என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
பாபநாசம் கோவிலில் சித்திரை விசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பாபநாசம் உலகாம்பிகை சமேத பாபவிநாசர் கோவிலில் சித்திரை விசு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. காலையில் கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
தொடர்ந்து கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. மாலையில் முதல் நாள் மண்டபத்தில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் சுவாமி-அம்பாள் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது. 9-ம் நாளான வருகிற 13-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலையில் தேரோட்டம் நடைபெறும். 10-ம் நாளான 14-ந்தேதி (புதன்கிழமை) மதியம் தீர்த்தவாரி, இரவில் தெப்ப உற்சவம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஜெகநாதன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
அம்பை காசிநாத சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. இதில் கோவில் ராஜகோபுர கமிட்டி தலைவர் வாசுதேவராஜா, இந்து ஆலய பாதுகாப்பு குழு உறுப்பினர் சங்கரநாராயணன், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் பண்ணை கண்ணன், சமுதாய நிர்வாகிகள் குத்தாலிங்கம், கிருஷ்ணன், அனஞ்சி, ஆறுமுக நயினார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வருகிற 14-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் விழாவில் சுவாமி, அம்பாள் தினமும் ஒவ்வொரு வாகனத்தில் வீதி உலாவும், 8-ம் திருநாளான 12-ந்தேதி அன்று அகஸ்தியருக்கு இறைவன் திருமணக்காட்சி கொடுக்கும் வைபவமும் நடக்கிறது. தொடர்ந்து 13-ந்தேதி தேரோட்டமும், தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.
அம்பை அகஸ்தீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் நேற்று காலை நடந்தது. இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. இதில் அகஸ்தீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் சங்கு சபாபதி, சங்கரலிங்கசுவாமி அறங்காவலர் குழு தலைவர் முருக சுவாமிநாதன் மற்றும் கோவில் நிர்வாக கமிட்டியினர், அம்பை சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் ஆவுடையப்பன் (தி.மு.க.), இசக்கி சுப்பையா (அ.தி.மு.க.), காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் விழாவில் தினமும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அகஸ்தியர் கோவிலை சுற்றியுள்ள 4 ரத வீதிகளில் வீதி உலா நடைபெறுகிறது. விழாவில் 8-ம் திருநாள் அன்று விரதம் இருக்கும் பக்தர்கள், அம்பை தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்து பால்குடம், சந்தனகுடம் மற்றும் புனிதநீர் எடுத்து வருதலும், அங்கப்பிரதட்சணம், கும்பிடு நமஸ்காரம் செய்யும் சிறப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து மதியம் அன்னம் சொரிதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலையில் அகஸ்தியர் மற்றும் உலோக முத்திரை வீதி உலா வந்து, பூக்கடை சந்திப்பில் சிவபெருமான் திருமண காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது.
தொடர்ந்து கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. மாலையில் முதல் நாள் மண்டபத்தில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் சுவாமி-அம்பாள் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது. 9-ம் நாளான வருகிற 13-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலையில் தேரோட்டம் நடைபெறும். 10-ம் நாளான 14-ந்தேதி (புதன்கிழமை) மதியம் தீர்த்தவாரி, இரவில் தெப்ப உற்சவம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஜெகநாதன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
அம்பை காசிநாத சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. இதில் கோவில் ராஜகோபுர கமிட்டி தலைவர் வாசுதேவராஜா, இந்து ஆலய பாதுகாப்பு குழு உறுப்பினர் சங்கரநாராயணன், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் பண்ணை கண்ணன், சமுதாய நிர்வாகிகள் குத்தாலிங்கம், கிருஷ்ணன், அனஞ்சி, ஆறுமுக நயினார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வருகிற 14-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் விழாவில் சுவாமி, அம்பாள் தினமும் ஒவ்வொரு வாகனத்தில் வீதி உலாவும், 8-ம் திருநாளான 12-ந்தேதி அன்று அகஸ்தியருக்கு இறைவன் திருமணக்காட்சி கொடுக்கும் வைபவமும் நடக்கிறது. தொடர்ந்து 13-ந்தேதி தேரோட்டமும், தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.
அம்பை அகஸ்தீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் நேற்று காலை நடந்தது. இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. இதில் அகஸ்தீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் சங்கு சபாபதி, சங்கரலிங்கசுவாமி அறங்காவலர் குழு தலைவர் முருக சுவாமிநாதன் மற்றும் கோவில் நிர்வாக கமிட்டியினர், அம்பை சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் ஆவுடையப்பன் (தி.மு.க.), இசக்கி சுப்பையா (அ.தி.மு.க.), காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் விழாவில் தினமும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அகஸ்தியர் கோவிலை சுற்றியுள்ள 4 ரத வீதிகளில் வீதி உலா நடைபெறுகிறது. விழாவில் 8-ம் திருநாள் அன்று விரதம் இருக்கும் பக்தர்கள், அம்பை தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்து பால்குடம், சந்தனகுடம் மற்றும் புனிதநீர் எடுத்து வருதலும், அங்கப்பிரதட்சணம், கும்பிடு நமஸ்காரம் செய்யும் சிறப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து மதியம் அன்னம் சொரிதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலையில் அகஸ்தியர் மற்றும் உலோக முத்திரை வீதி உலா வந்து, பூக்கடை சந்திப்பில் சிவபெருமான் திருமண காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது.
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் பங்குனி திருவிழா தேரோட்டம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் நம்பி சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 5-ம் நாளில் 5 நம்பி சுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது.
10-ம் நாளான நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதையொட்டி காலையில் நம்பிராயருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நம்பி சுவாமிகள் தேவியர்களுடன் தேரில் எழுந்தருளினர்.
தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. ராமானுஜ ஜீயர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். ஏராளமான பக்தர்கள் ‘கோவிந்தா..., கோவிந்தா...’ என்று பக்தி கோஷங்களை முழங்கியவாறு வடம் பிடித்து தேரை இழுத்னர். தேரின் முன்பாக கோவில் யானைகள் சென்றன. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்றனர்.
விழாவில் மாநில காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான ரூபி மனோகரன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் நிறைவு நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
10-ம் நாளான நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதையொட்டி காலையில் நம்பிராயருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நம்பி சுவாமிகள் தேவியர்களுடன் தேரில் எழுந்தருளினர்.
தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. ராமானுஜ ஜீயர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். ஏராளமான பக்தர்கள் ‘கோவிந்தா..., கோவிந்தா...’ என்று பக்தி கோஷங்களை முழங்கியவாறு வடம் பிடித்து தேரை இழுத்னர். தேரின் முன்பாக கோவில் யானைகள் சென்றன. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்றனர்.
