என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
12 சிவபெருமான்களும் தங்களுடைய தேவியருடன் ஒருசேர நாங்கூர் மதங்கீஸ்வரர் கோவிலில் மதங்க மகரிஷி என்பவருக்கு காட்சி அளிக்கும் வைபவம் ரிஷபாரூட சேவையாக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
சீர்காழி அருகே நாங்கூர் கிராமத்தில் உள்ள மதங்கீஸ்வரர் கோவில் மற்றும் சுற்றுப்புறங்களில் நம்புவாருக்கு அன்பர் சாமி கோவில், சுந்தரேஸ்வரர் கோவில், அமிர்தபுரீஸ்வரர் கோவில், கைலாசநாதர் கோவில், நயனிபுரம் நயன வரதேஸ்வரர் கோவில், அல்லிவிளாகம் நாகநாதர் கோவில், திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர் கோவில், மங்கைமடம் யோகநாதன் கோவில், காத்திருப்பு சொர்ணபுரீஸ்வரர் கோவில், அன்னப்பன்பேட்டை கலிகாமேஸ்வரர் கோவில், பெருந்தோட்டம் ஐராவதேஸ்வரர் கோவில் என 12 சிவபெருமான் கோவில்கள் உள்ளன.
இந்த 12 சிவபெருமான்களும் தங்களுடைய தேவியருடன் ஒருசேர நாங்கூர் மதங்கீஸ்வரர் கோவிலில் மதங்க மகரிஷி என்பவருக்கு காட்சி அளிக்கும் வைபவம் ரிஷபாரூட சேவையாக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல, இந்த ஆண்டு நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை விநாயகர் பூஜையுடன் தொடங்குகிறது.
30-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி அளவில் 12 சிவபெருமானும் மதங்கீஸ்வரர் கோவிலில் எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடக்கிறது. அதனைத்தொடர்ந்து ஜெப ஹோமமும், அபிஷேக ஆராதனைகளும் நடக்கின்றன. இரவு 7 மணி அளவில் 12 சிவபெருமானுக்கும் ஒருசேர திருக்கல்யாண நிகழ்ச்சியும், இரவு 10 மணி அளவில் 12 சிவபெருமானும் நந்தி பகவானுடன் மதங்க மகரிஷிக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சியும் பின்னர் வீதிஉலாவும் நடக்கின்றன.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரிகள், பொறுப்பாளர்கள் மற்றும் கிராமமக்கள் செய்து வருகின்றனர்.
இந்த 12 சிவபெருமான்களும் தங்களுடைய தேவியருடன் ஒருசேர நாங்கூர் மதங்கீஸ்வரர் கோவிலில் மதங்க மகரிஷி என்பவருக்கு காட்சி அளிக்கும் வைபவம் ரிஷபாரூட சேவையாக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல, இந்த ஆண்டு நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை விநாயகர் பூஜையுடன் தொடங்குகிறது.
30-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி அளவில் 12 சிவபெருமானும் மதங்கீஸ்வரர் கோவிலில் எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடக்கிறது. அதனைத்தொடர்ந்து ஜெப ஹோமமும், அபிஷேக ஆராதனைகளும் நடக்கின்றன. இரவு 7 மணி அளவில் 12 சிவபெருமானுக்கும் ஒருசேர திருக்கல்யாண நிகழ்ச்சியும், இரவு 10 மணி அளவில் 12 சிவபெருமானும் நந்தி பகவானுடன் மதங்க மகரிஷிக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சியும் பின்னர் வீதிஉலாவும் நடக்கின்றன.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரிகள், பொறுப்பாளர்கள் மற்றும் கிராமமக்கள் செய்து வருகின்றனர்.
சப்த கைலாய தலங்களில் ஒன்றான மண்டகொளத்தூர் கோவில் போளூர் அருகே உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றங்கரையில் வடகரையில் சப்த கரைகண்ட தலமும், தென் கரையில் சப்த கைலாய தலமும் உள்ளது. இதில் சப்த கைலாய தலங்களில் ஒன்றான மண்டகொளத்தூர் கோயில் போளூர் அருகே உள்ளது. பார்வதிதேவி திருவண்ணாமலை நோக்கி சென்ற பயணத்தில் முக்கிய தலங்கள் உருவாக காரணமாக முனுகப்பட்டு எனும் தலம் அமைந்தது.
இங்கு வாழைப்பந்தலில் பச்சையம்மனாக அம்மன் அமர்ந்து அபிஷேக தீர்த்தம் கொண்டு வர முருகனை பணித்தாள். முருகப்பெருமான் தன்னுடைய வேலை எய்தார். வேல் குன்றுகளை துளைத்து சென்று குன்றை சுற்றி தவமிருந்த ரிஷிகளான போதவன், புத்திராண்டன், புருகூதன், போதன், பாண்டுரங்கன், சோமன் மற்றும் வாமன் ஆகியோர் சிரசை கொய்தது. ஞானவேல் கொண்டு வந்த தீர்த்தத்தோடு அவர்களின் உடம்பிலிருந்து வெளியேறிய குருதியும் கலந்தது. அதுவே தனி ஆறாக பெருக்கெடுத்தது.
பிரமஹத்தி தோஷம் நீங்க முருகப்பெருமான் சேயாற்றின் வடகரையில் காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், மகாதேவமங்கலம், எலத்தூர், பூண்டி மற்றும் குருவிமலை என்றழைக்கப்படும் ஊர்களில் 7 சிவலிங்கங்கள் அமைத்து வழிபட்டு தோஷத்தில் இருந்து விடுபட்டார். இந்த சிவாலயங்கள் “சப்த கரைகண்டம்’ என்றழைக்கப்படுகின்றன.
அதேபோல் முருகப்பெருமானை ஏவிய செயல், அன்னையை சேர்ந்ததால், அன்னையும் அந்த தோஷத்தை பகிர்ந்து கொள்ள வேண்டிவந்தது. இதனால் அன்னை சேயாற்றின் தென்கரையில் மண்டகொளத்தூர், கரைபூண்டி, தென் பள்ளிப்பட்டு, பழங்கோயில், நார்த்தாம்பூண்டி, தாமரைப்பாக்கம் மற்றும் வாசுதேவம்பட்டி ஆகிய ஊர்களில் ஏழு சிவாலயங்களை உருவாக்கி வழிபட்டு பாவத்தில் இருந்து விடுபட்டாள். அவை ‘சப்த கைலாயங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.
தற்போது மண்டகொளத்தூர் கோயிலை சுற்றிலும் வில்வ மரங்கள் அடர்ந்த கானமாக திகழ்கிறது. இறைவனின் திருப்பெயர் தர்மநாதேஸ்வரர், இறைவி தர்மசம்வர்த்தினி. கிழக்கு நோக்கிய மூன்று நிலைகள் கொண்ட ராஜகோபுரத்தோடு ஆலயம் திகழ்கிறது. இக்கோபுரம் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலின் ராஜகோபுர வடிவத்தை ஒத்துள்ளது. பிரகார சுற்றிலேயே அம்பாள் தனி சன்னதியில், தம் நாற்கரங்களில் வரத, அபய, அங்குச, பாசம் ஆகியன தாங்கி கிழக்கு நோக்கி, நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். சுவாமியும், அம்பாளும் தன் பக்தர்களின் பிரம்மஹத்தி தோஷம் உள்பட அனைத்துவித பாபங்களையும் நீக்கி அவர்கள் வாழ்வில் நிம்மதியை அருள்கின்றனர்.
பஞ்சபாண்டவர்கள் வனவாசம் வருகையில் இவ்வூரில் தங்க நேர்ந்தது. அப்போது, இவ்வூர் மக்களை வேதகிரி மலையில் இருந்த பகாசூரன் மிகவும் கொடுமைபடுத்தினான். பகாசூரனுக்கு பயந்து அவன் கட்டளைப்படி, தினமும் ஒரு குடும்பம் வாரியாக ஒரு வண்டி சாதமுடன், இரு எருமைகளை வண்டியில் பூட்டி தன் மகனையும் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டான். அதன்படி அனுப்பப்படுபவற்றில் வண்டியை தவிர அனைத்தையும் பகாசூரன் உண்டுவிடுவான். ஒரு நாள் ஒரு தாய், நாளை என் மகனை அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பினால் மகனை கொன்று உண்டுவிடுவான் என்ற வருத்தத்தில் இரவு முழுவதும் அழுது கொண்டிருந்தாள். இதையறிந்த குந்தி, தர்மர் இருவரும், மக்களை பகாசூரனிடமிருந்து காப்பாற்ற அச்சிறுவனுக்கு பதிலாக பீமனை உணவு வண்டியுடன் அனுப்பினர்.
