என் மலர்
ஆரோக்கியம்
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, நாம் இரண்டு விஷயங்களில் அதிக கவனம் செலுத்தவேண்டும். ஒன்று.. உடலை சுகாதாரமாக வைத்துக்கொள்ளவேண்டும். இன்னொன்று.. சத்து நிறைந்த உணவுகளை உண்ணவேண்டும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, நாம் இரண்டு விஷயங்களில் அதிக கவனம் செலுத்தவேண்டும். ஒன்று.. உடலை சுகாதாரமாக வைத்துக்கொள்ளவேண்டும். இன்னொன்று.. சத்து நிறைந்த உணவுகளை உண்ணவேண்டும். பீட்சா, பர்கர், சான்ட்விச், சுகாதாரமற்ற எண்ணெய்யில் தயாரிக்கப்படும் தள்ளுவண்டி பலகாரங்கள், குளிர்பானங்கள் போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கு எதிரானவை. இதுபோன்ற உணவுகளால் நமது உடலில் கழிவுகள் தேங்கிவிடுகின்றன. அந்த தேக்கத்தால், உடல் இயக்கம் பாதிக்கப்பட்டு நோய் எதிர்ப்புசக்தி குறையும் நிலை ஏற்பட்டு விடுகிறது. அதுதான் கொரோனா போன்ற தொற்று வியாதிகள் நமது உடலை தாக்குவதற்கு காரணமாக அமைகின்றன.
“நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க, சூப் வகைகள், சிறுதானிய உணவுகள், முட்டை, காய்கறிகள், பழவகைகள், உலர் பழவகைகள், பால் போன்ற உணவுகளை சாப்பிடவேண்டும். தினமும் காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளையும் முறைப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்” என்கிறார், ஊட்டச்சத்து துறை நிபுணர் பிரியா பாஸ்கர்.
ஈரோட்டைச் சேர்ந்த இவர் தரும் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் உணவுப்பட்டியல் இது..
காலை 7 மணி - மிளகு கஷாயம்.
8.30 மணி- கோதுமை தோசை, தக்காளி சட்னி, பாதாம் போன்ற பருப்பு வகைகள் மற்றும் பூண்டு பால்.
11 மணி - மாதுளை, எலுமிச்சை ஜூஸ்.
மதியம் 1 மணி - சிவப்பு அரிசி சாதம், நாட்டு காய்கறி கூட்டு, பசலைக்கீரை வெஜ் மிக்ஸ், வெண்டைக்காய் பிரட்டல், தக்காளி இஞ்சி ரசம், பழம் கலந்த தயிர் சாதம்.
மாலை 5 மணி - சோயா பீன்ஸ் சூப், கிரீன் சாலட்.
இரவு 7.30 மணி - ராகி வெங்காய கல்தோசை, அவகேடா தக்காளி தொக்கு.
9.30 மணி - பனங்கற்கண்டு பால்.
பிரியா பாஸ்கர்
“நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க, சூப் வகைகள், சிறுதானிய உணவுகள், முட்டை, காய்கறிகள், பழவகைகள், உலர் பழவகைகள், பால் போன்ற உணவுகளை சாப்பிடவேண்டும். தினமும் காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளையும் முறைப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்” என்கிறார், ஊட்டச்சத்து துறை நிபுணர் பிரியா பாஸ்கர்.
ஈரோட்டைச் சேர்ந்த இவர் தரும் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் உணவுப்பட்டியல் இது..
காலை 7 மணி - மிளகு கஷாயம்.
8.30 மணி- கோதுமை தோசை, தக்காளி சட்னி, பாதாம் போன்ற பருப்பு வகைகள் மற்றும் பூண்டு பால்.
11 மணி - மாதுளை, எலுமிச்சை ஜூஸ்.
மதியம் 1 மணி - சிவப்பு அரிசி சாதம், நாட்டு காய்கறி கூட்டு, பசலைக்கீரை வெஜ் மிக்ஸ், வெண்டைக்காய் பிரட்டல், தக்காளி இஞ்சி ரசம், பழம் கலந்த தயிர் சாதம்.
மாலை 5 மணி - சோயா பீன்ஸ் சூப், கிரீன் சாலட்.
இரவு 7.30 மணி - ராகி வெங்காய கல்தோசை, அவகேடா தக்காளி தொக்கு.
9.30 மணி - பனங்கற்கண்டு பால்.
பிரியா பாஸ்கர்
மன மகிழ்வின் ரகசியம் என்ன விரும்புகிறோமோ அதை செய்வதில் இல்லை. எதைச் செய்ய நேரிடுகிறதோ அதை விரும்புவதில் உள்ளது.
எந்தவொரு காரியத்திற்கும் ஏதோ ஒருவகையிலான முயற்சி முக்கியம். அந்த முயற்சி சிறக்க நமது மனோபாவம் முக்கியம். ஒரு முயற்சி என்று இறங்கும்போது காரியம் நடைபெறுகிறது என்பது ஒரு விஷயம். முயற்சி நம்மைச் சோதிக்கும்; நம் திறனை நாம் பரீட்சித்து பார்க்க உதவும். நமக்குப் பாடம் கற்பிக்கும். எனவே ஒரு முயற்சியில் இறங்கும்போது அதை அனுபவிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு காரியத்தை செய்து முடிக்க வேண்டும் என்பதற்காக மட்டும் ஒரு முயற்சியில் இறங்கினால் அதில் மகிழ்ச்சி இருக்காது. அம்முயற்சி ஏதேனும் காரணத்தால் கைகூடவில்லையெனில் மனம் சோர்ந்து போய்விடும்.
ஒரு விற்பனையாளன் தனது தொழில் நிமித்தமாய் பலதரப்பட்ட மக்களை சந்திக்க முடிகிறது, பேச முடிகிறது, பழக முடிகிறது. மக்களை சந்தித்து பேசிப் பழகுவதால் ஏற்படும் அனுபவத்தை உணர்ந்து அவன் மகிழ்வுடன் தன் பணியை புரியும்போது அவனது மனம் உற்சாகமடைகிறது. அதனால் ஒரு நாள் குறிப்பிட்ட அளவிலான விற்பனை இல்லாது போனாலும் அவனது மனம் சோர்வடையாது. ஏமாற்றம் அடையாது. மனத்திருப்தியற்று ஒரு வேலையில் ஈடுபட்டால் அதில் லட்ச லட்சமாய் சம்பாதித்தாலும் மகிழ்வு தொலைந்து காணாமல் போய்விடும்.
ஒரு செயலின் முடிவை மட்டுமே எண்ணி அளவுக்கதிகமாக அதில் கவனம் செலுத்தினால் நிகழ்காலத்தை அனுபவிக்க மறந்து விடுவோம். எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை மட்டுமே மனதில் ஓடி ஓடி, செய்து கொண்டிருக்கும் காரியத்தை, அந்த நிமிடத்தை, அந்த நொடியை உணர்ந்து மகிழ மறந்துவிடுவோம். ஏனெனில் மகிழ்வு என்பது ஏதோ ஓர் இடத்தில் ஏதோ ஒரு குறிப்பிட்ட தருணத்தில் என்று நமக்காக காத்திருப்பதில்லை. எனவே முயற்சியின் இறுதியில் ஏற்பட போகும் முடிவை நினைத்து பெரிதும் அலட்டிக்கொள்ளாமல் ஈடுபடும் முயற்சியை உணர்ந்து மகிழக் கற்றுக் கொண்டால் செய்யும் காரியம் தானாகவே வெற்றிகரமாக மாறிவிடும்.
முயற்சி திருவினையாக்கும் என்பது இயற்கையின் விதி. ஆயினும் ஏதேனும் காரணத்தால் முடிவுகள் தாமதமானாலோ அல்லது நீங்கள் நினைத்ததைப்போல் காரியம் அமையவில்லை என்றாலோ, அது உங்கள் மன அமைதியை குலைக்காது. காரியத்தில் உள்ளார்ந்து ஈடுபட்ட திருப்தி மனதில் பரவியிருக்க, முடிவு வரும்போது வரட்டும் என்று அடுத்த முயற்சியில் இறங்கிவிடுவீர்கள்.
எல்லாம் சரி, ஒரு காரியத்தை விரும்பி திருப்திகரமாக புரிவது எப்படி? அதை நீங்கள் மனதில் ஒரு தீர்மானமாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். வேறு வழியில்லை. ஒரு சிந்தனையாளர் கூறினார், மன மகிழ்வின் ரகசியம் என்ன விரும்புகிறோமோ அதை செய்வதில் இல்லை. எதைச் செய்ய நேரிடுகிறதோ அதை விரும்புவதில் உள்ளது.
ஹரிபிரகாஷ், ஆர்.சி. நடுநிலைப்பள்ளி, புலிக்கண்மாய்.
ஒரு விற்பனையாளன் தனது தொழில் நிமித்தமாய் பலதரப்பட்ட மக்களை சந்திக்க முடிகிறது, பேச முடிகிறது, பழக முடிகிறது. மக்களை சந்தித்து பேசிப் பழகுவதால் ஏற்படும் அனுபவத்தை உணர்ந்து அவன் மகிழ்வுடன் தன் பணியை புரியும்போது அவனது மனம் உற்சாகமடைகிறது. அதனால் ஒரு நாள் குறிப்பிட்ட அளவிலான விற்பனை இல்லாது போனாலும் அவனது மனம் சோர்வடையாது. ஏமாற்றம் அடையாது. மனத்திருப்தியற்று ஒரு வேலையில் ஈடுபட்டால் அதில் லட்ச லட்சமாய் சம்பாதித்தாலும் மகிழ்வு தொலைந்து காணாமல் போய்விடும்.
ஒரு செயலின் முடிவை மட்டுமே எண்ணி அளவுக்கதிகமாக அதில் கவனம் செலுத்தினால் நிகழ்காலத்தை அனுபவிக்க மறந்து விடுவோம். எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை மட்டுமே மனதில் ஓடி ஓடி, செய்து கொண்டிருக்கும் காரியத்தை, அந்த நிமிடத்தை, அந்த நொடியை உணர்ந்து மகிழ மறந்துவிடுவோம். ஏனெனில் மகிழ்வு என்பது ஏதோ ஓர் இடத்தில் ஏதோ ஒரு குறிப்பிட்ட தருணத்தில் என்று நமக்காக காத்திருப்பதில்லை. எனவே முயற்சியின் இறுதியில் ஏற்பட போகும் முடிவை நினைத்து பெரிதும் அலட்டிக்கொள்ளாமல் ஈடுபடும் முயற்சியை உணர்ந்து மகிழக் கற்றுக் கொண்டால் செய்யும் காரியம் தானாகவே வெற்றிகரமாக மாறிவிடும்.
