என் மலர்
ஆரோக்கியம்
பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் எனப்படும் சினைப்பை கட்டிகள்/ கருப்பை கட்டிகள். இந்த அறிகுறிகள் இருந்தால் நிச்சயம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் எனப்படும் சினைப்பை கட்டிகள்/ கருப்பை கட்டிகள். இந்த பிரச்சனையானது பெண்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் இந்த பிரச்சனையால் டீன் ஏஜ் பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கருப்பை கட்டிகள் இருந்தால், அந்த முட்டைகளானது சரியாக முதிர்ச்சி அடைவதற்கு தேவையான ஹார்மோன்கள் சுரக்காமல்,
அந்த முட்டைகள் கட்டிகளாக மாறி விடுவதால், மாதவிடாய் சுழற்சி தடைபட்டு, கருவுறுதலில் பிரச்சனையை உண்டாக்குகின்றன. குறிப்பாக மலட்டுத் தன்மையை உண்டாக்குகின்றன. அது மட்டுமின்றி, அந்த கட்டிகள் நாளடைவில் ஆண் ஹார்மோன்களை சுரக்க ஆரம்பிக்கின்றன. இந்த சினைப்பைக் கட்டிகளை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் கண்டறியலாம்.
அதற்கு முதலில் அதன் அறிகுறிகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இவ்வாறு அதன் அறிகுறிகளை சாதாரணமாக எண்ணாமல், சரியாக கவனித்து அதற்கேற்றாற் போல் சிகிச்சைகளை பெற்று வந்தால், இதனால் ஏற்படும் மற்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
* சினைப்பைக் கட்டிகள் இருந்தால், அதன் அறிகுறிகளுள் முதன்மையாக தென்படுபவை தான் முறையற்ற மாதவிடாய் சுழற்சி. அதிலும் மாதவிடாய், பல மாதங்களாக தள்ளிப் போனால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
* உடலில் ஹார்மோன்கள் ஏற்றத்தாழ்வுடன் இருப்பதோடு, ஆண் ஹார்மோன்கள் அளவுக்கு அதிகமாக சுரப்பதால், அவை சருமத்தில் அதிகப்படியான முகப்பருக்களை உருவாக்கும்.
* ஆண் ஹார்மோன்களின் வளர்ச்சி அதிகம் இருந்தால், முகம் மற்றும் உடலில் அதிகப்படியாக முடி வளர ஆரம்பிக்கும்.
* முறையற்ற மாதவிடாய் சுழற்சியுடன், தலையில் வழுக்கை ஏற்பட ஆரம்பித்தால், அதுவும் சினைப்பைக் கட்டிகள் இருப்பதற்கான அறிகுறியே. ஏனெனில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுடன் இருப்பதோடு, ஆண் ஹார்மோன்கள் அளவுக்கு அதிகமாக சுரக்கப்படுகிறது.
* குறுகிய காலத்திலேயே உடல் எடையானது அளவுக்கு அதிகமாக அதிகரித்தால், அப்போது உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதித்துப் பாருங்கள். ஏனெனில் கருப்பைக் கட்டிகள் இருந்தாலும், உடல் எடை அதிகரிக்கும்.
* ஹார்மோன்கள் தான் மனநிலையை வைத்துக் கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அத்தகைய ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டால், முறையற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டு மனக் கவலையை அதிகரிக்கும்.
* திடீரென்று கருப்பு நிறத்தில் சருமம் உள்ளதா? அப்படியெனில் கருப்பை கட்டிகள் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று அர்த்தம்.
அதிலும் கழுத்து, அக்குள், முழங்கை போன்ற இடங்களில் கருமை அதிகரித்திருந்தால், அதற்கு கருப்பைக் கட்டிகள் இருக்கிறது என்று அர்த்தம்.
* பருவம் அடைந்த இரண்டு மூன்று மாதத்திற்கு மாதவிடாய் சுழற்சி நடைபெறாமல் இருந்தால், அதுவும் சினைப்பை கட்டிகள் இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.
அந்த முட்டைகள் கட்டிகளாக மாறி விடுவதால், மாதவிடாய் சுழற்சி தடைபட்டு, கருவுறுதலில் பிரச்சனையை உண்டாக்குகின்றன. குறிப்பாக மலட்டுத் தன்மையை உண்டாக்குகின்றன. அது மட்டுமின்றி, அந்த கட்டிகள் நாளடைவில் ஆண் ஹார்மோன்களை சுரக்க ஆரம்பிக்கின்றன. இந்த சினைப்பைக் கட்டிகளை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் கண்டறியலாம்.
அதற்கு முதலில் அதன் அறிகுறிகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இவ்வாறு அதன் அறிகுறிகளை சாதாரணமாக எண்ணாமல், சரியாக கவனித்து அதற்கேற்றாற் போல் சிகிச்சைகளை பெற்று வந்தால், இதனால் ஏற்படும் மற்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
* சினைப்பைக் கட்டிகள் இருந்தால், அதன் அறிகுறிகளுள் முதன்மையாக தென்படுபவை தான் முறையற்ற மாதவிடாய் சுழற்சி. அதிலும் மாதவிடாய், பல மாதங்களாக தள்ளிப் போனால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
* உடலில் ஹார்மோன்கள் ஏற்றத்தாழ்வுடன் இருப்பதோடு, ஆண் ஹார்மோன்கள் அளவுக்கு அதிகமாக சுரப்பதால், அவை சருமத்தில் அதிகப்படியான முகப்பருக்களை உருவாக்கும்.
* ஆண் ஹார்மோன்களின் வளர்ச்சி அதிகம் இருந்தால், முகம் மற்றும் உடலில் அதிகப்படியாக முடி வளர ஆரம்பிக்கும்.
* முறையற்ற மாதவிடாய் சுழற்சியுடன், தலையில் வழுக்கை ஏற்பட ஆரம்பித்தால், அதுவும் சினைப்பைக் கட்டிகள் இருப்பதற்கான அறிகுறியே. ஏனெனில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுடன் இருப்பதோடு, ஆண் ஹார்மோன்கள் அளவுக்கு அதிகமாக சுரக்கப்படுகிறது.
* குறுகிய காலத்திலேயே உடல் எடையானது அளவுக்கு அதிகமாக அதிகரித்தால், அப்போது உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதித்துப் பாருங்கள். ஏனெனில் கருப்பைக் கட்டிகள் இருந்தாலும், உடல் எடை அதிகரிக்கும்.
* ஹார்மோன்கள் தான் மனநிலையை வைத்துக் கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அத்தகைய ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டால், முறையற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டு மனக் கவலையை அதிகரிக்கும்.
* திடீரென்று கருப்பு நிறத்தில் சருமம் உள்ளதா? அப்படியெனில் கருப்பை கட்டிகள் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று அர்த்தம்.
அதிலும் கழுத்து, அக்குள், முழங்கை போன்ற இடங்களில் கருமை அதிகரித்திருந்தால், அதற்கு கருப்பைக் கட்டிகள் இருக்கிறது என்று அர்த்தம்.
* பருவம் அடைந்த இரண்டு மூன்று மாதத்திற்கு மாதவிடாய் சுழற்சி நடைபெறாமல் இருந்தால், அதுவும் சினைப்பை கட்டிகள் இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.
கிரீன் டீ உடலுக்கும் மனதுக்கும் மட்டுமே சிறந்தது என்று நினைத்துகொண்டிருந்தால் இனி அந்த எண்ணத்தை மாற்றி கொள்ளுங்கள். அது சருமத்துக்கும் மிகவும் சிறந்தது.
பொதுவாகவே அழகு பராமரிப்பு செய்யும் போது ஒவ்வொரு சருமத்துக்கும் ஒவ்வொரு விதமான பராமரிப்பு செய்ய வேண்டும். எல்லா வகையான சருமத்துக்கும் ஒரு பொருளை கொண்டு பராமரிக்கலாம் என்று சொல்லக்கூடிய வகையில் வெகு சில பொருள்களே உண்டு. அப்படியான பொருள்களில் கிரீன் டீ பேக் ஒன்று. இந்த கிரீன் டீ பேக் பொருளை கொண்டு சருமத்தின் ஒட்டு மொத்த அமைப்பையும், அழகையும் ஏன் நிறத்தையும் கூட மேம்படுத்திவிட முடியும்.
கிரீன் டீயில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றிகள் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் ஆன் டி மைக்ரோபியல் பண்புகள் கொண்டிருப்பதால் இவை முகப்பருவுக்கு எண்ணெய் சருமத்துக்கும் நல்ல தீர்வாக இருக்கிறது.
கிரீன் டீயில் இருக்கும் பாலிபினால்கள் சருமத்துக்கு பயன்படுத்தும் போது, முகத்தில் வடியும் எண்ணெய் சுரப்பை குறைக்க உதவுவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
முகத்தில் சருமத்தில் உண்டாகும் பாக்டீரியா தொற்று முகப்பருக்களின் வளர்ச்சியை அதிகரித்துவிடக்கூடும். இந்த பாலிபினால்கள் இந்த பாக்டீரியாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்த உதவுகிறது. கிரீன் டீயில் இருக்கும் கேடசின்கள் பாக்டிரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பதோடு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை கட்டுப்படுத்தும் குணங்களையும் கொண்டிருக்கின்றன.
