என் மலர்
ஆரோக்கியம்
ஆப்பிள் பழத்தை விட சக்தி வாய்ந்ததாக நெல்லிக்காய் விளங்குகிறது. மேலும் ஈரலை தூண்டி, நன்கு செயல்பட வைத்து கழிவுகளை வெளியேற்ற நெல்லிக்காய் உதவுகிறது.
வேறு எந்த வகை காய்கறி, பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் ‘சி’ 600 மில்லிகிராம் உள்ளது. கால்சியம் 50 மில்லிகிராம், பாஸ்பரஸ்-20 மில்லிகிராம், இரும்புச்சத்து-1.2 மில்லிகிராம் இருக்கிறது. ஆப்பிள் பழத்தை விட சக்தி வாய்ந்ததாக நெல்லிக்காய் விளங்குகிறது. ஈரலை தூண்டி, நன்கு செயல்பட வைத்து கழிவுகளை வெளியேற்ற நெல்லிக்காய் உதவுகிறது. தலைமுடி உதிராமல், வளர்ந்து, நரைமுடி தோன்றுவதை தவிர்க்கிறது. ஜீரண சக்தியை அதிகரித்து, தாதுக்களை நம் உடல் ஏற்று கொள்ள துணை புரிகிறது. கண்களுக்கு தெளிவை கொடுக்கிறது.
நுரையீரலை பலப்படுத்தி சுவாச நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது. நரம்பு மண்டலத்தை தூண்டி வேலை செய்கிறது. மூளை செல்களுக்கு புத்துணர்ச்சியளிக்கிறது. இதனால் மனத்தெளிவு, புத்திக்கூர்மை மற்றும் ஞாபசக்தி உண்டாகிறது. உடல் எடையை கூட்டாமல் தசைகளுக்கு பலம் அளிக்கக் கூடிய தன்மை நெல்லிக்காய்க்கு உண்டு. நீரிழிவை கட்டுப்படுத்தும் சக்தி நெல்லிக்காயில் உள்ளது. இதில் வைட்டமின் ‘சி’ சத்து அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது.
நெல்லிக்காய் கிடைக்காத காலங்களில் காய்ந்த நெல்லிக்காயை (நெல்லிமுள்ளி) பயன்படுத்தலாம். இதற்குரிய சக்தி காய்ந்த பின்னும் குறைவதில்லை. எல்லா வயதினரும் இதை சாப்பிடலாம். குழந்தைகளுக்கு நெல்லிக்காய் லேகியம் தினம் கொடுக்க சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதுடன், மூளை வளர்ச்சியும், புத்திக் கூர்மையும் ஏற்படும். ஆயுர்வேத சக்தி மருந்து நெல்லிக்காயால் தான் தயார் செய்யப்படுகிறது.
நுரையீரலை பலப்படுத்தி சுவாச நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது. நரம்பு மண்டலத்தை தூண்டி வேலை செய்கிறது. மூளை செல்களுக்கு புத்துணர்ச்சியளிக்கிறது. இதனால் மனத்தெளிவு, புத்திக்கூர்மை மற்றும் ஞாபசக்தி உண்டாகிறது. உடல் எடையை கூட்டாமல் தசைகளுக்கு பலம் அளிக்கக் கூடிய தன்மை நெல்லிக்காய்க்கு உண்டு. நீரிழிவை கட்டுப்படுத்தும் சக்தி நெல்லிக்காயில் உள்ளது. இதில் வைட்டமின் ‘சி’ சத்து அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது.
நெல்லிக்காய் கிடைக்காத காலங்களில் காய்ந்த நெல்லிக்காயை (நெல்லிமுள்ளி) பயன்படுத்தலாம். இதற்குரிய சக்தி காய்ந்த பின்னும் குறைவதில்லை. எல்லா வயதினரும் இதை சாப்பிடலாம். குழந்தைகளுக்கு நெல்லிக்காய் லேகியம் தினம் கொடுக்க சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதுடன், மூளை வளர்ச்சியும், புத்திக் கூர்மையும் ஏற்படும். ஆயுர்வேத சக்தி மருந்து நெல்லிக்காயால் தான் தயார் செய்யப்படுகிறது.
உப்பு, காரம், வாசனை இந்த மூன்றுக்காகவும், பல்வேறு வகையான பொருட்களை இயற்கை உணவுகளுடன் சேர்ப்பதால், உணவுகளில் இருக்கும் சக்தி போகின்றன.
மனிதன் என்றைக்கு சமையல் செய்து சாப்பிட தொடங்கினானோ, அன்றே ஜீரண உறுப்புகளுக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பித்து விட்டான் என்று தான் சொல்ல வேண்டும். உணவு தயாரிப்பதை ஆறு வகையாக சொல்லலாம். இயற்கை உணவுகள், பதப்படுத்தியவை, அவித்தல், வேக வைத்தல், வறுத்தல், பொரித்தல் ஆகியவை ஆகும்.
பச்சை காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை கழுவி, நறுக்கி சிறு சிறு துண்டுகளாக்கி அப்படியே சாப்பிடுவது அல்லது சுவைக்காக சிறிது உப்பு, மிளகு போன்ற பொருட்களை சேர்த்து ‘சாலட்’ முறையில் சாப்பிடுவது, கேரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், தக்காளி, தேங்காய், வெங்காயம் போன்றவற்றை இயற்கை உணவுகள் என சொல்லலாம். இவற்றில் உடலுக்கு தேவையான எல்லா சத்துக்களும் மிகுந்து இருக்கும். இந்த உணவுகளில் நார்ச்சத்து மிகுந்திருக்கும் என்பதால் செரிமானம் விரைவாக நடக்க முடியும். அதனால் மலச்சிக்கல் வராது. உடலில் நோய் எதிர்ப்பு சக்திகள் மிக அதிகமாக உண்டாகும்.
உடலுக்கு உப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு போன்ற சுவைகளும் கட்டாயம் தேவை. அவை இயற்கை உணவுகளில் இல்லையே என்பார்கள். இயற்கை உணவுகளை உண்ணும் போது உடலுக்கு தேவையான மற்ற சத்துக்கள் இந்த உணவுகளில் இல்லையே என்பார்கள். இயற்கை உணவுகளை உண்ணும் போது உடலுக்கு தேவையான மற்ற சத்துக்களை இந்த உணவுகளில் இருந்தே உடல் பெற்றுக் கொள்ளும் என்பது தான் நிஜம். இயற்கை உணவுகளை அப்படியே சாப்பிடாமல், சுவைக்காக சில மாற்றங்கள் செய்து கொள்ளலாம்.
பாலை பதப்படுத்தி வைத்து தயிர், மோர், வெண்ணை என மாற்றுவது, திராட்சை போன்ற பழங்களை காய வைத்து பதப்படுத்தி சாப்பிடுவது, தானியங்களை ஊற வைத்து முளை கட்டிய பின்னர் அதனை அப்படியே சாப்பிடுவது. சர்க்கரையுடன் எலுமிச்சை கலந்து தேநீராக குடிப்பது என இயற்கை பொருட்களையே பல்வேறு மாற்றங்கள் செய்து சாப்பிடலாம். பெரும்பாலும் காட்டில் வாழும் ஆதிவாசிகள் இப்படிப்பட்ட உணவுகளையே அதிகம் சாப்பிடுகிறார்கள்.
செரிமானத்தில் எவ்வித பிரச்சனையும் இருக்காது என்பதால், உறுப்புகள் எளிதாக செயல்பட்டு நல்ல நோய் எதிர்ப்பு சக்தி பெற்று உடலுக்கு நல்ல வலிமை தரும். நெருப்பு மூட்டி செய்யப்படும் சமையலில் மிக சிறப்பான உணவுகள் என்றால் அவித்தல் முறையில் பெறப்படும் உணவுகளே. இயற்கை உணவுகள் அல்லது தானியத்தை அரைத்து, திரித்து அவிக்கப்படும் உணவுகளும் செரிமானத்திற்கு எளிமையானதே. இட்லியும், இந்த வகையில் இடம் பெறுகிறது என்றாலும், அதிகமாக மாவு புளிப்படைவது உடலுக்கு நல்லதல்ல. அவித்தல் முறையில் சத்துக்கள் முழுமையாக வெளியேறி விடுவதில்லை என்பதாலும் உணவு செரிமானத்திற்கு அதிக தொந்தரவு இருக்காது என்பதாலும் இந்த முறை ஏற்றுக்கொள்ள கூடியதே.
பிறந்த குழந்தைக்கு முதன் முதலில் உருளைக்கிழங்கு அவித்து கொடுப்பதும், நோயாளிகளுக்கு கஞ்சி, இட்லி போன்றவை கொடுப்பதும் ஓரளவு நாக்குக்கும் சுவையாக இருக்கும், செரிமானத்திற்கும் எளிதாக இருக்கும் என்பதால் தான். இதுவரை நாம் பார்த்து வந்த உணவு வகைகளில் எல்லாம் சுவைக்காக செயற்கை பொருட்கள் அதிகமாக சேர்க்கப்படுவதில்லை. ஆனால் வேக வைக்கும் பொழுது மசாலா பொருட்கள் இடம் பெற தொடங்குகிறது. உப்பு, காரம், வாசனை இந்த மூன்றுக்காகவும், பல்வேறு வகையான பொருட்களை இயற்கை உணவுகளுடன் சேர்ப்பதால், உணவுகளில் இருக்கும் சக்தி போகின்றன.
பச்சை காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை கழுவி, நறுக்கி சிறு சிறு துண்டுகளாக்கி அப்படியே சாப்பிடுவது அல்லது சுவைக்காக சிறிது உப்பு, மிளகு போன்ற பொருட்களை சேர்த்து ‘சாலட்’ முறையில் சாப்பிடுவது, கேரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், தக்காளி, தேங்காய், வெங்காயம் போன்றவற்றை இயற்கை உணவுகள் என சொல்லலாம். இவற்றில் உடலுக்கு தேவையான எல்லா சத்துக்களும் மிகுந்து இருக்கும். இந்த உணவுகளில் நார்ச்சத்து மிகுந்திருக்கும் என்பதால் செரிமானம் விரைவாக நடக்க முடியும். அதனால் மலச்சிக்கல் வராது. உடலில் நோய் எதிர்ப்பு சக்திகள் மிக அதிகமாக உண்டாகும்.
உடலுக்கு உப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு போன்ற சுவைகளும் கட்டாயம் தேவை. அவை இயற்கை உணவுகளில் இல்லையே என்பார்கள். இயற்கை உணவுகளை உண்ணும் போது உடலுக்கு தேவையான மற்ற சத்துக்கள் இந்த உணவுகளில் இல்லையே என்பார்கள். இயற்கை உணவுகளை உண்ணும் போது உடலுக்கு தேவையான மற்ற சத்துக்களை இந்த உணவுகளில் இருந்தே உடல் பெற்றுக் கொள்ளும் என்பது தான் நிஜம். இயற்கை உணவுகளை அப்படியே சாப்பிடாமல், சுவைக்காக சில மாற்றங்கள் செய்து கொள்ளலாம்.
பாலை பதப்படுத்தி வைத்து தயிர், மோர், வெண்ணை என மாற்றுவது, திராட்சை போன்ற பழங்களை காய வைத்து பதப்படுத்தி சாப்பிடுவது, தானியங்களை ஊற வைத்து முளை கட்டிய பின்னர் அதனை அப்படியே சாப்பிடுவது. சர்க்கரையுடன் எலுமிச்சை கலந்து தேநீராக குடிப்பது என இயற்கை பொருட்களையே பல்வேறு மாற்றங்கள் செய்து சாப்பிடலாம். பெரும்பாலும் காட்டில் வாழும் ஆதிவாசிகள் இப்படிப்பட்ட உணவுகளையே அதிகம் சாப்பிடுகிறார்கள்.