முயற்சி திருவினையாக்கும் என்பது இயற்கையின் விதி. ஆயினும் ஏதேனும் காரணத்தால் முடிவுகள் தாமதமானாலோ அல்லது நீங்கள் நினைத்ததைப்போல் காரியம் அமையவில்லை என்றாலோ, அது உங்கள் மன அமைதியை குலைக்காது. காரியத்தில் உள்ளார்ந்து ஈடுபட்ட திருப்தி மனதில் பரவியிருக்க, முடிவு வரும்போது வரட்டும் என்று அடுத்த முயற்சியில் இறங்கிவிடுவீர்கள்.
எல்லாம் சரி, ஒரு காரியத்தை விரும்பி திருப்திகரமாக புரிவது எப்படி? அதை நீங்கள் மனதில் ஒரு தீர்மானமாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். வேறு வழியில்லை. ஒரு சிந்தனையாளர் கூறினார், மன மகிழ்வின் ரகசியம் என்ன விரும்புகிறோமோ அதை செய்வதில் இல்லை. எதைச் செய்ய நேரிடுகிறதோ அதை விரும்புவதில் உள்ளது.
ஹரிபிரகாஷ், ஆர்.சி. நடுநிலைப்பள்ளி, புலிக்கண்மாய்.
சருமத்தில் ஈரப்பதம் குறைவதால் விரிசல் ஏற்பட்டு பாதவெடிப்பு உண்டாகிறது. பாதங்களில் ஈரப்பதத்தை பாதுகாத்து பாதவெடிப்பு ஏற்படாமல் தடுக்கும் சில பொருட்களை தற்போது காணலாம்.
சருமத்தில் ஈரப்பதம் குறைவதால் விரிசல் ஏற்பட்டு பாதவெடிப்பு உண்டாகிறது. பாதங்களில் ஈரப்பதத்தை பாதுகாத்து பாதவெடிப்பு ஏற்படாமல் தடுக்கும் சில பொருட்களை தற்போது காணலாம்.
பாதவெடிப்பு என்பது அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனையாகும். குறிப்பாக, பெண்களுக்கு அதிகமாக பாதவெடிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. பாதவெடிப்பு ஏற்படுவதால் விரும்பிய காலணிகளை அணிய முடியாமல் அவதிப்படும் நிலை உருவாகிறது.
பாதங்களை சரியாக பராமரிக்காததன் காரணமாகவே பாதவெடிப்பு ஏற்படுகிறது. குதிகாலில் ஏற்படுவதால் இதனை குதிகால் வெடிப்பு என்றும் கூறலாம். சருமத்தில் ஈரப்பதம் குறைவதால் விரிசல் ஏற்பட்டு பாதவெடிப்பு உண்டாகிறது. பாதவெடிப்பு தீவிரமடைந்தால் பாக்டீரியா அல்லது ஃபங்கஸ் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
பாதவெடிப்பு அசௌகரியம் தருவதுடன், வலி மற்றும் ரத்தக்கசிவு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. பாதவெடிப்பு ஏற்பட பல காரணங்கள் உண்டு. பாதங்களில் ஈரப்பதத்தை பாதுகாத்து பாதவெடிப்பு ஏற்படாமல் தடுக்கும் சில பொருட்களை தற்போது காணலாம்:
மவுத்வாஷ்: ஆல்கஹால் இருப்பதால் கால்நகங்களை சுத்தப்படுத்த மவுத்வாஷ் உதவும். வறண்ட சருமத்தை மிருதுவாக்கவும் உதவும். நீரில் மவுத்வாஷை கலந்து, அக்கலவையில் 15-20 நிமிடங்கள் பாதங்களை ஊறவைக்கவும். பிறகு pumice stone எனப்படும் நுரைக்கல் கொண்டு இறந்த சரும அணுக்களை அகற்றலாம்.
வாழைப்பழம்: வைட்டமின் ஏ உள்ள வாழைப்பழம் சருமத்தின் நீளும் தன்மையை மற்றும் ஈரப்பதத்தை பாதுகாக்க உதவும். வாழைப்பழத்தை மசித்து பாதங்களில் தடவி 20 நிமிடங்கள் விட்டு கழுவலாம்.
வாஸ்லின், எலுமிச்சை: வறண்ட சருமத்திற்கு ஈரப்பதம் கூட்ட வாஸ்லின் உதவும். புதிய சரும அணுக்கள் உற்பத்தியாக எலுமிச்சை சாறு உதவும். இரவில் வாஸ்லின் மற்றும் எலுமிச்சை சாறை கலந்து பாதங்களில் தடவி, உடற்சூடு வெளியேறாமல் தடுக்க கம்பளியால் ஆன காலுறை அணிந்து தூங்கவும். காலை எழுந்தவுடன் பாதங்களை கழுவி விடவும்.
கற்றாழை: இரவில் கற்றாழையைப் பாதங்களில் தடவி, காலுறை அணிந்து தூங்கவும். காலை எழுந்து பாதங்களை கழுவவும். தொடர்ந்து 4-5 நாட்கள் இப்படி செய்து வர, வறண்ட பாதங்கள் மிருதுவாகும்.
சமையல் சோடா: சருமம் மிருதுவாக சமையல் சோடா உதவும். சமையல் சோடா கலந்த வெந்நீரில் 15 நிமிடங்கள் பாதங்களை ஊறவிடவும். பிறகு, நுரைக்கல் கொண்டு பாதங்களை தேய்த்து சுத்தமான நீரில் கழுவவும்.
பாதவெடிப்பு என்பது அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனையாகும். குறிப்பாக, பெண்களுக்கு அதிகமாக பாதவெடிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. பாதவெடிப்பு ஏற்படுவதால் விரும்பிய காலணிகளை அணிய முடியாமல் அவதிப்படும் நிலை உருவாகிறது.
பாதங்களை சரியாக பராமரிக்காததன் காரணமாகவே பாதவெடிப்பு ஏற்படுகிறது. குதிகாலில் ஏற்படுவதால் இதனை குதிகால் வெடிப்பு என்றும் கூறலாம். சருமத்தில் ஈரப்பதம் குறைவதால் விரிசல் ஏற்பட்டு பாதவெடிப்பு உண்டாகிறது. பாதவெடிப்பு தீவிரமடைந்தால் பாக்டீரியா அல்லது ஃபங்கஸ் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
பாதவெடிப்பு அசௌகரியம் தருவதுடன், வலி மற்றும் ரத்தக்கசிவு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. பாதவெடிப்பு ஏற்பட பல காரணங்கள் உண்டு. பாதங்களில் ஈரப்பதத்தை பாதுகாத்து பாதவெடிப்பு ஏற்படாமல் தடுக்கும் சில பொருட்களை தற்போது காணலாம்:
மவுத்வாஷ்: ஆல்கஹால் இருப்பதால் கால்நகங்களை சுத்தப்படுத்த மவுத்வாஷ் உதவும். வறண்ட சருமத்தை மிருதுவாக்கவும் உதவும். நீரில் மவுத்வாஷை கலந்து, அக்கலவையில் 15-20 நிமிடங்கள் பாதங்களை ஊறவைக்கவும். பிறகு pumice stone எனப்படும் நுரைக்கல் கொண்டு இறந்த சரும அணுக்களை அகற்றலாம்.
வாழைப்பழம்: வைட்டமின் ஏ உள்ள வாழைப்பழம் சருமத்தின் நீளும் தன்மையை மற்றும் ஈரப்பதத்தை பாதுகாக்க உதவும். வாழைப்பழத்தை மசித்து பாதங்களில் தடவி 20 நிமிடங்கள் விட்டு கழுவலாம்.
வாஸ்லின், எலுமிச்சை: வறண்ட சருமத்திற்கு ஈரப்பதம் கூட்ட வாஸ்லின் உதவும். புதிய சரும அணுக்கள் உற்பத்தியாக எலுமிச்சை சாறு உதவும். இரவில் வாஸ்லின் மற்றும் எலுமிச்சை சாறை கலந்து பாதங்களில் தடவி, உடற்சூடு வெளியேறாமல் தடுக்க கம்பளியால் ஆன காலுறை அணிந்து தூங்கவும். காலை எழுந்தவுடன் பாதங்களை கழுவி விடவும்.
கற்றாழை: இரவில் கற்றாழையைப் பாதங்களில் தடவி, காலுறை அணிந்து தூங்கவும். காலை எழுந்து பாதங்களை கழுவவும். தொடர்ந்து 4-5 நாட்கள் இப்படி செய்து வர, வறண்ட பாதங்கள் மிருதுவாகும்.
சமையல் சோடா: சருமம் மிருதுவாக சமையல் சோடா உதவும். சமையல் சோடா கலந்த வெந்நீரில் 15 நிமிடங்கள் பாதங்களை ஊறவிடவும். பிறகு, நுரைக்கல் கொண்டு பாதங்களை தேய்த்து சுத்தமான நீரில் கழுவவும்.
நீண்ட நாள்களாக உள்ள மலச்சிக்கல், ஆஸ்துமா, தூக்கமின்மை, நீரிழிவு, தாய்ப்பால் சுரப்புக் கோளாறு, இரத்த சோகை ஆகிய வியாதிகளைக் குணமாக்குவதில் லெட்டூஸ் கீரை தலைசிறந்து விளங்குகிறது.
லெட்டூஸ் கீரையில் ஈரப்பதம் அதிகம் உள்ளது. இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மக்னீசியம், வைட்டமின் சி தயாமின், ரிபோஃப்ளோவின், நிக்கோடினிக் அமிலம் போன்றவை காணப்படுகிறது. வைட்டமின் ‘இ' 'கே’ போன்றவையும் அடங்கியுள்ளன. இதில் கொழுப்பு, நார்ச்சத்து, மாவுச்சத்து போன்றவையும் அடங்கியுள்ளன. நீண்ட நாள்களாக உள்ள மலச்சிக்கல், ஆஸ்துமா, தூக்கமின்மை, நீரிழிவு, தாய்ப்பால் சுரப்புக் கோளாறு, இரத்த சோகை ஆகிய வியாதிகளைக் குணமாக்குவதில் லெட்டூஸ் கீரை தலைசிறந்து விளங்குகிறது.
தேவையான பொருட்கள் :
லெட்டூஸ் இலை - 10
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று (பொடியாக
வேகவைத்த கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், (குழைய கூடாது)
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
கடுகு - கால் டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
எலுமிச்சைச் சாறு - 3 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - சிறிதளவு,
ஒன்றிரண்டாகப் பொடித்த வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்,

செய்முறை:
லெட்டூஸ் இலையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்த மிளகாய், கடுகு போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்துநன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதனுடன் வேகவைத்த பருப்பு, உப்பு, மஞ்சள்தூள், வேர்க்கடலை சேர்த்துக் கிளறவும்.
பிறகு லெட்டூஸ் இலைகள் சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் தெளித்து வேகவிடவும்.
நன்றாக வெந்து சுருண்டு வரும்போது தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறவும்.