விழாவில் மாநில காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான ரூபி மனோகரன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் நிறைவு நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
ஏப்ரல் மாதம் 6-ம் தேதியில் இருந்து ஏப்ரம் மாதம் 12-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
6-ம் தேதி செவ்வாய் கிழமை :
* திருவோண விரதம்
* தேய்பிறை நவமி
* சந்திராஷ்டமம் - திருவாதிரை
7-ம் தேதி புதன் கிழமை :
* ஸ்மார்த்த ஏகாதசி
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் - புனர்பூசம்
8-ம் தேதி வியாழக்கிழமை :
* வைஷ்ணவ ஏகாதசி
* சந்திராஷ்டமம்- பூசம்
9-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* பிரதோஷம்
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் - ஆயில்யம்
10-ம் தேதி சனிக்கிழமை :
* மாதசிவராத்திரி
* கருட தரிசனம் நன்று
* சந்திராஷ்டமம் - மகம்
11-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* ஸர்வ அமாவாசை
* சூரிய வழிபாடு நன்று
* அமிர்த யோகம்
* சந்திராஷ்டமம் - பூரம்
12-ம் தேதி திங்கள் கிழமை :
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் - பூரம், உத்திரம்
* திருவோண விரதம்
* தேய்பிறை நவமி
* சந்திராஷ்டமம் - திருவாதிரை
7-ம் தேதி புதன் கிழமை :
* ஸ்மார்த்த ஏகாதசி
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் - புனர்பூசம்
8-ம் தேதி வியாழக்கிழமை :
* வைஷ்ணவ ஏகாதசி
* சந்திராஷ்டமம்- பூசம்
9-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* பிரதோஷம்
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் - ஆயில்யம்
10-ம் தேதி சனிக்கிழமை :
* மாதசிவராத்திரி
* கருட தரிசனம் நன்று
* சந்திராஷ்டமம் - மகம்
11-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* ஸர்வ அமாவாசை
* சூரிய வழிபாடு நன்று
* அமிர்த யோகம்
* சந்திராஷ்டமம் - பூரம்
12-ம் தேதி திங்கள் கிழமை :
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் - பூரம், உத்திரம்
துலுக்க சூடாமணி அம்மன் கோவில் தேர்த்திருவிழா நாளை (புதன்கிழமை) நடைபெற இருந்தது. பாதுகாப்பு மற்றும் இதர காரணங்கள் கருதி தேர்த்திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
நாமகிரிப்பேட்டை அருகே ஆர்.புதுப்பட்டியில் பிரசித்தி பெற்ற துலுக்க சூடாமணி அம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் இந்த கோவிலில் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தேர்த்திருவிழா நாளை (புதன்கிழமை) நடைபெற இருந்தது.
இந்தநிலையில் தமிழக சட்டசபை தேர்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரே கட்டமாக நடைபெறுகிறது. எனவே பாதுகாப்பு மற்றும் இதர காரணங்கள் கருதி தேர்த்திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் நேற்று சீராப்பள்ளி ஈஸ்வரன் கோவிலில் இருந்து சூடாமணி அம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தேர்த்திருவிழா ரத்து செய்யப்பட்டதால் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு தேர்த்திருவிழாவை காண வரும் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்தநிலையில் தமிழக சட்டசபை தேர்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரே கட்டமாக நடைபெறுகிறது. எனவே பாதுகாப்பு மற்றும் இதர காரணங்கள் கருதி தேர்த்திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் நேற்று சீராப்பள்ளி ஈஸ்வரன் கோவிலில் இருந்து சூடாமணி அம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தேர்த்திருவிழா ரத்து செய்யப்பட்டதால் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு தேர்த்திருவிழாவை காண வரும் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
சிவனடியார்களிடையே ஸ்ரீதட்சிணாமூர்த்தி அஷ்டகம் பிரசித்தம். இந்த அஷ்டகத்தைச் சொல்லி குரு ஸ்ரீதட்சிணாமூர்த்தியை மனதார வேண்டிக் கொண்டால், நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம்.
தட்சிணாமூர்த்தி, தென்முகக் கடவுள் என்று போற்றப்படுகிறார். தட்சிணம் என்றால் தெற்கு என்று அர்த்தம். சிவ வடிவங்களில் மிக முக்கியமானதொரு வடிவமாக தட்சிணாமூர்த்தியைச் சொல்லுவார்கள் சிவனடியார்கள். கல்லால மரத்தடியில் அமர்ந்துகொண்டு, சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்து அருளும் தட்சிணாமூர்த்தி, ஞானகுருவாகவும் யோக குருவாகவும் திகழ்கிறார்.
சிவனடியார்களிடையே ஸ்ரீதட்சிணாமூர்த்தி அஷ்டகம் பிரசித்தம். இந்த அஷ்டகத்தைச் சொல்லி குரு ஸ்ரீதட்சிணாமூர்த்தியை மனதார வேண்டிக் கொண்டால், நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம்.
அகணித குணகணம ப்ரமே மாத்யம்
ஸகல ஜகத் ஸ்திதி ஸம்யமாதி ஹேதும்
உபரத மனோ யோகி ஹ்ருன் மந்திரம் தம்
ஸதத மஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே!
என்று சொல்லி ஸ்ரீதட்சிணாமூர்த்தியை நமஸ்கரிப்போம். தொடர்ந்து இந்த ஸ்லோகத்தைச் சொல்லுவோம்.
நிரவதி ஸுக மிஷ்ட தாதாரமிட்யம்
நதஜன மனஸ்தாப பேதைக தக்ஷம்
பவ விபின தவாக்னி நாமதேயம்
ஸதத மஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே.
த்ரிபுவனகுரும் ஆகமைக ப்ரமாணம்
த்ரிஜகத் காரண ஸூத்ர யோக மாயம்
ரவிசத பாஸ்வர மீஹீத ப்ரதானம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே.
அவிரத பவ பாவனாதி தூரம்
பத பத்மத்வய பாவிணாம் அதூரம்
பவ ஜலதி ஸுதாரணாங்கிரி போதம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே.
க்ருத நிலய மனிசம் வடாகமூலே
நிகம சிகாப்ராத போதிதைக ரூபம்
த்ருத முத்ராங்குஸி கம்ய சாருரூபம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே.
த்ருஹிண ஸுத பூஜிதாங்க்ரி பத்மம்
பத பத்மானத மோக்ஷதான தக்ஷம்
க்ருத குருகுலவாஸ யோகி மித்ரம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே.
யதிவரஹ்ருதயே ஸதாவிபாந்தம்
ரதிபதி சதகோடி ஸுந்தராங்க மாத்யம்!
பரஹித நிரதரத்மனாம் ஸுஸேவ்யம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே.