செரிமானத்தில் எவ்வித பிரச்சனையும் இருக்காது என்பதால், உறுப்புகள் எளிதாக செயல்பட்டு நல்ல நோய் எதிர்ப்பு சக்தி பெற்று உடலுக்கு நல்ல வலிமை தரும். நெருப்பு மூட்டி செய்யப்படும் சமையலில் மிக சிறப்பான உணவுகள் என்றால் அவித்தல் முறையில் பெறப்படும் உணவுகளே. இயற்கை உணவுகள் அல்லது தானியத்தை அரைத்து, திரித்து அவிக்கப்படும் உணவுகளும் செரிமானத்திற்கு எளிமையானதே. இட்லியும், இந்த வகையில் இடம் பெறுகிறது என்றாலும், அதிகமாக மாவு புளிப்படைவது உடலுக்கு நல்லதல்ல. அவித்தல் முறையில் சத்துக்கள் முழுமையாக வெளியேறி விடுவதில்லை என்பதாலும் உணவு செரிமானத்திற்கு அதிக தொந்தரவு இருக்காது என்பதாலும் இந்த முறை ஏற்றுக்கொள்ள கூடியதே.
பிறந்த குழந்தைக்கு முதன் முதலில் உருளைக்கிழங்கு அவித்து கொடுப்பதும், நோயாளிகளுக்கு கஞ்சி, இட்லி போன்றவை கொடுப்பதும் ஓரளவு நாக்குக்கும் சுவையாக இருக்கும், செரிமானத்திற்கும் எளிதாக இருக்கும் என்பதால் தான். இதுவரை நாம் பார்த்து வந்த உணவு வகைகளில் எல்லாம் சுவைக்காக செயற்கை பொருட்கள் அதிகமாக சேர்க்கப்படுவதில்லை. ஆனால் வேக வைக்கும் பொழுது மசாலா பொருட்கள் இடம் பெற தொடங்குகிறது. உப்பு, காரம், வாசனை இந்த மூன்றுக்காகவும், பல்வேறு வகையான பொருட்களை இயற்கை உணவுகளுடன் சேர்ப்பதால், உணவுகளில் இருக்கும் சக்தி போகின்றன.
3 வயதை கடந்த பிறகும் குழந்தைகள் பேசுவதற்கு தாமதித்தாலோ, வார்த்தைகளை உச்சரிக்க சிரமப்பட்டாலோ மொழி பயிற்சியோ, மருத்துவ சிகிச்சையோ மேற்கொள்ள வேண்டியது அவசியமானது.
குழந்தைகள் இரண்டு வயதை கடந்த பிறகு உதடு உச்சரிப்பு முதல் உண்ணும் முறை வரை ஒவ்வொரு விஷயத்தையும் பெற்றோரை பார்த்து கற்றுக்கொள்ள தொடங்குவார்கள். பெற்றோர்களிடம் இருந்து எந்தவொரு பழக்கத்தையும் புரிந்து கொள்வது குழந்தைகளுக்கு எளிதானது. பெற்றோரின் செயல்பாடுகளையும், பேசும் வார்த்தைகளையும் கூர்ந்து கவனித்து அதன்படியே செயல்படுவதற்கு முயற்சிப்பார்கள்.
இருப்பினும் சில குழந்தைகள் தவழ்வது, நடக்க தொடங்குவது, வார்த்தைகளை உச்சரிப்பது போன்ற குழந்தை பருவ அடிப்படை விஷயங்களில் பின் தங்கி இருப்பார்கள். மற்ற குழந்தைகளை விட தாமதமாகவே கற்றுக்கொள்ள தொடங்குவார்கள். உதாரணமாக இரண்டு வயது குழந்தை சுமார் 50 வார்த்தைகளை சொல்லலாம். இரண்டு மூன்று வாக்கியங்களை பேசுவதற்கு முயற்சிக்கலாம். அதுவே மூன்று வயதுக்குள் உச்சரிக்கும் வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமாகிவிடும். வாக்கியங்களையும் சரளமாக உச்சரிக்க தொடங்கிவிடுவார்கள். ஆனால் 3 வயதை கடந்த பிறகும் குழந்தைகள் பேசுவதற்கு தாமதித்தாலோ, வார்த்தைகளை உச்சரிக்க சிரமப்பட்டாலோ மொழி பயிற்சியோ, மருத்துவ சிகிச்சையோ மேற்கொள்ள வேண்டியது அவசியமானது. குழந்தைகள் பேசும் விஷயத்தில் நிறைய பேர் அசட்டையாக இருந்துவிடுகிறார்கள்.
‘எங்கள் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள் காலதாமதமாகத்தான் பேசுவார்கள். அதுபற்றி கவலைப்பட வேண்டியதில்லை. குழந்தை தானாகவே பேச ஆரம்பித்துவிடும்’ என்று வீட்டு பெரியவர்கள் கூறிவிடுவார்கள். அதை கேட்டு எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளாமல் இருந்துவிடக்கூடாது. குறைந்தபட்சம் உங்களின் உதட்டு உச்சரிப்பை குழந்தையை கவனிக்க வைத்து பேச வைப்பதற்கு முயற்சிக்க வேண்டும். அதில் முன்னேற்றம் இல்லாதபட்சத்தில் சிகிச்சை பெறுவது ஆரம்பத்திலேயே குறைபாடுகளை சரிசெய்வதற்கு உதவும். நாக்கு அல்லது வாயில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் குழந்தைகள் பேசுவதற்கு தாமதமாகும். குழந்தைகளின் பேச்சு தாமதமாவதற்கு மேலும் சில காரணங்கள் இருக்கின்றன.
அன்கிலோக்ளோசியா: இந்த பிரச்சினை இருந்தால் நாக்கு வாயின் அடிப்பகுதியுடன் ஒட்டியிருந்து வார்த்தைகளை உச்சரிப்பதை தாமதமாக்கும். குழந்தைகளால் ஒருசில வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்க முடியாது. குறிப்பாக எஸ், டி, எல், ஆர், இசெட், டி.எச் போன்ற வார்த்தைகளை பேசுவது கடினமாக இருக்கும்.
நரம்பியல் குறைபாடுகள்: மூளையில் ஏற்படும் சில கோளாறுகள் பேச்சில் சிக்கலுக்கு வழிவகுக்கும். பெருமூளை வாதம் மற்றும் மூளை காயம் போன்ற நரம்பியல் பிரச்சினைகள் இருந்தால் மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியமானது.
ஆட்டிசம்: மற்றவர்களுடன் பழகுவதிலும், அவர்களுடன் பேசுவதற்கு வார்த்தைகளை உச்சரிப்ப திலும் சிக்கல்களை எதிர்கொண்டால் ஆட்டிசம் பாதிப்பு அதற்கு காரணமாக இருக்கலாம். குழந்தைகள் பேசுவதற்கு தாமதிப்பதற்கு ஆட்டிசமும் முக்கிய காரணமாக இருக்கிறது. ஒரே வார்த்தையை, வாக்கியங்களை மீண்டும் மீண்டும் பேசுவது ஆட்டிசம் பாதிப்புக்கான அறிகுறியாகும். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து பேச்சு சிகிச்சை அளித்தால் குணப்படுத்திவிடலாம்.
செவித்திறன் குறைபாடு: காதுகேளாமை பிரச்சினை இருந்தால் மற்றவர்கள் பேசுவதை புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்படும். செவித்திறன் குறைபாட்டால் பேசுவதில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதனை கவனத்தில் கொண்டு குழந்தைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
சிகிச்சை: சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் குழந்தைகளை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துவிடலாம். பேச்சு மற்றும் மொழி சிகிச்சையை சிறிய வயதிலேயே தொடங்க வேண்டும். பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்கு முன்பு குழந்தைகள் நன்றாக பேசுவதை உறுதிபடுத்திக்கொள்ளவேண்டும்.
ஏதேனும் சிரமத்தை எதிர்கொண்டால் குழந்தைகளுடன் பேசுவதற்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும். அது அவர்களிடம் நம்பிக்கையை அதிகரிக்கும். படித்தும், பாடியும் காட்டி குழந்தைகளுக்கு பயிற்சி கொடுக்கலாம். அவர்கள் என்ன சொல்ல முயற்சிக்கிறார்கள் என்பதை கவனமாக கேட்க வேண்டும். ஏதாவது வார்த்தைகளை பேசுவதற்கு சிரமப்பட்டால் மீண்டும் மீண்டும் அந்த வார்த்தைகளை உச்சரிக்க பழக்க வேண்டும். பொம்மைகள், விளையாட்டு பொருட்களை காண்பித்தும் பேச்சாற்றலை மேம்படுத்தலாம்.
இருப்பினும் சில குழந்தைகள் தவழ்வது, நடக்க தொடங்குவது, வார்த்தைகளை உச்சரிப்பது போன்ற குழந்தை பருவ அடிப்படை விஷயங்களில் பின் தங்கி இருப்பார்கள். மற்ற குழந்தைகளை விட தாமதமாகவே கற்றுக்கொள்ள தொடங்குவார்கள். உதாரணமாக இரண்டு வயது குழந்தை சுமார் 50 வார்த்தைகளை சொல்லலாம். இரண்டு மூன்று வாக்கியங்களை பேசுவதற்கு முயற்சிக்கலாம். அதுவே மூன்று வயதுக்குள் உச்சரிக்கும் வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமாகிவிடும். வாக்கியங்களையும் சரளமாக உச்சரிக்க தொடங்கிவிடுவார்கள். ஆனால் 3 வயதை கடந்த பிறகும் குழந்தைகள் பேசுவதற்கு தாமதித்தாலோ, வார்த்தைகளை உச்சரிக்க சிரமப்பட்டாலோ மொழி பயிற்சியோ, மருத்துவ சிகிச்சையோ மேற்கொள்ள வேண்டியது அவசியமானது. குழந்தைகள் பேசும் விஷயத்தில் நிறைய பேர் அசட்டையாக இருந்துவிடுகிறார்கள்.
‘எங்கள் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள் காலதாமதமாகத்தான் பேசுவார்கள். அதுபற்றி கவலைப்பட வேண்டியதில்லை. குழந்தை தானாகவே பேச ஆரம்பித்துவிடும்’ என்று வீட்டு பெரியவர்கள் கூறிவிடுவார்கள். அதை கேட்டு எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளாமல் இருந்துவிடக்கூடாது. குறைந்தபட்சம் உங்களின் உதட்டு உச்சரிப்பை குழந்தையை கவனிக்க வைத்து பேச வைப்பதற்கு முயற்சிக்க வேண்டும். அதில் முன்னேற்றம் இல்லாதபட்சத்தில் சிகிச்சை பெறுவது ஆரம்பத்திலேயே குறைபாடுகளை சரிசெய்வதற்கு உதவும். நாக்கு அல்லது வாயில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் குழந்தைகள் பேசுவதற்கு தாமதமாகும். குழந்தைகளின் பேச்சு தாமதமாவதற்கு மேலும் சில காரணங்கள் இருக்கின்றன.
அன்கிலோக்ளோசியா: இந்த பிரச்சினை இருந்தால் நாக்கு வாயின் அடிப்பகுதியுடன் ஒட்டியிருந்து வார்த்தைகளை உச்சரிப்பதை தாமதமாக்கும். குழந்தைகளால் ஒருசில வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்க முடியாது. குறிப்பாக எஸ், டி, எல், ஆர், இசெட், டி.எச் போன்ற வார்த்தைகளை பேசுவது கடினமாக இருக்கும்.
நரம்பியல் குறைபாடுகள்: மூளையில் ஏற்படும் சில கோளாறுகள் பேச்சில் சிக்கலுக்கு வழிவகுக்கும். பெருமூளை வாதம் மற்றும் மூளை காயம் போன்ற நரம்பியல் பிரச்சினைகள் இருந்தால் மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியமானது.