தேவையான பொருட்கள் :
லெட்டூஸ் இலை - 10
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று (பொடியாக
வேகவைத்த கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், (குழைய கூடாது)
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
கடுகு - கால் டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
எலுமிச்சைச் சாறு - 3 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - சிறிதளவு,
ஒன்றிரண்டாகப் பொடித்த வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
லெட்டூஸ் இலையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்த மிளகாய், கடுகு போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்துநன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதனுடன் வேகவைத்த பருப்பு, உப்பு, மஞ்சள்தூள், வேர்க்கடலை சேர்த்துக் கிளறவும்.
பிறகு லெட்டூஸ் இலைகள் சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் தெளித்து வேகவிடவும்.
நன்றாக வெந்து சுருண்டு வரும்போது தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறவும்.
மேலே எலுமிச்சைச் சாறு சேர்த்து இறக்கவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இத்தனை நாட்கள் வீட்டில் அடைபட்டு இருப்பதால் பலருக்கு படிப்பின் மீது கவனம் இருக்காது. எனவே மாணவர்கள் தேர்வு நாட்களில் இருந்து பின்னோக்கி அட்டவணைப்படுத்தி பாடம் வாரியாக திரும்பப் படிக்க வேண்டும்.
ஓட முடியவில்லை என்றால் நடக்க முயற்சி செய், நடக்க முடியவில்லை என்றால் தவழவாவது முயற்சி செய். ஏனென்றால் வாழ்க்கையில் நகர்தல் அவசியம் என்பது பெரியோர்கள் சொல். 55 நாட்களுக்கு பிறகும் கொரோனாவின் தாக்கம் இருப்பதால் உலக சுகாதார அமைப்பு முதல் உள்நாட்டு சுகாதார அமைப்பு வரை கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ள அறிவுறுத்தி கொண்டிருக்கிறது. அதனால் தான் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் விடுபட்ட தேர்வுகளை நடத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நோய்நாடி நோய் முதல் நாடி என்ற வள்ளுவன் வாக்கு போல் இந்த தேர்வு நடத்துவதால் ஏற்படக்கூடிய அடிப்படையான அச்சங்களை போக்கி விட்டால் தேர்வை எதிர் கொள்வது கடினமாக இருக்காது.
இத்தனை நாட்கள் வீட்டில் அடைபட்டு இருப்பதால் பலருக்கு படிப்பின் மீது கவனம் இருக்காது. எனவே மாணவர்கள் தேர்வு நாட்களில் இருந்து பின்னோக்கி அட்டவணைப்படுத்தி பாடம் வாரியாக திரும்பப் படிக்க வேண்டும். ஏற்கனவே தேர்வுக்கு தயாரானதால் இது மாணவர்களுக்கு எளிதாகவே இருக்கும். முதன்முறையாக மாணவர்கள் படித்த பள்ளியிலேயே தேர்வு எழுதப் போகிறார்கள், இதுவே மிகப்பெரிய மனோபலத்தை மாணவர்களுக்கு தரும். இனிவரும் நாட்களில் உடலைச் சீராக வைத்துக் கொள்ள உதவும் உணவுகளை உண்பது, உடலுக்கு ஒவ்வாத உணவுகளைத் தவிர்ப்பது உடல் நலனைப் பேண காய்ச்சல், சளி, இருமல் வராமல் பாதுகாக்கும். இதுவே மாணவர்களின் பலம். தெருவிளக்கில் படித்து மேதையான பலர் உள்ள இந்த நாட்டில் இதையும் கடந்து போக முடியும் என்று மாணவர்களுக்கு மனோதைரியம் தர வேண்டியது நம் கடமை.
பெற்றோர்களைப் பொறுத்தவரை பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு, பள்ளிக்கும் வீட்டிற்கும் உள்ள தொலைவு இதுவே மிகப்பெரிய அச்சம். அவர்களின் அச்சத்தில் நியாயம் உள்ளது. 21-ந் தேதி பள்ளிக்கு ஆசிரியர்கள் வர அறிவுறுத்தப் படுகிறார்கள். அதன் பிறகு பள்ளிகள் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அறைக்கு 10 பேர் என அமரும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் மாணவர்களின் உடல் வெப்ப நிலை அறியப்பட்டு உடல் வெப்ப நிலை அதிகமாக இருந்தால் அதற்கு தகுந்தார்போல் எங்கு அமர்ந்து தேர்வு எழுத வைப்பது என்பதையும் பள்ளிகள் முடிவு செய்யும் என கூறப்பட்டுள்ளது.
ஊருக்குச் சென்ற மாணவர்கள், ஆசிரியர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு இ-பாஸ் வழங்குவது, மாணவர்களை அழைத்து வருவது, மலையகப் பகுதிகள், பேருந்து வசதிகள் இல்லாத கிராமப்பகுதியில் உள்ள மாணவர்களை தேர்வுக்கு மூன்று நாட்களுக்கு முன்னால் அழைத்து வந்து விடுதிகளில் தங்க வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் அங்குள்ள ஆசிரியர்களைக் கொண்டு தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தேர்வு நடத்தும் அதிகாரிகள் என அனைவரும் சோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்பதற்கிணங்க தேர்வுக்கு நான்கு நாட்களுக்கு முன்னர் இவை அனைத்தும் அரசு தரப்பில் செய்யப்பட்டு விட்டதா? என ஆராய்ந்து தெரிந்து கொள்ள அந்தந்த பகுதியில் உள்ள பெற்றோர்களை கொண்ட ஒரு குழுவை அமைத்து அவர்களிடம் கேட்கலாம். அரசியல்வாதிகளும் மற்றவர்கள் பார்க்கும் பார்வைக்கும் தன் பிள்ளைகள் எழுத இருக்கும் பள்ளிகளை பெற்றோர்கள் பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. அவர்கள் மனதில் உள்ள அச்சத்தைப் போக்கினால் அவர்களே பிள்ளைகளை தைரியமாக தேர்வுக்கு தயார் படுத்துவார்கள்.
அரசு இத்தகைய நடவடிக்கை எடுத்தாலும் எதிர்த்து அரசியல் செய்ய ஆயிரம் பேர் இருக்கலாம். ஆனால் தன் பிள்ளைகள் வாழ்வென வரும்பொழுது தன்னலமற்ற அக்கறை மட்டுமே இருக்கும். இதில் ஏதேனும் குறைகள் இருந்தால் கேட்டு உடனடியாக சரி செய்ய அரசு இயந்திரம் தயாராக இருந்தால் பத்தாம் வகுப்பு தேர்வு மாணவர்களை நேர்மறையான எண்ணங் களுடன் எழுத வைக்கலாம்.
மாணவர்களும் நீண்ட நாள் கழித்து பார்க்கும் நண்பர்கள் என உணர்ச்சி வசப்படாமல் சமூக இடைவெளி கடைப் பிடித்தல், முக கவசம் அணிதல், கைகளை சுத்தப்படுத்த கிருமிநாசினி திரவத்தை பயன்படுத்துதல், குடிப்பதற்கு தண்ணீர் எடுத்துச் செல்லுதல், வெளியில் உள்ள உணவுகளை வாங்கி சாப்பிடாமல் இருத்தல் போன்றவற்றை கடுமையாக கடைபிடிக்க வேண்டும். முகக் கவசம், சுத்திகரிப்பு திரவம் மாணவர்களால் வாங்க இயலாத பட்சத்தில் அரசு அதனை மாணவர்களுக்கு தரவேண்டும். பள்ளிக்கு முன்னாலேயே மாணவர்களின் தேர்வு அறை பற்றிய தகவல் பலகையை வைத்து தகவல்களை அளித்தல், உள் நுழையும் போதே உடல் வெப்பம் சரிபார்த்தல், நேரடியாக மாணவர்களை தேர்வு அறைக்கு அனுப்புதல், தேர்வு முடிந்த பின்னர் ஒவ்வொரு அறையாக மாணவர்களை வெளியே அனுப்புதல் போன்ற முறைகளை கடைபிடித்தால் சமூக இடைவெளியுடன் பாதுகாப்பாக தேர்வை நடத்த முடியும்.
காயத்ரி, கல்வியாளர்
இத்தனை நாட்கள் வீட்டில் அடைபட்டு இருப்பதால் பலருக்கு படிப்பின் மீது கவனம் இருக்காது. எனவே மாணவர்கள் தேர்வு நாட்களில் இருந்து பின்னோக்கி அட்டவணைப்படுத்தி பாடம் வாரியாக திரும்பப் படிக்க வேண்டும். ஏற்கனவே தேர்வுக்கு தயாரானதால் இது மாணவர்களுக்கு எளிதாகவே இருக்கும். முதன்முறையாக மாணவர்கள் படித்த பள்ளியிலேயே தேர்வு எழுதப் போகிறார்கள், இதுவே மிகப்பெரிய மனோபலத்தை மாணவர்களுக்கு தரும். இனிவரும் நாட்களில் உடலைச் சீராக வைத்துக் கொள்ள உதவும் உணவுகளை உண்பது, உடலுக்கு ஒவ்வாத உணவுகளைத் தவிர்ப்பது உடல் நலனைப் பேண காய்ச்சல், சளி, இருமல் வராமல் பாதுகாக்கும். இதுவே மாணவர்களின் பலம். தெருவிளக்கில் படித்து மேதையான பலர் உள்ள இந்த நாட்டில் இதையும் கடந்து போக முடியும் என்று மாணவர்களுக்கு மனோதைரியம் தர வேண்டியது நம் கடமை.
பெற்றோர்களைப் பொறுத்தவரை பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு, பள்ளிக்கும் வீட்டிற்கும் உள்ள தொலைவு இதுவே மிகப்பெரிய அச்சம். அவர்களின் அச்சத்தில் நியாயம் உள்ளது. 21-ந் தேதி பள்ளிக்கு ஆசிரியர்கள் வர அறிவுறுத்தப் படுகிறார்கள். அதன் பிறகு பள்ளிகள் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அறைக்கு 10 பேர் என அமரும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் மாணவர்களின் உடல் வெப்ப நிலை அறியப்பட்டு உடல் வெப்ப நிலை அதிகமாக இருந்தால் அதற்கு தகுந்தார்போல் எங்கு அமர்ந்து தேர்வு எழுத வைப்பது என்பதையும் பள்ளிகள் முடிவு செய்யும் என கூறப்பட்டுள்ளது.