ஸ்மித தவள விகாஸிதான னாப்ஜம்
ஸ்ருதி ஸுலபம் வ்ருஷபாதிருட காத்ரம்
ஸித ஜலஜ ஸுசோப தேணா காந்திரம்!
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே.
வ்ருஷப க்ருதமிதம் இஷ்ட ஸித்திதம்
குருவர தேவ ஸந்திதௌ படேத்ய:
ஸகல துரித துக்க வர்க்க ஹசனிம்
வ்ரஜதி சிதம் ஞானவான் சம்புலோகம்!
தட்சிணாமூர்த்தி அஷ்டகம் என்று சிலாகிக்கிறது தர்ம சாஸ்திரம். இந்த அஷ்டகத்தை தினமும் சொல்லி வேண்டிக்கொள்ளலாம். குருவாரம் எனப்படும் வியாழக்கிழமைகளில், அவசியம் இந்த அஷ்டகத்தைச் சொல்லி பாராயணம் செய்து, தட்சிணாமூர்த்தியை மனதார வேண்டிக் கொள்வது எண்ணற்ற பலன்களை வழங்கும். ஞானமும் யோகமும் கிடைக்கப் பெறலாம். எடுத்த காரியத்தில் தெளிவையும் வெற்றியையும் தந்தருளுவார் ஸ்ரீதட்சிணாமூர்த்தி.
சிவனடியார்களிடையே ஸ்ரீதட்சிணாமூர்த்தி அஷ்டகம் பிரசித்தம். இந்த அஷ்டகத்தைச் சொல்லி குரு ஸ்ரீதட்சிணாமூர்த்தியை மனதார வேண்டிக் கொண்டால், நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம்.
அகணித குணகணம ப்ரமே மாத்யம்
ஸகல ஜகத் ஸ்திதி ஸம்யமாதி ஹேதும்
உபரத மனோ யோகி ஹ்ருன் மந்திரம் தம்
ஸதத மஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே!
என்று சொல்லி ஸ்ரீதட்சிணாமூர்த்தியை நமஸ்கரிப்போம். தொடர்ந்து இந்த ஸ்லோகத்தைச் சொல்லுவோம்.
நிரவதி ஸுக மிஷ்ட தாதாரமிட்யம்
நதஜன மனஸ்தாப பேதைக தக்ஷம்
பவ விபின தவாக்னி நாமதேயம்
ஸதத மஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே.
த்ரிபுவனகுரும் ஆகமைக ப்ரமாணம்
த்ரிஜகத் காரண ஸூத்ர யோக மாயம்
ரவிசத பாஸ்வர மீஹீத ப்ரதானம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே.
அவிரத பவ பாவனாதி தூரம்
பத பத்மத்வய பாவிணாம் அதூரம்
பவ ஜலதி ஸுதாரணாங்கிரி போதம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே.
க்ருத நிலய மனிசம் வடாகமூலே
நிகம சிகாப்ராத போதிதைக ரூபம்
த்ருத முத்ராங்குஸி கம்ய சாருரூபம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே.
த்ருஹிண ஸுத பூஜிதாங்க்ரி பத்மம்
பத பத்மானத மோக்ஷதான தக்ஷம்
க்ருத குருகுலவாஸ யோகி மித்ரம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே.
யதிவரஹ்ருதயே ஸதாவிபாந்தம்
ரதிபதி சதகோடி ஸுந்தராங்க மாத்யம்!
பரஹித நிரதரத்மனாம் ஸுஸேவ்யம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே.
ஸ்மித தவள விகாஸிதான னாப்ஜம்
ஸ்ருதி ஸுலபம் வ்ருஷபாதிருட காத்ரம்
ஸித ஜலஜ ஸுசோப தேணா காந்திரம்!
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே.
வ்ருஷப க்ருதமிதம் இஷ்ட ஸித்திதம்
குருவர தேவ ஸந்திதௌ படேத்ய:
ஸகல துரித துக்க வர்க்க ஹசனிம்
வ்ரஜதி சிதம் ஞானவான் சம்புலோகம்!
தட்சிணாமூர்த்தி அஷ்டகம் என்று சிலாகிக்கிறது தர்ம சாஸ்திரம். இந்த அஷ்டகத்தை தினமும் சொல்லி வேண்டிக்கொள்ளலாம். குருவாரம் எனப்படும் வியாழக்கிழமைகளில், அவசியம் இந்த அஷ்டகத்தைச் சொல்லி பாராயணம் செய்து, தட்சிணாமூர்த்தியை மனதார வேண்டிக் கொள்வது எண்ணற்ற பலன்களை வழங்கும். ஞானமும் யோகமும் கிடைக்கப் பெறலாம். எடுத்த காரியத்தில் தெளிவையும் வெற்றியையும் தந்தருளுவார் ஸ்ரீதட்சிணாமூர்த்தி.
திருமலையில் நடக்க உள்ள யுகாதி பண்டிகையை முன்னிட்டு 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது. அன்று 6 மணி நேர தரிசனம், ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.
திருமலை :
திருமலையில் நடக்க உள்ள யுகாதி பண்டிகையை முன்னிட்டு 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது. அன்று 6 மணி நேர தரிசனம், ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் யுகாதி பண்டிகை, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவ விழா, வைகுண்ட ஏகாதசி விழா நடக்கும் நாளன்று முன்கூட்டியே வரும் செவ்வாய்க்கிழமை அன்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கும்.
அதன்படி வருகிற 13-ந்தேதி யுகாதி பண்டிகை மற்றும் ஆஸ்தானம் நடக்கிறது. அதையொட்டி 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஏழுமலையான் கோவிலில், கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது.

6-ந்தேதி காலை 6 மணியில் இருந்து பகல் 11 மணி வரை ஆனந்த நிலையம் முதல் பங்காருவாகிலி வரையிலும், கோவிலில் அனைத்துப் பூஜைகளுக்கும் பயன்படுத்தும் தாமிர, பித்தளை பொருட்களும், துணை சன்னதிகள், கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரைகள், தூண்கள், மாடங்கள் ஆகியவை தண்ணீரால் சுத்தம் செய்யப்படும்.