பீமன் சாதத்தை தானே உண்டுவிட்டு, களிமண்ணை எடுத்து சென்றான். இதனால் ஆத்திரமடைந்த பகாசூரனுக்கும், பீமனுக்கும் சண்டை நடந்தது. பீமன் தன் கதாயுதத்தால் பகாசூரனை தலையில் அடிக்க, தலை துண்டாகி விழுந்தது. பின்னர் பீமன், அத்தலையை காலால் பூமியில் அமுக்கினான். அப்போது ஒரு குளம்போன்ற பள்ளம் உருவானது. அதன் உட்புற அமைப்பு மண்டை ஓடு வடிவில் அமைந்ததால் கபாலதாடகம் என்றும், ஊருக்கு கபால நாடகபுரம் என்றும் பின்னர் மண்டகொளத்தூர் என்று பெயர் பெற்றது.
போளூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போளூரிலிருந்து 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இக்கோயில்.
இங்கு வாழைப்பந்தலில் பச்சையம்மனாக அம்மன் அமர்ந்து அபிஷேக தீர்த்தம் கொண்டு வர முருகனை பணித்தாள். முருகப்பெருமான் தன்னுடைய வேலை எய்தார். வேல் குன்றுகளை துளைத்து சென்று குன்றை சுற்றி தவமிருந்த ரிஷிகளான போதவன், புத்திராண்டன், புருகூதன், போதன், பாண்டுரங்கன், சோமன் மற்றும் வாமன் ஆகியோர் சிரசை கொய்தது. ஞானவேல் கொண்டு வந்த தீர்த்தத்தோடு அவர்களின் உடம்பிலிருந்து வெளியேறிய குருதியும் கலந்தது. அதுவே தனி ஆறாக பெருக்கெடுத்தது.
பிரமஹத்தி தோஷம் நீங்க முருகப்பெருமான் சேயாற்றின் வடகரையில் காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், மகாதேவமங்கலம், எலத்தூர், பூண்டி மற்றும் குருவிமலை என்றழைக்கப்படும் ஊர்களில் 7 சிவலிங்கங்கள் அமைத்து வழிபட்டு தோஷத்தில் இருந்து விடுபட்டார். இந்த சிவாலயங்கள் “சப்த கரைகண்டம்’ என்றழைக்கப்படுகின்றன.
அதேபோல் முருகப்பெருமானை ஏவிய செயல், அன்னையை சேர்ந்ததால், அன்னையும் அந்த தோஷத்தை பகிர்ந்து கொள்ள வேண்டிவந்தது. இதனால் அன்னை சேயாற்றின் தென்கரையில் மண்டகொளத்தூர், கரைபூண்டி, தென் பள்ளிப்பட்டு, பழங்கோயில், நார்த்தாம்பூண்டி, தாமரைப்பாக்கம் மற்றும் வாசுதேவம்பட்டி ஆகிய ஊர்களில் ஏழு சிவாலயங்களை உருவாக்கி வழிபட்டு பாவத்தில் இருந்து விடுபட்டாள். அவை ‘சப்த கைலாயங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.
தற்போது மண்டகொளத்தூர் கோயிலை சுற்றிலும் வில்வ மரங்கள் அடர்ந்த கானமாக திகழ்கிறது. இறைவனின் திருப்பெயர் தர்மநாதேஸ்வரர், இறைவி தர்மசம்வர்த்தினி. கிழக்கு நோக்கிய மூன்று நிலைகள் கொண்ட ராஜகோபுரத்தோடு ஆலயம் திகழ்கிறது. இக்கோபுரம் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலின் ராஜகோபுர வடிவத்தை ஒத்துள்ளது. பிரகார சுற்றிலேயே அம்பாள் தனி சன்னதியில், தம் நாற்கரங்களில் வரத, அபய, அங்குச, பாசம் ஆகியன தாங்கி கிழக்கு நோக்கி, நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். சுவாமியும், அம்பாளும் தன் பக்தர்களின் பிரம்மஹத்தி தோஷம் உள்பட அனைத்துவித பாபங்களையும் நீக்கி அவர்கள் வாழ்வில் நிம்மதியை அருள்கின்றனர்.
பஞ்சபாண்டவர்கள் வனவாசம் வருகையில் இவ்வூரில் தங்க நேர்ந்தது. அப்போது, இவ்வூர் மக்களை வேதகிரி மலையில் இருந்த பகாசூரன் மிகவும் கொடுமைபடுத்தினான். பகாசூரனுக்கு பயந்து அவன் கட்டளைப்படி, தினமும் ஒரு குடும்பம் வாரியாக ஒரு வண்டி சாதமுடன், இரு எருமைகளை வண்டியில் பூட்டி தன் மகனையும் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டான். அதன்படி அனுப்பப்படுபவற்றில் வண்டியை தவிர அனைத்தையும் பகாசூரன் உண்டுவிடுவான். ஒரு நாள் ஒரு தாய், நாளை என் மகனை அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பினால் மகனை கொன்று உண்டுவிடுவான் என்ற வருத்தத்தில் இரவு முழுவதும் அழுது கொண்டிருந்தாள். இதையறிந்த குந்தி, தர்மர் இருவரும், மக்களை பகாசூரனிடமிருந்து காப்பாற்ற அச்சிறுவனுக்கு பதிலாக பீமனை உணவு வண்டியுடன் அனுப்பினர்.
பீமன் சாதத்தை தானே உண்டுவிட்டு, களிமண்ணை எடுத்து சென்றான். இதனால் ஆத்திரமடைந்த பகாசூரனுக்கும், பீமனுக்கும் சண்டை நடந்தது. பீமன் தன் கதாயுதத்தால் பகாசூரனை தலையில் அடிக்க, தலை துண்டாகி விழுந்தது. பின்னர் பீமன், அத்தலையை காலால் பூமியில் அமுக்கினான். அப்போது ஒரு குளம்போன்ற பள்ளம் உருவானது. அதன் உட்புற அமைப்பு மண்டை ஓடு வடிவில் அமைந்ததால் கபாலதாடகம் என்றும், ஊருக்கு கபால நாடகபுரம் என்றும் பின்னர் மண்டகொளத்தூர் என்று பெயர் பெற்றது.
போளூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போளூரிலிருந்து 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இக்கோயில்.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சாமிதோப்பில் அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதி உள்ளது. இங்கு வருடந்தோரும் தை, ஆவணி மற்றும் வைகாசி மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருட வைகாசி திருவிழா இன்று வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் நாள் கொடியேற்ற நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும், 5 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், காலை 6 மணிக்கு திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அய்யா வழி பக்தர்களின் அய்யா சிவ சிவ அரகரா அரகரா என்று பக்தி கோஷமிட்டனர். பின்னர் திருக்கொடியை பால. ஜனாதிபதி ஏற்றி வைத்தார். பால. லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியறை பணிவிடைகளை ஜனா.யுகேந்த், ஜனா.வைகுந்த் ஆகியோர் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு இனிமம் வழங்கப்பட்டது. தொடர்ந்து வாகன பவனி நடைபெற்றது.
கொடியேற்ற நிகழ்ச்சியில் குமரி நெல்லை தூத்துக்குடி உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் நடைபெற்றது. இன்று இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பதியை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது.
வருகிற 3-ம்தேதி வெள்ளிக்கிழமை மாலை எட்டாம் திருவிழா நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டசுவாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரிகிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும், தொடர்ந்து பல கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று மக்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோலகாட்சியும் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது. 9-ம் திருவிழாவில் அனுமன் வாகனத்திலும், பத்தாம் நாள் இந்திரா வாகனத்திலும் அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அடுத்த மாதம் 6-ம் தேதி திங்கள் கிழமை 11-ம் திருவிழா நடைபெறுகிறது. அன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை மாலை பணிவிடையும் மதியம் உச்சி படிப்பும் இரவு வாகன பவனியும் அன்னதானமும், கலையரங்கில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
திருவிழா நாட்களில் தினமும் மூன்று வேளை தலைமைப்பதியின் முன்பு அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை மூலம் அய்யாவழி பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது.
அய்யா வழி பக்தர்களின் அய்யா சிவ சிவ அரகரா அரகரா என்று பக்தி கோஷமிட்டனர். பின்னர் திருக்கொடியை பால. ஜனாதிபதி ஏற்றி வைத்தார். பால. லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியறை பணிவிடைகளை ஜனா.யுகேந்த், ஜனா.வைகுந்த் ஆகியோர் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு இனிமம் வழங்கப்பட்டது. தொடர்ந்து வாகன பவனி நடைபெற்றது.
கொடியேற்ற நிகழ்ச்சியில் குமரி நெல்லை தூத்துக்குடி உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் நடைபெற்றது. இன்று இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பதியை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது.
வருகிற 3-ம்தேதி வெள்ளிக்கிழமை மாலை எட்டாம் திருவிழா நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டசுவாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரிகிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும், தொடர்ந்து பல கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று மக்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோலகாட்சியும் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது. 9-ம் திருவிழாவில் அனுமன் வாகனத்திலும், பத்தாம் நாள் இந்திரா வாகனத்திலும் அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அடுத்த மாதம் 6-ம் தேதி திங்கள் கிழமை 11-ம் திருவிழா நடைபெறுகிறது. அன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை மாலை பணிவிடையும் மதியம் உச்சி படிப்பும் இரவு வாகன பவனியும் அன்னதானமும், கலையரங்கில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
திருவிழா நாட்களில் தினமும் மூன்று வேளை தலைமைப்பதியின் முன்பு அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை மூலம் அய்யாவழி பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது.