ஊருக்குச் சென்ற மாணவர்கள், ஆசிரியர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு இ-பாஸ் வழங்குவது, மாணவர்களை அழைத்து வருவது, மலையகப் பகுதிகள், பேருந்து வசதிகள் இல்லாத கிராமப்பகுதியில் உள்ள மாணவர்களை தேர்வுக்கு மூன்று நாட்களுக்கு முன்னால் அழைத்து வந்து விடுதிகளில் தங்க வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் அங்குள்ள ஆசிரியர்களைக் கொண்டு தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தேர்வு நடத்தும் அதிகாரிகள் என அனைவரும் சோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்பதற்கிணங்க தேர்வுக்கு நான்கு நாட்களுக்கு முன்னர் இவை அனைத்தும் அரசு தரப்பில் செய்யப்பட்டு விட்டதா? என ஆராய்ந்து தெரிந்து கொள்ள அந்தந்த பகுதியில் உள்ள பெற்றோர்களை கொண்ட ஒரு குழுவை அமைத்து அவர்களிடம் கேட்கலாம். அரசியல்வாதிகளும் மற்றவர்கள் பார்க்கும் பார்வைக்கும் தன் பிள்ளைகள் எழுத இருக்கும் பள்ளிகளை பெற்றோர்கள் பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. அவர்கள் மனதில் உள்ள அச்சத்தைப் போக்கினால் அவர்களே பிள்ளைகளை தைரியமாக தேர்வுக்கு தயார் படுத்துவார்கள்.
அரசு இத்தகைய நடவடிக்கை எடுத்தாலும் எதிர்த்து அரசியல் செய்ய ஆயிரம் பேர் இருக்கலாம். ஆனால் தன் பிள்ளைகள் வாழ்வென வரும்பொழுது தன்னலமற்ற அக்கறை மட்டுமே இருக்கும். இதில் ஏதேனும் குறைகள் இருந்தால் கேட்டு உடனடியாக சரி செய்ய அரசு இயந்திரம் தயாராக இருந்தால் பத்தாம் வகுப்பு தேர்வு மாணவர்களை நேர்மறையான எண்ணங் களுடன் எழுத வைக்கலாம்.
மாணவர்களும் நீண்ட நாள் கழித்து பார்க்கும் நண்பர்கள் என உணர்ச்சி வசப்படாமல் சமூக இடைவெளி கடைப் பிடித்தல், முக கவசம் அணிதல், கைகளை சுத்தப்படுத்த கிருமிநாசினி திரவத்தை பயன்படுத்துதல், குடிப்பதற்கு தண்ணீர் எடுத்துச் செல்லுதல், வெளியில் உள்ள உணவுகளை வாங்கி சாப்பிடாமல் இருத்தல் போன்றவற்றை கடுமையாக கடைபிடிக்க வேண்டும். முகக் கவசம், சுத்திகரிப்பு திரவம் மாணவர்களால் வாங்க இயலாத பட்சத்தில் அரசு அதனை மாணவர்களுக்கு தரவேண்டும். பள்ளிக்கு முன்னாலேயே மாணவர்களின் தேர்வு அறை பற்றிய தகவல் பலகையை வைத்து தகவல்களை அளித்தல், உள் நுழையும் போதே உடல் வெப்பம் சரிபார்த்தல், நேரடியாக மாணவர்களை தேர்வு அறைக்கு அனுப்புதல், தேர்வு முடிந்த பின்னர் ஒவ்வொரு அறையாக மாணவர்களை வெளியே அனுப்புதல் போன்ற முறைகளை கடைபிடித்தால் சமூக இடைவெளியுடன் பாதுகாப்பாக தேர்வை நடத்த முடியும்.
எந்த ஒரு விஷயத்தையும் வேண்டாம் என எதிர்ப்பதை விட ஒத்திப் போடுவதைவிட எப்படி அதனை செய்ய சாத்தியம் என நினைத்தவர்கள்தான் வாழ்வில் சாதித்துள்ளார். பெற்றோர்கள் திருப்தியுடன், ஆசிரியர்களின் நம்பிக்கை யுடன், அரசின் நேர்மறையான வழிகாட்டுதலுடன் பொதுத்தேர்வில் வெற்றி கொள்வோம்.
நடக்கும் 2020-ம் ஆண்டில் உலகமே கொரோனா என்ற எதிரியுடன் போராடிக்கொண்டு இருக்கையில் கர்ப்பிணி மற்றும் பிரசவித்த தாய்மார்கள் சற்று எச்சரிக்கையுடனே நடந்து கொள்ள வேண்டும்.
ஒரு பெண்ணிற்கு கர்ப்பம் மற்றும் மகப்பேறு என்பது அவளுடைய வாழ்நாளில் மிகவும் இனிமையான வசந்த காலமாகும். ஆனால் நடக்கும் 2020-ம் ஆண்டில் உலகமே கொரோனா என்ற எதிரியுடன் போராடிக்கொண்டு இருக்கையில் கர்ப்பிணி மற்றும் பிரசவித்த தாய்மார்கள் சற்று எச்சரிக்கையுடனே நடந்து கொள்ள வேண்டும்.
கொரோனா தொற்று சக மனிதர்களுக்கு வருவது போலவே இவர்களையும் தாக்கலாம். ஆனால் இந்த நோய் இவர்களை அதிகமாக தாக்கும் அல்லது தீவிரமாக தாக்கும் என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லை. எனவே அனைவரையும் போல சமூக விலகல் மற்றும் தனித்து இருப்பதை இவர்கள் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் கர்ப்ப காலத்தில் சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் சுவாச கோளாறுகள் இருந்தால் இரட்டிப்பு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
நீங்கள் கர்ப்ப காலத்தின் எந்த மாதத்தில் இருந்தாலும் வெளியில் செல்வதை தவிர்க்கவும். வேலை பார்ப்பவர் என்றால் வீட்டில் இருந்து வேலை செய்வதை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். உங்களுடைய குடும்பத்தார் அத்தியாவசிய வேலைகளுக்கு மட்டுமே வெளியில் செல்ல வேண்டும். வீட்டினுள்ளும் அனைவரும் சுகாதாரம் பேண வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு போட்டு சுமார் 20 வினாடிகள் கழுவ வேண்டும். நீங்கள் உபயோகிக்கும் பொருட்கள், மேஜையின் மேற்பரப்பு மற்றும் கதவின் கைப்பிடியினை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
இருமல், தும்மல் வந்தால் கைக்குட்டை பயன்படுத்த வேண்டும். அருகில் கைக்குட்டை இல்லையென்றால் முழங்கை கொண்டு முகத்தை மூட வேண்டும்.
மிக அவசியமான பயணம் என்றால் சொந்த வாகனத்தில் செல்ல வேண்டும். பொது வாகனத்தில் செல்லவேண்டி வந்தால் முக கவசம் அணிந்து, சமூக விலகலை பின்பற்றி செல்ல வேண்டும்.
உங்களுடைய கர்ப்ப கால பரிசோதனைகள் மற்றும் ஸ்கேன் செய்து கொள்ள மருத்துவரை 6, 12, 19 வாரங்களில் நேரில் அணுக வேண்டும். இதனை தவிர்த்து மிகவும் அவசியம் மற்றும் அவசரம் என்றால் மட்டுமே மருத்துவமனைக்கு செல்லவும். உங்களுடைய சந்தேகங்களை உங்கள் மகப்பேறு மருத்துவர் அல்லது கிராம சுகாதார செவிலியரிடம் அலைபேசியில் பேசி ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுங்கள். மேலும் அவசியமாக நேரில் பரிசோதனைக்கு வர வேண்டிய தேதிகளை கேட்டு அறிந்து கொள்ளுங்கள். சீமந்தம்(வளைகாப்பு), வீட்டிலேயே நெருங்கிய சில உறவினர்கள் முன்னிலையில் சுகாதாரமாக நடைபெறுவதே தாய்க்கும், சிசுவிற்கும் நல்லது.
பிரசவ தேதி நெருங்கும் 1 வாரம் முன்னர் கொரோனா பரிசோதனை செய்து கொள்வது நல்லது. பிரசவ வலி ஏற்பட்டால் உங்கள் வருகையை மருத்துவமனைக்கு முன்கூட்டியே அறிவித்து விட்டு செல்லுங்கள். இது அவர்களை தயார் நிலையில் இருக்க உதவும்.
இவை அனைத்துமே முன்னெச்சரிக்கைகள். ஆனால் கொரோனா வைரஸ் தொற்று கர்ப்ப காலத்தில் ஏற்பட்டால் பயமில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். தேவையான அனைத்து வசதிகளும் எல்லா அரசு மருத்துவமனைகளிலும் உள்ளது.
பிரசவ நேரத்தில் உங்களுடன் ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் இருக்க அனுமதிக்க படுவார். ஒரு பிரசவம் சுகப்பிரசவமா அல்லது அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா என்பதை கர்ப்பிணியின் பிரசவ நிலை மட்டும் சிக்கல்கள் அறிந்து மகப்பேறு மருத்துவர் முடிவு செய்வார். சாதாரணமாகவே அறுவை சிகிச்சை செய்வதற்கு முதுகுத்தண்டில் செலுத்தப்படும் மயக்க மருந்து முறையே சாலச்சிறந்தது. கொரோனா தொற்று பரவுவதை குறைப்பதற்கும் இந்த முறையே சிறந்தது. எனவே முடிந்தவரை மருத்துவர் அதையே பின்பற்றுவார். கொரோனா தொப்புள் கொடி வழியாகவோ, பனிக்குட நீரிலோ பரவவில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன. குழந்தை பிறந்த பின்னர் கொரோனா நோய் உள்ள தாய், தாய்ப்பால் தரலாமா? என பலருக்கும் ஐயம் உண்டு.
இது தாய்ப்பால் மூலமாக பரவ வாய்ப்புகள் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. தாய்ப்பாலின் ஊட்டச்சத்துகள் மற்றும் நோய் எதிர்ப்பு செல்கள் பச்சிளம் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். எனவே தாய்ப்பால் இந்த காலகட்டத்தில் மிகவும் அவசியமாகிறது. ஆனால் வைரஸ் பாதித்த தாயின் மிக அருகில் இருக்கும் போது காற்றின் மூலமாக தொற்று ஏற்படலாம். கொரோனா பாதித்த தாய் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் பாலுட்டலாம்.
தாய்-சேய் விலகல் கடைப்பிடிப்பது அவசியம். குழந்தை தனி அறையில் கொரோனா பாதிப்பு இல்லாத ஒரு நபரின் கவனிப்பில் இருக்க வேண்டும். இவர் முக கவசம் அணிந்து, கை சுகாதாரம் பேண வேண்டும். தனித்து இருக்க முடியாவிடில் ஒரே அறையில் குறைந்தது 2 மீட்டர் இடைவெளியில் இருக்க வேண்டும்.
குழந்தையை தொடுவதற்கு முன்னும், பின்னும் கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும். என்-95 முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும். குழந்தையின் அருகில் இருமவோ, தும்மவோ கூடாது. தாய் மற்றும் சேய் உபயோகிக்கும் எந்த மேற்பரப்பும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பம்ப் மூலமாக தாய்ப்பால் வெளியிட்டு குழந்தைக்கு புட்டியில் தரலாம். பம்புகளை மிகவும் சுத்தமாக கையாள வேண்டும். சேயினை பிரிந்த தாய்க்கு மனச்சோர்வு வராமல் அவரை உளவியல் ரீதியாக ஊக்குவிக்க வேண்டும். தாயின் நோய் அறிகுறிகள் மற்றும் நோய் வீரியம் எப்போதும் கண்காணிக்கப்பட வேண்டும். குழந்தையை பார்க்கவோ அல்லது வாழ்த்துகள் சொல்லவோ உறவினர்களை அனுமதிக்க வேண்டாம். இந்த சமயங்களில் தாய் சேய் நலனை மேலும் கவனமாக, சுகாதாரமாக பேணுவது குடும்பத்தினரின் கடமையாகும்.
