என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    இன்றைக்கு மது, கஞ்சா, புகையிலை பொருட்கள், அபின், ஹெராயின், பான் மசாலா, போதை ஏற்றும் ஊசி மருந்துகள், போதை தரும் இன்ஹேலர்கள் என பல்வேறு போதை பொருட்கள் இளம் தலைமுறையினரை வதைத்து வருகின்றன என்றால் மிகையில்லை.
    கண்ணே...மணியே...குலக்கொழுந்தே என்று வாரி அணைத்து முத்தமிட்டு சொர்க்கம் தன் கை அருகே இருப்பதாக பூரித்துத்தான் போவார்கள் பெற்றோர் தங்கள் குழந்தை முகத்தை பார்க்கையில். எதிர்காலத்தில் தனது மகனும், மகளும் சாதனைகள் பல படைத்து நம்மை வெற்றித்தேரில் அழைத்து செல்வார்கள் என்ற எண்ணம் குழந்தையை பெற்ற அத்தனை பெற்றோருக்கும் இருக்கும்.

    பாதையை மாற்றும்

    தத்தி தத்தி நடக்கும் நடையழகு முடிந்து நெஞ்சை நிமிர்த்தி நடக்கும் காலம் வந்த போது, நமது குழந்தை இந்த சமுதாயத்தில் இருக்கும் கெட்டபழக்க வழக்கத்தில் சிக்கி சின்னாபின்னமாகி விடக்கூாடாதே என்ற கவலையும் பெற்றோரை வாட்டி வதைக்கத் தொடங்கி விடுகிறது. அவர்களது கவலையை பெருங்கவலையாக்கி விடுகின்றனர் சில இளைஞர்களும் இளம் பெண்களும்.

    எந்த வகையில் வந்தாலும் போதை வஸ்து மனிதனின் மனதை மிருகமாக்கி விடும். சொல்லப்போனால் போகும் பாதையையே மாற்றி விடும். அந்த போதை வஸ்தை தேடி இன்றயை இளைய தலைமுறையினர் சிலர் ஓடிக்கொண்டிருப்பதுதான் சமுதாயத்தின் மிகப்பெரிய கவலையாக இருந்து வருகிறது.

    இன்றைக்கு மது, கஞ்சா, புகையிலை பொருட்கள், அபின், ஹெராயின், பான் மசாலா, போதை ஏற்றும் ஊசி மருந்துகள், போதை தரும் இன்ஹேலர்கள் என பல்வேறு போதை பொருட்கள் இளம் தலைமுறையினரை வதைத்து வருகின்றன என்றால் மிகையில்லை.

    ஒரு காலத்தில் வசதி படைத்தவர்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது போதை வஸ்த்துக்கள். இன்று பாமரனைத்தேடி ஓடி வந்து விட்டது என்றுதான் நாம் சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு இணையாக பெண்களும் மது மற்றும் போதை பொருட்களை பயன்படுத்தும் அளவுக்கு நுகர்வு கலாசாரம் வளர்ந்து இருப்பது காலத்தின் கொடுமை. ஆண் என்ன? பெண் என்ன? யார் செய்தாலும் போதை பழக்கம் கேடு தரத்தான் செய்யும்.

    விழாக்களில் போதை விருந்து

    பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை ஆட்டிப்படைக்கும் இந்த போதை பழக்க வழக்கம் ஒரு சமூக நோயாகவே மாறியிருக்கிறது. கவலையை மறக்கவும், உடல் சோர்வு நீங்கவும் போதை பொருட்களை பயன்படுத்துகிறேன் என்பது தான் போதை அடிமைகள் சொல்லும் காரணம்.

    தற்போதைய கால ஓட்டத்தில் பிறப்பு, இறப்பு, பிறந்தநாள், திருமண நாள், பதவி உயர்வு, திருமணம் விழா, காதுகுத்து விழா, பூப்புனித நீராட்டு விழா, புதுமனை புகுவிழா, திருவிழா, பண்டிகைகள் என எந்த சுக, துக்க நிகழ்வாக இருந்தாலும் அதில் முக்கிய இடம் வகிப்பது மது மற்றும் போதை தரும் வஸ்துகளை பயன்படுத்தும் விருந்தாக இருக்கிறது. இது ஒருபுறமிருக்க, வருங்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாகவும், முதுகெலும்பாகவும் திகழக்கூடிய இளைஞர் சமுதாயம் கஞ்சா போன்ற போதை பழக்க வழக்கங்களில் சிக்கி தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இதில் குமரி மாவட்டமும் விதிவிலக்கல்ல.

    தேடி வரும் கஞ்சா

    கடந்த சில ஆண்டுகளாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள் ஏராளமானோர் கஞ்சா போதைக்கு அடிமையாகி வருகிறார்கள். அவர்களை குறிவைத்தே கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்யும் வியாபாரிகள்தான், இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் சீரழிவுக்கு முக்கிய காரணமாக இருந்தார்கள். அவர்களுக்கு விற்பனை செய்வதால் கிடைக்கும் வருவாயைவிட இளைஞர்கள், மாணவர்களுக்கு விற்பனை செய்வதில் அதிக வருவாய் கிடைத்ததாக தெரிகிறது. இளைஞர்கள், மாணவர்களுக்கு கஞ்சா போதை மீது ஏற்பட்ட இனம்புரியாத ஆசையினால் வியாபாரிகள் கேட்ட பணத்தை கொடுத்து கஞ்சாவை வாங்கிச் சென்றதுதான் அதிக வருவாய் அதிகரிப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    இதனால் தேனி மாவட்டப்பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகளிடம் இருந்தும், ஆந்திரா மற்றும் வடமாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகளிடம் இருந்தும் கஞ்சாவை பெரும் அளவில் வரவழைத்து விற்பனையை அதிகப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த போதை பழக்கத்துக்கு ஆளாகும் இளைஞர்கள் ஆங்காங்கே சிறு, சிறு குற்றச்சம்பவங்களிலும் ஈடுபடத் தொடங்கினர். இதனால் மாணவர்கள், இளைஞர்கள் தங்களது படிப்பு மற்றும் வேலைகள் ஆகியவற்றில் இருந்து தடம்மாறிச் செல்லும் சூழல் ஏற்பட்டது.

    போலீசாரின் வேட்டை

    இதையறிந்த குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கினார். மாவட்டம் முழுவதும் தனிப்படை போலீசார் ரகசியமாக புலன் விசாரணை மேற்கொண்டு கஞ்சா விற்பனை செய்பவர்களை குறிபார்த்து வேட்டையாடினர். அதோடு மட்டுமில்லாமல் கஞ்சா போதையால் தடம் மாறும் இளைஞர்கள், மாணவர்களை அவர்களுடைய பெற்றோர் துணையோடு நல்வழிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் சத்தமின்றி மேற்கொண்டார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதைப்போல போலீஸ் சூப்பிரண்டின் இந்த நடவடிக்கைகள் அமைந்தன. இதனால் கஞ்சா போதையில் இருந்து மீண்ட மாணவர்களும், அவர்களுடைய பெற்றோரும் போலீஸ் சூப்பிரண்டுக்கு பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த ஆண்டில் கடந்த 9 மாதங்களில் மட்டும் 161 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை 228 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 647 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக தக்கலை சப்-டிவிஷனில் அருமனை பகுதியில் மட்டும் 400 கிலோவுக்கும் மேற்பட்ட கஞ்சா மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதில் முக்கிய குற்றவாளிகள் இன்னும் சிக்க வில்லை என்று கூறப்படுகிறது. இது போன்ற சம்பவங்களில் தொடர்புடைய ஏராளமானோரை கைது செய்து, கஞ்சா பொட்டலங்கள், மூடைகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது மாவட்ட காவல்துறை என்பது பெருமை கொள்ளும் விஷயமாகும். எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் இந்த நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்பதுதான் மாவட்ட மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஒருமித்த கோரிக்கையாக இருந்து வருகிறது.