தூய்மைப்பணி முடிந்ததும் மஞ்சள், சந்தனம், குங்குமம், நாமக்கொம்பு, ஸ்ரீகந்தம் சூரணம், கஸ்தூரி மஞ்சள், பச்சையிலை, பச்சை கற்பூரம், கிச்சிலிகட்டை சூரணம் ஆகிய சுகந்த திரவிய பொருட்கள் தூண்கள், மாடங்கள், சுவர்கள், மூலவர் அறை உள்பட பல்வேறு இடங்களில் பூசப்படும். அதன் பிறகு மூலவருக்கு சிறப்புப் பூஜைகள், நெய்வேத்தியம் செய்யப்படும். இதையடுத்து மதியம் 12 மணிக்குமேல் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தால் 6 மணிநேர தரிசனம், ஆர்ஜித சேைவகள் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருமலையில் நடக்க உள்ள யுகாதி பண்டிகையை முன்னிட்டு 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது. அன்று 6 மணி நேர தரிசனம், ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் யுகாதி பண்டிகை, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவ விழா, வைகுண்ட ஏகாதசி விழா நடக்கும் நாளன்று முன்கூட்டியே வரும் செவ்வாய்க்கிழமை அன்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கும்.
அதன்படி வருகிற 13-ந்தேதி யுகாதி பண்டிகை மற்றும் ஆஸ்தானம் நடக்கிறது. அதையொட்டி 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஏழுமலையான் கோவிலில், கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது.

6-ந்தேதி காலை 6 மணியில் இருந்து பகல் 11 மணி வரை ஆனந்த நிலையம் முதல் பங்காருவாகிலி வரையிலும், கோவிலில் அனைத்துப் பூஜைகளுக்கும் பயன்படுத்தும் தாமிர, பித்தளை பொருட்களும், துணை சன்னதிகள், கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரைகள், தூண்கள், மாடங்கள் ஆகியவை தண்ணீரால் சுத்தம் செய்யப்படும்.
தூய்மைப்பணி முடிந்ததும் மஞ்சள், சந்தனம், குங்குமம், நாமக்கொம்பு, ஸ்ரீகந்தம் சூரணம், கஸ்தூரி மஞ்சள், பச்சையிலை, பச்சை கற்பூரம், கிச்சிலிகட்டை சூரணம் ஆகிய சுகந்த திரவிய பொருட்கள் தூண்கள், மாடங்கள், சுவர்கள், மூலவர் அறை உள்பட பல்வேறு இடங்களில் பூசப்படும். அதன் பிறகு மூலவருக்கு சிறப்புப் பூஜைகள், நெய்வேத்தியம் செய்யப்படும். இதையடுத்து மதியம் 12 மணிக்குமேல் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தால் 6 மணிநேர தரிசனம், ஆர்ஜித சேைவகள் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் நாளை புஷ்ப யாகம் நடக்கிறது. புஷ்ப யாகத்தால் கல்யாண உற்சவ சேவை ரத்து செய்யப்படுகிறது.
சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் நாளை புஷ்ப யாகம் நடக்கிறது. இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா முடிந்ததும், வழக்கம்போல் புஷ்ப யாகமும் நடக்கும். பிரம்மோற்சவ விழாவில் கோவில் அர்ச்சகர்கள், அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் ஏதேனும் தெரிந்தும், தெரியாமலும், அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளை நிவர்த்தி செய்வதற்காக புஷ்ப யாகம் நடத்தப்படுகிறது.
அதன்படி கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதியில் இருந்து 10-ந்தேதி வரை 9 நாட்கள் நடந்த பிரம்மோற்சவ விழாவையொட்டி வரும் நாளை புஷ்ப யாகம் நடக்கிறது. தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் பக்தா்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக புஷ்ப யாகம் நடக்கிறது.
முன்னதாக இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை, புண்ணியாவதனம், சேனாதிபதி உற்சவம், அங்குரார்ப்பணம் ஆகியவை நடக்கிறது. 6-ந்தேதி காலை 10 மணியில் இருந்து 11 மணிவரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரசாமிக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்படுகிறது.
அதைத்தொடர்ந்து மதியம் 2.30 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரை துளசி, சாமந்தி, கன்னேரு, முகலி, மல்லிகை, ஜாதிமல்லி, சம்பங்கி, ரோஜா உள்பட பல்வேறு வகையான மலர்களால் புஷ்பார்ச்சனை எனப்படும் புஷ்ப யாகம் நடக்கிறது. புஷ்ப யாகத்தால் 6-ந்தேதி கல்யாண உற்சவ சேவை ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா முடிந்ததும், வழக்கம்போல் புஷ்ப யாகமும் நடக்கும். பிரம்மோற்சவ விழாவில் கோவில் அர்ச்சகர்கள், அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் ஏதேனும் தெரிந்தும், தெரியாமலும், அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளை நிவர்த்தி செய்வதற்காக புஷ்ப யாகம் நடத்தப்படுகிறது.
அதன்படி கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதியில் இருந்து 10-ந்தேதி வரை 9 நாட்கள் நடந்த பிரம்மோற்சவ விழாவையொட்டி வரும் நாளை புஷ்ப யாகம் நடக்கிறது. தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் பக்தா்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக புஷ்ப யாகம் நடக்கிறது.
முன்னதாக இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை, புண்ணியாவதனம், சேனாதிபதி உற்சவம், அங்குரார்ப்பணம் ஆகியவை நடக்கிறது. 6-ந்தேதி காலை 10 மணியில் இருந்து 11 மணிவரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரசாமிக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்படுகிறது.
அதைத்தொடர்ந்து மதியம் 2.30 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரை துளசி, சாமந்தி, கன்னேரு, முகலி, மல்லிகை, ஜாதிமல்லி, சம்பங்கி, ரோஜா உள்பட பல்வேறு வகையான மலர்களால் புஷ்பார்ச்சனை எனப்படும் புஷ்ப யாகம் நடக்கிறது. புஷ்ப யாகத்தால் 6-ந்தேதி கல்யாண உற்சவ சேவை ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலால் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 14-ந்தேதியில் இருந்து அனைத்து ஆர்ஜித சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட உள்ளது.
திருமலை:
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. ஆகையால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 14-ந்தேதியில் இருந்து அனைத்து ஆர்ஜித சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட உள்ளது. கொரோனா தொற்று பரவல் குறைந்ததும் அனைத்து ஆர்ஜித சேவைகள் மீண்டும் தொடங்கப்படும். இதுகுறித்து பக்தர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. ஆகையால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 14-ந்தேதியில் இருந்து அனைத்து ஆர்ஜித சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட உள்ளது. கொரோனா தொற்று பரவல் குறைந்ததும் அனைத்து ஆர்ஜித சேவைகள் மீண்டும் தொடங்கப்படும். இதுகுறித்து பக்தர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சப்தகன்னியரை விரதம் இருந்து வழிபாடு செய்து, சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்கள் வழங்கினால், நம் சந்ததி சிறக்கும் என்றும் தாலி பாக்கியம் நிலைக்கும் என்றும் குலம் தழைக்கும் என்றும் பக்தர்கள் சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர்.
