என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    அமாவாசை தோறும் இந்த திருக்கோவிலுக்கு வந்தால், அவர்களை பிடித்துள்ள பிணிகள், பீடைகள், தோஷங்கள், பில்லி, சூன்யம் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
    அண்ட சக்திகள் ஒன்று இணையும் நேரம் தான் அமாவாசை. மேலும் பிண்ட சக்திகளாக மனிதனை தோற்றுவித்த ஆவி ஆன்மாவான மூதாதையர்களுக்கு வணக்கத்திற்குரியதாக ஏற்றுக் கொள்ளும் நாள் அமாவாசை.

    அமாவாசையில் விரதம் இருந்து அங்காளம்மன் திருக்கோவிலில் ஊஞ்சலில் வைக்கப்பட்டு இருக்கும் அம்மனிடம் தங்களின் குறைகளை சொல்லி வேண்டிக் கொண்டால் அதன்படி வேண்டியது நிறைவேறும்.

    ஆன்ம பிணிகளாக பில்லி, சூன்யம், காட்டேரி சேட்டைகள், வறுமை, துன்பம் போன்றவை விலக தொடர்ந்து மூன்று அமாவாசைக்கு விரதம் இருந்து  வருகை தந்தால்  என்பது விலகும் என்பது உண்மை.

    ஒரு எலுமிச்சை பழத்தை நான்காக வெட்டி அதில் கற்பூரம் ஏற்றி தலையில் இருந்து பாதம் வரை ஏற்றி இறக்கி, ஆண்கள் வலது பக்கமும், பெண்கள் இடது பக்கமும் உடைத்து அவர்களுக்கு ஏற்பட்டுள்ள திருஷ்டியை கழித்து செல்வது இந்த கோவிலில் வழக்கம்.

    பழமை திருவிழாவாக அங்காளம்மன் ஊஞ்சல் திருவிழா ஒவ்வொரு மாதமும் அமாவாசை தோறும் கொண்டாடுகின்றனர்.

    108 திவ்ய தேசங்களிலேயே இந்த ஆலயத்தில் இருக்கும் பெருமாள்தான், கிடந்த கோலத்தில் மிகப்பெரிய அளவில் அருள்பாலிக்கிறார். இந்த திருமேனி 22 அடி நீளம் கொண்டது.
    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டாறு திருத்தலத்தில், ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இது 13 மலைநாட்டு திருத்தலங்களில் ஒன்று. மேலும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் இந்த ஆலயம் திகழ்கிறது. கோதை மற்றும் பறளியாறு ஆகிய ஆறுகள் இந்த ஊரை சுற்றியபடி (வட்டமடித்தபடி) ஓடுவதால், இந்த ஊருக்கு ‘திருவட்டாறு’ என்று பெயர் வந்ததாக சொல்கிறார்கள்.

    ஒரு முறை பிரம்மதேவன் யாகம் ஒன்றை செய்தார். அந்த யாக குண்டத்தில் இருந்து கேசன், கேசி என்ற இரண்டு அரக்கர்கள் தோன்றினர். அவர்களால் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் துன்பம் ஏற்பட்டது. அவர்கள் பெருமாளிடம் முறையிட்டனர். இதையடுத்து திருமால், கேசனை அழித்து, கேசியின் மீது சயனம் கொண்டார். கேசியின் மனைவி, திருமாலை பழிதீர்க்கும் நோக்கத்துடன் தாமிரபரணியையும், கங்கையையும் வேண்டினாள். அவர்கள் இருவரும் பெருக்கெடுத்து திருமால் சயனித்திருந்த இடம் நோக்கி ஓடிவந்தனர்.

    அப்போது பூமாதேவி, திருமால் பள்ளிகொண்டிருந்த இடத்தை மேடாக உயர்த்தினாள். இதனால் அந்த இரு நதிகளும் திருமாலை சுற்றி வட்ட வடிவில் ஓட ஆரம்பித்தன. இதனால்தான் இந்த தலத்திற்கு ‘வட்டாறு’ என்று பெயர் வந்ததாக தல வரலாறு சொல்கிறது.