இயல்பாக கிரீன் டீ உடலில் இருக்கும் நச்சை நீக்குவது போன்றே சருமத்தில் இருக்கும் நச்சையும் நீக்கி வெளியேற்றுவதால் முகப்பரு மற்றும் பருக்களின் பிரச்சனையிலிருந்து எளிதாக நிவாரணம் பெற முடிகிறது. பருக்கள் இருக்கும் பகுதியில் கிரீன் டீபேக் கொண்டு நேரடியாக தடவி மசாஜ் போன்று செய்வதன் மூலம் பருக்கள் குறைகிறது.
சருமத்தை ஈரப்பதமாக்ககூடிய குணங்கள் கிரீன் டீயிலும் உண்டு. இதில் வைட்டமின் ஈ உள்ளது. இவை சருமத்தை வறட்சி இன்றி வைக்க உதவுகிறது. சருமத்தை மென்மையாக்க உதவுகிறது. தொடர்ந்து 15 நாட்கள் வரை கிரீன் டீ சாறை முகத்தில் தடவி வந்தால் வறட்சியான முகமும் ஈரப்பதம் கொண்டு மென்மையாக மாறும். இது ஆய்வு ஒன்றிலும் நிரூபணம் ஆகியுள்ளது. அதோடு சருமத்தின் கடினமான தன்மையையும் இது போக்க செய்கிறது.
கூடுதலாக இவை முகத்தில் உண்டாகும் தோல் சிவப்பு, அழற்சி வீக்கம், எரிச்சல் போன்றவற்றையும் குறைக்க உதவுகிறது. கிரீன் டீயை சருமத்தில் பயன்படுத்துவதன் மூலம் முகத்தின் எரிச்சலும் தணிக்கப்படுகிறது.
கிரீன் டீசிறந்த நச்சுநீக்கி. இவை முகத்தில் தேங்கியிருக்கும் பழைய செல்களை அகற்றி சருமத்துக்கு உயிரூட்டம் தருகிறது. இறந்த செல்களை அகற்றி சருமத்தில் இருக்கும் எண்ணெய்பசை மாசுவையும் நீக்கி சருமத்தை சுத்தம் செய்கிறது. இதனால் சருமம் புதுப்பிக்கப்பட்டு முகம் பொலிவடைகிறது.
சர்க்கரையுடன் கிரீன் டீ, ஆலிவ் எண்ணெய் கலந்து ஸ்க்ரப் செய்வதன் மூலம் மிகச்சிறந்த முடிவை பெறக்கூடும். முகத்துக்கு மட்டுமல்ல உடலுக்கும் இப்படி ஸ்க்ரப் செய்வதன் மூலம் உடல் முழுக்க பொலிவு பெறமுடியும். குறைந்தது மாதம் இருமுறையாவது இப்படி செய்துவரலாம்.
கிரீன் டீயில் இருக்கும் ஆன் டி ஆக்ஸிடன்ர்கள் உடலை இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது இந்த பலனை முழுமையாக பெறுவதற்கு முகத்துக்கு செய்ய வேண்டிய பராமரிப்புகளை குறித்த நேரத்தில் செய்வதும் அவசியம்.
முகத்தில் நெற்றியில் சுருக்க கோடுகள், வயதான தோற்றத்துக்கான அறிகுறிகள் தெரியும் போதே கிரீன் டீபராமரிப்புக்கு மாறிவிட வேண்டும். முகத்தில் தேங்கியிருக்கும் பழைய செல்களும், தூசிகளும் தான் சருமத்தின் வயதை வேகமாக அதிகரிக்க வழி செய்யும். இந்த நேரத்தில் பராமரிப்பு இல்லாத போது இதனால் இளவயதிலேயே சருமத்தின் தோற்றம் வயதானது போல் மாறிவிடகூடும் வாய்ப்பும் உண்டு.
கிரீன் டீ பயன்படுத்தும் போது சருமத்தில் இருக்கும் தேவையற்ற ஆக்ஸிஜனேற்றிகளை அகற்ற உதவுவதோடு ஃப்ரீ ரேடிக்கல்ஸையும் எதிர்த்து போராடுகிறது. அப்போது இதில் இருக்கும் பாலிபினால்கள் வயதான அறிகுறியை தடுத்து நிறுத்தி சருமத்தை இளமையாக வைக்க உதவுகிறது. பழைய செல்களை நீக்கி செல்களை புதுப்பித்து நச்சை நீக்குவதால் முன்பை காட்டிலும் முகத்தில் இளமையும் ஆரோக்கியமும் அதிகரித்துவிடுகிறது.
கிரீன் டீயில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றிகள் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் ஆன் டி மைக்ரோபியல் பண்புகள் கொண்டிருப்பதால் இவை முகப்பருவுக்கு எண்ணெய் சருமத்துக்கும் நல்ல தீர்வாக இருக்கிறது.
கிரீன் டீயில் இருக்கும் பாலிபினால்கள் சருமத்துக்கு பயன்படுத்தும் போது, முகத்தில் வடியும் எண்ணெய் சுரப்பை குறைக்க உதவுவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
முகத்தில் சருமத்தில் உண்டாகும் பாக்டீரியா தொற்று முகப்பருக்களின் வளர்ச்சியை அதிகரித்துவிடக்கூடும். இந்த பாலிபினால்கள் இந்த பாக்டீரியாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்த உதவுகிறது. கிரீன் டீயில் இருக்கும் கேடசின்கள் பாக்டிரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பதோடு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை கட்டுப்படுத்தும் குணங்களையும் கொண்டிருக்கின்றன.
இயல்பாக கிரீன் டீ உடலில் இருக்கும் நச்சை நீக்குவது போன்றே சருமத்தில் இருக்கும் நச்சையும் நீக்கி வெளியேற்றுவதால் முகப்பரு மற்றும் பருக்களின் பிரச்சனையிலிருந்து எளிதாக நிவாரணம் பெற முடிகிறது. பருக்கள் இருக்கும் பகுதியில் கிரீன் டீபேக் கொண்டு நேரடியாக தடவி மசாஜ் போன்று செய்வதன் மூலம் பருக்கள் குறைகிறது.
சருமத்தை ஈரப்பதமாக்ககூடிய குணங்கள் கிரீன் டீயிலும் உண்டு. இதில் வைட்டமின் ஈ உள்ளது. இவை சருமத்தை வறட்சி இன்றி வைக்க உதவுகிறது. சருமத்தை மென்மையாக்க உதவுகிறது. தொடர்ந்து 15 நாட்கள் வரை கிரீன் டீ சாறை முகத்தில் தடவி வந்தால் வறட்சியான முகமும் ஈரப்பதம் கொண்டு மென்மையாக மாறும். இது ஆய்வு ஒன்றிலும் நிரூபணம் ஆகியுள்ளது. அதோடு சருமத்தின் கடினமான தன்மையையும் இது போக்க செய்கிறது.
கூடுதலாக இவை முகத்தில் உண்டாகும் தோல் சிவப்பு, அழற்சி வீக்கம், எரிச்சல் போன்றவற்றையும் குறைக்க உதவுகிறது. கிரீன் டீயை சருமத்தில் பயன்படுத்துவதன் மூலம் முகத்தின் எரிச்சலும் தணிக்கப்படுகிறது.
கிரீன் டீசிறந்த நச்சுநீக்கி. இவை முகத்தில் தேங்கியிருக்கும் பழைய செல்களை அகற்றி சருமத்துக்கு உயிரூட்டம் தருகிறது. இறந்த செல்களை அகற்றி சருமத்தில் இருக்கும் எண்ணெய்பசை மாசுவையும் நீக்கி சருமத்தை சுத்தம் செய்கிறது. இதனால் சருமம் புதுப்பிக்கப்பட்டு முகம் பொலிவடைகிறது.
சர்க்கரையுடன் கிரீன் டீ, ஆலிவ் எண்ணெய் கலந்து ஸ்க்ரப் செய்வதன் மூலம் மிகச்சிறந்த முடிவை பெறக்கூடும். முகத்துக்கு மட்டுமல்ல உடலுக்கும் இப்படி ஸ்க்ரப் செய்வதன் மூலம் உடல் முழுக்க பொலிவு பெறமுடியும். குறைந்தது மாதம் இருமுறையாவது இப்படி செய்துவரலாம்.
கிரீன் டீயில் இருக்கும் ஆன் டி ஆக்ஸிடன்ர்கள் உடலை இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது இந்த பலனை முழுமையாக பெறுவதற்கு முகத்துக்கு செய்ய வேண்டிய பராமரிப்புகளை குறித்த நேரத்தில் செய்வதும் அவசியம்.
முகத்தில் நெற்றியில் சுருக்க கோடுகள், வயதான தோற்றத்துக்கான அறிகுறிகள் தெரியும் போதே கிரீன் டீபராமரிப்புக்கு மாறிவிட வேண்டும். முகத்தில் தேங்கியிருக்கும் பழைய செல்களும், தூசிகளும் தான் சருமத்தின் வயதை வேகமாக அதிகரிக்க வழி செய்யும். இந்த நேரத்தில் பராமரிப்பு இல்லாத போது இதனால் இளவயதிலேயே சருமத்தின் தோற்றம் வயதானது போல் மாறிவிடகூடும் வாய்ப்பும் உண்டு.