ஆட்டிசம்: மற்றவர்களுடன் பழகுவதிலும், அவர்களுடன் பேசுவதற்கு வார்த்தைகளை உச்சரிப்ப திலும் சிக்கல்களை எதிர்கொண்டால் ஆட்டிசம் பாதிப்பு அதற்கு காரணமாக இருக்கலாம். குழந்தைகள் பேசுவதற்கு தாமதிப்பதற்கு ஆட்டிசமும் முக்கிய காரணமாக இருக்கிறது. ஒரே வார்த்தையை, வாக்கியங்களை மீண்டும் மீண்டும் பேசுவது ஆட்டிசம் பாதிப்புக்கான அறிகுறியாகும். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து பேச்சு சிகிச்சை அளித்தால் குணப்படுத்திவிடலாம்.
செவித்திறன் குறைபாடு: காதுகேளாமை பிரச்சினை இருந்தால் மற்றவர்கள் பேசுவதை புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்படும். செவித்திறன் குறைபாட்டால் பேசுவதில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதனை கவனத்தில் கொண்டு குழந்தைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
சிகிச்சை: சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் குழந்தைகளை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துவிடலாம். பேச்சு மற்றும் மொழி சிகிச்சையை சிறிய வயதிலேயே தொடங்க வேண்டும். பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்கு முன்பு குழந்தைகள் நன்றாக பேசுவதை உறுதிபடுத்திக்கொள்ளவேண்டும்.
ஏதேனும் சிரமத்தை எதிர்கொண்டால் குழந்தைகளுடன் பேசுவதற்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும். அது அவர்களிடம் நம்பிக்கையை அதிகரிக்கும். படித்தும், பாடியும் காட்டி குழந்தைகளுக்கு பயிற்சி கொடுக்கலாம். அவர்கள் என்ன சொல்ல முயற்சிக்கிறார்கள் என்பதை கவனமாக கேட்க வேண்டும். ஏதாவது வார்த்தைகளை பேசுவதற்கு சிரமப்பட்டால் மீண்டும் மீண்டும் அந்த வார்த்தைகளை உச்சரிக்க பழக்க வேண்டும். பொம்மைகள், விளையாட்டு பொருட்களை காண்பித்தும் பேச்சாற்றலை மேம்படுத்தலாம்.
திருமணத்திற்கு பிறகு ஆண்-பெண் இருபாலருக்கும் உடல் எடை அதிகரிப்பது பொதுவானது என்றாலும் பெண்கள்தான் உடல் பருமன் சார்ந்த பிரச்சினைகளை அதிகம் எதிர்கொள்கிறார்கள்.
திருமணத்திற்கு பிறகு ஆண்-பெண் இருபாலருக்கும் உடல் எடை அதிகரிப்பது பொதுவானது. இருப்பினும் பெண்கள்தான் உடல் பருமன் சார்ந்த பிரச்சினைகளை அதிகம் எதிர்கொள்கிறார்கள். திருமணத்திற்கு பிந்தைய எடை அதிகரிப்புக்கு பின்னால் ஏராளமான காரணங்கள் இருக்கின்றன.
உணவுப் பழக்கம்:
புதுமண தம்பதியர் தங்கள் புதிய வாழ்க்கையின் ஆரம்ப காலத்தை அனுபவிக்க விரும்புவார்கள். பெரும்பாலான வீடுகளில் திருமணமான புதிதில் புதுப்பெண்ணை வீட்டு வேலைகள் செய்வதற்கு அனுமதிக்கமாட்டார்கள். அப்படியே செய்தாலும் சமையலை தவிர வேறு எந்த வீட்டு வேலையையும் செய்ய விடமாட்டார்கள். வெளி இடங்களில் சாப்பிடுவது, உறவினர் வீட்டு விருந்துகளில் கலந்து கொள்வது என பிசியாக இருப்பார்கள். அந்த சமயங்களில் பெரும்பாலான புதுமண தம்பதியர் சாப்பிடும் விஷயத்தை பற்றி கவலைப்படுவதில்லை. அதாவது உணவு கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதில்லை. அதுவே ஆரம்ப ஆண்டுகளில் உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.
மகிழ்ச்சி:
திருமணமான புதிதில் தங்கள் வாழ்நாளில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டிருப்பார்கள். ஆரம்ப நாட்களில் மகிழ்ச்சிதான் பிரதான அங்கம் வகிக்கும். அப்போது தங்களுக்கு பிடித்தமான உணவு பதார்த்தங்களை விரும்பி ருசித்துக்கொண்டே உரையாடலை தொடர்வார்கள். அத்துடன் கணவருக்கு பிடித்தமான உணவு பட்டியலை கேட்டு தெரிந்து கொண்டு அவற்றை சமைத்து கொடுப்பதற்கும் மனைவி ஆர்வம் காட்டுவார். கணவர் மற்றும் குடும்பத்தினரை ஈர்ப்பதற்கு புதிய சமையல் குறிப்புகளையும் கையாளுவார். அதுவும் உடல் எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். சுவையை மட்டும் கருத்தில் கொள்ளாமல் உடல் ஆரோக்கியத்தை பேணும் விதத்தில் சமையலை செய்வது நல்லது.
மன நிம்மதி:
திருமணமான புதிதில் நிம்மதியான வாழ்க்கை சூழலை அனுபவிப்பார்கள். திருமணத்திற்கு முன்பு எதிர்கொண்ட பிரச்சினைகள், மன வருத்தங்கள், துயரங்களுக்கு தற்காலிக ஓய்வு கொடுத்துவிடுவார்கள். ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருப்பார்கள். அதிக நேரம் ஓய்வும் எடுப்பார்கள். அதுவும் திருமணத்திற்கு பிறகு எடை அதிகரிப்பதற்கு மற்றொரு பொதுவான காரணமாகும்.
வீட்டில் அதிக நேரம் செலவிடுவது:
திருமணத்திற்கு முன்பு வீட்டில் இருக்கும் நேரத்தைவிட வெளியில் செலவிடும் நேரம் அதிகமாக இருக்கும். ஆனால் திருமணத்திற்கு பிறகு வீட்டில்தான் அதிக நேரம் செலவிடுவார்கள். மலைவாசஸ்தலங்களுக்கு சென்று அங்கு நேரத்தை செலவிட விரும்புவார்கள். தேனிலவு காலம் உடல் பருமன் பிரச்சினைக்கு அடித்தளம் அமைத்துவிடக்கூடியது. ஏனெனில் அன்றாட செயல்பாடுகளை சில காலம் விலக்கி வைக்க வைத்துவிடும்.
தேனிலவுக்கு செல்லும்போது உடல் ரீதியாக சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியமானது. கடற்கரையில் நடந்தபடி பேசுவது, காலை, மாலை வேளையில் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்வது, ஜாக்கிங் செய்வது என உடல் இயக்கத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஏனெனில் உடல் எடையை அதிகரிக்க வைப்பது எளிது. குறைப்பதுதான் கடினம். அலட்சியமாக இருந்தால் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியதாகிவிடும்.
கர்ப்ப காலம்:
திருமணமான உடனேயே தம்பதியர் குழந்தை பெற திட்டமிட்டால், பெண்ணின் உடல் எடை அதிகரிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. கர்ப்ப காலத்தில் காரமான, எண்ணெய்யில் தயாரான உணவு பதார்த்தங்களை சாப்பிடுவதற்கு விரும்புவார்கள். அத்துடன் உணவு கட்டுப்பாட்டை கவனத்தில் கொள்ளாமல் விதவிதமான உணவுகளையும் சாப்பிடுவார்கள். அதுவும் உடல் எடை அதிகரிப்பதற்கு காரணமாகிவிடும். ஆதலால் திருமணமான புதிதில் எடை அதிகரிப்பதற்கான காரணங்களை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
உணவுப் பழக்கம்:
புதுமண தம்பதியர் தங்கள் புதிய வாழ்க்கையின் ஆரம்ப காலத்தை அனுபவிக்க விரும்புவார்கள். பெரும்பாலான வீடுகளில் திருமணமான புதிதில் புதுப்பெண்ணை வீட்டு வேலைகள் செய்வதற்கு அனுமதிக்கமாட்டார்கள். அப்படியே செய்தாலும் சமையலை தவிர வேறு எந்த வீட்டு வேலையையும் செய்ய விடமாட்டார்கள். வெளி இடங்களில் சாப்பிடுவது, உறவினர் வீட்டு விருந்துகளில் கலந்து கொள்வது என பிசியாக இருப்பார்கள். அந்த சமயங்களில் பெரும்பாலான புதுமண தம்பதியர் சாப்பிடும் விஷயத்தை பற்றி கவலைப்படுவதில்லை. அதாவது உணவு கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதில்லை. அதுவே ஆரம்ப ஆண்டுகளில் உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.
மகிழ்ச்சி:
திருமணமான புதிதில் தங்கள் வாழ்நாளில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டிருப்பார்கள். ஆரம்ப நாட்களில் மகிழ்ச்சிதான் பிரதான அங்கம் வகிக்கும். அப்போது தங்களுக்கு பிடித்தமான உணவு பதார்த்தங்களை விரும்பி ருசித்துக்கொண்டே உரையாடலை தொடர்வார்கள். அத்துடன் கணவருக்கு பிடித்தமான உணவு பட்டியலை கேட்டு தெரிந்து கொண்டு அவற்றை சமைத்து கொடுப்பதற்கும் மனைவி ஆர்வம் காட்டுவார். கணவர் மற்றும் குடும்பத்தினரை ஈர்ப்பதற்கு புதிய சமையல் குறிப்புகளையும் கையாளுவார். அதுவும் உடல் எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். சுவையை மட்டும் கருத்தில் கொள்ளாமல் உடல் ஆரோக்கியத்தை பேணும் விதத்தில் சமையலை செய்வது நல்லது.
மன நிம்மதி:
திருமணமான புதிதில் நிம்மதியான வாழ்க்கை சூழலை அனுபவிப்பார்கள். திருமணத்திற்கு முன்பு எதிர்கொண்ட பிரச்சினைகள், மன வருத்தங்கள், துயரங்களுக்கு தற்காலிக ஓய்வு கொடுத்துவிடுவார்கள். ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருப்பார்கள். அதிக நேரம் ஓய்வும் எடுப்பார்கள். அதுவும் திருமணத்திற்கு பிறகு எடை அதிகரிப்பதற்கு மற்றொரு பொதுவான காரணமாகும்.
வீட்டில் அதிக நேரம் செலவிடுவது:
திருமணத்திற்கு முன்பு வீட்டில் இருக்கும் நேரத்தைவிட வெளியில் செலவிடும் நேரம் அதிகமாக இருக்கும். ஆனால் திருமணத்திற்கு பிறகு வீட்டில்தான் அதிக நேரம் செலவிடுவார்கள். மலைவாசஸ்தலங்களுக்கு சென்று அங்கு நேரத்தை செலவிட விரும்புவார்கள். தேனிலவு காலம் உடல் பருமன் பிரச்சினைக்கு அடித்தளம் அமைத்துவிடக்கூடியது. ஏனெனில் அன்றாட செயல்பாடுகளை சில காலம் விலக்கி வைக்க வைத்துவிடும்.
தேனிலவுக்கு செல்லும்போது உடல் ரீதியாக சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியமானது. கடற்கரையில் நடந்தபடி பேசுவது, காலை, மாலை வேளையில் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்வது, ஜாக்கிங் செய்வது என உடல் இயக்கத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஏனெனில் உடல் எடையை அதிகரிக்க வைப்பது எளிது. குறைப்பதுதான் கடினம். அலட்சியமாக இருந்தால் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியதாகிவிடும்.