கொரோனா பாதித்த கர்ப்பிணி மற்றும் பிரசவித்த தாய்மார்களின் உணவு முறைகள் எவ்வாறு இருக்க வேண்டும்? பொதுவாக இவர்களுக்கு புரதச்சத்து, வைட்டமின் நிறைந்த உணவினை அளிக்க வேண்டும். தண்ணீர் நன்றாக குடிக்க வேண்டும். நமது பாரம்பரியமான இஞ்சி, பூண்டு, மஞ்சள், துளசி, மிளகு, நெல்லிக்காய், பழங்கள், காய்கறிகள், முளைக்கட்டிய தானியங்கள் மற்றும் கீரைகள் ஆகிய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். அசைவ உணவுகள் மூலம் கொரோனா பரவாது, எனவே அதனை உட்கொள்ளலாம்.
உலகமே கொரோனா நோய் குறித்து மிகுந்த பயம் கொண்டுள்ளது. கர்ப்பிணி பெண்கள் மேலே கூறியதை கவனித்து செயல்படுங்கள். நம்முடைய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் உங்களுடைய பாதுகாப்பை உறுதி செய்வர். நீங்கள் கவலைப்பட தேவையில்லை.
டாக்டர் த.ஸ்ரீகலா பிரசாத்,
துறை தலைவர்,
மகளிர் சிறப்பு சிறுநீரகவியல் துறை,
அரசு கஸ்தூரிபா காந்தி மகப்பேறு மருத்துவமனை, சென்னை.
கொரோனா தொற்று சக மனிதர்களுக்கு வருவது போலவே இவர்களையும் தாக்கலாம். ஆனால் இந்த நோய் இவர்களை அதிகமாக தாக்கும் அல்லது தீவிரமாக தாக்கும் என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லை. எனவே அனைவரையும் போல சமூக விலகல் மற்றும் தனித்து இருப்பதை இவர்கள் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் கர்ப்ப காலத்தில் சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் சுவாச கோளாறுகள் இருந்தால் இரட்டிப்பு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
நீங்கள் கர்ப்ப காலத்தின் எந்த மாதத்தில் இருந்தாலும் வெளியில் செல்வதை தவிர்க்கவும். வேலை பார்ப்பவர் என்றால் வீட்டில் இருந்து வேலை செய்வதை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். உங்களுடைய குடும்பத்தார் அத்தியாவசிய வேலைகளுக்கு மட்டுமே வெளியில் செல்ல வேண்டும். வீட்டினுள்ளும் அனைவரும் சுகாதாரம் பேண வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு போட்டு சுமார் 20 வினாடிகள் கழுவ வேண்டும். நீங்கள் உபயோகிக்கும் பொருட்கள், மேஜையின் மேற்பரப்பு மற்றும் கதவின் கைப்பிடியினை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
இருமல், தும்மல் வந்தால் கைக்குட்டை பயன்படுத்த வேண்டும். அருகில் கைக்குட்டை இல்லையென்றால் முழங்கை கொண்டு முகத்தை மூட வேண்டும்.
மிக அவசியமான பயணம் என்றால் சொந்த வாகனத்தில் செல்ல வேண்டும். பொது வாகனத்தில் செல்லவேண்டி வந்தால் முக கவசம் அணிந்து, சமூக விலகலை பின்பற்றி செல்ல வேண்டும்.
உங்களுடைய கர்ப்ப கால பரிசோதனைகள் மற்றும் ஸ்கேன் செய்து கொள்ள மருத்துவரை 6, 12, 19 வாரங்களில் நேரில் அணுக வேண்டும். இதனை தவிர்த்து மிகவும் அவசியம் மற்றும் அவசரம் என்றால் மட்டுமே மருத்துவமனைக்கு செல்லவும். உங்களுடைய சந்தேகங்களை உங்கள் மகப்பேறு மருத்துவர் அல்லது கிராம சுகாதார செவிலியரிடம் அலைபேசியில் பேசி ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுங்கள். மேலும் அவசியமாக நேரில் பரிசோதனைக்கு வர வேண்டிய தேதிகளை கேட்டு அறிந்து கொள்ளுங்கள். சீமந்தம்(வளைகாப்பு), வீட்டிலேயே நெருங்கிய சில உறவினர்கள் முன்னிலையில் சுகாதாரமாக நடைபெறுவதே தாய்க்கும், சிசுவிற்கும் நல்லது.
பிரசவ தேதி நெருங்கும் 1 வாரம் முன்னர் கொரோனா பரிசோதனை செய்து கொள்வது நல்லது. பிரசவ வலி ஏற்பட்டால் உங்கள் வருகையை மருத்துவமனைக்கு முன்கூட்டியே அறிவித்து விட்டு செல்லுங்கள். இது அவர்களை தயார் நிலையில் இருக்க உதவும்.
இவை அனைத்துமே முன்னெச்சரிக்கைகள். ஆனால் கொரோனா வைரஸ் தொற்று கர்ப்ப காலத்தில் ஏற்பட்டால் பயமில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். தேவையான அனைத்து வசதிகளும் எல்லா அரசு மருத்துவமனைகளிலும் உள்ளது.
பிரசவ நேரத்தில் உங்களுடன் ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் இருக்க அனுமதிக்க படுவார். ஒரு பிரசவம் சுகப்பிரசவமா அல்லது அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா என்பதை கர்ப்பிணியின் பிரசவ நிலை மட்டும் சிக்கல்கள் அறிந்து மகப்பேறு மருத்துவர் முடிவு செய்வார். சாதாரணமாகவே அறுவை சிகிச்சை செய்வதற்கு முதுகுத்தண்டில் செலுத்தப்படும் மயக்க மருந்து முறையே சாலச்சிறந்தது. கொரோனா தொற்று பரவுவதை குறைப்பதற்கும் இந்த முறையே சிறந்தது. எனவே முடிந்தவரை மருத்துவர் அதையே பின்பற்றுவார். கொரோனா தொப்புள் கொடி வழியாகவோ, பனிக்குட நீரிலோ பரவவில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன. குழந்தை பிறந்த பின்னர் கொரோனா நோய் உள்ள தாய், தாய்ப்பால் தரலாமா? என பலருக்கும் ஐயம் உண்டு.
இது தாய்ப்பால் மூலமாக பரவ வாய்ப்புகள் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. தாய்ப்பாலின் ஊட்டச்சத்துகள் மற்றும் நோய் எதிர்ப்பு செல்கள் பச்சிளம் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். எனவே தாய்ப்பால் இந்த காலகட்டத்தில் மிகவும் அவசியமாகிறது. ஆனால் வைரஸ் பாதித்த தாயின் மிக அருகில் இருக்கும் போது காற்றின் மூலமாக தொற்று ஏற்படலாம். கொரோனா பாதித்த தாய் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் பாலுட்டலாம்.
தாய்-சேய் விலகல் கடைப்பிடிப்பது அவசியம். குழந்தை தனி அறையில் கொரோனா பாதிப்பு இல்லாத ஒரு நபரின் கவனிப்பில் இருக்க வேண்டும். இவர் முக கவசம் அணிந்து, கை சுகாதாரம் பேண வேண்டும். தனித்து இருக்க முடியாவிடில் ஒரே அறையில் குறைந்தது 2 மீட்டர் இடைவெளியில் இருக்க வேண்டும்.
குழந்தையை தொடுவதற்கு முன்னும், பின்னும் கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும். என்-95 முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும். குழந்தையின் அருகில் இருமவோ, தும்மவோ கூடாது. தாய் மற்றும் சேய் உபயோகிக்கும் எந்த மேற்பரப்பும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பம்ப் மூலமாக தாய்ப்பால் வெளியிட்டு குழந்தைக்கு புட்டியில் தரலாம். பம்புகளை மிகவும் சுத்தமாக கையாள வேண்டும். சேயினை பிரிந்த தாய்க்கு மனச்சோர்வு வராமல் அவரை உளவியல் ரீதியாக ஊக்குவிக்க வேண்டும். தாயின் நோய் அறிகுறிகள் மற்றும் நோய் வீரியம் எப்போதும் கண்காணிக்கப்பட வேண்டும். குழந்தையை பார்க்கவோ அல்லது வாழ்த்துகள் சொல்லவோ உறவினர்களை அனுமதிக்க வேண்டாம். இந்த சமயங்களில் தாய் சேய் நலனை மேலும் கவனமாக, சுகாதாரமாக பேணுவது குடும்பத்தினரின் கடமையாகும்.
கொரோனா பாதித்த கர்ப்பிணி மற்றும் பிரசவித்த தாய்மார்களின் உணவு முறைகள் எவ்வாறு இருக்க வேண்டும்? பொதுவாக இவர்களுக்கு புரதச்சத்து, வைட்டமின் நிறைந்த உணவினை அளிக்க வேண்டும். தண்ணீர் நன்றாக குடிக்க வேண்டும். நமது பாரம்பரியமான இஞ்சி, பூண்டு, மஞ்சள், துளசி, மிளகு, நெல்லிக்காய், பழங்கள், காய்கறிகள், முளைக்கட்டிய தானியங்கள் மற்றும் கீரைகள் ஆகிய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். அசைவ உணவுகள் மூலம் கொரோனா பரவாது, எனவே அதனை உட்கொள்ளலாம்.
உலகமே கொரோனா நோய் குறித்து மிகுந்த பயம் கொண்டுள்ளது. கர்ப்பிணி பெண்கள் மேலே கூறியதை கவனித்து செயல்படுங்கள். நம்முடைய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் உங்களுடைய பாதுகாப்பை உறுதி செய்வர். நீங்கள் கவலைப்பட தேவையில்லை.
டாக்டர் த.ஸ்ரீகலா பிரசாத்,
துறை தலைவர்,
மகளிர் சிறப்பு சிறுநீரகவியல் துறை,
அரசு கஸ்தூரிபா காந்தி மகப்பேறு மருத்துவமனை, சென்னை.
கைகளை கழுவுவதினால் நோய்த்தொற்று ஏற்படாமல் தற்காத்து கொள்ளலாம். மேலும் உடல்நலக்குறைவு ஏற்பட்டவர்களை மற்றவர்கள் தொடும் முன்பும், பின்பும் கைகளை கழுவுவதன் மூலம் நோய்த்தொற்று பரவுவதை தவிர்க்கலாம்.