கிரீன் டீ பயன்படுத்தும் போது சருமத்தில் இருக்கும் தேவையற்ற ஆக்ஸிஜனேற்றிகளை அகற்ற உதவுவதோடு ஃப்ரீ ரேடிக்கல்ஸையும் எதிர்த்து போராடுகிறது. அப்போது இதில் இருக்கும் பாலிபினால்கள் வயதான அறிகுறியை தடுத்து நிறுத்தி சருமத்தை இளமையாக வைக்க உதவுகிறது. பழைய செல்களை நீக்கி செல்களை புதுப்பித்து நச்சை நீக்குவதால் முன்பை காட்டிலும் முகத்தில் இளமையும் ஆரோக்கியமும் அதிகரித்துவிடுகிறது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு காலத்தில் பெரும்பாலானோரின் தூக்க சுழற்சி முறை மாறுபட்டிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு காலத்தில் பெரும்பாலானோரின் தூக்க சுழற்சி முறை மாறுபட்டிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. காலையில் எழுந்ததும் அவசரமாக கிளம்பி வேலைக்கு சென்று பழகி யவர்கள் வீட்டில் இருந்தே வேலை பார்க்க தொடங்கியதால் பெரும்பாலான வீடுகளில் காலைநேர பரபரப்பு அடங்கிப்போய்விட்டது. வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்க நேர்ந்ததால் காலையில் ஆசுவாசமாக எழும் பழக்கத்தை நிறைய பேர் பின்பற்றி இருக்கிறார்கள். வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்களில் சுமார் 67 சதவீதம் பேர் தூங்கி எழும் நேஇரத்தை மாற்றி அமைத்திருக்கிறார்கள்.
ஊரடங்கு தொடங்குவதற்கு முன்பு இரவு 10 மணிக்கு முன்பாகவே பெரும்பாலானோர் தூங்கி இருக்கிறார்கள். ஆனால் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு இரவு 11 மணியை கடந்த பிறகுதான் தூங்க சென்றிருக்கிறார்கள் என்பதை ஆய்வு முடிவு சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பான ஆய்வை பெங்களூருவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் மேற்கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் 1500 பேரை இந்த ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கிறார்கள். அவர்களில் 46 சதவீதம் பேர் ஊரடங்குக்கு முன்பு இரவு 11 மணிக்கு முன்பு தூங்க சென்றுவிடுவதாக தெரிவித்திருக்கிறார்கள். இப்போது 39 சதவீதம் பேர் மட்டுமே இரவு 11 மணிக்கு முன்பு தூங்க செல்வதாக தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும் 25 சதவீதம் பேர் சாதாரண நாட்களில் இரவு 12 மணிக்கு தூங்க செல்வதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்கள். ஆனால் ஊரடங்குக்கு பிறகு இரவு 12 மணிக்கு தூங்க செல்பவர்களின் எண்ணிக்கை 35 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. வழக்கமாக தூங்கி எழும் நேஇரத்தை விட ஓரிரு மணி நேரங்கள் காலதாமதமாக தூங்கி எழவும் செய்கிறார்கள். இரவில் தாமதமாக தூங்க சென்றுவிட்டு காலையில் தாமதமாக தூங்கி எழுந்தாலும் நிம்மதியாக தூங்க முடியவில்லை என்ற கவலையும் நிறைய பேரிடம் இருக்கிறது. தூக்கமின்மை பிரச்சினைக்கு ஆளாகி இரவில் வெகுநேரம் கண் விழித்திருப்பதாக கூறி இருக்கிறார்கள்.
கொரோனா வைரஸ் தங்கள் வாழ்க்கை சூழலையே புரட்டிப்போட்டு விட்டதாகவும் வேதனையுடன் கூறி இருக்கிறார்கள். பணி பாதுகாப்பு, நிதி பற்றாக்குறை, நண்பர்கள், உறவினர்களின் உடல்நலம் குறித்த கவலை போன்றவை இரவில் தூங்கமின்மைக்கான காரணமாக அமைந்திருப்பதாகவும் சொல்கிறார்கள். இந்த கவலை 49 சதவீதம் பேரை ஆட்கொண்டிருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் தங்களுடைய தூக்க சுழற்சி இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என்று 81 சதவீதம் பேர் நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார்கள்.
ஊரடங்கு தொடங்குவதற்கு முன்பு இரவு 10 மணிக்கு முன்பாகவே பெரும்பாலானோர் தூங்கி இருக்கிறார்கள். ஆனால் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு இரவு 11 மணியை கடந்த பிறகுதான் தூங்க சென்றிருக்கிறார்கள் என்பதை ஆய்வு முடிவு சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பான ஆய்வை பெங்களூருவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் மேற்கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் 1500 பேரை இந்த ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கிறார்கள். அவர்களில் 46 சதவீதம் பேர் ஊரடங்குக்கு முன்பு இரவு 11 மணிக்கு முன்பு தூங்க சென்றுவிடுவதாக தெரிவித்திருக்கிறார்கள். இப்போது 39 சதவீதம் பேர் மட்டுமே இரவு 11 மணிக்கு முன்பு தூங்க செல்வதாக தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும் 25 சதவீதம் பேர் சாதாரண நாட்களில் இரவு 12 மணிக்கு தூங்க செல்வதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்கள். ஆனால் ஊரடங்குக்கு பிறகு இரவு 12 மணிக்கு தூங்க செல்பவர்களின் எண்ணிக்கை 35 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. வழக்கமாக தூங்கி எழும் நேஇரத்தை விட ஓரிரு மணி நேரங்கள் காலதாமதமாக தூங்கி எழவும் செய்கிறார்கள். இரவில் தாமதமாக தூங்க சென்றுவிட்டு காலையில் தாமதமாக தூங்கி எழுந்தாலும் நிம்மதியாக தூங்க முடியவில்லை என்ற கவலையும் நிறைய பேரிடம் இருக்கிறது. தூக்கமின்மை பிரச்சினைக்கு ஆளாகி இரவில் வெகுநேரம் கண் விழித்திருப்பதாக கூறி இருக்கிறார்கள்.
கொரோனா வைரஸ் தங்கள் வாழ்க்கை சூழலையே புரட்டிப்போட்டு விட்டதாகவும் வேதனையுடன் கூறி இருக்கிறார்கள். பணி பாதுகாப்பு, நிதி பற்றாக்குறை, நண்பர்கள், உறவினர்களின் உடல்நலம் குறித்த கவலை போன்றவை இரவில் தூங்கமின்மைக்கான காரணமாக அமைந்திருப்பதாகவும் சொல்கிறார்கள். இந்த கவலை 49 சதவீதம் பேரை ஆட்கொண்டிருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் தங்களுடைய தூக்க சுழற்சி இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என்று 81 சதவீதம் பேர் நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார்கள்.
கொரோனா ஊரடங்கு மன அழுத்தம், உடற்பயிற்சியின்மை, நேரம் தவறிய கட்டுப்பாடற்ற உணவு முறைகளால் இளம் பெண்களிடம் மாதவிடாய்க் கோளாறுகள் மற்றும் சினைப்பை நோய் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக மகப்பேறு டாக்டர் சர்மிளா தெரிவித்தார்.
கொரோனா ஊரடங்கு பொருளாதாரத்தை மட்டுமல்ல, மக்களின் வாழ்வியலையும் புரட்டி போட்டுவிட் டது. வீட்டில் முடங்கியதால் பலரும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.
குறிப்பாக மன அழுத்தம், உடற்பயிற்சியின்மை, நேரம் தவறிய கட்டுப்பாடற்ற உணவு முறைகளால் இளம் பெண்களிடம் மாதவிடாய்க் கோளாறுகள் மற்றும் சினைப்பை நோய் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக திருச்சி மகப்பேறு நிபுணர் டாக்டர் சர்மிளா தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும் போது, பெண்களுக்கு ஏற்படும் சினைப்பை நோய் அறிகுறிகளுக்கு மனஅழுத்தம், சீரான உடற்பயிற்சியின்மை, சரியான நேரத்துக்கு உணவு எடுத்து கொள்ளாமல் இருப்பது, முறையற்ற தூக்கம் போன்றவை காரணிகளாக இருக்கின்றன.
எங்கள் ஆஸ்பத்திரிக்கு தற்போது அதிக இளம் பெண்கள் சினைப்பை வியாதிகளுக்காக வருகிறார்கள். அவர்கள் அதிக மனஅழுத்ததுக்கு ஆளாகி இருப்பது பரிசோதனையில் தெரிந்தது. இதில் சிலருக்கு உயர் ரத்த அழுத்தமும் இருந்தது.
ஏற்கனவே பெண்கள் சினைப்பை கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஊரடங்கு அவர்களுக்கு மேலும் அழுத்தத்தை கொடுத்துள்ளது. இது மாதவிடாய் கோளாறுகளை ஏற்படுத்தியுள்ளது. சிலருக்கு அதிக நாட்கள் உதிரபோக்கும் இருந்தது.