    நம்பிக்கை இருக்கிறது

    இருப்பினும் திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற திரைப்பட பாடலின் வரிகளுக்கு ஏற்ப கஞ்சாவை ருசிக்கும் மாணவர்களும், இளைஞர்களும் விழிப்புணர்வு பெற்று அதிலிருந்து விடுபட முயற்சிக்க வேண்டும். பெற்றோரின் இதயத்தை கையில் இருக்கும் கஞ்சா ெகாள்ளியால் சுட்ெடரிப்பதை கைவிட வேண்டும். எதிர்காலத்தை முன்னேற்ற பாதையில் கடந்து செல்ல ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி போதை பழக்கத்தில் இருந்து மீண்டு வரவேண்டும் என்பதே இந்த சமுதாயத்தின் அக்கறை. இளைஞர்கள், இளம் பெண்கள் மட்டுமின்றி கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்தை பயன்படுத்தும் அனைவரும் அந்த தீய பழக்கத்தை கைவிட்டு சமுதாயத்தின் கனவை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. திருந்தினால் மட்டுமமே எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.
    ஒரு முடியானது தினமும் சராசரியாக அரை மில்லிமீட்டர் நீளத்துக்கு வளர்கிறது. இந்த வளர்ச்சி பருவம் 3 முதல் 7 வருடங்கள் வரை நீடிக்கும்.
    தலை முடி என்பது ஒரு புரத இழை. கரோட்டின் எனும் புரதத்தால் ஆனது. ‘பாலிக்கிள்’ எனும் முடிக்குழியில் இருந்து வளரக்கூடியது.

    நமது தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக்கின்றன. தினமும் சராசரியாக 100 முடிகள் உதிர்வது இயற்கை. முடி வளர்கிறது என்று சொன்னால், ஒரு செடி தொடர்ச்சியாக வளர்வதைப் போல் முடி வளர்கிறது என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூடாது. முடியின் வளர்ச்சி 3 பருவங்களைக் கொண்டது.

    இதில் ‘அனாஜன்’ என்பது வளரும் பருவம். ஒரு முடியானது தினமும் சராசரியாக அரை மில்லிமீட்டர் நீளத்துக்கு வளர்கிறது. இந்த வளர்ச்சி பருவம் 3 முதல் 7 வருடங்கள் வரை நீடிக்கும். இதைத் தீர்மானிப்பது, பரம்பரையில் வரும் மரபணுக்கள்.

    அடுத்தது ‘காட்டாஜன்’ என்று ஒரு பருவம். இதில் முடி இயற்கையாகவே உதிர ஆரம்பிக்கும். இந்தப் பருவம் 2 வாரங்களுக்கு நீடிக்கும். மூன்றாவது பருவம் ‘டீலாஜன்’. இது முடி ஓய்வெடுக்கும் பருவம். இது சுமார் 2 முதல் 4 மாதங்கள்வரை நீடிக்கும். இந்தச் சுழற்சி முடிந்து, மீண்டும் வளர்ச்சிப் பருவத்துக்கு திரும்பும். முடி உதிர்ந்த இடத்தில் புதிதாக வேறு முடி முளைக்கும்.

    தலைமுடி ஒவ்வொன்றும் ஒவ்வொரு பருவத்தில் இருக்கும். பெரும்பாலான முடிகள் வளரும் பருவத்தில் இருந்தால், முடி தொடர்ந்து வளரும். உதிரும் பருவத்தில் அதிக முடிகள் இருந்தால், முடி கொட்டும்; வழுக்கை விழும்.

    வயது, பரம்பரை, ஆன்ட்ரோஜன் ஹார்மோன். இந்த மூன்றும்தான் வழுக்கைக்கான முக்கிய காரணங்கள்.

    ஆன்ட்ரோஜன் ஹார்மோன், அளவாகச் சுரந்தால் முடி சரியாக வளரும்; அதிகமாகச் சுரந்தால் முடி கொட்டும். காரணம், இது முடிக்குழிகளை சுருக்கி வளர்ச்சி பருவத்தை குறைத்துவிடுகிறது.
    பெண்கள் வெளியே சென்றால் கையில் எடுத்து செல்லக்கூடிய கிளட்ச் பேக்- என்பது உலகளவில் பல விதமான வடிவங்களில் உருவாக்கப்படுகின்றன.
    கிளட்ச் என்பது ஆடம்பரமான தோற்றத்துடன் உருவாக்கப்படும் சிறு பேக் (அ) பர்ஸ் அமைப்பாகும் பெண்கள் வெளியே சென்றால் கையில் எடுத்து செல்லக்கூடிய கிளட்ச் பேக்- என்பது உலகளவில் பல விதமான வடிவங்களில் உருவாக்கப்படுகின்றன. விதவிதமான மேற்புற அமைப்பு மற்றும் அழகிய வேலைப்பாட்டுடன் வருகின்றன. கிளட்ச் என்பது சிறு செவ்வக வடிவில் ஓரப்பகுதி வளைந்தவாறு அழகிய பிடிங் உள்ளவாறும் வடிவமைப்பு செய்யப்படுகின்றன. கிளட்ச் என்பது தற்போது டிசைனர் கிளட்ச் என்றவாறு கலைநயத்துடன் உருவாக்கப்படுகின்றன. தோல் மற்றும் உயர்ரக துணிகள் கொண்டு அழகுடன் திகைக்கும் அமைப்பு, கைவினை வேலைப்பாடு என்றவாறு மேம்படுத்தப்பட்ட வடிவமைப்புடன் தயார் செய்யப்படுகின்றன.

    கைவினை வேலைப்பாட்டுடன் கிளட்ச் பேக்

    ஓவல் வடிவம் உள்ளவாறு சிறு கலைநய பேக் போன்ற அமைப்பின் கைவினை கிளட்ச் உள்ளன. அதாவது ஏதேனும் ஒற்றை வண்ண பின்னணியில் இருபுறமும் தப்கா, நக்‌ஷி மற்றும் கட்தானா கைவினை வேலைப்பாடுகள் செய்யப்பட்டவாறு உள்ளது. அதாவது கையில் ஓர் கம்பீரமான கிரீடம் வைத்திருப்பது போன்ற தோற்றபொலிவுடன் தங்க நிற கம்பிகள் மூலம் மேல் எழுந்தவாறு அழகுடன் நெய்யப்பட்டு உள்ளன. இதில் மலர்கள், கொடிகள், பறவை கூண்டு அமைப்புகள் தங்கநிற ஜொலிப்புடன் உருவாக்கம் செய்யப்படுகின்றன. இதன் தலைப்பகுதியில் திறந்து மூட உள்ள அமைப்பு அழகிய மயில் உருவில் தகதகக்கும் தங்க ஜொலிப்புடன் காட்சி தருகிறது.

    பல வண்ண மார்பில் கற்கள் பதியப்பட்ட கிளட்ச்

    சிறு சூட்கேஸ் போன்ற தோற்றத்துடன் காணப்படும் இந்த கிளட்ச் பேக்-ன் மேற்புற அழகை மேம்படுத்த விதவிதமான பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. அதன்படி பல வண்ண மார்பில் கற்கள் மேற்பகுதியில் விதவிதமான வடிவங்களில் ஒட்டப்பட்டிருக்கும். சிறு சிறு கற்கள் ஜொலிக்கும் வடிவில் ஒற்றை வண்ணத்திற்கு பொருத்தமானதை தேர்ந்தெடுத்து எடுத்துச்செல்லாம்.

