என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
மனிதனை பாவத்தில் இருந்து மீட்கவும், பாவமன்னிப்பு பெறவும், தன்னிடம் இருப்பதை இல்லாதவர்களுக்கு வாரி வழங்கி இறைவனின் திருப்பொருத்தத்தைப் பெறவும் இந்த புனித ரமலான் நோன்பு வழிகாட்டுகிறது.
மனிதனை பாவத்தில் இருந்து மீட்கவும், பாவமன்னிப்பு பெறவும், தன்னிடம் இருப்பதை இல்லாதவர்களுக்கு வாரி வழங்கி இறைவனின் திருப்பொருத்தத்தைப் பெறவும் இந்த புனித ரமலான் நோன்பு வழிகாட்டுகிறது.
நோன்பு குறித்து திருக்குர்ஆனில் குறிப்பிடும் போது, “ஈமான் கொண்டோரே, உங்களுக்கு முன்பு இருந்த சமூகத்தாருக்கு கடமை ஆக்கப்பட்டதுபோல உங்களின் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. நீங்கள் உள்ளச்சம், பயபக்தி உடையவர்களாக வேண்டும் என்பதற்காக” என்று இறைவன் திருக்குர்ஆனில் (2:183) குறிப்பிடுகின்றான்.
ரமலான் நோன்பின் சிறப்பு குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஹசரத் ஸல்மானுல் பார்சி (ரலி) இவ்வாறு குறிப்பிடுகிறார்: “ரமலானுக்கு முந்தைய ஷபான் மாதத்தில் கடைசி நாட்களில் ஒரு நாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள்: ‘இறை நம்பிக்கையாளர்களே, அபிவிருத்தி கொண்ட மகத்தான மாதம் உங்களுக்கு வர உள்ளது. அம்மாதத்தில் ஓர் இரவு உண்டு. அந்த இரவில் வணங்கினால் ஆயிரம் மாதம் வணங்கிய நன்மை உங்களுக்கு உண்டு. அம்மாதத்தில் பகல் காலங்களில் உண்ணாமல், பருகாமல் இருப்பதை உங்கள் மீது இறைவன் கடமையாக்கி உள்ளான். இரவில் நின்று வணங்குவதை உபரியானதாக ஆக்கி உள்ளான். இந்த மாதத்தில் ஒருவர் கடமையான ஒரு செயலைச் செய்தால் மற்ற மாதங்களில் 70 கடமையான செயல்களை செய்தால் என்ன நன்மை உண்டோ அந்த நன்மையைப் பெற்றுக்கொள்வார்”.
இது பொறுமையின் மாதம், பொறுமையின் வெகுமதி சொர்க்கம் ஆகும். சொந்த பந்தங்களுடன் இணங்கி வாழவேண்டும் என மனிதர்களை அறிவுறுத்தும் மாதமாகும். இந்தமாதத்தில் ஒரு நோன்பாளிக்கு நோன்பு திறப்பதற்கான உணவு கொடுத்தால், அந்த உணவைக்கொடுத்தவருக்கு பாவ மன்னிப்பும், நரகத்தில் இருந்து விடுதலையும் கிடைக்கும். மேலும் நோன்பாளிக்கு இறைவனிடம் என்ன நன்மை உண்டோ அந்த அளவு நன்மையும் பெற்றுக்கொள்வார்.
ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் மனிதனுக்கு சொர்க்கம் அலங்கரித்து வைக்கப்படும். சொர்க்கத்தைப் பார்த்து இறைவன் இவ்வாறு கட்டளையிடுவான்: ‘உலகத்தில் சிரமத்தில் தவித்த என் அடியான் இங்கே வந்து ஓய்வு எடுத்து நிம்மதியடைய வேண்டும் என்பதற்காக சொர்க்கமே உன்னை அலங்கரித்துக்கொள்’.
எனவே ஒரு மனிதன் நோன்பு பிடிக்கத் தொடங்கிய காலம் முதல் சொர்க்கம் செல்லும் வரை அந்த மனிதனுக்காக சொர்க்கம் தன்னை அலங்கரித்துக் கொண்டே இருக்கும்.
நோன்பு வைத்து அதன் மூலம் பெற்ற நன்மையால் சொர்க்கம் செல்லும் அடியான் அந்த சொர்க்கத்தின் சிறப்பைப்பார்த்து இவ்வாறு கூறுவானாம்: ‘வருடத்தில் ஒரு மாதம் தானே நோன்பு வைத்தேன். அதற்கே இவ்வளவு அழகான சொர்க்கமா?. இது முன்பே தெரிந்திருந்தால் வருடம் முழுவதும் நோன்பு நோற்று அதிக நன்மைகள் செய்திருப்பேனே’.
மனிதன் கற்பனை செய்து பார்க்க முடியாத பல்வேறு சிறப்புகளைப்பெற்ற சொர்க்கத்தில் நாம் அனைவரும் இடம்பெற உதவும் இந்த ரமலான் மாதத்தை நாம் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். முறையாக நோன்பு வைத்து, தொழுகையில் ஈடுபட்டு, தான தர்மங்கள் செய்து, பாவமன்னிப்பு கேட்டு இறைவனின் திருப்பொருத்தத்தை அடைய முயற்சி செய்ய வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியபடி இந்த ரமலானில் நாம் அதிகமதிகம் இறைவனிடம் பிரார்த்தனை செய்து நரகத்தை விட்டு பாதுகாப்பு தேடி, சொர்க்கத்தை கேட்க வேண்டும். அதிலும் குறிப்பாக நோன்பு கடமையை நிறைவேற்றுபவர்களுக்கு என்று ஒரு சொர்க்கம் உண்டு. அதன் பெயர் ‘ரய்யான்’.
மறுமை நாளில் ஒரு மனிதனின் பாவ புண்ணிய கணக்குகள் இறைவன் முன்பு சமர்ப்பிக்கப்படும். அப்போது அந்த மனிதன் தத்தளித்துக்கொண்டு இருப்பான். அப்போது இறைவன் தரப்பில் இருந்து, ‘ரமலான் மாதங்களில் நோன்பு வைத்திருப்பவர்கள் எங்கே?’ என்று ஒரு அழைப்பு வரும். இதைக்கேட்டு நோன்பு வைத்தவர்கள் எழுந்து நிற்பார்கள்.