கொரோனா வைரஸ் என்ற பெயரை கேட்டாலே அச்சப்படும் சூழ்நிலையில் தற்போது மக்கள் உள்ளனர். உலக நாடுகளையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், கைகளை கை கழுவும் திரவம், சோப் போன்றவற்றை பயன்படுத்தி குறைந்தது 20 வினாடிகளுக்கு நன்றாக கழுவ வேண்டும் என்றும், கை கழுவும் முறைகள் பற்றியும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தொன்றுதொட்டு பல்வேறு நல்ல பழக்க வழக்கங்கள் நடைமுறையில் இருந்தன. ஆனால் நாகரிகம் என்ற பெயரில் அந்த பழக்க வழக்கங்களில் பலவற்றை மக்கள் மறந்தும், துறந்தும் விட்டனர். அதில் ஒன்றாக, வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வரும்போது, கைகள் மற்றும் கால்களை கழுவிவிட்டு வீட்டிற்குள் வரும் பழக்கத்தையும் கை கழுவி விட்டனர். தற்போது கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக அந்த பழக்கம் மீண்டும் உயிர் பெற்றுள்ளது.
கைகளை கழுவுவதினால் நோய்த்தொற்று ஏற்படாமல் தற்காத்து கொள்ளலாம். மேலும் உடல்நலக்குறைவு ஏற்பட்டவர்களை மற்றவர்கள் தொடும் முன்பும், பின்பும் கைகளை கழுவுவதன் மூலம் நோய்த்தொற்று பரவுவதை தவிர்க்கலாம். வீட்டில் வளர்க்கப்படும் நாய் போன்ற செல்லப்பிராணிகள், பறவைகள் போன்றவற்றை தொட்ட பின்பு கைகளை கண்டிப்பாக கழுவ வேண்டும் என்பது டாக்டர்களின் அறிவுறுத்தலாகும். வீட்டில் உள்ள பெரியவர்கள், குழந்தைகளுக்கு சிறு வயது முதலே கை கழுவுவதன் அவசியம் குறித்தும், அதன் நன்மைகள் குறித்தும் எடுத்துக்கூறி, அதை பின்பற்ற செய்வது அவசியமாகும்.
கை கழுவுதலின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலேயே ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 15-ந் தேதி உலக கை கழுவுதல் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முறையாக கைகளை கழுவுவதோடு, அஜாக்கிரதையை தவிர்த்து விழிப்புணர்வோடு செயல்பட்டால் கொரோனா போன்ற நோய்த்தொற்றில் இருந்து நம்மை தற்காத்து கொள்ளலாம். இதேபோல் தீய பழக்க வழக்கங்களையும் கை கழுவினால் உடல் மட்டுமின்றி, உள்ளமும் தூய்மையாகும் என்றால் அது மிகையாகாது.
ஹ.துளசி தாசன், பி.காம். 3-ம் ஆண்டு, ஸ்ரீமத் ஆண்டவர் கல்லூரி, ஸ்ரீரங்கம், திருச்சி.
தமிழகத்தில் தொன்றுதொட்டு பல்வேறு நல்ல பழக்க வழக்கங்கள் நடைமுறையில் இருந்தன. ஆனால் நாகரிகம் என்ற பெயரில் அந்த பழக்க வழக்கங்களில் பலவற்றை மக்கள் மறந்தும், துறந்தும் விட்டனர். அதில் ஒன்றாக, வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வரும்போது, கைகள் மற்றும் கால்களை கழுவிவிட்டு வீட்டிற்குள் வரும் பழக்கத்தையும் கை கழுவி விட்டனர். தற்போது கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக அந்த பழக்கம் மீண்டும் உயிர் பெற்றுள்ளது.
கைகளை கழுவுவதினால் நோய்த்தொற்று ஏற்படாமல் தற்காத்து கொள்ளலாம். மேலும் உடல்நலக்குறைவு ஏற்பட்டவர்களை மற்றவர்கள் தொடும் முன்பும், பின்பும் கைகளை கழுவுவதன் மூலம் நோய்த்தொற்று பரவுவதை தவிர்க்கலாம். வீட்டில் வளர்க்கப்படும் நாய் போன்ற செல்லப்பிராணிகள், பறவைகள் போன்றவற்றை தொட்ட பின்பு கைகளை கண்டிப்பாக கழுவ வேண்டும் என்பது டாக்டர்களின் அறிவுறுத்தலாகும். வீட்டில் உள்ள பெரியவர்கள், குழந்தைகளுக்கு சிறு வயது முதலே கை கழுவுவதன் அவசியம் குறித்தும், அதன் நன்மைகள் குறித்தும் எடுத்துக்கூறி, அதை பின்பற்ற செய்வது அவசியமாகும்.
கை கழுவுதலின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலேயே ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 15-ந் தேதி உலக கை கழுவுதல் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முறையாக கைகளை கழுவுவதோடு, அஜாக்கிரதையை தவிர்த்து விழிப்புணர்வோடு செயல்பட்டால் கொரோனா போன்ற நோய்த்தொற்றில் இருந்து நம்மை தற்காத்து கொள்ளலாம். இதேபோல் தீய பழக்க வழக்கங்களையும் கை கழுவினால் உடல் மட்டுமின்றி, உள்ளமும் தூய்மையாகும் என்றால் அது மிகையாகாது.
ஹ.துளசி தாசன், பி.காம். 3-ம் ஆண்டு, ஸ்ரீமத் ஆண்டவர் கல்லூரி, ஸ்ரீரங்கம், திருச்சி.
உடல் நிலையும், மனநிலையும்தான் 100 வயதிலும் தாம்பத்தியத்தில் ஈடுபட வைக்கும் கருவி என்பதை மனதில் கொள்ளவும்.
அமெரிக்காவின் சிகாகோ யுனிவர்சிட்டியின் மகப்பேறு மருந்தியல் பிரிவின் ஸ்டேசி டெஸ்லர் லிண்டாவ் தலைமையிலான குழுவினர், வயதான ஆண் மற்றும் பெண்களின் தாம்பத்திய உணர்வு குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் இறுதி முடிவாக, பொதுவாக, முதுமை காலத்தில் ஆண்களுக்கு பெண்களை விட தாம்பத்திய உணர்வு அதிகமாக உள்ளது. மேலும், ஆரோக்கியமான உடல்நிலை உள்ளவர்களுக்கு 70 வயது வரை தாம்பத்திய உணர்வு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சராசரியாக 30 வயதுடைய ஆண்கள் மேலும் 35 ஆண்டுகள் வரையும், பெண்கள் 31 ஆண்டுகள் வரை தாம்பத்தியத்தில் ஈடுபாடு காட்ட முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
55 வயதான ஆண்கள் மேலும் 15 ஆண்டுகளுக்கு அதாவது 70 வயது வரை தாம்பத்தியத்தில் ஈடுபட முடியும் என்றும் அந்த ஆய்வுக் கூறுகிறது.
ஆய்வு முடிவுகள் எதுவாக இருந்தாலும், உடல் நிலையும், மனநிலையும்தான் 100 வயதிலும் தாம்பத்தியத்தில் ஈடுபட வைக்கும் கருவி என்பதை மனதில் கொள்ளவும்.
இந்த ஆய்வின் இறுதி முடிவாக, பொதுவாக, முதுமை காலத்தில் ஆண்களுக்கு பெண்களை விட தாம்பத்திய உணர்வு அதிகமாக உள்ளது. மேலும், ஆரோக்கியமான உடல்நிலை உள்ளவர்களுக்கு 70 வயது வரை தாம்பத்திய உணர்வு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சராசரியாக 30 வயதுடைய ஆண்கள் மேலும் 35 ஆண்டுகள் வரையும், பெண்கள் 31 ஆண்டுகள் வரை தாம்பத்தியத்தில் ஈடுபாடு காட்ட முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
55 வயதான ஆண்கள் மேலும் 15 ஆண்டுகளுக்கு அதாவது 70 வயது வரை தாம்பத்தியத்தில் ஈடுபட முடியும் என்றும் அந்த ஆய்வுக் கூறுகிறது.
ஆய்வு முடிவுகள் எதுவாக இருந்தாலும், உடல் நிலையும், மனநிலையும்தான் 100 வயதிலும் தாம்பத்தியத்தில் ஈடுபட வைக்கும் கருவி என்பதை மனதில் கொள்ளவும்.
குழந்தைகள் ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்களே. அவர்களுக்கென்று தனி ஆசைகள், விருப்பங்கள், தேவைகள் உள்ளது. அவர்களது தேவைகளை வெளிப்படுத்தும் விதமும் வித்தியாசமானது.
* குழந்தைகளிடம் பெற்றோர்கள் எப்பொழுதும் அதிகாரம் செய்வதையும், மிரட்டுவதையும் விட்டு அவர்கள் சொல்வதையும் காது கொடுத்து கேட்க வேண்டும். அப்பொழுதே அவர்களால் நல்ல பழக்கங்களை கற்க முடியும். சமுதாயத்தோடு ஒத்து வாழ முடியும். மிக தவறான பழக்கங்கள் இருந்தால் மட்டுமே அவர்களிடம் சற்று தீவிரமான கண்டிப்பினை காட்ட வேண்டும்.
* குழந்தைகளை பாதுகாத்து வளர்க்க வேண்டிய காலத்தில் பெற்றோர்கள் தங்களுக்கு பிடித்தமான பொழுது போக்குகளில் காலத்தினை செலவிடும் பொழுது பல குழந்தைகள் மது, சிகரெட் போன்ற பொருட்களுக்கு எளிதில் அடிமையாகி விடுகின்றனர். அதுவும் குடும்ப நலன்களுக்கிடையே ஒற்றுமை இன்றி காணப்படும் பொழுது குழந்தைகளே அதிக பாதிப்பிற்கு ஆளாகின்றனர் என ஆய்வுகள் வலியுறுத்துகின்றன.
* குழந்தைகள் ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்களே. அவர்களுக்கென்று தனி ஆசைகள், விருப்பங்கள், தேவைகள் உள்ளது. அவர்களது தேவைகளை வெளிப்படுத்தும் விதமும் வித்தியாசமானது. அதுபோல பெற்றோருக்கு ஒரு குழந்தையினை விட மற்றொரு குழந்தை மீது ஆசை என்பது எங்கோ காணும் அரிதான ஒன்றே. இதில் உண்மை என்னவெனில் ஒரு குழந்தை மற்றொரு குழந்தையினை விட கையாள எளிதாக இருக்கலாம். ஆகவே பிரச்சினையுடைய குழந்தைகளிடம் அதிக நேரம் அன்பாக பேசுவதும், தவறுகளை மென்மையாய் புரிய வைத்து திருத்துவதுமே தீர்வாக அமையும்.
* அதுபோன்று குழந்தைகளின் தவறுகளுக்காக அடி வயிற்றில் இருந்து காட்டு கத்தலாக கத்துவது. முறையற்ற வார்த்தைகளை பேசுவது போன்றவை அக்குழந்தைகள் மனதினை கொல்வதற்கு சமம். ஆகவே உடனே உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.