    தங்க நிற பின்னணியில் டைமண்ட் கற்கள் பதித்த கிளட்ச்

    ஜொலிக்கும் அமெரிக்க டைமண்ட் கற்கள் கிளட்ச் பேக்-ன் தலைப்பகுதியில் அழகிய கிரீடம் போன்று இருக்கும். மெல்லிய கம்பிகள் முலம் முழுவதும் பின்னப்பட்ட தங்க நிறத்தில் ஜொலிக்கும் இந்த கிளட்ச் பேக் இரவு நேர பார்ட்டி மற்றும் விழாக்களுக்கு எடுத்து செல்லும்போது அதிக ஜொலிப்புடன் அனைவர் கவனத்தையும் ஈர்க்கின்றன.

    உலோக வண்ண பூக்கள் அலங்கரிக்கும் கிளட்ச்

    ஒற்றை வண்ண துணி அமைப்பின் மீது மேம்பட்ட உலோக (மெட்டல்) பூக்கள் வண்ணம் பூசப்பட்டு பொருத்தப்பட்டு உள்ளது. அதாவது விதவிதமான பூக்கள் என்பது வண்ணங்கள் வேறுபட்ட வகையில் ஜொலிக்கின்றன. அதாவது தங்க நிறம் மற்றும் பிங்க் நிற பூக்கள் என்பதுடன் பசுமையான வண்ணத்தில் இலைகள் அழகுடன் கிளட்ச் பேக்-ன் மேற்புற பகுதியில் இணைக்கப்பட்டுள்ளன.

    வித்தியாசமான வடிவத்துடன் கூடிய கிளட்ச்கள்

    கிளட்ச் என்பது செவ்வக வடிவில் மட்டுமே இதுவரை உருவாக்கப்பட்டன, தற்போது இதன் வடிவங்கள் மாறுபட்ட இதழ் வடிவில், இதய வடிவில், அரை வட்டம் என்றவாறு பல வடிவங்களில் வருகின்றன. இதழ் மற்றும் இதய வடிவ கிளட்ச் என்பது செந்நிறமாக காட்சி தரும்வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மேல் சிறு சிறு கற்கள் பதியப்பட்டு ஜொலிக்கும் வகையில் இதன் உருவாக்கம் உள்ளது.

    ஜொலிக்கும் வகையிலான பிளைன் கிளட்ச்

    அதிக வேலைப்பாடுகள் இன்றி அதே சமயம் வெள்ளிநிறம், தங்கநிறம், ரோஸ்கோல்ட், ஊதா போன்ற நிறச் சாயல்களுடன் மேற்புற பகுதி ஜொலிக்கின்ற வகையிலான கலைநயப்பணி செய்யப்பட்டு பிளைன் கிளட்ச்சுகள் வருகின்றன. இவற்றின் மூடும் பகுதி வளைந்தபடி முன்புறத்தில் பட்டன்கள் உள்ளவாறு பெரிதாக இருக்கும். அத்துடன் உட்பகுதியில் அதிக இடவசதிகள் செய்யப்படும், பிரிவுகள் உள்ளவாறும் உருவாக்கித் தரப்பட்டுள்ளன.

    எம்பிராய்டரி கிளட்ச் பேக்

    துணியின் மீது பலவிதமான ஓவியங்கள் மற்றும் கலைவடிவங்கள் அழகுற எம்பிராய்டரி செய்யப்பட்ட அதனை கொண்டு கிளட்ச் பேக் தயார் செய்யப்பட்டுள்ளன. இதன் மூடும் அமைப்பு மடித்தவாறு இருந்தால் அதில் இரட்டை வண்ண சாயல் கொண்டவாறு எம்பிராய்டரி பணிகள் செய்யப்படும். கிளட்ச் பேக் பெண்களுக்கு ஏற்ற நவநாகரீக துணையாக உள்ளது.
    20 மாதங்கள் அல்லது இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து இரவு நேரத்தில் பணி புரியும் பெண்களுக்கு மெனோபாஸ் முன்கூட்டியே வருவதற்கு 9 சதவீதம் அதிகம் வாய்ப்பிருக்கிறது.
    இரவு நேர வேலை பார்க்கும் பெண்களுக்கு மாதவிடாய் முன்கூட்டியே வந்து விடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் இதயம் சார்ந்த நோய் பாதிப்புகள், நினைவாற்றல் குறைபாடு, எலும்புகள் பலவீனமடைதல் போன்ற பிரச்சினைகள் அதிகமாக ஏற்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வு முடிவானது 20 மாதங்கள் தொடர்ந்து இரவு நேர ஷிப்டுகளில் பணி புரியும் பெண்களிடம் ஏற்படும் மாற்றங்களை கண்காணித்து அதன் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. அப்படி 20 மாதங்கள் அல்லது இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து இரவு நேரத்தில் பணி புரியும் பெண்களுக்கு மெனோபாஸ் முன்கூட்டியே வருவதற்கு 9 சதவீதம் அதிகம் வாய்ப்பிருக்கிறது. அதுவே 20 ஆண்டுகளாக தொடர்ந்து சுழற்சி முறையில் இரவு பணியை மேற்கொள்பவர்களாக இருந்தால் 73 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

    ‘‘45 வயதுக்கு முன்பாகவே மெனோபாஸ் அடைந்த பெண்கள் என்றால் அவர்கள் பெரும்பாலும் இரவு ஷிப்டில் வேலைபார்ப்பவர்களாகவும் இருக்கக்கூடும். இதுபற்றி தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொள்வது அவசியம்’’ என்கிறார், ஆய்வை மேற்கொண்ட கனடாவில் உள்ள டல்கவுசி பல்கலைக்கழக பேராசிரியர், டேவிட் ஸ்டாக்.

    இரவு நேரத்தில் வேலை செய்யும்போது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பதில் மாற்றம் ஏற்படுகிறது. அது முன்கூட்டியே மாதவிடாய் காலம் முடிவடைவதற்கு வழிவகுத்துவிடுகிறது. மேலும் கரு முட்டை உற்பத்தி நின்றுவிடுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு 22 ஆண்டுகளாக பகல் நேர பணியுடன் இரவு நேர பணியில் ஈடுபட்டிருக்கும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நர்சுகள் உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

    மழைக்காலங்களில் ஒருசில உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. அவை நோய் பாதிப்புகளை அதிகரிக்கச்செய்யும் தன்மை கொண்டவை.
    மழைக்காலத்தில் எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவு பொருட்களையும், சூடான டீ, காபியையும்தான் பலரும் விரும்புவார்கள். மழைக்காலத்தில்தான் மலேரியா, டெங்கு, டைபாய்டு, உணவு விஷமாக மாறுவது, வயிற்றுப்போக்கு, வைட்டமின் டி குறைபாடு மற்றும் சரும நோய்த்தொற்றுகளின் பாதிப்புகள் அதிகரிக்கும். சமச்சீரான உணவு வகைகளை உட்கொள்வது நல்ல பலன் தரும்.

    சீதோஷண நிலைக்கு ஏற்ப உணவுப்பழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. அப்படி செய்வது நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் பலப்படுத்தும். மழைக்காலங்களில் நோய் பாதிப்புகளுக்கு ஆளாகாமல் இருப்பதற்கு குடிநீர் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இந்த பருவத்தில்தான் நீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்கும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பருக வேண்டும். குடிநீரை கொதிக்கவைத்து பருகுவது அதைவிட சிறந்தது.

