என் மலர்
ஆரோக்கியம்
சிலருக்கு குழந்தை பருவத்திலேயே வெள்ளை முடி துளிர்விட தொடங்கி விடுகிறது. இதற்கான காரணத்தையும், தீர்வையும் அறிந்து கொள்ளலாம்.
வயது அதிகரிக்க தொடங்கும்போது தலைமுடியில் நரை முடி எட்டிப்பார்ப்பது தவிர்க்க முடியாதது. ஆனால் சிலருக்கு குழந்தை பருவத்திலேயே வெள்ளை முடி துளிர்விட தொடங்கி விடுகிறது. முடி கருமை நிறத்தில் காட்சி அளிப்பதற்கு மெலனின் எனும் நிறமிதான் முக்கிய பங்கு வகிக்கிறது.
வயது அதிகரிக்கும்போது அந்த நிறமியின் சுரப்பு தடைபடும். அல்லது அதன் வீரியம் குறைய தொடங்கும். அதன் காரணமாக முடி வெள்ளை நிறத்திற்கு மாறலாம். வைட்டமின்- பி12 குறைபாடும் முடியின் வெள்ளை நிறத்திற்கு மற்றொரு காரணமாகும்.
கால்சியம், தைராய்டு போன்ற குறைபாடுகளும் முடியின் நிறத்தில் மாற்றத்தை ஏற்படுத்திவிடக்கூடும். குழந்தை பருவத்திலேயே வெள்ளை முடி தென்பட தொடங்கினால் அதற்கு மரபணுக்கள் முக்கிய காரணமாக அமையலாம். பெற்றோருக்கோ அல்லது அவர்களின் தலைமுறையினருக்கோ இந்த பிரச்சினை இருந்தால் அது மரபு ரீதியாக பின் தொடர்வதற்கு வாய்ப்பிருக்கிறது. மேலும் புற ஊதாக்கதிர்வீச்சுகள் அதிகமாக உடலில் படுவது, மன அழுத்தம், சுற்றுச்சூழல் மாசுபாடு போன்றவையும் வெள்ளை முடி வளர்வதற்கு வழிவகுத்துவிடும்.
கறிவேப்பிலை, நெல்லிக்காய் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டு வருவது நல்லது. மேலும் வைட்டமின்-பி12, கால்சியம் அதிகம் கொண்ட உணவுகளையும் தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது.
ஷாம்பு, கண்டிஷனர்கள் கூந்தலுக்கு உகந்ததா? என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மருதாணி, நெல்லிக்காய், செம்பருத்தி போன்ற மூலிகை பொடி வகைகளை கூந்தலுக்கு பயன்படுத்திவரலாம்.
வயது அதிகரிக்கும்போது அந்த நிறமியின் சுரப்பு தடைபடும். அல்லது அதன் வீரியம் குறைய தொடங்கும். அதன் காரணமாக முடி வெள்ளை நிறத்திற்கு மாறலாம். வைட்டமின்- பி12 குறைபாடும் முடியின் வெள்ளை நிறத்திற்கு மற்றொரு காரணமாகும்.
கால்சியம், தைராய்டு போன்ற குறைபாடுகளும் முடியின் நிறத்தில் மாற்றத்தை ஏற்படுத்திவிடக்கூடும். குழந்தை பருவத்திலேயே வெள்ளை முடி தென்பட தொடங்கினால் அதற்கு மரபணுக்கள் முக்கிய காரணமாக அமையலாம். பெற்றோருக்கோ அல்லது அவர்களின் தலைமுறையினருக்கோ இந்த பிரச்சினை இருந்தால் அது மரபு ரீதியாக பின் தொடர்வதற்கு வாய்ப்பிருக்கிறது. மேலும் புற ஊதாக்கதிர்வீச்சுகள் அதிகமாக உடலில் படுவது, மன அழுத்தம், சுற்றுச்சூழல் மாசுபாடு போன்றவையும் வெள்ளை முடி வளர்வதற்கு வழிவகுத்துவிடும்.
கறிவேப்பிலை, நெல்லிக்காய் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டு வருவது நல்லது. மேலும் வைட்டமின்-பி12, கால்சியம் அதிகம் கொண்ட உணவுகளையும் தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது.
ஷாம்பு, கண்டிஷனர்கள் கூந்தலுக்கு உகந்ததா? என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மருதாணி, நெல்லிக்காய், செம்பருத்தி போன்ற மூலிகை பொடி வகைகளை கூந்தலுக்கு பயன்படுத்திவரலாம்.
உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுத்தியிருக்கிறது. வைரஸ் நோய்கள் தாக்காமல் இருக்க எடுக்கவேண்டிய பொதுவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்வென்று அறிந்து கொள்ளலாம்.
சாதாரண நோய் அறிகுறிகள் தென்பட்டாலே பயமடைந்துவிடுவது பொதுவாக மனிதர்களின் இயல்பு. அந்த பயம் எல்லைமீறி மனக்குழப்பம் உருவாகும்போது அது பீதியாக மாறிவிடும். மனிதர்களுக்கு பீதி உருவாகிவிட்டால் அவர்கள் பதற்றமடைந்து நிலைதடுமாறிவிடுவார்கள். இல்லாததை எல்லாம் தனக்கு இருப்பதாக கருதிக்கொண்டு அதிர்ச்சியில் உறைந்துபோய் விடுவார்கள். அதன் மூலம் அவர்கள் மனநலமும், உடல்நலமும் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகிவிடும். அப்படிப்பட்ட பீதியான சூழ்நிலையை உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த வைரஸ் வரலாற்றை ஆராய்ந்தால் அதன் தாக்குதல் உலகில் ஏதாவது ஒருபகுதியில் அவ்வப்போது ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. நாம் நவீன மருத்துவத்தின் மூலம் அவைகளை கட்டு்ப்படு்த்தியிருக்கவே செய்கிறோம். இன்னொருபுறம் பார்த்தால் சாதாரண சளிக்காய்ச்சலுக்கு ஆண்டுதோறும் கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் பாதிக்கப் படுகிறார்கள். அதில் மூன்று லட்சம் முதல் 6 லட்சம் பேர் ஆண்டுக்கு மரணமடைகிறார்கள். மட்டுமின்றி புற்றுநோய், இதயநோய், சர்க்கரை நோயாலும் பெருமளவு மரணம் ஏற்படத்தான் செய்கிறது.
இ்ந்த நிலையில் கொரோனாவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பீதி? என்ற கேள்வி எழுகிறது. உலக சுகாதார அமைப்பு, ‘சர்வதேச அவசர நிலையாக’ இதனை அறிவித்தது இதில் சுட்டிக்காட்டப்படுகிறது. ‘இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த போதிய மருத்துவ வசதி இல்லாத நாடுகளுக்கு அந்த வசதியை அளிப்பதற்காகத்தான்’ இந்த அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அதனால் அதை நினைத்து பீதியடைய வேண்டியதில்லை. அதே நேரத்தில் காய்ச்சல், ஜலதோஷம், நிமோனியா போன்றவை சில நாட்களுக்கு மேல் நீடித்து மூச்சுத்திணறலாக மாறினால் மட்டும்தான் உடனே கவனிக்கவேண்டும். நிமோனியா என்பது நுரையீரலில் ஏற்படும் தொற்றாகும்.
வைரஸ் நோய்கள் சுவாச உறுப்புகள் தொடர்புடையதாக இருப்பதால் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு தொற்றாமல் இருக்க கவனம் செலுத்தவேண்டும். நாம் பேசும்போது உமிழ்நீர் பிசிறுகள் வெளிப்படும். அதனை டிராப்லெட் (droplet) என்போம். ஒருவர் மூலம் இன்னொருவருக்கு ‘டிராப்லெட் இன்பெக்ஷன்’ ஏற்படாமல் இருக்க மூக்கு, வாய் பாதுகாப்பு அவசியம். பேசும்போதும், தும்மும்போதும் கவனம் தேவை. மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் செல்வதையும் தவிர்க்கலாம்.
பொதுவாக வைரஸ் கிருமிகள் உடலில் புகுந்தால், உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகி அதை எதிர்க்கும். அதையும் மீறி அந்த வைரஸ் கிருமிகள் உடலை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை அறிய முன்பெல்லாம் சில நாட்கள் காத்திருந்து பரிசோதனை செய்ய வேண்டியிருந்தது. இப்போது அதற்காக காத்திருக்க வேண்டியதில்லை. ‘பி.சி.ஆர்’ என்ற நவீன பரிசோதனைமுறை எல்லா இடங்களிலும் உள்ளது. அதன் மூலம் உடனே கொரோனா போன்ற வைரஸ் பாதிப்புகளை கண்டறிந்துவிடலாம். கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதாக கண்டுபிடித்தால்கூட அது 100-ல் 2 பேருக்குதான் அதிக பாதிப்பை உருவாக்கும். இதன் தாக்குதலை முறியடிக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றன.
வைரஸ் நோய்கள் தாக்காமல் இருக்க எடுக்கவேண்டிய பொதுவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
வைரஸ் நோய்கள் தொற்றாமல் இருக்க மூக்கையும், வாயையும் மூடிக்கொள்ளும் மாஸ்க் அணிவது வழக்கத்தில் உள்ளது. இதில் கவனிக்கத் தகுந்த விஷயம் என்னவென்றால், மூன்று அடுக்குகளை கொண்ட மாஸ்க்குகள் மட்டுமே முழுமையான பாதுகாப்பு அளிக்கும். எல்லாவித மாஸ்க்குகளும் முழுபாதுகாப்பு அளிப்பதில்லை என்பதை கவனத்தில்கொள்ளவேண்டும்.
நோயாளி மட்டும் மாஸ்க் அணிந்தால் போதாது. அவரை பராமரிப்பவரும், அவரை சந்திக்க செல்பவர்களும் மாஸ்க் அணிவது அவசியம்.
வீட்டில் வைரஸ் தாக்கிய நோயாளிகள் இருந்தால் அவர்கள் பயன்படுத்திய டவல், டிஸ்யூ, பாத்திரங்களை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது. அவர்கள் பயன்படுத்திய பொருட்களை பொது இடங்களில் போடக்கூடாது. பாதுகாப்பானமுறையில் அப்புறப்படுத்தவேண்டும். நோயாளிகளை பராமரிப்பவர்கள் அதன் பின்பு கைகளை நன்றாக சோப்பிட்டு கழுவவேண்டும்.