அப்போது அவர்களைப்பார்த்து இறைவன், ‘நீங்கள் அனைவரும் ‘ரய்யான்’ என்ற இந்த சொர்க்கச்சோலைக்குள் செல்லுங்கள்’ என்பான். இதையடுத்து நோன்பாளிகள் அனைவரும் அந்த வழியாக சொர்க்கத்திற்குள் செல்வார்கள். கடைசி நோன்பாளி சென்றதும் அந்த வழி மூடப்படும்.
“எவர் நோன்பாளிக்கு நோன்பு திறக்கும் நேரத்தில் அவரின் தாகம் நீங்க நீர் வழங்கினாரோ அவருக்கு, மறுமையில் ‘ஹவ்ழுல் கவ்தர்’ என்ற நீர் தடாகத்தில் இருந்து அல்லாஹ் தண்ணீர் வழங்குவான். அதன் மூலம் சொர்க்கம் செல்லும் காலம் வரை அவருக்கு தாகம் என்பது ஏற்படாது” என்பது நபி மொழியாகும்.
எனவே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறும்போது, ‘நன்மையான காரியங்களை போட்டிபோட்டுக்கொண்டு செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்துவார்கள்.
இந்த ரமலான் முழுவதும் பிறர் நலன் பேணிவாழக்கூடிய நல்ல மக்களாக நம்மை எல்லாம் வல்ல அல்லாஹ் ஆக்கியருளுவானாக, ஆமின்.
வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.
நோன்பு குறித்து திருக்குர்ஆனில் குறிப்பிடும் போது, “ஈமான் கொண்டோரே, உங்களுக்கு முன்பு இருந்த சமூகத்தாருக்கு கடமை ஆக்கப்பட்டதுபோல உங்களின் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. நீங்கள் உள்ளச்சம், பயபக்தி உடையவர்களாக வேண்டும் என்பதற்காக” என்று இறைவன் திருக்குர்ஆனில் (2:183) குறிப்பிடுகின்றான்.
ரமலான் நோன்பின் சிறப்பு குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஹசரத் ஸல்மானுல் பார்சி (ரலி) இவ்வாறு குறிப்பிடுகிறார்: “ரமலானுக்கு முந்தைய ஷபான் மாதத்தில் கடைசி நாட்களில் ஒரு நாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள்: ‘இறை நம்பிக்கையாளர்களே, அபிவிருத்தி கொண்ட மகத்தான மாதம் உங்களுக்கு வர உள்ளது. அம்மாதத்தில் ஓர் இரவு உண்டு. அந்த இரவில் வணங்கினால் ஆயிரம் மாதம் வணங்கிய நன்மை உங்களுக்கு உண்டு. அம்மாதத்தில் பகல் காலங்களில் உண்ணாமல், பருகாமல் இருப்பதை உங்கள் மீது இறைவன் கடமையாக்கி உள்ளான். இரவில் நின்று வணங்குவதை உபரியானதாக ஆக்கி உள்ளான். இந்த மாதத்தில் ஒருவர் கடமையான ஒரு செயலைச் செய்தால் மற்ற மாதங்களில் 70 கடமையான செயல்களை செய்தால் என்ன நன்மை உண்டோ அந்த நன்மையைப் பெற்றுக்கொள்வார்”.
இது பொறுமையின் மாதம், பொறுமையின் வெகுமதி சொர்க்கம் ஆகும். சொந்த பந்தங்களுடன் இணங்கி வாழவேண்டும் என மனிதர்களை அறிவுறுத்தும் மாதமாகும். இந்தமாதத்தில் ஒரு நோன்பாளிக்கு நோன்பு திறப்பதற்கான உணவு கொடுத்தால், அந்த உணவைக்கொடுத்தவருக்கு பாவ மன்னிப்பும், நரகத்தில் இருந்து விடுதலையும் கிடைக்கும். மேலும் நோன்பாளிக்கு இறைவனிடம் என்ன நன்மை உண்டோ அந்த அளவு நன்மையும் பெற்றுக்கொள்வார்.
ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் மனிதனுக்கு சொர்க்கம் அலங்கரித்து வைக்கப்படும். சொர்க்கத்தைப் பார்த்து இறைவன் இவ்வாறு கட்டளையிடுவான்: ‘உலகத்தில் சிரமத்தில் தவித்த என் அடியான் இங்கே வந்து ஓய்வு எடுத்து நிம்மதியடைய வேண்டும் என்பதற்காக சொர்க்கமே உன்னை அலங்கரித்துக்கொள்’.
எனவே ஒரு மனிதன் நோன்பு பிடிக்கத் தொடங்கிய காலம் முதல் சொர்க்கம் செல்லும் வரை அந்த மனிதனுக்காக சொர்க்கம் தன்னை அலங்கரித்துக் கொண்டே இருக்கும்.
நோன்பு வைத்து அதன் மூலம் பெற்ற நன்மையால் சொர்க்கம் செல்லும் அடியான் அந்த சொர்க்கத்தின் சிறப்பைப்பார்த்து இவ்வாறு கூறுவானாம்: ‘வருடத்தில் ஒரு மாதம் தானே நோன்பு வைத்தேன். அதற்கே இவ்வளவு அழகான சொர்க்கமா?. இது முன்பே தெரிந்திருந்தால் வருடம் முழுவதும் நோன்பு நோற்று அதிக நன்மைகள் செய்திருப்பேனே’.
மனிதன் கற்பனை செய்து பார்க்க முடியாத பல்வேறு சிறப்புகளைப்பெற்ற சொர்க்கத்தில் நாம் அனைவரும் இடம்பெற உதவும் இந்த ரமலான் மாதத்தை நாம் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். முறையாக நோன்பு வைத்து, தொழுகையில் ஈடுபட்டு, தான தர்மங்கள் செய்து, பாவமன்னிப்பு கேட்டு இறைவனின் திருப்பொருத்தத்தை அடைய முயற்சி செய்ய வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியபடி இந்த ரமலானில் நாம் அதிகமதிகம் இறைவனிடம் பிரார்த்தனை செய்து நரகத்தை விட்டு பாதுகாப்பு தேடி, சொர்க்கத்தை கேட்க வேண்டும். அதிலும் குறிப்பாக நோன்பு கடமையை நிறைவேற்றுபவர்களுக்கு என்று ஒரு சொர்க்கம் உண்டு. அதன் பெயர் ‘ரய்யான்’.