    கோடை காலத்தில் மட்டுமல்ல மழைக்காலத்திலும் வியர்வை பிரச்சினை தலைதூக்கும். ஈரப்பதம் சார்ந்த பிரச்சினையும் உருவாகும். அவற்றை ஈடு செய்வதற்கு திரவ உணவுகளை உட்கொள்வது பாதுகாப்பானது. சூடான சூப்கள், இஞ்சி டீ, மூலிகை டீ, மசாலா சேர்க்கப்பட்ட குழம்பு வகைகளை சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

    மழைக்காலத்தில் கிடைக்கும் பழங்களையும் தவறாமல் உட்கொள்ள வேண்டும். சுரைக்காய், பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய் போன்றவை மழைக்காலங்களில் கிடைக்கும். இவை அனைத்தும் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்தவை. எனவே அவற்றை தவறாமல் சாப்பிடுங்கள். நட்ஸ் வகைகள், தானியங்கள், மஞ்சள், இஞ்சி, பூண்டு, மிளகு, துளசி, புதினா, எலுமிச்சை போன்ற மசாலாப் பொருட்கள் மற்றும் மூலிகைகள் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டவை. அவை பருவமழைக்கால நோய்களைத் தடுக்க உதவும்.

    மழைக்காலங்களில் ஒருசில உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. அவை நோய் பாதிப்புகளை அதிகரிக்கச்செய்யும் தன்மை கொண்டவை. பருவமழை காலத்தில் நிலவும் சீதோஷ்ண நிலை இரைப்பை, குடல் அமைப்பை பாதிக்கக்கூடும். எனவே இந்த பருவத்தில் வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும். தவிர்க்கமுடியாத பட்சத்தில் குறைவாக சாப்பிடலாம். எண்ணெய் பலகாரங்கள் தயார் செய்வதற்கு பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் சமையலுக்கு உபயோ கிக்கக்கூடாது. மழைக்காலங்களில் நீர்நிலைகள் மாசுபடுவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது. அதனால் கடல் உணவுகளையும், வெளி உணவுகளையும் கூடுமானவரை தவிர்த்துவிடுவது நல்லது.

    பருவமழை காலத்தில் மாறுபடும் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் காரணமாக பச்சை இலை காய்கறிகளில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் வளர்ச்சி அடையக்கூடும். அதனால் காய்கறிகளை வாங்கி வந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடுவது நல்லது. அதிக வெப்பநிலையில் சமைத்து சாப்பிடுவதும் அவசியமானது.

    இதையும் படிக்கலாம்..நகம் கடிப்பதற்காக அல்ல
    காலையில் அவல் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அந்த நாள் முழுமையும் சுறுசுறுப்புடன் இருக்க செய்யும். வைட்டமின் பி, கார்போஹைட்ரேட், கலோரி, குறைந்த அளவு கொழுப்பு, புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன.
    தேவையான பொருட்கள்:

    அவல் - ஒரு கப்
    சின்ன வெங்காயம் (தோலுரித்து, பொடியாக நறுக்கியது) - கால் கப்
    நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    பச்சை மிளகாய் - 2 (கீறவும்)
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கடுகு - அரை டீஸ்பூன்
    உடைத்த உளுந்து - ஒரு டீஸ்பூன்
    சீரகம் - அரை டீஸ்பூன்
    கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
    இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
    புளித்த தயிர் - ஒரு கப்
    தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

    செய்முறை:

    அவலை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் மாவாக அரைத்துக்கொள்ளவும்.

    தயிரில் தண்ணீர், உப்பு சேர்த்துக் கடைந்துகொள்ளவும் (மோராக இரண்டரை கப் வரை இருக்க வேண்டும்).

    வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, சீரகம், உளுந்து தாளித்து கடலைப்பருப்பு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி, அடுப்பைக் குறைந்த தீயில் வைக்கவும்.

    கடைந்த மோரை அதில் ஊற்றி கலக்கி, அவல் மாவை போட்டு, சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறி, தேங்காய்த்துருவல் தூவி, நன்கு வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.

    சூப்பரான அவல் மோர்க்கூழ் ரெடி.

    மாணவ-மாணவிகள் தங்கள் மீது பாலியல்ரீதியாக துன்பத்தை விளைவிக்கின்ற பார்வையை யாராவது செலுத்தினால் கூட அதுபற்றிய புகார்களை விரைந்து தெரிவிக்க வேண்டும்.
    சட்டங்களால் மட்டுமே குற்றங்களை குறைக்க முடியாது. சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதன் மூலம் பாதுகாப்பு அளிக்கலாம். பாலியல் தொடர்பான குற்றங்கள் என்பது குழந்தைகளின் எதிர்காலத்தை சார்ந்தது. எனவே மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெற்றோர் தங்கள் குழந்தைகளின் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டும்.

    மாணவ-மாணவிகள் தங்கள் மீது பாலியல்ரீதியாக துன்பத்தை விளைவிக்கின்ற பார்வையை யாராவது செலுத்தினால் கூட அதுபற்றிய புகார்களை விரைந்து தெரிவிக்க வேண்டும். பஸ், பொது இடங்களில் பாலியல் தொல்லை கொடுக்கும் நோக்கத்தில் உடலை உரசி செல்பவர்கள், சைகைகளால் பாலியல் இச்சை ஏற்படுத்துபவர்கள், உடல் மொழியால் அச்சம் தரக்கூடிய வகையில் நடப்பவர்கள் யாராக இருந்தாலும் புகார் அளிக்கவேண்டும். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் தண்டனை பெற்றுத்தர முடியும். எனவே பெண் குழந்தைகளிடம் இதுபற்றி விழிப்புணர்வினை வழங்க வேண்டும்.

    அதே நேரம் ஆண் குழந்தைகளிடம் பெற்றோர் நல்ல மாண்புகளை எடுத்துக்கூறி வளர்க்க வேண்டும். பெண்களை நல்ல தோழிகளாக, சகோதரிகளாக மதிக்கும் வகையில் பழக்க வழக்கத்தை உருவாக்க வேண்டும். பெண்களுக்கு எதிராக செய்யும் சிறு குற்றங்களை கூட உடனடியாக கண்டித்து திருத்த வேண்டும். எதிர்பாலினத்தவரை மதிக்கவும், உண்மையாக இருக்கவும் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே கற்றுக்கொடுப்பது அவசியம்.

    குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் என்பது ஆண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்குமான சட்டமும்தான். எனவே சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறை பற்றியும் புகார் தெரிவிக்கவேண்டும். பெற்றோர், ஆசிரியர்கள், சமூகமும் இதில் விழிப்புணர்வு பெறவேண்டும். நாட்டில் பாலியல் வன்முறைகள் நிகழாத நிலை ஏற்படவேண்டும்.

    பொறுப்பாக சம்பளத்தை வாங்கி வீட்டிற்கு அனுப்பவேண்டும் என்பது போன்ற எத்தனையோ கடமைகளும், பொறுப்புகளும் ஆஸ்டலில் தங்கி வேலைபார்க்கும் பெண்களுக்கு இருக்கிறது.
    பெண்கள் படிக்கும் காலத்திலும், அலுவலகங்களில் வேலைபார்க்கும் காலகட்டத்திலும், பல்வேறு சந்தர்ப்பங்களில் குடும்பத்தை விட்டு பிரிந்து, ஆஸ்டல்களில் தங்கவேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அப்போது அங்கே அவர்களோடு தங்கும் தோழிகளைப் பொறுத்தே அவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைகிறது.

    கல்லூரி தோழிகளோடு ஆஸ்டலில் தங்குவதும், அலுவலக தோழிகளோடு ஆஸ்டலில் தங்குவதும் வெவ்வேறு மாதிரியானவை. கல்லூரி காலத்தில் பெற்றோரின் வருமானத்தில் ஆஸ்டல் வாழ்க்கை அமையும். அதில் விளையாட்டுத்தனமும், கலாட்டாவும் அமைந்திருக்கும். கல்வி கற்பது மட்டுமே பொறுப்பான ஒரு செயலாக இருப்பதால் அந்த காலகட்டம் பெரும்பாலும் மகிழ்ச்சியாகவே இருக்கும். அதுமட்டுமின்றி சக மாணவிகளும் ஒத்த வயதுடையவர்கள் என்பதால் சிந்தனையும், செயலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கும். அதனால் பெருமளவு பிரச்சினை ஏற்படாமலே அவர்களது கல்லூரி ஆஸ்டல் வாழ்க்கை முடிந்துவிடும்.