லேசான சுடுநீரில் உப்புகலந்து அவ்வப்போது வாயை கொப்பளிப்பது வைரஸ் உடலுக்குள் பரவுவதை ஓரளவு தடுக்கும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பழங்கள், காய்கறிகளை சுத்தமாக கழுவி சாப்பிடவேண்டும். உணவில் உப்பை குறைப்பது சுவாசப் பகுதியில் ஏற்படும் நெருக்கடிகளை குறைக்கும். ஊறுகாய், உப்பில் ஊறவைத்த இதர உணவுப் பொருட்கள், டின்னில் அடைத்துவைத்திருக்கும் பதப்படுத்திய உணவுகளையும் தவிர்த்திடுங்கள்.
பொது இடங்களில் எச்சில் துப்புதல், சிறுநீர் கழித்தல் போன்றவைகளை தவிர்த்திடவேண்டும்.
மனிதர்கள் எச்சில் துப்பும்போது அதில் 10 முதல் 12 மணி நேரம் வரை வைரஸ்கள் உயிரோடு இருக்கும். நோயாளிகள் இருக்கும் அறையில் உள்ள உலோகங்களிலும் வைரஸ் காணப்படும். அதனால் அவைகளை தொட்டாலும் உடனே கைகளை நன்றாக கழுவவேண்டும்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளை அத்தியாவசியம் இருந்தால் மட்டும் சந்திக்கசெல்லுங்கள். நோயாளி களிடம் இருந்து நோய் பரவுவதை அதன் மூலம் தடுக்கமுடியும். அதுமட்டுமின்றி நோயாளிகளுக்கு ஏற்படும் அசவுகரியங்களையும் அதன் மூலம் தடுக்கலாம்.
உணவு சாப்பிடுவதற்கு முன்பும்- பின்பும் கைகளை நன்றாக கழுவுவதோடு, கைகளில் ஈரத்தன்மை இல்லாத அளவுக்கு உடனே துடைப்பதும் அவசியம். அதுபோல் கழிவறைக்கு போகும் முன்பும்- பின்பும் கைகளை சோப்பிட்டு கழுவி நன்றாக துடைத்திடவேண்டும்.
வளர்ப்பு பிராணிகளிடம் கவனமாக இருங்கள். நெருங்கிப்பழகவேண்டாம். அதுபோல் பொதுவாகனங்களில் செல்லும்போதும், பொது இடங்களில் செல்லும்போதும் கவனம் தேவை.
பாதுகாப்பான, சூடான உணவுகளை மட்டும் உண்ணுங்கள். அசைவ உணவுகளை குறிப்பிட்ட காலத்திற்கு தவிர்ப்பது நல்லது. முடிந்த அளவு வீட்டில் உணவு தயாரித்து சாப்பிடுங்கள். உங்கள் வாழ்விடப் பகுதிகளையும் சுத்தமாக வைத்திருங்கள்.
வைரஸ் நோய்களை பற்றிய தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பெருமளவு பரவுகின்றன. அவைகளை அப்படியே நம்பி பீதி அடையவேண்டாம். அதே நேரத்தில் உங்களுக்கு ஏதாவது ஒருவிதத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அதை அலட்சியம் செய்யவேண்டாம். டாக்டரிடம் ஆலோசனை பெறுங்கள். மாறாக சுய மருத்துவம் மேற்கொள்ளும் எண்ணத்தில் மருந்துகடைகளில் (டாக்டரின் பரிந்துரையின்றி) மருந்துகளை வாங்கி சாப்பிடாதீர்கள்.
எந்த வைரஸ் நோயும் தாக்காத அளவுக்கு உங்களை நீங்களே பாதுகாத்துக்கொள்ள முடியும். அந்த பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடியுங்கள். நம்பிக்கையோடு இருங்கள். அதே நேரத்தில் எப்போதும் விழிப்புடன் செயல்படுங்கள்.
கட்டுரை: பேராசிரியர் சி.எம்.கே.ரெட்டி DSc, FRCS
தலைவர்-தமிழ்நாடு மருத்துவ பயிற்சியாளர்கள் சங்கம், சென்னை.
இந்த வைரஸ் வரலாற்றை ஆராய்ந்தால் அதன் தாக்குதல் உலகில் ஏதாவது ஒருபகுதியில் அவ்வப்போது ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. நாம் நவீன மருத்துவத்தின் மூலம் அவைகளை கட்டு்ப்படு்த்தியிருக்கவே செய்கிறோம். இன்னொருபுறம் பார்த்தால் சாதாரண சளிக்காய்ச்சலுக்கு ஆண்டுதோறும் கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் பாதிக்கப் படுகிறார்கள். அதில் மூன்று லட்சம் முதல் 6 லட்சம் பேர் ஆண்டுக்கு மரணமடைகிறார்கள். மட்டுமின்றி புற்றுநோய், இதயநோய், சர்க்கரை நோயாலும் பெருமளவு மரணம் ஏற்படத்தான் செய்கிறது.
இ்ந்த நிலையில் கொரோனாவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பீதி? என்ற கேள்வி எழுகிறது. உலக சுகாதார அமைப்பு, ‘சர்வதேச அவசர நிலையாக’ இதனை அறிவித்தது இதில் சுட்டிக்காட்டப்படுகிறது. ‘இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த போதிய மருத்துவ வசதி இல்லாத நாடுகளுக்கு அந்த வசதியை அளிப்பதற்காகத்தான்’ இந்த அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அதனால் அதை நினைத்து பீதியடைய வேண்டியதில்லை. அதே நேரத்தில் காய்ச்சல், ஜலதோஷம், நிமோனியா போன்றவை சில நாட்களுக்கு மேல் நீடித்து மூச்சுத்திணறலாக மாறினால் மட்டும்தான் உடனே கவனிக்கவேண்டும். நிமோனியா என்பது நுரையீரலில் ஏற்படும் தொற்றாகும்.
வைரஸ் நோய்கள் சுவாச உறுப்புகள் தொடர்புடையதாக இருப்பதால் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு தொற்றாமல் இருக்க கவனம் செலுத்தவேண்டும். நாம் பேசும்போது உமிழ்நீர் பிசிறுகள் வெளிப்படும். அதனை டிராப்லெட் (droplet) என்போம். ஒருவர் மூலம் இன்னொருவருக்கு ‘டிராப்லெட் இன்பெக்ஷன்’ ஏற்படாமல் இருக்க மூக்கு, வாய் பாதுகாப்பு அவசியம். பேசும்போதும், தும்மும்போதும் கவனம் தேவை. மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் செல்வதையும் தவிர்க்கலாம்.
பொதுவாக வைரஸ் கிருமிகள் உடலில் புகுந்தால், உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகி அதை எதிர்க்கும். அதையும் மீறி அந்த வைரஸ் கிருமிகள் உடலை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை அறிய முன்பெல்லாம் சில நாட்கள் காத்திருந்து பரிசோதனை செய்ய வேண்டியிருந்தது. இப்போது அதற்காக காத்திருக்க வேண்டியதில்லை. ‘பி.சி.ஆர்’ என்ற நவீன பரிசோதனைமுறை எல்லா இடங்களிலும் உள்ளது. அதன் மூலம் உடனே கொரோனா போன்ற வைரஸ் பாதிப்புகளை கண்டறிந்துவிடலாம். கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதாக கண்டுபிடித்தால்கூட அது 100-ல் 2 பேருக்குதான் அதிக பாதிப்பை உருவாக்கும். இதன் தாக்குதலை முறியடிக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றன.
வைரஸ் நோய்கள் தாக்காமல் இருக்க எடுக்கவேண்டிய பொதுவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
வைரஸ் நோய்கள் தொற்றாமல் இருக்க மூக்கையும், வாயையும் மூடிக்கொள்ளும் மாஸ்க் அணிவது வழக்கத்தில் உள்ளது. இதில் கவனிக்கத் தகுந்த விஷயம் என்னவென்றால், மூன்று அடுக்குகளை கொண்ட மாஸ்க்குகள் மட்டுமே முழுமையான பாதுகாப்பு அளிக்கும். எல்லாவித மாஸ்க்குகளும் முழுபாதுகாப்பு அளிப்பதில்லை என்பதை கவனத்தில்கொள்ளவேண்டும்.
நோயாளி மட்டும் மாஸ்க் அணிந்தால் போதாது. அவரை பராமரிப்பவரும், அவரை சந்திக்க செல்பவர்களும் மாஸ்க் அணிவது அவசியம்.
வீட்டில் வைரஸ் தாக்கிய நோயாளிகள் இருந்தால் அவர்கள் பயன்படுத்திய டவல், டிஸ்யூ, பாத்திரங்களை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது. அவர்கள் பயன்படுத்திய பொருட்களை பொது இடங்களில் போடக்கூடாது. பாதுகாப்பானமுறையில் அப்புறப்படுத்தவேண்டும். நோயாளிகளை பராமரிப்பவர்கள் அதன் பின்பு கைகளை நன்றாக சோப்பிட்டு கழுவவேண்டும்.
லேசான சுடுநீரில் உப்புகலந்து அவ்வப்போது வாயை கொப்பளிப்பது வைரஸ் உடலுக்குள் பரவுவதை ஓரளவு தடுக்கும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பழங்கள், காய்கறிகளை சுத்தமாக கழுவி சாப்பிடவேண்டும். உணவில் உப்பை குறைப்பது சுவாசப் பகுதியில் ஏற்படும் நெருக்கடிகளை குறைக்கும். ஊறுகாய், உப்பில் ஊறவைத்த இதர உணவுப் பொருட்கள், டின்னில் அடைத்துவைத்திருக்கும் பதப்படுத்திய உணவுகளையும் தவிர்த்திடுங்கள்.
பொது இடங்களில் எச்சில் துப்புதல், சிறுநீர் கழித்தல் போன்றவைகளை தவிர்த்திடவேண்டும்.
