search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராமர்
    X
    ராமர்

    நாளை ராம நவமி: வீட்டில விரதம் இருந்து வழிபாடு செய்வது எப்படி?

    இப்போதிருக்கும் சூழ்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக யாரும் வெளியே போகாமல் வீட்டிலேயே ராம நவமிக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது .
    பொதுவாக ராமநவமி அன்று பெருமாள் கோவிலுக்கு சென்று ராமரை வழிபாடு செய்தால் நினைத்த காரியம் வெற்றியாகும், அனால் தற்போது உள்ள சூழ்நிலையில்  கொரோனா வைரஸ் காரணமாக வெளியில் செல்ல இயலாது. அதே போல் கோவில்களும் மூடப்பட்டுள்ளது.

    இன்றைய சூழ்நிலையில் துளசியை வாங்கி ராமருக்கு அணிவிக்க முடியுமா என்பது சந்தேகம்தான். இதற்காக வெளியில் செல்ல வேண்டாம். நெய்வேதியம் செய்வதற்காக பொருட்களை வாங்குவதற்காக கூட வெளியில் செல்ல வேண்டாம்.

    இதன் விளைவாக நாம் எப்படி நாளை வீட்டிலே பூஜை மற்றும் விரதம் இருக்கலாம் என்று பாப்போம்.

    காலையில் எழுந்து, குளித்து முடித்த பிறகு வீட்டில் உள்ள ராமர் படத்தை வைத்து பால் பாயசம் செய்து துளசி அர்ச்சனை செய்யலாம்.

    உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து வெறும் பால் பாயசம் செய்து ராமரை வழிபட்டாலும் அதில் தவறு ஒன்றும் இல்லை. பால் பாயசம் எதற்காக என்றால் ராமர் பால் பாயாசத்தில் தான் அவதாரம் எடுத்தார், ஆகையால் பால் பாயாசம் இதற்கு உகந்தது.

    அதே போல் நாமும் இருவேளை சாப்பிடாமல் இருந்து ராமாயணம், சுந்தரகாண்டம் படிக்கவேண்டும், அப்போது ஸ்ரீ அனுமனையும் மனதில் வைத்து படிக்கச் வேண்டும் எதற்கொன்றால் அனுமனுக்கு கேட்கும் ஆற்றல் உள்ளது.

    பால் பாயாசம் மட்டும் இல்லாமல் கூடவே வடை, பானகம், சக்கரைப்பொங்கல், துளசி தீர்த்தம் அனைத்தும் சேர்த்து கொள்ளலாம்.

    முடிந்தவரை 108, 1008 தடவை “ஸ்ரீ ராம ஜெயம்” எழுதவேண்டும்.

    காலை முதல் இரவு தூங்கும் வரை ராமர் சிந்தனை இருக்க வேண்டும்.

    இவ்வாறு கடை பிடித்தால் ராமர் அருள் நமக்கு நிச்சயம் கிடைக்கும்.

    ராமபிரானை ராமநவமி அன்று விரதம் இருந்து வழிபட்டால் நம் மனதில் எண்ணிய காரியங்கள் விரைவாக நிறைவேறும் என்றும், நமக்கு தோல்வியை கிடையாது என்றும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

    “ஜெய் ஸ்ரீராம்”
    Next Story
    ×