    ஆஸ்டலில் தங்கியிருந்து வேலைபார்க்கச் செல்வது அப்படியானதல்ல. பல்வேறு சூழலில் இருந்து வரும் பல பருவத்தினர் அங்கே ஒன்றிணைவார்கள். அங்கு தங்கியிருக்கும் எல்லா பெண்களுக்குமே பல்வேறு குடும்ப பொறுப்புகளும், கடமைகளும் இருக்கும். ‘பாதுகாப்பாக தங்கியிருக்கவேண்டும். கவனமாக வேலைக்குச் சென்று திரும்பவேண்டும். சரியான உணவுகளை சாப்பிட்டு உடல் நலனை பராமரிக்க வேண்டும்.

    பொறுப்பாக சம்பளத்தை வாங்கி வீட்டிற்கு அனுப்பவேண்டும்’ என்பது போன்ற எத்தனையோ கடமைகளும், பொறுப்புகளும் ஆஸ்டலில் தங்கி வேலைபார்க்கும் பெண்களுக்கு இருக்கிறது. இந்த நிலையில் அவர்களோடு அறையில் உடன் தங்கியிருக்கும் தோழிகள், தொந்தரவு தர ஆரம்பித்துவிட்டால், அது கவலைக்குரிய விஷயமாகிவிடும்.

    கூடுமானவரை விலை உயர்ந்த பொருட்களை உங்களோடு வைத்துக் கொள்ளாதீர்கள். தொலைந்தால் யாரையும் கேட்கமுடியாது. கேட்டால் சண்டை வருமே தவிர பொருள் வராது.

    உடன் இருப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு தக்கபடி நடந்துகொள்ளுங்கள்.

    உங்களைப் பற்றிய அந்தரங்க விஷயங்களை உங்கள் அறை தோழிகளிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். சொல்ல வேண்டிய விஷயங்களை மட்டும் சொல்லுங்கள்.

    நீங்கள் பயன்படுத்தும் மாத்திரை மருந்துகளை மற்றவர் களுக்கு கொடுக்காதீர்கள். அது சில நேரங்களில் நீங்களே எதிர்பாராத விதத்தில் கொலைக்கு சமமாகிவிடும்.

    கூடுமானவரை மற்றவர்களை வேலை வாங்காதீர்கள். உங்கள் வேலைகளை நீங்களே செய்யுங்கள்.

    எல்லோருக்குமாக சேர்த்து மற்றவர்கள் வேலை செய்யும்போது, கூடுமானவரை நீங்களும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

    மனதில் எதையாவது வைத்துக்கொண்டு மற்றவர்களிடம் சிடுசிடுப்பாக நடந்துகொள்ளாதீர்கள். முடிந்த அளவு புன்னகையோடும், மகிழ்ச்சியோடும் வலம் வாருங்கள்.

    அவசர தேவைக்கு பணம் கொடுத்து உதவுங்கள். ஆனால் ஞாபகமாக திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள்.

    உங்கள் வீட்டில் உள்ளவர்களைப் பற்றி குறைகூறி உங்கள் மரியாதையை நீங்களே கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

    காளானில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று காளான் வைத்து சூப்பரான பத்தே நிமிடத்தில் சூப்பரான சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    உதிராக வடித்த சாதம் - 2 கப்,
    காளான் - 10,
    பெரிய வெங்காயம் - 1,
    இஞ்சி - 1 துண்டு,
    பூண்டு - 6 பல்,
    வெங்காயத் தாள் - 2,
    பச்சை கலர் சில்லி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்,
    மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
    சீன உப்பு - அரை டீஸ்பூன்,
    சோயா சாஸ் - 1 டீஸ்பூன்,
    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு.

    செய்முறை:

    வெங்காயம், இஞ்சி, பூண்டு, காளான் ஆகியவற்றை நீளவாக்கில் மெல்லியதாகவும், வெங்காயத்தாளை பொடியாகவும் நறுக்கிகொள்ளவும்.

    எண்ணெயில் வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை வதக்குங்கள்.

    வெங்காயம் நிறம் மாறியதும் காளானைச் சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்கள் வதக்கி, பிறகு சில்லி சாஸ், சோயா சாஸ், மிளகுத்தூள், சீன உப்பு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் மிதமான தீயில் இரண்டு நிமிடங்கள் கிளறுங்கள்.

    இந்தக் கலவையில் சாதம், வெங்காயத்தாள் ஆகியவற்றைச் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான காளான் சாதம் ரெடி.

    குழந்தைகள் தனித்து செயல்படும் போது ஏதேனும் தவறு ஏற்பட்டால் அதில் செய்ய வேண்டிய திருத்தங்கள் குறித்து அவர்களை யோசிக்குமாறு செய்ய வேண்டும்.
    குழந்தை வளர்ப்பு முறையில் பெற்றோருக்கிடையே தனிப்பட்ட கருத்துக்கள் இருந்தாலும் தங்கள் குழந்தை யாரையும் சாராமல் தனித்து செயல்பட வேண்டும் என்ற நோக்கம் பொதுவாக இருக்கும்.

    குழந்தைகள் 3 வயதிலிருந்தே தங்களை சுற்றி நடக்கும் செயல்களை எளிதாக கிரகிக்க ஆரம்பிப்பார்கள். இந்த வயதிலிருந்தே அவர்களை சுயமாக செயல்பட அனுமதிக்கவும், கற்றுத்தரவும் வேண்டும். இதற்கு சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால் போதும். அதை பற்றி இங்கே பார்ப்போம்.

    குழந்தைகள் தனித்து செயல்படுவதற்கு முடிவு எடுக்கும் திறன் அவசியமானது.

    உடைகள் விளையாட்டு பொருட்கள் உணவு போன்றவற்றை தேர்வு செய்யும் போது அவர்களின் விருப்பத்தை கேட்டு அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும். அவர்களின் தேர்வு தவறாக இருக்கும் போது அதைப்பற்றி மென்மையாக எடுத்துக்கூறி புரிய வைக்க வேண்டும். இதன் மூலம் அவர்களது முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும்.

    தனித்து செயல்படும் போது குழந்தைகளின் தைரியத்தை பாராட்டவேண்டும். அவர்கள் எந்த செயலில் ஈடுட்டாலும் அதன் முடிவை பற்றி கவலைப்படாமல் அதை நிறைவேற்ற எடுக்கும் முயற்சியை ஊக்குவிக்க வேண்டும். முடிவு தோல்வியாக இருந்தாலும் அடுத்த முறை அந்த செயலை சரியாக செய்யும் படி உற்சாகம் அளிக்க வேண்டும். இதன் மூலம் குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்தலாம்.

    குழந்தைகள் தனித்து செயல்படும் போது ஏதேனும் தவறு ஏற்பட்டால் அதில் செய்ய வேண்டிய திருத்தங்கள் குறித்து அவர்களை யோசிக்குமாறு செய்ய வேண்டும். அவர்களால் அந்த சிக்கலை சமாளிக்க முடியாத சமயங்களில் மறைமுகமாக உதவ வேண்டும். இதன் மூலம் குழந்தைகளின் சிந்தனையை தூண்ட முடியும்.