    இந்த ஆலய இறைவனின் திருநாமம், ‘ஆதிகேசவப் பெருமாள்’ என்பதாகும். தாயாரின் திருநாமம் ‘மரகதவல்லி நாச்சியார்.’ இந்த ஆலயத்தின் பிரதான வாசல் மேற்கு நோக்கி அமைந்திருக்கிறது. ஆலயமானது சேரநாட்டு முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. கருவறைக்கு முன்பாக உள்ள மண்டபம், ஒற்றைக் கல்லினால் ஆனது. இந்த ஆலயத்தில் ‘போத்திமார்’ என்பவர்கள்தான் இறைவனுக்கு பூஜை செய்து வருகிறார்கள். இந்த ஆலயத்தின் கொடிக்கம்பத்தில் தமிழ் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கோவில் வெளிப்பிரகாரம் நெடுகிலும் கையில் திருவிளக்கு ஏந்தி நிற்கும் தீபலட்சுமிகளின் சிலைகள் இருபுறமும் அமைக்கப்பட்டிருக்கின்றன. பலிபீட மண்டபத்தில் இருபுறமும் ஒற்றைக் கல்லினால் ஆன பல கலைச்சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

    இந்த ஆலய இறைவன் மீது நம்மாழ்வார் 11 பாடல்களைப் பாடியிருக்கிறார். இந்த ஆலயத்தில் தை மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் ‘களப பூஜை’ சிறப்பு வாய்ந்ததாகும். வைகுண்ட ஏகாதசியும் இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவனான ஆதிகேசவப் பெருமாள், திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமியை பார்த்த வண்ணம் சயனித்து இருக்கிறார். இந்தக் கோவிலில் பால் பாயசம், அவல், அப்பம் போன்றவை நைவேத்தியமாக படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகம் செய்யப்படுகின்றன.

    அமைவிடம்

    கன்னியாகுமரியில் இருந்து சுமார் 48 கிலோமீட்டர் தொலைவிலும், மார்த்தாண்டத்தில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கிறது, திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில். திருவட்டாறு பஸ்நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்திலேயே இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.

    * இங்குள்ள ஆதிகேசவப் பெருமாள் திருமேனியானது, கடுசர்க்கரை யோகம் என்னும் கலவையால், 16,008 சாளக்கிராம கற்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

    * 108 திவ்ய தேசங்களிலேயே இந்த ஆலயத்தில் இருக்கும் பெருமாள்தான், கிடந்த கோலத்தில் மிகப்பெரிய அளவில் அருள்பாலிக்கிறார். இந்த திருமேனி 22 அடி நீளம் கொண்டது.

    * இந்த சயனக் கோல பெருமாளை, கருவறையில் உள்ள மூன்று நிலை வாசல்களின் வழியாகத்தான் பார்க்க முடியும். இந்த மூன்று நிலை வாசல்களையும் முறையே, ‘திருமுகம்’, ‘திருகரம்’, ‘திருப்பாதம்’ என்று வர்ணிக்கிறார்கள்.

    * திருமுக நிலை வாசலில் சயனத்தில் உள்ள பெருமாளின் முகத்தையும், நீட்டிய இடது கரத்தையும், ஆதிசேஷனையும், கருடாழ்வாரையும் தரிசிக்கலாம்.

    * திருக்கர நிலை வாசலில், சின்முத்திரை காட்டும் பெருமாளின் வலது கரத்தையும், சங்கு, சக்கரம் உள்ளிட்ட ஐம்படைகளையும் தரிசிக்கலாம். நடுநிலை வாசலான இதில் தரையில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீதேவி - பூதேவி சமேத பெருமாளின் உற்சவத் திருமேனியையும் காணலாம்.