பெண் தெய்வ வழிபாட்டிலும் சக்தி வழிபாட்டிலும் கிராம தெய்வ வழிபாடுகளிலும் சப்த கன்னியருக்கு முக்கியமான இடம் உண்டு. பிராம்மி, மகேஸ்வரி, கெளமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி என ஏழு தெய்வங்களும் சப்த கன்னியர் என்று போற்றுகிறது புராணம். இந்த ஏழு தேவியரும் தீமையை அழிக்கவும் தர்மத்தை நிலைநாட்டவும் வந்தவர்கள் என்று போற்றுகின்றன ஞானநூல்கள்.
இவர்களை சப்த கன்னியர் என்று போற்றுகிறோம். நமக்கெல்லாம் அன்னையாகத் திகழ்பவர்கள் என்பதால், சப்த மாதர்கள் என்றும் வணங்குகிறோம்.
சப்தமாதர்களுக்கு என தனிக்கோயில் இல்லை. கிராமக் கோயில்களிலும் எல்லை தெய்வம் குடிகொண்டிருக்கும் கோயில்களிலும் சப்தமாதர்களுக்கு சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, காவல்தெய்வங்களாக வழிபட்டு வருகிறார்கள் பக்தர்கள்.
ஏழு தெய்வங்களும் ஒவ்வொரு கட்டத்தில், அவதரித்து அசுரர்களை அழித்தவர்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
சப்த கன்னியர் என்றும் சப்த மாதர்கள் என்றும் போற்றப்படுகிற ஏழு தெய்வங்களையும் சக்தியின் இருப்பிடமாகவே வணங்குகிறார்கள் பக்தர்கள். ஆதிகாலத்தில், சப்த கன்னியர் வழிபாடு, எல்லையைக் காக்கின்ற தெய்வமாகவே போற்றி வணங்கப்பட்டது என்றும் குலத்தைத் தழைக்கச் செய்யவும் விவசாயத்தை செழிக்கச் செய்யவுமான படையல் போடுகிற பூஜையாகவும் சப்த கன்னியர் வழிபாட்டு மேற்கொள்ளப்பட்டதாகவும் சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்.
சப்தகன்னியர் அமைந்திருக்கும் ஆலயங்களுக்குச் செல்லும்போது, சப்தமாதர்களையும் மனதார வேண்டிக்கொண்டால், தனம் தானியம் பெருக்கித் தந்தருள்வார்கள் தேவியர் என்று போற்றுகிறார்கள்.
அதேபோல், சப்தகன்னியர் வழிபாடு செய்து, சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்கள் வழங்கினால், நம் சந்ததி சிறக்கும் என்றும் தாலி பாக்கியம் நிலைக்கும் என்றும் வம்சம் தழைக்கும் என்றும் பக்தர்கள் சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர்.
இவர்களை சப்த கன்னியர் என்று போற்றுகிறோம். நமக்கெல்லாம் அன்னையாகத் திகழ்பவர்கள் என்பதால், சப்த மாதர்கள் என்றும் வணங்குகிறோம்.
சப்தமாதர்களுக்கு என தனிக்கோயில் இல்லை. கிராமக் கோயில்களிலும் எல்லை தெய்வம் குடிகொண்டிருக்கும் கோயில்களிலும் சப்தமாதர்களுக்கு சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, காவல்தெய்வங்களாக வழிபட்டு வருகிறார்கள் பக்தர்கள்.
ஏழு தெய்வங்களும் ஒவ்வொரு கட்டத்தில், அவதரித்து அசுரர்களை அழித்தவர்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
சப்த கன்னியர் என்றும் சப்த மாதர்கள் என்றும் போற்றப்படுகிற ஏழு தெய்வங்களையும் சக்தியின் இருப்பிடமாகவே வணங்குகிறார்கள் பக்தர்கள். ஆதிகாலத்தில், சப்த கன்னியர் வழிபாடு, எல்லையைக் காக்கின்ற தெய்வமாகவே போற்றி வணங்கப்பட்டது என்றும் குலத்தைத் தழைக்கச் செய்யவும் விவசாயத்தை செழிக்கச் செய்யவுமான படையல் போடுகிற பூஜையாகவும் சப்த கன்னியர் வழிபாட்டு மேற்கொள்ளப்பட்டதாகவும் சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்.
சப்தகன்னியர் அமைந்திருக்கும் ஆலயங்களுக்குச் செல்லும்போது, சப்தமாதர்களையும் மனதார வேண்டிக்கொண்டால், தனம் தானியம் பெருக்கித் தந்தருள்வார்கள் தேவியர் என்று போற்றுகிறார்கள்.
அதேபோல், சப்தகன்னியர் வழிபாடு செய்து, சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்கள் வழங்கினால், நம் சந்ததி சிறக்கும் என்றும் தாலி பாக்கியம் நிலைக்கும் என்றும் வம்சம் தழைக்கும் என்றும் பக்தர்கள் சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றால நாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை விசு திருவிழா நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றால நாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை விசு திருவிழா நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. திருவிழா வருகிற 14-ந் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் சிறப்பு பூஜைகள் மற்றும் சுவாமி அம்பாள் வீதி உலா ஆகியவை நடக்கின்றன. வருகிற 8-ந் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது. 9-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் 4 தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்படுகின்றன.
11-ந் தேதி காலை 9-30 மணிக்கும், இரவு 7 மணிக்கும் நடராஜ மூர்த்திக்கு தாண்டவ தீபாராதனை நடக்கிறது. 12-ந் தேதி காலை 10 மணிக்கு சித்திர சபையில் நடராஜமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது. 14-ந் தேதி சித்திரை விசு தீர்த்தவாரி நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி மண்டல இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் சங்கர், கோவில் நிர்வாக அதிகாரியும் உதவி ஆணையருமான கண்ணதாசன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
11-ந் தேதி காலை 9-30 மணிக்கும், இரவு 7 மணிக்கும் நடராஜ மூர்த்திக்கு தாண்டவ தீபாராதனை நடக்கிறது. 12-ந் தேதி காலை 10 மணிக்கு சித்திர சபையில் நடராஜமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது. 14-ந் தேதி சித்திரை விசு தீர்த்தவாரி நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி மண்டல இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் சங்கர், கோவில் நிர்வாக அதிகாரியும் உதவி ஆணையருமான கண்ணதாசன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
மனிதர்களின் ஊட்டச்சத்து குறையாமல் சமமான நிலையில் இருக்க, உணவுகளை இரண்டு வகையாக இஸ்லாம் பிரிக்கின்றது . 1) ஹலால் (சாப்பிட அனுமதிக்கப்பட்ட தூய்மையான உணவு). 2) ஹராம் (சாப்பிட அனுமதிக்கப்படாத தூய்மையற்ற உணவு)
உலகம் அமைதியாக இயங்க அவசிய மானது வலுவான, தரமான மனித வளம். அந்த மனித வளத்தின் ஆதாரமே ஆரோக்கியமான உணவுகள்தான். மனித வள மேம்பாட்டிற்குச் சாதகமான சூழ்நிலை அமைய முதல் காரணிகளான உணவு முறைகளை இஸ்லாம் அனுமதிக்கிறது. அதுபோல மனித ஆரோக்கியத்தை அச்சுறுத்தும் உணவு முறைகளைத் தடுக்கிறது இஸ்லாம்.