கர்ப்ப காலம்:
திருமணமான உடனேயே தம்பதியர் குழந்தை பெற திட்டமிட்டால், பெண்ணின் உடல் எடை அதிகரிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. கர்ப்ப காலத்தில் காரமான, எண்ணெய்யில் தயாரான உணவு பதார்த்தங்களை சாப்பிடுவதற்கு விரும்புவார்கள். அத்துடன் உணவு கட்டுப்பாட்டை கவனத்தில் கொள்ளாமல் விதவிதமான உணவுகளையும் சாப்பிடுவார்கள். அதுவும் உடல் எடை அதிகரிப்பதற்கு காரணமாகிவிடும். ஆதலால் திருமணமான புதிதில் எடை அதிகரிப்பதற்கான காரணங்களை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
நோய்களின் நடமாடும் இயந்திரமாக மாறிய மனிதனைக் காப்பாற்றவும், நோயிலிருந்து முழுமையாக விடுபடவும் சிறுதானியங்கள் பெரிதும் கைக்கொடுக்கும்.
செல்வம் இழந்தால், எதுவும் இழக்கப்படுவதில்லை. உடல்நலம் இழந்தால், எல்லாம் இழக்கப்படுகிறது என்பார்கள். நிலம், நீர், காற்று என அனைத்தும் மாசு மயமாகிவிட்ட இன்றைய சூழலில், நம் அனைவருக்கும், ஆரோக்கியத்தைப் பெறுவதே மாபெரும் சவாலாக மாறிவிட்டது.
ஆனால், உணவானாலும் சரி, உடல் உழைப்பானாலும் சரி, உழைப்புக்கேற்ற உணவை உண்டு, ஆரோக்கியத்தை தம் வசப்படுத்தி வைத்திருந்தார்கள் நம் முன்னோர்கள். அந்த வகையில் அவர்கள் தவறாமல் உட்கொண்டது சிறுதானியங்களைத்தான். ஏனெனில், ஆரோக்கியமான உணவு முறையில், முதலிடம் பிடிப்பது சிறுதானியங்களே.
இவற்றை உட்கொண்டதால்தான் அன்று, உணவே மருந்து என்ற நிலை இருந்தது. ஆனால், நாகரீகம் என்ற பெயரில், துரித உணவுக்கு மாறியதால்தான் தற்போதைய தலைமுறை, மருந்தே உணவு என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே நோய்களின் நடமாடும் இயந்திரமாக மாறிய மனிதனைக் காப்பாற்றவும், நோயிலிருந்து முழுமையாக விடுபடவும் சிறுதானியங்கள் பெரிதும் கைக்கொடுக்கும்.
நம்முடைய பிரதான உணவாகக் கருதப்படும் அரிசியில் இருப்பதைவிட அதிக சத்துக்களை இந்த சிறுதானியங்கள் கொண்டுள்ளன. இதனை உட்கொள்ளும்போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பன்மடங்கு அதிகரிக்கும். அதுமட்டுமல்லாது உடல் பருமன் குறைவதுடன், இதயநோய் உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுக்கப்படும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். அதிலும் ஈவு இரக்கமின்றி, கொரோனா வைரஸ் மக்களைக் கொன்றுகுவிக்கும் இவ்வேளையில், நம் அனைவரும் சிறுதானியங்களை உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.
கம்பு, சோளம், வரகு, பனிவரகு, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு, போன்றவையே சிறுதானியங்கள். உருவத்தில், அளவில் மிகவும் சிறியதாகக் காணப்படுவதால், இவை சிறுதானியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. எனினும், கீர்த்தி சிறிது, மூர்த்தி பெரிது என்பதற்கு இணங்க நமக்கு இந்த சிறுதானியங்கள் பல்வேறு நன்மைப் பயக்கின்றன.
ஆனால், உணவானாலும் சரி, உடல் உழைப்பானாலும் சரி, உழைப்புக்கேற்ற உணவை உண்டு, ஆரோக்கியத்தை தம் வசப்படுத்தி வைத்திருந்தார்கள் நம் முன்னோர்கள். அந்த வகையில் அவர்கள் தவறாமல் உட்கொண்டது சிறுதானியங்களைத்தான். ஏனெனில், ஆரோக்கியமான உணவு முறையில், முதலிடம் பிடிப்பது சிறுதானியங்களே.
இவற்றை உட்கொண்டதால்தான் அன்று, உணவே மருந்து என்ற நிலை இருந்தது. ஆனால், நாகரீகம் என்ற பெயரில், துரித உணவுக்கு மாறியதால்தான் தற்போதைய தலைமுறை, மருந்தே உணவு என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே நோய்களின் நடமாடும் இயந்திரமாக மாறிய மனிதனைக் காப்பாற்றவும், நோயிலிருந்து முழுமையாக விடுபடவும் சிறுதானியங்கள் பெரிதும் கைக்கொடுக்கும்.
நம்முடைய பிரதான உணவாகக் கருதப்படும் அரிசியில் இருப்பதைவிட அதிக சத்துக்களை இந்த சிறுதானியங்கள் கொண்டுள்ளன. இதனை உட்கொள்ளும்போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பன்மடங்கு அதிகரிக்கும். அதுமட்டுமல்லாது உடல் பருமன் குறைவதுடன், இதயநோய் உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுக்கப்படும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். அதிலும் ஈவு இரக்கமின்றி, கொரோனா வைரஸ் மக்களைக் கொன்றுகுவிக்கும் இவ்வேளையில், நம் அனைவரும் சிறுதானியங்களை உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.
கம்பு, சோளம், வரகு, பனிவரகு, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு, போன்றவையே சிறுதானியங்கள். உருவத்தில், அளவில் மிகவும் சிறியதாகக் காணப்படுவதால், இவை சிறுதானியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. எனினும், கீர்த்தி சிறிது, மூர்த்தி பெரிது என்பதற்கு இணங்க நமக்கு இந்த சிறுதானியங்கள் பல்வேறு நன்மைப் பயக்கின்றன.
அவல்களில் சிறிய அவல், மெல்லிய அவல், கெட்டி அவல், சிவப்பு அவல், வெள்ளை அவல் என பல்வேறு வகைகள் உள்ளன. அதில் நிறைந்துள்ள சத்துகள் குறித்து பார்ப்போம்...
பண்டைய காலம் முதல் இன்றைய நவீன காலம் வரை சத்துள்ள உணவாக உண்ணப்பட்டு வருவது அவல் என்றால் அது மிகையாகாது.
நெல்லிலிருந்து தயாரிக்கப்படும் அவலானது இந்தியாவின் வட மாநிலங்களில் போஹா என்றும், ஒரிசாவில் சிவ்டா என்றும், ஆந்திராவில் அத்குலு என்றும், கர்நாடகாவில் அவலக்கி என்றும் அழைக்கப்படுகின்றது.
அவல்களில் சிறிய அவல், மெல்லிய அவல், கெட்டி அவல், சிவப்பு அவல், வெள்ளை அவல் என பல்வேறு வகைகள் உள்ளன.
நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் விளைகின்ற அரிசியைக் கொண்டு பலவகையான அவல்கள் தயாரிக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டைப் போலவே கர்நாடகா மற்றும் கேரளாவில் சிவப்பு அவல் என்பது மக்களால் பெரிதும் விரும்பி உண்ணப்படுகின்றது.
அரிசியில் மட்டுமல்லாது சிறு தானியங்களிலும் அவலானது உற்பத்தி செய்யப்படுகின்றது. தினை அவல், கம்பு அவல், சோள அவல், ராகி அவல் போன்றவை சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணக் கூடிய உணவாக மாறி வருகின்றது.
பல வருடங்களுக்கு முன்பு வரை நெல்லை சுத்தப்படுத்தி, ஊறவைத்து வெயிலில் உலர்த்தி கைகளால் இடித்து கைக்குத்தல் முறையில் அவலானது தயாரிக்கப்பட்டு வந்தது.
இப்பொழுது இயந்திரங்களின் உதவியுடன் எளிதாகவும், விரைவாகவும் அதிக அளவிலும் அவலானது உற்பத்தி செய்யப்படுகின்றன.
கல் மற்றும் மண்ணானது பிரிக்கப்படும் இயந்திரத்தில் நெல்லிலிருக்கும் குப்பைகள் பிரிக்கப்பட்டு பின்னர் தண்ணீர் உள்ள தொட்டியில் நெல்லானது கொட்டப்பட்டு மேலே மிதக்கும் தேவையற்ற கருக்கா நெல்லானது அகற்றப்பட்டு குறைந்தது நான்கு மணிநேரம் ஊற வைக்கப்படுகின்றது.
பின்பு மற்றொரு இயந்திரத்தில் ஊறவைத்து உலர்த்தப்பட்ட நெல்லானது கொட்டி வறுக்கப்படுகின்றது.
வறுக்கப்பட்ட நெல்லானது நெல்லை அழுத்தி அவலாக மாற்றும் இயந்திரத்தில் கொட்டப்பட்டு அவலாக வெளியே எடுக்கப்படுகின்றது.
அந்த அவலானது பெரிய சல்லடைகளில் சலிக்கப்பட்டு தவிடு, உமி நீக்கப்பட்டு சுத்தமான அவலாகக் கிடைக்கின்றது.
அவல் அளவானது இயந்திரத்தில் தரப்படும் அழுத்தத்திற்கேற்ப மாறுபடுகின்றது.
அவல் உட்கொள்வதன் மூலம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.
மாவுச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி, இரும்பு, கால்சியம், சோடியம், பொட்டாசியம், குறைந்த நிறைவுற்ற கொழுப்புகள் மட்டுமல்லாது சிறிதளவு சர்க்கரை ஆகியவற்றையும் கொண்டிருக்கும் ஒரு தானியம் அவலாகும்.
அவலை சமைக்காமல் அப்படியே சாப்பிட முடியும். எந்தவித பண்டிகைகளிலும் அவல் என்பது இறைவனுக்கு படைக்கப்படும் உணவுப் பொருளாக உள்ளது.
அவல் உடல் சூட்டைத் தணித்து நல்ல புத்துணர்ச்சியைத் தருவதோடு உடல் இளைப்பதற்கு ஏற்ற உணவாக உள்ளது. குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் அவல் பெரிதும் உதவுகின்றது.
உடலுக்கு உறுதியும், நோய் எதிர்ப்பு சக்தியும் தரக்கூடிய சிவப்பு அவல் கொண்டு ஏராளமான உணவு வகைகள் செய்யப்படுகின்றன. சிவப்பு அவல் கொண்டு கஞ்சி, பாயாசம் மற்றும் புட்டு போன்றவற்றைத் தயாரிக்கலாம்.
கம்பு அவல் கிச்சடி, உப்புமா மட்டுமல்லாது இனிப்பு வகைகள் செய்வதற்கும் ஏற்றதாக உள்ளது.
சுவைமிக்க தினை அவல், சோள அவல் மற்றும் கேழ்வரகு அவல் போன்றவற்றையும் மக்கள் விரும்பி உண்ணத் தொடங்கியுள்ளார்கள்.
அவலை உட்கொள்வதன் மூலம் நீரிழிவு நோய் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறைகின்றன.
அவலை தண்ணீர், பால் அல்லது மோரில் ஊற வைத்துச் சாப்பிடலாம். அல்லது வெல்லம் மற்றும் தேங்காய் மற்றும் நெய் சேர்த்தும் சாப்பிடலாம்.
எப்போதாவது பண்டிகைக்கு வாங்கிப் பயன்படுத்தும் ஒன்றாக இல்லாமல் அன்றாட உணவில் அவலைச் சேர்த்துக் கொண்டோமானால் அதை உட்கொள்வதால் ஏற்படும் பல்வேறு நன்மைகளையும் முழுமையாகப் பெறலாம்.
நெல்லிலிருந்து தயாரிக்கப்படும் அவலானது இந்தியாவின் வட மாநிலங்களில் போஹா என்றும், ஒரிசாவில் சிவ்டா என்றும், ஆந்திராவில் அத்குலு என்றும், கர்நாடகாவில் அவலக்கி என்றும் அழைக்கப்படுகின்றது.