    * திருப்பாத நிலை வாசலிலில், பெருமாளின் திருபாதங்களையும், பெருமாளை சரணடைந்த அரக்கர்களையும் தரிசிக்கலாம்.
    இறைவனை வழிபடும் போது, அவருக்கு நைவேத்தியங்கள் படைத்து வணங்குவது வழக்கம். அப்படி படைக்கப்படுவதில், எந்த தெய்வத்திற்கு எந்த நைவேத்தியம் படைக்க வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.
    சிவபெருமான்: ஈசனுக்கு வெறும் அன்னத்தை நைவேத்தியமாக படைத்தாலே, அவர் அருளைப் பெறலாம். மேலும் வெண் பொங்கல், வடை போன்றவற்றை படைப்பதன் மூலமாகவும் சிவனின் அருளை பரிபூரணமாக பெற முடியும்.

    பெருமாள்: மகாவிஷ்ணுக்கு, ‘இந்த நைவேத்தியம்தான் பிடிக்கும்’ என்று இல்லை. ஆனால் மஞ்சள் நிற உணவு வகைகளை அவருக்கு பிடித்தமானதாக அனைவரும் கருதுகிறார்கள். குறிப்பாக லட்டு, புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் போன்றவை.

    கிருஷ்ணர்: கிருஷ்ணரைப் பற்றி அறிந்த அனைவருக்கும் தெரியும், அவருக்கு வெண்ணெய்தான் பிடித்தமான நைவேத்தியம் என்று. அதோடு குசேலர் கொடுத்த அவல் மீதும் அவருக்கு பிரியம் உண்டு.

    சரஸ்வதி

    சரஸ்வதி: கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவிக்கு, வெண் பொங்கல்தான் பிரசித்தமான நைவேத்தியம்.

    விநாயகர்: முழுமுதற்கடவுளாக வணங்கப்படும் விநாயகருக்கு, ஏராளமான உணவு பதார்த்தங்களை நைவேத்தியமாக படைப்பார்கள். குறிப்பாக மோதகம், அவல் - பொரி, சர்க்கரைப் பொங்கல், கொண்டைக்கடலை, அப்பம், முக்கனிகள்.

    முருகன்: குறிஞ்சி நிலத்து கடவுளாக வர்ணிக்கப்படுபவர், முருகப்பெருமான். எனவே அவருக்கு தினைமாவு நைவேத்தியம் பிடித்தமான உணவு. மேலும் பழங்கள், வெல்லம், வடை, சர்க்கரை பொங்கல், வேக வைத்து தாளித்த கடலை பருப்பு போன்றவையும் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.

    மகாலட்சுமி: செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமிக்கு, அரிசிப் பாயசம் என்றால் மிகவும் பிரியம். மேலும் அனைத்து வகையான இனிப்பு பலகாரங்களும் இந்த தேவிக்கு படைப்பார்கள்.

    ராகு-கேது: இவர்கள் அசுர ரூபங்கள் என்பதால், இவர் களுக்கு கருப்பு நிற உணவுப் பொருட்களான கடுகு, கருப்பு எள்ளில் செய்த உணவுகள் நைவேத்தியமாக படைப்பார்கள்.
    ஸ்ரீ விநாயகப் பெருமானை சதுர்த்தியில் வழிபாடு செய்வது மிகப் பெரும் நற்பலன்களைத் தரக்கூடியது. சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம்.
    சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும். சுக்ல பட்சம் (வளர்பிறை) சதுர்த்தியை "வர சதுர்த்தி" என்றும், கிருஷ்ண பட்சம் (தேய் பிறை) சதுர்த்தியை "சங்கடஹர சதுர்த்தி" என்றும் கூறுவார்கள்.

    ஒவ்வொரு பௌர்ணமிக்கும் பிறகு வரக்கூடிய நான்காவது நாளான சதுர்த்தி (தேய்பிறை சதுர்த்தி) சங்கடஹர சதுர்த்தி ஆகும். வளர்பிறை சதுர்த்தியில் வானில் சந்திரனைப் பார்ப்பது அல்லது நான்காம் பிறையைப் பார்ப்பது கேடு விளைவிக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு. ஆனால், பௌர்ணமிக்குப் பிறகு வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதுவே சங்கடஹர சதுர்த்தி ஆகும்.

    ஸ்ரீ விநாயகப் பெருமானை தேய்பிறை சதுர்த்தியில் வழிபாடு செய்வது மிகப் பெரும் நற்பலன்களைத் தரக்கூடியது. சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது என்று பொருள்.

    பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை "மகா சங்கடஹர சதுர்த்தி" என்று அழைக்கின்றனர்.

    நமக்கு வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி விரதம். அந்த நாளில் காலையிலிருந்து உபவாசம் இருந்து கணபதியைத் தியானிக்க வேண்டும். இரவு பூஜை முடித்த பின் கணேச நிவேதனத்தை மட்டும் உண்டு தனிமையில் உறங்க வேண்டும்.

    சங்கடஹர சதுர்த்திவிரதத்தை மாசி மாதம் கிருஷ்ணபட்சம் செவ்வாய்க் கிழமையோடு வரும் சதுர்த்தி திதியில் தொடங்கி ஓராண்டு விதிப்படி விரதம்அனுஷ்டித்தால் எல்லா துன்பங்களும் நீங்கும். செல்வம்,செல்வாக்கு கிடைக்கும்.

    இந்த விரதத்தை விநாயக சதுர்த்திக்குப் பிறகு வரும் சங்கடஹர சதுர்த்தியில் இருந்து மகா சங்கடஹரசதுர்த்தி வரை உறுதியுடன் கடை பிடித்தால் எல்லா நலன்களும் கிடைக்கும்.

    இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும். 
    மற்ற பிரதோஷ நேரத்தில் செய்யப்படும் தரிசனம், தானம், ஜெபதபங்கள் யாவுமே சனிப்பிரதோஷ நாளில் செய்யப்படும்போது பல மடங்கு பலன்களைத் தரும் என்பது புராணங்கள் தெரிவிக்கும் தகவல்.
    ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 முதல் 6 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. பிரதோஷ நேரத்தில் நமசிவாய மந்திரம் ஜபிப்பதால், நமது முன்னோர்கள், ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் யாவும் அழிந்துவிடும் எனப்படுகிறது.

    மற்ற பிரதோஷ நேரத்தில் செய்யப்படும் தரிசனம், தானம், ஜெபதபங்கள் யாவுமே சனிப்பிரதோஷ நாளில் செய்யப்படும்போது பல மடங்கு பலன்களைத் தரும் என்பது புராணங்கள் தெரிவிக்கும் தகவல்.

    பிரதோஷ நேரத்துக்குள் சிவனுக்கான அபிஷேக ஆராதனைகள், தரிசனம், புறப்பாடு என எல்லாவற்றையும் செய்துவிட வேண்டும். மாலை ஆறரை மணியுடன் பிரதோஷ காலம் முடிவதால் அதன் பின்னர் செய்யும் வழிபாடுகள் அந்திபூஜை தான் என்பதால் அது பிரதோஷ வழிபாடு ஆகாது.

    பிரதோஷ காலத்தில் சக்தியோடும், முருகப் பெருமானோடும் இணைந்த சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்தால் குடும்ப உறவுகள் மேம்படும். இந்த நேரத்தில் நடராஜ மூர்த்தியை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றத்தை காணலாம்.

    சனிப்பிரதோஷத்தில் நந்தியை வணங்கி, வழிபட்டால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும். அன்றைய நாள் முழுக்க உண்ணாமல் இருந்து சிவதரிசனம் முடித்தபிறகு உப்பு, காரம், புளிப்பு சேர்க்காமல் உண்பது வழக்கம்.

    சாதாரண பிரதோஷ நேரத்தில் சோம சூக்த பிரதட்சணம் செய்வதால், ஒரு வருடத்துக்கு ஈசனை வழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷ நேரத்தில் ஈசனை வழிபாடு செய்தால், ஐந்து வருடத்துக்கு ஈசனை வழிபாடு செய்த பலனும் கிடைக்கும் என்கிறார்கள்.
    திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு விசேஷமான சேவை நடைபெறுகிறது. இந்த சேவைகள் 'வாராந்திர சேவைகள்' என்று அழைக்கப்படுகின்றன.
    திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு விசேஷமான சேவை நடைபெறுகிறது. இந்த சேவைகள் 'வாராந்திர சேவைகள்' என்று அழைக்கப்படுகின்றன. இந்த சேவைகளுக்கான கட்டணங்களை செலுத்திய பக்தர்கள், சேவையில் பங்கு கொண்டு ஶ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமியின் அருளைப் பெறலாம். ஆன்லைன் மூலமாகவும் தேவஸ்தான அலுவலகம் வாயிலாகவும் முன்பதிவு செய்து கொண்டு இவற்றில் கலந்து கொள்ளலாம்.