மறுமை நாளில் ஒரு மனிதனின் பாவ புண்ணிய கணக்குகள் இறைவன் முன்பு சமர்ப்பிக்கப்படும். அப்போது அந்த மனிதன் தத்தளித்துக்கொண்டு இருப்பான். அப்போது இறைவன் தரப்பில் இருந்து, ‘ரமலான் மாதங்களில் நோன்பு வைத்திருப்பவர்கள் எங்கே?’ என்று ஒரு அழைப்பு வரும். இதைக்கேட்டு நோன்பு வைத்தவர்கள் எழுந்து நிற்பார்கள்.
அப்போது அவர்களைப்பார்த்து இறைவன், ‘நீங்கள் அனைவரும் ‘ரய்யான்’ என்ற இந்த சொர்க்கச்சோலைக்குள் செல்லுங்கள்’ என்பான். இதையடுத்து நோன்பாளிகள் அனைவரும் அந்த வழியாக சொர்க்கத்திற்குள் செல்வார்கள். கடைசி நோன்பாளி சென்றதும் அந்த வழி மூடப்படும்.
“எவர் நோன்பாளிக்கு நோன்பு திறக்கும் நேரத்தில் அவரின் தாகம் நீங்க நீர் வழங்கினாரோ அவருக்கு, மறுமையில் ‘ஹவ்ழுல் கவ்தர்’ என்ற நீர் தடாகத்தில் இருந்து அல்லாஹ் தண்ணீர் வழங்குவான். அதன் மூலம் சொர்க்கம் செல்லும் காலம் வரை அவருக்கு தாகம் என்பது ஏற்படாது” என்பது நபி மொழியாகும்.
எனவே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறும்போது, ‘நன்மையான காரியங்களை போட்டிபோட்டுக்கொண்டு செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்துவார்கள்.
இந்த ரமலான் முழுவதும் பிறர் நலன் பேணிவாழக்கூடிய நல்ல மக்களாக நம்மை எல்லாம் வல்ல அல்லாஹ் ஆக்கியருளுவானாக, ஆமின்.
வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவத்தையொட்டி அமிர்தகடேஸ்வரர்-அபிராமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது.
இங்கு திருக்கல்யாண உற்சவத்தையொட்டி அமிர்தகடேஸ்வரர்-அபிராமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. பக்தர்கள் சீர்வரிசை எடுத்து கோவிலுக்கு வந்ததும் வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்கிட மங்கல நாணை அணிவித்து திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
இங்கு திருக்கல்யாண உற்சவத்தையொட்டி அமிர்தகடேஸ்வரர்-அபிராமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. பக்தர்கள் சீர்வரிசை எடுத்து கோவிலுக்கு வந்ததும் வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்கிட மங்கல நாணை அணிவித்து திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
கல்யாணத் தடையால் கலங்கித் தவிப்பவர்கள், வாழ்வில் ஒரேயொரு முறை வள்ளியூர் சுப்ரமணியரைத் தரிசித்தால் போதும்... விரைவில் கல்யாண வரத்தைத் தந்தருள்வார் சுப்ரமண்யர் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்!
கல்யாணத் தடையால் கலங்கித் தவிப்பவர்கள், வாழ்வில் ஒரேயொரு முறை வள்ளியூர் சுப்ரமணியரைத் தரிசித்தால் போதும்... விரைவில் கல்யாண வரத்தைத் தந்தருள்வார் சுப்ரமண்யர் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்!
திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் செல்லும் வழியில், சுமார் 42 கி.மீ. தொலைவில் உள்ளது வள்ளியூர். இங்கே, குன்றின் மேலே கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீசுப்ரமண்யர்! குன்றிருக்கும் இடத்தில் குமரன் இருப்பான். குமரன் இருக்கும் இடத்தில், நமக்கு குறைவே இருக்காது என்பது ஐதீகம்!
கார்த்திகை கடைசி வெள்ளிக்கிழமை தெப்போத்ஸவம் சிறப்புற நடைபெறுகிறது. அதையொட்டி நடைபெறும் திருக்கல்யாணத்திலும் மாதந்தோறும் சஷ்டி நாளிலும் இங்கு வந்து ஸ்ரீசுப்ரமண்யரை வேண்டினால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும் என்பது நம்பிக்கை!
மேலும் தை மாதம் வந்து விட்டால், தை மாத செவ்வாய், வெள்ளி , தை மாத சஷ்டி மற்றும் தைப்பூச நன்னாளிலும் இங்கு விரதம் இருந்து வள்ளி மணாளனை, வள்ளியூருக்கு வந்து தரிசிக்கின்றனர். கல்யாண வரம் கைகூடிவரும் என்பது உறுதி!
திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் செல்லும் வழியில், சுமார் 42 கி.மீ. தொலைவில் உள்ளது வள்ளியூர். இங்கே, குன்றின் மேலே கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீசுப்ரமண்யர்! குன்றிருக்கும் இடத்தில் குமரன் இருப்பான். குமரன் இருக்கும் இடத்தில், நமக்கு குறைவே இருக்காது என்பது ஐதீகம்!
கார்த்திகை கடைசி வெள்ளிக்கிழமை தெப்போத்ஸவம் சிறப்புற நடைபெறுகிறது. அதையொட்டி நடைபெறும் திருக்கல்யாணத்திலும் மாதந்தோறும் சஷ்டி நாளிலும் இங்கு வந்து ஸ்ரீசுப்ரமண்யரை வேண்டினால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும் என்பது நம்பிக்கை!
மேலும் தை மாதம் வந்து விட்டால், தை மாத செவ்வாய், வெள்ளி , தை மாத சஷ்டி மற்றும் தைப்பூச நன்னாளிலும் இங்கு விரதம் இருந்து வள்ளி மணாளனை, வள்ளியூருக்கு வந்து தரிசிக்கின்றனர். கல்யாண வரம் கைகூடிவரும் என்பது உறுதி!
