவுக்கேற்ப நடைப்பயிற்சி, உடற்பயிற்சி என ஏதாவது ஒரு பயிற்சியை மேற்கொண்டு, உடலில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
‘உடல் எடையை குறைக்கிறேன்’ எனப்பலரும் காலையில் சிற்றுண்டியை தவிர்க்கிறார்கள். இது தவறு. இதனால் மதிய உணவு அதிகமாகிவிடும். எனவே, காலை உணவு கட்டாயம். காலையில் கிரீன் டீ, லெமன் டீ குடிக்கலாம். காலை டிபனுக்கு கேழ்வரகு இட்லி, இடியாப்பம், புட்டு, உப்புமா, மிளகுத்தினை பொங்கல் சாப்பிடலாம்.
தேங்காய் சட்னிக்கு பதிலாக, புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி, வெண்டைக்காய்ச் சட்னியுடன் சாப்பிடலாம்.
கொழுப்பு மிகுந்த, கலோரிகள் மிகுந்த உணவு வகைகளை ஓரங்கட்டுங்கள். மாலை சிற்றுண்டிக்கு எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடக் கூடாது.
டைப்-2 சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, மூச்சுத்திணறல், மூட்டு வலி, முதுகு வலி, இடுப்பு வலி, குதிகால் வலி, மார்பக புற்றுநோய், குடல் புற்றுநோய், பித்தப்பை கற்கள், குடலிறக்கம், குறட்டை, ‘ஸ்லீப் ஏப்னியா’ எனும் உறக்க சுவாசதடை, மலச்சிக்கல், மலட்டுத்தன்மை, மாதவிலக்கு பிரச்சினைகள், சினைப்பை நீர்க்கட்டி, மூலநோய், மனச்சோர்வு. எனவே உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகிய இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்தினால் உடல் எடையைக் குறைப்பது எளிது.
உணவை பொறுத்தவரை சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், அதிக மாவுச்சத்து, கொழுப்பு, எண்ணெய் உள்ள உணவு வகைகள், பானங்களை தவிர்க்க வேண்டும்.
கொழுப்புள்ள உணவை தேவைக்கு மேல் சாப்பிட நேர்ந்தால், உடனுக்குடன் வேலையோ-உடற்பயிற்சியோ செய்து அதை ஜீரணிக்க வைத்துவிட வேண்டும். உண்ணும் உணவுக்கேற்ப நடைப்பயிற்சி, உடற்பயிற்சி என ஏதாவது ஒரு பயிற்சியை மேற்கொண்டு, உடலில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
‘உடல் எடையை குறைக்கிறேன்’ எனப்பலரும் காலையில் சிற்றுண்டியை தவிர்க்கிறார்கள். இது தவறு. இதனால் மதிய உணவு அதிகமாகிவிடும். எனவே, காலை உணவு கட்டாயம். காலையில் கிரீன் டீ, லெமன் டீ குடிக்கலாம். காலை டிபனுக்கு கேழ்வரகு இட்லி, இடியாப்பம், புட்டு, உப்புமா, மிளகுத்தினை பொங்கல் சாப்பிடலாம்.
தேங்காய் சட்னிக்கு பதிலாக, புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி, வெண்டைக்காய்ச் சட்னியுடன் சாப்பிடலாம்.
கொழுப்பு மிகுந்த, கலோரிகள் மிகுந்த உணவு வகைகளை ஓரங்கட்டுங்கள். மாலை சிற்றுண்டிக்கு எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடக் கூடாது.
பதிலாக வேர்க்கடலை, எள்ளு உருண்டை, கடலை உருண்டை, பொரிகடலை, சுண்டல், முளைகட்டிய பயறு, காய்கறி கட்லெட், பழச் சாலட் ஆகியவற்றில் ஒன்றைச் சாப்பிடுங்கள். மாலையில் பழச்சாறு, காய்கறி சூப் சாப்பிடுங்கள். கீரைகள், கத்தரிக்காய், புடலங்காய், சுரைக்காய், சுண்டைக்காய், வெண்டைக்காய், வெள்ளரிக்காய், முருங்கைக்காய், காரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், பாகற்காய், வாழைத்தண்டு ஆகியவற்றில் கலோரிகள் குறைவு. தினமும் சராசரியாக 500 கிராம் காய் உடலுக்கு தேவை. மேலும் கொய்யா, மாதுளை, தக்காளி, சாத்துக்குடி, அன்னாசி, பேரிக்காய் சாப்பிடலாம். தினமும் 250 கிராம் பழம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. அத்துடன் உடல் பருமனையும் குறைக்க உதவும்.
இதையும் படிக்கலாம்... வங்கி கடனை திருப்பி செலுத்திய பின்னர் மறக்கக்கூடாதவை...
வீட்டு கடன் திருப்பி செலுத்திய பிறகு ஓரிரு மாதங்களில் சிபில் விவரங்கள் சரியாக அப்டேட் ஆகியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் வங்கியிடம் தகவல் தெரிவிப்பது முக்கியம்.
வங்கி அல்லது இதர நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்ற வீடு அல்லது வீட்டு மனைக் கடனை முற்றிலும் திருப்பி செலுத்தி விட்ட பின்னர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.
* வீட்டின் மீதான பிணை உரிமை விலக்கப்பட்டதற்கான ஆவணத்தை வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
* கடன் பெற்றவர் பெயர் மற்றும் வங்கி கடன் எண், தவணைகள் முறையாக செலுத்தப்பட்டு விட்டது ஆகிய தகவல்களை உள்ளடக்கிய தடையில்லா சான்றையும் (NOC) பெறவேண்டும்.
* வீட்டுக்கான ஒரிஜினல் பத்திரங்களை சம்பந்தப்பட்ட வங்கி திருப்பி தரும்போது அவை நல்ல நிலையிலும், பக்கங்கள் விடுபடாமலும் இருப்பதை கவனித்து கொள்ளவேண்டும்
* வீட்டு கடன் திருப்பி செலுத்திய பிறகு ஓரிரு மாதங்களில் சிபில் விவரங்கள் சரியாக அப்டேட் ஆகியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் வங்கியிடம் தகவல் தெரிவிப்பது முக்கியம்.
* வீட்டின் மீதான பிணை உரிமை விலக்கப்பட்டதற்கான ஆவணத்தை வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
* கடன் பெற்றவர் பெயர் மற்றும் வங்கி கடன் எண், தவணைகள் முறையாக செலுத்தப்பட்டு விட்டது ஆகிய தகவல்களை உள்ளடக்கிய தடையில்லா சான்றையும் (NOC) பெறவேண்டும்.
* வீட்டுக்கான ஒரிஜினல் பத்திரங்களை சம்பந்தப்பட்ட வங்கி திருப்பி தரும்போது அவை நல்ல நிலையிலும், பக்கங்கள் விடுபடாமலும் இருப்பதை கவனித்து கொள்ளவேண்டும்
* வீட்டு கடன் திருப்பி செலுத்திய பிறகு ஓரிரு மாதங்களில் சிபில் விவரங்கள் சரியாக அப்டேட் ஆகியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் வங்கியிடம் தகவல் தெரிவிப்பது முக்கியம்.
* வங்கியிலிருந்து திரும்ப பெற்ற வீட்டு பத்திரங்களுக்கான வில்லங்க சான்றிதழில் வங்கியின் பிணை உரிமை நீக்கம் பற்றிய தகவல்கள் இடம் பெற்றிருப்பதை புதிதாக ஒரு வில்லங்க சான்று எடுத்து அறிந்து கொள்ள வேண்டும். மேற்படி தகவல்கள் இடம் பெறாவிட்டால் அதை பதிவாளரிடம் தெரிவிக்க வேண்டும்.
இதையும் படிங்க... நகங்களை வலிமையாக்கும் உணவுகள்
ஜீரண சக்தியை அதிகப்படுத்துவதற்கு வேறு எந்த மருந்தை தேடி அலைய வேண்டியதில்லை ஒன்றே அல்லது இரண்டோ நல்ல கனிந்த மஞ்சள் வாழைப் பழங்களை சாப்பிட்டால் போதும்.
தேவையான பொருட்கள் :
வாழைப்பழம் - 2
புளிக்காத தயிர் - 5 மேசைக்கரண்டி
தேன் - 3 மேசைக்கரண்டி
தேங்காய்ப் பூ - 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாழைப்பழத்தை தோலை நீக்கி விட்டு வட்டமாக வெட்டிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வாழைப்பழம, தேன், தயிர், தேங்காய் பூ, ஏலக்காய் தூள் போட்டு நன்றாக கலக்கவும்.
கடைசியாக கொத்தமல்லி தழை போட்டு பரிமாறவும்.
வாழைப்பழம் - 2
புளிக்காத தயிர் - 5 மேசைக்கரண்டி
தேன் - 3 மேசைக்கரண்டி
தேங்காய்ப் பூ - 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாழைப்பழத்தை தோலை நீக்கி விட்டு வட்டமாக வெட்டிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வாழைப்பழம, தேன், தயிர், தேங்காய் பூ, ஏலக்காய் தூள் போட்டு நன்றாக கலக்கவும்.
கடைசியாக கொத்தமல்லி தழை போட்டு பரிமாறவும்.
இதையும் படிங்க.. மாங்காய் வைத்து சூப்பரான புலாவ் செய்யலாம் வாங்க...
நகங்கள் உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் தன்மை கொண்டவை. அதனால் ஆரோக்கியமான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.
கை, கால் விரல் நகங்களை அழகுப்படுத்திக்கொள்ள நிறைய பேர் ஆர்வம் காட்டுகிறார்கள். அவை அழகாக இருப்பதை விட ஆரோக்கியமான வளர்ச்சி நிலையில் இருப்பது அவசியமானது. நகங்கள் உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் தன்மை கொண்டவை. அவை பலவீனமாக இருந்தால் உடல் உள்ளுறுப்புகள் பாதிப்புக்குள்ளாகி இருக்கும். அதனால் ஆரோக்கியமான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.
கால்சியம், புரதம் மற்றும் வைட்டமின் பி உள்ளடங்கிய உணவுகள் நகங்களுக்கு வலிமை சேர்க்கும் தன்மைகொண்டவை. மீனில் ஒமேகா 3 அமிலம் மட்டுமல்லாது கந்தகம், புரதம் போன்றவையும் நிறைந்திருக்கிறது. மெல்லிய, எளிதில் உடையக்கூடிய நகங்களை கொண்டவர்கள் மீன் உணவுகளை சாப்பிடுவது அவசியமானது. அதிலிருக்கும் ஒமேகா 3 அமிலம் நகங்கள் ஈரப்பதத்துடனும், வலுவாகவும் இருப்பதற்கு வழிவகை செய்யும்.
முட்டையில் புரதம் மட்டுமல்லாது வைட்டமின் டி, வைட்டமின் பி 12, இரும்பு போன்றவை உள்ளடங்கியிருக்கிறது. இவை நகங்களின் தடிமன் அதிகரிப்பதற்கு உதவி புரியும். பச்சை பட்டாணியில் புரதம், பீட்டா கரோட்டின், வைட்டமின் சி ஆகியவை இருக்கின்றன. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நகங்களை வலுப்படுத்தும்.
கால்சியம், புரதம் மற்றும் வைட்டமின் பி உள்ளடங்கிய உணவுகள் நகங்களுக்கு வலிமை சேர்க்கும் தன்மைகொண்டவை. மீனில் ஒமேகா 3 அமிலம் மட்டுமல்லாது கந்தகம், புரதம் போன்றவையும் நிறைந்திருக்கிறது. மெல்லிய, எளிதில் உடையக்கூடிய நகங்களை கொண்டவர்கள் மீன் உணவுகளை சாப்பிடுவது அவசியமானது. அதிலிருக்கும் ஒமேகா 3 அமிலம் நகங்கள் ஈரப்பதத்துடனும், வலுவாகவும் இருப்பதற்கு வழிவகை செய்யும்.