    திங்கட்கிழமை - விசேஷ பூஜை

    திருப்பதி ஏழுமலையானுக்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 6 மணிக்கு நடைபெறும் முக்கிய சேவை 'விசேஷபூஜை' . இந்த சேவை கோயிலின் உள்ளே இருக்கும் கல்யாண மண்டபத்தில் ஶ்ரீதேவி, பூதேவி உடனுறை ஶ்ரீமலையப்பஸ்வாமிக்கு நடைபெறுகின்றது. பிரதி திங்கட்கிழமை நடைபெறும் இந்தச் சேவை 1991-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8-ம் தேதி தொடங்கப்பட்டு ஆர்ஜித சேவையாக நடைபெற்று வருகின்றது.

    திருமலையான் ஆலயத்தில் இரண்டாவது அர்ச்சனை, இரண்டாவது நைவேத்தியம் நடைபெற்ற பிறகு மலையப்ப ஸ்வாமி கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்கிறார். வைகானச ஆகம் சாத்திர முறைப்படி ஹோமங்கள் நடைபெற்ற பின்னர், உத்ஸவ மூர்த்திக்கு திருமஞ்சனம் நிர்வகிக்கப்படுகிறது.. இந்தச் சேவையில் பங்கு பெறுபவர்களுக்கு பிரசாதம் அளிக்கப்படுகின்றது.

    செவ்வாய்க்கிழமை - அஷ்டதள பாதபத்மாராதனம்

    ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலை 6 மணிக்கு இரண்டாவது அர்ச்சனையாக 108 தங்கத் தாமரைகளால் மூலமூர்த்திக்கு நடைபெறும் அர்ச்சனை நிகழ்ச்சியே 'அஷ்டதள பாத பத்மாராதனம்' சுமார் 20 நிமிடம் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.

    1984-ம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தான பொன் விழாவை முன்னிட்டு அறிமுகப்படுத்தப்பட்ட சேவையாகும். ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பக்தர் இதற்குத் தேவையான 108 தங்கத் தாமரைகளை காணிக்கையாக சமர்ப்பித்தார். பின்னர் இது ஆர்ஜித சேவையாக அறிவிக்கப்பட்டது. 108 தங்கத் தாமரையால் அர்ச்சனை நடக்கும்போது பக்தர்கள் மகிழ்ச்சியுடன் எம்பெருமானை தரிசிக்கலாம்.

    புதன்கிழமை - சஹஸ்ரகலசாபிஷேகம்

    ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 6 மணிக்கு தங்கவாயில் முன்பு நடைபெறும் பிரதான சேவை 'சஹஸ்ரகலசாபிஷேகம்' போக ஶ்ரீநிவாச மூர்த்தியுடன் ஶ்ரீதேவி பூதேவி உடனுறை திருமலையப்பர் ஸ்வாமிக்கும் இந்த சஹஸ்ரகலசாபிஷேகம் நடைபெறும். 1511-ம் ஆண்டுக்கு முன்பிருந்தே இந்த சஹஸ்ரகலசாபிஷேகம் நடைபெறுவதற்கான ஆதாரம் உள்ளது. தங்கவாயில் முன்பு நடைபெறும் இந்த சஹஸ்ரகலசாபிஷேகத்தில் ஆர்ஜித சேவைக் கட்டணம் செலுத்தி பக்தர்கள் பங்குகொள்ளலாம். எம்பெருமானை தரிசித்து பிரசாதம் பெற்றுச் செல்லலாம்.