வள்ளியூர் முருகன் கோவிலில் வருகிற 25-ந் தேதி நடக்கவிருந்த கும்பாபிஷேக விழா தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், கும்பாபிஷேகத்துக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற குகைக்கோவில்களில் வள்ளியூர் முருகன் கோவிலும் ஒன்றாகும். இங்கு முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். இக்கோவில் கும்பாபிஷேக பணிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி பாலாலயத்துடன் தொடங்கியது. தற்போது பணிகள் நிறைவுற்ற நிலையில் கோவிலில் கும்பாபிஷேகம் வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான கும்பாபிஷேக யாக சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
இந்நிலையில் கொரோனா தொற்று 2-ம் கட்ட பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பொது முடக்கம் அறிவித்துள்ளது. இதனால் வருகிற 25-ந் தேதி நடக்கவிருந்த கும்பாபிஷேக விழா தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், கும்பாபிஷேகத்துக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கோவில் செயல் அலுவலர் சுபாஷினி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கொரோனா தொற்று 2-ம் கட்ட பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பொது முடக்கம் அறிவித்துள்ளது. இதனால் வருகிற 25-ந் தேதி நடக்கவிருந்த கும்பாபிஷேக விழா தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், கும்பாபிஷேகத்துக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கோவில் செயல் அலுவலர் சுபாஷினி தெரிவித்துள்ளார்.
மதுரைகாளியம்மன், விநாயகர், மதுரை வீரன், கருப்பண்ணசாமி, காத்தவராய சுவாமி, சின்னான் ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது..
தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கியது. . திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியாக நேற்று தொட்டியம் லாரி டிரைவர்கள் சங்கம் மற்றும் சந்தனகாப்பு விழா குழுவினர் சார்பாக அனைத்து சாமிகளுக்கும் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
முன்னதாக காவிரியில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு மதுரைகாளியம்மன் மற்றும் அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் மதுரைகாளியம்மன், விநாயகர், மதுரை வீரன், கருப்பண்ணசாமி, காத்தவராய சுவாமி, சின்னான் ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது..
பின்னர் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு விழா குழுவினர் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை லாரி டிரைவர்கள் சங்க தலைவர் சேகர் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.
முன்னதாக காவிரியில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு மதுரைகாளியம்மன் மற்றும் அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் மதுரைகாளியம்மன், விநாயகர், மதுரை வீரன், கருப்பண்ணசாமி, காத்தவராய சுவாமி, சின்னான் ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது..
பின்னர் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு விழா குழுவினர் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை லாரி டிரைவர்கள் சங்க தலைவர் சேகர் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.
இந்த உவமையில் இயேசுவின் வலது பக்கத்தில் இருக்கிறவர்களுக்கு, உண்மையில் தாங்கள் எதற்காக இங்கு வந்திருக்கிறோம் என்பது தெரியவில்லை, தாங்கள் செய்த சிறிய செயல்கள் எத்தனை மகத்துவமானவை என்பதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை.
சிலுவை மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்த இயேசு, பூவுலக வாழ்க்கையின்போது தன்னுடைய இரண்டாம் வருகை குறித்து, தெளிவாக கூறிச் சென்றிருக்கிறார். மத்தேயு புத்தகம் 25-வது அதிகாரம், 31 முதல் 46 வரையிலான இறை வசனங்கள் இயேசுவின் இரண்டாம் வருகையை உறுதிசெய்யும். அதேநேரம், அவரை வரவேற்க நம்மை எவ்வாறு தகுதியாக்கிக் கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுத்தருகின்றன. அந்த வசனங்களைக் காண்போம்.
இயேசு தம் சீடர்களுக்குப் போதித்துக் கொண்டிருந்தபோது கூறியது, “வானதூதர் அனைவரும் புடைசூழ, மானிடமகன் மாட்சியுடன் வருவார். அப்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்றுகூட்டப்படுவர். ஓர் ஆயர் செம்மறிஆடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப் பக்கத்திலும் நிறுத்துவது போல், அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார்.
பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப் பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ‘என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உங்களது உரிமைப் பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அந்நியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்’ என்பார்.
அதற்கு நேர்மையாளர்கள் ‘ஆண்டவரே, எப்பொழுது உமக்கு உணவளித்தோம், உமது தாகத்தைத் தணித்தோம், எப்பொழுது உம்மை ஏற்றுக்கொண்டோம், ஆடை அணிவித்தோம், எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத் தேடி வந்தோம்’ என்று கேட்பார்கள்.
அதற்கு அரசர், ‘மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம், எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்’ எனப் பதிலளிப்பார்.
பின்பு இடப் பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ‘சபிக்கப்பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். சாத்தானுக்கும் அவனது தூதர்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை. நான் அந்நியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக்கொள்ளவில்லை’ என்பார்.
அதற்கு அவர்கள், ‘ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அந்நியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்?’ எனக் கேட்பார்கள். அப்பொழுது அவர், ‘மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ, அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்’ எனப் பதிலளிப்பார். இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் முடிவில்லா வாழ்வு பெறவும் செல்வார்கள்.” (மத்தேயு 25: 31- 46). என்றார்.
இயேசு போதித்த உவமைகளில், நீண்ட விளக்கத்துடன் போதிக்கப்பட்ட ஒரே உவமை இதுதான். சக மனித தேவைகளுக்கு நாம் எவ்வாறு பங்களிக்கிறோம் என்ற கேள்வியை இந்த உவமை நம்மை நோக்கி எழுப்புகிறது. இயேசுவின் இரண்டாம் வருகையின்போது அவர் உங்களிடம் எதிர்பார்ப்பது உங்கள் தகுதிக்கு ஏற்ப செய்யக்கூடிய மிகச் சாதாரண செயல்களைத்தான். இந்த உவமையில் இயேசுவின் வலது பக்கத்தில் இருக்கிறவர்களுக்கு, உண்மையில் தாங்கள் எதற்காக இங்கு வந்திருக்கிறோம் என்பது தெரியவில்லை, தாங்கள் செய்த சிறிய செயல்கள் எத்தனை மகத்துவமானவை என்பதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆனாலும், அதைத்தான் கடவுள் பாராட்டுகிறார்.