முட்டையில் புரதம் மட்டுமல்லாது வைட்டமின் டி, வைட்டமின் பி 12, இரும்பு போன்றவை உள்ளடங்கியிருக்கிறது. இவை நகங்களின் தடிமன் அதிகரிப்பதற்கு உதவி புரியும். பச்சை பட்டாணியில் புரதம், பீட்டா கரோட்டின், வைட்டமின் சி ஆகியவை இருக்கின்றன. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நகங்களை வலுப்படுத்தும்.
கீரை, ப்ராக்கோலி உள்ளிட்ட பச்சை இலை காய்கறிகள் நகங்களுக்கு நலம் சேர்க்கும் ஊட்டச்சத்துக்களை கொண்டவை. பலவீனமான, உடையும் தன்மையுடைய நகங்களை கொண்டவர்கள் பச்சை இலை காய்கறிகளை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இதையும் படிக்கலாம்... பாலூட்டும் பெண்கள் தடுப்பூசி போட்டால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுமா?
அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பான விளைவுகள் குறித்து ஆய்வு நடத்தி வந்தனர்.
அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பான விளைவுகள் குறித்து ஆய்வு நடத்தி வந்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் தொடங்கி இந்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் இந்த ஆய்வு நடந்தது.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிராத நிலையில், தாய்ப்பாலூட்டி வந்த 21 தாய்மார், இந்த ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்டனர். அவர்கள் தடுப்பூசி போடுவதற்கு முன்பாக 3 முறை தாய்ப்பால் மற்றும் ரத்த மாதிரிகளை வழங்கினர். முதல் டோஸ் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்ட பின்னரும் தாய்ப்பால், ரத்த மாதிரிகளை அளித்தனர். அவற்றைக்கொண்டு ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர்.
அதன் முடிவுகள் ‘பிரெஸ்ட் பீடிங் மெடிசின்’ பத்திரிகையில் வெளியாகி உள்ளது.
அதில் பாலூட்டும் தாய்மார் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கிறபோது, தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி குறிப்பிடத்தக்க அளவுக்கு இருக்கிறது. இது குழந்தைகளை நோயில் இருந்து பாதுகாக்கும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், தடுப்பூசி தாய்மார்களையும், குழந்தைகளையும் பாதுகாக்கும் என்பதால், கர்ப்பிணி பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் தடுப்பூசி போட இது மற்றொரு கட்டாய காரணம் ஆகிறது.
ஆராய்ச்சி நடத்திய புளோரிடா பல்கலைக்கழக பேராசிரியர் ஜோசப் லார்கின் கூறுகையில், “தாய்ப்பாலில் கொரோனா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி குறிப்பிடத்தக்க அளவுக்கு இருக்கிறது என்பதை எங்கள் கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன. இந்த நோய் எதிர்ப்பு சக்தி தாய்ப்பால் குடிக்கிற குழந்தைகளுக்கு செல்கிறது. எனவே அவர்களை பாதுகாக்கிறது” என குறிப்பிட்டார்.
குழந்தைகள் பிறக்கிறபோது, அவர்களது நோய் எதிர்ப்பு அமைப்பு வளர்ச்சி அடையாது. எனவே அவர்கள் தொற்றுக்கு எதிராக சொந்தமாக போராடுவது கடினம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிராத நிலையில், தாய்ப்பாலூட்டி வந்த 21 தாய்மார், இந்த ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்டனர். அவர்கள் தடுப்பூசி போடுவதற்கு முன்பாக 3 முறை தாய்ப்பால் மற்றும் ரத்த மாதிரிகளை வழங்கினர். முதல் டோஸ் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்ட பின்னரும் தாய்ப்பால், ரத்த மாதிரிகளை அளித்தனர். அவற்றைக்கொண்டு ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர்.
அதன் முடிவுகள் ‘பிரெஸ்ட் பீடிங் மெடிசின்’ பத்திரிகையில் வெளியாகி உள்ளது.
அதில் பாலூட்டும் தாய்மார் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கிறபோது, தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி குறிப்பிடத்தக்க அளவுக்கு இருக்கிறது. இது குழந்தைகளை நோயில் இருந்து பாதுகாக்கும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், தடுப்பூசி தாய்மார்களையும், குழந்தைகளையும் பாதுகாக்கும் என்பதால், கர்ப்பிணி பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் தடுப்பூசி போட இது மற்றொரு கட்டாய காரணம் ஆகிறது.
ஆராய்ச்சி நடத்திய புளோரிடா பல்கலைக்கழக பேராசிரியர் ஜோசப் லார்கின் கூறுகையில், “தாய்ப்பாலில் கொரோனா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி குறிப்பிடத்தக்க அளவுக்கு இருக்கிறது என்பதை எங்கள் கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன. இந்த நோய் எதிர்ப்பு சக்தி தாய்ப்பால் குடிக்கிற குழந்தைகளுக்கு செல்கிறது. எனவே அவர்களை பாதுகாக்கிறது” என குறிப்பிட்டார்.
குழந்தைகள் பிறக்கிறபோது, அவர்களது நோய் எதிர்ப்பு அமைப்பு வளர்ச்சி அடையாது. எனவே அவர்கள் தொற்றுக்கு எதிராக சொந்தமாக போராடுவது கடினம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கட்டிப்பிடிப்பவர்கள் அனைவரையுமே செக்ஸ் சார்ந்து பார்க்கக்கூடாது. சாதாரண கட்டிப்பிடித்தலுக்கும், செக்ஸ் எண்ணத்துடனான கட்டிப்பிடித்தலுக்கும் உள்ள வித்தியாசம் இன்னும் மக்களுக்கு தெரியவில்லை.
மனித இனம் தனது உணர்வுகளை பிடித்தமானவர்களோடு பகிர்ந்துகொள்ள ஒரு வழிமுறையாக கட்டிப்பிடித்தலை கொண்டாடுகிறது. மகிழ்ச்சி, துக்கம் இந்த இரண்டிலும் இது முக்கியபங்கு வகிக்கிறது. மகிழ்ச்சியை வெளிப்படுத்த உலக தலைவர்கள் முதல் உள்ளூர் மக்கள் வரை கட்டிப்பிடித்தலை கையாண்டுகொண்டிருக்கும் நேரத்தில், இந்தியாவில் அதை பற்றிய விவாதங்களும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. பாசமான இந்த விஷயத்தை, ஆபாசமாகவும் கருதுவதுதான் விவாதத்திற்கான காரணம்.
பள்ளி ஒன்றில் மாணவர்கள் கலைவிழா நடந்துகொண்டிருந்தது. ஒரே பள்ளியில் பிளஸ் - ஒன் படிக்கும் மாணவியும், பிளஸ்-டூ படிக்கும் மாணவரும் வெவ்வேறு போட்டிகளில் கலந்துகொண்டார்கள். போட்டியில் கிடைத்த வெற்றி தந்த திடீர் மகிழ்ச்சியில் இருவரும் கட்டிப்பிடித்துக்கொண்டார்கள். அதை பார்த்த ஆசிரியை ஒருவர் பள்ளி நிர்வாகத்திடம் சொல்ல, இருவரும் பள்ளியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார்கள். இந்த விஷயத்தை மாணவனின் பெற்றோர் சிறுவர்களுக்கான உரிமை கமிஷனில் புகாராக பதிவு செய்தார்கள். கமிஷன், மாணவருக்கு ஆதரவாக செயல்பட்டது. உடனே பள்ளி நிர்வாகம் உயர்நீதி மன்றத்தில் வழக்குதொடுத்தது.
‘போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை வாழ்த்தவே கட்டிப்பிடித்தேன்’ என்று மாணவர் சொன்னார். ‘அப்படியில்லை.. அது அழுத்தமான கட்டிப்பிடித்தலாக இருந்தது. அது பள்ளியின் ஒழுக்க நெறி முறைகளுக்கு எதிரானது’ என்று பள்ளி நிர்வாகம் சொன்னது. நீதிமன்றமும் பள்ளியின் கருத்துக்கு செவிசாய்த்தது. விவாதம் நீண்டுகொண்டே போக, பள்ளி அமைந் திருக்கும் தொகுதியை சேர்ந்த பிரபலமான எம்.பி. அதில் தலையிட்டார். அதை தொடர்ந்து மாணவி பள்ளியில் சேர்க்கப்பட்டார். மாணவரும் பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்டார். இந்த விஷயம் பி.பி.சி. டெலிவிஷன் வரை விவாதப் பொருளாக மாறியது. இந்த சம்பவம் கேரளாவில் நடந்தது.
‘கட்டிப்பிடிப்பது அன்பானது.. அது மேஜிக் போன்று மனதில் பல்வேறு நல்ல மாற்றங்களை உருவாக்கக்கூடியது’ என்று ஒரு சாராரும், ‘அப்படி அதற்கு அபூர்வ சக்திகள் இருந்தாலும், அது ரகசியமாக செய்ய வேண்டிய விஷயம்ங்க..’ என்று இன்னொரு சாராரும் கூறி, கட்டிப்பிடித்தல் விவாதத்திற்கு கணிசமாக எண்ணெய் ஊற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
“கட்டிப்பிடிப்பவர்கள் அனைவரையுமே செக்ஸ் சார்ந்து பார்க்கக்கூடாது. சாதாரண கட்டிப்பிடித்தலுக்கும், செக்ஸ் எண்ணத்துடனான கட்டிப்பிடித்தலுக்கும் உள்ள வித்தியாசம் இன்னும் மக்களுக்கு தெரியவில்லை. பிரித்துப் பார்க்கும் அளவுக்கு விவரம் இல்லாதவர்கள் இதை பற்றி பேசும்போதுதான் பிரச்சினை உருவாகிறது” என்கிறார், கல்லூரி மாணவி ரம்யா.
சினிமாவுக்கு வெளியே கட்டிப்பிடித்தலால் அதிக விமர்சனத்தில் சிக்கிக்கொண்டவர் நடிகை ஸ்வேதா மேனன். அவர், “இந்த விஷயத்தில் ஆட்களின் பார்வையில்தான் கோளாறு இருக்கிறது. அது பற்றிய விவாதம் என்னை ஒருபோதும் பாதித்ததில்லை. எனக்கு ஒருவரை பிடித்தால் நான் அவரை கட்டிப் பிடிப்பேன். அவர் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அதை நான் மகிழ்ச்சியோடு செய்வேன். கடவுள் நமக்கு கைகளை தந்திருப்பது மற்றவர்களை கட்டிப்பிடிக்கத்தான் என்று நான் நினைக்கிறேன். கட்டிப்பிடித்தல் மூலம் நமது அன்பை நாம் இன்னொருவருக்கு புரியவைக்கவேண்டும். அன்புக்கு பாலின வேறுபாடு கிடையாது. எனக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படி நான் அன்பை வெளிப்படுத்துவேன். நமது தொட்டால்சிணுங்கி சமூகம் இந்த சின்ன விஷயத்தை எல்லாம் பெரிதாக்கிவிடுகிறது” என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
இந்த கட்டிப்பிடித்தல் விஷயத்தில் அதிகம் வாங்கிக் கட்டிக்கொண்டவர் பாரதிய ஜனதா கட்சியில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாளவியா. நேருஜி தனது சகோதரி விஜயலட்சுமி பண்டிட்டையும், அவரது மகளையும் கட்டிப்பிடிக்கும் படத்தை வெளியிட்ட மாளவியா, அதை பற்றி மோசமாக கருத்தும் தெரிவித்திருந்தார். இதனால் அவருக்கு நாடு முழுக்க இருந்து கண்டனக்குரல்கள் எழுந்தன.