ஆதி சங்கரர் அருளிய இந்த கணேச ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லி விநாயகரை வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும். எதிரிகளின் தொல்லை நீங்கும்.
ஸதா பால ரூபாபி விக்னாத்ரி ஹந்த்ரீ
மஹாதந்தி வக்த்ராபி பஞ்சாஸ்யமான்யா!
விதீந்த்ராதிகம் ருக்யா கணேஸாபிதானா
விதத்தாம் ஸ்ரியம் காபி கல்யாணமூர்த்தி!!
குழந்தை வடிவமானவரே!
தடைகளாகிய மலையை பிளக்கும் வலிமை கொண்டவரே!
பரமேஸ்வரன் என்னும் சிங்கத்தின் அபிமானத்திற்குரியவரே!
பிரம்மா, இந்திரன் போன்ற தேவர்களால் போற்றப்படுபவரே!
கணங்களின் அதிபதியான விநாயகரே! மங்களமூர்த்தியே! அருள் புரிவீராக.
- ஆதி சங்கரர் அருளிய கணேச ஸ்தோத்திரம். புஜங்க' சந்தத்தில் உள்ளது.
மஹாதந்தி வக்த்ராபி பஞ்சாஸ்யமான்யா!
விதீந்த்ராதிகம் ருக்யா கணேஸாபிதானா
விதத்தாம் ஸ்ரியம் காபி கல்யாணமூர்த்தி!!
குழந்தை வடிவமானவரே!
தடைகளாகிய மலையை பிளக்கும் வலிமை கொண்டவரே!
பரமேஸ்வரன் என்னும் சிங்கத்தின் அபிமானத்திற்குரியவரே!
பிரம்மா, இந்திரன் போன்ற தேவர்களால் போற்றப்படுபவரே!
கணங்களின் அதிபதியான விநாயகரே! மங்களமூர்த்தியே! அருள் புரிவீராக.
- ஆதி சங்கரர் அருளிய கணேச ஸ்தோத்திரம். புஜங்க' சந்தத்தில் உள்ளது.
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இந்தக் கோவிலுக்கு இன்று வைகாசி மாத பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு 5 நாட்கள் மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
பிரதோஷ தினமான இன்று மதுரை, தேனி, திண்டுக்கல், சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட்டிருக்கும் முன்பு குவிந்தனர்.
காலை 6.30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர்.
பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு பிரதோச சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சுந்தரமகாலிங்கம் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
பிரதோஷ தினமான இன்று மதுரை, தேனி, திண்டுக்கல், சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட்டிருக்கும் முன்பு குவிந்தனர்.
காலை 6.30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர்.
பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு பிரதோச சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சுந்தரமகாலிங்கம் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
வைகாசி மாதத்தில் வருகின்ற வைகாசி தேய்பிறை பிரதோஷ தினத்தில் விரதம் இருந்து சிவனை வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
வாழ்வில் ஏற்படும் துயரங்கள் தீர சிவபெருமானை பிரதோஷ காலங்களில் வழிபடுவது சிறந்தது. அந்த வகையில் வைகாசி மாதத்தில் வருகின்ற வைகாசி தேய்பிறை பிரதோஷ தினத்தில் விரதம் இருந்து சிவனை வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
வைகாசி மாத தேய்பிறை பிரதோஷ தினமான இன்று சிவனை வணங்கி, உணவேதும் உண்ணாமல் சிவபெருமானுக்கு விரதமிருக்கலாம். பிரதோஷ வேளையான மாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரத்தில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று சோமாசூக்த பிரதிட்சணம் வந்து வணங்க வேண்டும்.
பிறகு நந்தி தேவர் மற்றும் சிவப்பெருமானின் அபிஷேகத்திற்கு பால், பன்னீர், தேன், தயிர் போன்ற அபிஷேக பொருட்களை தானம் தருவது சிறந்தது. மேலும் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சாற்றி, வெல்லம் கலந்த அரிசியை நந்தி பகவானுக்கு நைவேத்தியாமாக வைக்க வேண்டும். பிரதோஷ வேளை பூஜையின் நந்தி தேவர் மற்றும் சிவபெருமான், பார்வதி தேவியை வணங்க வேண்டும். வைகாசி மாதம் முருகப்பெருமானுக்குரிய மாதம் என்பதால் முருகர் சந்நிதியிலும் நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டும். மேலும் நவகிரக சந்நிதியில் சுக்கிர பகவானுக்கும் தீபம் ஏற்றி வணங்க வேண்டும்.
கோயிலில் இறைவனை வழிபட்ட பின்பு, பக்தர்கள் மற்றும் கோயிலுக்கு வெளியில் இருக்கும் யாசகர்களுக்கு சர்க்கரை பொங்கல், பஞ்சாமிர்தம் போன்ற பிரசாதங்களை வழங்குவது சிறப்பானதாகும். இந்த முறையில் வைகாசி தேய்பிறை பிரதோஷத்தில் சிவபெருமானை வணங்குவபவர்களுக்கு உடல் மற்றும் மனம் சார்ந்த நோய்கள் தீரும். மரண பயம் நீங்கும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வேலைகளில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு திடீர் பொருள் வரவு ஏற்படும். வீட்டில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறும்.
வைகாசி மாத தேய்பிறை பிரதோஷ தினமான இன்று சிவனை வணங்கி, உணவேதும் உண்ணாமல் சிவபெருமானுக்கு விரதமிருக்கலாம். பிரதோஷ வேளையான மாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரத்தில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று சோமாசூக்த பிரதிட்சணம் வந்து வணங்க வேண்டும்.
பிறகு நந்தி தேவர் மற்றும் சிவப்பெருமானின் அபிஷேகத்திற்கு பால், பன்னீர், தேன், தயிர் போன்ற அபிஷேக பொருட்களை தானம் தருவது சிறந்தது. மேலும் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சாற்றி, வெல்லம் கலந்த அரிசியை நந்தி பகவானுக்கு நைவேத்தியாமாக வைக்க வேண்டும். பிரதோஷ வேளை பூஜையின் நந்தி தேவர் மற்றும் சிவபெருமான், பார்வதி தேவியை வணங்க வேண்டும். வைகாசி மாதம் முருகப்பெருமானுக்குரிய மாதம் என்பதால் முருகர் சந்நிதியிலும் நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டும். மேலும் நவகிரக சந்நிதியில் சுக்கிர பகவானுக்கும் தீபம் ஏற்றி வணங்க வேண்டும்.
கோயிலில் இறைவனை வழிபட்ட பின்பு, பக்தர்கள் மற்றும் கோயிலுக்கு வெளியில் இருக்கும் யாசகர்களுக்கு சர்க்கரை பொங்கல், பஞ்சாமிர்தம் போன்ற பிரசாதங்களை வழங்குவது சிறப்பானதாகும். இந்த முறையில் வைகாசி தேய்பிறை பிரதோஷத்தில் சிவபெருமானை வணங்குவபவர்களுக்கு உடல் மற்றும் மனம் சார்ந்த நோய்கள் தீரும். மரண பயம் நீங்கும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வேலைகளில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு திடீர் பொருள் வரவு ஏற்படும். வீட்டில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறும்.
தமிழகத்தின் தன்னிகரில்லா தெய்வமாகவும், பழமையான கோவிலாகவும் அமையப் பெற்ற பெருமை கொண்ட இத்திருத்தலத்தில் உலக நாயகியாம் அன்னை சக்தி ஈசான மூலையை நோக்கி அமர்ந்து அருள் வழங்கிக் கொண்டிருக்கிறாள்.
பழமையும், புகழும், வரலாற்று சிறப்பும் வணிகச் சிறப்பும், ஆன்மிக பெருமையும் கொண்ட நகரம் கரூர். இத்தகைய சீரும், சிறப்பும் பெற்ற கரூரின் முக்கிய திருவிழா கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா. ஏழை, பணக்காரர் பேதமின்றி, சாதி, சமய வித்தியாசமின்றி அனைவராலும் விரும்பி அன்போடு வணங்கப்படும் தெய்வமே கரூர் மாரியம்மன்.
இக்கோவிலின் வரலாறு சுவாரஸ்யமானதாகும். கோவிலின் பரம்பரை அறங்காவலரின் கனவில் மாரியம்மன் சிறுமி வடிவில் தோன்றி, எனக்கு கரூரில் ஒரு குடிசை இல்லையே என்று ஏக்கத்தை வெளிப்படுத்தினாளாம். ஒன்றும் புரியாத அவர் விளக்கம் கேட்க குழந்தை மாரியம்மன் எதிர்கரையில் உள்ள ஆதி மாரியம்மன் கோவிலுக்கு சென்று பார் புரியும் என்று சொல்லி மறைந்து விட்டாளாம்.