நாம் செய்ய முடியாததை கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பதில்லை. பிறருக்கு நம்மால் செய்யமுடிந்த சிறுசிறு உதவிகளை செய்யவே, அவர் அறிவுறுத்துகிறார். எனவே சக மனிதருக்குக் கைகொடுக்கவும், கைதூக்கிவிடவும் மறக்காதீர்கள். அப்போது ஆண்டவரை வரவேற்கும் தகுதியை நீங்கள் பெறுவீர்கள்.
இயேசு தம் சீடர்களுக்குப் போதித்துக் கொண்டிருந்தபோது கூறியது, “வானதூதர் அனைவரும் புடைசூழ, மானிடமகன் மாட்சியுடன் வருவார். அப்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்றுகூட்டப்படுவர். ஓர் ஆயர் செம்மறிஆடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப் பக்கத்திலும் நிறுத்துவது போல், அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார்.
பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப் பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ‘என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உங்களது உரிமைப் பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அந்நியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்’ என்பார்.
அதற்கு நேர்மையாளர்கள் ‘ஆண்டவரே, எப்பொழுது உமக்கு உணவளித்தோம், உமது தாகத்தைத் தணித்தோம், எப்பொழுது உம்மை ஏற்றுக்கொண்டோம், ஆடை அணிவித்தோம், எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத் தேடி வந்தோம்’ என்று கேட்பார்கள்.
அதற்கு அரசர், ‘மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம், எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்’ எனப் பதிலளிப்பார்.
பின்பு இடப் பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ‘சபிக்கப்பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். சாத்தானுக்கும் அவனது தூதர்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை. நான் அந்நியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக்கொள்ளவில்லை’ என்பார்.
அதற்கு அவர்கள், ‘ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அந்நியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்?’ எனக் கேட்பார்கள். அப்பொழுது அவர், ‘மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ, அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்’ எனப் பதிலளிப்பார். இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் முடிவில்லா வாழ்வு பெறவும் செல்வார்கள்.” (மத்தேயு 25: 31- 46). என்றார்.
இயேசு போதித்த உவமைகளில், நீண்ட விளக்கத்துடன் போதிக்கப்பட்ட ஒரே உவமை இதுதான். சக மனித தேவைகளுக்கு நாம் எவ்வாறு பங்களிக்கிறோம் என்ற கேள்வியை இந்த உவமை நம்மை நோக்கி எழுப்புகிறது. இயேசுவின் இரண்டாம் வருகையின்போது அவர் உங்களிடம் எதிர்பார்ப்பது உங்கள் தகுதிக்கு ஏற்ப செய்யக்கூடிய மிகச் சாதாரண செயல்களைத்தான். இந்த உவமையில் இயேசுவின் வலது பக்கத்தில் இருக்கிறவர்களுக்கு, உண்மையில் தாங்கள் எதற்காக இங்கு வந்திருக்கிறோம் என்பது தெரியவில்லை, தாங்கள் செய்த சிறிய செயல்கள் எத்தனை மகத்துவமானவை என்பதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆனாலும், அதைத்தான் கடவுள் பாராட்டுகிறார்.
நாம் செய்ய முடியாததை கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பதில்லை. பிறருக்கு நம்மால் செய்யமுடிந்த சிறுசிறு உதவிகளை செய்யவே, அவர் அறிவுறுத்துகிறார். எனவே சக மனிதருக்குக் கைகொடுக்கவும், கைதூக்கிவிடவும் மறக்காதீர்கள். அப்போது ஆண்டவரை வரவேற்கும் தகுதியை நீங்கள் பெறுவீர்கள்.
கொரோனா 2-வது அலையால் புனித நீராட தடை விதிக்கப்பட்டு திருச்செந்தூர் கோவில் கடற்கரை மூடப்பட்டது. தரிசனம் செய்ய மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
திருச்செந்தூர் :
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. மேலும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் சுற்றுலா தலங்கள், கடற்கரை பகுதிக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து உள்ளது.
இதையடுத்து அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலில் பக்தர்கள் புனித நீராட நேற்று முதல் தடை விதிக்கப்பட்டது.
கடற்கரை பகுதிக்கு பக்தர்கள் செல்லாமல் இருக்க தடுப்பு வேலிகள் கொண்டு மூடப்பட்டு உள்ளது. இதனால் கடற்கரை பகுதி பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும் நாழிகிணற்றில் பக்தர்கள் குளிக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் தேங்காய், பழம் கொண்டு வந்து அர்ச்சனை செய்ய அனுமதி இல்லை. கோவில் வளாகத்தில் பக்தர்கள் இளைபாறுவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். மேலும், தங்கள் கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்த பின்னரே சாமி தரிசனத்திற்கு அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பதால் பக்தர்கள் யாரும் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. அதேபோல் அன்று கோவிலில் வழக்கமான பூஜைகள் நடைபெறும். குறைவான அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி கடற்கரைக்கும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லாததால் கடற்கரை பகுதியான காந்தி மண்டபம் பஜார், கடற்கரை சாலை, முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கன்னியாகுமரி கடற்கரை பகுதி, சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. மேலும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் சுற்றுலா தலங்கள், கடற்கரை பகுதிக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து உள்ளது.
இதையடுத்து அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலில் பக்தர்கள் புனித நீராட நேற்று முதல் தடை விதிக்கப்பட்டது.
கடற்கரை பகுதிக்கு பக்தர்கள் செல்லாமல் இருக்க தடுப்பு வேலிகள் கொண்டு மூடப்பட்டு உள்ளது. இதனால் கடற்கரை பகுதி பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும் நாழிகிணற்றில் பக்தர்கள் குளிக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் தேங்காய், பழம் கொண்டு வந்து அர்ச்சனை செய்ய அனுமதி இல்லை. கோவில் வளாகத்தில் பக்தர்கள் இளைபாறுவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். மேலும், தங்கள் கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்த பின்னரே சாமி தரிசனத்திற்கு அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பதால் பக்தர்கள் யாரும் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. அதேபோல் அன்று கோவிலில் வழக்கமான பூஜைகள் நடைபெறும். குறைவான அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி கடற்கரைக்கும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லாததால் கடற்கரை பகுதியான காந்தி மண்டபம் பஜார், கடற்கரை சாலை, முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கன்னியாகுமரி கடற்கரை பகுதி, சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
ராம நவமி அன்று விரதமிருந்து வழிபடுவதன் மூலமும், ராமருடன் இணைந்து சீதா, லட்சுமணர், அனுமன் வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமும் லட்சியங்கள் நிறைவேறும்.