மனிதர்கள் எச்சில் துப்பும்போது அதில் 10 முதல் 12 மணி நேரம் வரை வைரஸ்கள் உயிரோடு இருக்கும். நோயாளிகள் இருக்கும் அறையில் உள்ள உலோகங்களிலும் வைரஸ் காணப்படும். அதனால் அவைகளை தொட்டாலும் உடனே கைகளை நன்றாக கழுவவேண்டும்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளை அத்தியாவசியம் இருந்தால் மட்டும் சந்திக்கசெல்லுங்கள். நோயாளி களிடம் இருந்து நோய் பரவுவதை அதன் மூலம் தடுக்கமுடியும். அதுமட்டுமின்றி நோயாளிகளுக்கு ஏற்படும் அசவுகரியங்களையும் அதன் மூலம் தடுக்கலாம்.
உணவு சாப்பிடுவதற்கு முன்பும்- பின்பும் கைகளை நன்றாக கழுவுவதோடு, கைகளில் ஈரத்தன்மை இல்லாத அளவுக்கு உடனே துடைப்பதும் அவசியம். அதுபோல் கழிவறைக்கு போகும் முன்பும்- பின்பும் கைகளை சோப்பிட்டு கழுவி நன்றாக துடைத்திடவேண்டும்.
வளர்ப்பு பிராணிகளிடம் கவனமாக இருங்கள். நெருங்கிப்பழகவேண்டாம். அதுபோல் பொதுவாகனங்களில் செல்லும்போதும், பொது இடங்களில் செல்லும்போதும் கவனம் தேவை.
பாதுகாப்பான, சூடான உணவுகளை மட்டும் உண்ணுங்கள். அசைவ உணவுகளை குறிப்பிட்ட காலத்திற்கு தவிர்ப்பது நல்லது. முடிந்த அளவு வீட்டில் உணவு தயாரித்து சாப்பிடுங்கள். உங்கள் வாழ்விடப் பகுதிகளையும் சுத்தமாக வைத்திருங்கள்.
வைரஸ் நோய்களை பற்றிய தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பெருமளவு பரவுகின்றன. அவைகளை அப்படியே நம்பி பீதி அடையவேண்டாம். அதே நேரத்தில் உங்களுக்கு ஏதாவது ஒருவிதத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அதை அலட்சியம் செய்யவேண்டாம். டாக்டரிடம் ஆலோசனை பெறுங்கள். மாறாக சுய மருத்துவம் மேற்கொள்ளும் எண்ணத்தில் மருந்துகடைகளில் (டாக்டரின் பரிந்துரையின்றி) மருந்துகளை வாங்கி சாப்பிடாதீர்கள்.
எந்த வைரஸ் நோயும் தாக்காத அளவுக்கு உங்களை நீங்களே பாதுகாத்துக்கொள்ள முடியும். அந்த பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடியுங்கள். நம்பிக்கையோடு இருங்கள். அதே நேரத்தில் எப்போதும் விழிப்புடன் செயல்படுங்கள்.
கட்டுரை: பேராசிரியர் சி.எம்.கே.ரெட்டி DSc, FRCS
தலைவர்-தமிழ்நாடு மருத்துவ பயிற்சியாளர்கள் சங்கம், சென்னை.
மார்பகங்கள் தொங்குவதால் பெண்களால் எந்த ஒரு விருப்பமான உடையையும் அணிய முடியாமல் தவிப்பார்கள். சரி, மார்பகங்கள் ஏன் தொங்குகின்றன? எவை மார்பகங்களைத் தளர்ந்து தொங்கச் செய்கின்றன என்று அறிந்து கொள்ளலாம்.
பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் அது தொங்கி அசிங்கமாக காணப்படுவது. மார்பகங்கள் தொங்குவதால் பெண்களால் எந்த ஒரு விருப்பமான உடையையும் அணிய முடியாமல் தவிப்பார்கள். சரி, மார்பகங்கள் ஏன் தொங்குகின்றன என்று தெரியுமா? எவை மார்பகங்களைத் தளர்ந்து தொங்கச் செய்கின்றன என்று தெரியுமா?
மார்பகங்கள் வயது அதிகரித்தால், உடல் பருமன் அதிகரித்தால், புகைப் பிடித்தால், கருத்தரித்தால் தொங்க ஆரம்பிக்கும். இப்படி தொங்கும் மார்பகங்களை ஒருசில இயற்கை வழிகளின் மூலம் சிக்கென்று மாற்ற முடியும். இங்கு அந்த வழிகள் கொடுக்கப்பட்டுள் ளன.
* கூன் போட்டு குனிந்து உட்கார்ந்தவாறு இருந்தால், அது மார்பகங்களைப் பாதிக்கும். எனவே கூன் போட்டு உட் காராமல் எப்போதும் நேரான நிலையில் இருக்க வேண்டும். இதனால் மார்பகங்கள் சிக்கென்று நேராக இருக்கும்.
* தொங்கும் மார்பகங்களின் அழகை அதிகரிக்க, தினமும் ஐஸ் கட்டிகளைக் கொண்டு 1 நிமிடம் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்ய வேண்டும்.
* கற்றாழை ஜெல்லைக் கொண்டு மார்பகங்களை மசாஜ் செய்தால், அது அப்பகுதியில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் மற்றும் இணைப்புத்திசுக்களை வலிமையாக்கும். அதற்கு தினமும் 15 நிமிடம் கற்றாழை ஜெல்லை மார்பகங்களில் தடவி மேல் நோக்கி மசாஜ் செய்ய வேண்டும்.

* வெள்ளரிக்காயை துருவி, அத்துடன் சிறிது வெண்ணெய், மில்க் க்ரீம் மற்றும் முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து கலந்து, இரவி முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் மார்பகங்களில் தடவி 20 நிமிடம் ஊற வைத்துக் கழுவ வேண்டும்.
* ஆலிவ் ஆயிலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இது மார்பக திசுக்களைப் பாதிக்கும் ப்ரீ-ராடிக்கல்களிடமிருந்து நல்ல பாதுகாப்பை வழங்குவதுடன், பாதிக்கப்பட்ட மார்பக திசுக்களைப் புதுப்பிக்கும். ஆகவே தினமும் ஆலிவ் ஆயில் கொண்டு மார்பகங்களை 15 நிமிடம் மசாஜ் செய்து வர, ஒரே மா த்தில் ஓர் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
* முட்டையின் வெள்ளைக் கருவை நன்கு அடித்து, அதனை மார்பகங்களில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முட்டையில் உள்ள புரோட்டீன், மார்பக செல்களுக்கு ஊட்டமளிக்கும்.
* தொங்கும் மார்பகங்களை சிக்கென்று மாற்ற உதவும் சிறப்பான மற்றொரு வழி தான் உடற்பயிற்சி. தினமும் பெண்கள் புஷ்-அப், செஸ்ட் பிரஸ் போன்ற பயிற்சிகளை தினமும் செய்து வந்தால், மார்பக திசுக்கள் இறுக்கமடையும்.
மார்பகங்கள் வயது அதிகரித்தால், உடல் பருமன் அதிகரித்தால், புகைப் பிடித்தால், கருத்தரித்தால் தொங்க ஆரம்பிக்கும். இப்படி தொங்கும் மார்பகங்களை ஒருசில இயற்கை வழிகளின் மூலம் சிக்கென்று மாற்ற முடியும். இங்கு அந்த வழிகள் கொடுக்கப்பட்டுள் ளன.
* கூன் போட்டு குனிந்து உட்கார்ந்தவாறு இருந்தால், அது மார்பகங்களைப் பாதிக்கும். எனவே கூன் போட்டு உட் காராமல் எப்போதும் நேரான நிலையில் இருக்க வேண்டும். இதனால் மார்பகங்கள் சிக்கென்று நேராக இருக்கும்.
* தொங்கும் மார்பகங்களின் அழகை அதிகரிக்க, தினமும் ஐஸ் கட்டிகளைக் கொண்டு 1 நிமிடம் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்ய வேண்டும்.
* கற்றாழை ஜெல்லைக் கொண்டு மார்பகங்களை மசாஜ் செய்தால், அது அப்பகுதியில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் மற்றும் இணைப்புத்திசுக்களை வலிமையாக்கும். அதற்கு தினமும் 15 நிமிடம் கற்றாழை ஜெல்லை மார்பகங்களில் தடவி மேல் நோக்கி மசாஜ் செய்ய வேண்டும்.

* வெள்ளரிக்காயை துருவி, அத்துடன் சிறிது வெண்ணெய், மில்க் க்ரீம் மற்றும் முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து கலந்து, இரவி முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் மார்பகங்களில் தடவி 20 நிமிடம் ஊற வைத்துக் கழுவ வேண்டும்.
* ஆலிவ் ஆயிலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இது மார்பக திசுக்களைப் பாதிக்கும் ப்ரீ-ராடிக்கல்களிடமிருந்து நல்ல பாதுகாப்பை வழங்குவதுடன், பாதிக்கப்பட்ட மார்பக திசுக்களைப் புதுப்பிக்கும். ஆகவே தினமும் ஆலிவ் ஆயில் கொண்டு மார்பகங்களை 15 நிமிடம் மசாஜ் செய்து வர, ஒரே மா த்தில் ஓர் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
* முட்டையின் வெள்ளைக் கருவை நன்கு அடித்து, அதனை மார்பகங்களில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முட்டையில் உள்ள புரோட்டீன், மார்பக செல்களுக்கு ஊட்டமளிக்கும்.
* தொங்கும் மார்பகங்களை சிக்கென்று மாற்ற உதவும் சிறப்பான மற்றொரு வழி தான் உடற்பயிற்சி. தினமும் பெண்கள் புஷ்-அப், செஸ்ட் பிரஸ் போன்ற பயிற்சிகளை தினமும் செய்து வந்தால், மார்பக திசுக்கள் இறுக்கமடையும்.
பெண்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் அதிக அக்கறை செலுத்துகிறார்கள். ஆனால் குறிப்பிட்ட நேரங்களில் அவர்கள் மேக்கப்பை தவிர்ப்பது சருமத்திற்கு நலம் சேர்க்கும்.