அப்பெரியவர் அதன்படியே தாந்தோன்றி மலை கிராமத்திற்கு சென்றார். அங்கு ஊரே திருவிழா கோலம் பூண்டு கோலாகலமாக இருந்தது. விஷயம் புரிந்து கொண்ட பெரியவர் உடனே ஆதிமாரியம்மன் கோவிலில் இருந்து பிடி மண் எடுத்து வந்து கோவிலை கட்டினார். அது முதல் அவரது குடும்பத்தினர் கோவிலின் பரம்பரை அறங்காவலர்களாக இருந்து கோவிலை பராமரித்து வருகின்றனர்.
தமிழகத்தின் தன்னிகரில்லா தெய்வமாகவும், பழமையான கோவிலாகவும் அமையப் பெற்ற பெருமை கொண்ட இத்திருத்தலத்தில் உலக நாயகியாம் அன்னை சக்தி ஈசான மூலையை நோக்கி அமர்ந்து அருள் வழங்கிக் கொண்டிருக்கிறாள். மாரியம்மன் விழாவின் போது வேப்ப மரத்தின் மூன்று கிளைகளை உடைய பகுதியை வெட்டி எடுத்து வந்து மஞ்சள் பூசி வேப்பிலையால் அலங்கரித்து பூஜை ஆராதனையுடன் அமராவதி ஆற்றில் இருந்து கம்பத்தை எடுத்து வருவார்கள்.
ஆலயத்தில் பலி பீடத்தின் அருகில் நடப்படும் கம்பத்தை சுவாமியாக பக்தர்கள் கருதி வணங்குகிறார்கள். கம்பம் மாரியம்மன் ஆலயத்தில் இருக்கும் நாட்களில் அன்றாடம் மாலை சாயரட்ச பூஜை நடக்கும். அப்போது கம்பத்துடன் கோவிலின் உள்ளே அம்மனுடன் வைக்கப்பட்டுள்ள சக்தியையும் வைத்து பூஜை செய்வார்கள். கோவிலில் நடப்பட்ட கம்பத்திற்கு பக்தர்கள் ஈர ஆடையுடன் மஞ்சள் நீரை வேப்பிலையுடன் எடுத்து வந்து அபிஷேகம் செய்வார்கள். கம்பம் ஆற்றுக்கு செல்லும் நாள் வரை பக்தர்கள் தினமும் மஞ்சள் நீர் ஊற்றி வணங்குவார்கள்.
இக்கோவிலின் வரலாறு சுவாரஸ்யமானதாகும். கோவிலின் பரம்பரை அறங்காவலரின் கனவில் மாரியம்மன் சிறுமி வடிவில் தோன்றி, எனக்கு கரூரில் ஒரு குடிசை இல்லையே என்று ஏக்கத்தை வெளிப்படுத்தினாளாம். ஒன்றும் புரியாத அவர் விளக்கம் கேட்க குழந்தை மாரியம்மன் எதிர்கரையில் உள்ள ஆதி மாரியம்மன் கோவிலுக்கு சென்று பார் புரியும் என்று சொல்லி மறைந்து விட்டாளாம்.
அப்பெரியவர் அதன்படியே தாந்தோன்றி மலை கிராமத்திற்கு சென்றார். அங்கு ஊரே திருவிழா கோலம் பூண்டு கோலாகலமாக இருந்தது. விஷயம் புரிந்து கொண்ட பெரியவர் உடனே ஆதிமாரியம்மன் கோவிலில் இருந்து பிடி மண் எடுத்து வந்து கோவிலை கட்டினார். அது முதல் அவரது குடும்பத்தினர் கோவிலின் பரம்பரை அறங்காவலர்களாக இருந்து கோவிலை பராமரித்து வருகின்றனர்.
தமிழகத்தின் தன்னிகரில்லா தெய்வமாகவும், பழமையான கோவிலாகவும் அமையப் பெற்ற பெருமை கொண்ட இத்திருத்தலத்தில் உலக நாயகியாம் அன்னை சக்தி ஈசான மூலையை நோக்கி அமர்ந்து அருள் வழங்கிக் கொண்டிருக்கிறாள். மாரியம்மன் விழாவின் போது வேப்ப மரத்தின் மூன்று கிளைகளை உடைய பகுதியை வெட்டி எடுத்து வந்து மஞ்சள் பூசி வேப்பிலையால் அலங்கரித்து பூஜை ஆராதனையுடன் அமராவதி ஆற்றில் இருந்து கம்பத்தை எடுத்து வருவார்கள்.
ஆலயத்தில் பலி பீடத்தின் அருகில் நடப்படும் கம்பத்தை சுவாமியாக பக்தர்கள் கருதி வணங்குகிறார்கள். கம்பம் மாரியம்மன் ஆலயத்தில் இருக்கும் நாட்களில் அன்றாடம் மாலை சாயரட்ச பூஜை நடக்கும். அப்போது கம்பத்துடன் கோவிலின் உள்ளே அம்மனுடன் வைக்கப்பட்டுள்ள சக்தியையும் வைத்து பூஜை செய்வார்கள். கோவிலில் நடப்பட்ட கம்பத்திற்கு பக்தர்கள் ஈர ஆடையுடன் மஞ்சள் நீரை வேப்பிலையுடன் எடுத்து வந்து அபிஷேகம் செய்வார்கள். கம்பம் ஆற்றுக்கு செல்லும் நாள் வரை பக்தர்கள் தினமும் மஞ்சள் நீர் ஊற்றி வணங்குவார்கள்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட அம்மன்கள் கரூர் மாவட்டத்தில் கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். அந்த கோவில்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற னர் முன்னோர்கள். ஆனால் இங்கு கோவிலே ஊராக உள்ளது என்று சொல்லலாம். கரூர் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு அம்மன், கோவில்களில் தெய்வமாக இருந்து பக்தர்களை தங்களது கடைக்கண்களால் பார்த்து, வளம் பெற செய்து வருகிறார். அந்த வரிசையில் கரூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான அம்மன்கள் அனைத்து ஊர்களிலும் காவல் தெய்வமாகவும், பலருக்கு குல தெய்வமாகவும் குடி கொண்டுள்ளனர்.
அஞ்சாக்கவுண்டன்பட்டி பெரியநாயகியம்மன், அணைப் பாளையம் கொளப்பியம்மன், அத்திப்பாளையம் பெரிய பொன்னாச்சியம்மன் மற்றும் சின்ன பொன்னாச்சியம்மன், அரவக்குறிச்சி கன்னி–மாரியம்மன், அரவக்குறிச்சி முத்தாலம் மன், ஆண்டாங்–கோவில் ஏலரம்மன், ஆதனூர் முத்தாலம்மன், ஆதனூர் ஜக்காளம்மன், ஆதிநத்தம் பிடாரி சடச்சியம்மன், ஆர்ச்சம்பட்டி எல்லையம்மன், இரண்யமங்கலம் கன்னிமாரம் மன், இனங்கூர் கன்னிமார், மதுரைவீரசாமி, இனுங்கனூர் கன்னிமார், இனுங்கனூர் செல்லாண்டியம்மன், இனுங்கூர் எல்லையம்மன், இனுங்கூர் பிடாரியம்மன், உப்பிடமங்கலம் எல்லையம்மன், ஓடுகம்பட்டி மாரியம்மன், கஞ்சமனூர் மாரியம் மன், கரூர் புற்றுக்கண் மாரியம்மன், நவக்கிரக தலம்,
கரட்டுப்பட்டி கொடிக்கார மாரியம்மன், கரியாம்பட்டி அங்காளபரமேஸ்வரி அம்மன், கருவப்பநாயக்கன்பட்டி மாரி யம்மன், கரூர் எடுப்பாளம்மன், கரூர் மாரியம்மன், கல்லடை கரையடி கன்னிமார், கள்ளப்பள்ளி காமாட்சியம்மன், கள்ளை பூக்குழி கன்னிமார், கள்ளை மாரியம்மன், காக்காவாடி கஸ்பா ஊத்துக்கரை கன்னிமார், காருடையாம்பாளையம் மேலப்பட்டையம்மன், காளையாப்பட்டி அழகநாச்சியம்மன், கிருஷ்ணராயபுரம் பிடாரி அழகுநாச்சியம்மன், குப்பாச்சிப்பட்டி எல்லையம்மன், குளித்தலை ராமலிங்க சாமுண்டீஸ்வரியம்மன், கொக்காணிபாளையம் செல்லாண்டியம்மன், கொசூர் குள் ளாயி அம்மன், கொசூர் ஜக்காளம்மன், கொளக்காரன்பட்டி துர்க்கையம்மன், கோட்டைபுளிப்பட்டி மாரியம்மன், கோடங்கிப் பட்டி முத்தாலம்மன், கோடந்தூர் காளியம்மன், கோடாந்தூர் சந்திரசேகர பிடாரியம்மன், கோடாந்தூர் பெரிய நாயகியம்மன், கோதூர் கோதையம்மன், கோயம்பள்ளி செல்லாண்டியம்மன்,
சரக்கம்பட்டி ஜக்காளம்மன், சாந்துவார்பட்டி பாம்பாலம்மன், சிந்தலவாடி நாச்சிமாரம்மன், பெரியகாண்டியம்மன், சிந்தா மணிப்பட்டி பிடாரி மாரியம்மன், சிவாயம் அங்காளம்மன், சிவாயம் கன்னிமார், சிவாயம் மாரியம்மன், சின்ன சேங்கல் பிடாரியம்மன், சின்னதாராபுரம் மாரியம்மன், சின்னதேவன் பட்டி வீரமலைக்கன்னிமார், சின்னப்பனையூர் மாரியம்மன், சின்னமலையாண்டிப்பட்டி மாரியம்மன், சின்னியம்பாளையம் மாரியம்மன், சுக்காலியூர் பகவதியம்மன், செம்பியாநத்தம் நத்தமேடு பிடாரியம்மன், செம்பியாநத்தம் பட்டத்தளச்சியம் மன், செம்பியாநத்தம் மாரியம்மன், செவ்வந்திபாளையம் காளியம்மன், சேங்கல் எல்லையம்மன், தண்ணீர்பள்ளி இசக்கியம்மன், தரகம்பட்டி பகவதியம்மன்,