    வீட்டு வேலைகளிலும் குழந்தைகளின் பங்களிப்பை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். அதன் மூலம் குடும்ப பொறுப்பை அதிகரிக்க செய்ய முடியும். குறிப்பிட்ட வேலையை செய்யும் போது அதை முடிப்பதற்கான நேரத்தையும் நிர்ணயம் செய்ய வேண்டும். அந்த நேரத்திற்குள் வேலையை கண்டிப்பாக முடிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். இதன் மூலமாக குழந்தைகள் தர மேலாண்மையை கற்றுகொள்வார்கள்.

    உங்கள் கருத்தை குழந்தைகள் மீது திணிக்காமல் அவர்களின் எண்ண ஓட்டத்தை தெரிந்து கொள்ளுஙகள். இதற்காக தினமும் சிறிது நேரம் செலவழியுங்கள். சாப்பிடும் நேரத்தை கருத்துகளை பரிமாறுவதற்கான நேரமாக மாற்றலாம். அதே சமயம் மற்றவர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் பண்பையும் வளர்க்க வேண்டும்.

    குழந்தைகளுக்கு தகுந்த நேரங்களில் உதவுவது பெற்றோரின் கடமையாக இருந்தாலும், சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும். முடிந்தவரை அந்த செயலை அவர்களே முயன்று முடிக்குமாறு செய்ய வேண்டும். இதன்மூலம் மற்றவர்களை சார்ந்திருக்கும் எண்ணம் உருவாகாமல் தானாகவே எந்தவொரு செயலையும் நிறைவேற்றும் வகையில் அவர்களின் மூளை வேகமாக செயல்படும்.

    அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் பெண் குழந்தைகளின் பருவமடையும் வயது 9 மற்றும் 11 ஆக இருக்கும் நிலையில், இந்தியாவிலும் சிறுவயதில் பருவமடையும் பெண்குழந்தைகளின் எண்ணிக்கை மிக வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது
    குழந்தைப் பருவத்திலிருந்து நடுத்தர வயதிற்கு மாறும் இடைப்பட்ட காலத்தில் உள்ள வளர்ச்சி நிலையே வளரிளம்பருவம் எனப்படுகிறது. பின்பள்ளிப் பருவத்தைத் தொடர்ந்து 10 முதல் 20 வயது வரை வளரிளம் பருவமாகக் கருதப்பட்டு மூன்று வித நிலைகளில் பிரிக்கப்பட்டுள்ளது. அவை 10 முதல் 14 வருடங்கள் - முன் வளரிளம் பருவம், 12 முதல் 16 வருடங்கள் - இடை வளரிளம் பருவம், 16 முதல் 20 வருடங்கள் - பின் வளரிளம் பருவம் என்பதாகும்.

    பருவ வயதில் ஏற்படும் ஹார்மோன்களின் செயல்பாட்டால், இருபாலருக்கும் உடலியங்கியல் மாற்றங்கள் ஏற்படுகிறது என்றாலும், மிக முக்கியமான கவனிக்கத்தக்க உடலளவிலான மாற்றங்கள் பெண் குழந்தைகளுக்கே அதிகம் ஏற்படுகிறது. வளர்ச்சி விகிதமும் பருவப் பெண்களுக்கு வேகமாக நிகழ்கிறது. இந்த வயதில்தான் பெண்குழந்தைகள் பருவமடைகிறார்கள்.

    பெண்குழந்தைகளின் பருவமடையும் வயது 50 அல்லது 60 வருடங்களுக்கு முன்னர், 14 முதல் 16 வயதாகத்தான் இருந்தது. ஆனால், பத்து வருடங்களுக்கு முன்னர் 12 மற்றும் 13 வயதில் பருவடைதல் ஏற்பட்டு, தற்போது 9 மற்றும் பத்து வயதாக மாறி இருப்பது கவலையளிக்கிறது.

    அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் பெண் குழந்தைகளின் பருவமடையும் வயது 9 மற்றும் 11 ஆக இருக்கும் நிலையில், இந்தியாவிலும் சிறுவயதில் பருவமடையும் பெண்குழந்தைகளின் எண்ணிக்கை மிக வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். ஆனாலும், இன்றளவிலும் கிராமப்புறங்களிலுள்ள பெண்குழந்தைகள் 14 முதல் 16 வயதில்தான் பருவமடைகிறார்கள் என்பது சற்றே நிம்மதியளிக்கும் செய்திதான். இதற்கு மிக முக்கியக் காரணம், வாழ்க்கை முறையும் உணவும்தான் என்பதை மறுப்பதற்கில்லை.

    ஒரு பெண்குழந்தையின் தாய் எந்த வயதில் பருவமடைந்தாரோ, அதே வயதில்தான் அவர்களுடைய பெண்ணும் பருவமடைவாள் என்பது வாய்மொழியாகக் கூறக்கேட்டதெல்லாம் இப்போது மாறிவிட்டது. இதுபற்றி நடத்தப்பட்ட ஆய்வில், வளரிளம் பருவவயதுப் பெண்ணின் பாட்டியும், அம்மாவும் ஒரு குறிப்பிட்ட வயதில் பருவமடைந்து இருந்தாலும், மகளும் அதே வயதில் பருவமடைவாள் என்று உறுதியாகக் கூறிவிடமுடியாது. அது அப்பெண்ணின் உடல் வளர்ச்சி, சமூகப் பொருளாதார நிலை, பரம்பரையாக இருக்கும் உடல் ஆரோக்கியம், மனநிலை போன்றவற்றைப் பொருத்தும் மாறுபடுகிறது என்ற முடிவு கொடுக்கப்பட்டுள்ளது.

    அதிகப்படியான புரத உணவு, தொடர்ச்சியான துரித உணவு என்று உணவுமுறை மாற்றமடைந்து இருப்பதும் ஒரு காரணம் என்று குழந்தைகள்நல மருத்துவர்கள் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் எச்சரிக்கைக் கொடுக்கின்றனர். ஒருபுறம், சிறுவயதில் பூப்படைதலே தவிர்க்க முடியாத நிலையாக இருக்க, மறுபுறம் அப்பெண் குழந்தையை நன்றாகக் கவனிக்க வேண்டும் என்ற அதிக அக்கறையில், அக்குழந்தையின் வயதுக்கேற்ப இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தால் பரிந்துரைக்கப்பட்ட அளவிற்கும் அதிகமான உணவும் ஊட்டமும் கொடுக்கப்படுகிறது என்ற நிலையும் இருக்கிறது. இதனால், அக்குழந்தை, 7 ஆம் வகுப்புப் படிக்கும்போதே, 13 அல்லது 14 வயதில் இருக்க வேண்டிய உடல் எடையைவிட அதிக எடையுடன் இருப்பதும் காரணமாகக் கூறப்படுகிறது.

    சிறுவயதிலேயே பருவமடைதல் என்பது, அப்பெண்குழந்தையை மட்டும் பாதிக்கும் தனிப்பட்ட உடல்நல சிக்கலல்ல. அவளுடைய பெற்றோர், பள்ளிச் சூழல், உறவினர்கள், சமூகம் என்று அனைத்திற்கும் மிக நெருங்கியத் தொடர்புடைய ஒரு சிக்கலாகத்தான் பார்க்கத் தோன்றுகிறது.

    வாழ்க்கையையும், உலகத்தையும் அறிந்துகொள்ளும் ஒரு நுழைவாயிலாகவே வளரிளம்பருவம் பார்க்கப்படுவதால், வளரிளம் பருவம் என்பது பெரும்பாலும் “வாய்ப்புகளின் வயது” என்று அழகாகக் கூறப்படுகிறது. உடலியங்கியல் மாற்றங்களுடன் சேர்ந்து சம அளவில் உளரீதியான மாற்றங்களும் ஏற்படும் மிக முக்கியமான மனிதவளர்ச்சி நிலைதான் இந்த வளரிளம்பருவம். உடல், மன, சமூக ரீதியான பல வி‌ஷயங்களுக்குப் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களால் பல்வேறு நிலைகளில் தெளிவு கொடுக்கப்பட்டு, பக்குவப்படவேண்டிய வயதாகவும் இருக்கிறது.