பெண்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் அதிக அக்கறை செலுத்துகிறார்கள். ஆனால் குறிப்பிட்ட நேரங்களில் அவர்கள் மேக்கப்பை தவிர்ப்பது சருமத்திற்கு நலம் சேர்க்கும். குறிப்பாக ஜிம்முக்கு செல்லும்போது மேக்கப்பை தவிர்க்க வேண்டும். அப்போது வியர்வை வழிவதால் அதில் இருக்கும் ரசாயன கலவை சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். உடல் உழைப்பு கொண்ட வேலைகளை செய்யும்போதும் மேக்கப் போடுவதை தவிர்க்க வேண்டும்.
லேசர் முடி சிகிச்சைக்கு பிறகு உடனே மேக்கப் போடுவது நல்லதல்ல. சருமத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் அறுவை சிகிச்சை மேற்கொண்டால் 48 மணி நேரத்திற்கு மேக்கப் எதுவும் போடக் கூடாது. சரும அலர்ஜி கொண்டவர்கள் முற்றிலும் மேக்கப்பை தவிர்க்க வேண்டும். முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் கூடுமானவரை மேக்கப்பை தவிர்த்துவிடுவது நல்லது.
ஒப்பனை செய்தே ஆக வேண்டும் என்று விரும்பினால் லேசாக மேக்கப் செய்து கொள்ளலாம். நீச்சல் குளத்திற்கு செல்லும்போது மேக்கப் போடக்கூடாது. ஏனெனில் நீச்சல் குளத்தில் உள்ள நீரில் குளோரின், அழுக்கு, பாக்டீரியாக்கள் கலந்திருக்கும். அவை மேக்கப்பில் கலந்து சருமத்திற்கு கேடுவிளைவிக்கும். சரும வீக்கம், அலர்ஜி போன்ற பாதிப்புகளும் உருவாகும்.
மேக்கப் செய்வதற்கு முன்பு முகத்தை நன்றாக கழுவ வேண்டும். அது சருமத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் பாக்டீரியாக்களிடம் இருந்து பாதுகாக்கும். ஒருவர் பயன்படுத்தும் லிப்ஸ்டிக்கை மற்றவர்கள் பயன் படுத்தக்கூடாது. மேக்கப் சாதனங்கள் வைத்திருக்கும் பேக்கை திறந்து வைக்கக்கூடாது. அதற்குள் பாக்டீரியாக்கள் எளிதாக உள்ளே நுழைந்து சருமத்திற்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும். மேக்கப் பிரஷ், ஸ்பாஞ்சுகளை தினமும் சுத்தம் செய்வது நல்லது. மேக்கப் சாதனங்களை பயன் படுத்துவதற்கு முன்பு கைகளை நன்றாக கழுவ வேண்டும். எண்ணெய் தன்மை கொண்ட மேக்கப் சாதனங்களை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது.
லேசர் முடி சிகிச்சைக்கு பிறகு உடனே மேக்கப் போடுவது நல்லதல்ல. சருமத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் அறுவை சிகிச்சை மேற்கொண்டால் 48 மணி நேரத்திற்கு மேக்கப் எதுவும் போடக் கூடாது. சரும அலர்ஜி கொண்டவர்கள் முற்றிலும் மேக்கப்பை தவிர்க்க வேண்டும். முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் கூடுமானவரை மேக்கப்பை தவிர்த்துவிடுவது நல்லது.
ஒப்பனை செய்தே ஆக வேண்டும் என்று விரும்பினால் லேசாக மேக்கப் செய்து கொள்ளலாம். நீச்சல் குளத்திற்கு செல்லும்போது மேக்கப் போடக்கூடாது. ஏனெனில் நீச்சல் குளத்தில் உள்ள நீரில் குளோரின், அழுக்கு, பாக்டீரியாக்கள் கலந்திருக்கும். அவை மேக்கப்பில் கலந்து சருமத்திற்கு கேடுவிளைவிக்கும். சரும வீக்கம், அலர்ஜி போன்ற பாதிப்புகளும் உருவாகும்.
மேக்கப் செய்வதற்கு முன்பு முகத்தை நன்றாக கழுவ வேண்டும். அது சருமத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் பாக்டீரியாக்களிடம் இருந்து பாதுகாக்கும். ஒருவர் பயன்படுத்தும் லிப்ஸ்டிக்கை மற்றவர்கள் பயன் படுத்தக்கூடாது. மேக்கப் சாதனங்கள் வைத்திருக்கும் பேக்கை திறந்து வைக்கக்கூடாது. அதற்குள் பாக்டீரியாக்கள் எளிதாக உள்ளே நுழைந்து சருமத்திற்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும். மேக்கப் பிரஷ், ஸ்பாஞ்சுகளை தினமும் சுத்தம் செய்வது நல்லது. மேக்கப் சாதனங்களை பயன் படுத்துவதற்கு முன்பு கைகளை நன்றாக கழுவ வேண்டும். எண்ணெய் தன்மை கொண்ட மேக்கப் சாதனங்களை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது.
சளி, இருமல், தொண்டை வலியால் அவதிப்படுபவர்கள் அதிமதுரம் சுக்கு சூப் செய்து பருகலாம். இன்று இந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அதிமதுரம் தூள் - அரை டீஸ்பூன்
சுக்குப் பொடி - அரை டீஸ்பூன்
திப்பிலி பொடி - கால் டீஸ்பூன்
பாதாம் - 6
தண்ணீர் - 2 கப்
செய்முறை:
அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
நன்கு கொதித்ததும் பாத்திரத்தை கீழே இறக்கிவிட வேண்டும். சுடு நீரில் அதிமதுரம் பொடி, சுக்குப்பொடி, திப்பிலி பொடி ஆகியவற்றை கொட்டி இரண்டு நிமிடம் பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும்.
நீராவியில் பொடிகள் அனைத்தும் வெந்ததும், நன்றாக கலக்கி சூட்டோடு பருகலாம்.
பருகும் போதே பாதாமை மென்று சாப்பிட்டால் கசப்பு தெரியாமல் இருக்கும்.
அதிமதுரம் தூள் - அரை டீஸ்பூன்
சுக்குப் பொடி - அரை டீஸ்பூன்
திப்பிலி பொடி - கால் டீஸ்பூன்
பாதாம் - 6
தண்ணீர் - 2 கப்
செய்முறை:
அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
நன்கு கொதித்ததும் பாத்திரத்தை கீழே இறக்கிவிட வேண்டும். சுடு நீரில் அதிமதுரம் பொடி, சுக்குப்பொடி, திப்பிலி பொடி ஆகியவற்றை கொட்டி இரண்டு நிமிடம் பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும்.
நீராவியில் பொடிகள் அனைத்தும் வெந்ததும், நன்றாக கலக்கி சூட்டோடு பருகலாம்.
பருகும் போதே பாதாமை மென்று சாப்பிட்டால் கசப்பு தெரியாமல் இருக்கும்.
சூப்பரான அதிமதுரம் சூப் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மனதுக்கு பிடித்தமான நண்பர்கள் எல்லோரிடமும் பேசுவதற்கு போதுமான நேரம் கிடைக்காமல் போகலாம். வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தள குழுக்கள் மூலம் அந்த குறையை போக்க முயற்சிக்கலாம்.
திருமணத்திற்கு பிறகு கணவன்-மனைவி இருவருக்கும் பொறுப்புகள் அதிகரிக்க தொடங்கும். நெருங்கி பழகிய நண்பர்களை நேரில் சந்திக்கவோ, போனில் பேசவோ போதுமான நேரம் கிடைப்பதில்லை என்ற மனக்குறையும் பெரும்பாலான தம்பதியருக்கு ஏற்படும். நண்பர்களுக்கும் திருமணத்திற்கு பிறகு தங்களை கவனத்தில் கொள்வதில்லை என்ற வருத்தமும் எட்டிப்பார்க்கும். இந்த பிரச்சினையை களைவதற்கு நேரத்தை நிர்வகிக்க கற்றுக்கொள்வதுதான் முக்கியமானது.
நண்பர்கள் எப்போது ஓய்வாக இருப்பார்கள், உங்களுக்கு எப்போது ஓய்வு கிடைக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். விடுமுறை நாட்களில் சின்ன சின்ன வேலைகளுக்காக வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டியிருக்கும். அந்த சமயத்தில் நண்பர்களை சந்திப்பதற்காக சிறிது நேரத்தை ஒதுக்கலாம். வேலையை முடித்த மாதிரியும் இருக்கும், நண்பர்களை சந்தித்த சந்தோஷமும் கிடைக்கும்.
மனதுக்கு பிடித்தமான நண்பர்கள் எல்லோரிடமும் பேசுவதற்கு போதுமான நேரம் கிடைக்காமல் போகலாம். வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தள குழுக்கள் மூலம் அந்த குறையை போக்க முயற்சிக்கலாம். அதன் மூலம் வாரத்தில் ஒரு நாள் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவதற்கு திட்டமிடலாம். அது நண்பர்களிடம் இருந்து விலகி இருக்கிறோம் என்ற எண்ணத்தை போக்கும். இணக்கத்தையும் அதிகரிக்க வைத்துவிடும். சிலர் திருமணத்திற்கு பிறகு ரொம்பவே பிசியாகி விடுவார்கள். திருமணத்திற்கு முன்பு தனிமையில் நாட்களை நகர்த்தி கொண்டிருந்தவர்களுக்கு நிறைய நேரம் கிடைத்திருக்கும். அதனால் நண்பர்களுடன்தான் வாழ்நாளின் பெரும்பகுதியை செலவிட்டிருப்பார்கள்.
திருமணத்திற்கு பிறகு நிலைமை மாறிவிடும். அலுவலக வேலை, குடும்ப பொறுப்புகளுக்கு மத்தியில் தனிமையில் ஓய்வெடுப்பதற்கு முன்பு போல் நேரம் இருக்காது. அந்த சமயத்தில் நண்பர்களை சந்திக்க முடியாவிட்டாலும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம். வாரத்தில் ஒருமுறை பேசினால்கூட நண்பர்களிடம் இருந்து விலகி இருக்கிறோம் என்ற எண்ணம் தோன்றாது. நண்பர்களை சந்திக்க போதுமான நேரம் கிடைக்கவில்லை என்றால் மதிய உணவு அல்லது இரவு உணவுக்கு நண்பர்களை அழைக்கலாம்.