தளவாய்ப்பாளையம் மாரியம்மன், தாந்தோன்றிமலை பூமா தேவி, தாளியாம்பட்டி மாரியம்மன், திருமாணிக்கம்பட்டி கன்னிமார், துக்காச்சி அகிலாண்டம்மன், தென்னிலை சீலக்காம்பட்டி ஜக்காளம்மன், தொண்டமாங்கினம் மாரியம்மன், தொண்டமாங்கினம் வீரமலைக் கன்னிமார், நங்கவரம் அரிசன மாரியம்மன், நங்கவரம் பகவதியம்மன், நங்கவரம் பிடாரியம்மன், நஞ்சை காளக்குறிச்சி குங்குமகாளியம்மன், நஞ்சைக்காளக்குறிச்சி மாரியம்மன், நஞ்சைகடம்பங்குறிச்சி செல்லாண்டியம்மன், நஞ்சைதோட்டக்குறிச்சி மாரியம்மன், நஞ்சைதோட்டக்குறிச்சி மலையம்மன்,
நஞ்சைப்புகழூர் மாரியம்மன், நஞ்சைபுகர் கண்டியம்மன், நடுப்பட்டி பெரியகாண்டியம்மன், நல்லமுத்துப்பாளையம் செல்லாண்டியம்மன், நல்லூர் மாரியம்மன், பிடாரியம்மன், நன்னியூர் குமாரசாமி பவனியம்மன், நாகம்பள்ளி துர்க் கையம்மன், நாகனூர் மாரியம்மன், நாகனூர் ஜக்காளம்மன், நெடுங்கூர் பிடாரி காளியம்மன், நெரூர் காளியம்மன், நெரூர் நீலியம்மன் மாரியம்மன், நெரூர் பெரியகாண்டியம்மன்.
பசுபதிபாளையம் பகவதியம்மன், பசுவப்பட்டி செல்லாண்டியம்மன், பசுவப்பட்டி மகாலட்சுமி, பஞ்சப்பட்டி பிடாரி, பஞ்சப்பட்டி மாரியம்மன், பண்ணப்பட்டி எல்லையம்மன், பணிக்கம்பட்டி காளியம்மன், பனையூர் மாரியம்மன் வீரமா காளியம்மன், பள்ளப்பட்டி கரியகாளியம்மன், பள்ளப்பட்டி செல்லாண்டியம்மன், பள்ளப்பட்டி மாரியம்மன், பாகநத்தம் அழகாபதியம்மன், பாதிரிப்பட்டி மாரியம்மன், பாப்பக்காப் பட்டி பள்ளர் மாரியம்மன், பாப்பக்காப்பட்டி ஜக்காளம் மன், பாப்பயம்பாடி எல்லையம்மன், பால்ராஜபுரம் அறவ முடிச்சம்மன், பாலவிடுதி அங்காளம்மன், பாலவிடுதி கனவாய் கன்னி மாரம்மன்,
பாலவிடுதி தூலிப்பட்டி பிடாரி, பாலவிடுதி மாரியம்மன், பாலாம்பாள்புரம் காமாட்சியம்மன், பாலாம்பாள்புரம் பகவதியம் மன், பில்லூர் கன்னிமார், பில்லூர் பட்டத்தலச்சியம்மன், பில்லூர் பிடாரியம்மன், புஞ்சைகடம்பங்குறிச்சி மாரியம்மன், புஞ்சை காளக்குறிச்சி சின்னம்மன், புஞ்சைகாளக்குறிச்சி பகவதியம்மன், புஞ்சைதோட்டக்குறிச்சி மாரியம்மன், புஞ்சை புகளூர் மாரியம்மன், புத்தாம்பூர் மாகாளியம்மன், புத்தூர் பட்டத்தலச்சியம்மன், புத்தூர் மலைவளர்ந்தம்மன், புதுக்க நல்லி அணைப்பாளையம் கங்கையம்மன், புதுப்பட்டி ஜக்காளம் மன், புலியூர் எல்லையம்மன், புலியூர் காளியம்மன், புழுதேரி பிடாரி யம்மன், புனவாசிப்பட்டி மாரியம்மன், பூலாம்பட்டி ஜக் காளம்மன்,
பெரியபனையூர் பெரியகாண்டியம்மன், பொய்யாமணி மகாமாரியம்மன் வலம்புரிவிநாயகர், பொரணி செல்லாண்டி யம்மன், பொருந்தலூர் அங்காளம்மன், பொருந்தலூர் கள்ள நாயக்கன்பட்டி முத்தாளம்மன், பொருந்தலூர் பகவதியம்மன், பொருந்தலூர் மாரியம்மன், பொருந்தலூர் முத்தாலம்மன், பொருந்தலூர் மருதகாளியம்மன் கோவில் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட அம்மன்கள் கரூர் மாவட்டத்தில் கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.
அஞ்சாக்கவுண்டன்பட்டி பெரியநாயகியம்மன், அணைப் பாளையம் கொளப்பியம்மன், அத்திப்பாளையம் பெரிய பொன்னாச்சியம்மன் மற்றும் சின்ன பொன்னாச்சியம்மன், அரவக்குறிச்சி கன்னி–மாரியம்மன், அரவக்குறிச்சி முத்தாலம் மன், ஆண்டாங்–கோவில் ஏலரம்மன், ஆதனூர் முத்தாலம்மன், ஆதனூர் ஜக்காளம்மன், ஆதிநத்தம் பிடாரி சடச்சியம்மன், ஆர்ச்சம்பட்டி எல்லையம்மன், இரண்யமங்கலம் கன்னிமாரம் மன், இனங்கூர் கன்னிமார், மதுரைவீரசாமி, இனுங்கனூர் கன்னிமார், இனுங்கனூர் செல்லாண்டியம்மன், இனுங்கூர் எல்லையம்மன், இனுங்கூர் பிடாரியம்மன், உப்பிடமங்கலம் எல்லையம்மன், ஓடுகம்பட்டி மாரியம்மன், கஞ்சமனூர் மாரியம் மன், கரூர் புற்றுக்கண் மாரியம்மன், நவக்கிரக தலம்,
கரட்டுப்பட்டி கொடிக்கார மாரியம்மன், கரியாம்பட்டி அங்காளபரமேஸ்வரி அம்மன், கருவப்பநாயக்கன்பட்டி மாரி யம்மன், கரூர் எடுப்பாளம்மன், கரூர் மாரியம்மன், கல்லடை கரையடி கன்னிமார், கள்ளப்பள்ளி காமாட்சியம்மன், கள்ளை பூக்குழி கன்னிமார், கள்ளை மாரியம்மன், காக்காவாடி கஸ்பா ஊத்துக்கரை கன்னிமார், காருடையாம்பாளையம் மேலப்பட்டையம்மன், காளையாப்பட்டி அழகநாச்சியம்மன், கிருஷ்ணராயபுரம் பிடாரி அழகுநாச்சியம்மன், குப்பாச்சிப்பட்டி எல்லையம்மன், குளித்தலை ராமலிங்க சாமுண்டீஸ்வரியம்மன், கொக்காணிபாளையம் செல்லாண்டியம்மன், கொசூர் குள் ளாயி அம்மன், கொசூர் ஜக்காளம்மன், கொளக்காரன்பட்டி துர்க்கையம்மன், கோட்டைபுளிப்பட்டி மாரியம்மன், கோடங்கிப் பட்டி முத்தாலம்மன், கோடந்தூர் காளியம்மன், கோடாந்தூர் சந்திரசேகர பிடாரியம்மன், கோடாந்தூர் பெரிய நாயகியம்மன், கோதூர் கோதையம்மன், கோயம்பள்ளி செல்லாண்டியம்மன்,
சரக்கம்பட்டி ஜக்காளம்மன், சாந்துவார்பட்டி பாம்பாலம்மன், சிந்தலவாடி நாச்சிமாரம்மன், பெரியகாண்டியம்மன், சிந்தா மணிப்பட்டி பிடாரி மாரியம்மன், சிவாயம் அங்காளம்மன், சிவாயம் கன்னிமார், சிவாயம் மாரியம்மன், சின்ன சேங்கல் பிடாரியம்மன், சின்னதாராபுரம் மாரியம்மன், சின்னதேவன் பட்டி வீரமலைக்கன்னிமார், சின்னப்பனையூர் மாரியம்மன், சின்னமலையாண்டிப்பட்டி மாரியம்மன், சின்னியம்பாளையம் மாரியம்மன், சுக்காலியூர் பகவதியம்மன், செம்பியாநத்தம் நத்தமேடு பிடாரியம்மன், செம்பியாநத்தம் பட்டத்தளச்சியம் மன், செம்பியாநத்தம் மாரியம்மன், செவ்வந்திபாளையம் காளியம்மன், சேங்கல் எல்லையம்மன், தண்ணீர்பள்ளி இசக்கியம்மன், தரகம்பட்டி பகவதியம்மன்,
தளவாய்ப்பாளையம் மாரியம்மன், தாந்தோன்றிமலை பூமா தேவி, தாளியாம்பட்டி மாரியம்மன், திருமாணிக்கம்பட்டி கன்னிமார், துக்காச்சி அகிலாண்டம்மன், தென்னிலை சீலக்காம்பட்டி ஜக்காளம்மன், தொண்டமாங்கினம் மாரியம்மன், தொண்டமாங்கினம் வீரமலைக் கன்னிமார், நங்கவரம் அரிசன மாரியம்மன், நங்கவரம் பகவதியம்மன், நங்கவரம் பிடாரியம்மன், நஞ்சை காளக்குறிச்சி குங்குமகாளியம்மன், நஞ்சைக்காளக்குறிச்சி மாரியம்மன், நஞ்சைகடம்பங்குறிச்சி செல்லாண்டியம்மன், நஞ்சைதோட்டக்குறிச்சி மாரியம்மன், நஞ்சைதோட்டக்குறிச்சி மலையம்மன்,
நஞ்சைப்புகழூர் மாரியம்மன், நஞ்சைபுகர் கண்டியம்மன், நடுப்பட்டி பெரியகாண்டியம்மன், நல்லமுத்துப்பாளையம் செல்லாண்டியம்மன், நல்லூர் மாரியம்மன், பிடாரியம்மன், நன்னியூர் குமாரசாமி பவனியம்மன், நாகம்பள்ளி துர்க் கையம்மன், நாகனூர் மாரியம்மன், நாகனூர் ஜக்காளம்மன், நெடுங்கூர் பிடாரி காளியம்மன், நெரூர் காளியம்மன், நெரூர் நீலியம்மன் மாரியம்மன், நெரூர் பெரியகாண்டியம்மன்.