அவல்களில் சிறிய அவல், மெல்லிய அவல், கெட்டி அவல், சிவப்பு அவல், வெள்ளை அவல் என பல்வேறு வகைகள் உள்ளன.
நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் விளைகின்ற அரிசியைக் கொண்டு பலவகையான அவல்கள் தயாரிக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டைப் போலவே கர்நாடகா மற்றும் கேரளாவில் சிவப்பு அவல் என்பது மக்களால் பெரிதும் விரும்பி உண்ணப்படுகின்றது.
அரிசியில் மட்டுமல்லாது சிறு தானியங்களிலும் அவலானது உற்பத்தி செய்யப்படுகின்றது. தினை அவல், கம்பு அவல், சோள அவல், ராகி அவல் போன்றவை சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணக் கூடிய உணவாக மாறி வருகின்றது.
பல வருடங்களுக்கு முன்பு வரை நெல்லை சுத்தப்படுத்தி, ஊறவைத்து வெயிலில் உலர்த்தி கைகளால் இடித்து கைக்குத்தல் முறையில் அவலானது தயாரிக்கப்பட்டு வந்தது.
இப்பொழுது இயந்திரங்களின் உதவியுடன் எளிதாகவும், விரைவாகவும் அதிக அளவிலும் அவலானது உற்பத்தி செய்யப்படுகின்றன.
கல் மற்றும் மண்ணானது பிரிக்கப்படும் இயந்திரத்தில் நெல்லிலிருக்கும் குப்பைகள் பிரிக்கப்பட்டு பின்னர் தண்ணீர் உள்ள தொட்டியில் நெல்லானது கொட்டப்பட்டு மேலே மிதக்கும் தேவையற்ற கருக்கா நெல்லானது அகற்றப்பட்டு குறைந்தது நான்கு மணிநேரம் ஊற வைக்கப்படுகின்றது.
பின்பு மற்றொரு இயந்திரத்தில் ஊறவைத்து உலர்த்தப்பட்ட நெல்லானது கொட்டி வறுக்கப்படுகின்றது.
வறுக்கப்பட்ட நெல்லானது நெல்லை அழுத்தி அவலாக மாற்றும் இயந்திரத்தில் கொட்டப்பட்டு அவலாக வெளியே எடுக்கப்படுகின்றது.
அந்த அவலானது பெரிய சல்லடைகளில் சலிக்கப்பட்டு தவிடு, உமி நீக்கப்பட்டு சுத்தமான அவலாகக் கிடைக்கின்றது.
அவல் அளவானது இயந்திரத்தில் தரப்படும் அழுத்தத்திற்கேற்ப மாறுபடுகின்றது.
அவல் உட்கொள்வதன் மூலம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.
மாவுச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி, இரும்பு, கால்சியம், சோடியம், பொட்டாசியம், குறைந்த நிறைவுற்ற கொழுப்புகள் மட்டுமல்லாது சிறிதளவு சர்க்கரை ஆகியவற்றையும் கொண்டிருக்கும் ஒரு தானியம் அவலாகும்.
அவலை சமைக்காமல் அப்படியே சாப்பிட முடியும். எந்தவித பண்டிகைகளிலும் அவல் என்பது இறைவனுக்கு படைக்கப்படும் உணவுப் பொருளாக உள்ளது.
அவல் உடல் சூட்டைத் தணித்து நல்ல புத்துணர்ச்சியைத் தருவதோடு உடல் இளைப்பதற்கு ஏற்ற உணவாக உள்ளது. குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் அவல் பெரிதும் உதவுகின்றது.
உடலுக்கு உறுதியும், நோய் எதிர்ப்பு சக்தியும் தரக்கூடிய சிவப்பு அவல் கொண்டு ஏராளமான உணவு வகைகள் செய்யப்படுகின்றன. சிவப்பு அவல் கொண்டு கஞ்சி, பாயாசம் மற்றும் புட்டு போன்றவற்றைத் தயாரிக்கலாம்.
கம்பு அவல் கிச்சடி, உப்புமா மட்டுமல்லாது இனிப்பு வகைகள் செய்வதற்கும் ஏற்றதாக உள்ளது.
சுவைமிக்க தினை அவல், சோள அவல் மற்றும் கேழ்வரகு அவல் போன்றவற்றையும் மக்கள் விரும்பி உண்ணத் தொடங்கியுள்ளார்கள்.
அவலை உட்கொள்வதன் மூலம் நீரிழிவு நோய் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறைகின்றன.
அவலை தண்ணீர், பால் அல்லது மோரில் ஊற வைத்துச் சாப்பிடலாம். அல்லது வெல்லம் மற்றும் தேங்காய் மற்றும் நெய் சேர்த்தும் சாப்பிடலாம்.
எப்போதாவது பண்டிகைக்கு வாங்கிப் பயன்படுத்தும் ஒன்றாக இல்லாமல் அன்றாட உணவில் அவலைச் சேர்த்துக் கொண்டோமானால் அதை உட்கொள்வதால் ஏற்படும் பல்வேறு நன்மைகளையும் முழுமையாகப் பெறலாம்.
கொய்யா பழத்தில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. அதுகுறித்து பார்ப்போம்...
கொய்யா பழத்தில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. குறிப்பாக அதிக அளவு வைட்டமின்-சி, நார்ச்சத்துக்கள், இரும்பு சத்து, வைட்டமின்-ஏ, மெக்னீசியம், வைட்டமின் பி-6, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. அதனால் கொய்யா பழத்தை உணவோடு அதிகம் சேர்த்து கொள்ளுங்கள். கொய்யா பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 7 நன்மைகள் இதோ...
1. உடல் எடை குறையும்
கொய்யா பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. 100 கிராம் கொய்யா பழத்தில் கிட்டத்தட்ட 5 கிராம் அளவுக்கு நார்ச்சத்து இருக்கிறது. அதனால் உடல் எடையை குறைக்க உதவும் உணவுகளில் கொய்யா முக்கிய பங்கு வகிக்கிறது.
2. ரத்த சோகையை போக்கும்
கொய்யா பழத்தில் அதிக அளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இதனை தினமும் உட்கொள்ளும்போது ரத்த சோகை போன்ற பிரச்சனைகள் வராமல் காக்கும். மேலும் உடலில் ரத்த உற்பத்தியினை அதிகரிக்கும்.
3. சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும்
கொய்யா பழத்தில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் இதனை உண்டு வரும்போது ரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். எனவே சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும் கொய்யா பழம் உண்டு வந்தால் அவர்களின் ரத்த சர்க்கரையின் அளவு சீரடையும்.
4. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
கொய்யா பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
5. புற்று நோய் வராமல் காக்கும்
கொய்யா பழத்தில் உள்ள ஆன்டிஆக்சிடென்டுகள் புற்று நோய் வராமல் காக்க உதவுகிறது. தினமும் ஒரு கொய்யா பழத்தினை உண்டு வருபவர்களுக்கு புற்று நோய் வரும் வாய்ப்பு மிக மிக குறைவு என பல்வேறு ஆய்வுகள் சான்று பகிர்கின்றன.
6. ரத்த அழுத்தத்தை குறைக்கும்
கொய்யா பழத்தில் சிறந்த அளவு பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனால் ரத்த அழுத்தமானது கட்டுக்குள் இருக்கும். மேலும் உயர் ரத்த அழுத்தத்தினை குறைத்து சீராக வைக்கும்.
7. ஆரோக்கியமான செரிமானம்
கொய்யா பழத்தினை அதிக அளவு உட்கொண்டு வந்தால் செரிமான மண்டலமானது ஆரோக்கியமாக இருக்கும்.
1. உடல் எடை குறையும்
கொய்யா பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. 100 கிராம் கொய்யா பழத்தில் கிட்டத்தட்ட 5 கிராம் அளவுக்கு நார்ச்சத்து இருக்கிறது. அதனால் உடல் எடையை குறைக்க உதவும் உணவுகளில் கொய்யா முக்கிய பங்கு வகிக்கிறது.
2. ரத்த சோகையை போக்கும்
கொய்யா பழத்தில் அதிக அளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இதனை தினமும் உட்கொள்ளும்போது ரத்த சோகை போன்ற பிரச்சனைகள் வராமல் காக்கும். மேலும் உடலில் ரத்த உற்பத்தியினை அதிகரிக்கும்.
3. சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும்
கொய்யா பழத்தில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் இதனை உண்டு வரும்போது ரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். எனவே சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும் கொய்யா பழம் உண்டு வந்தால் அவர்களின் ரத்த சர்க்கரையின் அளவு சீரடையும்.
4. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
கொய்யா பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
5. புற்று நோய் வராமல் காக்கும்
கொய்யா பழத்தில் உள்ள ஆன்டிஆக்சிடென்டுகள் புற்று நோய் வராமல் காக்க உதவுகிறது. தினமும் ஒரு கொய்யா பழத்தினை உண்டு வருபவர்களுக்கு புற்று நோய் வரும் வாய்ப்பு மிக மிக குறைவு என பல்வேறு ஆய்வுகள் சான்று பகிர்கின்றன.
6. ரத்த அழுத்தத்தை குறைக்கும்
கொய்யா பழத்தில் சிறந்த அளவு பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனால் ரத்த அழுத்தமானது கட்டுக்குள் இருக்கும். மேலும் உயர் ரத்த அழுத்தத்தினை குறைத்து சீராக வைக்கும்.
7. ஆரோக்கியமான செரிமானம்
கொய்யா பழத்தினை அதிக அளவு உட்கொண்டு வந்தால் செரிமான மண்டலமானது ஆரோக்கியமாக இருக்கும்.
உண்மையிலேயே ஆப்பிளின் தோல் விஷத்தன்மை கொண்டதா..? ஆப்பிள் மீது பூசப்படும் மெழுகை நீக்கும் வழிகளை தெரிந்துகொள்ள இந்த பதிவை பார்க்கலாம்.
ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லதல்ல. அதில் விஷத்தன்மை உள்ளது என்கிற கூற்று உலா வருகிறது. இதனாலேயே சிலர் தோலை சீவிவிட்டு சாப்பிடுகின்றனர். உண்மையிலேயே ஆப்பிளின் தோல் விஷத்தன்மை கொண்டதா..? ஆப்பிளை எப்படித்தான் சாப்பிடுவது? தெரிந்துகொள்ள மேலும் படிக்க...
தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவமனையையே மறந்துவிடலாம் என்பார்கள். அப்படி பலவகையான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது ஆப்பிள். அதன் சதைப்பகுதி மட்டுமல்ல அதன் தோலிலும் பல வகையான நன்மைகள் உள்ளன. ஆப்பிளின் சத்து அதன் தோலுடன் சேர்ந்தேதான் உள்ளது. ஆப்பிளை அதன் தோலுடன் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. பசியின்மையை போக்கும். விட்டமின் சி, பொட்டாசியம், பாலிபினால்கள், ஃபிளேவனாய்டுகள் நிறைந்துள்ளன. அதோடு தோலில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் செரிமானப் பிரச்னை இருக்காது. அதேசமயம் மலச்சிக்கல் பிரச்னையும் வராது. கொழுப்பு அளவு குறைந்து உடல் எடை சீராக இருக்கும். தசைகளின் ஆரோக்கியமும் உறுதியாக இருக்கும்.
ஆப்பிளில் இத்தகைய எண்ணற்ற ஆரோக்கியங்களை கொண்டுள்ளதால் சந்தையில் அதற்கான டிமாண்ட் அதிகம். இதனால் கெமிக்கல் முறையில் பழுக்க வைத்தல், அதோடு அதன் தோலை பளபளக்க வைக்க மெழுகு தேய்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த மெழுகானது வயிற்றுக்குள் சென்றால் பலவகையான உடல்நலக் கேடுகளை உண்டாக்கும் என்பதாலேயே தோலை நீக்கிவிட்டு சாப்பிட வேண்டும் என்கிறனர். அதாவது வயிற்றுப் போக்கு, வாயுத்தொல்லையை உண்டாக்கும். மேலும் மெழுகு செரிமானமாகாமல் உணவுக்குழாயில் படிந்து நோயை உண்டாக்கும். புற்றுநோய் , குடல் அழற்சி போன்றவையும் வர வாய்ப்புண்டு என்கின்றனர் மருத்துவர்கள்.இருப்பினும் அவ்வாறு மெழுகு தேய்க்கப்பட்ட ஆப்பிளை எளிதில் கண்டறிய சில டிப்ஸுகளும் உண்டு.