அவர்களை குடும்பத்துடன் விருந்துக்கு அழைப்பதன் மூலம் உறவையும் பலப்படுத்தலாம். விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கு திட்டமிடலாம். பண்டிகை காலங்கள், பிறந்தநாள், திருமண நாள் போன்ற முக்கிய தினங்களில் நண்பர்களை வீட்டுக்கு அழைக்கலாம். அதன் மூலம் உறவை மேம்படுத்திக்கொள்ளலாம்.
நண்பர்கள் எப்போது ஓய்வாக இருப்பார்கள், உங்களுக்கு எப்போது ஓய்வு கிடைக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். விடுமுறை நாட்களில் சின்ன சின்ன வேலைகளுக்காக வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டியிருக்கும். அந்த சமயத்தில் நண்பர்களை சந்திப்பதற்காக சிறிது நேரத்தை ஒதுக்கலாம். வேலையை முடித்த மாதிரியும் இருக்கும், நண்பர்களை சந்தித்த சந்தோஷமும் கிடைக்கும்.
மனதுக்கு பிடித்தமான நண்பர்கள் எல்லோரிடமும் பேசுவதற்கு போதுமான நேரம் கிடைக்காமல் போகலாம். வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தள குழுக்கள் மூலம் அந்த குறையை போக்க முயற்சிக்கலாம். அதன் மூலம் வாரத்தில் ஒரு நாள் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவதற்கு திட்டமிடலாம். அது நண்பர்களிடம் இருந்து விலகி இருக்கிறோம் என்ற எண்ணத்தை போக்கும். இணக்கத்தையும் அதிகரிக்க வைத்துவிடும். சிலர் திருமணத்திற்கு பிறகு ரொம்பவே பிசியாகி விடுவார்கள். திருமணத்திற்கு முன்பு தனிமையில் நாட்களை நகர்த்தி கொண்டிருந்தவர்களுக்கு நிறைய நேரம் கிடைத்திருக்கும். அதனால் நண்பர்களுடன்தான் வாழ்நாளின் பெரும்பகுதியை செலவிட்டிருப்பார்கள்.
திருமணத்திற்கு பிறகு நிலைமை மாறிவிடும். அலுவலக வேலை, குடும்ப பொறுப்புகளுக்கு மத்தியில் தனிமையில் ஓய்வெடுப்பதற்கு முன்பு போல் நேரம் இருக்காது. அந்த சமயத்தில் நண்பர்களை சந்திக்க முடியாவிட்டாலும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம். வாரத்தில் ஒருமுறை பேசினால்கூட நண்பர்களிடம் இருந்து விலகி இருக்கிறோம் என்ற எண்ணம் தோன்றாது. நண்பர்களை சந்திக்க போதுமான நேரம் கிடைக்கவில்லை என்றால் மதிய உணவு அல்லது இரவு உணவுக்கு நண்பர்களை அழைக்கலாம்.
அவர்களை குடும்பத்துடன் விருந்துக்கு அழைப்பதன் மூலம் உறவையும் பலப்படுத்தலாம். விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கு திட்டமிடலாம். பண்டிகை காலங்கள், பிறந்தநாள், திருமண நாள் போன்ற முக்கிய தினங்களில் நண்பர்களை வீட்டுக்கு அழைக்கலாம். அதன் மூலம் உறவை மேம்படுத்திக்கொள்ளலாம்.
உங்கள் மகன் செய்யக்கூடாத தவறை செய்திருந்தால் கூட இது போன்ற சொற்களை தயவுசெய்து பயன்படுத்தாதீர்கள். இது அவர்களுக்கு ஒரு கொடுங்கனவு போல் தூங்க விடாது.
பெண் குழந்தைகள் தான் சென்சிட்டிவ். அவர்களிடம் சட்டென்று எதையாவது சொல்லி விட்டால் மனம் உடைந்து அழுது விடுவார்கள்' என்கிற கருத்து பொதுவாக இருந்து வருகிறது. ஆனால் ஆண் குழந்தைகளும் சென்சிடிவ் தான். அவர்கள் அழுது வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்களே தவிர, உள்ளுக்குள்ளே வேதனைப்படுவார்கள்.
சிறு குழந்தையில் ஆரம்பித்து 10 வயது ஆகிவிட்ட மகன் சேட்டையில் ஈடுபட்டால், பெற்றோர் சொல்லும் வார்த்தை இது. இந்த வயதில் ''பி ய மேன்” என்பதற்கு இதில் என்ன இருக்கிறது? இப்படி சொல்லியே வளர்த்தால் பிள்ளைகள் தங்களது குழந்தை பருவத்தில் பாதியை இழந்து வலுக்கட்டாயமாக மனதளவில் வளர்கிறார்கள்.
நீ ஏன் வீட்டிலேயே அடைஞ்சு கிடக்கிற? உன் ஃப்ரெண்ட்ஸ பாரு.. சூப்பரா விளையாடுறாங்க' என்று நச்சரிக்காதீர்கள். அது அவர்களின் விருப்பம். நீங்கள் ஓயாமல் சொல்லும் போது ''ஓ பையன்னா கண்டிப்பா விளையாடனும் போல, அப்போ என்கிட்ட ஏதோ குறை இருக்கோ" என்று தனக்குள் அவர்கள் குழம்பிப்போக வைக்காதீர்கள்.
பொதுவாக பெண்கள் ஆண்களை விட மிக விரைவில் மனதளவில் பக்குவம் அடைந்து விடுவார்கள். இதை உணராமல் பெற்றோர்கள் பேசுவது, உடன் பிறந்தவர் களுடன் நாமே போட்டிக்கான சூழலை அவர்களிடம் விதைப்பது போலாகும். உங்கள் மகன் செய்யக்கூடாத தவறை செய்திருந்தால் கூட இது போன்ற சொற்களை தயவுசெய்து பயன்படுத்தாதீர்கள். இது அவர்களுக்கு ஒரு கொடுங்கனவு போல் தூங்க விடாது.
எங்கே தனது பெற்றோரின் அன்பை, பாசத்தை இழந்து விடுவோமோ என்ற குற்ற வுணர்ச்சியில் தவிப்பார்கள். நீங்கள் உடன் இருந்தாலும் தனிமை அவர்களை வாட்டும். அஞ்சு வயசானாலும் சரி, அம்பது வயசானாலும் சரி, அவனுக்கு அம்மா என்பது அம்மாதான். அக்கா என்பது அக்காதான். பத்து வயசானாலே போதும், 'அம்மாகூட படுக்காத, அக்காகூட படுக்காத.
ஏண்டா... எப்ப பார்த்தாலும் அம்மா முந்தானையே புடுச்சிகிட்டு சுத்துற. நீ பொண்ணா பொறந்திருக்க வேண்டியவன்' என்று சொற்களை தயவு செய்து பிரயோகிக்காதீரக்ள். மொத்ததில் உங்கள் பிள்ளைகள் மனதில் ஆறாத வடுவை, ரணத்தை, குற்ற உணர்வை எப்போதும் ஏற்படுத்தி விடாதீர்கள். அதை எதைக் கொண்டு அழிக்க முடியாது,
சிறு குழந்தையில் ஆரம்பித்து 10 வயது ஆகிவிட்ட மகன் சேட்டையில் ஈடுபட்டால், பெற்றோர் சொல்லும் வார்த்தை இது. இந்த வயதில் ''பி ய மேன்” என்பதற்கு இதில் என்ன இருக்கிறது? இப்படி சொல்லியே வளர்த்தால் பிள்ளைகள் தங்களது குழந்தை பருவத்தில் பாதியை இழந்து வலுக்கட்டாயமாக மனதளவில் வளர்கிறார்கள்.
நீ ஏன் வீட்டிலேயே அடைஞ்சு கிடக்கிற? உன் ஃப்ரெண்ட்ஸ பாரு.. சூப்பரா விளையாடுறாங்க' என்று நச்சரிக்காதீர்கள். அது அவர்களின் விருப்பம். நீங்கள் ஓயாமல் சொல்லும் போது ''ஓ பையன்னா கண்டிப்பா விளையாடனும் போல, அப்போ என்கிட்ட ஏதோ குறை இருக்கோ" என்று தனக்குள் அவர்கள் குழம்பிப்போக வைக்காதீர்கள்.
பொதுவாக பெண்கள் ஆண்களை விட மிக விரைவில் மனதளவில் பக்குவம் அடைந்து விடுவார்கள். இதை உணராமல் பெற்றோர்கள் பேசுவது, உடன் பிறந்தவர் களுடன் நாமே போட்டிக்கான சூழலை அவர்களிடம் விதைப்பது போலாகும். உங்கள் மகன் செய்யக்கூடாத தவறை செய்திருந்தால் கூட இது போன்ற சொற்களை தயவுசெய்து பயன்படுத்தாதீர்கள். இது அவர்களுக்கு ஒரு கொடுங்கனவு போல் தூங்க விடாது.
எங்கே தனது பெற்றோரின் அன்பை, பாசத்தை இழந்து விடுவோமோ என்ற குற்ற வுணர்ச்சியில் தவிப்பார்கள். நீங்கள் உடன் இருந்தாலும் தனிமை அவர்களை வாட்டும். அஞ்சு வயசானாலும் சரி, அம்பது வயசானாலும் சரி, அவனுக்கு அம்மா என்பது அம்மாதான். அக்கா என்பது அக்காதான். பத்து வயசானாலே போதும், 'அம்மாகூட படுக்காத, அக்காகூட படுக்காத.