* குழந்தைகளை இது தவறு. அது தவறு என்று கத்துவதைக் காட்டிலும் எது சரியென சொல்லி தருவதும், நாம் அதுபோல சரியாக வாழ்வதுமே சிறந்தது.
* நல்ல நீதிக் கதைகளை அவர்களுக்குள் சொல்வது சிறந்தது.
* அதிகமாக எதனையும் அவர்கள் மீது திணிக்காது அவர்களின் இயல்பான முறைக்கும் முக்கியத்துவம் கொடுப்பது சிறந்தது.
* மிகவும் படபடப்புடன் இருக்கும் குழந்தைகளுக்கு தேவையான உதவிகள் கிடைப்பதில்லை.
* குழந்தைகளை பாதுகாத்து வளர்க்க வேண்டிய காலத்தில் பெற்றோர்கள் தங்களுக்கு பிடித்தமான பொழுது போக்குகளில் காலத்தினை செலவிடும் பொழுது பல குழந்தைகள் மது, சிகரெட் போன்ற பொருட்களுக்கு எளிதில் அடிமையாகி விடுகின்றனர். அதுவும் குடும்ப நலன்களுக்கிடையே ஒற்றுமை இன்றி காணப்படும் பொழுது குழந்தைகளே அதிக பாதிப்பிற்கு ஆளாகின்றனர் என ஆய்வுகள் வலியுறுத்துகின்றன.
* குழந்தைகள் ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்களே. அவர்களுக்கென்று தனி ஆசைகள், விருப்பங்கள், தேவைகள் உள்ளது. அவர்களது தேவைகளை வெளிப்படுத்தும் விதமும் வித்தியாசமானது. அதுபோல பெற்றோருக்கு ஒரு குழந்தையினை விட மற்றொரு குழந்தை மீது ஆசை என்பது எங்கோ காணும் அரிதான ஒன்றே. இதில் உண்மை என்னவெனில் ஒரு குழந்தை மற்றொரு குழந்தையினை விட கையாள எளிதாக இருக்கலாம். ஆகவே பிரச்சினையுடைய குழந்தைகளிடம் அதிக நேரம் அன்பாக பேசுவதும், தவறுகளை மென்மையாய் புரிய வைத்து திருத்துவதுமே தீர்வாக அமையும்.
* அதுபோன்று குழந்தைகளின் தவறுகளுக்காக அடி வயிற்றில் இருந்து காட்டு கத்தலாக கத்துவது. முறையற்ற வார்த்தைகளை பேசுவது போன்றவை அக்குழந்தைகள் மனதினை கொல்வதற்கு சமம். ஆகவே உடனே உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.
* குழந்தைகளை இது தவறு. அது தவறு என்று கத்துவதைக் காட்டிலும் எது சரியென சொல்லி தருவதும், நாம் அதுபோல சரியாக வாழ்வதுமே சிறந்தது.
* நல்ல நீதிக் கதைகளை அவர்களுக்குள் சொல்வது சிறந்தது.
* அதிகமாக எதனையும் அவர்கள் மீது திணிக்காது அவர்களின் இயல்பான முறைக்கும் முக்கியத்துவம் கொடுப்பது சிறந்தது.
* மிகவும் படபடப்புடன் இருக்கும் குழந்தைகளுக்கு தேவையான உதவிகள் கிடைப்பதில்லை.
தோசை , இட்லிக்கேற்ற ஒரு பக்காவான சைடிஷ் எள்ளு பொடி. இந்த எள்ளு பொடி சத்தானதும் கூட. இன்று இந்த எள்ளு பொடியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
எள் - 1 கப்
உளுந்தம்பருப்பு - 1/4 கப்
கடலைப்பருப்பு - 1/4 கப்
காய்ந்தமிளகாய் - 6
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எள்ளை போட்டு, பொரியும் வரை வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் கடாயில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்தமிளகாய் , பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக வறுத்த பின்னர் கடைசியாக எள்ளு , உப்பு சேர்த்து கிளற வேண்டும் .
பின்னர் இக்கலவை ஆறியவுடன் மிக்சியில் போட்டு அரைத்து பொடியாக்கினால் சுவையான எள்ளு பொடி தயார் !!!
எள் - 1 கப்
உளுந்தம்பருப்பு - 1/4 கப்
கடலைப்பருப்பு - 1/4 கப்
காய்ந்தமிளகாய் - 6
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எள்ளை போட்டு, பொரியும் வரை வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் கடாயில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்தமிளகாய் , பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக வறுத்த பின்னர் கடைசியாக எள்ளு , உப்பு சேர்த்து கிளற வேண்டும் .
பின்னர் இக்கலவை ஆறியவுடன் மிக்சியில் போட்டு அரைத்து பொடியாக்கினால் சுவையான எள்ளு பொடி தயார் !!!
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கோடை மழை காலத்தில் மின்விபத்துகளை தடுப்பது எப்படி? என்பது குறித்து மின்வாரிய அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
கோடை மழை காலத்தில் மின்விபத்துகளை தடுப்பது எப்படி? என்பது குறித்து மின்வாரிய அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பி.செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மின்கம்பிகளை தொடக்கூடாது
தற்போது வெப்பச்சலனம் காரணமாக நெல்லை மின்பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட நெல்லை, தென்காசி மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. பலத்த காற்று, இடி- மின்னல் மற்றும் மழை காரணமாக ஏற்படும் மின் விபத்துகளை தடுக்க பொதுமக்களுக்கு கீழ்கண்ட பாதுகாப்பு அறிவுரைகள் வழங்கப்படுகிறது.
காற்று மற்றும் மழைக்காலங்களில் மின்கம்பிகள், மின்மாற்றிகள், மின்கம்பிகள், மின்பகிர்வு பெட்டிகள் மற்றும் ஸ்டே கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம். மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்வதோ அதனை தொட முயற்சிப்பதோ கூடாது. அதுகுறித்து அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிப்பதோடு மின்வாரிய அலுவலர்கள் வரும் வரை வேறு யாரேனும் அந்த மின்கம்பிகளை தொடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தகவல் தெரிவிக்க வேண்டும்
இடி- மின்னலின் போது வெட்ட வெளியிலோ, மரங்களின் அடியிலோ, மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் அடியிலோ தஞ்சம் அடைய வேண்டாம். காங்கிரீட் கூரையிலான கட்டிடங்களில் தஞ்சம் அடையுங்கள். பாதுகாப்பான கட்டிடங்கள் இல்லாத பட்சத்தில் தாழ்வான பகுதியில் தஞ்சம் அடையலாம். இடி- மின்னலின் போது டி.வி., மிக்சி, கிரைண்டர், கணினி, செல்போன் மற்றும் தொலைபேசியை பயன்படுத்தக்கூடாது. திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு அருகில் இருக்கக்கூடாது.
மின்மாற்றிகள், மின்பகிர்வு பெட்டிகள் மற்றும் மின்கம்பங்கள் அருகே தண்ணீர் தேங்கியிருக்கும்போது அதன் அருகே செல்லக்கூடாது. அதுகுறித்து அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மழையின் போது வீடுகளில் உள்ள சுவர்களில் தண்ணீர் கசிவு இருக்குமாயின் அந்த பகுதியில் மின்கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அந்த பகுதியில் மின்சாரம் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.
மின்விபத்து ஏற்பட வாய்ப்பு
மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்வாரிய அலுவலர்களை அணுக வேண்டும். பச்சை மரங்கள் மின்சாரத்தை கடத்தும் தன்மை உடையதால் மின்கம்பிகளுக்கு அருகில் உள்ள மரங்களை வெட்டும்போது மரக்கிளைகள் மின்கம்பியில் பட்டு, மரம் வெட்டும் நபருக்கு மின்விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
மின்கம்பத்திற்கு போடப்பட்டுள்ள ஸ்டே வயர்களில் ஆடு, மாடுகளை கட்டுவதோ, மின்கம்பிகளுக்கு அடியில் கால்நடைகளை கிடை அமர்த்துவதோ, மின்கம்பங்களை பந்தல் தூண்களாக பயன்படுத்துவதோ, மின்கம்பங்கள், ஸ்டே வயர்கள் மற்றும் சர்வீஸ் பைப்புகளில் கொடிகள் கட்டி துணிகளை காயப்போடுவதோ கூடாது. வீடுகள், மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளில் ஏற்படும் மின் பழுதுகளை பொதுமக்கள் தாமாக சரிசெய்ய முயற்சிக்க கூடாது. மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். மேலும் மின்தடையை நிவர்த்தி செய்ய 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும்
தற்போது கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு விடுமுறையில் உள்ளதால் பொதுமக்கள் தங்கள் வீட்டு மாடியில் இருந்து பட்டம் பறக்க விடுகிறார்கள். அதில் சில பட்டங்கள் அறுந்து மேல்நிலை மின்கம்பிகளில் சிக்கிக் கொள்வதால் மின்தடை ஏற்படுவதுடன் மின்விபத்துகளும் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆகையால் பொதுமக்கள் தங்கள் வீட்டு மாடியில் இருந்து பட்டம் பறக்க விடுவதை தவிர்க்க வேண்டும்.
மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் பாதுகாப்பின்றி இருக்கும் பழுதான மின்கம்பங்கள், தாழ்வாக இருக்கும் மின்கம்பிகள் மற்றும் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் மின்பகிர்வு பெட்டிகள் போன்றவற்றை படத்துடன் முழு முகவரியை குறிப்பிட்டு 8903331912 என்ற வாட்ஸ்-அப் எண்ணிற்கு குறுஞ்செய்தியாக தகவல் தெரிவித்தால் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும்.
மேற்கண்ட வழிமுறைகளை கடைபிடித்து மின்விபத்துகளை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பி.செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மின்கம்பிகளை தொடக்கூடாது
தற்போது வெப்பச்சலனம் காரணமாக நெல்லை மின்பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட நெல்லை, தென்காசி மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. பலத்த காற்று, இடி- மின்னல் மற்றும் மழை காரணமாக ஏற்படும் மின் விபத்துகளை தடுக்க பொதுமக்களுக்கு கீழ்கண்ட பாதுகாப்பு அறிவுரைகள் வழங்கப்படுகிறது.
காற்று மற்றும் மழைக்காலங்களில் மின்கம்பிகள், மின்மாற்றிகள், மின்கம்பிகள், மின்பகிர்வு பெட்டிகள் மற்றும் ஸ்டே கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம். மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்வதோ அதனை தொட முயற்சிப்பதோ கூடாது. அதுகுறித்து அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிப்பதோடு மின்வாரிய அலுவலர்கள் வரும் வரை வேறு யாரேனும் அந்த மின்கம்பிகளை தொடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தகவல் தெரிவிக்க வேண்டும்
இடி- மின்னலின் போது வெட்ட வெளியிலோ, மரங்களின் அடியிலோ, மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் அடியிலோ தஞ்சம் அடைய வேண்டாம். காங்கிரீட் கூரையிலான கட்டிடங்களில் தஞ்சம் அடையுங்கள். பாதுகாப்பான கட்டிடங்கள் இல்லாத பட்சத்தில் தாழ்வான பகுதியில் தஞ்சம் அடையலாம். இடி- மின்னலின் போது டி.வி., மிக்சி, கிரைண்டர், கணினி, செல்போன் மற்றும் தொலைபேசியை பயன்படுத்தக்கூடாது. திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு அருகில் இருக்கக்கூடாது.