கட்டிப்பிடித்தலிலும் நிறைய வகைகள் இருக்கின்றன. அது உணர்வுகளை வெளிப்படுத்தும் விஷயத்தில் வித்தியாசங்கள் இருக்கின்றன. அம்மாவும்- மகளும், கணவனும்- மனைவியும், காதலனும்- காதலியும், நண்பனும்- தோழியும், தோழியும்- தோழியும்.. இப்படி உறவுக்கும், உணர்வுக்கும் தகுந்தபடி கட்டிப்பிடித்தல்கள் இருக்கின்றன.
மக்கள் தொடர்பு பணியில் இருக்கும் பெண்மணி ஒருவர், “நெடுநாள் பிரிந்திருந்த நண்பர் ஒருவரை திடீரென்று பார்க்கும்போது நான் ஓடிச்சென்று அவர் கைகளை பற்றிப்பிடித்துக்கொள்வேன். இது என் வழக்கம். இப்படி நான் அன்பை வெளிப்படுத்தும் விஷயத்தில் ஆண், பெண் என்ற வித்தியாசம் இல்லை. கட்டி அணைத்தலை பொறுத்த வரையில் நமக்கு விருப்பம் இருந்தால்தான் இன்னொருவர் கட்டிப் பிடிக்க அனுமதிப்போம். இருவருக்கும் பிடித்திருந்தால்தான் அது ஆரோக்கியமான அணைப்பு..” என்கிறார்.
கட்டிப்பிடித்தால்தான் தூக்கம் வரும் என்ற நிலையிலும் நம்மில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் கட்டிப்பிடிக்க யாரும் கிடைக்காதபோது, தலையணையை கட்டிப்பிடித்துக்கொண்டு தூங்குகிறார்கள். எல்லோருக்கும் யாரிடமிருந்தாவது கட்டிப்பிடித்தல் அனுபவம் கிடைத்திருக்கத்தான் செய்யும். ஆனால் அனைவருக்கும் அதன் மீது ஆர்வம் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது.
இந்த கட்டிப்பிடித்தலின் சரித்திரம் எங்கிருந்து எப்படி தொடங்கியிருக்கும்?
இரண்டு எதிரிகளிடமிருந்துதான் இது தொடங்கியிருக்கும் என்கிறார்கள். எதிரிகள் இருவர் சந்தித்துக்கொள்ளும்போது தாங்கள் ஆயுதம் எதையும் மறைத்துவைத்துக்கொள்ளவில்லை என்பதை உணர்த்த ஒருவரை ஒருவர் கட்டித்தழுவிக்கொண்டார்களாம். ஆயுதம் இல்லை.. அன்புதான் இருக்கிறது.. என்பதை காட்டவே இப்போது உலகத் தலைவர்கள் பலர் ஆரத் தழுவிக்கொள்கிறார்கள். நமது பிரதமர் நரேந்திர மோடியும் உலகத் தலைவர்களோடு அன்பு பாராட்ட கட்டிப்பிடிப்பது, பலரையும் கவர்ந்திருக்கவே செய்கிறது.
பள்ளி ஒன்றில் மாணவர்கள் கலைவிழா நடந்துகொண்டிருந்தது. ஒரே பள்ளியில் பிளஸ் - ஒன் படிக்கும் மாணவியும், பிளஸ்-டூ படிக்கும் மாணவரும் வெவ்வேறு போட்டிகளில் கலந்துகொண்டார்கள். போட்டியில் கிடைத்த வெற்றி தந்த திடீர் மகிழ்ச்சியில் இருவரும் கட்டிப்பிடித்துக்கொண்டார்கள். அதை பார்த்த ஆசிரியை ஒருவர் பள்ளி நிர்வாகத்திடம் சொல்ல, இருவரும் பள்ளியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார்கள். இந்த விஷயத்தை மாணவனின் பெற்றோர் சிறுவர்களுக்கான உரிமை கமிஷனில் புகாராக பதிவு செய்தார்கள். கமிஷன், மாணவருக்கு ஆதரவாக செயல்பட்டது. உடனே பள்ளி நிர்வாகம் உயர்நீதி மன்றத்தில் வழக்குதொடுத்தது.
‘போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை வாழ்த்தவே கட்டிப்பிடித்தேன்’ என்று மாணவர் சொன்னார். ‘அப்படியில்லை.. அது அழுத்தமான கட்டிப்பிடித்தலாக இருந்தது. அது பள்ளியின் ஒழுக்க நெறி முறைகளுக்கு எதிரானது’ என்று பள்ளி நிர்வாகம் சொன்னது. நீதிமன்றமும் பள்ளியின் கருத்துக்கு செவிசாய்த்தது. விவாதம் நீண்டுகொண்டே போக, பள்ளி அமைந் திருக்கும் தொகுதியை சேர்ந்த பிரபலமான எம்.பி. அதில் தலையிட்டார். அதை தொடர்ந்து மாணவி பள்ளியில் சேர்க்கப்பட்டார். மாணவரும் பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்டார். இந்த விஷயம் பி.பி.சி. டெலிவிஷன் வரை விவாதப் பொருளாக மாறியது. இந்த சம்பவம் கேரளாவில் நடந்தது.
‘கட்டிப்பிடிப்பது அன்பானது.. அது மேஜிக் போன்று மனதில் பல்வேறு நல்ல மாற்றங்களை உருவாக்கக்கூடியது’ என்று ஒரு சாராரும், ‘அப்படி அதற்கு அபூர்வ சக்திகள் இருந்தாலும், அது ரகசியமாக செய்ய வேண்டிய விஷயம்ங்க..’ என்று இன்னொரு சாராரும் கூறி, கட்டிப்பிடித்தல் விவாதத்திற்கு கணிசமாக எண்ணெய் ஊற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
“கட்டிப்பிடிப்பவர்கள் அனைவரையுமே செக்ஸ் சார்ந்து பார்க்கக்கூடாது. சாதாரண கட்டிப்பிடித்தலுக்கும், செக்ஸ் எண்ணத்துடனான கட்டிப்பிடித்தலுக்கும் உள்ள வித்தியாசம் இன்னும் மக்களுக்கு தெரியவில்லை. பிரித்துப் பார்க்கும் அளவுக்கு விவரம் இல்லாதவர்கள் இதை பற்றி பேசும்போதுதான் பிரச்சினை உருவாகிறது” என்கிறார், கல்லூரி மாணவி ரம்யா.
சினிமாவுக்கு வெளியே கட்டிப்பிடித்தலால் அதிக விமர்சனத்தில் சிக்கிக்கொண்டவர் நடிகை ஸ்வேதா மேனன். அவர், “இந்த விஷயத்தில் ஆட்களின் பார்வையில்தான் கோளாறு இருக்கிறது. அது பற்றிய விவாதம் என்னை ஒருபோதும் பாதித்ததில்லை. எனக்கு ஒருவரை பிடித்தால் நான் அவரை கட்டிப் பிடிப்பேன். அவர் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அதை நான் மகிழ்ச்சியோடு செய்வேன். கடவுள் நமக்கு கைகளை தந்திருப்பது மற்றவர்களை கட்டிப்பிடிக்கத்தான் என்று நான் நினைக்கிறேன். கட்டிப்பிடித்தல் மூலம் நமது அன்பை நாம் இன்னொருவருக்கு புரியவைக்கவேண்டும். அன்புக்கு பாலின வேறுபாடு கிடையாது. எனக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படி நான் அன்பை வெளிப்படுத்துவேன். நமது தொட்டால்சிணுங்கி சமூகம் இந்த சின்ன விஷயத்தை எல்லாம் பெரிதாக்கிவிடுகிறது” என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
இந்த கட்டிப்பிடித்தல் விஷயத்தில் அதிகம் வாங்கிக் கட்டிக்கொண்டவர் பாரதிய ஜனதா கட்சியில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாளவியா. நேருஜி தனது சகோதரி விஜயலட்சுமி பண்டிட்டையும், அவரது மகளையும் கட்டிப்பிடிக்கும் படத்தை வெளியிட்ட மாளவியா, அதை பற்றி மோசமாக கருத்தும் தெரிவித்திருந்தார். இதனால் அவருக்கு நாடு முழுக்க இருந்து கண்டனக்குரல்கள் எழுந்தன.
கட்டிப்பிடித்தலிலும் நிறைய வகைகள் இருக்கின்றன. அது உணர்வுகளை வெளிப்படுத்தும் விஷயத்தில் வித்தியாசங்கள் இருக்கின்றன. அம்மாவும்- மகளும், கணவனும்- மனைவியும், காதலனும்- காதலியும், நண்பனும்- தோழியும், தோழியும்- தோழியும்.. இப்படி உறவுக்கும், உணர்வுக்கும் தகுந்தபடி கட்டிப்பிடித்தல்கள் இருக்கின்றன.
மக்கள் தொடர்பு பணியில் இருக்கும் பெண்மணி ஒருவர், “நெடுநாள் பிரிந்திருந்த நண்பர் ஒருவரை திடீரென்று பார்க்கும்போது நான் ஓடிச்சென்று அவர் கைகளை பற்றிப்பிடித்துக்கொள்வேன். இது என் வழக்கம். இப்படி நான் அன்பை வெளிப்படுத்தும் விஷயத்தில் ஆண், பெண் என்ற வித்தியாசம் இல்லை. கட்டி அணைத்தலை பொறுத்த வரையில் நமக்கு விருப்பம் இருந்தால்தான் இன்னொருவர் கட்டிப் பிடிக்க அனுமதிப்போம். இருவருக்கும் பிடித்திருந்தால்தான் அது ஆரோக்கியமான அணைப்பு..” என்கிறார்.
கட்டிப்பிடித்தால்தான் தூக்கம் வரும் என்ற நிலையிலும் நம்மில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் கட்டிப்பிடிக்க யாரும் கிடைக்காதபோது, தலையணையை கட்டிப்பிடித்துக்கொண்டு தூங்குகிறார்கள். எல்லோருக்கும் யாரிடமிருந்தாவது கட்டிப்பிடித்தல் அனுபவம் கிடைத்திருக்கத்தான் செய்யும். ஆனால் அனைவருக்கும் அதன் மீது ஆர்வம் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது.
இந்த கட்டிப்பிடித்தலின் சரித்திரம் எங்கிருந்து எப்படி தொடங்கியிருக்கும்?
இரண்டு எதிரிகளிடமிருந்துதான் இது தொடங்கியிருக்கும் என்கிறார்கள். எதிரிகள் இருவர் சந்தித்துக்கொள்ளும்போது தாங்கள் ஆயுதம் எதையும் மறைத்துவைத்துக்கொள்ளவில்லை என்பதை உணர்த்த ஒருவரை ஒருவர் கட்டித்தழுவிக்கொண்டார்களாம். ஆயுதம் இல்லை.. அன்புதான் இருக்கிறது.. என்பதை காட்டவே இப்போது உலகத் தலைவர்கள் பலர் ஆரத் தழுவிக்கொள்கிறார்கள். நமது பிரதமர் நரேந்திர மோடியும் உலகத் தலைவர்களோடு அன்பு பாராட்ட கட்டிப்பிடிப்பது, பலரையும் கவர்ந்திருக்கவே செய்கிறது.