ஏண்டா... எப்ப பார்த்தாலும் அம்மா முந்தானையே புடுச்சிகிட்டு சுத்துற. நீ பொண்ணா பொறந்திருக்க வேண்டியவன்' என்று சொற்களை தயவு செய்து பிரயோகிக்காதீரக்ள். மொத்ததில் உங்கள் பிள்ளைகள் மனதில் ஆறாத வடுவை, ரணத்தை, குற்ற உணர்வை எப்போதும் ஏற்படுத்தி விடாதீர்கள். அதை எதைக் கொண்டு அழிக்க முடியாது,
பல்வேறு வகையான ஊறுகாய்களை பார்த்து இருப்பீங்க. இன்று பச்சை மிளகு வைத்து ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பச்சை மிளகு - 200 கிராம்,
எலுமிச்சைப்பழம் - 6,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பச்சை மிளகு கொத்து கொத்தாக இருக்கும். இதில் முற்றிய மிளகு உள்ளதாகப் பார்த்து வாங்கவும்.
இந்த மிளகை உதிர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கழுவி தண்ணீரை வடித்துவிட்டு, எலுமிச்சைச்சாறு, தேவையான உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும்.
நன்றாக ஊறியதும் பச்சை நிறம் மாறி, மஞ்சள் நிறமாக ஆகும். அப்போது ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டால் கெட்டுப் போகாமல் இருக்கும். நீண்ட நாள்கள் வைத்திருந்து உபயோகப்படுத்தலாம்.
பச்சை மிளகு - 200 கிராம்,
எலுமிச்சைப்பழம் - 6,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பச்சை மிளகு கொத்து கொத்தாக இருக்கும். இதில் முற்றிய மிளகு உள்ளதாகப் பார்த்து வாங்கவும்.
இந்த மிளகை உதிர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கழுவி தண்ணீரை வடித்துவிட்டு, எலுமிச்சைச்சாறு, தேவையான உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும்.
நன்றாக ஊறியதும் பச்சை நிறம் மாறி, மஞ்சள் நிறமாக ஆகும். அப்போது ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டால் கெட்டுப் போகாமல் இருக்கும். நீண்ட நாள்கள் வைத்திருந்து உபயோகப்படுத்தலாம்.
சிறப்பு: மிளகு, உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி ரத்தத்தை சுத்திகரிக்கும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கொரோனா வைரஸ் மூளைக்குள்ளும் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
வாஷிங்டன் :
கொரோனா வைரஸ் உடலில் பல்வேறு உறுப்புகளை பாதிப்படைய செய்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.
முதலில் நுரையீரலில் நுழையும் கொரோனா வைரஸ் இருமல், காய்ச்சல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. இந்த அறிகுறிகளுக்கு பின்னர் மூச்சு திணறல் ஏற்பட்டு உடல்நிலை மோசமான நிலைக்கு சென்று விடும்.
கொரோனா பற்றிய ஆய்வுகளில் அந்த வைரஸ் நுரையீரலை தவிர இதயம், நரம்பு மண்டலம் உள்ளிட்ட உறுப்புகளையும் பாதிப்படைய செய்கிறது என்பது தெரிய வந்தது.
மேலும் தலைவலி, குழப்பமான மனநிலை, வாந்தி போன்றவையும் கொரோனா வைரசின் அறிகுறிகளாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகளின் அடுத்தடுத்த ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் கொரோனா வைரஸ் மூளைக்குள்ளும் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுதொடர்பாக அமெரிக்காவில் நடத்தப் பட்ட ஆய்வில் கூறி இருப்பதாவது:-
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகளுக்கு தலைவலி, குழப்பம் மற்றும் மயக்கம் ஏற்படுகின்றன. இது கொரோனா வைரஸ் மூளைக்கு நேரடியாக செல்வதன் விளைவாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நோய் எதிர்ப்பு நிபுணர் அகிகோ இவாசாகி தலைமையிலான ஆய்வறிக்கையில், “வைரஸ் மூளைக்குள் கொந்தளிக்க முடிகிறது என்றும், மூளைக்கு அருகே ஆக்சிஜன் செல்களை பாதிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் இதன் பாதிப்பு இன்னும் தெளிவாக தெரியவில்லை” என்று கூறப்பட்டு இருக்கிறது.
இந்த ஆராயச்சி பூர்வாங்க கட்டத்தில்தான் இன்னும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சான்பிரான்சிஸ்கோவில் கலிபோர்னியா பல்கலைக்கழக நரம்பியல் துறை தலைவர் ஆண்ட்ரூ ஜோசப்சன் கூறும்போது, “மூளையில் வைரஸ் நேரடி ஈடுபாடு உள்ளதா, இல்லையா என்பதை புரிந்து கொள்வது அசாதாரணமானது. ஆனாலும் அந்த ஆய்வறிக்கை மதிப்பாய்வுக்கு வரும்வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றார்.
கொரோனா வைரஸ் உடலில் பல்வேறு உறுப்புகளை பாதிப்படைய செய்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.
முதலில் நுரையீரலில் நுழையும் கொரோனா வைரஸ் இருமல், காய்ச்சல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. இந்த அறிகுறிகளுக்கு பின்னர் மூச்சு திணறல் ஏற்பட்டு உடல்நிலை மோசமான நிலைக்கு சென்று விடும்.
கொரோனா பற்றிய ஆய்வுகளில் அந்த வைரஸ் நுரையீரலை தவிர இதயம், நரம்பு மண்டலம் உள்ளிட்ட உறுப்புகளையும் பாதிப்படைய செய்கிறது என்பது தெரிய வந்தது.
மேலும் தலைவலி, குழப்பமான மனநிலை, வாந்தி போன்றவையும் கொரோனா வைரசின் அறிகுறிகளாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகளின் அடுத்தடுத்த ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் கொரோனா வைரஸ் மூளைக்குள்ளும் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுதொடர்பாக அமெரிக்காவில் நடத்தப் பட்ட ஆய்வில் கூறி இருப்பதாவது:-
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகளுக்கு தலைவலி, குழப்பம் மற்றும் மயக்கம் ஏற்படுகின்றன. இது கொரோனா வைரஸ் மூளைக்கு நேரடியாக செல்வதன் விளைவாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நோய் எதிர்ப்பு நிபுணர் அகிகோ இவாசாகி தலைமையிலான ஆய்வறிக்கையில், “வைரஸ் மூளைக்குள் கொந்தளிக்க முடிகிறது என்றும், மூளைக்கு அருகே ஆக்சிஜன் செல்களை பாதிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் இதன் பாதிப்பு இன்னும் தெளிவாக தெரியவில்லை” என்று கூறப்பட்டு இருக்கிறது.
இந்த ஆராயச்சி பூர்வாங்க கட்டத்தில்தான் இன்னும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சான்பிரான்சிஸ்கோவில் கலிபோர்னியா பல்கலைக்கழக நரம்பியல் துறை தலைவர் ஆண்ட்ரூ ஜோசப்சன் கூறும்போது, “மூளையில் வைரஸ் நேரடி ஈடுபாடு உள்ளதா, இல்லையா என்பதை புரிந்து கொள்வது அசாதாரணமானது. ஆனாலும் அந்த ஆய்வறிக்கை மதிப்பாய்வுக்கு வரும்வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றார்.
சில நேரங்களில், உங்கள் உறவை முறித்துக் கொள்ளும் அல்லது இருவருக்கும் இடையில் கசப்பை ஏற்படுத்தும் சில விஷயங்களை பற்றி உங்கள் காதலனுடன் பேசாமல் இருப்பது நல்லது.
காதலிக்கும் ஆணோ பெண்ணோ தங்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் எதையும் மறக்கக் கூடாது. வெளிப்படையாக சொல்லிவிட்டால் பிரச்சினை எதுவும் வராது என்று சிலர் சொல்லுவார்கள். ஆனால் சிலரோ எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்லிவிட்டால், அதுவே நிறைய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று சொல்வார்கள். உண்மைதான் என்ன? அதில் குறிப்பாக பெண்கள் எனனென்ன விஷயங்களை தங்களுடைய காதலரிடம் பகிர்ந்து கொள்ளவே கூடாது என்பது குறித்து பார்க்கலாம்.
ஓர் நல்ல கலந்துரையாடல் தான் இருவர் நெருக்கமாவதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. நாம் அனைவரும் விரும்புவது என்னவென்றால், ஒரு சோர்வான நாளின் முடிவில், வீடு திரும்பியதும் நமக்காக எவரேனும் காத்திருக்க வேண்டும்; மற்றும் அன்றைய நிகழ்வுகளை அவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதே.
ஆனால் சில நேரங்களில், உங்கள் உறவை முறித்துக் கொள்ளும் அல்லது இருவருக்கும் இடையில் கசப்பை ஏற்படுத்தும் சில விஷயங்களை பற்றி உங்கள் காதலனுடன் பேசாமல் இருப்பது நல்லது. எல்லாவற்றையும் தனது காதலனுடன் பகிர்ந்து கொள்ளும் நேர்மையான காதலியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தவறில்லை. இருப்பினும், மிகவும் நேர்மையாக இருப்பது, சில நேரங்களில் இருவரும் பகிர்ந்து கொள்ளக்கூடிய உணர்ச்சிகரமான உறவுகளை சேதப்படுத்தும். உங்கள் உறவை எந்தவொரு சேதத்திலிருந்தும் காப்பாற்ற, மற்றும் நீங்கள் உங்கள் காதலனுடன் கலந்துரையாடுவதை தவிர்க்க வேண்டிய சில விஷயங்களை நாங்கள் இங்கே பட்டியலிட்டுள்ளோம்.
உங்கள் காதலனின் குடும்பத்தை, குறிப்பாக அவரது தாயை நீங்கள் விரும்பவில்லை என்று ஒருபோதும் சொல்லாதீர்கள்... அது ஆண்களுக்கு உண்மையிலேயே உள்ளூற கோபத்தை ஏற்படுத்தும்.
நம் பெற்றோர் என்று வரும்போது, நாம் அனைவரும் கொஞ்சம் உணர்ச்சிவசப்படுவது என்பது பொதுவான ஒன்று தான். அவரது பெற்றோருடன் ஆரோக்கியமான பேச்சில் ஈடுபடுங்கள். சில நேரங்களில் அவரது தாயின் கருத்துக்களால் உங்கள் மனம் புண்படலாம்; இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அதை காரணம் காட்டி கோவப்பட்டு சண்டைபோடுவதற்கு பதிலாக, இருவரும் பொறுமையாகப் பேசித் தீர்த்து கொள்வது தான் நல்லது. அவர், அவரது பெற்றோருடன் இருக்கும் கருத்து வேறுபாடுகளைப் பற்றி விவாதிப்பது இயல்பு; ஆனால், அவர்களைப் பற்றி புகார் செய்யும்போது நீங்கள் அமைதியாக இருப்பது தான் நல்லது. ஏனெனில் நீங்கள் உங்கள் கருத்துக்களை கூறினால் அது அவர்களுக்கு தவறாக தெரியலாம்.
உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் இடையில் இருக்கக்கூடிய ரகசியத்தை பற்றி ஒருபோதும் உங்கள் காதலனிடம் சொல்லாதீர்கள்
நீங்கள் உங்கள் காதலனுடன் பகிர்ந்து கொள்ளும் சிறிய விஷயங்கள் தான் ஓர் நல்லஆரோக்கியமான உறவுகளுக்கு வழி வகுக்கிறது. அது உங்கள் இருவருக்கும் இடையிலான பிணைப்பை பலப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், வலுவான நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது. ஆனால், உங்களின் நெருங்கிய நண்பர் தனது ஆழ்ந்த ரகசியத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டால், அதை பற்றி நீங்கள் உங்கள் காதலனுடன் கிசுகிசுக்க முடிவு செய்வது நல்ல விஷயம் அல்ல. அவ்வாறு செய்வது உங்கள் நண்பரின் நம்பிக்கையை மீறுவதாகும். உங்கள் காதலனை நீங்கள் நம்புவது சரி தான். ஆனால், அதற்காக உங்கள் நண்பரின் நம்பிக்கையை நீங்கள் உடைக்க நினைப்பது தவறு.
உங்கள் காதலனின் செலவுகள் பற்றி பேசுவதை தவிருங்கள், பணம் வரவு செலவு பற்றியெல்லாம் பேசாதீர்கள். அது எப்போதிருந்தாலும் சிக்கல் தான். ஒரு சரியான உறவு என்பது, இருவரும் ஒரே பாதையில் நடப்பது தான்; மற்றும் இருவரும் ஒரே பக்கத்தில் இருப்பது. ஆனால், உங்கள் காதலனின் செலவுகளைப் பற்றி விவாதிப்பது நல்ல யோசனையாக இருக்காது. ஏனெனில், அவர்கள் ஏதேனும் விலையுயர்ந்த கேஜெட்டை வாங்குவதில் பணத்தை செலவிடுவது, மற்றும் ஒரு வார இறுதியில் அவர்களின் நண்பர்களுடனான பயணத்தின் போது அவர்கள் அதிக பணம் செலவழித்ததை பற்றி கேட்பது போன்ற விஷயங்களை எந்த ஒரு காதலரும் விரும்பமாட்டார். உங்கள் காதலன், வார இறுதியில் அவருக்கு ஏற்றவாறு சந்தோஷமாக செலவிட்டு மகிழ வேண்டும் என்று விரும்புவதில் எந்த தவறும் இல்லை. அது உங்களின் முக்கிய கவலையாகவும் இருக்கக்கூடாது.
உங்கள் காதலனின் முன்னாள் காதலி பற்றி பேசுவதை தவிருங்கள். ஒரு நல்ல காரணத்திற்காக, பழைய விஷயங்களை பற்றி பேசாமல் இருப்பதே நல்லது. அவரது முன்னாள் காதலி, உங்களின் மோசமான கவலையாக இருக்கலாம். ஆனால், அவரது பேஷன் சென்ஸ் அல்லது அவரது தோற்றங்களைப் பற்றி விவாதிப்பது, உங்களை உங்கள் காதலனின் பார்வையில் கொஞ்சம் குறைத்து எடை போடா வழிவகுக்கும். மேலும், உங்களை பற்றிய நல்ல அபிப்ராயத்தை மாற்றிவிடும். உங்கள் காதலனின் முன்னாள் காதலி பற்றி பேசுவதனால், நீங்கள் இருவரும் உங்களின் பொன்னான நேரத்தை வீணாக்குவது மட்டுமல்லாமல், உங்கள் உறவின் வளர்ச்சியை தடுக்க நீங்களே வாய்ப்பை ஏற்படுத்தி கொள்கிறீர்கள்.
ஓர் நல்ல கலந்துரையாடல் தான் இருவர் நெருக்கமாவதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. நாம் அனைவரும் விரும்புவது என்னவென்றால், ஒரு சோர்வான நாளின் முடிவில், வீடு திரும்பியதும் நமக்காக எவரேனும் காத்திருக்க வேண்டும்; மற்றும் அன்றைய நிகழ்வுகளை அவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதே.
ஆனால் சில நேரங்களில், உங்கள் உறவை முறித்துக் கொள்ளும் அல்லது இருவருக்கும் இடையில் கசப்பை ஏற்படுத்தும் சில விஷயங்களை பற்றி உங்கள் காதலனுடன் பேசாமல் இருப்பது நல்லது. எல்லாவற்றையும் தனது காதலனுடன் பகிர்ந்து கொள்ளும் நேர்மையான காதலியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தவறில்லை. இருப்பினும், மிகவும் நேர்மையாக இருப்பது, சில நேரங்களில் இருவரும் பகிர்ந்து கொள்ளக்கூடிய உணர்ச்சிகரமான உறவுகளை சேதப்படுத்தும். உங்கள் உறவை எந்தவொரு சேதத்திலிருந்தும் காப்பாற்ற, மற்றும் நீங்கள் உங்கள் காதலனுடன் கலந்துரையாடுவதை தவிர்க்க வேண்டிய சில விஷயங்களை நாங்கள் இங்கே பட்டியலிட்டுள்ளோம்.
உங்கள் காதலனின் குடும்பத்தை, குறிப்பாக அவரது தாயை நீங்கள் விரும்பவில்லை என்று ஒருபோதும் சொல்லாதீர்கள்... அது ஆண்களுக்கு உண்மையிலேயே உள்ளூற கோபத்தை ஏற்படுத்தும்.
நம் பெற்றோர் என்று வரும்போது, நாம் அனைவரும் கொஞ்சம் உணர்ச்சிவசப்படுவது என்பது பொதுவான ஒன்று தான். அவரது பெற்றோருடன் ஆரோக்கியமான பேச்சில் ஈடுபடுங்கள். சில நேரங்களில் அவரது தாயின் கருத்துக்களால் உங்கள் மனம் புண்படலாம்; இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அதை காரணம் காட்டி கோவப்பட்டு சண்டைபோடுவதற்கு பதிலாக, இருவரும் பொறுமையாகப் பேசித் தீர்த்து கொள்வது தான் நல்லது. அவர், அவரது பெற்றோருடன் இருக்கும் கருத்து வேறுபாடுகளைப் பற்றி விவாதிப்பது இயல்பு; ஆனால், அவர்களைப் பற்றி புகார் செய்யும்போது நீங்கள் அமைதியாக இருப்பது தான் நல்லது. ஏனெனில் நீங்கள் உங்கள் கருத்துக்களை கூறினால் அது அவர்களுக்கு தவறாக தெரியலாம்.
உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் இடையில் இருக்கக்கூடிய ரகசியத்தை பற்றி ஒருபோதும் உங்கள் காதலனிடம் சொல்லாதீர்கள்
நீங்கள் உங்கள் காதலனுடன் பகிர்ந்து கொள்ளும் சிறிய விஷயங்கள் தான் ஓர் நல்லஆரோக்கியமான உறவுகளுக்கு வழி வகுக்கிறது. அது உங்கள் இருவருக்கும் இடையிலான பிணைப்பை பலப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், வலுவான நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது. ஆனால், உங்களின் நெருங்கிய நண்பர் தனது ஆழ்ந்த ரகசியத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டால், அதை பற்றி நீங்கள் உங்கள் காதலனுடன் கிசுகிசுக்க முடிவு செய்வது நல்ல விஷயம் அல்ல. அவ்வாறு செய்வது உங்கள் நண்பரின் நம்பிக்கையை மீறுவதாகும். உங்கள் காதலனை நீங்கள் நம்புவது சரி தான். ஆனால், அதற்காக உங்கள் நண்பரின் நம்பிக்கையை நீங்கள் உடைக்க நினைப்பது தவறு.
உங்கள் காதலனின் செலவுகள் பற்றி பேசுவதை தவிருங்கள், பணம் வரவு செலவு பற்றியெல்லாம் பேசாதீர்கள். அது எப்போதிருந்தாலும் சிக்கல் தான். ஒரு சரியான உறவு என்பது, இருவரும் ஒரே பாதையில் நடப்பது தான்; மற்றும் இருவரும் ஒரே பக்கத்தில் இருப்பது. ஆனால், உங்கள் காதலனின் செலவுகளைப் பற்றி விவாதிப்பது நல்ல யோசனையாக இருக்காது. ஏனெனில், அவர்கள் ஏதேனும் விலையுயர்ந்த கேஜெட்டை வாங்குவதில் பணத்தை செலவிடுவது, மற்றும் ஒரு வார இறுதியில் அவர்களின் நண்பர்களுடனான பயணத்தின் போது அவர்கள் அதிக பணம் செலவழித்ததை பற்றி கேட்பது போன்ற விஷயங்களை எந்த ஒரு காதலரும் விரும்பமாட்டார். உங்கள் காதலன், வார இறுதியில் அவருக்கு ஏற்றவாறு சந்தோஷமாக செலவிட்டு மகிழ வேண்டும் என்று விரும்புவதில் எந்த தவறும் இல்லை. அது உங்களின் முக்கிய கவலையாகவும் இருக்கக்கூடாது.
உங்கள் காதலனின் முன்னாள் காதலி பற்றி பேசுவதை தவிருங்கள். ஒரு நல்ல காரணத்திற்காக, பழைய விஷயங்களை பற்றி பேசாமல் இருப்பதே நல்லது. அவரது முன்னாள் காதலி, உங்களின் மோசமான கவலையாக இருக்கலாம். ஆனால், அவரது பேஷன் சென்ஸ் அல்லது அவரது தோற்றங்களைப் பற்றி விவாதிப்பது, உங்களை உங்கள் காதலனின் பார்வையில் கொஞ்சம் குறைத்து எடை போடா வழிவகுக்கும். மேலும், உங்களை பற்றிய நல்ல அபிப்ராயத்தை மாற்றிவிடும். உங்கள் காதலனின் முன்னாள் காதலி பற்றி பேசுவதனால், நீங்கள் இருவரும் உங்களின் பொன்னான நேரத்தை வீணாக்குவது மட்டுமல்லாமல், உங்கள் உறவின் வளர்ச்சியை தடுக்க நீங்களே வாய்ப்பை ஏற்படுத்தி கொள்கிறீர்கள்.