    வியாழக்கிழமை - திருப்பாவாடை - நேத்ர தரிசனம்:

    பிரதி வியாழக்கிழமைதோறும் வெங்கடேசப் பெருமாளுக்கு இரண்டாவது அர்ச்சனைக்குப் பிறகு நடைபெறும் நிவேதனம் 'திருப்பாவாடை சேவை' ஆகும். இதை 'அன்ன கூடோத்ஸவம்' என்றும் கூறுவார்கள்.

    வியாழக்கிழமை காலை 6 மணிக்கு எம்பெருமான் மூலமூர்த்திக்கு அணிந்துள்ள ஆபரணங்கள் அனைத்தையும் களைந்து விடுவார்கள். பின்னர் பெருமாளுக்கு இடப்படும் திருநாமத்தின் அளவை நன்றாகக் குறைத்து கண்கள் நன்றாக தெரியும்படிச் செய்வார்கள்.

    வெங்கடேசப் பெருமாளுக்கு எதிராக மலைபோன்று புளியோதரையை குவித்து வைப்பர். புளியோதரையுடன் ஜிலேபியையும், முறுக்கையும் வைத்து பூவினால் அலங்கரிப்பர். இந்த புளியோதரையை நேராக கருவறையில் உள்ள எம்பெருமானுக்கு நிவேதிப்பர்.

    இச்சேவையில் ஆர்ஜிதம் செலுத்தும் பக்தர்களும் பங்கு கொள்ளலாம். இச்சேவையின் போது வேத பண்டிதர்கள் வேத பாராயணம் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். பின்னர் பக்தர்களுக்கு இச்சேவையுடன் ஸ்வாமி நேத்ர தரிசனமும் உண்டு.

    பூவங்கி சேவை

    பிரதி வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு எம்பெருமானுக்கு நடைபெறும் தோமாலை சேவையை 'பூவங்கி சேவை' என்பர். ஆனால், இந்தச் சேவை மட்டும் முழுமையாக ஏகாந்தமாக நடைபெறும். ஜீயர் ஸ்வாமிகள் எடுத்துக்கொடுக்க பூமாலையை அர்ச்சக ஸ்வாமிகள் எம்பெருமான் திருமேனியில் அணிவிப்பர். எம்பெருமான் பூவை ஆடையாக அணிந்திருப்பது போன்று அது காட்சியளிக்கும். இந்த சேவை ஆன பிறகு பிரதி வியாழக்கிழமை இரவு பக்தர்கள் இந்த அலங்காரத்தில் எம்பெருமானை தரிசிக்கலாம்.

    வெள்ளிக்கிழமை அபிஷேகம்

    ஶ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி மூலமூர்த்திக்கு ஒவ்வொரு பிரதி வெள்ளிக்கிழமை விடியற்காலை 5 மணிக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த வெள்ளிக்கிழமை அபிஷேகத்தை பகவத் ராமாநுஜாச்சார்ய ஸ்வாமிகள் துவக்கிவைத்துள்ளார். அவர், எம்பெருமானின் திருமார்பில் உறையும் 'தங்க அலர்மேல் மங்கை' உருவத்தை அலங்காரம் செய்து, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த அபிஷேகம் நடைபெறும்படிக்கு ஏற்பாடு செய்தார்களாம். இந்த சேவை பகவத் ராமாநுஜர் காலத்தில் இருந்தே நடைபெற்று வருகிறது.

    ஆகாசகங்கை தீர்த்தத்தால் அபிஷேகம்

    முற்காலத்தில் எம்பெருமான் நித்திய அபிஷேக சேவை கைங்கர்யத்தில் ஈடுபட்ட மகா பக்தர் திருமலைநம்பி வம்சத்தவர் கொண்டு வந்த குடத்தை முதலில் பக்தி பிரபத்தியோடு தங்கச் சங்கில் ஆகாசகங்கை தீர்த்தத்தை எம்பெருமான் சிரசின் மீது பொழிந்து ஹரி: ஓம் ஸஹஸ்ரசீர்ஷா: புருஷ: என்று புருஷசூக்தத்தினை தொடங்குவார். குலசேகரப்படிக்கு வெளியே உள்ள பண்டிதர்கள் புருஷசூக்தத்தினை ஜீயர்ஸ்வாமிகள் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து பிறருக்குக் கேட்கும்படி உச்சரிப்பர். இவர்கள் அபிஷேகம் நடைபெறும் வரையிலும் பஞ்சசூக்தங்களையும் சேவித்துக் கொண்டே இருப்பர். ஆகாசகங்கை தீர்த்தத்தினால் அபிஷேகம் செய்கின்ற வரையிலும் ஸ்வாமி திவ்யமங்கள மூர்த்தியைப் பார்த்து பக்தர்கள் அந்த அபிஷேகத்தை தாமே செய்வதைப் போன்று எண்ணி, மெய் மறந்து போவார்கள்.