பசுபதிபாளையம் பகவதியம்மன், பசுவப்பட்டி செல்லாண்டியம்மன், பசுவப்பட்டி மகாலட்சுமி, பஞ்சப்பட்டி பிடாரி, பஞ்சப்பட்டி மாரியம்மன், பண்ணப்பட்டி எல்லையம்மன், பணிக்கம்பட்டி காளியம்மன், பனையூர் மாரியம்மன் வீரமா காளியம்மன், பள்ளப்பட்டி கரியகாளியம்மன், பள்ளப்பட்டி செல்லாண்டியம்மன், பள்ளப்பட்டி மாரியம்மன், பாகநத்தம் அழகாபதியம்மன், பாதிரிப்பட்டி மாரியம்மன், பாப்பக்காப் பட்டி பள்ளர் மாரியம்மன், பாப்பக்காப்பட்டி ஜக்காளம் மன், பாப்பயம்பாடி எல்லையம்மன், பால்ராஜபுரம் அறவ முடிச்சம்மன், பாலவிடுதி அங்காளம்மன், பாலவிடுதி கனவாய் கன்னி மாரம்மன்,
பாலவிடுதி தூலிப்பட்டி பிடாரி, பாலவிடுதி மாரியம்மன், பாலாம்பாள்புரம் காமாட்சியம்மன், பாலாம்பாள்புரம் பகவதியம் மன், பில்லூர் கன்னிமார், பில்லூர் பட்டத்தலச்சியம்மன், பில்லூர் பிடாரியம்மன், புஞ்சைகடம்பங்குறிச்சி மாரியம்மன், புஞ்சை காளக்குறிச்சி சின்னம்மன், புஞ்சைகாளக்குறிச்சி பகவதியம்மன், புஞ்சைதோட்டக்குறிச்சி மாரியம்மன், புஞ்சை புகளூர் மாரியம்மன், புத்தாம்பூர் மாகாளியம்மன், புத்தூர் பட்டத்தலச்சியம்மன், புத்தூர் மலைவளர்ந்தம்மன், புதுக்க நல்லி அணைப்பாளையம் கங்கையம்மன், புதுப்பட்டி ஜக்காளம் மன், புலியூர் எல்லையம்மன், புலியூர் காளியம்மன், புழுதேரி பிடாரி யம்மன், புனவாசிப்பட்டி மாரியம்மன், பூலாம்பட்டி ஜக் காளம்மன்,
பெரியபனையூர் பெரியகாண்டியம்மன், பொய்யாமணி மகாமாரியம்மன் வலம்புரிவிநாயகர், பொரணி செல்லாண்டி யம்மன், பொருந்தலூர் அங்காளம்மன், பொருந்தலூர் கள்ள நாயக்கன்பட்டி முத்தாளம்மன், பொருந்தலூர் பகவதியம்மன், பொருந்தலூர் மாரியம்மன், பொருந்தலூர் முத்தாலம்மன், பொருந்தலூர் மருதகாளியம்மன் கோவில் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட அம்மன்கள் கரூர் மாவட்டத்தில் கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலக புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சனிக்கிழமைதோறும் பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சனீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, கொடி கம்பத்தில் ஏற்றப்படும் சிவகொடி, கோவிலின் நான்கு வீதிகள் வழியாக எடுத்து வரப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தர்பாரண் யேஸ்வரர் சன்னதி முன்பு சிவாச்சாரியார்கள் கொடியை ஏற்றினர்.
தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில், கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சாமி, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற ஜூன் 2-ந்தேதி அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கில் வீதியுலா, 7-ந் தேதி பஞ்சமூர்த்திகள் சகோபுர வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக 9-ந்தேதி காலை தேரோட்டமும், 10-ந்தேதி சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் சகோபுர வீதியுலாவும் நடக்கிறது. 11-ந்தேதி தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சனீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, கொடி கம்பத்தில் ஏற்றப்படும் சிவகொடி, கோவிலின் நான்கு வீதிகள் வழியாக எடுத்து வரப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தர்பாரண் யேஸ்வரர் சன்னதி முன்பு சிவாச்சாரியார்கள் கொடியை ஏற்றினர்.
தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில், கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சாமி, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற ஜூன் 2-ந்தேதி அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கில் வீதியுலா, 7-ந் தேதி பஞ்சமூர்த்திகள் சகோபுர வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக 9-ந்தேதி காலை தேரோட்டமும், 10-ந்தேதி சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் சகோபுர வீதியுலாவும் நடக்கிறது. 11-ந்தேதி தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வருசாபிஷேகத்தை முன்னிட்டு கருடசேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நவதிருப்பதி கோவில்களில் 9-வது ஸ்தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வருக்ஷாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் உத்திரட்டாதி நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு விஸ்வரூபம். அதனை தொடர்ந்து 8 மணிக்கு ஹோமம் நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு பூர்ணாகுதி நடந்தது.
பின்னர் காலை 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட கலசங்கள் திருமஞ்சனம் முடிந்து, காலை 10.30மணிக்கு திருவாராதனம் நடைபெற்றது. காலை 11 மணிக்கு நாலாயிர திவ்ய பிரபந்த கோஷ்டி நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு சுவாமி பொலிந்து நின்றபிரான் கருட வாகனத்திலும் நம்மாழ்வார் ஹம்ஸ வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
இதில் எம்பெருமானார் ஜீயர், நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் கோவல மணிகண்டன் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். கருடசேவையில் சுற்றுவட்டாரத்திலுள்ள கிராம மக்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் காலை 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட கலசங்கள் திருமஞ்சனம் முடிந்து, காலை 10.30மணிக்கு திருவாராதனம் நடைபெற்றது. காலை 11 மணிக்கு நாலாயிர திவ்ய பிரபந்த கோஷ்டி நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு சுவாமி பொலிந்து நின்றபிரான் கருட வாகனத்திலும் நம்மாழ்வார் ஹம்ஸ வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
இதில் எம்பெருமானார் ஜீயர், நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் கோவல மணிகண்டன் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். கருடசேவையில் சுற்றுவட்டாரத்திலுள்ள கிராம மக்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
கிணத்துக்கடவு அருகே சூலக்கல் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கல்லில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் -விநாயகர் கோவில் உள்ளது. கண் நோயால் பாதிக்கப்பட்ட பக்தர்கள் சூலக்கல் மாரியம்மனை தரிசித்து கோவிலில் உள்ள தீர்த்தத்தை கண்களில் இட்டுக் கொண்டால் கண் நோய் குணமாகும் என்ற ஐதீகம். ஆண்டுதோறும் இந்த கோவிலில் தேர் திருவிழா 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக தேர் திருவிழா நடைபெறவில்லை. இந்தநிலையில் இந்த ஆண்டிற்கான தேர்திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 24-ந் தேதி முதல் தினசரி காலை , மாலை நேரங்களில் மாரியம்மன் குதிரை, சிம்ம வாகன சப்பரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் சூலக்கல் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் மாவிளக்கு எடுத்தும், பொங்கல் வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மாரியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.