அதாவது முதலில் அதன் தோலை வாங்கும்போது சுரண்டிப் பாருங்கள். வீட்டிலும் கத்தியால் மேலோட்டமாக சுரண்டினால் மெழுகு மட்டும் தனியே வரும். இந்த மெழுகானது கழுவினால் போகாது. அப்படியில்லை எனில் சாப்பிடும் முன் ஆப்பிளை சுடு தண்ணீரில் சில நிமிடங்கள் போட்டுவிட்டு பார்த்தால் ஆப்பிள் மீதுள்ள மெழுகு படிவம் நன்றாகத் தெரியும். பின் கத்தியால் தோலை சுரண்ட மெழுகு எளிதில் வந்துவிடும்.
தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவமனையையே மறந்துவிடலாம் என்பார்கள். அப்படி பலவகையான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது ஆப்பிள். அதன் சதைப்பகுதி மட்டுமல்ல அதன் தோலிலும் பல வகையான நன்மைகள் உள்ளன. ஆப்பிளின் சத்து அதன் தோலுடன் சேர்ந்தேதான் உள்ளது. ஆப்பிளை அதன் தோலுடன் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. பசியின்மையை போக்கும். விட்டமின் சி, பொட்டாசியம், பாலிபினால்கள், ஃபிளேவனாய்டுகள் நிறைந்துள்ளன. அதோடு தோலில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் செரிமானப் பிரச்னை இருக்காது. அதேசமயம் மலச்சிக்கல் பிரச்னையும் வராது. கொழுப்பு அளவு குறைந்து உடல் எடை சீராக இருக்கும். தசைகளின் ஆரோக்கியமும் உறுதியாக இருக்கும்.
ஆப்பிளில் இத்தகைய எண்ணற்ற ஆரோக்கியங்களை கொண்டுள்ளதால் சந்தையில் அதற்கான டிமாண்ட் அதிகம். இதனால் கெமிக்கல் முறையில் பழுக்க வைத்தல், அதோடு அதன் தோலை பளபளக்க வைக்க மெழுகு தேய்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த மெழுகானது வயிற்றுக்குள் சென்றால் பலவகையான உடல்நலக் கேடுகளை உண்டாக்கும் என்பதாலேயே தோலை நீக்கிவிட்டு சாப்பிட வேண்டும் என்கிறனர். அதாவது வயிற்றுப் போக்கு, வாயுத்தொல்லையை உண்டாக்கும். மேலும் மெழுகு செரிமானமாகாமல் உணவுக்குழாயில் படிந்து நோயை உண்டாக்கும். புற்றுநோய் , குடல் அழற்சி போன்றவையும் வர வாய்ப்புண்டு என்கின்றனர் மருத்துவர்கள்.இருப்பினும் அவ்வாறு மெழுகு தேய்க்கப்பட்ட ஆப்பிளை எளிதில் கண்டறிய சில டிப்ஸுகளும் உண்டு.
அதாவது முதலில் அதன் தோலை வாங்கும்போது சுரண்டிப் பாருங்கள். வீட்டிலும் கத்தியால் மேலோட்டமாக சுரண்டினால் மெழுகு மட்டும் தனியே வரும். இந்த மெழுகானது கழுவினால் போகாது. அப்படியில்லை எனில் சாப்பிடும் முன் ஆப்பிளை சுடு தண்ணீரில் சில நிமிடங்கள் போட்டுவிட்டு பார்த்தால் ஆப்பிள் மீதுள்ள மெழுகு படிவம் நன்றாகத் தெரியும். பின் கத்தியால் தோலை சுரண்ட மெழுகு எளிதில் வந்துவிடும்.
காதலிக்கும்போது இணையை பார்த்துவிட மனது துடிக்கும். நாள் முழுவதும் பேசிக்கொண்டிருக்க வாய்ப்பு கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பும் உருவாகும். திருமணத்திற்கு பின்பு எல்லாம் தலைகீழாக மாறிவிடுகிறது.
காதலிக்கும் காலம் ஏக்கமும், எதிர்பார்ப்பும் நிறைந்தது. அப்போது எல்லா நேரமும் உற்சாகம் பொங்கிக்கொண்டிருக்கும். காதலிக்கும்போது இணையை பார்த்துவிட மனது துடிக்கும். நாள் முழுவதும் பேசிக்கொண்டிருக்க வாய்ப்பு கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பும் உருவாகும். திருமணத்திற்கு பின்பு எல்லாம் தலைகீழாக மாறிவிடுகிறது.
முன்பு நிறைகளாகத் தெரிந்தது, பின்பு குறைகளாகத் தென்படும். பார்த்துக்கொண்டே இருக்க மாட்டோமா என்ற நிலை, பார்க்காமலே இருக்கமாட்டோமா என்றாகும். ‘இரண்டு நாட்கள் கூட உன்னைப்பிரிந்து என்னால் இருக்க முடியாது’ என்ற வார்த்தை, ‘இரண்டு மாதங்கள் உன்னைப் பிரிந்து எங்கேயாவது போய் விடலாமா என்று தோன்றுகிறது’ என்று சொல்ல வைக்கும்.
இந்த தலை கீழ் மாற்றத்தை உருவாக்குவது நமது உடலில் சுரக்கும் ‘பி.இ.ஏ.’ மற்றும் ‘ஆக்சிடோசின்’ என்ற ஹார்மோன்கள். காதலிக்கும்போதும், திருமணமான புதிதிலும் அதிகமாக சுரக்கும் இவை, திருமணத்திற்குப் பிறகு குறையத் தொடங்குகிறது. இவை குறைந்து கொண்டிருக்கும் நேரத்தில், குறைய வேண்டிய ‘செரட்டோனின்’ என்ற ஹார்மோன் அதிகமாக சுரந்து, காதலை கசக்கச் செய்ய முயற்சிக்கும். இதற்கு புதுமணத்தம்பதிகள் இடம் கொடுத்துவிடக்கூடாது.
அதற்காக அவர்கள் திருமணத்திற்கு பிறகும் ஒருவரை ஒருவர் காதலிக்கவேண்டும். முன்பு போல் அதிக நேரம் பேசவேண்டும். வாழ்க்கையின் இனிமையான விஷயங்களை பேசி ஒருவரை ஒருவர் கவரவேண்டும். தினமும் இரண்டு மணிநேரத்தை கணவனும், மனைவியும் தங்களுக்காக ஒதுக்கிக்கொள்ளவேண்டும். அப்போது தங்கள் தனிமைக்குள் நுழைய டி.வி., செல்போன், உறவினர்களுக்குகூட இடம் கொடுத்துவிடக்கூடாது. அந்த தனிமையை இனிமையாக நீங்கள் செலவிட்டால் ‘பி.இ.ஏ.’ ‘ஆக்சிடோசின்’ ஹார்மோன் சுரப்பு அதிகமாகி, தம்பதிகளுக்குள் வற்றாத காதல் உணர்வு பெருகும்.
மண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கும் தம்பதிகளிடம் அன்பு அதிகமாக இருக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அன்பைபோல் அதிகம் இருக்கவேண்டிய இன்னொன்று நேர்மை. அன்பு கலந்த நேர்மை இருந்தால் வாழ்க்கை அதிகம் இனிக்கும். நேர்மையை காப்பாற்ற, கணவருக்குத் தெரியாமல் மனைவியோ- மனைவிக்குத் தெரியாமல் கணவரோ எந்த ரகசியத்தையும் வைத்திருக்கக்கூடாது. ஒருவருக்குத் தெரியாமல் இன்னொருவர் எந்த காரியத்தையும் செய்யவும் கூடாது. எங்கே போகிறோம்? யாருடன் போகிறோம்? என்பதை தெரிந்து கொள்ளும் உரிமையை வாழ்க்கைத் துணைக்கு வழங்க வேண்டும். திருமணத்திற்கு முன்பு ரகசியங்கள் இருந்தாலும் அதை எல்லாம் அப்போதே மறந்துவிட்டு, திருமணத்திற்கு பின்பு நேர்மையை மட்டுமே கடைப்பிடிக்கவேண்டும்.
திருமணத்தில் கணவன், மனைவி ஆகிய இருவர் மட்டுமில்லை, இரு குடும்பங்களும் இணைகின்றன. அதன் மூலம் புதுப்புது உறவுகளும் பூக்கின்றன. இதில் விருந்தாளிகளும் குறிப்பிடத்தக்கவர்களாக இருக்கிறார்கள்.
நாம் விருந்தாளிகளை நன்றாக உபசரிப்போம். அவர்கள் விரும்புகிற மாதிரி நடந்து கொள்வோம். அவர்களது முகங்கோணக்கூடாது என்பதில் முழு கவனம் செலுத்துவோம். நாம் விரும்பி வாங்கி வைத்திருக்கும் பொருள் ஒன்றை அவர் எடுத்துப் பார்க்கும்போது கைதவறி அது கீழே விழுந்து உடைந்துவிட்டாலும் கோபம் கொள்ளமாட்டோம். அது எவ்வளவு சென்டிமென்ட் கொண்ட பொருளாக இருந்தாலும், ‘அவர் தெரியாமல் உடைத்துவிட்டார்’ என்று நமது மனம் ஏற்றுக்கொள்ளும்.
அதே நடைமுறையை கணவன் மனைவியிடமும், மனைவி கணவரிடமும் காட்டவேண்டும். விருந்தாளிகள் அனைவரிடமும் இனிக்க இனிக்க பேசிவிட்டு, அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறியதும் வாழ்க்கைத்துணையிடம் எரிந்துவிழக்கூடாது. விருந்தாளிகளிடம் நடப்பது போன்று அன்பையும், பாசத்தையும் வாழ்க்கைத்துணையிடமும் காட்டவேண்டும். அப்படிக்காட்டினால் வாழ்க்கை இனிக்கும்.
விருந்தாளிகளிடம் பேசுவது போன்ற மென்மையான வார்த்தைகளை கணவனும்- மனைவியும் தங்களுக்குள்ளும் பேசிக்கொள்ள வேண்டும். பிடிக்காத காரியம் ஒன்றை செய்துவிட்டாலும் ‘நீ அப்படி செய்திருக்கக் கூடாது’ என்று கடுமைகாட்டாமல், ‘நீ இப்படி செய்திருக்கலாமே!’ என்று மென்மையாக எடுத்துச் சொல்வதே சிறந்த வழி. ‘ஏன் இப்படி நடந்துகொண்டாய்? உனக்கு அறிவே இல்லையா?’ என்று கேட்பதற்கு பதில், ‘அடுத்த முறை நீ இப்படி பக்குவமாக நடந்துகொள். உன்னால் அதுவும் முடியும்’ என்று வலிக்காமல் பேசவேண்டும்.
இப்படி மென்மையாகப் பேசினால், உங்கள் வார்த்தைகளுக்கு வசிய சக்தி கிடைக்கும். இது போன்ற வார்த்தைகளை நீங்கள் எல்லா தருணங்களிலும் பிரயோகம் செய்து பாருங்கள். உங்கள் துணையை காயப்படுத்தாமலே நீங்கள் விரும்பியதை பெற முடியும். கணவர்-மனைவிக்கு இடையில் மட்டுமின்றி பிள்ளைகள், வேலையாட்கள், சக ஊழியர்கள், அக்கம் பக்கத்தினர் என எல்லோரிடத்திலுமே அன்பையும், நட்பையும் வளர்க்க இந்த அணுகுமுறையை பின்பற்றலாம்.