    புனுகு, கஸ்தூரி, ஜவ்வாது முதலான சுகந்த பரிமளத்துடன் ஆகாச கங்கை தீர்த்தத்தால் சுமார் ஒரு மணி நேரம் அபிஷேகம் நடைபெறும். அதன்பின்னர் மஞ்சளினால் ஸ்வாமியின் திருமார்பில் உறைந்துள்ள மஹாலக்ஷ்மிக்கும் இந்த அபிஷேகம் நடைபெறும்.

    நிஜபாத தரிசனம்

    பிரதி வெள்ளிக்கிழமை அபிஷேகத்துக்குப் பிறகு அபிஷேக சேவையில் பங்கு கொள்ளும் பக்தர்கள் எம்பெருமானை தரிசித்துச் சென்ற பின்னர் 'நிஜபாத தரிசனம்' தொடங்கும். ஸ்வாமியின் நிஜபாதத்தை எவ்வித கவசமும் இல்லாது தரிசிக்கலாம். இந்த தரிசனத்தில் மட்டுமே எம்பெருமானின் திருவடிகளை தரிசிக்க ஏதுவாகிறது. மற்ற நேரங்களில் அந்த திருவடிகளுக்கு தங்கக் கவசம் வேயப்பட்டிருக்கும்.

    இந்த அபிஷேக சேவையை திருமலையான் மாதிரி ஆலயத்தில் சித்திரிக்கப்பட்டு ஒளிபரப்பப்படுகிறது.

    கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரேயில் உள்ள அம்ருதாபுரா அம்ருதேஸ்வரா கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ரத சப்தமி அன்று சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி வீசும் அதிசயம் நிகழ்கிறது.
    ஒவ்வொரு ஆண்டும் ரத சப்தமி அன்று சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி வீசுகிறது. இத்தகைய அதிசயம் அம்ருதாபுரா அம்ருதேஸ்வரா கோவிலில் தான் நிகழ்கிறது. இது கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரேயில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது.

    கி.பி.1196-ம் ஆண்டு ஒய்சாலா மன்னர் அமித்தையாவால் அழகிய சிற்பக்கலையுடன் இக்கோவில் கட்டப்பட்டது. கிழக்கு முகம் நோக்கி அமைந்துள்ள இந்த கோவிலின் நடுவில் சிவன் சன்னதியும், வலதுபக்கம் விஷ்ணு சன்னதியும், இடதுபக்கம் பிரம்மன் சன்னதியும் உள்ளது. கோவில் கருவறையில் குடிகொண்டிருக்கும் சிவன் சிலை மிகவும் பிரசித்திப்பெற்றது ஆகும்.

    அதாவது அக்னி சிவன் எனப்படும் இந்த சிவன் சிலை மும்மூர்த்திகளின் சக்தி அடங்கியது என கூறப்படுகிறது. இந்த சிவன் சிலையானது நேபாளத்தில் உள்ள கன்டக்கி நதியில் இருந்து கொண்டு வரப்பட்டு, சங்கராந்தி (பொங்கல்) அன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு அம்ருதேஸ்வரா என்று பெயர் சூட்டப்பட்டது என்று தலவரலாறு கூறுகிறது.
    விரதம், நோன்பை எல்லா மதத்தினரும் கடைபிடித்து வருகின்றனர். மன உறுதிக்கு துணையாக இருப்பது விரதம் தான். ஒவ்வொரு காலகட்ட விரதத்துக்கும் உரிய பலன்கள் கிடைக்கும்.
    விரத காலத்தில், வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி உபவாசம் இருப்பதே உயர்வானது. அப்படி இருக்க இயலாதவர்கள் பாலும் பழமும் அருந்தலாம். சமஸ்கிருதத்தில் “ஃபல்’ என்றால் பழம் என்று பொருள்படும்.