மனிதர்களின் ஊட்டச்சத்து குறையாமல் சமமான நிலையில் இருக்க, உணவுகளை இரண்டு வகையாக இஸ்லாம் பிரிக்கின்றது . 1) ஹலால் (சாப்பிட அனுமதிக்கப்பட்ட தூய்மையான உணவு). 2) ஹராம் (சாப்பிட அனுமதிக்கப்படாத தூய்மையற்ற உணவு)
அல்லாஹ்வின் பெயர் கொண்டு அறுக்கப்பட்டு, அந்த மிருகங்களின் ரத்தம் உடலை விட்டு முழுமையாக வெளியேறிய பின்பு பெறப்படும் மாமிசங்கள் ஹலாலாகும். நேர்மையான முறையில் உழைத்து அதன் மூலம் பெறப்படும் உணவுகள் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு அடித்தளமிடும் உணவுகளும் தூய்மையான (ஹலால்) உணவாகும்.
அல்லாஹ்வின் பெயர் கூறி வெட்டப்படாத மாமிசங்கள் மட்டுமே ஹராமென்று சுருக்கிப் பார்க்க இயலாது. ஏனெனில், அல்லாஹ்வின் பெயர் கூறி வெட்டப்பட்ட உணவு, அநியாயமான முறையில் வருமாயின் அதுவும் ஹராமாகும். அதேபோல், மனிதனின் ஆரோக்கியத்திற்கு எதிராக இருக்கும் அத்தனை உணவுகளும் தடுக்கப்பட்ட (ஹராம்) உணவுகளாகும்.
‘நம்பிக்கை கொண்டோரே, நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள்’ என்று திருக்குர்ஆன் (2:172) சுட்டிக்காட்டுகிறது.
உழைப்பில் கிடைத்த உணவாக இருந்த போதும் அவைகளை வீணடிப்பதை இறைவன் விரும்பவில்லை. தேவைகளை கருத்தில் கொண்டு உணவு தயாரித்தலை வலியுறுத்துகிறது இஸ்லாம். உணவின் மகிமையை அறியாமல் வீண் விரயம் செய்பவன் ஷைத்தானின் உடன் பிறப்பாகக் கூறி, வீண் விரயத்தை விட்டு தவிர்த்திருக்க இவ்வாறு சொல்கிறது திருக்குர்ஆன் (17:27):-
‘நிச்சயமாக விரயம் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்’.
சாப்பிடும் சமயங்களில் பணிவாகத் தரையில் அமர்ந்து சாப்பிட வேண்டும். சாய்ந்து கொண்டு, படுத்துக் கொண்டு சாப்பிடுவது பெருமை, ஆணவத்தின் அடையாளமாக எண்ணி, அவ்வாறு சாப்பிடுவதை நபி தடுத்த தரவுகள் நம் கண் முன்னே உள்ளன. மனிதனை அழிவுவரை இழுத்துச் செல்லும் பெருமை, ஆணவத்தை எப்போதும் இஸ்லாம் விரும்புவதில்லை. சாப்பிடும் நேரங்களில் உணவிற்கு மதிப்பளித்து சாப்பிடுதலை விரும்புகிறது. இதுபற்றிய நபி மொழி வருமாறு:
‘நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தேன். அப்போது அவர்கள் தம்முடனிருந்த ஒரு மனிதரிடம், ‘நான் சாய்ந்துகொண்டு சாப்பிட மாட்டேன்’ என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஜுஹைஃபா (ரலி), நூல்: புகாரி)
இஸ்லாமிய வணக்கங்களில் விதிவிலக்கில்லாதது இறைவணக்கம் (தொழுகை). பசி அதிகமான நேரங்களில் தொழுகையின் நேரம் குறுக்கிட்டால், சாப்பிட்ட பிறகே இறைவணக்கம் செய்ய வேண்டும். ஏனெனில் உயிர் காப்பது இறைவணக்கம் செய்வதை விட மேலானது என்ற உயரிய கருத்தாழத்தை சில நபி மொழிகளைக் கொண்டு நாம் விளங்க முடிகின்றது.
“இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள்: ‘இரவு உணவு உங்களுக்கு முன் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கத் தொழுகைக்கான அழைப்பு சொல்லப்பட்டால், முதலில் உணவை உண்ணுங்கள். (பிறகு தொழச் சொல்லுங்கள்)”. (நூல்: புகாரி)
உணவு வைக்கப்பட்ட தட்டில் அங்குமிங்கும் உணவுகளை எடுத்துச் சாப்பிடுவது நாகரிகமான செயல்கள் அல்ல. நடுப்பகுதியிலிருந்து அல்லது அங்குமிங்கும் சாப்பிடுவது மற்றவர்களுக்கு முக சுளிப்பை ஏற்படுத்தும். அதனால்,நம் அருகிலிருந்து சாப்பிடுவதே. நாகரிகமான முறையில் சாப்பிடும் வழிமுறையாகும். நபியின் வழிமுறைகள் இதற்கும் வழிகாட்டுகின்றன.
“ஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் உணவு அருந்தினேன். தட்டின் மூலைகளிலிருந்து இறைச்சியை எடுக்கலானேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உன(து கை)க்கு அருகிலிருந்து எடுத்து உண்பாயாக!” என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: உமர் பின் அபீசலமா (ரலி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்).
உயிர் வாழ தேவையான அளவிற்கு சாப்பிட வேண்டும். தேவைக்கு அதிகமாக சாப்பிடுவது மற்றவரின் உணவைச் சாப்பிடுவது போன்றாகும். மற்றவர்கள் பசியில் வாடும்போது அவர்களுக்கு பகிராமல் நாம் மட்டும் சாப்பிடுவது மனிதத் தன்மைக்கு எதிரானதாகும். நம் தேவைக்கு அதிகமான உணவுகள் இருந்தால் அதனைத் தேவையானவர்களுக்குக் கொடுப்பது நன்மையாகும். உங்களுக்கு ஒரு உணவு கொடுக்கப்பட்டால், இருவர் சாப்பிடும் அளவிற்கு இருக்கும் என்பதால் பகிர்ந்துண்ண கூறுகிறது மற்றோர் நபி மொழி.