    “பருவ வயதில் தங்களுடைய உண்மையான, நம்பகத்தன்மையுள்ள, தீர்க்கமான நிலையை ஒரு பக்கம் ஒதுக்கி வைப்பதற்காக பல்வேறு சமூக அழுத்தத்தை அனுபவிக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், அதிலிருந்து ஒரு சிறு பகுதியை மட்டுமே தங்கள் வாழ்க்கையின் வரமாகவும் பரிசாகவும் நினைத்துக் கொள்கிறார்கள் என்று உளவியல் வல்லுனர் மேரி பைபர் கூறுகிறார்.

    ஆனால், இதே வயதில்தான், உடலளவில் ஏற்படும் மாற்றமான பருவமடைதல் நிகழ்வதால், அனைத்து விதத்திலும் நெருக்கடிகளுக்கு உள்ளாகி விடுகிறார்கள். சராசரி வயதான 13 அல்லது 14 வயதில் பெண்குழந்தைகள் பருவமடைந்தாலே அவர்கள் உடலளவிலும், மனதளவிலும் பக்குவமடைதலுக்கு ஏறக்குறைய 5 வருடங்கள் ஆகிவிடும். இந்நிலையில், எப்போதும் மகிழ்ச்சியாக ஓடியாடி விளையாட வேண்டிய குழந்தைகள் பருவமடைந்து விடுவதால், அப்பருவத்திற்கே உரிய இயற்கையான குணநலன்களையும், துறுதுறுவென்ற குழந்தைத் தன்மையையும் அவர்களும் அவர்களின் பெற்றேர்களும் அனுபவிக்க இயலாமல் போய்விடுகிறது.

    மனஅழுத்தம் என்றால் என்னவென்றே தெரியாத அந்தப் பெண் குழந்தைகள் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்று அவர்களுடைய அன்றாட செயல்கள் மூலமாகவும், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் பிற மனிதர்களிடம் வெளிப்படுத்தும் குணாதிசயங்கள் வழியாகவும் வெளிப்படுகிறது.

    மனநலம் தொடர்பான சிறுசிறு பிரச்சினைகளுக்கும் ஆளாகிறார்கள் என்பதும் சிறுவயதில் பருவமடைந்த பெண் குழந்தைகளிடம் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஒரு வீட்டிலுள்ள குழந்தை 9 அல்லது 10 வயதில் பூப்படைந்து விட்டால், தனது குழந்தையும் அதே போல் சிறுவயதிலேயே பருவமடைந்து விடுவாளோ என்று பயந்து, அவர்களுக்குள்ளாகவே குழப்பிக்கொண்டு பெற்றோர்களும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

    பருவமடைந்த பெண்களுக்கான முதல் உடலியங்கியல் பிரச்சினை என்பது மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் சுழற்சியும், அதனால் ஏற்படும் வயிற்றுவலி, மற்றும் அதனுடன் தொடர்புடைய சிறுசிறு உடல் உபாதைகளும்தான். இவை, சரிவர கவனிக்கப்படாதபோது, உடலளவிலும் மனதளவிலும் பெரிய சிக்கல்களை ஏற்படுத்திவிடும்.

    தற்போதைய காலத்தில், திருமணமான பெண்களே, மாதவிடாய் தொடர்பான நெருக்கடிகளைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ள இயலாமல் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில், இக்குழந்தைகள் என்ன செய்வார்கள்? இதுகுறித்து ஏதும் தெரியாத வெகுளித் தன்மையுடன் மேலும் இரண்டு, மூன்று வருடங்கள் கடக்க நேரிடுகிறது. சிறுவயதில் பருவமடைந்த பெண்குழந்தைகள் ஒவ்வொரு மாதவிடாயின்போதும், உடலளவில் சொல்லொண்ணா துயரத்தை அனுபவிக்கிறார்கள் என்பதைப் பள்ளியிலும், மருத்துவமனையிலும் கண்கூடாகக் காணமுடிகிறது.

    மாதவிடாயின்போது, சாதாரண அளவிற்கும் அதிகமான இரத்தப்போக்கு அல்லது மூன்று, நான்கு மாதங்களுக்கு மாதவிடாய் வராமலிருப்பது அல்லது அசாதாரண மாதவிடாய் சுழற்சி போன்ற பிரச்சினைகள் இவர்களிடத்தில் அதிகமாகக் காணப்படுகிறது.

    இந்தியப் பெண்களில் 71 சதவிகிதத்தினருக்கு முதல் மாதவிடாய் ஏற்படும் வரை, அதுபற்றிய சரியான விழிப்புணர்வு கிடையாது என்ற கவலையளிக்கும் நிலையில், இச்சிறு குழந்தைகளுக்கு மாதவிடாய் மேம்பாடு பற்றி எவ்வாறு தெரிந்திருக்கும்? சிறு வயதிலேயே மாதவிடாய் வயிற்றுவலி, கர்ப்பப்பை சுவர் தடித்து விடுதல், சிறு சிறு நீர்க்கட்டிகள் போன்ற காரணங்களுக்காக மருத்துவம் எடுத்துக் கொள்ளும்போது ஹார்மோன்களைத் தூண்டும் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இதுவும் பிற்காலத்தில், கர்ப்பப்பை மற்றும் மார்பகப் புற்றுநோய் வருவதற்கும் காரணமாகிவிடுகிறது.

    இவ்வாறான அசாதாரண மாதவிடாய் இருக்கும் நிலையில், பதறிக்கொண்டு தொடர்ச்சியாக மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளாமல், உணவுமுறை மாற்றத்தைக் கடைபிடிப்பதாலும், உடல் உறுப்புகள் நன்றாக இயங்கி, உடல் வளர்ச்சிதை மாற்றங்களுக்கான அனைத்து நொதிகளும் ஹார்மோன்களும் கிடைக்குமாறு செய்வதும் பெற்றோர்களின் கடமையென உணரவேண்டும்.

    ஒரு பெண் குழந்தைக்கு, பிறக்கும் போதே, 1 முதல் 2 மில்லியன் சினைமுட்டைகள் சினைப்பைக்குள் இருக்கும் நிலையில், பருவமடையும் வயதில், தோராயமாக 3 லட்சம் சினைமுட்டைகளே இருக்கின்றன. அப்பெண்ணின் இனப்பெருக்க மண்டல செயல்பாடுகளான மாதவிடாய், கர்ப்பகாலம் என்று கணக்கிடும்போது, அடுத்த 30 முதல் 40 வயது வரையில், இந்த சினைமுட்டை எண்ணிக்கையும் குறைந்து, பின்னர் முழுவதும் தீர்ந்துவிடும் நிலையில்தான் மாதவிடாய் சுழற்சி நிற்கும்காலம் (மெனோபாஸ்) ஏற்படுகிறது.