ஊரடங்கு காலத்தில் வேலைக்கு சென்ற பெண்கள் வீட்டில் அதிக நேரம் உழைக்க வேண்டி இருந்தது. அதுமட்டுமல்லாமல் வெளியிடங்களில் வசிக்கும் தங்களின் பெற்றோர்கள் பற்றி கவலைப்பட்டுள்ளனர்.இது போன்ற பல்வேறு மனரீதியான பிரச்சினைகளால் சினைப்பை நோய் அறிகுறிகள் ஏற்படுகிறது என்றார்.
இன்னொரு டாக்டர் கூறும்போது, ஊரடங்கில் வீட்டில் இருந்ததால் பெண்களின் உடல் எடையும் அதிகரித்துள்ளது. முழு நேரமும் சமையலறையில் கிடந்ததால் தேவைக்கு அதிகமான உண வுகளை சாப்பிட்டு இருக்கிறார்கள். இதுவே உடல் எடை அதிகரிப்புக்கு காரணமாகியுள்ளது என்று தெரிவித்தார்.
குறிப்பாக மன அழுத்தம், உடற்பயிற்சியின்மை, நேரம் தவறிய கட்டுப்பாடற்ற உணவு முறைகளால் இளம் பெண்களிடம் மாதவிடாய்க் கோளாறுகள் மற்றும் சினைப்பை நோய் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக திருச்சி மகப்பேறு நிபுணர் டாக்டர் சர்மிளா தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும் போது, பெண்களுக்கு ஏற்படும் சினைப்பை நோய் அறிகுறிகளுக்கு மனஅழுத்தம், சீரான உடற்பயிற்சியின்மை, சரியான நேரத்துக்கு உணவு எடுத்து கொள்ளாமல் இருப்பது, முறையற்ற தூக்கம் போன்றவை காரணிகளாக இருக்கின்றன.
எங்கள் ஆஸ்பத்திரிக்கு தற்போது அதிக இளம் பெண்கள் சினைப்பை வியாதிகளுக்காக வருகிறார்கள். அவர்கள் அதிக மனஅழுத்ததுக்கு ஆளாகி இருப்பது பரிசோதனையில் தெரிந்தது. இதில் சிலருக்கு உயர் ரத்த அழுத்தமும் இருந்தது.
ஏற்கனவே பெண்கள் சினைப்பை கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஊரடங்கு அவர்களுக்கு மேலும் அழுத்தத்தை கொடுத்துள்ளது. இது மாதவிடாய் கோளாறுகளை ஏற்படுத்தியுள்ளது. சிலருக்கு அதிக நாட்கள் உதிரபோக்கும் இருந்தது.
ஊரடங்கு காலத்தில் வேலைக்கு சென்ற பெண்கள் வீட்டில் அதிக நேரம் உழைக்க வேண்டி இருந்தது. அதுமட்டுமல்லாமல் வெளியிடங்களில் வசிக்கும் தங்களின் பெற்றோர்கள் பற்றி கவலைப்பட்டுள்ளனர்.இது போன்ற பல்வேறு மனரீதியான பிரச்சினைகளால் சினைப்பை நோய் அறிகுறிகள் ஏற்படுகிறது என்றார்.
இன்னொரு டாக்டர் கூறும்போது, ஊரடங்கில் வீட்டில் இருந்ததால் பெண்களின் உடல் எடையும் அதிகரித்துள்ளது. முழு நேரமும் சமையலறையில் கிடந்ததால் தேவைக்கு அதிகமான உண வுகளை சாப்பிட்டு இருக்கிறார்கள். இதுவே உடல் எடை அதிகரிப்புக்கு காரணமாகியுள்ளது என்று தெரிவித்தார்.
வேப்பிலையானது அதிக அளவில் கசக்கும் தன்மை கொண்டதாக உள்ளது, இந்த வேப்பிலையை ஹேர்பேக்காக நாம் தலைமுடியில் அப்ளை செய்யும் பட்சத்தில் தலையில் உள்ள பொடுகு, அழுக்கு என அனைத்தையும் நீக்கி தலைமுடி உதிர்வைக் கட்டுக்குள் கொண்டுவரும்.
வேப்பிலையானது அதிக அளவில் கசக்கும் தன்மை கொண்டதாக உள்ளது, இந்த வேப்பிலையை ஹேர்பேக்காக நாம் தலைமுடியில் அப்ளை செய்யும் பட்சத்தில் தலையில் உள்ள பொடுகு, அழுக்கு என அனைத்தையும் நீக்கி தலைமுடி உதிர்வைக் கட்டுக்குள் கொண்டுவரும். வேப்பிலைகளை கொதிக்கும் நீரில் போட்டு அது ஆறியதும், அதனை கொண்டு தலைமுடியை அலசவும். இதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பு சக்தி கூந்தலில் உள்ள பேன்கள், பொடுகு, உச்சந்தலை காய்ந்து போதல், முடியுதிர்தல் மற்றும் வறண்ட கூந்தல் ஆகிய பிரச்சினைகள் குணமாகும். அது உங்களது கூந்தலை மென்மையாக்கி பளபளப்பாக்கும்.
தேவையானவை
வேப்பிலை - கைப்பிடியளவு
தேங்காய் எண்ணெய் – 30 மில்லி
விளக்கெண்ணெய் – 20 மில்லி
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
செய்முறை:
தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெயினை நன்கு சூடாக்கிக் கொள்ளவும். அடுத்து இந்த எண்ணெயில் வேப்பிலையைப் போட்டு 24 மணி நேரம் ஊறவிடவும். அடுத்து அதனுடன் எலுமிச்சை சாறினை சேர்த்துப் பயன்படுத்தவும். இந்த எண்ணெயினை வாரத்தில் 2 முறை என்ற அளவில் அப்ளை செய்து, சீயக்காய் கொண்டு முடியினை அலசிவிடவும், அவ்வாறு செய்து வந்தால், முடி கொட்டும் பிரச்சினை காணாமல் போய்விடும்.
* வேப்பிலையை நன்கு பேஸ்ட் போல் அரைத்து, அதில் சிறிது தேன் கலந்து, தலைக்கு தடவி, ஷாம்பு போட்டு குளித்தால், பொடுகு நீங்கி, கூந்தல் பட்டுப் போன்று மின்னும். இந்த முறை ஹேர் கண்டிஷனர் போன்றது.
தேவையானவை
வேப்பிலை - கைப்பிடியளவு
தேங்காய் எண்ணெய் – 30 மில்லி
விளக்கெண்ணெய் – 20 மில்லி
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
செய்முறை:
தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெயினை நன்கு சூடாக்கிக் கொள்ளவும். அடுத்து இந்த எண்ணெயில் வேப்பிலையைப் போட்டு 24 மணி நேரம் ஊறவிடவும். அடுத்து அதனுடன் எலுமிச்சை சாறினை சேர்த்துப் பயன்படுத்தவும். இந்த எண்ணெயினை வாரத்தில் 2 முறை என்ற அளவில் அப்ளை செய்து, சீயக்காய் கொண்டு முடியினை அலசிவிடவும், அவ்வாறு செய்து வந்தால், முடி கொட்டும் பிரச்சினை காணாமல் போய்விடும்.
* வேப்பிலையை நன்கு பேஸ்ட் போல் அரைத்து, அதில் சிறிது தேன் கலந்து, தலைக்கு தடவி, ஷாம்பு போட்டு குளித்தால், பொடுகு நீங்கி, கூந்தல் பட்டுப் போன்று மின்னும். இந்த முறை ஹேர் கண்டிஷனர் போன்றது.
பேரிச்சம் பழம் பெண்களுக்கு ஏற்படும் எலும்புறுக்கி நோயைக் குணப்படுத்தும். வயதானவர்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் வலியைக் குறைக்க உதவுகிறது.
தேவையான பொருட்கள்
பாதாம் பருப்பு - 10
பேரீச்சம் பழம் - 5
பசும் பால் - 1 கப்
தேங்காய்ப் பால் - கால் கப்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
ஏலக்காய் - 1/8 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை
பாதாம் பருப்பு மற்றும் பேரிச்சம் பழத்தினை முதல் நாள் இரவே ஊறவைத்து கொள்ளவும்.
பசும் பாலை நன்றாக காய்ச்சி வைக்கவும்.
அடுத்த நாள் காலை மிக்ஸியில் பாதாம் பருப்பு, பேரிச்சம்பழம், மஞ்சள் தூள், ஏலக்காய் தூள், நெய், சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அடுத்து தேங்காய்ப் பாலுடன் பசும் பாலினைக் கலந்து இதனை அரைத்து வைத்த பேஸ்ட்டுடன் கலக்கவும்.
அடுத்து அதில் நாட்டுச் சர்க்கரை சேர்த்து பிரிட்ஜில் வைத்துக் குடிக்கவும்.
பாதாம் பருப்பு - 10
பேரீச்சம் பழம் - 5
பசும் பால் - 1 கப்
தேங்காய்ப் பால் - கால் கப்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
ஏலக்காய் - 1/8 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
நாட்டுச் சர்க்கரை - 1 டீஸ்பூன்

செய்முறை
பாதாம் பருப்பு மற்றும் பேரிச்சம் பழத்தினை முதல் நாள் இரவே ஊறவைத்து கொள்ளவும்.
பசும் பாலை நன்றாக காய்ச்சி வைக்கவும்.