“நபி (ஸல்) கூறினார்கள்: ‘ஒரு மனிதருடைய உணவு இரு மனிதருக்குப் போதுமானதாகும். இரு மனிதரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும். நால்வரின் உணவு எண்மருக்குப் போதுமானதாகும்”. (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)
உணவின்றி அமையாது மனித வாழ்வு. உணவுகளுக்கு மதிப்பளித்து அதனை வீணடிக்காமல் உணவருந்தி, மற்றவர்களுக்கும் உணவுகளைப் பகிர்ந்து பல உயிர்களைக் காப்பாற்றுதல் இஸ்லாம் தொகுத்த உணவிற்கான அறங்களாகும்.
ஏ.எச். யாசிர் அரபாத் ஹசனி, லால்பேட்டை.
மனிதர்களின் ஊட்டச்சத்து குறையாமல் சமமான நிலையில் இருக்க, உணவுகளை இரண்டு வகையாக இஸ்லாம் பிரிக்கின்றது . 1) ஹலால் (சாப்பிட அனுமதிக்கப்பட்ட தூய்மையான உணவு). 2) ஹராம் (சாப்பிட அனுமதிக்கப்படாத தூய்மையற்ற உணவு)
அல்லாஹ்வின் பெயர் கொண்டு அறுக்கப்பட்டு, அந்த மிருகங்களின் ரத்தம் உடலை விட்டு முழுமையாக வெளியேறிய பின்பு பெறப்படும் மாமிசங்கள் ஹலாலாகும். நேர்மையான முறையில் உழைத்து அதன் மூலம் பெறப்படும் உணவுகள் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு அடித்தளமிடும் உணவுகளும் தூய்மையான (ஹலால்) உணவாகும்.
அல்லாஹ்வின் பெயர் கூறி வெட்டப்படாத மாமிசங்கள் மட்டுமே ஹராமென்று சுருக்கிப் பார்க்க இயலாது. ஏனெனில், அல்லாஹ்வின் பெயர் கூறி வெட்டப்பட்ட உணவு, அநியாயமான முறையில் வருமாயின் அதுவும் ஹராமாகும். அதேபோல், மனிதனின் ஆரோக்கியத்திற்கு எதிராக இருக்கும் அத்தனை உணவுகளும் தடுக்கப்பட்ட (ஹராம்) உணவுகளாகும்.
‘நம்பிக்கை கொண்டோரே, நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள்’ என்று திருக்குர்ஆன் (2:172) சுட்டிக்காட்டுகிறது.
உழைப்பில் கிடைத்த உணவாக இருந்த போதும் அவைகளை வீணடிப்பதை இறைவன் விரும்பவில்லை. தேவைகளை கருத்தில் கொண்டு உணவு தயாரித்தலை வலியுறுத்துகிறது இஸ்லாம். உணவின் மகிமையை அறியாமல் வீண் விரயம் செய்பவன் ஷைத்தானின் உடன் பிறப்பாகக் கூறி, வீண் விரயத்தை விட்டு தவிர்த்திருக்க இவ்வாறு சொல்கிறது திருக்குர்ஆன் (17:27):-
‘நிச்சயமாக விரயம் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்’.
சாப்பிடும் சமயங்களில் பணிவாகத் தரையில் அமர்ந்து சாப்பிட வேண்டும். சாய்ந்து கொண்டு, படுத்துக் கொண்டு சாப்பிடுவது பெருமை, ஆணவத்தின் அடையாளமாக எண்ணி, அவ்வாறு சாப்பிடுவதை நபி தடுத்த தரவுகள் நம் கண் முன்னே உள்ளன. மனிதனை அழிவுவரை இழுத்துச் செல்லும் பெருமை, ஆணவத்தை எப்போதும் இஸ்லாம் விரும்புவதில்லை. சாப்பிடும் நேரங்களில் உணவிற்கு மதிப்பளித்து சாப்பிடுதலை விரும்புகிறது. இதுபற்றிய நபி மொழி வருமாறு:
‘நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தேன். அப்போது அவர்கள் தம்முடனிருந்த ஒரு மனிதரிடம், ‘நான் சாய்ந்துகொண்டு சாப்பிட மாட்டேன்’ என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஜுஹைஃபா (ரலி), நூல்: புகாரி)
இஸ்லாமிய வணக்கங்களில் விதிவிலக்கில்லாதது இறைவணக்கம் (தொழுகை). பசி அதிகமான நேரங்களில் தொழுகையின் நேரம் குறுக்கிட்டால், சாப்பிட்ட பிறகே இறைவணக்கம் செய்ய வேண்டும். ஏனெனில் உயிர் காப்பது இறைவணக்கம் செய்வதை விட மேலானது என்ற உயரிய கருத்தாழத்தை சில நபி மொழிகளைக் கொண்டு நாம் விளங்க முடிகின்றது.
“இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள்: ‘இரவு உணவு உங்களுக்கு முன் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கத் தொழுகைக்கான அழைப்பு சொல்லப்பட்டால், முதலில் உணவை உண்ணுங்கள். (பிறகு தொழச் சொல்லுங்கள்)”. (நூல்: புகாரி)
உணவு வைக்கப்பட்ட தட்டில் அங்குமிங்கும் உணவுகளை எடுத்துச் சாப்பிடுவது நாகரிகமான செயல்கள் அல்ல. நடுப்பகுதியிலிருந்து அல்லது அங்குமிங்கும் சாப்பிடுவது மற்றவர்களுக்கு முக சுளிப்பை ஏற்படுத்தும். அதனால்,நம் அருகிலிருந்து சாப்பிடுவதே. நாகரிகமான முறையில் சாப்பிடும் வழிமுறையாகும். நபியின் வழிமுறைகள் இதற்கும் வழிகாட்டுகின்றன.
“ஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் உணவு அருந்தினேன். தட்டின் மூலைகளிலிருந்து இறைச்சியை எடுக்கலானேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உன(து கை)க்கு அருகிலிருந்து எடுத்து உண்பாயாக!” என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: உமர் பின் அபீசலமா (ரலி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்).
உயிர் வாழ தேவையான அளவிற்கு சாப்பிட வேண்டும். தேவைக்கு அதிகமாக சாப்பிடுவது மற்றவரின் உணவைச் சாப்பிடுவது போன்றாகும். மற்றவர்கள் பசியில் வாடும்போது அவர்களுக்கு பகிராமல் நாம் மட்டும் சாப்பிடுவது மனிதத் தன்மைக்கு எதிரானதாகும். நம் தேவைக்கு அதிகமான உணவுகள் இருந்தால் அதனைத் தேவையானவர்களுக்குக் கொடுப்பது நன்மையாகும். உங்களுக்கு ஒரு உணவு கொடுக்கப்பட்டால், இருவர் சாப்பிடும் அளவிற்கு இருக்கும் என்பதால் பகிர்ந்துண்ண கூறுகிறது மற்றோர் நபி மொழி.