கட்டிப்பிடித்தலிலும் கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அமெரிக்க நடிகர் ஜாசன் டிட்டர், தி வியூ என்ற பேச்சரங்கத்தில் ஒரே நிமிடத்தில் 86 முறை கட்டிப்பிடித்தார். அதற்கு முன்பு 79 முறை தழுவியதே உலக சாதனையாக இருந்தது. அதனை இவர் முறியடித்துவிட்டாலும், 60 வினாடிகளில் 100 பேரை கட்டிப் பிடித்துவிடவேண்டும் என்று தீர்மானம் போட்டிருந்தார். 86 பேரிலே, நேரம் முடிந்துவிட்டது என்றாலும் மீதி 14 பேரையும் ஏமாற்றாமல் கட்டிப்பிடித்தார்.
இதையும் படிங்க.. தைராய்டு ஏற்படுத்தும் உடல் பாதிப்புகள்
தைராய்டு சுரப்பியில் ஏற்பட்ட பாதிப்பால், பல லட்சம் பேர் வாழ்நாள் முழுவதும் மருந்து எடுத்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
உச்சி முதல் உள்ளங்கால் வரை ஏதாவது ஒரு பகுதியில் ஏதாவது ஒரு உறுப்பில் பாதிப்பு இல்லாத மனிதர்களே இல்லை. நவீன மாற்றங்களின் பின்னால் ஓடி, பாரம்பரிய உணவு, பழக்கவழக்கங்களைக் கைவிட்டதன் விளைவாக ஆரோக்கியம் இழந்து, நிம்மதியை இழந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த வகையில், மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பல நூறு நோய்களில் தைராய்டு நோயும் ஒன்று.
கழுத்தின் முன் பகுதியில் ட்ரக்கியா எனப்படும் மூச்சுக்குழலுக்கு மேலே, குரல்வளைக்கு கீழே லாரிங்ஸ் எனப்படும் குரல்வளையின் இரண்டு பக்கவாட்டு பகுதிகளிலும் அமைந்துள்ள ஒரு நாளமில்லா சுரப்பி தான், தைராய்டு சுரப்பி. இரண்டு பக்கமும் இணைந்து காணப்படும். இவற்றை இணைப்பது இஸ்த்மஸ் என்ற பூசந்தி. இதன் எடை 20 கிராம் முதல் 40 கிராம்வரை இருக்கும். ஆண்களைவிட பெண்களுக்கு இச்சுரப்பி பெரிதாக இருக்கும்.
இது வண்ணத்துப்பூச்சியின் வடிவத்தை போலிருக்கும். ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்பே தைராய்டு சுரப்பி வேலையை தொடங்கி விடுகிறது. உடலின் வளர்சிதை மாற்றங்களுக்கும், உடலின் சத்துகளை சீராக வைத்திருக்கவும் இது உதவுகிறது. இச்சுரப்பியின் ஹார்மோன்கள் மனித உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி, உறுப்புகளின் செயல்பாடுகளுக்கு பெரும் உதவி செய்கின்றன.
தைராய்டு சுரப்பியில் ஏற்பட்ட பாதிப்பால், பல லட்சம் பேர் வாழ்நாள் முழுவதும் மருந்து எடுத்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டு கொண்டிருக்கிறார்கள். உலகம் முழுவதும் 20 கோடி பேர் தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அயோடின் சத்து குறைபாடு, தைராய்டு சுரப்பியில் வீக்கம், தொற்றுநோய் (வைரஸ்) கிருமி தாக்குதல், இதய நோய்கள், மனநோய், வலிப்பு நோய், புற்று நோய்களுக்காக எடுத்துக்கொள்ளப்படும் மருந்துகளின் பக்க விளைவு, கர்ப்பக் காலத்தில் ஏற்படும் தைராய்டு சுரப்பி பாதிப்பு, பிறவி தைராய்டு சுரப்பி குறைபாடு, பிட்யூட்டரி சுரப்பி பாதிக்கப்பட்டிருப்பது, மூளையில் உள்ள ஹைபோதலாமஸ் ஹார்மோன் உற்பத்தி குறைபாடு, உணவு முறை மாற்றங்கள், மனஉளைச்சல் போன்றவற்றால் ஹைபோ தைராய்டிசம் ஏற்படுகிறது.
பெண்களின் மாதவிடாய் ஒழுங்கின்மை, தீராத மலக்கட்டு பிரச்சினை, முடி உதிர்தல், தோல் வறட்சி, சோர்வு, அடிக்கடி சளி பிடித்தல், குறைந்த அளவு இதயத்துடிப்பு, உடல் பருமன், கை, கால் சில்லிடல் போன்ற அறிகுறிகள் தைராய்டு பிரச்சினை இருப்பவர்களுக்கு இந்நோய் இருக்கலாம். உடல் பலவீனம், வேகமான இதயத் துடிப்பு, தூக்கமின்மை, உடலில் அரிப்பு, முடி உதிர்தல், குமட்டல், வாந்தி, திடீரென உடல் எடை குறைதல், ஆண்களின் மார்பு வளர்ச்சி, தசை தளர்ச்சி, கை, கால் நடுக்கம், வயிற்று பிரச்சினை, அதிக வியர்வை போன்ற அறிகுறிகள் காணப்படும்.
கழுத்தின் முன் பகுதியில் ட்ரக்கியா எனப்படும் மூச்சுக்குழலுக்கு மேலே, குரல்வளைக்கு கீழே லாரிங்ஸ் எனப்படும் குரல்வளையின் இரண்டு பக்கவாட்டு பகுதிகளிலும் அமைந்துள்ள ஒரு நாளமில்லா சுரப்பி தான், தைராய்டு சுரப்பி. இரண்டு பக்கமும் இணைந்து காணப்படும். இவற்றை இணைப்பது இஸ்த்மஸ் என்ற பூசந்தி. இதன் எடை 20 கிராம் முதல் 40 கிராம்வரை இருக்கும். ஆண்களைவிட பெண்களுக்கு இச்சுரப்பி பெரிதாக இருக்கும்.
இது வண்ணத்துப்பூச்சியின் வடிவத்தை போலிருக்கும். ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்பே தைராய்டு சுரப்பி வேலையை தொடங்கி விடுகிறது. உடலின் வளர்சிதை மாற்றங்களுக்கும், உடலின் சத்துகளை சீராக வைத்திருக்கவும் இது உதவுகிறது. இச்சுரப்பியின் ஹார்மோன்கள் மனித உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி, உறுப்புகளின் செயல்பாடுகளுக்கு பெரும் உதவி செய்கின்றன.
தைராய்டு சுரப்பியில் ஏற்பட்ட பாதிப்பால், பல லட்சம் பேர் வாழ்நாள் முழுவதும் மருந்து எடுத்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டு கொண்டிருக்கிறார்கள். உலகம் முழுவதும் 20 கோடி பேர் தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அயோடின் சத்து குறைபாடு, தைராய்டு சுரப்பியில் வீக்கம், தொற்றுநோய் (வைரஸ்) கிருமி தாக்குதல், இதய நோய்கள், மனநோய், வலிப்பு நோய், புற்று நோய்களுக்காக எடுத்துக்கொள்ளப்படும் மருந்துகளின் பக்க விளைவு, கர்ப்பக் காலத்தில் ஏற்படும் தைராய்டு சுரப்பி பாதிப்பு, பிறவி தைராய்டு சுரப்பி குறைபாடு, பிட்யூட்டரி சுரப்பி பாதிக்கப்பட்டிருப்பது, மூளையில் உள்ள ஹைபோதலாமஸ் ஹார்மோன் உற்பத்தி குறைபாடு, உணவு முறை மாற்றங்கள், மனஉளைச்சல் போன்றவற்றால் ஹைபோ தைராய்டிசம் ஏற்படுகிறது.
பெண்களின் மாதவிடாய் ஒழுங்கின்மை, தீராத மலக்கட்டு பிரச்சினை, முடி உதிர்தல், தோல் வறட்சி, சோர்வு, அடிக்கடி சளி பிடித்தல், குறைந்த அளவு இதயத்துடிப்பு, உடல் பருமன், கை, கால் சில்லிடல் போன்ற அறிகுறிகள் தைராய்டு பிரச்சினை இருப்பவர்களுக்கு இந்நோய் இருக்கலாம். உடல் பலவீனம், வேகமான இதயத் துடிப்பு, தூக்கமின்மை, உடலில் அரிப்பு, முடி உதிர்தல், குமட்டல், வாந்தி, திடீரென உடல் எடை குறைதல், ஆண்களின் மார்பு வளர்ச்சி, தசை தளர்ச்சி, கை, கால் நடுக்கம், வயிற்று பிரச்சினை, அதிக வியர்வை போன்ற அறிகுறிகள் காணப்படும்.
தைராய்டு பாதிப்பு வராமல் தடுக்க, சத்துள்ள சுத்தமான பச்சை காய்கறிகள், கனிகள், கீரைகள், சரிவிகித உணவு, உடல் உழைப்பு, ஏதாவது ஒரு உடற்பயிற்சி, ஆசனங்கள், மன மகிழ்ச்சி ஆகியவற்றை வாழ்க்கையில் சாத்தியப்படுத்தினால் தைராய்டு நோய் மட்டுமல்ல, எந்த நோயும் வராது. அப்படியே வந்தாலும் எளிதில் தீர்க்க முடியும்.
இதையும் படிங்க.. சருமத்தை தற்காத்து கொள்ள வீட்டிலே தயாரிக்கலாம் பேஸ் பேக்
சூரிய கதிர்களின் உக்கிரம் சருமத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். வெயிலின் தாக்கத்தில் இருந்து சருமத்தை தற்காத்து கொள்ள வீட்டிலே தயாரித்து உபயோகிக்க கூடிய எளிய வழிமுறைகளை பார்ப்போம்.
சூரிய கதிர்களின் உக்கிரம் சருமத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். தோல் தடிப்பு, சரும வறட்சி போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். வெயிலின் தாக்கத்தில் இருந்து சருமத்தை தற்காத்து கொள்ள வீட்டிலே தயாரித்து உபயோகிக்க கூடிய எளிய வழிமுறைகளை பார்ப்போம்.
1. தக்காளி - ஆரஞ்சு பேஸ் பேக்
தக்காளி சாறு, ஓட்ஸ், பால் ஆகியவற்றை தலா இரண்டு தேக்கரண்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றுடன் சிறிதளவு ஆரஞ்சு சாறு, கசகசா சேர்த்து பிசைந்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் சற்று அழுத்தி பூச வேண்டும். நன்றாக உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த கலவை சருமத்திற்கு பிரகாசமும், பளபளப்பும் தரும்.
2. மோர்
சூரிய ஒளியினால் சருமம் பாதிப்புக்குள்ளாவதை மோர் கட்டுப்படுத்தும். வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியதும் முகத்தில் மோரை தடவி வரலாம். இது வெயிலின் தாக்கத்தால் ஏற்பட்ட பழுப்பு நிறத்தினை கட்டுப்படுத்தும்.
3. வேப்பிலை
பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு கைப்பிடியளவு வேப்பிலையை போட்டு சூடுபடுத்திக்கொள்ள வேண்டும். அதனை இரவு முழுவதும் ஊறவைத்துவிட்டு, மறுநாள் காலையில் தண்ணீரை வடிகட்டிவிட்டு இலைகளை மட்டும் நன்கு அரைத்து சருமத்தில் தடவி வர வேண்டும். சிறிது நேரம் கழித்து வடிகட்டிய தண்ணீரால் முகத்தை கழுவ வேண்டும். வேப்பிலையில் இருக்கும் சல்பர் மூலக்கூறுகள் சருமத்திற்கு நலம் சேர்க்கும்.
4. சோற்று கற்றாழை
சூரிய ஒளியால் சருமத்தில் ஏற்படும் எரிச்சலை கட்டுப்படுத்தும் தன்மை சோற்று கற்றாழைக்கு உண்டு. கற்றாழையில் இருக்கும் ஜெல்லை தடவி வந்தால் சருமம் மிருதுவாகும்.