26-ந் தேதி காலை 10.30 மணிக்கு சூலக்கல் மாரியம்மன் கோவில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேரில், விநாயகர், சூலக்கல் மாரியம்மன் எழுந்தருளினர். இதனை தொடர்ந்து மாலை திருத்தேரில் எழுந்தருளிய சூலக்கல் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் சூலக்கல் மாரியம்மன் குங்குமம் நிற பட்டுடுத்தி மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 4.56 மணிக்கு விநாயகர் தேர்முன்னால் செல்ல, 36 அடி உயரத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் காட்சியளித்த சூலக்க மாரியம்மன் தேர் மாலை 5 மணி வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. குமரகுருபர சுவாமிகள், புரவிபாளையம் ஜமீன் குடும்பத்தார் சண்முகசுந்தரி வெற்றிவேல் கோப்பன்ன மன்றாடியார் மற்றும் பக்தர்கள் கரகோஷத்துடன் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கோவை சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர் வடத்தை பிடித்து இழுத்தனர். பக்தர்கள் நேர்த்திக்கடனாக சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர் மீது வாழைபழங்களை வீசினார்கள். தேர் திருவிழாவை விழாவை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரவு தேர் மதுரைவீரன் கோவில் அருகே நிலை நிறுத்தப்பட்டது. 2-ம் நாள் தேர்த்திருவிழா 27-ந் தேதி(வெள்ளிக்கிழமை) மாலை 4.35 மணிக்கு நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சூலக்கல் மாரியம்மன், விநாயகர் கோவில் தக்காரும், உதவி ஆணையாளருமான கருணாநிதி, செயல் அலுவலர் சுந்தரராசு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தனர்.
26-ந் தேதி காலை 10.30 மணிக்கு சூலக்கல் மாரியம்மன் கோவில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேரில், விநாயகர், சூலக்கல் மாரியம்மன் எழுந்தருளினர். இதனை தொடர்ந்து மாலை திருத்தேரில் எழுந்தருளிய சூலக்கல் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் சூலக்கல் மாரியம்மன் குங்குமம் நிற பட்டுடுத்தி மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 4.56 மணிக்கு விநாயகர் தேர்முன்னால் செல்ல, 36 அடி உயரத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் காட்சியளித்த சூலக்க மாரியம்மன் தேர் மாலை 5 மணி வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. குமரகுருபர சுவாமிகள், புரவிபாளையம் ஜமீன் குடும்பத்தார் சண்முகசுந்தரி வெற்றிவேல் கோப்பன்ன மன்றாடியார் மற்றும் பக்தர்கள் கரகோஷத்துடன் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கோவை சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர் வடத்தை பிடித்து இழுத்தனர். பக்தர்கள் நேர்த்திக்கடனாக சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர் மீது வாழைபழங்களை வீசினார்கள். தேர் திருவிழாவை விழாவை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரவு தேர் மதுரைவீரன் கோவில் அருகே நிலை நிறுத்தப்பட்டது. 2-ம் நாள் தேர்த்திருவிழா 27-ந் தேதி(வெள்ளிக்கிழமை) மாலை 4.35 மணிக்கு நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சூலக்கல் மாரியம்மன், விநாயகர் கோவில் தக்காரும், உதவி ஆணையாளருமான கருணாநிதி, செயல் அலுவலர் சுந்தரராசு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தனர்.
சீயக்காய் அபிஷேகத்தினால் மனோரீதியான பொறாமை இல்லாமை, கல்லாமை, இயலாமை போன்ற மன அழுக்குகள் அகன்று தூய ஒருநிலைப்பாட்டுடன் கூடிய மனோ சக்தியை பெறுகிறோம்.
1. வடைமாலை பலன்:
சூரியனை ராகுவும், சந்திரனை கேதுவும் பிடிக்கும் நிகழ்ச்சியே கிரகணம் எனப்படுகிறது. அப்பேர்ப்பட்ட சூரிய பகவானை, ஸ்ரீ அனுமான் பிறந்தவுடன் பழம் என்று நினைத்து சூரியனை பிடித்துக் கொள்கிறார். அதைக்கண்ட ராகு பகவான் அனுமானிடம் போர் செய்து தோல்வியைக் கண்டார். அப்போர் நிகழ்ச்சியை இந்திரனிடம் ராகு பகவான் முறையிட இந்திரனுக்கும், அனுமானுக்கும் போர் ஏற்படுகிறது. அப்போரில் இந்திரனின் வஜ்ராயுதம் மாகப்பட்டது அனுமானின் தாடையில் அடிபட்டு வீங்கி விடுகிறது. தாடை முன் நீண்டு பெருத்ததினால் அனுமான் என்ற பெயர் ஏற்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் இறுதி கட்டத்தில் ராகு பகவான் தனக்கு ஏற்பட்டதோல்வி காரணமாக உளுந்து தானியங்களால் என்னுடைய சரீரம் போல் (பாம்பின் உடம்புபோல்) மாலையாக (வடை மாலையாக) உனக்கு சமர்பணம் செய்வோருக்கு ராகு சம்பந்தப்பட்ட அனைத்து விதமான தோஷங்களும் நிவர்த்தியாகி நல்வாழ்வு பெற உதவுகிறோம் என்று ராகு அனுமானிடம் கூறுகிறார். ஆதலால் தாமும் ஸ்ரீ அனுமாருக்கு வடைமாலை சாற்றி ராகு சம்பந்தப்பட்ட தோஷத்தில் இருந்து விடுபடுவதற்கு பிரார்த்தனை செய்வோம்.
2. நல்லெண்ணை அபிஷேக பலன்:
இந்து மதத்தின் தர்ம சாஸ்திரப்படி ஒருவன் இயற்கை எய்தினால் அவர் திருமாலின் திருவடி (மோட்சம்) அடைவதே சாஸ்திரமாகும். திருமால் தன்னுடைய வியர்வை துளிகளை எடுத்து தெளித்த உடன் அது கருநீல நிறம் போன்று எள் தானியமாக விளைகிறது. எம்பெருமான் சரீரத்தில் கருநீல நிறம் போன்று உள்ள சனீஸ்வர பகவான் எள் தானியத்தை தனக்கு பிரியமாக எடுத்துக் கொள்கிறார். நவநாயகர்களின் பித்ரு காராக சனிபகவான் உள்ளதால் ஸ்ரீ ஆஞ்சநேயர் பகவானுக்கு எள்ளு எண்ணையால் அபிஷேகம் செய்வதால் பித்ரு தோசமும், சனி தோசமும் நீங்கப் பெற்று வாழ்வில் மேன்மை பெறுகிறோம்.
3. பஞ்சாமிர்தம் அபிஷேக பலன்:
மனித வாழ்வில் ஐந்து விதமான இந்திரிய சக்திகள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. அவை கண், காது, வாய், மூக்கு, பிறப்புறுப் பாகப்பட்ட உயிர்நிலை ஆகிய இடங்களில் இருந்து நம்முடைய வாழ்க்கையை செம்மைப்படுத்துகிறது. இவை அனைத்தும் நன்றாக வாழ்நாள் முழுவதும் செவ்வனே இயங்க வேண்டி இறைவனுக்கு பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்கிறோம். ‘பழம், மனோரத பலம்‘ என்று சாஸ்திரம் கூறுவதை எண்ணி காரியங்கள் நிறைவேற பழங்களால் அபிஷேகம் செய்கிறோம்.
4. சீயக்காய் அபிஷேக பலன்:
சீயக்காய் அபிஷேகத்தினால் மனோரீதியான பொறாமை இல்லாமை, கல்லாமை, இயலாமை போன்ற மன அழுக்குகள் அகன்று தூய ஒருநிலைப்பாட்டுடன் கூடிய மனோ சக்தியை பெறுகிறோம்.
5. பால் அபிஷேக பலன்:
வேதம் கற்றரிந்த சான்றோருக்கு ஒரு மழை, நீதி வழுவா அரசருக்கு ஒரு மழை, கற்பு நெறி தவறாத மாதர்க்கு ஒரு மழை. இதுபோல் மாதம் மும்மாரி (மழை) பெய்யவும்,தாய்மார்களுக்கு தாய்ப்பால் சக்தி கிடைக்கவும், தேசங்களிலும், வீடுகளிலும் பால் பொருட்கள் பெருகவும், பசுக்கள் நிறைந்த பால் சொரியவும், நீர் நிலைகளில் வற்றாத ஊற்று வரவும், யாகம், பூஜைகள், குருமார்கள் நல்வழிப்பெறவும் பால் அபிஷேகம் செய்கின்றோம்.