மின்மாற்றிகள், மின்பகிர்வு பெட்டிகள் மற்றும் மின்கம்பங்கள் அருகே தண்ணீர் தேங்கியிருக்கும்போது அதன் அருகே செல்லக்கூடாது. அதுகுறித்து அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மழையின் போது வீடுகளில் உள்ள சுவர்களில் தண்ணீர் கசிவு இருக்குமாயின் அந்த பகுதியில் மின்கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அந்த பகுதியில் மின்சாரம் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.
மின்விபத்து ஏற்பட வாய்ப்பு
மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்வாரிய அலுவலர்களை அணுக வேண்டும். பச்சை மரங்கள் மின்சாரத்தை கடத்தும் தன்மை உடையதால் மின்கம்பிகளுக்கு அருகில் உள்ள மரங்களை வெட்டும்போது மரக்கிளைகள் மின்கம்பியில் பட்டு, மரம் வெட்டும் நபருக்கு மின்விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
மின்கம்பத்திற்கு போடப்பட்டுள்ள ஸ்டே வயர்களில் ஆடு, மாடுகளை கட்டுவதோ, மின்கம்பிகளுக்கு அடியில் கால்நடைகளை கிடை அமர்த்துவதோ, மின்கம்பங்களை பந்தல் தூண்களாக பயன்படுத்துவதோ, மின்கம்பங்கள், ஸ்டே வயர்கள் மற்றும் சர்வீஸ் பைப்புகளில் கொடிகள் கட்டி துணிகளை காயப்போடுவதோ கூடாது. வீடுகள், மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளில் ஏற்படும் மின் பழுதுகளை பொதுமக்கள் தாமாக சரிசெய்ய முயற்சிக்க கூடாது. மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். மேலும் மின்தடையை நிவர்த்தி செய்ய 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும்
தற்போது கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு விடுமுறையில் உள்ளதால் பொதுமக்கள் தங்கள் வீட்டு மாடியில் இருந்து பட்டம் பறக்க விடுகிறார்கள். அதில் சில பட்டங்கள் அறுந்து மேல்நிலை மின்கம்பிகளில் சிக்கிக் கொள்வதால் மின்தடை ஏற்படுவதுடன் மின்விபத்துகளும் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆகையால் பொதுமக்கள் தங்கள் வீட்டு மாடியில் இருந்து பட்டம் பறக்க விடுவதை தவிர்க்க வேண்டும்.
மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் பாதுகாப்பின்றி இருக்கும் பழுதான மின்கம்பங்கள், தாழ்வாக இருக்கும் மின்கம்பிகள் மற்றும் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் மின்பகிர்வு பெட்டிகள் போன்றவற்றை படத்துடன் முழு முகவரியை குறிப்பிட்டு 8903331912 என்ற வாட்ஸ்-அப் எண்ணிற்கு குறுஞ்செய்தியாக தகவல் தெரிவித்தால் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும்.
மேற்கண்ட வழிமுறைகளை கடைபிடித்து மின்விபத்துகளை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
முடிவெட்டுதல், முக சவரம் செய்து அழகாக இருக்கவே ஆண்கள் விரும்புவார்கள். கொரோனா ஊரடங்கால் ஆண்கள் பலர் முடிவெட்ட முடியாமல் சடை முடியுடன் தவித்து வருகிறார்கள்.
தன்னை அழகுபடுத்தி பார்ப்பதில் பெண்களுக்கு ஆண்கள் சளைத்தவர்கள் அல்ல. முடிந்தவரை முடிவெட்டுதல், முக சவரம் செய்து அழகாக இருக்கவே ஆண்கள் விரும்புவார்கள். கொரோனா ஊரடங்கால் சலூன் கடைகள் திறக்கப்படவில்லை. ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்தும் கூட, 34 வகையான கடைகளை திறக்க அனுமதித்தும் கூட சலூன் கடைகள், அழகு நிலையங்களை திறக்க அரசு இதுவரை அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக ஆண்கள் பலர் முடிவெட்ட முடியாமல் சடை முடியுடன் தவித்து வருகிறார்கள்.
சுயமாக முக சவரம் செய்து கொள்ள முடியுமானாலும், சிலர் அதற்கும் சலூன் கடைகளை மட்டுமே நம்பியிருக்கிறார்கள். வழக்கமாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்தான் சலூன் கடைகளில் கூட்டம் அலைமோதும். அந்த நாட்களில் ஆண்கள் அழகுபடுத்துவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.
நீண்ட முடியுடன் மிரட்டல்
ஊரடங்கு காரணமாக சலூன் கடைகள் மூடப்பட்டதால் பெரும்பாலான ஆண்கள் தலை நிறைய முடியுடனும், நீண்ட தாடியுடனும் அலைந்து திரிந்து வருகிறார்கள். நரை முடியை மறைக்க அவ்வப்போது ‘டை’ அடித்துக்கொண்டு தங்களை இளைஞர் போல் பாவனை செய்து வந்தவர்கள் பலர் திண்டாட்டம் அடைந்துள்ளனர்.
கோவில்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக தாடி, தலை முடியுடன் இருப்பவர்களை போல் பலரை காண முடிகிறது. விதவிதமாக முடிவெட்டுவதையே நாகரீகமாக கொண்ட இளைஞர்கள் பலர் நீண்ட முடியுடன் மிரட்டி வருகிறார்கள். சலூன் கடைகள் மூடப்பட்டதால் சிறுவர்களுக்கு முடி வெட்டுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சில வீடுகளில் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு முடி வெட்டி விட்டு அழகு கலை நிபுணர்களாக மாறி வருகிறார்கள்.
தற்போது அக்னி நட்சத்திரத்தின் காரணமாக வெயில் சுட்டெரித்து வருகிறது. தலையில் அதிக முடி உள்ளவர்கள் வியர்வை அதிகமாக வெளியேறுவதால் சளி தொந்தரவுக்கு ஆளாகி இருக்கிறார்கள். இவர்கள் இதனை கொரோனாவின் அறிகுறியாக இருக்குமோ? என்று தேவையற்ற மனக்குழப்பத்தையும் சந்தித்து இருக்கிறார்கள்.
மனக்கவலை
பெண்கள் தங்களது முடியை ஸ்டைலாக வெட்டிக்கொள்வதிலும், டை அடிப்பதிலும், கலரிங் செய்வதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பல்வேறு விதமான அழகு சாதனங்களை பயன்படுத்துவதில் ஆண்களை விட பெண்களே அதிகம். அவ்வப்போது அழகு நிலையத்துக்கு சென்று அழகை மெருகேற்றி புதுப்பொலிவுடன் திகழும் பெண்கள் அழகு நிலையம் திறக்கப்படாததால் மிகுந்த மனக்கவலை அடைந்துள்ளனர். இந்த விஷயத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாகுபாடின்றி அனைவரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த கொடுமையில் இருந்து விடுதலை பெற சலூன் கடைகளை திறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்க்கின்றனர்.
தலைக்கு மேல் வேலை இருப்பதாக கூறி அல்லாடுவார்கள். ஆனால் இங்கு தலைக்கு மேல் (முடிவெட்டும்) உள்ள வேலையை செய்ய முடியாமல் ஆண்கள் தவிப்பதை என்னவென்று சொல்வது.
சுயமாக முக சவரம் செய்து கொள்ள முடியுமானாலும், சிலர் அதற்கும் சலூன் கடைகளை மட்டுமே நம்பியிருக்கிறார்கள். வழக்கமாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்தான் சலூன் கடைகளில் கூட்டம் அலைமோதும். அந்த நாட்களில் ஆண்கள் அழகுபடுத்துவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.
நீண்ட முடியுடன் மிரட்டல்
ஊரடங்கு காரணமாக சலூன் கடைகள் மூடப்பட்டதால் பெரும்பாலான ஆண்கள் தலை நிறைய முடியுடனும், நீண்ட தாடியுடனும் அலைந்து திரிந்து வருகிறார்கள். நரை முடியை மறைக்க அவ்வப்போது ‘டை’ அடித்துக்கொண்டு தங்களை இளைஞர் போல் பாவனை செய்து வந்தவர்கள் பலர் திண்டாட்டம் அடைந்துள்ளனர்.
கோவில்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக தாடி, தலை முடியுடன் இருப்பவர்களை போல் பலரை காண முடிகிறது. விதவிதமாக முடிவெட்டுவதையே நாகரீகமாக கொண்ட இளைஞர்கள் பலர் நீண்ட முடியுடன் மிரட்டி வருகிறார்கள். சலூன் கடைகள் மூடப்பட்டதால் சிறுவர்களுக்கு முடி வெட்டுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சில வீடுகளில் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு முடி வெட்டி விட்டு அழகு கலை நிபுணர்களாக மாறி வருகிறார்கள்.
தற்போது அக்னி நட்சத்திரத்தின் காரணமாக வெயில் சுட்டெரித்து வருகிறது. தலையில் அதிக முடி உள்ளவர்கள் வியர்வை அதிகமாக வெளியேறுவதால் சளி தொந்தரவுக்கு ஆளாகி இருக்கிறார்கள். இவர்கள் இதனை கொரோனாவின் அறிகுறியாக இருக்குமோ? என்று தேவையற்ற மனக்குழப்பத்தையும் சந்தித்து இருக்கிறார்கள்.
மனக்கவலை
பெண்கள் தங்களது முடியை ஸ்டைலாக வெட்டிக்கொள்வதிலும், டை அடிப்பதிலும், கலரிங் செய்வதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பல்வேறு விதமான அழகு சாதனங்களை பயன்படுத்துவதில் ஆண்களை விட பெண்களே அதிகம். அவ்வப்போது அழகு நிலையத்துக்கு சென்று அழகை மெருகேற்றி புதுப்பொலிவுடன் திகழும் பெண்கள் அழகு நிலையம் திறக்கப்படாததால் மிகுந்த மனக்கவலை அடைந்துள்ளனர். இந்த விஷயத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாகுபாடின்றி அனைவரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த கொடுமையில் இருந்து விடுதலை பெற சலூன் கடைகளை திறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்க்கின்றனர்.
தலைக்கு மேல் வேலை இருப்பதாக கூறி அல்லாடுவார்கள். ஆனால் இங்கு தலைக்கு மேல் (முடிவெட்டும்) உள்ள வேலையை செய்ய முடியாமல் ஆண்கள் தவிப்பதை என்னவென்று சொல்வது.