5. பப்பாளி
பப்பாளி சாற்றை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவவும். அதில் உள்ள என்சைம்கள் இறந்த செல்களை நீக்க உதவும். பப்பாளி சாறுடன் எழுமிச்சை சாறு அல்லது தயிர் கலந்தும் உபயோகிக்கலாம். அவை வெப்ப தாக்கத்தால் சருமத்தில் ஏற்பட்ட பழுப்பு நிறத்தை நீக்க உதவும். பப்பாளி, வாழை, ஆரஞ்சு, ஆப்பிள் போன்ற பழங்களை கூழாக்கி முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவவும். வாழைப்பழம் சருமத்தை வலுவாக்கும். ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி சருமத்தில் உள்ள அமில கார அளவை சமன் செய்ய உதவும். ஆப்பிளில் உள்ள பெக்டின் வெயிலினால் சருமத்தில் உண்டாகும் பழுப்பினை போக்கும்.
6. எலுமிச்சை சாறு
எலுமிச்சையில் உள்ள சிட்ரஸ் சூரிய ஒளியினால் சருமத்தில் தோன்றும் பழுப்பு நிறத்திற்கு அற்புதமான தீர்வாகும். எலுமிச்சை சாற்றை தேன் அல்லது கடலை மாவுடன் கலந்து சருமத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
7. தேங்காய் நீர்- சந்தனம் பேக்
இரண்டு தேக் கரண்டி சந்தனத்தூளை தேங்காய் நீருடன் கெட்டியாக கலந்து முகம் முழுவதும் தடவி 20 நிமிடம் கழித்து கழுவி வர வேண்டும். சருமம் பளபளப்பாக மாறும்.
8. வெள்ளரிகாய் - ரோஸ் வாட்டர் பேக்
வெள்ளரிகாய் சாறு மற்றும் ரோஸ் வாட்டர் சருமத்திற்கு குளிர்ச்சி அளிக்கக் கூடியது. சிறிதளவு வெள்ளரி சாறுடன் எலுமிச்சை சாறு, ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவர சருமம் பொலிவு பெறும்.
9. பால் மாஸ்க்
1. தக்காளி - ஆரஞ்சு பேஸ் பேக்
தக்காளி சாறு, ஓட்ஸ், பால் ஆகியவற்றை தலா இரண்டு தேக்கரண்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றுடன் சிறிதளவு ஆரஞ்சு சாறு, கசகசா சேர்த்து பிசைந்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் சற்று அழுத்தி பூச வேண்டும். நன்றாக உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த கலவை சருமத்திற்கு பிரகாசமும், பளபளப்பும் தரும்.
2. மோர்
சூரிய ஒளியினால் சருமம் பாதிப்புக்குள்ளாவதை மோர் கட்டுப்படுத்தும். வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியதும் முகத்தில் மோரை தடவி வரலாம். இது வெயிலின் தாக்கத்தால் ஏற்பட்ட பழுப்பு நிறத்தினை கட்டுப்படுத்தும்.
3. வேப்பிலை
பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு கைப்பிடியளவு வேப்பிலையை போட்டு சூடுபடுத்திக்கொள்ள வேண்டும். அதனை இரவு முழுவதும் ஊறவைத்துவிட்டு, மறுநாள் காலையில் தண்ணீரை வடிகட்டிவிட்டு இலைகளை மட்டும் நன்கு அரைத்து சருமத்தில் தடவி வர வேண்டும். சிறிது நேரம் கழித்து வடிகட்டிய தண்ணீரால் முகத்தை கழுவ வேண்டும். வேப்பிலையில் இருக்கும் சல்பர் மூலக்கூறுகள் சருமத்திற்கு நலம் சேர்க்கும்.
4. சோற்று கற்றாழை
சூரிய ஒளியால் சருமத்தில் ஏற்படும் எரிச்சலை கட்டுப்படுத்தும் தன்மை சோற்று கற்றாழைக்கு உண்டு. கற்றாழையில் இருக்கும் ஜெல்லை தடவி வந்தால் சருமம் மிருதுவாகும்.
5. பப்பாளி
பப்பாளி சாற்றை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவவும். அதில் உள்ள என்சைம்கள் இறந்த செல்களை நீக்க உதவும். பப்பாளி சாறுடன் எழுமிச்சை சாறு அல்லது தயிர் கலந்தும் உபயோகிக்கலாம். அவை வெப்ப தாக்கத்தால் சருமத்தில் ஏற்பட்ட பழுப்பு நிறத்தை நீக்க உதவும். பப்பாளி, வாழை, ஆரஞ்சு, ஆப்பிள் போன்ற பழங்களை கூழாக்கி முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவவும். வாழைப்பழம் சருமத்தை வலுவாக்கும். ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி சருமத்தில் உள்ள அமில கார அளவை சமன் செய்ய உதவும். ஆப்பிளில் உள்ள பெக்டின் வெயிலினால் சருமத்தில் உண்டாகும் பழுப்பினை போக்கும்.
6. எலுமிச்சை சாறு
எலுமிச்சையில் உள்ள சிட்ரஸ் சூரிய ஒளியினால் சருமத்தில் தோன்றும் பழுப்பு நிறத்திற்கு அற்புதமான தீர்வாகும். எலுமிச்சை சாற்றை தேன் அல்லது கடலை மாவுடன் கலந்து சருமத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
7. தேங்காய் நீர்- சந்தனம் பேக்
இரண்டு தேக் கரண்டி சந்தனத்தூளை தேங்காய் நீருடன் கெட்டியாக கலந்து முகம் முழுவதும் தடவி 20 நிமிடம் கழித்து கழுவி வர வேண்டும். சருமம் பளபளப்பாக மாறும்.
8. வெள்ளரிகாய் - ரோஸ் வாட்டர் பேக்
வெள்ளரிகாய் சாறு மற்றும் ரோஸ் வாட்டர் சருமத்திற்கு குளிர்ச்சி அளிக்கக் கூடியது. சிறிதளவு வெள்ளரி சாறுடன் எலுமிச்சை சாறு, ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவர சருமம் பொலிவு பெறும்.
9. பால் மாஸ்க்
பொலிவற்ற சருமத்தை பளபளப்பாக்கு வதற்கு பால் மாஸ்க் உதவும். பால் மற்றும் கிளிசரினை ஒன்றாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். இது சூரிய ஒளியினால் ஏற்படும் எதிர்வினைகளில் இருந்து சருமத்தை காக்க உதவும். ஒரு கப் பாலுடன் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்தும் முகத்தில் தடவி வரலாம். இதுவும் சருமத்திற்கு பொலிவு தரும்.
இதையும் படிங்க... சத்தான சிறுதானிய வெஜ் நூடுல்ஸ்
சிறுதானியங்களில் பல்வேறு ருசியான சத்தான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று சிறுதானிய வெஜ் நூடுல்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிறுதானிய சத்து மாவு - ஒரு கப்,
விரும்பிய காய்கறி கலவை (கேரட், பீன்ஸ், பட்டாணி) - ஒரு கப்,
வெங்காயம் - ஒன்று,
பச்சை மிளகாய் - 2
தக்காளி சாஸ் - ஒரு டீஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லி தழை -சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவைக்கு.
செய்முறை:
காய்கறிகள், வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெறும் வாணலியில் சிறுதானிய சத்துமாவை வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.
பின்னர் இதனுடன் உப்பு, சூடான தண்ணீர் விட்டு இடியாப்ப மாவு பதத்துக்கு பிசையவும்.
மாவை இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து ஆவியில் வேக விட்டு எடுத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பிறகு உப்பு, தக்காளி சாஸ், வேக வைத்த நூடுல்ஸ் சேர்த்து கிளறவும். மசாலா எல்லாம் நூடுல்ஸ் உடன் சேர்ந்ததும் கொத்தமல்லிதழை தூவி இறக்கி பரிமாறவும்.
சிறுதானிய சத்து மாவு - ஒரு கப்,
விரும்பிய காய்கறி கலவை (கேரட், பீன்ஸ், பட்டாணி) - ஒரு கப்,
வெங்காயம் - ஒன்று,
பச்சை மிளகாய் - 2
தக்காளி சாஸ் - ஒரு டீஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லி தழை -சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவைக்கு.
செய்முறை:
காய்கறிகள், வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெறும் வாணலியில் சிறுதானிய சத்துமாவை வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.
பின்னர் இதனுடன் உப்பு, சூடான தண்ணீர் விட்டு இடியாப்ப மாவு பதத்துக்கு பிசையவும்.
மாவை இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து ஆவியில் வேக விட்டு எடுத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பிறகு உப்பு, தக்காளி சாஸ், வேக வைத்த நூடுல்ஸ் சேர்த்து கிளறவும். மசாலா எல்லாம் நூடுல்ஸ் உடன் சேர்ந்ததும் கொத்தமல்லிதழை தூவி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான சிறுதானிய வெஜ் நூடுல்ஸ் ரெடி.
இதையும் படிங்க.. மாலை நேரத்தில் சாப்பிட அருமையான சிக்கன் போண்டா
குழந்தைகளுக்கு சாலையில் சந்திக்கும் அறிமுகமற்ற மனிதரால் ஏற்படும் ஆபத்தைவிட வலைத்தளத்தில் சந்திக்கும் அறிமுகமற்ற மனிதர்களால் ஏற்படும் ஆபத்துக்கள் அதிகம்.
நம்மை சுற்றி நடப்பவைகளை எல்லாம் அப்படியே நம்பிவிடக்கூடாது. நாம் நம்பும்படியான சம்பவங்கள் நமது வீட்டிற்குள்ளும் நடக்கும். வெளியேயும் நடக்கும். ஆனால் அதன் உண்மை இன்னொருவிதமானதாக இருக்கும். அதுபோல் பிரச்சினைக்குரிய விஷயங்கள் எங்கேயாவது நடந்து, அது நமது கவனத்திற்கு வரும்போது ‘எங்கோ.. யாருக்கோ நடந்திருக்கிறது.. நமக்கென்ன..’ என்று கடந்துபோய் விடக்கூடாது. ஏனென்றால் அதுபோன்ற சம்பவம் நமது வீட்டிலும் நடக்கக்கூடும். அதனால் பாதிக்கப்படுவது நமது மகனோ, மகளாகவோ இருக்கவும்கூடும்.
தினமும் பள்ளிவிட்டு வீடு திரும்பும் மகள் ஒரு நாள் தாமதமாகிவிட்டாலே என்ன வென்று காரணம் கேட்கும் அம்மாக்கள், அவள் இரவில் வெகு நேரம் விழித்திருந்து கம்ப்யூட்டரே கதி என்று கிடக்கும்போது, ‘அவள் பெரிய படிப்பு படிக்கிறாள். அவளுக்கு ஆயிரம் வேலை இருக்கிறது. இரவெல்லாம் தூங்காமல் வேலை பார்க்கிறாள்’ என்று உண்மை தெரியாமல், தங்களை தாங்களே சமாதானம் செய்து கொள்கிறார்கள். கால நேரம் என்பது எல்லாவற்றுக்குமே உண்டு. சாப்பிடும் நேரத்தில் சாப்பிட வேண்டும். தூங்கும் நேரத்தில் தூங்கிவிட வேண்டும். பிள்ளைகள் நேரங் கடந்து எதை செய்தாலும் அதற்குள் தாமதம் மட்டுமல்ல, தவறுகளும் இருக்கக் கூடும் என்பதை பெற்றோர் உணர்ந்து விழிப்படைய வேண்டும்.