    இந்தியப் பெண்களின் மெனோபாஸ் சராசரியாக 45 முதல் 55 வயதாக முன்பு இருந்தது. பின்னர் 41 முதல் 49 வயதாகக் குறைந்தது. ஆனால், சமீபத்தில், பேராசிரியர் வி.கே.வி.ஆர். ராவ் அவர்களின் சமூக மற்றும் பொருளாராதார மாற்றத்திற்கான நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்த மாதவிடாய் நிற்கும் காலம் 35 வயது முதல் 39 வயதாகக் குறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    சிறுவயதிலேயே பருவமடையும் பெண்களின் மாதவிடாய் சுழற்சியும் வெகு விரைவாகவே முடிவடையும் நிலையில், மாதவிடாய் நிற்கும் காலமும் 28 முதல் 35 வயதிற்குள் ஏற்பட்டுவிடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதனால், குழந்தைப்பேறு ஏற்படும் வயதிலேயே சினைமுட்டை எண்ணிக்கையும் குறைந்து, அப்பெண்ணின் இனப்பெருக்கத்திறனை பாதித்து, தாய்மையடைவதில் தாமதமோ அல்லது குழந்தைப்பேறு என்பதே இல்லாத நிலையோ உருவாகலாம் என்று மகப்பேறு இயல் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

    குறைந்துகொண்டு வரும் உடற்பயிற்சி, தகவல் தொடர்பு சாதனங்களுடன் நேரம் செலவழித்தல், அதிகரித்துவரும் மிதவாழ்க்கை முறை போன்றவை உடற்பருமனை அதிகரித்து வருகின்றன என்ற எச்சரிக்கைமணி ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. பதினோறு வயதில் 40 முதல் 45 கிலோ உடல் எடை இருக்க வேண்டிய பெண்குழந்தைகள் 50 கிலோவும் அதற்கு மேலும் இருப்பது தற்போது அதிகரித்துள்ளது. இடைப்பட்ட வளரிளம்பருவ வயதை அடையும்போதே, அதாவது 15 வயதில் 50 முதல் 52 கிலோ உடல் எடையும், 18 வயதில் 54 முதல் 56 கிலோ உடல் எடையும் இருக்க வேண்டிய பெண் குழந்தைகள் முறையே, 60 கிலோ மற்றும் 70 கிலோவிற்கும் கூடுதலாக இருக்கிறார்கள்.

    சிறு வயதிலேயே உடல் எடை அதிகரிப்பதால், கர்ப்பப்பையில் சுரக்கும் முக்கிய ஹார்மோன்களான follicle stimulation hormone மற்றும் luteinizing hormone என்ற இரண்டையும் பாதிக்கிறது. இதுவும், சிறுவயதில் பருவமடையும் பெண்குழந்தைகளுக்கு சினைப்பை நோய்க்குறி றிசிளிஷி ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாகக் கருதப்படுகிறது.

    சிறுவயதில் பருவமடைதலால் ஏற்படும் உடற்பருமன் ஒருபுறமிருக்க, அதிக உடற்பருமனாலும், சிறுவயதில் பருவமடைதல் நிகழ்கிறது என்ற இரண்டு வகையான நெருக்கடிகளையும் 9 முதல் 12 வயதுவரையுள்ள பெண்குழந்தைகளும் அவர்களின் பெற்றோர்களும் சந்திக்கும் சூழல் உருவாகி இருப்பது வருதத்திற்குரியதே. என்றாலும், முறையான உணவுப்பழக்கம், சரியான உடற்பயிற்சி மற்றும் தூக்கம் போன்றவற்றால், குழந்தைப்பருவ வயதிற்குரிய சரியான உயரம், உடல் எடையைப் பராமரிக்கலாம். பெண் குழந்தைகளை நன்றாக விளையாட விடுவதால், இரத்த ஓட்டம் சீராகி, உடல் உறுப்புகள் பலப்படுவதுடன், எண்ணங்கள் சிதறாமல் ஒருங்கிணைக்கப்பட்டு, மனநலனும் காக்கப்படுகிறது.

    பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள், வேதிப்பொருட்கள் சேர்த்த உணவுகளைத் தவிர்த்து, இயற்கையில் கிடைக்கும் காய்கள், பழங்கள், தானியங்கள், நார்ச்சத்தும் நுண்சத்துகளும் நிறைந்த உணவுகள் போன்றவற்றை குழந்தைப் பருவத்திலேயே சரியான அளவில் கொடுக்க வேண்டும். ஊட்டச்சத்து மற்றும் உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து பெற்றோர்களும் ஆசிரியர்களும் தனிப்பட்ட முறையிலும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாகவும் பெண் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

    வளரிளம்பருவப் பெண்களின் ஆரோக்கியத்திற்காக நலவழித்துறை, அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் கொடுத்துவரும் செயல்பாடுகளை, 8 முதல் 12 வயது வரையிலுள்ள பெண்குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டியக் கட்டாயத்தில் சமூகம் இருப்பதை உணர்ந்து அனைவரும் செயல்பட்டால், பலவிதங்களில் நன்மை கிடைக்கும். இவ்வாறான ஒருங்கிணைந்த செயல்பாடுகளின் மூலமாக, சிறுவயது பூப்படைதல் ஓரளவிற்குத் தவிர்க்கப்பட்டு சரியான வயதில் பெண் குழந்தைகள் பருவமடைதல் ஏற்படுவதுடன், அவர்களின் எதிர்கால வாழ்க்கையும் ஆரோக்கியமாக அமையும்.

    தொடர்புக்கு: kuzhaliartcles2021@gmail.com
    பிடித்தமான பொருளை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும். நகம் கடிக்க தோன்றும்போதெல்லாம் அந்த பொருளை கையில் வைத்து ரசிக்கலாம்.
    நகங்களை கடிக்கும் பழக்கம் நிறைய பேருக்கு சிறுவயதிலேயே வந்து விடுகிறது. டென்ஷனாகவோ, மனக்குழப்பத்திலோ இருந்தால் நகத்தை கடிக்கும் சுபாவமும் பலரிடம் இருக்கிறது. அப்படி நகங்களை கடிப்பது விரல்களுக்கு தீங்கு விளைவிக்கும். பல்வேறு தொற்றுநோய்களுக்கும் வழிவகுக்கும். நகங்களுக்கு அடியில் இருக்கும் பாக்டீரியாக்கள் தொற்று பாதிப்பை அதிகப்படுத்திவிடும். நகத்தை தொடர்ந்து கடிப்பதால் விரல்களில் வீக்கம் ஏற்படுவது, நகத்தின் தசைப்பகுதி சிவப்பு நிறத்திற்கு மாறுவது, சீழ்படிவது போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

    பல் ஈறுகளில் காயம், முன்புற பற்களில் குறைபாடு போன்ற வாய்வழி பிரச்சினைகளும் நகம் கடிப்பதால் உண்டாகும். நீண்டநாட்களாக நகம் கடிக்கும் பழக்கத்தை தொடர்வது பற்களுக்கு பாதிப்பை அதிகப்படுத்திவிடும். பற்களில் கறைகளை உருவாக்கி இறுதியில் பற்களை சிதைத்துவிடும். பற்களில் விரிசலையும் ஏற்படுத்திவிடும். நகங்களை கடிக்கும்போது அதிலிருக்கும் துகள்கள் ஈறுகளுக்குள் சென்றடைந்து பல் வலி, வீக்கம், நோய்தொற்று போன்ற பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். கடித்த நகத்தை விழுங்கிவிட்டால் வயிறுதொடர்பான பிரச்சினைகளும் ஏற்படக்கூடும்.

    நகம் கடிக்கும் பழக்கத்தை பின்பற்றுபவர்கள் எளிதில் குற்ற உணர்வுக்கு ஆளாகுவார்கள். நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் மதிப்பும் குறைந்துபோகும். நகம் கடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு நெயில் பாலிஷ் உபயோகிக்கலாம். அதில் டெனாடோனியம் பென்சோயேட் எனும் ரசாயனம் கலந்திருக்கிறது. அது கசப்பு தன்மை கொண்டது. அது நகம் கடிக்கும் எண்ணத்தை கட்டுப்படுத்த வழிவகுக்கும். பிடித்தமான பொருளை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும். நகம் கடிக்க தோன்றும்போதெல்லாம் அந்த பொருளை கையில் வைத்து ரசிக்கலாம்.
    ×