6. தயிர் அபிஷேக பலன்:
வீடு, மனைவி, மக்கள், வாகனம், நிலம், இவை அனைத்தும் நம்மை படைக்கும் பொழுது நமக்கு இறைவனால் கொடுக்கப்படும் கடனாகவே படைக்கப்படுகிறோம். நாம் பெற்றவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள், பெற்றோர்கள் பெற்ற மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் இவை அனைத்தும் செவ்வனே நடைபெற வேண்டி இறைவனுக்கு தயிர் அபிஷேகம் செய்கிறோம்.
7. நல்ல மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் அபிஷேக பலன்:
பெண்கள், சுமங்கலித்துவம் பெறவும், உலகமெங்கும் அமங்கலமான செயல்களை தவிர்க்கவும், வியாதியற்ற வாழ்வு பெற வேண்டியும் மஞ்சள் அபிஷேகம் செய்கிறோம்.
8. சந்தனம் அபிஷேக பலன்:
மகாலட்சுமி பிறந்தது சந்தனம் மற்றும் வாசனை பொருட்கள் நிறைந்த இடமாவதால் வீரலட்சுமி அம்சமான ஆஞ்சநேயருக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்வதால் தீர்வில்லா பொரு ளாதாரத்தை அடைகிறோம்.
9. ஸ்வர்ண அபிஷேக பலன்:
பூர்ணத்துவமான ஆயுள் சக்தியை பெற இறைவனுக்கு தங்க தீர்த்தத்தை அபிஷேகம் செய்ய வேண்டுமென சாஸ்திரங்கள் கூறுவதால் தம்மால் இயன்ற தங்க ஆபரணங்களை புனித மந்திரங்களை சொல்லி உருவேற்றிய குடத்திற்குள் போட்டு அந்த தீர்த்தத்தை சாமிக்கு அபிஷேகம் செய்வதால் பூர்ண ஆயுள் பெற்று நம்முடைய இல்லங்களில் வற்றாத தங்க ஆபரணங்கள் அடைகிறோம்.
சூரியனை ராகுவும், சந்திரனை கேதுவும் பிடிக்கும் நிகழ்ச்சியே கிரகணம் எனப்படுகிறது. அப்பேர்ப்பட்ட சூரிய பகவானை, ஸ்ரீ அனுமான் பிறந்தவுடன் பழம் என்று நினைத்து சூரியனை பிடித்துக் கொள்கிறார். அதைக்கண்ட ராகு பகவான் அனுமானிடம் போர் செய்து தோல்வியைக் கண்டார். அப்போர் நிகழ்ச்சியை இந்திரனிடம் ராகு பகவான் முறையிட இந்திரனுக்கும், அனுமானுக்கும் போர் ஏற்படுகிறது. அப்போரில் இந்திரனின் வஜ்ராயுதம் மாகப்பட்டது அனுமானின் தாடையில் அடிபட்டு வீங்கி விடுகிறது. தாடை முன் நீண்டு பெருத்ததினால் அனுமான் என்ற பெயர் ஏற்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் இறுதி கட்டத்தில் ராகு பகவான் தனக்கு ஏற்பட்டதோல்வி காரணமாக உளுந்து தானியங்களால் என்னுடைய சரீரம் போல் (பாம்பின் உடம்புபோல்) மாலையாக (வடை மாலையாக) உனக்கு சமர்பணம் செய்வோருக்கு ராகு சம்பந்தப்பட்ட அனைத்து விதமான தோஷங்களும் நிவர்த்தியாகி நல்வாழ்வு பெற உதவுகிறோம் என்று ராகு அனுமானிடம் கூறுகிறார். ஆதலால் தாமும் ஸ்ரீ அனுமாருக்கு வடைமாலை சாற்றி ராகு சம்பந்தப்பட்ட தோஷத்தில் இருந்து விடுபடுவதற்கு பிரார்த்தனை செய்வோம்.
2. நல்லெண்ணை அபிஷேக பலன்:
இந்து மதத்தின் தர்ம சாஸ்திரப்படி ஒருவன் இயற்கை எய்தினால் அவர் திருமாலின் திருவடி (மோட்சம்) அடைவதே சாஸ்திரமாகும். திருமால் தன்னுடைய வியர்வை துளிகளை எடுத்து தெளித்த உடன் அது கருநீல நிறம் போன்று எள் தானியமாக விளைகிறது. எம்பெருமான் சரீரத்தில் கருநீல நிறம் போன்று உள்ள சனீஸ்வர பகவான் எள் தானியத்தை தனக்கு பிரியமாக எடுத்துக் கொள்கிறார். நவநாயகர்களின் பித்ரு காராக சனிபகவான் உள்ளதால் ஸ்ரீ ஆஞ்சநேயர் பகவானுக்கு எள்ளு எண்ணையால் அபிஷேகம் செய்வதால் பித்ரு தோசமும், சனி தோசமும் நீங்கப் பெற்று வாழ்வில் மேன்மை பெறுகிறோம்.
3. பஞ்சாமிர்தம் அபிஷேக பலன்:
மனித வாழ்வில் ஐந்து விதமான இந்திரிய சக்திகள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. அவை கண், காது, வாய், மூக்கு, பிறப்புறுப் பாகப்பட்ட உயிர்நிலை ஆகிய இடங்களில் இருந்து நம்முடைய வாழ்க்கையை செம்மைப்படுத்துகிறது. இவை அனைத்தும் நன்றாக வாழ்நாள் முழுவதும் செவ்வனே இயங்க வேண்டி இறைவனுக்கு பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்கிறோம். ‘பழம், மனோரத பலம்‘ என்று சாஸ்திரம் கூறுவதை எண்ணி காரியங்கள் நிறைவேற பழங்களால் அபிஷேகம் செய்கிறோம்.
4. சீயக்காய் அபிஷேக பலன்:
சீயக்காய் அபிஷேகத்தினால் மனோரீதியான பொறாமை இல்லாமை, கல்லாமை, இயலாமை போன்ற மன அழுக்குகள் அகன்று தூய ஒருநிலைப்பாட்டுடன் கூடிய மனோ சக்தியை பெறுகிறோம்.
5. பால் அபிஷேக பலன்:
வேதம் கற்றரிந்த சான்றோருக்கு ஒரு மழை, நீதி வழுவா அரசருக்கு ஒரு மழை, கற்பு நெறி தவறாத மாதர்க்கு ஒரு மழை. இதுபோல் மாதம் மும்மாரி (மழை) பெய்யவும்,தாய்மார்களுக்கு தாய்ப்பால் சக்தி கிடைக்கவும், தேசங்களிலும், வீடுகளிலும் பால் பொருட்கள் பெருகவும், பசுக்கள் நிறைந்த பால் சொரியவும், நீர் நிலைகளில் வற்றாத ஊற்று வரவும், யாகம், பூஜைகள், குருமார்கள் நல்வழிப்பெறவும் பால் அபிஷேகம் செய்கின்றோம்.
6. தயிர் அபிஷேக பலன்:
வீடு, மனைவி, மக்கள், வாகனம், நிலம், இவை அனைத்தும் நம்மை படைக்கும் பொழுது நமக்கு இறைவனால் கொடுக்கப்படும் கடனாகவே படைக்கப்படுகிறோம். நாம் பெற்றவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள், பெற்றோர்கள் பெற்ற மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் இவை அனைத்தும் செவ்வனே நடைபெற வேண்டி இறைவனுக்கு தயிர் அபிஷேகம் செய்கிறோம்.
7. நல்ல மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் அபிஷேக பலன்:
பெண்கள், சுமங்கலித்துவம் பெறவும், உலகமெங்கும் அமங்கலமான செயல்களை தவிர்க்கவும், வியாதியற்ற வாழ்வு பெற வேண்டியும் மஞ்சள் அபிஷேகம் செய்கிறோம்.
8. சந்தனம் அபிஷேக பலன்:
மகாலட்சுமி பிறந்தது சந்தனம் மற்றும் வாசனை பொருட்கள் நிறைந்த இடமாவதால் வீரலட்சுமி அம்சமான ஆஞ்சநேயருக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்வதால் தீர்வில்லா பொரு ளாதாரத்தை அடைகிறோம்.
9. ஸ்வர்ண அபிஷேக பலன்:
பூர்ணத்துவமான ஆயுள் சக்தியை பெற இறைவனுக்கு தங்க தீர்த்தத்தை அபிஷேகம் செய்ய வேண்டுமென சாஸ்திரங்கள் கூறுவதால் தம்மால் இயன்ற தங்க ஆபரணங்களை புனித மந்திரங்களை சொல்லி உருவேற்றிய குடத்திற்குள் போட்டு அந்த தீர்த்தத்தை சாமிக்கு அபிஷேகம் செய்வதால் பூர்ண ஆயுள் பெற்று நம்முடைய இல்லங்களில் வற்றாத தங்க ஆபரணங்கள் அடைகிறோம்.






