
10-ம் நாளான நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதையொட்டி காலையில் நம்பிராயருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நம்பி சுவாமிகள் தேவியர்களுடன் தேரில் எழுந்தருளினர்.
தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. ராமானுஜ ஜீயர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். ஏராளமான பக்தர்கள் ‘கோவிந்தா..., கோவிந்தா...’ என்று பக்தி கோஷங்களை முழங்கியவாறு வடம் பிடித்து தேரை இழுத்னர். தேரின் முன்பாக கோவில் யானைகள் சென்றன. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்றனர்.
விழாவில் மாநில காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான ரூபி மனோகரன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் நிறைவு நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் தீர்த்தவாரி நடைபெறுகிறது.