முன்பு நிறைகளாகத் தெரிந்தது, பின்பு குறைகளாகத் தென்படும். பார்த்துக்கொண்டே இருக்க மாட்டோமா என்ற நிலை, பார்க்காமலே இருக்கமாட்டோமா என்றாகும். ‘இரண்டு நாட்கள் கூட உன்னைப்பிரிந்து என்னால் இருக்க முடியாது’ என்ற வார்த்தை, ‘இரண்டு மாதங்கள் உன்னைப் பிரிந்து எங்கேயாவது போய் விடலாமா என்று தோன்றுகிறது’ என்று சொல்ல வைக்கும்.
இந்த தலை கீழ் மாற்றத்தை உருவாக்குவது நமது உடலில் சுரக்கும் ‘பி.இ.ஏ.’ மற்றும் ‘ஆக்சிடோசின்’ என்ற ஹார்மோன்கள். காதலிக்கும்போதும், திருமணமான புதிதிலும் அதிகமாக சுரக்கும் இவை, திருமணத்திற்குப் பிறகு குறையத் தொடங்குகிறது. இவை குறைந்து கொண்டிருக்கும் நேரத்தில், குறைய வேண்டிய ‘செரட்டோனின்’ என்ற ஹார்மோன் அதிகமாக சுரந்து, காதலை கசக்கச் செய்ய முயற்சிக்கும். இதற்கு புதுமணத்தம்பதிகள் இடம் கொடுத்துவிடக்கூடாது.
அதற்காக அவர்கள் திருமணத்திற்கு பிறகும் ஒருவரை ஒருவர் காதலிக்கவேண்டும். முன்பு போல் அதிக நேரம் பேசவேண்டும். வாழ்க்கையின் இனிமையான விஷயங்களை பேசி ஒருவரை ஒருவர் கவரவேண்டும். தினமும் இரண்டு மணிநேரத்தை கணவனும், மனைவியும் தங்களுக்காக ஒதுக்கிக்கொள்ளவேண்டும். அப்போது தங்கள் தனிமைக்குள் நுழைய டி.வி., செல்போன், உறவினர்களுக்குகூட இடம் கொடுத்துவிடக்கூடாது. அந்த தனிமையை இனிமையாக நீங்கள் செலவிட்டால் ‘பி.இ.ஏ.’ ‘ஆக்சிடோசின்’ ஹார்மோன் சுரப்பு அதிகமாகி, தம்பதிகளுக்குள் வற்றாத காதல் உணர்வு பெருகும்.
மண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கும் தம்பதிகளிடம் அன்பு அதிகமாக இருக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அன்பைபோல் அதிகம் இருக்கவேண்டிய இன்னொன்று நேர்மை. அன்பு கலந்த நேர்மை இருந்தால் வாழ்க்கை அதிகம் இனிக்கும். நேர்மையை காப்பாற்ற, கணவருக்குத் தெரியாமல் மனைவியோ- மனைவிக்குத் தெரியாமல் கணவரோ எந்த ரகசியத்தையும் வைத்திருக்கக்கூடாது. ஒருவருக்குத் தெரியாமல் இன்னொருவர் எந்த காரியத்தையும் செய்யவும் கூடாது. எங்கே போகிறோம்? யாருடன் போகிறோம்? என்பதை தெரிந்து கொள்ளும் உரிமையை வாழ்க்கைத் துணைக்கு வழங்க வேண்டும். திருமணத்திற்கு முன்பு ரகசியங்கள் இருந்தாலும் அதை எல்லாம் அப்போதே மறந்துவிட்டு, திருமணத்திற்கு பின்பு நேர்மையை மட்டுமே கடைப்பிடிக்கவேண்டும்.
திருமணத்தில் கணவன், மனைவி ஆகிய இருவர் மட்டுமில்லை, இரு குடும்பங்களும் இணைகின்றன. அதன் மூலம் புதுப்புது உறவுகளும் பூக்கின்றன. இதில் விருந்தாளிகளும் குறிப்பிடத்தக்கவர்களாக இருக்கிறார்கள்.
நாம் விருந்தாளிகளை நன்றாக உபசரிப்போம். அவர்கள் விரும்புகிற மாதிரி நடந்து கொள்வோம். அவர்களது முகங்கோணக்கூடாது என்பதில் முழு கவனம் செலுத்துவோம். நாம் விரும்பி வாங்கி வைத்திருக்கும் பொருள் ஒன்றை அவர் எடுத்துப் பார்க்கும்போது கைதவறி அது கீழே விழுந்து உடைந்துவிட்டாலும் கோபம் கொள்ளமாட்டோம். அது எவ்வளவு சென்டிமென்ட் கொண்ட பொருளாக இருந்தாலும், ‘அவர் தெரியாமல் உடைத்துவிட்டார்’ என்று நமது மனம் ஏற்றுக்கொள்ளும்.
அதே நடைமுறையை கணவன் மனைவியிடமும், மனைவி கணவரிடமும் காட்டவேண்டும். விருந்தாளிகள் அனைவரிடமும் இனிக்க இனிக்க பேசிவிட்டு, அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறியதும் வாழ்க்கைத்துணையிடம் எரிந்துவிழக்கூடாது. விருந்தாளிகளிடம் நடப்பது போன்று அன்பையும், பாசத்தையும் வாழ்க்கைத்துணையிடமும் காட்டவேண்டும். அப்படிக்காட்டினால் வாழ்க்கை இனிக்கும்.
விருந்தாளிகளிடம் பேசுவது போன்ற மென்மையான வார்த்தைகளை கணவனும்- மனைவியும் தங்களுக்குள்ளும் பேசிக்கொள்ள வேண்டும். பிடிக்காத காரியம் ஒன்றை செய்துவிட்டாலும் ‘நீ அப்படி செய்திருக்கக் கூடாது’ என்று கடுமைகாட்டாமல், ‘நீ இப்படி செய்திருக்கலாமே!’ என்று மென்மையாக எடுத்துச் சொல்வதே சிறந்த வழி. ‘ஏன் இப்படி நடந்துகொண்டாய்? உனக்கு அறிவே இல்லையா?’ என்று கேட்பதற்கு பதில், ‘அடுத்த முறை நீ இப்படி பக்குவமாக நடந்துகொள். உன்னால் அதுவும் முடியும்’ என்று வலிக்காமல் பேசவேண்டும்.
இப்படி மென்மையாகப் பேசினால், உங்கள் வார்த்தைகளுக்கு வசிய சக்தி கிடைக்கும். இது போன்ற வார்த்தைகளை நீங்கள் எல்லா தருணங்களிலும் பிரயோகம் செய்து பாருங்கள். உங்கள் துணையை காயப்படுத்தாமலே நீங்கள் விரும்பியதை பெற முடியும். கணவர்-மனைவிக்கு இடையில் மட்டுமின்றி பிள்ளைகள், வேலையாட்கள், சக ஊழியர்கள், அக்கம் பக்கத்தினர் என எல்லோரிடத்திலுமே அன்பையும், நட்பையும் வளர்க்க இந்த அணுகுமுறையை பின்பற்றலாம்.
முப்பத்தைந்து வயதை எட்டிய பெண்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட தொடங்குகின்றன. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், சுகாதார பிரச்சினைகளை சமாளிப்பதற்கும் ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியமாகிறது.
முப்பத்தைந்து வயதை எட்டிய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு, கால்சியம் குறைபாடு, போலிக் அமிலக் குறைபாடு, ஆஸ்டியோபோரோசிஸ், தசை சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்பட தொடங்குகின்றன. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், சுகாதார பிரச்சினைகளை சமாளிப்பதற்கும் ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியமாகிறது. அத்தகைய ஊட்டச்சத்துக்கள் குறித்து பார்ப்போம்.
இரும்பு சத்து: கர்ப்ப காலத்தில் இரும்பு சத்து அதிகம் தேவைப்படும். கோழி இறைச்சி, மீன், கீரை, பீன்ஸ், பச்சை இலை காய்கறிகள், பயறு, தானியங்கள் உள்ளிட்டவற்றில் இரும்பு சத்து அதிகம் நிறைந்திருக்கும். மேலும் வைட்டமின் சி நிறைந்த உணவுகளையும் சாப்பிட வேண்டும். ஏனெனில் இது உடலில் முழுமையாக இரும்பு சத்து உறிஞ்சப்படுவதற்கு உதவும்.
அயோடின்: இந்த தாது அறிவாற்றல் வளர்ச்சிக்கு உதவும். குழந்தைகளுக்கு தேவையான அயோடின் தாய்மார்களிடம் இருந்து கிடைக்கும். அதனால் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் போதுமான அளவு அயோடின் உட்கொள்ள வேண்டியது அவசியம். அதுமட்டுமின்றி தைராய்டு சுரப்பியின் சீரான செயல்பாட்டிற்கு அயோடின் முக்கியமானது. அதனால் கடல் உணவுகள், முட்டை, பால், தானியங்கள் என அயோடின் நிறைந்திருக்கும் உணவு பொருட்களை தவறாமல் சாப்பிட வேண்டும்.
புரதம்: தசைகளின் ஆரோக்கியத்திற்கு புரதம் அவசியம். வயது அதிகரிக்கும்போது தசைகள் பலவீனமடைய தொடங்கும். அதனை தவிர்ப்பதற்கு கோழி, மீன், பீன்ஸ், பயறு, குறைந்த கொழுப்புள்ள தயிர், பால், பாலாடைக்கட்டிகள், நட்ஸ்கள், கொட்டைகள், முட்டை போன்றவற்றை சாப்பிடலாம். இவற்றில் புரதம் அதிகம் இருக்கிறது.
வைட்டமின் பி 12 : நரம்பு திசுகள், மூளையின் செயல்பாடு மற்றும் சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்திக்கு வைட்டமின் பி 12 அவசியமானது. அவை அதிகம் நிறைந்த மீன், இறைச்சி, முட்டை, பால், பால் பொருட்களை தவறாமல் சாப்பிட வேண்டும். இவை 35 வயதுக்கு பிறகு ஏற்படும் ரத்தசோகை போன்ற சிக்கல்களை போக்கவும் உதவும்.
கால்சியம் மற்றும் வைட்டமின் டி : எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் மற்றும் வைட்டமின் டி உட்கொள்வது நல்லது. குறைந்த கொழுப்புள்ள பால், தயிர், பாலாடைக்கட்டி, கொழுப்பு நிறைந்த மத்தி மீன் போன்றவை கால்சியம் நிறைந்த உணவு பொருட்கள். கால்சியத்தின் வளர்சிதை மாற்றத்திற்கு வைட்டமின் டி முக்கியமானது. நேரடி சூரிய ஒளி மூலமும் பெறலாம்.
ஒமேகா 3 கொழுப்பு அமிலம்: இதயம், எலும்பு மற்றும் மூளையின் ஆரோக்கியத்திற்கு ஒமேகா 3 அவசியம். மேலும் இவை மனம், கண்கள், சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும். கடல் உணவுகள், நட்ஸ்கள், ஆளி விதை, சோயா பீன் எண்ணெய், முட்டை, தயிர், ஜூஸ், பால், சோயா பானங்கள் போன்றவை ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்தவை. கர்ப்பிணி பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டும்.
நார்ச்சத்து: பழங்கள், காய்கறிகளில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் அவற்றை தினமும் சாப்பிட வேண்டும். வயது அதிகரிக்கும்போது ஊட்டச்சத்தின் தேவையும் அதிகரிக்கும் என்பதால் உணவு அட்டவணை தயாரித்து அதற்கேற்ப உணவு பழக்கவழக்கங்களை பின்பற்றி வரலாம். அதன் மூலம் உண்ணும் உணவில் இருந்து அதிக ஊட்டச்சத்துக்களை பெற முடியும். ஆரோக்கியமாகவும் வாழ முடியும்.