ராமநவமி விரதம் இரண்டு விதமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அதாவது, சித்திரை மாதம் சுக்லபட்ச பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை உள்ள ஒன்பது நாள் விரதம் முதல் வகையாகும். இதற்கு 'கர்ப்போஸ்தவம்' என்று பெயர். சித்திரை மாத சுக்லபட்ச நவமி திதியில் இருந்து அடுத்து வரும் ஒன்பது நாட்கள் அனுஷ்டிப்பது இரண்டாவது வகை.
இதற்கு 'ஜன்மோதீஸவம்' என்று பெயர். இவ்வாறு ராமர் பிறப்பதற்கு முன் ஒன்பது நாட்கள் ஒரு விரத முறையாகவும், ராமர் , பிறந்ததில் இருந்து ஒன்பது நாட்கள் ஒரு விரத முறையாகவும் அனுஷ்டிக்கப்பட்டு, ராமநவமியை பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். விரதத்தை தொடங்குவதற்கு முதல் நாள், வீட்டை சுத்தம் செய்ய வேண்டும்.
விரதம் தொடங்கும் நாளன்று ஒரு வேளை மட்டும் உணவு உட்கொண்டு, ராமநாமத்தை உச்சரித்துக் கொண்டிருக்க வேண்டும். பின்னர் வரும் ஒவ்வொரு நாளும் சர்க்கரை பொங்கல், பாயசம் உள்ளிட்ட நைவேத்தியங்களை படைத்து வழிபடுவதுடன், ராமருக்கு துளசி மாலையும், அனுமனுக்கு வடை மாலையும் சாத்த வேண்டும்.
இதனை ஒன்பது நாளும் சாத்த முடியாதவர்கள், ராம நவமி தினத்திலாவது செய்ய வேண்டும். ராம நவமி விரத நாட்களில் மட்டும் அல்லாத எல்லா காலங்களிலும், ராமஜாதகத்தை படமாக காகிதத்தில் வரைந்து வைத்தோ, அல்லது செப்பு தகட்டில் வரைந்து வைத்தோ வழிபடுவது சிறப்பான பலனை தரக்கூடியது.
ராமருடைய ஜாதகத்தின்படி சூரியன்- மேஷ ராசியிலும், செவ்வாய்- மகர ராசியிலும், குரு- கடக ராசியிலும், சுக்ரன்- மீன ராசியிலும், சனி- துலாம் ராசியிலும் உச்சஸ்தானத்தில் இருக்கின்ற ஜாதகம் என்பதால் அவரின் ஜாதகம் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இந்த ஜாதகத்தை வைத்து வழிபடுவதால், நினைத்த காரியம் கைகூடும். செல்வம், புகழ் என எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.
ராமர் நவமி திதியில் பிறந்ததால் அன்றைய தினம் ‘ராமநவமி’ என்று அழைக்கப்படுகிறது. இன்று ராமபிரானை விரதமிருந்து வழிபடுவதன் மூலமும், ராமருடன் இணைந்து சீதா, லட்சுமணர், அனுமன் வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமும் லட்சியங்கள் நிறைவேறும். அனுமன் வழிபாட்டால் தம்பதியர் ஒற்றுமை உருவாகும்.
இதற்கு 'ஜன்மோதீஸவம்' என்று பெயர். இவ்வாறு ராமர் பிறப்பதற்கு முன் ஒன்பது நாட்கள் ஒரு விரத முறையாகவும், ராமர் , பிறந்ததில் இருந்து ஒன்பது நாட்கள் ஒரு விரத முறையாகவும் அனுஷ்டிக்கப்பட்டு, ராமநவமியை பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். விரதத்தை தொடங்குவதற்கு முதல் நாள், வீட்டை சுத்தம் செய்ய வேண்டும்.
விரதம் தொடங்கும் நாளன்று ஒரு வேளை மட்டும் உணவு உட்கொண்டு, ராமநாமத்தை உச்சரித்துக் கொண்டிருக்க வேண்டும். பின்னர் வரும் ஒவ்வொரு நாளும் சர்க்கரை பொங்கல், பாயசம் உள்ளிட்ட நைவேத்தியங்களை படைத்து வழிபடுவதுடன், ராமருக்கு துளசி மாலையும், அனுமனுக்கு வடை மாலையும் சாத்த வேண்டும்.
இதனை ஒன்பது நாளும் சாத்த முடியாதவர்கள், ராம நவமி தினத்திலாவது செய்ய வேண்டும். ராம நவமி விரத நாட்களில் மட்டும் அல்லாத எல்லா காலங்களிலும், ராமஜாதகத்தை படமாக காகிதத்தில் வரைந்து வைத்தோ, அல்லது செப்பு தகட்டில் வரைந்து வைத்தோ வழிபடுவது சிறப்பான பலனை தரக்கூடியது.
ராமருடைய ஜாதகத்தின்படி சூரியன்- மேஷ ராசியிலும், செவ்வாய்- மகர ராசியிலும், குரு- கடக ராசியிலும், சுக்ரன்- மீன ராசியிலும், சனி- துலாம் ராசியிலும் உச்சஸ்தானத்தில் இருக்கின்ற ஜாதகம் என்பதால் அவரின் ஜாதகம் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இந்த ஜாதகத்தை வைத்து வழிபடுவதால், நினைத்த காரியம் கைகூடும். செல்வம், புகழ் என எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.