பெரும்பாலான பெற்றோர்கள், வீட்டுக்கு வெளியேதான் தங்கள் பிள்ளைகளுக்கு பிரச்சினைகளும், ஆபத்துக்களும் இருப்பதாக கருதுகிறார்கள். அதனால் பிள்ளைகள் வெளியே இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவர்களை பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த பிள்ளைகள் வீடு திரும்பியதும், அவர்களை கவனத்தில் கொள்வதில்லை. ஆனால் பிள்ளைகள் வீட்டிற்குள் பாதுகாப்பான அறைக்குள் இருந்துகொண்டுதான் பிரச்சினைக்குரிய செயல்களை தொடங்குகிறார்கள்.. தொடருகிறார்கள்..! உங்கள் வீட்டில் உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் இடையே ஒரு சுவர் அளவுதான் இடைவெளி இருக்கிறது. அந்த சிறிய இடைவெளிக்குள் உங்களுக்கு தெரியாமலே உங்கள் பிள்ளைகள் கம்ப்யூட்டர் மூலமாகவும், செல்போன் மூலமாகவும் விபரீதங்களில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
திருடர்களுக்கும், வழிப்பறி செய்பவர்களுக்கும் பயந்து, குழந்தைகளிடம், ‘அறிமுகமற்ற யாரிடமும் பேசாதே’ என்று சொல்லிக் கொடுக்கிறோம். அதை பின்பற்றும் அவர்கள் இன்னொருபுறம், சமூக வலைத்தளங்களில் அடையாளம் தெரியாத ஏராளமான நபர்களோடு பழகிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களோடு சாட்டிங், போஸ்டிங் என்று கண்டதையும் பகிர்ந்துகொண்டே இருக்கிறார்கள். குழந்தைகளுக்கு சாலையில் சந்திக்கும் அறிமுகமற்ற மனிதரால் ஏற்படும் ஆபத்தைவிட வலைத்தளத்தில் சந்திக்கும் அறிமுகமற்ற மனிதர்களால் ஏற்படும் ஆபத்துக்கள் அதிகம்.
உங்கள் குழந்தைகளும் உலகத்தையே கைக்குள் வைத்துக்கொள்ளட்டும் என்று கருதி நீங்கள் ஸ்மார்ட் போன் வாங்கிக்கொடுத்திருந்தால் அவர்களது செயல்பாடுகளை கவனியுங்கள். போனில் அழைப்புகளோ, தகவல்களோ வரும் போது பயம் கொள்ளுதல், பெரும்பாலான நேரத்தை தனிமையில் கழித்தல், காரணமில்லாமல் திடீர் கோபம் கொள்ளுதல், வன்முறையை கையாளுதல், படிப்பில் பின்தங்குதல், ஒன்றுக்கு மேற்பட்ட பேஸ்புக்- வாட்ஸ் ஆப்- ஈமெயில் அக்கவுண்டுகள் வைத்திருத்தல், பயன்படுத்திக்கொண்டிருக்கும் கம்ப்யூட்டர் அல்லது மொபைல் ஸ்கிரீனை மற்றவர்கள் பார்க்கும்போது ஆப் செய்தல், எப்போதும் பதற்றமாக காணப்படுதல், மன அழுத்தத்திற்கு உள்ளாகுதல், சுத்தத்தை பேணாதிருத்தல் போன்ற அறிகுறிகள் உங்கள் குழந்தைகளிடம் தென்பட்டால் கவனியுங்கள். ஒருவேளை அவர்கள் வலைத்தள சிக்கல்களால் ஏதாவது சிரமத்தை அனுபவித்துக்கொண்டிருக்கலாம்.
குழந்தைகளின் கைகளில் இருக்கும் செல்போன் தொழில்நுட்பம் அவர்களை அறிவு உலகத்தின் உச்சத்துக்கு கொண்டு செல்வதாக நாம் நம்பி ஏமாந்து போய்விடக்கூடாது. ஏன்என்றால், அதன் அதிக பயன்பாடு ஒட்டுமொத்தமாக அவர்களது உடல் நலனையும், மனநலனையும் பாதிக்கிறது. புதுப்புது தொழில் நுட்பங்கள் குழந்தைகளிடம் புதுவிதமான பிரச்சினைகளை உருவாக்குகின்றன. அவைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க பெற்றோர் முன்பைவிட கூடுதல் விழிப்புடன் செயல்பட வேண்டி யதிருக்கிறது.
வீட்டிற்குள் இருந்து விரல்களை பிடித்து வெளியே அழைத்துச் சென்று இந்த உலகத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்திய நீங்கள்தான், தொடுதிரைகளில் அவர்கள் தேவையில்லாமல் விரல்களை பயன்படுத்தி புதிய சிக்கல்களில் சிக்குவதை தவிர்க்கவும் வழிகாண வேண்டும். பெற்றோர்களே விழிப்புடன் இருங்கள். விபரீதங்களை தவிர்த்திடுங்கள்.
தினமும் பள்ளிவிட்டு வீடு திரும்பும் மகள் ஒரு நாள் தாமதமாகிவிட்டாலே என்ன வென்று காரணம் கேட்கும் அம்மாக்கள், அவள் இரவில் வெகு நேரம் விழித்திருந்து கம்ப்யூட்டரே கதி என்று கிடக்கும்போது, ‘அவள் பெரிய படிப்பு படிக்கிறாள். அவளுக்கு ஆயிரம் வேலை இருக்கிறது. இரவெல்லாம் தூங்காமல் வேலை பார்க்கிறாள்’ என்று உண்மை தெரியாமல், தங்களை தாங்களே சமாதானம் செய்து கொள்கிறார்கள். கால நேரம் என்பது எல்லாவற்றுக்குமே உண்டு. சாப்பிடும் நேரத்தில் சாப்பிட வேண்டும். தூங்கும் நேரத்தில் தூங்கிவிட வேண்டும். பிள்ளைகள் நேரங் கடந்து எதை செய்தாலும் அதற்குள் தாமதம் மட்டுமல்ல, தவறுகளும் இருக்கக் கூடும் என்பதை பெற்றோர் உணர்ந்து விழிப்படைய வேண்டும்.
பெரும்பாலான பெற்றோர்கள், வீட்டுக்கு வெளியேதான் தங்கள் பிள்ளைகளுக்கு பிரச்சினைகளும், ஆபத்துக்களும் இருப்பதாக கருதுகிறார்கள். அதனால் பிள்ளைகள் வெளியே இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவர்களை பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த பிள்ளைகள் வீடு திரும்பியதும், அவர்களை கவனத்தில் கொள்வதில்லை. ஆனால் பிள்ளைகள் வீட்டிற்குள் பாதுகாப்பான அறைக்குள் இருந்துகொண்டுதான் பிரச்சினைக்குரிய செயல்களை தொடங்குகிறார்கள்.. தொடருகிறார்கள்..! உங்கள் வீட்டில் உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் இடையே ஒரு சுவர் அளவுதான் இடைவெளி இருக்கிறது. அந்த சிறிய இடைவெளிக்குள் உங்களுக்கு தெரியாமலே உங்கள் பிள்ளைகள் கம்ப்யூட்டர் மூலமாகவும், செல்போன் மூலமாகவும் விபரீதங்களில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
திருடர்களுக்கும், வழிப்பறி செய்பவர்களுக்கும் பயந்து, குழந்தைகளிடம், ‘அறிமுகமற்ற யாரிடமும் பேசாதே’ என்று சொல்லிக் கொடுக்கிறோம். அதை பின்பற்றும் அவர்கள் இன்னொருபுறம், சமூக வலைத்தளங்களில் அடையாளம் தெரியாத ஏராளமான நபர்களோடு பழகிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களோடு சாட்டிங், போஸ்டிங் என்று கண்டதையும் பகிர்ந்துகொண்டே இருக்கிறார்கள். குழந்தைகளுக்கு சாலையில் சந்திக்கும் அறிமுகமற்ற மனிதரால் ஏற்படும் ஆபத்தைவிட வலைத்தளத்தில் சந்திக்கும் அறிமுகமற்ற மனிதர்களால் ஏற்படும் ஆபத்துக்கள் அதிகம்.
உங்கள் குழந்தைகளும் உலகத்தையே கைக்குள் வைத்துக்கொள்ளட்டும் என்று கருதி நீங்கள் ஸ்மார்ட் போன் வாங்கிக்கொடுத்திருந்தால் அவர்களது செயல்பாடுகளை கவனியுங்கள். போனில் அழைப்புகளோ, தகவல்களோ வரும் போது பயம் கொள்ளுதல், பெரும்பாலான நேரத்தை தனிமையில் கழித்தல், காரணமில்லாமல் திடீர் கோபம் கொள்ளுதல், வன்முறையை கையாளுதல், படிப்பில் பின்தங்குதல், ஒன்றுக்கு மேற்பட்ட பேஸ்புக்- வாட்ஸ் ஆப்- ஈமெயில் அக்கவுண்டுகள் வைத்திருத்தல், பயன்படுத்திக்கொண்டிருக்கும் கம்ப்யூட்டர் அல்லது மொபைல் ஸ்கிரீனை மற்றவர்கள் பார்க்கும்போது ஆப் செய்தல், எப்போதும் பதற்றமாக காணப்படுதல், மன அழுத்தத்திற்கு உள்ளாகுதல், சுத்தத்தை பேணாதிருத்தல் போன்ற அறிகுறிகள் உங்கள் குழந்தைகளிடம் தென்பட்டால் கவனியுங்கள். ஒருவேளை அவர்கள் வலைத்தள சிக்கல்களால் ஏதாவது சிரமத்தை அனுபவித்துக்கொண்டிருக்கலாம்.
குழந்தைகளின் கைகளில் இருக்கும் செல்போன் தொழில்நுட்பம் அவர்களை அறிவு உலகத்தின் உச்சத்துக்கு கொண்டு செல்வதாக நாம் நம்பி ஏமாந்து போய்விடக்கூடாது. ஏன்என்றால், அதன் அதிக பயன்பாடு ஒட்டுமொத்தமாக அவர்களது உடல் நலனையும், மனநலனையும் பாதிக்கிறது. புதுப்புது தொழில் நுட்பங்கள் குழந்தைகளிடம் புதுவிதமான பிரச்சினைகளை உருவாக்குகின்றன. அவைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க பெற்றோர் முன்பைவிட கூடுதல் விழிப்புடன் செயல்பட வேண்டி யதிருக்கிறது.
வீட்டிற்குள் இருந்து விரல்களை பிடித்து வெளியே அழைத்துச் சென்று இந்த உலகத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்திய நீங்கள்தான், தொடுதிரைகளில் அவர்கள் தேவையில்லாமல் விரல்களை பயன்படுத்தி புதிய சிக்கல்களில் சிக்குவதை தவிர்க்கவும் வழிகாண வேண்டும். பெற்றோர்களே விழிப்புடன் இருங்கள். விபரீதங்களை தவிர்த்திடுங்கள்.
- விஜயலட்சுமி பந்தையன்.
இதையும் படிங்க.. தொப்பை குறைய வேண்டுமா? அப்போ பிராணாயாமம் செய்யுங்க..
ஆன்லைன் மூலம் வேலை வாய்ப்பு அளிப்பது போல் பலர் ஏமாற்றப்படுவது சத்தமே இல்லாமல் நடந்து வருகிறது. இதில் பெண்கள், இல்லத்தரசிகள் உள்பட வீட்டில் இருந்து வேலை பார்க்க நினைக்கும் பலர் ஏமாற்றப்படுகிறார்கள்.
கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் வேலைவாய்ப்பு மோசடிகளால் பெண்கள் ஏமாற்றப்படுவது அதிகரித்துள்ளது.