அடுத்த நாள் காலை மிக்ஸியில் பாதாம் பருப்பு, பேரிச்சம்பழம், மஞ்சள் தூள், ஏலக்காய் தூள், நெய், சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அடுத்து தேங்காய்ப் பாலுடன் பசும் பாலினைக் கலந்து இதனை அரைத்து வைத்த பேஸ்ட்டுடன் கலக்கவும்.
அடுத்து அதில் நாட்டுச் சர்க்கரை சேர்த்து பிரிட்ஜில் வைத்துக் குடிக்கவும்.
சூப்பரான சத்தான பேரிச்சம்பழ பானம் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
காதல் என்ற கூர்மையான கத்தியை வைத்து வாழ்க்கையை காப்பாற்றிக்கொண்டவர்களும் இருக்கிறார்கள். (மன) காயம்பட்டு துடிப்பவர்களும் இருக்கிறார்கள்.
காதல் வலையில் விழுந்த சில பெண்களுக்கு கிடைத்த அனுபவங்கள் சற்று கசப்பாகத்தான் இருக்கின்றன. அதனால், காதல் அனுபவங்களை பெற்ற பெண்கள் ‘அது இருபுறமும் கூர்மையான கத்தி போன்றது. அஜாக்கிரதையாக கையாண்டால் அது நம்மை குத்திக்கிழித்து, நமது வாழ்க்கையை காவு வாங்கிவிடும்’ என்கிறார்கள். காதல் என்ற கூர்மையான கத்தியை வைத்து வாழ்க்கையை காப்பாற்றிக்கொண்டவர்களும் இருக்கிறார்கள். (மன) காயம்பட்டு துடிப்பவர்களும் இருக்கிறார்கள்.
இதில் பெரிய சோகம் என்னவென்றால், சில பெண்களுக்கு காதலில் பாதி கிணறு தாண்டும்போது தங்கள் காதலன் மோசமானவன் என்பது தெரிந்துவிடுகிறது. ஆனாலும் அவர்கள் பின்வாங்குவதில்லை. உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ‘அவனை திருமணம் செய்துகொண்டு திருத்தி, வாழ்ந்து காட்டுகிறேன் பாருங்கள்’ என்று சவால்விட்டுக்கொண்டு செயலில் இறங்கி விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வாழ்க்கை இருண்டுபோகிறது.
காதல் ஜோடியாகும் இருவரிடமும் உண்மை தேவை. ஒருவர் உண்மையாக நடந்துகொள்ள, இன்னொருவர் அதை பலவீனமாக நினைத்து ஏமாற்ற முற்படும்போது உண்மையானவர் சுதாரித்துக்கொண்டு விலகிட வேண்டும். காதல் சக்தி மிகுந்தது. நல்லவர்களுக்கு அது சுகமானது. பொழுதுபோக்கும் எண்ணம் கொண்டவர்களுக்கு அது சோகமானது. காதல் உணர்வுரீதியானது. அதனால், உண்மையில்லாத காதலரை மறப்பது கஷ்டம்தான். அதற்காக ஏற்கக்கூடாத காதலை ஏற்று, வாழ்க்கையை ஏமாற்றிக்கொள்ளக்கூடாது. கவிஞர்கள் காதலைப் பற்றி ஏராளமான கற்பனைகளை வடித்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அவை எல்லாம் நிஜவாழ்க்கையோடு ஒத்துப்போகாது. காதல் கற்பனையில் இனிக்கும். நிஜத்தில்தான் கசக்கும்.
பெண்களிடம் தவறான எண்ணத்தோடு பழகும் ஆண்கள்கூட அந்த நெருக்கத்திற்கு காதல் என்று பெயர் சூட்டிக்கொள்கிறார்கள். பெண்களின் பலவீனத்தை புரிந்துகொண்டு காதல் என்ற பெயரில் ஏமாற்ற நினைக்கும் ஆண்களை, பெண்கள் புரிந்துகொண்டு விலகவேண்டும். அதுதான் அவர்களுக்கு பாதுகாப்பு.
இன்றைய இளையதலைமுறையினர் தகவல்தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி காதல் தூதுவிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அதனால் தடம் மாறிய காதல் சகஜமாகிவிட்டது. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் விழித்துக்கொள்ளும்போது நடந்ததை ஒரு கெட்ட கனவாக நினைத்து பழைய விஷயங்களை மறந்துவிட வேண்டியதுதான். அதையே நினைத்து அழுதுகொண்டிருக்கக்கூடாது. அந்த தவறை மீண்டும் செய்யவும்கூடாது.
அதே நேரத்தில் பணத்திற்காக காதல் வலைவீசும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் வலைத்தளங்களின் வழியாக வசதியான ஆண்களை காதலிப்பதுபோல் நடித்து, வசமாக சிக்கவைத்து பணம் பறிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களிடம் மிக கவனமாக பழகவேண்டும். காதல் புனிதமானதுதான். காதலிப்பவர்களும் புனிதமானவர்களாக இருந்தால்தான் அந்த புனிதத்தை காப்பாற்ற முடியும்.
ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கும்போது அது ஒரு கூட்டு முயற்சியாக அமைகிறது. பல்வேறு விதமாக அந்த ஜோடியை பற்றி ஆராய்கிறார்கள். அதனால் நல்லதும், கெட்டதும் அதில் அலசப்படுகிறது.
ஆனால் காதல் இருவேறு மனிதர்களின் தனிப்பட்ட முயற்சியாகத்தான் இருக்கிறது. அவர்களுக்குள்ளே ரகசியமாகவே அது நடந்தேறுகிறது. அப்போது அவர்களுக்குள் இருக்கும் குறைகள் அனைத்தையும் மூடிமறைக்கிறார்கள்.
குறைகளை கண்டறிந்து விலக்கி, அதில் தெளிவான நிலைக்கு வராமல், ‘காதலுக்கு கண்இல்லை’ என்றுகூறி எல்லா குறைகளையும் தங்களுக்குள் அங்கீகரிக்கிறார்கள். அந்த தவறால்தான் பெரும்பாலான காதலர்கள் காதலில் தோல்வியடைகிறார்கள். காதலுக்கும் கண் இருக்கிறது என்பதை உணர்த்த அறிவுபூர்வமாக காதலிக்கவேண்டும்.
இதில் பெரிய சோகம் என்னவென்றால், சில பெண்களுக்கு காதலில் பாதி கிணறு தாண்டும்போது தங்கள் காதலன் மோசமானவன் என்பது தெரிந்துவிடுகிறது. ஆனாலும் அவர்கள் பின்வாங்குவதில்லை. உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ‘அவனை திருமணம் செய்துகொண்டு திருத்தி, வாழ்ந்து காட்டுகிறேன் பாருங்கள்’ என்று சவால்விட்டுக்கொண்டு செயலில் இறங்கி விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வாழ்க்கை இருண்டுபோகிறது.
காதல் ஜோடியாகும் இருவரிடமும் உண்மை தேவை. ஒருவர் உண்மையாக நடந்துகொள்ள, இன்னொருவர் அதை பலவீனமாக நினைத்து ஏமாற்ற முற்படும்போது உண்மையானவர் சுதாரித்துக்கொண்டு விலகிட வேண்டும். காதல் சக்தி மிகுந்தது. நல்லவர்களுக்கு அது சுகமானது. பொழுதுபோக்கும் எண்ணம் கொண்டவர்களுக்கு அது சோகமானது. காதல் உணர்வுரீதியானது. அதனால், உண்மையில்லாத காதலரை மறப்பது கஷ்டம்தான். அதற்காக ஏற்கக்கூடாத காதலை ஏற்று, வாழ்க்கையை ஏமாற்றிக்கொள்ளக்கூடாது. கவிஞர்கள் காதலைப் பற்றி ஏராளமான கற்பனைகளை வடித்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அவை எல்லாம் நிஜவாழ்க்கையோடு ஒத்துப்போகாது. காதல் கற்பனையில் இனிக்கும். நிஜத்தில்தான் கசக்கும்.
பெண்களிடம் தவறான எண்ணத்தோடு பழகும் ஆண்கள்கூட அந்த நெருக்கத்திற்கு காதல் என்று பெயர் சூட்டிக்கொள்கிறார்கள். பெண்களின் பலவீனத்தை புரிந்துகொண்டு காதல் என்ற பெயரில் ஏமாற்ற நினைக்கும் ஆண்களை, பெண்கள் புரிந்துகொண்டு விலகவேண்டும். அதுதான் அவர்களுக்கு பாதுகாப்பு.
இன்றைய இளையதலைமுறையினர் தகவல்தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி காதல் தூதுவிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அதனால் தடம் மாறிய காதல் சகஜமாகிவிட்டது. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் விழித்துக்கொள்ளும்போது நடந்ததை ஒரு கெட்ட கனவாக நினைத்து பழைய விஷயங்களை மறந்துவிட வேண்டியதுதான். அதையே நினைத்து அழுதுகொண்டிருக்கக்கூடாது. அந்த தவறை மீண்டும் செய்யவும்கூடாது.
அதே நேரத்தில் பணத்திற்காக காதல் வலைவீசும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் வலைத்தளங்களின் வழியாக வசதியான ஆண்களை காதலிப்பதுபோல் நடித்து, வசமாக சிக்கவைத்து பணம் பறிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களிடம் மிக கவனமாக பழகவேண்டும். காதல் புனிதமானதுதான். காதலிப்பவர்களும் புனிதமானவர்களாக இருந்தால்தான் அந்த புனிதத்தை காப்பாற்ற முடியும்.
ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கும்போது அது ஒரு கூட்டு முயற்சியாக அமைகிறது. பல்வேறு விதமாக அந்த ஜோடியை பற்றி ஆராய்கிறார்கள். அதனால் நல்லதும், கெட்டதும் அதில் அலசப்படுகிறது.
ஆனால் காதல் இருவேறு மனிதர்களின் தனிப்பட்ட முயற்சியாகத்தான் இருக்கிறது. அவர்களுக்குள்ளே ரகசியமாகவே அது நடந்தேறுகிறது. அப்போது அவர்களுக்குள் இருக்கும் குறைகள் அனைத்தையும் மூடிமறைக்கிறார்கள்.
குறைகளை கண்டறிந்து விலக்கி, அதில் தெளிவான நிலைக்கு வராமல், ‘காதலுக்கு கண்இல்லை’ என்றுகூறி எல்லா குறைகளையும் தங்களுக்குள் அங்கீகரிக்கிறார்கள். அந்த தவறால்தான் பெரும்பாலான காதலர்கள் காதலில் தோல்வியடைகிறார்கள். காதலுக்கும் கண் இருக்கிறது என்பதை உணர்த்த அறிவுபூர்வமாக காதலிக்கவேண்டும்.
கொரோனா வைரஸ் நோய் அறிகுறிகள் குழந்தைகளின் இதயத்தை கடுமையாக பாதிப்படையச் செய்யும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் குழந்தைகளையும் பாதித்து வருகிறது. பெரும்பாலான குழந்தைகள் அறிகுறி இல்லாமலேயே அந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொடக்கத்தில் குழந்தைகளுக்கு எளிதில் கொரோனா தொற்று பரவாது என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் பின்னர் நடந்த ஆய்வில் குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ், அறிகுறிகளை காட்டாமலேயே பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் கொரோனா வைரஸ் பரவலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்தநிலையில் கொரோனா வைரஸ் நோய் அறிகுறிகள் குழந்தைகளின் இதயத்தை கடுமையாக பாதிப்படையச்செய்யும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இ கிளினிக்கல் மெடிசன் இதழில் வெளியிடப்பட்ட அந்த ஆய்வில் கூறியிருப்பதாவது:-
குழந்தைகளின் அழற்சி நோய் அறிகுறிகள் கொரோனா வைரசுடன் இணைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. இதனால் அவர்களது இதயம் கடுமையாக பாதிக்கப்படலாம். இதன்மூலம் சில குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் கண்காணிப்பு தேவைப்படக்கூடிய அளவுக்கு அவர்களின் இதயத்தை சேதப்படுத்தும் நிலை உள்ளது.
600-க்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் அழற்சி நோய் அறிகுறிகள் குறித்து ஆய்வு செய்த போது ஆரோக்கியமாக உள்ள குழந்தைகள் அறிகுறி இல்லாமல் 3 அல்லது 4 வாரங்களுக்கு பிறகு அவர்களை வைரஸ் தொற்று தாக்குகிறது என்பது தெரிய வந்தது. இதுகுறித்து நிபுணர்கள் கூறும்போது, ‘குழந்தைகளுக்கு வைரசின் அறிகுறிகள் எதுவும் இல்லாமல் இருக்கலாம்.
அவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். சில வாரங்கள் கழித்து குழந்தைகள் உடலில் அழற்சி, வீக்கம் ஆகியவை ஏற்படுத்தலாம். அதன்பின் தான் அவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியவரும்’ என்றனர்.
விஞ்ஞானிகள் உலகம் முழுவதும் 662 அழற்சி நோய் அறிகுறியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற குழந்தைகளை ஆய்வு செய்தபோது அவர்களில் 71 சதவீதம் பேர் தீவிரசிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். 60 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மோசமாக பாதிக்கப்பட்டு 8 நாட்கள் வரை ஆஸ்பத்திரியில் இருந்துள்ளனர்.
662 குழந்தைகளுக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 73.7 சதவீத குழந்தைகளுக்கு வயிற்றுவலி அல்லது வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. 68.3 சதவீதம் குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டது. 90 சதவீத குழந்தைகளுக்கு இதயத்தை ஸ்கேன் செய்து பார்த்த போது அதில் 54 சதவீதம் பேருக்கு முடிவுகள் அசாதாரனமாக இருந்தது.
5-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வென்டிலேட்டர் உதவி தேவைப்பட்டது . 11 குழந்தைகள் இறந்தன.
இதுகுறித்து அமெரிக்காவின் தான் ஆன்டினோவில் உள்ள சுகாதார மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் அல்வரு, மோரேரா கூறியதாவது:-
தற்போது ஒரு புதிய குழந்தைப்பருவ நோய் உருவாகி இருக்கிறது. இது கொரோனா வைரசுடன் தொடர்புடையது. இது பல உறுப்புகளை பாதிக்கும் என்பதால் மிகவும் ஆபத்தானது.
இதயம் மற்றும் நுரையீரல், இறைப்பை குடல் அமைப்பு அல்லது நரம்பியல் மண்டலம் என எதுவாக இருந்தாலும் அந்த நோய் அறிகுறிகள் பலவிதமான பரிமாற்றங்களை கொண்டிருக்கிறது.
ஆரம்பத்தில் இது மருத்துவர்களுக்கு புரிந்து கொள்வதில் சவாலாக இருந்தது.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
இதனால் கொரோனா வைரஸ் பரவலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்தநிலையில் கொரோனா வைரஸ் நோய் அறிகுறிகள் குழந்தைகளின் இதயத்தை கடுமையாக பாதிப்படையச்செய்யும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இ கிளினிக்கல் மெடிசன் இதழில் வெளியிடப்பட்ட அந்த ஆய்வில் கூறியிருப்பதாவது:-
குழந்தைகளின் அழற்சி நோய் அறிகுறிகள் கொரோனா வைரசுடன் இணைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. இதனால் அவர்களது இதயம் கடுமையாக பாதிக்கப்படலாம். இதன்மூலம் சில குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் கண்காணிப்பு தேவைப்படக்கூடிய அளவுக்கு அவர்களின் இதயத்தை சேதப்படுத்தும் நிலை உள்ளது.
600-க்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் அழற்சி நோய் அறிகுறிகள் குறித்து ஆய்வு செய்த போது ஆரோக்கியமாக உள்ள குழந்தைகள் அறிகுறி இல்லாமல் 3 அல்லது 4 வாரங்களுக்கு பிறகு அவர்களை வைரஸ் தொற்று தாக்குகிறது என்பது தெரிய வந்தது. இதுகுறித்து நிபுணர்கள் கூறும்போது, ‘குழந்தைகளுக்கு வைரசின் அறிகுறிகள் எதுவும் இல்லாமல் இருக்கலாம்.
அவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். சில வாரங்கள் கழித்து குழந்தைகள் உடலில் அழற்சி, வீக்கம் ஆகியவை ஏற்படுத்தலாம். அதன்பின் தான் அவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியவரும்’ என்றனர்.
விஞ்ஞானிகள் உலகம் முழுவதும் 662 அழற்சி நோய் அறிகுறியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற குழந்தைகளை ஆய்வு செய்தபோது அவர்களில் 71 சதவீதம் பேர் தீவிரசிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். 60 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மோசமாக பாதிக்கப்பட்டு 8 நாட்கள் வரை ஆஸ்பத்திரியில் இருந்துள்ளனர்.
662 குழந்தைகளுக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 73.7 சதவீத குழந்தைகளுக்கு வயிற்றுவலி அல்லது வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. 68.3 சதவீதம் குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டது. 90 சதவீத குழந்தைகளுக்கு இதயத்தை ஸ்கேன் செய்து பார்த்த போது அதில் 54 சதவீதம் பேருக்கு முடிவுகள் அசாதாரனமாக இருந்தது.
5-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வென்டிலேட்டர் உதவி தேவைப்பட்டது . 11 குழந்தைகள் இறந்தன.
இதுகுறித்து அமெரிக்காவின் தான் ஆன்டினோவில் உள்ள சுகாதார மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் அல்வரு, மோரேரா கூறியதாவது:-
தற்போது ஒரு புதிய குழந்தைப்பருவ நோய் உருவாகி இருக்கிறது. இது கொரோனா வைரசுடன் தொடர்புடையது. இது பல உறுப்புகளை பாதிக்கும் என்பதால் மிகவும் ஆபத்தானது.
இதயம் மற்றும் நுரையீரல், இறைப்பை குடல் அமைப்பு அல்லது நரம்பியல் மண்டலம் என எதுவாக இருந்தாலும் அந்த நோய் அறிகுறிகள் பலவிதமான பரிமாற்றங்களை கொண்டிருக்கிறது.
ஆரம்பத்தில் இது மருத்துவர்களுக்கு புரிந்து கொள்வதில் சவாலாக இருந்தது.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது பெரும் வலியை தரக்கூடிய உடல்நலப் பிரச்சினைகளில் ஒன்று. மிகச் சிறிய படிவங்கள் தேங்கி, கற்களாக உருவாகி சிறுநீரகத்தில் தங்கிவிடுகின்றன.
சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது பெரும் வலியை தரக்கூடிய உடல்நலப் பிரச்சினைகளில் ஒன்று. மிகச் சிறிய படிவங்கள் தேங்கி, கற்களாக உருவாகி சிறுநீரகத்தில் தங்கிவிடுகின்றன. இது வலியை ஏற்படுத்தாதவரை யாரும் இதை கண்டுபிடிப்பது இல்லை. சிறுநீரகத்தில் கல் இருந்து, அது சிறுநீர்ப்பாதை வழியாக நகர்ந்து வெளியேறும்போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது. இது சிறுநீர் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும்போதுதான் வலி கடுமையாகும். பெரும்பாலும் சிறிய கற்கள் சிறுநீரில் வெளியேறிவிடும். அது வலி, எரிச்சலை தருவதில்லை என்பதால் யாரும் இதை உணர்வதே இல்லை. சிறுநீரில் வெளியேற முடியாத பெரிய கற்கள்தான் வலியை ஏற்படுத்துகின்றன.
பொதுவாகவே சிறுநீரக கல் உருவாகும் நபருக்கு ஆரம்ப நாளில் எரிச்சல் ஏற்படும். இதுதான் தொடக்கக்கால அறிகுறி. இந்த நேரத்தில் சிறுநீரின் நிறமும் மாறும். அடிக்கடி காய்ச்சல், குளிர் காய்ச்சல் வரலாம். அத்துடன் உணவு செரிக்கும்போது அதிகப்படியான எரிச்சல் ஏற்படுகிறதா என்று கவனிக்க வேண்டும். இந்த நேரத்தில் வெளியேறும் சிறுநீரின் நெடி, ஆட்டு சிறுநீர் போலக் கெட்ட நெடி வீசும். இவையெல்லாம் சிறுநீரகத்தில் கல் இருப்பதற்கான ஆரம்ப அறிகுறிகள். இந்த அறிகுறிகளை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்துவிட்டால், சிகிச்சை எளிதாகும். நோய் தீவிரமடைவதைத் தடுக்க முடியும்.
இயற்கையில் காற்று, வெப்பச் சூழலில் மழைநீர் பட்டு நாளடைவில் பாறையாக மாறுவதைப் போல, நமது உடலில் உள்ள தோஷங்களில் ஒன்றான கபம் காரணமாகக் கற்கள் உருவாகின்றன. உடலில் பித்தம் காரணமாகச் சூடு ஏற்படுகிறது. வாதம் காற்றைப் போன்றது. சிறுநீர்த் தொற்றுக்கு ஆளானவர்கள் உணவுப் பழக்கத்திலும் குறிப்பாகத் திரவ உணவிலும் கவனம் செலுத்த வேண்டும். இவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு சிறுநீரகக் கல் உருவாவதற்கான வாய்ப்பு மிக அதிகம். உடலில் உள்ள தோஷங்கள் பாதிக்கப்படும்போது சிறுநீரகத்தில் கல் உருவாகிறது.
பொதுவாக அதிக மசாலா சேர்த்த உணவு, புளிப்பு சுவை, செரிமானத்துக்குச் சிரமப்படும் அளவுக்குச் சாப்பிடுவது, இறைச்சி, முட்டை சார்ந்த பொருட்களை அதிகம் சாப்பிடுவது, குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது ஆகியவை சிறுநீரக கல் தோன்றுவதற்கு முக்கியக் காரணங்கள்.
பித்த உடல் வாகு உள்ளவர்களுக்கு சிறுநீரக கல் உருவாவதற்கு அதிக வாய்ப்புள்ளது. சிறுநீரக கல் உருவாகி பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் பித்த உடல் வாகு கொண்டவர்களாக உள்ளனர். அதிகமாக வியர்வை வெளியேறுபவர்களுக்கும் இந்தப் பாதிப்பு ஏற்படலாம். அதிகப்படியான நேரம் மின்னணு பொருட்கள் மத்தியில் பணிபுரிவது மற்றும் அதிக வெப்பம் வெளியிடப்படும் பகுதியில் நீண்ட நேரம் பணிபுரிவது, குளிரூட்டப்பட்ட அறையில் அதிக நேரம் பணிபுரிவது போன்றவையும் சிறுநீரகக் கல் உருவாக வழிவகுக்கும்.
பொதுவாகவே சிறுநீரக கல் உருவாகும் நபருக்கு ஆரம்ப நாளில் எரிச்சல் ஏற்படும். இதுதான் தொடக்கக்கால அறிகுறி. இந்த நேரத்தில் சிறுநீரின் நிறமும் மாறும். அடிக்கடி காய்ச்சல், குளிர் காய்ச்சல் வரலாம். அத்துடன் உணவு செரிக்கும்போது அதிகப்படியான எரிச்சல் ஏற்படுகிறதா என்று கவனிக்க வேண்டும். இந்த நேரத்தில் வெளியேறும் சிறுநீரின் நெடி, ஆட்டு சிறுநீர் போலக் கெட்ட நெடி வீசும். இவையெல்லாம் சிறுநீரகத்தில் கல் இருப்பதற்கான ஆரம்ப அறிகுறிகள். இந்த அறிகுறிகளை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்துவிட்டால், சிகிச்சை எளிதாகும். நோய் தீவிரமடைவதைத் தடுக்க முடியும்.
இயற்கையில் காற்று, வெப்பச் சூழலில் மழைநீர் பட்டு நாளடைவில் பாறையாக மாறுவதைப் போல, நமது உடலில் உள்ள தோஷங்களில் ஒன்றான கபம் காரணமாகக் கற்கள் உருவாகின்றன. உடலில் பித்தம் காரணமாகச் சூடு ஏற்படுகிறது. வாதம் காற்றைப் போன்றது. சிறுநீர்த் தொற்றுக்கு ஆளானவர்கள் உணவுப் பழக்கத்திலும் குறிப்பாகத் திரவ உணவிலும் கவனம் செலுத்த வேண்டும். இவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு சிறுநீரகக் கல் உருவாவதற்கான வாய்ப்பு மிக அதிகம். உடலில் உள்ள தோஷங்கள் பாதிக்கப்படும்போது சிறுநீரகத்தில் கல் உருவாகிறது.
பொதுவாக அதிக மசாலா சேர்த்த உணவு, புளிப்பு சுவை, செரிமானத்துக்குச் சிரமப்படும் அளவுக்குச் சாப்பிடுவது, இறைச்சி, முட்டை சார்ந்த பொருட்களை அதிகம் சாப்பிடுவது, குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது ஆகியவை சிறுநீரக கல் தோன்றுவதற்கு முக்கியக் காரணங்கள்.
பித்த உடல் வாகு உள்ளவர்களுக்கு சிறுநீரக கல் உருவாவதற்கு அதிக வாய்ப்புள்ளது. சிறுநீரக கல் உருவாகி பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் பித்த உடல் வாகு கொண்டவர்களாக உள்ளனர். அதிகமாக வியர்வை வெளியேறுபவர்களுக்கும் இந்தப் பாதிப்பு ஏற்படலாம். அதிகப்படியான நேரம் மின்னணு பொருட்கள் மத்தியில் பணிபுரிவது மற்றும் அதிக வெப்பம் வெளியிடப்படும் பகுதியில் நீண்ட நேரம் பணிபுரிவது, குளிரூட்டப்பட்ட அறையில் அதிக நேரம் பணிபுரிவது போன்றவையும் சிறுநீரகக் கல் உருவாக வழிவகுக்கும்.
கொரோனா வைரஸ் பற்றிய தகவல்கள் பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் சூடான விவாத தலைப்பாக மாறி விட்டது.
கொரோனா வைரஸ் பற்றிய தகவல்கள் பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் சூடான விவாத தலைப்பாக மாறி விட்டது. பெரும்பாலான குழந்தைகள் மனதில், உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் கொடிய வைரஸாக கொரோனா பதிந்துபோய்விட்டது. குழந்தைகள் வெளியே சென்று விளையாடக்கூடாது என்ற எண்ணத்தில் கொரோனா பற்றிய தவறான அபிப்பிராயமும் அவர்களிடத்தில் விதைக்கப்பட்டிருக்கிறது. அவர்களை பயமுறுத்துவதற்கு பதிலாக சரியான தகவல்களை அளித்து தைரியமூட்டுவது இன்றியமையாதது.
குழந்தைகளிடம் சரியான தகவல் பகிரப் பட்டால் அவர்கள் மனதில் எழும் குழப்பங்கள் நீங்கிவிடும். வைரஸ் பிடியில் இருந்து பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்கவும் தொடங்கிவிடுவார்கள். குழந்தைகளுக்கு கொரோனா வைரஸைப் பற்றிய விழிப்புணர்வை இணையதளங்கள் வழியாக ஏற்படுத்தும் பணியில் யுனிசெப் அமைப்பு ஈடுபட்டுள்ளது. அதுபற்றி பார்ப்போம்.
கொரோனா வைரஸைப் பற்றி குழந்தைகளுக்கு என்னென்ன தகவல்களெல்லாம் தெரியும் என்று அவர்களிடம் கேளுங்கள். அப்போது அவர்கள் கூறும் தவறான தகவல்களுக்கு சரியான விளக்கம் கொடுங்கள். உதாரணமாக, கிருமி நாசினியை கொண்டு கைகளை கழுவினால் கொரோனா வைரஸ் இறந்துவிடும் என்று குழந்தைகள் கூறினால் அது எவ்வாறு சாத்தியம் என்பதை விளக்கி புரியவைக்கலாம்.
குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் பற்றிய சரியான தகவல்களைக் கொடுத்த பிறகு சுகாதாஇரத்தின் முக்கியத்துவத்தையும் புரியவைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் ஏன் பற்களை சுத்தம் செய்ய வேண்டும், கைகளை ஏன் அடிக்கடி கழுவ வேண்டும் என்பது பற்றி தெளிவுபடுத்தலாம். தரையில் கிடக்கும் உணவு பொருட்களை ஏன் சாப்பிடக்கூடாது, வாய், மூக்கு, கண்களை ஏன் அடிக்கடி தொடக் கூடாது என்பதை விளக்கி புரியவைக்கலாம். கொரோனா வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ள பொம்மைகளையும் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் விதைக்கலாம். உங்களுக்கு சரியாக தெரியாத விஷயங்களுக்கு யூகமாகவோ, பொய்யாகவோ எந்த தகவலையும் குழந்தைகளிடம் பகிரக்கூடாது.
குழந்தைகள் தொலைக்காட்சியைப் பார்க்கும்போதும், வானொலியைக் கேட்கும்போதும், இணையதளங்களை பயன்படுத்தும்போதும் குழந்தைகளுடன் தொடர்பில் இருப்பது அவசியம். இணையத்தில் பல வலைத்தளங்கள் தவறான தகவல்களை வழங்குகின்றன. அதனால் கவனமாக குழந்தைகளை கையாள வேண்டும். அரசாங்க வலைத்தளங்கள், யுனிசெப் அல்லது உலக சுகாதார அமைப்பு வலைத்தளங்கள், அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை குழந்தைகளுக்கு தெரியப்படுத்துங்கள். கொரோனா வைரஸ் பற்றிய பயத்தை அவர்களின் மனதில் இருந்து அகற்றும் விஷயத்தில் கவனமாக செயல்படுங்கள்.
குழந்தைகளிடம் சரியான தகவல் பகிரப் பட்டால் அவர்கள் மனதில் எழும் குழப்பங்கள் நீங்கிவிடும். வைரஸ் பிடியில் இருந்து பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்கவும் தொடங்கிவிடுவார்கள். குழந்தைகளுக்கு கொரோனா வைரஸைப் பற்றிய விழிப்புணர்வை இணையதளங்கள் வழியாக ஏற்படுத்தும் பணியில் யுனிசெப் அமைப்பு ஈடுபட்டுள்ளது. அதுபற்றி பார்ப்போம்.
கொரோனா வைரஸைப் பற்றி குழந்தைகளுக்கு என்னென்ன தகவல்களெல்லாம் தெரியும் என்று அவர்களிடம் கேளுங்கள். அப்போது அவர்கள் கூறும் தவறான தகவல்களுக்கு சரியான விளக்கம் கொடுங்கள். உதாரணமாக, கிருமி நாசினியை கொண்டு கைகளை கழுவினால் கொரோனா வைரஸ் இறந்துவிடும் என்று குழந்தைகள் கூறினால் அது எவ்வாறு சாத்தியம் என்பதை விளக்கி புரியவைக்கலாம்.
குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் பற்றிய சரியான தகவல்களைக் கொடுத்த பிறகு சுகாதாஇரத்தின் முக்கியத்துவத்தையும் புரியவைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் ஏன் பற்களை சுத்தம் செய்ய வேண்டும், கைகளை ஏன் அடிக்கடி கழுவ வேண்டும் என்பது பற்றி தெளிவுபடுத்தலாம். தரையில் கிடக்கும் உணவு பொருட்களை ஏன் சாப்பிடக்கூடாது, வாய், மூக்கு, கண்களை ஏன் அடிக்கடி தொடக் கூடாது என்பதை விளக்கி புரியவைக்கலாம். கொரோனா வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ள பொம்மைகளையும் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் விதைக்கலாம். உங்களுக்கு சரியாக தெரியாத விஷயங்களுக்கு யூகமாகவோ, பொய்யாகவோ எந்த தகவலையும் குழந்தைகளிடம் பகிரக்கூடாது.
குழந்தைகள் தொலைக்காட்சியைப் பார்க்கும்போதும், வானொலியைக் கேட்கும்போதும், இணையதளங்களை பயன்படுத்தும்போதும் குழந்தைகளுடன் தொடர்பில் இருப்பது அவசியம். இணையத்தில் பல வலைத்தளங்கள் தவறான தகவல்களை வழங்குகின்றன. அதனால் கவனமாக குழந்தைகளை கையாள வேண்டும். அரசாங்க வலைத்தளங்கள், யுனிசெப் அல்லது உலக சுகாதார அமைப்பு வலைத்தளங்கள், அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை குழந்தைகளுக்கு தெரியப்படுத்துங்கள். கொரோனா வைரஸ் பற்றிய பயத்தை அவர்களின் மனதில் இருந்து அகற்றும் விஷயத்தில் கவனமாக செயல்படுங்கள்.
வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு முக அழகினைக் கூட்டும் வகையிலான உருளைக் கிழங்கு பேஸ் பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
முக அழகினைக் கூட்டும் வகையில் பலவகையான மாஸ்க்குகளை நாம் பார்த்துள்ளோம். அந்தவகையில் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு முக அழகினைக் கூட்டும் வகையிலான உருளைக் கிழங்கு பேஸ் பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு- 3
பால்- 2 ஸ்பூன்
ஓட்ஸ்- 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்
செய்முறை :
1. உருளைக்கிழங்கை மசித்துக் கொள்ளவும். ஓட்ஸினை பொடித்துக் கொள்ளவும்.
2. அடுத்து இதனுடன் பால் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளவும்.
3. 30 நிமிடங்கள் இதனை ஊறவிட்டுப் பயன்படுத்தவும்.
இந்த மாஸ்க்கினை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் ஊறவிட்டு மசாஜ் செய்யவும். அதன்பின்னர் முகத்தினை குளிர்ந்தநீரால் கழுவவும். முக அழகானது கூடும்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு- 3
பால்- 2 ஸ்பூன்
ஓட்ஸ்- 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்
செய்முறை :
1. உருளைக்கிழங்கை மசித்துக் கொள்ளவும். ஓட்ஸினை பொடித்துக் கொள்ளவும்.
2. அடுத்து இதனுடன் பால் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளவும்.
3. 30 நிமிடங்கள் இதனை ஊறவிட்டுப் பயன்படுத்தவும்.
இந்த மாஸ்க்கினை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் ஊறவிட்டு மசாஜ் செய்யவும். அதன்பின்னர் முகத்தினை குளிர்ந்தநீரால் கழுவவும். முக அழகானது கூடும்.
குழந்தைகள், வயதானவர்களுக்கு சத்தான டிபன் கொடுக்க விரும்பினால் சிவப்பு அரிசியில் புட்டு செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சிவப்பு அரிசி அல்லது சிவப்பு புட்டு அரிசி - 2 கப்,
பொடித்த நாட்டுச் சர்க்கரை அல்லது பனைவெல்லம் - தேவைக்கு,
முழு தேங்காய் - 1 (துருவியது),
வாழைப்பழம் - தேவைக்கு,
உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை :
சிவப்பு புட்டு அரிசியை, தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊறவைத்து, உலர்த்தி புட்டு மாவு பதத்திற்கு அரைக்கவும்.
பின்பு மாவை லேசாக வறுத்து, உப்பு, தண்ணீர் சேர்த்து, சிறிது ஈரப்பதத்தோடு பிசையவும்.
பின் புட்டுக்குழாயில் முதலில் சிறிது தேங்காய்த் துருவல், பின்பு சிறிது மாவு, இப்படி ஒவ்வொன்றாக சேர்த்து நிரப்பி ஆவியில் 15 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.
பின்பு நாட்டுச் சர்க்கரை தூவி, பழத்துடன் பரிமாறவும்.
சிவப்பு அரிசி அல்லது சிவப்பு புட்டு அரிசி - 2 கப்,
பொடித்த நாட்டுச் சர்க்கரை அல்லது பனைவெல்லம் - தேவைக்கு,
முழு தேங்காய் - 1 (துருவியது),
வாழைப்பழம் - தேவைக்கு,
உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை :
சிவப்பு புட்டு அரிசியை, தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊறவைத்து, உலர்த்தி புட்டு மாவு பதத்திற்கு அரைக்கவும்.
பின்பு மாவை லேசாக வறுத்து, உப்பு, தண்ணீர் சேர்த்து, சிறிது ஈரப்பதத்தோடு பிசையவும்.
பின் புட்டுக்குழாயில் முதலில் சிறிது தேங்காய்த் துருவல், பின்பு சிறிது மாவு, இப்படி ஒவ்வொன்றாக சேர்த்து நிரப்பி ஆவியில் 15 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.
பின்பு நாட்டுச் சர்க்கரை தூவி, பழத்துடன் பரிமாறவும்.
சூப்பரான சத்தான சிவப்பு அரிசி புட்டு ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