ராமர் நவமி திதியில் பிறந்ததால் அன்றைய தினம் ‘ராமநவமி’ என்று அழைக்கப்படுகிறது. இன்று ராமபிரானை விரதமிருந்து வழிபடுவதன் மூலமும், ராமருடன் இணைந்து சீதா, லட்சுமணர், அனுமன் வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமும் லட்சியங்கள் நிறைவேறும். அனுமன் வழிபாட்டால் தம்பதியர் ஒற்றுமை உருவாகும்.
திருமலை-திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள சந்திரகிரி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 21-ந்தேதியில் இருந்து அடுத்த மாதம் (மே) 1-ந்தேதி வரை நடக்கிறது.
திருமலை-திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள சந்திரகிரி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 21-ந்தேதியில் இருந்து அடுத்த மாதம் (மே) 1-ந்தேதி வரை நடக்கிறது. 21-ந்தேதி காலை 5 மணியில் இருந்து காலை 6 மணிவரை மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 6 மணியளவில் அங்குரார்ப்பணம் நடக்கிறது.
22-ந்தேதி காலை 11.30 மணியில் இருந்து மதியம் 12.15 மணி வரை பிரம்மோற்சவ விழா கருட கொடிேயற்றம், 25-ந்தேதி மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை அனுமன் வாகன சேவைக்கு பதிலாக திருச்சி உற்சவ ஆஸ்தானம், 27-ந்தேதி காலை 10 மணியில் இருந்து காலை 11.30 மணி வரை சீதா, ராமர் திருக்கல்யாண உற்சவம், அன்று இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணிவரை கருடா வாகனத்துக்கு பதிலாக திருச்சி உற்சவ ஆஸ்தானம், 30-ந்தேதி காலை 8 மணியில் இருந்து 9.30 மணிவரை வசந்தோற்சவம், காலை 10.30 மணியளவில் ஸ்நாபன திருமஞ்சனம், சக்கர ஸ்நானம் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு கொடியிறக்கம் நடக்கிறது. மே மாதம் 1-ந்தேதி மாலை 5 மணியில் இருந்து இரவு 7 மணிவரை ராமர் பட்டாபிஷேகம் நடக்கிறது. அத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.
22-ந்தேதி காலை 11.30 மணியில் இருந்து மதியம் 12.15 மணி வரை பிரம்மோற்சவ விழா கருட கொடிேயற்றம், 25-ந்தேதி மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை அனுமன் வாகன சேவைக்கு பதிலாக திருச்சி உற்சவ ஆஸ்தானம், 27-ந்தேதி காலை 10 மணியில் இருந்து காலை 11.30 மணி வரை சீதா, ராமர் திருக்கல்யாண உற்சவம், அன்று இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணிவரை கருடா வாகனத்துக்கு பதிலாக திருச்சி உற்சவ ஆஸ்தானம், 30-ந்தேதி காலை 8 மணியில் இருந்து 9.30 மணிவரை வசந்தோற்சவம், காலை 10.30 மணியளவில் ஸ்நாபன திருமஞ்சனம், சக்கர ஸ்நானம் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு கொடியிறக்கம் நடக்கிறது. மே மாதம் 1-ந்தேதி மாலை 5 மணியில் இருந்து இரவு 7 மணிவரை ராமர் பட்டாபிஷேகம் நடக்கிறது. அத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.
சிவபெருமானுக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரங்களை தினமும் அல்லது சிவபெருமானுக்கு உகந்த நாட்களில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் சதாசிவாய வித்மஹே
ஜடாதராய தீமஹி
தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் பஞ்சவக்த்ராய வித்மஹே
அதிசுத்தாய தீமஹி
தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் கௌரீநாதாய வித்மஹே
சதாசிவாய தீமஹி
தன்னோ சிவஹ் ப்ரசோதயாத்
ஓம் சிவோத்தமாய வித்மஹே
மஹோத்தமாய தீமஹி
தன்னோ சிவஹ் ப்ரசோதயாத்
ஓம் தன்மஹேசாய வித்மஹே
வாக்விசித்தாய தீமஹி
தன்னோ சிவஹ் ப்ரசோதயாத்
ஓம் மஹாதேவாய வித்மஹே
ருத்ரமூர்த்யே தீமஹி
தன்னோ சிவ ப்ரசோதயாத்
ஓம் பஸ்மாயுதாய வித்மஹே
தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய தீமஹி
தன்னோ சிவஹ் ப்ரசோதயாத்
ஓம் சூலஹஸ்தாய வித்மஹே
மஹா தேவாய தீமஹி
தன்னோ ஈசஹ் ப்ரசோதயாத்
மஹாதேவாய தீமஹி
தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் சதாசிவாய வித்மஹே
ஜடாதராய தீமஹி
தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் பஞ்சவக்த்ராய வித்மஹே
அதிசுத்தாய தீமஹி
தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் கௌரீநாதாய வித்மஹே
சதாசிவாய தீமஹி
தன்னோ சிவஹ் ப்ரசோதயாத்
ஓம் சிவோத்தமாய வித்மஹே
மஹோத்தமாய தீமஹி
தன்னோ சிவஹ் ப்ரசோதயாத்
ஓம் தன்மஹேசாய வித்மஹே
வாக்விசித்தாய தீமஹி
தன்னோ சிவஹ் ப்ரசோதயாத்
ஓம் மஹாதேவாய வித்மஹே
ருத்ரமூர்த்யே தீமஹி
தன்னோ சிவ ப்ரசோதயாத்
ஓம் பஸ்மாயுதாய வித்மஹே
தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய தீமஹி
தன்னோ சிவஹ் ப்ரசோதயாத்
ஓம் சூலஹஸ்தாய வித்மஹே
மஹா தேவாய தீமஹி
தன்னோ ஈசஹ் ப்ரசோதயாத்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (புதன்கிழமை) ராமநவமி விழா நடக்கிறது. 22-ந்தேதி ராமர் பட்டாபிஷேக விழா நடக்கிறது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (புதன்கிழமை) ராமநவமி விழா நடக்கிறது. அதையொட்டி நாளை காலை 9 மணியில் இருந்து பகல் 11 மணிவரை உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயருக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகிய சுகந்த திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்படுகிறது.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை அனுமன் வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி கோவில் வளாகத்தில் உலா வந்து அருள்பாலிக்கிறார். இரவு 10 மணியில் இருந்து இரவு 11 மணி வரை பங்காருவாகிலியில் ஆஸ்தானம், 22-ந்தேதி ராமர் பட்டாபிஷேக விழா நடக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (புதன்கிழமை) ராமநவமி விழா நடக்கிறது. அதையொட்டி நாளை காலை 9 மணியில் இருந்து பகல் 11 மணிவரை உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயருக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகிய சுகந்த திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்படுகிறது.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை அனுமன் வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி கோவில் வளாகத்தில் உலா வந்து அருள்பாலிக்கிறார். இரவு 10 மணியில் இருந்து இரவு 11 மணி வரை பங்காருவாகிலியில் ஆஸ்தானம், 22-ந்தேதி ராமர் பட்டாபிஷேக விழா நடக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இப்போதிருக்கும் சூழ்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக யாரும் வெளியே போகாமல் வீட்டிலேயே ராம நவமிக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது .
பொதுவாக ராமநவமி அன்று பெருமாள் கோவிலுக்கு சென்று ராமரை வழிபாடு செய்தால் நினைத்த காரியம் வெற்றியாகும், அனால் தற்போது உள்ள சூழ்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக வெளியில் செல்ல இயலாது. அதே போல் கோவில்களும் மூடப்பட்டுள்ளது.
இன்றைய சூழ்நிலையில் துளசியை வாங்கி ராமருக்கு அணிவிக்க முடியுமா என்பது சந்தேகம்தான். இதற்காக வெளியில் செல்ல வேண்டாம். நெய்வேதியம் செய்வதற்காக பொருட்களை வாங்குவதற்காக கூட வெளியில் செல்ல வேண்டாம்.
இதன் விளைவாக நாம் எப்படி நாளை வீட்டிலே பூஜை மற்றும் விரதம் இருக்கலாம் என்று பாப்போம்.
காலையில் எழுந்து, குளித்து முடித்த பிறகு வீட்டில் உள்ள ராமர் படத்தை வைத்து பால் பாயசம் செய்து துளசி அர்ச்சனை செய்யலாம்.
உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து வெறும் பால் பாயசம் செய்து ராமரை வழிபட்டாலும் அதில் தவறு ஒன்றும் இல்லை. பால் பாயசம் எதற்காக என்றால் ராமர் பால் பாயாசத்தில் தான் அவதாரம் எடுத்தார், ஆகையால் பால் பாயாசம் இதற்கு உகந்தது.
அதே போல் நாமும் இருவேளை சாப்பிடாமல் இருந்து ராமாயணம், சுந்தரகாண்டம் படிக்கவேண்டும், அப்போது ஸ்ரீ அனுமனையும் மனதில் வைத்து படிக்கச் வேண்டும் எதற்கொன்றால் அனுமனுக்கு கேட்கும் ஆற்றல் உள்ளது.
பால் பாயாசம் மட்டும் இல்லாமல் கூடவே வடை, பானகம், சக்கரைப்பொங்கல், துளசி தீர்த்தம் அனைத்தும் சேர்த்து கொள்ளலாம்.
முடிந்தவரை 108, 1008 தடவை “ஸ்ரீ ராம ஜெயம்” எழுதவேண்டும்.
காலை முதல் இரவு தூங்கும் வரை ராமர் சிந்தனை இருக்க வேண்டும்.
இவ்வாறு கடை பிடித்தால் ராமர் அருள் நமக்கு நிச்சயம் கிடைக்கும்.
ராமபிரானை ராமநவமி அன்று விரதம் இருந்து வழிபட்டால் நம் மனதில் எண்ணிய காரியங்கள் விரைவாக நிறைவேறும் என்றும், நமக்கு தோல்வியை கிடையாது என்றும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
“ஜெய் ஸ்ரீராம்”
இன்றைய சூழ்நிலையில் துளசியை வாங்கி ராமருக்கு அணிவிக்க முடியுமா என்பது சந்தேகம்தான். இதற்காக வெளியில் செல்ல வேண்டாம். நெய்வேதியம் செய்வதற்காக பொருட்களை வாங்குவதற்காக கூட வெளியில் செல்ல வேண்டாம்.
இதன் விளைவாக நாம் எப்படி நாளை வீட்டிலே பூஜை மற்றும் விரதம் இருக்கலாம் என்று பாப்போம்.
காலையில் எழுந்து, குளித்து முடித்த பிறகு வீட்டில் உள்ள ராமர் படத்தை வைத்து பால் பாயசம் செய்து துளசி அர்ச்சனை செய்யலாம்.
உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து வெறும் பால் பாயசம் செய்து ராமரை வழிபட்டாலும் அதில் தவறு ஒன்றும் இல்லை. பால் பாயசம் எதற்காக என்றால் ராமர் பால் பாயாசத்தில் தான் அவதாரம் எடுத்தார், ஆகையால் பால் பாயாசம் இதற்கு உகந்தது.
அதே போல் நாமும் இருவேளை சாப்பிடாமல் இருந்து ராமாயணம், சுந்தரகாண்டம் படிக்கவேண்டும், அப்போது ஸ்ரீ அனுமனையும் மனதில் வைத்து படிக்கச் வேண்டும் எதற்கொன்றால் அனுமனுக்கு கேட்கும் ஆற்றல் உள்ளது.
பால் பாயாசம் மட்டும் இல்லாமல் கூடவே வடை, பானகம், சக்கரைப்பொங்கல், துளசி தீர்த்தம் அனைத்தும் சேர்த்து கொள்ளலாம்.
முடிந்தவரை 108, 1008 தடவை “ஸ்ரீ ராம ஜெயம்” எழுதவேண்டும்.
காலை முதல் இரவு தூங்கும் வரை ராமர் சிந்தனை இருக்க வேண்டும்.
இவ்வாறு கடை பிடித்தால் ராமர் அருள் நமக்கு நிச்சயம் கிடைக்கும்.
ராமபிரானை ராமநவமி அன்று விரதம் இருந்து வழிபட்டால் நம் மனதில் எண்ணிய காரியங்கள் விரைவாக நிறைவேறும் என்றும், நமக்கு தோல்வியை கிடையாது என்றும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
“ஜெய் ஸ்ரீராம்”