‘ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால், முதலில் அவருடைய ஆசையை தூண்ட வேண்டும்’ என்ற வசனம் சதுரங்க வேட்டை திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும். அதன் அடிப்படையிலேயே கதாநாயகன், பலரது ஆசையை தூண்டி மோசடியில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் அந்த திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும். திரைப்படத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் பலரை ஏமாற்ற, அவர்களது ஆசையை தூண்டும் வகையிலான நடவடிக்கைகளிலேயே மோசடி பேர்வழிகள் ஈடுபடுகிறார்கள் என்றால் அது மிகையாகாது.
குறிப்பாக தற்போதைய கால கட்டத்தில் இணைய வழியிலான மோசடிகள் அதிகரித்துள்ளது. சம்பந்தப்பட்ட நபரின் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பி, அவருடைய செல்போன் எண்ணுக்கு குலுக்கல் முறையில் பெரிய தொகை பரிசாக கிடைத்துள்ளதாகவும், அதை பெற வேண்டும் என்றால் குறிப்பிட்ட தொகையை ஒரு வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்து ஏமாற்றுவது, குறைந்த தொகையை குறிப்பிட்ட வங்கி கணக்கில் செலுத்தினால் விலை உயர்ந்த செல்போன் அனுப்பி வைப்பதாக தகவல் அளித்து, வேறு ஏதேனும் பொருளை அனுப்பி ஏமாற்றுவது, வங்கியில் இருந்து அதிகாரி போல் ஒருவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி, அவர்களுடைய ஏ.டி.எம். அட்டை எண், கடவுச்சொல் போன்றவற்றை பெற்று ஏமாற்றுவது என பல்வேறு முறைகளில் பணமோசடிகள் நடைபெற்று வருகின்றன.
இதுஒரு புறம் இருக்க, ஆன்லைன் மூலம் வேலை வாய்ப்பு அளிப்பது போல் பலர் ஏமாற்றப்படுவது சத்தமே இல்லாமல் மற்றொரு புறம் நடந்து வருகிறது. இதில் பல வழிகளில் இளைஞர்கள், இல்லத்தரசிகள் உள்பட வீட்டில் இருந்து வேலை பார்க்க நினைக்கும் பலர் ஏமாற்றப்படுகிறார்கள். தற்போது கொரோனா காலக்கட்டம் என்பதால் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த பலர் பல வழிகளில் முயன்று வருகின்றனர். வெளியே சென்று வேலை செய்ய முடியாத சமயங்களில், வேறு வழியில் வேலை செய்து பணம் ஈட்ட முடியுமா? என்ற தேடலில் அவர்கள் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு நண்பர்கள், உறவினர்கள், செல்போனில் இணையதள பக்கங்களை பார்க்கும்போது அதில் வரும் விளம்பரங்கள் போன்றவற்றின் மூலம் ஆன்லைன் வேலை வாய்ப்புகள் பற்றி தெரியவரும் நிலையில், அவ்வாறு வேலை செய்தால் என்ன? என்ற எண்ணத்தில் ஆன்லைன் வேலை வாய்ப்புகளை தேட தொடங்குகின்றனர்.
அதிலும் வேலை வாய்ப்பு குறித்த தகவல்களை பெற குறிப்பாக ஒரு இணையதள முகவரியில் சம்பந்தப்பட்டவரின் செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்துவிட்டால்போதும், தினமும் பல்வேறு நிறுவனங்கள் பெயரில் வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்கள் வந்து குவியும். அதில் டேட்டா எண்ட்ரி, படிவம் நிரப்புதல், தட்டச்சு செய்தல், ஜெ.பி.இ.ஜி. பக்கத்தை பி.டி.எப். கோப்பாக மாற்றுவது, குறிப்பிட்ட செயலிகளை பதிவிறக்கம் செய்வது, அதனை பயன்படுத்துவது என பல்வேறு வகையிலான வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்கள் உள்ளன. மேலும் ஒரு நாளைக்கு சில மணி நேரம் வேலை செய்தாலே, ஆயிரக்கணக்கில் சம்பளம் கிடைக்கும் என்றும் குறிப்பிடப்படுகிறது.
வலை வீசுகின்றனர்
மேலும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள், முகவர்கள் என்ற பெயரில் செல்போன் மூலமோ, வாட்ஸ்-அப் மூலம் குறுந்தகவல் அனுப்பியோ வேலை தேடுபவர்களை தொடர்பு கொள்ளும் நபர்கள், தங்களது வீட்டில் இருந்தே வேலை, சில மணி நேரம் வேலை செய்தாலே பல ஆயிரம் சம்பளம் என்று கூறி வலைவீசுகின்றனர். அதனை நம்பும் பெண்கள் உள்ளிட்டோர் ஆன்லைனில் வேலை செய்ய சம்மதிக்கும் நிலையில், அவர்களுக்கு வேலை கொடுப்பதாக கூறப்படும் நிறுவனத்தின் சார்பில் பேசும் நபர்கள், முதலில் நிறுவனத்திற்கு காப்பு தொகையாக குறிப்பிட்ட தொகையை ஒரு வங்கி கணக்கில் செலுத்துமாறும், அந்த தொகை முதல் மாத சம்பளத்துடன் திருப்பி தரப்படும் என்றும் தெரிவிக்கின்றனர்.
இதன்படி குறைந்தபட்சம் ரூ.350 முதல் ஆயிரக்கணக்கில் பணம் கேட்கப்படுகிறது. மேலும் அந்த நிறுவனங்களில் பலர் வேலை செய்வதாகவும், அவர்களுக்கு மாதந்தோறும் பல ஆயிரங்கள் சம்பளம் வழங்கியதற்கான சான்று என்றும், அந்த நிறுவனங்கள் அரசு அங்கீகாரம் பெற்றதற்கான சான்று உள்ளது என்றும் வாட்ஸ்-அப் மற்றும் இணையதள பக்கங்களில் பதிவுகள் வருகின்றன.
இதையெல்லாம் பார்த்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களை நம்பி பணம் செலுத்தும் பலருக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஏனென்றால், வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்ட பின்னர், சம்பந்தப்பட்ட சில நிறுவனங்களிடம் இருந்து வேறு எந்த பதிலும் வருவதில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். மேலும் அந்த நிறுவனத்தினரை தொடர்பு கொள்ள முயன்றாலும் செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது என்றும் கூறுகின்றனர். இன்னும் சில நிறுவனங்கள் சார்பில் சொன்னபடி பணம் செலுத்தியவர்களுக்கு வேலை கொடுக்கப்பட்டாலும், அந்த வேலை முடிந்த பின்னர் முறையாக சம்பளம் வழங்கப்படுவதில்லை என்றும், அதற்கான காரணத்தை கேட்டால் உரிய முறையில் வேலையை செய்து முடிக்கவில்லை அல்லது ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி வேலை செய்யவில்லை என்று பதில் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.
இது ஒருவகை என்றால் சில நிறுவனங்களில் வேலையில் சேர எந்த தொகையும் செலுத்த வேண்டியதில்லை என்ற அறிவிப்புடன் வேலை வழங்கப்படுகிறது. மேலும் அவர்கள் விதித்த நிபந்தனையின்படி சரியாக வேலை செய்பவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்து அவர்கள் கொடுக்கும் வேலையை செய்து முடித்தவர்களுக்கு, சம்பளம் அனுப்ப வங்கி கணக்கு விவரம், ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற விவரங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மூலம் பெறப்படுகிறது. பின்னர் அவர்களது வேலை குறித்த மதிப்பீடும், அதற்கான சம்பளமாக ரூ.20 ஆயிரத்திற்கு மேல் வழங்கப்படும் என்றும் தகவல் அளிக்கப்படுகிறது. இதனால் தங்களுக்கு சம்பளம் கிடைத்துவிடும் என்று சம்பந்தப்பட்டவர்கள் மகிழ்ச்சியில் திளைக்கும் வேளையில், இணையவழியில் பணப்பரிமாற்றம் செய்வதற்காக குறிப்பிட்ட வங்கி கணக்கில் குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என்றும், அந்த தொகை மறுநாளே அவர்களது சம்பளத்துடன் வழங்கப்படும் என்றும் அந்த நிறுவனத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்படும். அதை நம்பி பணம் செலுத்தினால், உள்ளதும் போன கதையாகிவிடுகிறது என்று பாதிக்கப்பட்டவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
மேலும் பல்வேறு வழிகளில் இணையவழி வேலை வாய்ப்புகள் வழங்குவதாக பண மோசடி நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. சில நிறுவனங்களில் நேரில் சென்று பணம் செலுத்தி வேலை செய்தாலும், சம்பளம் பெற முடியவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இருப்பினும் சில நிறுவனங்கள் ஆன்லைனில் முறையாக தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு வேலை வழங்கி, சரியான முறையில் சம்பளம் வழங்குவதாக விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் புற்றீசல்போல் பெருகிவிட்ட போலி நிறுவனங்களால் ஆன்லைன் வேலை வாய்ப்புகளை நம்பி பலர் ஏமாற்றுவதே உண்மை என்பதும் அவர்களின் கருத்தாக உள்ளது. வேலை செய்பவர்களுக்கு, வேலை வழங்குபவர்கள்தானே சம்பளம் தர வேண்டும், அதை தவிர்த்து வேலை செய்ய ஏன் பணம் கட்ட வேண்டும் என்ற எண்ணம் நமக்கு தோன்றினாலும், அதையும் மீறி அதிக சம்பளம் போன்ற மாய தோற்றத்தால் ஏமாற்றுபவர்களின் வலையில் ஏமாறுபவர்கள் சிக்கத்தான் செய்கிறார்கள். அதற்கு பலே பேர்வழிகள் பயன்படுத்தும் கருவி, வேறு என்ன?, கட்டுரையின் முதலில் குறிப்பிடப்பட்ட வசனத்தை நடைமுறையாக்குவதுதான்.
பணம் செலுத்தவில்லை என்றால் நோட்டீஸ்
ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தே வேலை செய்ய விரும்புபவர்களை செல்போனிலோ அல்லது வாட்ஸ்-அப் மூலமோ தொடர்பு கொள்ளும் சிலர், தங்களை ஆன்லைன் வேலை வழங்கும் நிறுவனங்களின் ஊழியர்கள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பேசத்தொடங்குகின்றனர். அவ்வாறு பேசும்போது, தங்கள் நிறுவனத்தில் வேலை வழங்குவதற்கான விதிமுறைகள் என்று சிலவற்றை கூறுகின்றனர். பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே பேசும் அவர்கள், தங்கள் நிறுவனம் வடமாநிலத்தில் இருப்பதாகவும், விதிமுறைகளின்படி சரியாக வேலை செய்தால் முழுமையாக சம்பளம் வழங்கப்படும் என்றும், வேலையை குறித்த காலத்தில் முடிக்கவில்லை என்றாலோ, குறிப்பிட்ட அளவிற்கு மேல் தவறுகள் இருந்தாலோ தங்கள் நிறுவனத்திற்கு ரூ.5 ஆயிரம் வரை பணம் செலுத்த வேண்டும் என்றும், அது ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, என்றும் கூறுகின்றனர்.
‘ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால், முதலில் அவருடைய ஆசையை தூண்ட வேண்டும்’ என்ற வசனம் சதுரங்க வேட்டை திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும். அதன் அடிப்படையிலேயே கதாநாயகன், பலரது ஆசையை தூண்டி மோசடியில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் அந்த திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும். திரைப்படத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் பலரை ஏமாற்ற, அவர்களது ஆசையை தூண்டும் வகையிலான நடவடிக்கைகளிலேயே மோசடி பேர்வழிகள் ஈடுபடுகிறார்கள் என்றால் அது மிகையாகாது.