இரும்பு சத்து: கர்ப்ப காலத்தில் இரும்பு சத்து அதிகம் தேவைப்படும். கோழி இறைச்சி, மீன், கீரை, பீன்ஸ், பச்சை இலை காய்கறிகள், பயறு, தானியங்கள் உள்ளிட்டவற்றில் இரும்பு சத்து அதிகம் நிறைந்திருக்கும். மேலும் வைட்டமின் சி நிறைந்த உணவுகளையும் சாப்பிட வேண்டும். ஏனெனில் இது உடலில் முழுமையாக இரும்பு சத்து உறிஞ்சப்படுவதற்கு உதவும்.
அயோடின்: இந்த தாது அறிவாற்றல் வளர்ச்சிக்கு உதவும். குழந்தைகளுக்கு தேவையான அயோடின் தாய்மார்களிடம் இருந்து கிடைக்கும். அதனால் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் போதுமான அளவு அயோடின் உட்கொள்ள வேண்டியது அவசியம். அதுமட்டுமின்றி தைராய்டு சுரப்பியின் சீரான செயல்பாட்டிற்கு அயோடின் முக்கியமானது. அதனால் கடல் உணவுகள், முட்டை, பால், தானியங்கள் என அயோடின் நிறைந்திருக்கும் உணவு பொருட்களை தவறாமல் சாப்பிட வேண்டும்.
புரதம்: தசைகளின் ஆரோக்கியத்திற்கு புரதம் அவசியம். வயது அதிகரிக்கும்போது தசைகள் பலவீனமடைய தொடங்கும். அதனை தவிர்ப்பதற்கு கோழி, மீன், பீன்ஸ், பயறு, குறைந்த கொழுப்புள்ள தயிர், பால், பாலாடைக்கட்டிகள், நட்ஸ்கள், கொட்டைகள், முட்டை போன்றவற்றை சாப்பிடலாம். இவற்றில் புரதம் அதிகம் இருக்கிறது.
வைட்டமின் பி 12 : நரம்பு திசுகள், மூளையின் செயல்பாடு மற்றும் சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்திக்கு வைட்டமின் பி 12 அவசியமானது. அவை அதிகம் நிறைந்த மீன், இறைச்சி, முட்டை, பால், பால் பொருட்களை தவறாமல் சாப்பிட வேண்டும். இவை 35 வயதுக்கு பிறகு ஏற்படும் ரத்தசோகை போன்ற சிக்கல்களை போக்கவும் உதவும்.
கால்சியம் மற்றும் வைட்டமின் டி : எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் மற்றும் வைட்டமின் டி உட்கொள்வது நல்லது. குறைந்த கொழுப்புள்ள பால், தயிர், பாலாடைக்கட்டி, கொழுப்பு நிறைந்த மத்தி மீன் போன்றவை கால்சியம் நிறைந்த உணவு பொருட்கள். கால்சியத்தின் வளர்சிதை மாற்றத்திற்கு வைட்டமின் டி முக்கியமானது. நேரடி சூரிய ஒளி மூலமும் பெறலாம்.
ஒமேகா 3 கொழுப்பு அமிலம்: இதயம், எலும்பு மற்றும் மூளையின் ஆரோக்கியத்திற்கு ஒமேகா 3 அவசியம். மேலும் இவை மனம், கண்கள், சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும். கடல் உணவுகள், நட்ஸ்கள், ஆளி விதை, சோயா பீன் எண்ணெய், முட்டை, தயிர், ஜூஸ், பால், சோயா பானங்கள் போன்றவை ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்தவை. கர்ப்பிணி பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டும்.
நார்ச்சத்து: பழங்கள், காய்கறிகளில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் அவற்றை தினமும் சாப்பிட வேண்டும். வயது அதிகரிக்கும்போது ஊட்டச்சத்தின் தேவையும் அதிகரிக்கும் என்பதால் உணவு அட்டவணை தயாரித்து அதற்கேற்ப உணவு பழக்கவழக்கங்களை பின்பற்றி வரலாம். அதன் மூலம் உண்ணும் உணவில் இருந்து அதிக ஊட்டச்சத்துக்களை பெற முடியும். ஆரோக்கியமாகவும் வாழ முடியும்.
வேர்க்கடலையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று வேர்கடலை சேர்த்து நவராத்திரி நைவேத்தியம் சத்தான சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சமைக்க தேவையானவை
வேர்க்கடலை - 1 கப்,
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிதளவு,
இஞ்சி துருவல் - அரை டீஸ்பூன்,
சீரகம், சோம்பு - தலா கால் டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வேர்கடலையை ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.
முதலில் ஒரு மணி நேரம் ஊற வைத்த வேர்க்கடலையை உப்பு சேர்த்து ஆவியில் வேக வைக்கவும்.
எண்ணெயை சூடாக்கி, சீரகம், சோம்பு, பச்சை மிளகாய் தாளிக்கவும்.
இதனுடன் இஞ்சித் துருவல், வெந்த வேர்க்கடலை சேர்க்கவும்.
நறுக்கிய கொத்தமல்லி, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.
வேர்க்கடலை - 1 கப்,
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிதளவு,
இஞ்சி துருவல் - அரை டீஸ்பூன்,
சீரகம், சோம்பு - தலா கால் டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வேர்கடலையை ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.
முதலில் ஒரு மணி நேரம் ஊற வைத்த வேர்க்கடலையை உப்பு சேர்த்து ஆவியில் வேக வைக்கவும்.
எண்ணெயை சூடாக்கி, சீரகம், சோம்பு, பச்சை மிளகாய் தாளிக்கவும்.
இதனுடன் இஞ்சித் துருவல், வெந்த வேர்க்கடலை சேர்க்கவும்.
நறுக்கிய கொத்தமல்லி, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.
வேர்க்கடலை சுண்டல் தயார்
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
கொரோனா வைரஸ் பீதியால் பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புவதற்கு பல பெற்றோர் தயக்கம் காட்டும் நிலையில் கழிவறைகள் முறையாக பராமரிக்கப்படாததும், கை கழுவுவதற்கு தண்ணீர் வசதி இல்லாததும் கவனிக்கத்தகுந்த விஷயமாக இருக்கிறது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தாமதமாகிக்கொண்டிருக்கிறது. சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்து சுகாதாரமாக இருப்பதும் கொரோனாவிடம் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறையாக பின்பற்றப்படுகின்றன. இந்தநிலையில் 15 மாநிலங்களில் உள்ள பல பள்ளிகளில் கை கழுவும் வசதியும், முறையான கழிவறை வசதியும் இல்லாத தகவல் வெளியாகி இருக்கிறது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய தணிக்கை வாரியத்தின் (சி.ஏ.ஜி) அறிக்கையில் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தண்ணீர் பற்றாக்குறை, மோசமான பராமரிப்பு, பெண் குழந்தைகளுக்கு தனி கழிவறை வசதி இல்லாதது, கழிவறையில் கை கழுவும் வசதி இல்லாதது போன்றவை இந்த அறிக்கையில் முக்கிய சாராம்சமாக இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக 15 மாநிலங்களில் உள்ள 2,048 பள்ளிக்கூடங்களில் 2,695 கழிவறைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் ஆண்-பெண்கள் இருபாலரும் படிக்கும் 1,967 பள்ளிக்கூடங்களில் 99 பள்ளிகளில் கழிப்பறைகள் செயல்பாட்டில் இல்லாதது தெரியவந்துள்ளது. 436 பள்ளிக்கூடங்களில் ஆண்-பெண் இருபாலரில் ஒருவர் மட்டுமே உபயோகிக்கும் வகையிலான கழிவறைகள் அமைந்திருக்கின்றன.
சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு தனி கழிப்பறைகளை அமைக்கும் நோக்கம் 535 பள்ளிகளில் நிறைவேற்றப்படவில்லை. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 27 சதவீத பள்ளிகளில் இந்த நிலைதான் நீடிக்கிறது. மேலும் 72 சதவீத கழிப்பறைகளில் தண்ணீர் வசதியே இல்லாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது. அதுபோல் 55 சதவீத கழிவறைகளில் கை கழுவுவதற்கான வசதியும் ஏற்படுத்தப்படவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
கழிவறை கட்டுமானத்தில் குறைபாடு, போதிய பராமரிப்பின்மை, கழிவறை வாசலில் படிக்கட்டுகள் இல்லாதது, படிக்கட்டுகள் இருந்தாலும் சேதமடைந்து இருப்பது போன்ற குறைபாடுகளும் இருக்கின்றன. அதாவது 1,812 கழிவறைகளில் முறையான பராமரிப்பு, சுகாதார வசதி இல்லை. வாரத்தில் ஒரு நாளோ அல்லது மாதத்தில் ஒரு நாளோதான் கழிவறைகள் சுத்தப்படுத்தப்படுவதும் தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கழிவறைகளை தூய்மையாக பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் சி.ஏ.ஜி பரிந்துரை செய்துள்ளது.
கொரோனா வைரஸ் பீதியால் பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புவதற்கு பல பெற்றோர் தயக்கம் காட்டும் நிலையில் கழிவறைகள் முறையாக பராமரிக்கப்படாததும், கை கழுவுவதற்கு தண்ணீர் வசதி இல்லாததும் கவனிக்கத்தகுந்த விஷயமாக இருக்கிறது.
தண்ணீர் பற்றாக்குறை, மோசமான பராமரிப்பு, பெண் குழந்தைகளுக்கு தனி கழிவறை வசதி இல்லாதது, கழிவறையில் கை கழுவும் வசதி இல்லாதது போன்றவை இந்த அறிக்கையில் முக்கிய சாராம்சமாக இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக 15 மாநிலங்களில் உள்ள 2,048 பள்ளிக்கூடங்களில் 2,695 கழிவறைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் ஆண்-பெண்கள் இருபாலரும் படிக்கும் 1,967 பள்ளிக்கூடங்களில் 99 பள்ளிகளில் கழிப்பறைகள் செயல்பாட்டில் இல்லாதது தெரியவந்துள்ளது. 436 பள்ளிக்கூடங்களில் ஆண்-பெண் இருபாலரில் ஒருவர் மட்டுமே உபயோகிக்கும் வகையிலான கழிவறைகள் அமைந்திருக்கின்றன.
சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு தனி கழிப்பறைகளை அமைக்கும் நோக்கம் 535 பள்ளிகளில் நிறைவேற்றப்படவில்லை. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 27 சதவீத பள்ளிகளில் இந்த நிலைதான் நீடிக்கிறது. மேலும் 72 சதவீத கழிப்பறைகளில் தண்ணீர் வசதியே இல்லாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது. அதுபோல் 55 சதவீத கழிவறைகளில் கை கழுவுவதற்கான வசதியும் ஏற்படுத்தப்படவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
கழிவறை கட்டுமானத்தில் குறைபாடு, போதிய பராமரிப்பின்மை, கழிவறை வாசலில் படிக்கட்டுகள் இல்லாதது, படிக்கட்டுகள் இருந்தாலும் சேதமடைந்து இருப்பது போன்ற குறைபாடுகளும் இருக்கின்றன. அதாவது 1,812 கழிவறைகளில் முறையான பராமரிப்பு, சுகாதார வசதி இல்லை. வாரத்தில் ஒரு நாளோ அல்லது மாதத்தில் ஒரு நாளோதான் கழிவறைகள் சுத்தப்படுத்தப்படுவதும் தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கழிவறைகளை தூய்மையாக பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் சி.ஏ.ஜி பரிந்துரை செய்துள்ளது.
கொரோனா வைரஸ் பீதியால் பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புவதற்கு பல பெற்றோர் தயக்கம் காட்டும் நிலையில் கழிவறைகள் முறையாக பராமரிக்கப்படாததும், கை கழுவுவதற்கு தண்ணீர் வசதி இல்லாததும் கவனிக்கத்தகுந்த விஷயமாக இருக்கிறது.