“நபி (ஸல்) கூறினார்கள்: ‘ஒரு மனிதருடைய உணவு இரு மனிதருக்குப் போதுமானதாகும். இரு மனிதரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும். நால்வரின் உணவு எண்மருக்குப் போதுமானதாகும்”. (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)
உணவின்றி அமையாது மனித வாழ்வு. உணவுகளுக்கு மதிப்பளித்து அதனை வீணடிக்காமல் உணவருந்தி, மற்றவர்களுக்கும் உணவுகளைப் பகிர்ந்து பல உயிர்களைக் காப்பாற்றுதல் இஸ்லாம் தொகுத்த உணவிற்கான அறங்களாகும்.
ஏ.எச். யாசிர் அரபாத் ஹசனி, லால்பேட்டை.
நந்தி திருமணத்தை சென்று தரிசிக்கும் திருமணமாகாத இளைஞர்கள், இளம்பெண்களுக்கு, அடுத்த வருட நந்தி கல்யாணத்திற்கு முன்பாக திருமணம் நடைபெறும் என்பது ஐதீகமாகும்.
கொள்ளிடத்தின் வடகரையில், திருமழப்பாடி என்ற கிராமத்தில் சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி திருக்கோவில் இருக்கிறது. சிவபெருமான், இந்தத் தலத்தில் மார்க்கண்டேயருக்கு காட்சி தந்ததோடு, மழு என்னும் ஆயுதம் தாங்கி, நடனம் புரிந்த தலம் என்பதால் ‘மழுபாடி’ என்று பெயர் பெற்று, அதுவே தற்போது ‘திருமழப்பாடி’ என்று அழைக்கப்படுவதாகவும் புராணத் தகவல் ஒன்றும் இருக்கிறது.
இந்தக் கோவிலின் நடராஜர் மண்டபம் அருகில் நந்திகேசுவரர், தனது மனைவி சுயம்பிரகாசையுடன் காட்சி தருகிறார். ஆண்டுதோறும் புனர்பூச நட்சத்திரத்தில் நந்தியம்பெருமானுக்கும், சுயம் பிரகாசைக்கும் வைத்தியநாதசாமி முன்னிலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது சிறப்புக்குரிய ஒன்றாகும். நந்தி திருமணத்தை சென்று தரிசிக்கும் திருமணமாகாத இளைஞர்கள், இளம்பெண்களுக்கு, அடுத்த வருட நந்தி கல்யாணத்திற்கு முன்பாக திருமணம் நடைபெறும் என்பது ஐதீகமாகும்.
முனிவர் ஒருவரது சாபத்தால் திருமகளான லட்சுமிதேவிக்கு வெண்குஷ்ட நோய் ஏற்பட்டது. இதையடுத்து லட்சுமி தேவி இத்தலம் வந்து தீர்த்தத்தில் நீராடி நோய் நீங்கப்பெற்றாள். சுந்தராம்பிகை அம்மன் சன்னிதிக்கு எதிரே, லட்சுமி தேவி நீராடிய குளம், ‘லட்சுமி தீர்த்தம்’ என்ற பெயரிலேயே வழங்கப்படுகிறது. இந்த நீரை உடலில் தெளித்துக் கொண்டால் சரும நோய் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருமழப்பாடி வைத்தியநாதசாமி கோவிலானது, புள்ளம் பாடிக்கு தென்கிழக்கில் 20 கிலோமீட்டர் தூரத்திலும், திருவையாறுக்கு வடமேற்கில் 15 கிலோமீட்டர் தூரத்திலும், அரியலூருக்கு தெற்கில் 28 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. இந்த ஊருக்கு திருச்சி, லால்குடி, அரியலூர், திருமானூர் மற்றும் தஞ்சையில் இருந்து பஸ் வசதி உள்ளது. திருச்சி- விழுப்புரம் ரெயில் வழித்தடத்தில் அரியலூர், புள்ளம்பாடி ரெயில் நிலையங்களில் இருந்தும் இங்கு வரும் வகையில் போக்குவரத்து வசதி உள்ளது.
இந்தக் கோவிலின் நடராஜர் மண்டபம் அருகில் நந்திகேசுவரர், தனது மனைவி சுயம்பிரகாசையுடன் காட்சி தருகிறார். ஆண்டுதோறும் புனர்பூச நட்சத்திரத்தில் நந்தியம்பெருமானுக்கும், சுயம் பிரகாசைக்கும் வைத்தியநாதசாமி முன்னிலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது சிறப்புக்குரிய ஒன்றாகும். நந்தி திருமணத்தை சென்று தரிசிக்கும் திருமணமாகாத இளைஞர்கள், இளம்பெண்களுக்கு, அடுத்த வருட நந்தி கல்யாணத்திற்கு முன்பாக திருமணம் நடைபெறும் என்பது ஐதீகமாகும்.
முனிவர் ஒருவரது சாபத்தால் திருமகளான லட்சுமிதேவிக்கு வெண்குஷ்ட நோய் ஏற்பட்டது. இதையடுத்து லட்சுமி தேவி இத்தலம் வந்து தீர்த்தத்தில் நீராடி நோய் நீங்கப்பெற்றாள். சுந்தராம்பிகை அம்மன் சன்னிதிக்கு எதிரே, லட்சுமி தேவி நீராடிய குளம், ‘லட்சுமி தீர்த்தம்’ என்ற பெயரிலேயே வழங்கப்படுகிறது. இந்த நீரை உடலில் தெளித்துக் கொண்டால் சரும நோய் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருமழப்பாடி வைத்தியநாதசாமி கோவிலானது, புள்ளம் பாடிக்கு தென்கிழக்கில் 20 கிலோமீட்டர் தூரத்திலும், திருவையாறுக்கு வடமேற்கில் 15 கிலோமீட்டர் தூரத்திலும், அரியலூருக்கு தெற்கில் 28 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. இந்த ஊருக்கு திருச்சி, லால்குடி, அரியலூர், திருமானூர் மற்றும் தஞ்சையில் இருந்து பஸ் வசதி உள்ளது. திருச்சி- விழுப்புரம் ரெயில் வழித்தடத்தில் அரியலூர், புள்ளம்பாடி ரெயில் நிலையங்களில் இருந்தும் இங்கு வரும் வகையில் போக்குவரத்து வசதி உள்ளது.