குறிப்பாக தற்போதைய கால கட்டத்தில் இணைய வழியிலான மோசடிகள் அதிகரித்துள்ளது. சம்பந்தப்பட்ட நபரின் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பி, அவருடைய செல்போன் எண்ணுக்கு குலுக்கல் முறையில் பெரிய தொகை பரிசாக கிடைத்துள்ளதாகவும், அதை பெற வேண்டும் என்றால் குறிப்பிட்ட தொகையை ஒரு வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்து ஏமாற்றுவது, குறைந்த தொகையை குறிப்பிட்ட வங்கி கணக்கில் செலுத்தினால் விலை உயர்ந்த செல்போன் அனுப்பி வைப்பதாக தகவல் அளித்து, வேறு ஏதேனும் பொருளை அனுப்பி ஏமாற்றுவது, வங்கியில் இருந்து அதிகாரி போல் ஒருவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி, அவர்களுடைய ஏ.டி.எம். அட்டை எண், கடவுச்சொல் போன்றவற்றை பெற்று ஏமாற்றுவது என பல்வேறு முறைகளில் பணமோசடிகள் நடைபெற்று வருகின்றன.
இதுஒரு புறம் இருக்க, ஆன்லைன் மூலம் வேலை வாய்ப்பு அளிப்பது போல் பலர் ஏமாற்றப்படுவது சத்தமே இல்லாமல் மற்றொரு புறம் நடந்து வருகிறது. இதில் பல வழிகளில் இளைஞர்கள், இல்லத்தரசிகள் உள்பட வீட்டில் இருந்து வேலை பார்க்க நினைக்கும் பலர் ஏமாற்றப்படுகிறார்கள். தற்போது கொரோனா காலக்கட்டம் என்பதால் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த பலர் பல வழிகளில் முயன்று வருகின்றனர். வெளியே சென்று வேலை செய்ய முடியாத சமயங்களில், வேறு வழியில் வேலை செய்து பணம் ஈட்ட முடியுமா? என்ற தேடலில் அவர்கள் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு நண்பர்கள், உறவினர்கள், செல்போனில் இணையதள பக்கங்களை பார்க்கும்போது அதில் வரும் விளம்பரங்கள் போன்றவற்றின் மூலம் ஆன்லைன் வேலை வாய்ப்புகள் பற்றி தெரியவரும் நிலையில், அவ்வாறு வேலை செய்தால் என்ன? என்ற எண்ணத்தில் ஆன்லைன் வேலை வாய்ப்புகளை தேட தொடங்குகின்றனர்.
அதிலும் வேலை வாய்ப்பு குறித்த தகவல்களை பெற குறிப்பாக ஒரு இணையதள முகவரியில் சம்பந்தப்பட்டவரின் செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்துவிட்டால்போதும், தினமும் பல்வேறு நிறுவனங்கள் பெயரில் வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்கள் வந்து குவியும். அதில் டேட்டா எண்ட்ரி, படிவம் நிரப்புதல், தட்டச்சு செய்தல், ஜெ.பி.இ.ஜி. பக்கத்தை பி.டி.எப். கோப்பாக மாற்றுவது, குறிப்பிட்ட செயலிகளை பதிவிறக்கம் செய்வது, அதனை பயன்படுத்துவது என பல்வேறு வகையிலான வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்கள் உள்ளன. மேலும் ஒரு நாளைக்கு சில மணி நேரம் வேலை செய்தாலே, ஆயிரக்கணக்கில் சம்பளம் கிடைக்கும் என்றும் குறிப்பிடப்படுகிறது.
வலை வீசுகின்றனர்
மேலும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள், முகவர்கள் என்ற பெயரில் செல்போன் மூலமோ, வாட்ஸ்-அப் மூலம் குறுந்தகவல் அனுப்பியோ வேலை தேடுபவர்களை தொடர்பு கொள்ளும் நபர்கள், தங்களது வீட்டில் இருந்தே வேலை, சில மணி நேரம் வேலை செய்தாலே பல ஆயிரம் சம்பளம் என்று கூறி வலைவீசுகின்றனர். அதனை நம்பும் பெண்கள் உள்ளிட்டோர் ஆன்லைனில் வேலை செய்ய சம்மதிக்கும் நிலையில், அவர்களுக்கு வேலை கொடுப்பதாக கூறப்படும் நிறுவனத்தின் சார்பில் பேசும் நபர்கள், முதலில் நிறுவனத்திற்கு காப்பு தொகையாக குறிப்பிட்ட தொகையை ஒரு வங்கி கணக்கில் செலுத்துமாறும், அந்த தொகை முதல் மாத சம்பளத்துடன் திருப்பி தரப்படும் என்றும் தெரிவிக்கின்றனர்.
இதன்படி குறைந்தபட்சம் ரூ.350 முதல் ஆயிரக்கணக்கில் பணம் கேட்கப்படுகிறது. மேலும் அந்த நிறுவனங்களில் பலர் வேலை செய்வதாகவும், அவர்களுக்கு மாதந்தோறும் பல ஆயிரங்கள் சம்பளம் வழங்கியதற்கான சான்று என்றும், அந்த நிறுவனங்கள் அரசு அங்கீகாரம் பெற்றதற்கான சான்று உள்ளது என்றும் வாட்ஸ்-அப் மற்றும் இணையதள பக்கங்களில் பதிவுகள் வருகின்றன.
இதையெல்லாம் பார்த்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களை நம்பி பணம் செலுத்தும் பலருக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஏனென்றால், வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்ட பின்னர், சம்பந்தப்பட்ட சில நிறுவனங்களிடம் இருந்து வேறு எந்த பதிலும் வருவதில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். மேலும் அந்த நிறுவனத்தினரை தொடர்பு கொள்ள முயன்றாலும் செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது என்றும் கூறுகின்றனர். இன்னும் சில நிறுவனங்கள் சார்பில் சொன்னபடி பணம் செலுத்தியவர்களுக்கு வேலை கொடுக்கப்பட்டாலும், அந்த வேலை முடிந்த பின்னர் முறையாக சம்பளம் வழங்கப்படுவதில்லை என்றும், அதற்கான காரணத்தை கேட்டால் உரிய முறையில் வேலையை செய்து முடிக்கவில்லை அல்லது ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி வேலை செய்யவில்லை என்று பதில் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.
இது ஒருவகை என்றால் சில நிறுவனங்களில் வேலையில் சேர எந்த தொகையும் செலுத்த வேண்டியதில்லை என்ற அறிவிப்புடன் வேலை வழங்கப்படுகிறது. மேலும் அவர்கள் விதித்த நிபந்தனையின்படி சரியாக வேலை செய்பவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்து அவர்கள் கொடுக்கும் வேலையை செய்து முடித்தவர்களுக்கு, சம்பளம் அனுப்ப வங்கி கணக்கு விவரம், ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற விவரங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மூலம் பெறப்படுகிறது. பின்னர் அவர்களது வேலை குறித்த மதிப்பீடும், அதற்கான சம்பளமாக ரூ.20 ஆயிரத்திற்கு மேல் வழங்கப்படும் என்றும் தகவல் அளிக்கப்படுகிறது. இதனால் தங்களுக்கு சம்பளம் கிடைத்துவிடும் என்று சம்பந்தப்பட்டவர்கள் மகிழ்ச்சியில் திளைக்கும் வேளையில், இணையவழியில் பணப்பரிமாற்றம் செய்வதற்காக குறிப்பிட்ட வங்கி கணக்கில் குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என்றும், அந்த தொகை மறுநாளே அவர்களது சம்பளத்துடன் வழங்கப்படும் என்றும் அந்த நிறுவனத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்படும். அதை நம்பி பணம் செலுத்தினால், உள்ளதும் போன கதையாகிவிடுகிறது என்று பாதிக்கப்பட்டவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
மேலும் பல்வேறு வழிகளில் இணையவழி வேலை வாய்ப்புகள் வழங்குவதாக பண மோசடி நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. சில நிறுவனங்களில் நேரில் சென்று பணம் செலுத்தி வேலை செய்தாலும், சம்பளம் பெற முடியவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இருப்பினும் சில நிறுவனங்கள் ஆன்லைனில் முறையாக தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு வேலை வழங்கி, சரியான முறையில் சம்பளம் வழங்குவதாக விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் புற்றீசல்போல் பெருகிவிட்ட போலி நிறுவனங்களால் ஆன்லைன் வேலை வாய்ப்புகளை நம்பி பலர் ஏமாற்றுவதே உண்மை என்பதும் அவர்களின் கருத்தாக உள்ளது. வேலை செய்பவர்களுக்கு, வேலை வழங்குபவர்கள்தானே சம்பளம் தர வேண்டும், அதை தவிர்த்து வேலை செய்ய ஏன் பணம் கட்ட வேண்டும் என்ற எண்ணம் நமக்கு தோன்றினாலும், அதையும் மீறி அதிக சம்பளம் போன்ற மாய தோற்றத்தால் ஏமாற்றுபவர்களின் வலையில் ஏமாறுபவர்கள் சிக்கத்தான் செய்கிறார்கள். அதற்கு பலே பேர்வழிகள் பயன்படுத்தும் கருவி, வேறு என்ன?, கட்டுரையின் முதலில் குறிப்பிடப்பட்ட வசனத்தை நடைமுறையாக்குவதுதான்.
பணம் செலுத்தவில்லை என்றால் நோட்டீஸ்
ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தே வேலை செய்ய விரும்புபவர்களை செல்போனிலோ அல்லது வாட்ஸ்-அப் மூலமோ தொடர்பு கொள்ளும் சிலர், தங்களை ஆன்லைன் வேலை வழங்கும் நிறுவனங்களின் ஊழியர்கள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பேசத்தொடங்குகின்றனர். அவ்வாறு பேசும்போது, தங்கள் நிறுவனத்தில் வேலை வழங்குவதற்கான விதிமுறைகள் என்று சிலவற்றை கூறுகின்றனர். பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே பேசும் அவர்கள், தங்கள் நிறுவனம் வடமாநிலத்தில் இருப்பதாகவும், விதிமுறைகளின்படி சரியாக வேலை செய்தால் முழுமையாக சம்பளம் வழங்கப்படும் என்றும், வேலையை குறித்த காலத்தில் முடிக்கவில்லை என்றாலோ, குறிப்பிட்ட அளவிற்கு மேல் தவறுகள் இருந்தாலோ தங்கள் நிறுவனத்திற்கு ரூ.5 ஆயிரம் வரை பணம் செலுத்த வேண்டும் என்றும், அது ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, என்றும் கூறுகின்றனர்.
அதை ஏற்று பணி செய்பவர்களுக்கு, சரியான முறையில் வேலை செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்றும், இதனால் அவர்களால் வேலையை முடிக்க முடியாதபட்சத்தில், அதற்கான விளக்கம் கேட்கப்படுவதாகவும், உரிய விளக்கம் அளித்தாலும் ஏற்காமல், ஒப்பந்தப்படி பணம் செலுத்துமாறு சம்பந்தப்பட்ட நிறுவனத்தால் நோட்டீஸ் அனுப்பப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் பணம் செலுத்த தவறினால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் இருந்து மிரட்டும் வகையில் தகவல் வருவதாகவும், சில நேரங்களில் வெளிமாநில போலீஸ் நிலையத்தில் இருந்து அதிகாரி பேசுவதாக சிலர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி மிரட்டுவதாகவும், இதனால் பயந்து பலர் பணத்தை செலுத்துவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் அவர்களின் மிரட்டலுக்கு அஞ்சாமல் பேசுபவர்களை, பின்னர் அந்த நிறுவனத்தினர் தொடர்பு கொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க... கல்லீரலை பாதிக்கும் மஞ்சள் காமாலை... தவிர்க்க வேண்டிய உணவுகள்...