பாலியல் பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகள் கடுமையான மனஉளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். அவர்களுக்கு என்னென்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்!
பெற்றோர்கள் எவ்வளவு கவனமாக இருந்தாலும் இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் பெருகிக்கொண்டுதான் இருக்கின்றன. அதனால் குழந்தைகளோடு பழகுகிறவர்கள் அனைவரையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கக்கூடாது என்றாலும், மிகுந்த கண்காணிப்பு தேவைப்படுகிறது. பெண்குழந்தைகள் மட்டுமின்றி ஆண் குழந்தைகளும் பெருமளவு பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார்கள்.
பாலியல் பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகள் கடுமையான மனஉளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். அவர்களுக்கு என்னென்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்!
பள்ளிக்கு செல்லும் சிறுவர், சிறுமியர்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகியிருந்தால் அவர்களுக்கு படிப்பில் கவனம் குறையும். விளையாட்டில் ஆர்வம் உள்ள குழந்தைகள் அதில் இருந்தும் விடுபடும். தவிக்கும் மனதோடு அடிக்கடி தனிமையில் உட்கார விரும்பும். வழக்கமான உணவுப் பழக்கத்தில் இருந்தும் மாறுபடுவார்கள். சுமாராக சாப்பிடும் வழக்கம்கொண்டவர்களாக இருந்தால், ஒருவேளை மிக அதிகமான அளவில் சாப்பிடலாம் அல்லது உணவை முழுவதுமாக புறக்கணிக்கலாம். இதற்கு ‘ஈட்டிங் டிஸ்ஆர்டர்’ என்று பெயர். பாலியல் பாதிப்பிற்கு உள்ளான சிறுவர் சிறுமியர்களில் பெரும்பாலானவர்கள் இந்த முரண்பாடான உணவுப் பழக்கத்திற்கு உள்ளாவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தேவையற்ற சிந்தனைகள், கவலைகளுக்கு உள்ளாகி அவர்கள் மனச்சிதைவுக்கும் ஆளாகுவார்கள்.
சிறுவயதில் பாலியல் பாதிப்பிற்கு உள்ளாகுபவர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு அது ஆறாத வடுவாகிவிடும். அப்படிப்பட்டவர்கள் இளம் வயதில் காதலுக்கு எதிராக செயல்படுவார்கள். அவர்களுக்கு திருமணமும், அதற்கு பிந்தைய தாம்பத்ய உறவும் பயம் தருவதாக அமைந்துவிடும். அதனால் திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்பார்கள். திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்வது பற்றியும் சிந்திப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் பாலியல் உறவை வலி நிறைந்த கசப்பான அனுபவமாக கருதுவார்கள். பாலியல் பாதிப்புக்கு உள்ளானவர்களில் ஒரு சிலர் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் உறவு வைத்துக்கொள்ளும் நிலைக்கும் செல்லலாம்.
சிறுவயதிலே பாலியல் பாதிப்புக்கு உள்ளானவர்களிடம் பயம் அதிகமாக இருக்கும். எதற்கெடுத்தாலும் பயம் கொள்வார்கள். அவர்களிடம் தாழ்வுமனப்பான்மையும் உருவாகிவிடும். அதனால் அவர்களது எதிர்காலம் பாதிக்கப்படும். மற்றவர்களிடம் பேசவும், பழகவும் விரும்பாமல் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொள்வார்கள்.
பாலியல் வன்முறையில் சிக்கியவர்களில் சிலர் தொடர்ந்து அதையே நினைத்து விரக்தியான மனநிலைக்கு சென்றுவிடுகிறார்கள். தப்பு என தெரிந்தும், பழிவாங்கும் நோக்கத்தில் தன்னைவிட வயது குறைந்தவர்களை பாலியல் ரீதியாக அணுகலாம். பெற்றோரின் கண்டிப்புக்கு பயந்து வீட்டை விட்டு ஓடும் மனநிலைக்கும் உள்ளாகலாம். எதிர்காலத்தில் தன் உடலைக்காட்டி மற்றவர்களை வசீகரிக்கும் நிலைக்கும் ஒருசில பெண்கள் செல்லலாம்.
இப்படிப்பட்ட பல்வேறு ரீதியான பாதிப்புகள், பாலியல் வன்முறைக்கு உள்ளான குழந்தைகளுக்கு ஏற்படுவதால் பெற்றோர்களும், சமூகமும் தனிக்கவனம் செலுத்தி அவர்களை பாதுகாக்கவேண்டும்.
சிறுவயதில் பாலியல் பாதிப்பிற்கு உள்ளாகுபவர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு அது ஆறாத வடுவாகிவிடும். அப்படிப்பட்டவர்கள் இளம் வயதில் காதலுக்கு எதிராக செயல்படலாம்.
பாலியல் பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகள் கடுமையான மனஉளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். அவர்களுக்கு என்னென்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்!
பள்ளிக்கு செல்லும் சிறுவர், சிறுமியர்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகியிருந்தால் அவர்களுக்கு படிப்பில் கவனம் குறையும். விளையாட்டில் ஆர்வம் உள்ள குழந்தைகள் அதில் இருந்தும் விடுபடும். தவிக்கும் மனதோடு அடிக்கடி தனிமையில் உட்கார விரும்பும். வழக்கமான உணவுப் பழக்கத்தில் இருந்தும் மாறுபடுவார்கள். சுமாராக சாப்பிடும் வழக்கம்கொண்டவர்களாக இருந்தால், ஒருவேளை மிக அதிகமான அளவில் சாப்பிடலாம் அல்லது உணவை முழுவதுமாக புறக்கணிக்கலாம். இதற்கு ‘ஈட்டிங் டிஸ்ஆர்டர்’ என்று பெயர். பாலியல் பாதிப்பிற்கு உள்ளான சிறுவர் சிறுமியர்களில் பெரும்பாலானவர்கள் இந்த முரண்பாடான உணவுப் பழக்கத்திற்கு உள்ளாவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தேவையற்ற சிந்தனைகள், கவலைகளுக்கு உள்ளாகி அவர்கள் மனச்சிதைவுக்கும் ஆளாகுவார்கள்.
சிறுவயதில் பாலியல் பாதிப்பிற்கு உள்ளாகுபவர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு அது ஆறாத வடுவாகிவிடும். அப்படிப்பட்டவர்கள் இளம் வயதில் காதலுக்கு எதிராக செயல்படுவார்கள். அவர்களுக்கு திருமணமும், அதற்கு பிந்தைய தாம்பத்ய உறவும் பயம் தருவதாக அமைந்துவிடும். அதனால் திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்பார்கள். திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்வது பற்றியும் சிந்திப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் பாலியல் உறவை வலி நிறைந்த கசப்பான அனுபவமாக கருதுவார்கள். பாலியல் பாதிப்புக்கு உள்ளானவர்களில் ஒரு சிலர் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் உறவு வைத்துக்கொள்ளும் நிலைக்கும் செல்லலாம்.
சிறுவயதிலே பாலியல் பாதிப்புக்கு உள்ளானவர்களிடம் பயம் அதிகமாக இருக்கும். எதற்கெடுத்தாலும் பயம் கொள்வார்கள். அவர்களிடம் தாழ்வுமனப்பான்மையும் உருவாகிவிடும். அதனால் அவர்களது எதிர்காலம் பாதிக்கப்படும். மற்றவர்களிடம் பேசவும், பழகவும் விரும்பாமல் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொள்வார்கள்.
பாலியல் வன்முறையில் சிக்கியவர்களில் சிலர் தொடர்ந்து அதையே நினைத்து விரக்தியான மனநிலைக்கு சென்றுவிடுகிறார்கள். தப்பு என தெரிந்தும், பழிவாங்கும் நோக்கத்தில் தன்னைவிட வயது குறைந்தவர்களை பாலியல் ரீதியாக அணுகலாம். பெற்றோரின் கண்டிப்புக்கு பயந்து வீட்டை விட்டு ஓடும் மனநிலைக்கும் உள்ளாகலாம். எதிர்காலத்தில் தன் உடலைக்காட்டி மற்றவர்களை வசீகரிக்கும் நிலைக்கும் ஒருசில பெண்கள் செல்லலாம்.
இப்படிப்பட்ட பல்வேறு ரீதியான பாதிப்புகள், பாலியல் வன்முறைக்கு உள்ளான குழந்தைகளுக்கு ஏற்படுவதால் பெற்றோர்களும், சமூகமும் தனிக்கவனம் செலுத்தி அவர்களை பாதுகாக்கவேண்டும்.
சிறுவயதில் பாலியல் பாதிப்பிற்கு உள்ளாகுபவர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு அது ஆறாத வடுவாகிவிடும். அப்படிப்பட்டவர்கள் இளம் வயதில் காதலுக்கு எதிராக செயல்படலாம்.
உடலுக்கு புத்துணர்ச்சியும், உடல் சூட்டை குறைக்கவும் உதவும் இளநீருடன் சியா விதை, லெமன் சேர்த்து சத்தான பானம் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
இளநீர் - 1 கப்
சியா விதைகள் - 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - சிறிதளவு
செய்முறை
இளநீரில் சியா விதைகளைப் போட்டு 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
அடுத்து இதனுடன் எலுமிச்சை சாறு கலந்தால் இளநீர்- சியா பானம் ரெடி.
இளநீர் - 1 கப்
சியா விதைகள் - 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - சிறிதளவு
செய்முறை
இளநீரில் சியா விதைகளைப் போட்டு 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
அடுத்து இதனுடன் எலுமிச்சை சாறு கலந்தால் இளநீர்- சியா பானம் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