    “ஆஹார்’ என்பது ஆகாரம் அல்லது உணவு என்பதாகும். “ஃபல் + ஆஹார்’ = பலஹார் என்று ஆகிறது. பழத்தை உணவாகக் கொள்வதே பலகாரம் என்பதாயிற்று.
    இதற்குப் பதிலாக சாதம் தவிர்த்த பலவித ஆகாரங்களைச் சாப்பிடுவது தான் “பலகாரம்’ என்ற சொல்லின் பொருளாக இக்காலத்தில் கருதப்படுகிறது. இது தவறு. இது உண்மையான விரதம் ஆகாது.

    ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்து, உடலைப் புதுப்பிப்பதே விரதத்தின் நோக்க மாகும். எனவே சிற்றுண்டிகளைச் சாப்பிட்டு விரதம் இருப்பதை விட, பழங்களையும் பாலையும் மட்டும் அருந்தி விரதம் இருப்பதே சிறந்ததாகும்.

    விரதங்களும் பலன்களும்

    விரதம், நோன்பை எல்லா மதத்தினரும் கடைபிடித்து வருகின்றனர். மன உறுதிக்கு துணையாக இருப்பது விரதம் தான். ஒவ்வொரு காலகட்ட விரதத்துக்கும் உரிய பலன்கள் கிடைக்கும்.

    1. திங்கள் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவான் பரிபூர அன்பைப் பெறலாம்.
    2. செவ்வாய் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் மனைவி தகராறு நீங்கி வாழலாம்.
    3. புதன் கிழமை விரதம் இருந்தால் நோய்கள. தீரும்.
    4. வியாழன் கிழமை விரதம் இருப்பதன் மூலம் புத்திர பாக்கியம் பெறலாம்.
    5. வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் நீண்ட ஆயுளைப் பெறலாம்.
    6. சனிக்கிழமை விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.
    7. ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் நீடித்த நோயில் இருந்து விடுதலை பெறலாம், நோய் வராமல் தடுத்துக் கொள்ளலாம்.
    ஆவணி மாதம் அஷ்டமியுடன் சேர்ந்து வரும் வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி விரதம் இருந்தால் எல்லா நன்மைகளும் கிட்டும். எனவே உங்கள் நிலைக்கு ஏற்ப விரதம் இருங்கள்.
    சிவபெருமான் வீரச்செயல்களைச் செய்யும் காலங்களில் ஏற்கும் திருவுருவங்களை பைரவர் திருக்கோலம் என்று புராணம் சொல்லும். இந்த மந்திரம் செல்வ நிலையை உயர்த்த உதவும்.
    ஆதித்ய பைரவ மந்திரம்
    ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஆதித்ய பைரவாய |
    சௌபாக்கியம் ப்ரசீத ப்ரசீத |
    ஹ்ரீம் ஸ்ரீம் க்ரித்யாய ஸ்ரீம் ஹ்ரீம் ஓம் |

    இம்மந்திரம் தொழில் மற்றும் வேலையில் முன்னேற உதவும். செல்வ நிலையை உயர்த்த உதவும். நல்ல நிர்வாகத்திறன் அருளும். கிரக தோஷங்கள் நீங்கும்


    ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் நடக்கும் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரணப் பூஜையில் பக்தர்கள் பங்கேற்கலாம். ஆனால் கோவிலில் நடக்கும் மற்ற ஆர்ஜித சேவைகள் அனைத்தும் கோவில் சார்பாக மட்டுமே பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கும்.
    ஸ்ரீகாளஹஸ்தி

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு கூறியதாவது:-

    ஆந்திர அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே தினமும் காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணிவரை பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்காக வீட்டை விட்டு வெளியில் வந்து பல்வேறு பொருட்களை வாங்கி செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. அந்த ஊரடங்கில் தளர்வு செய்து பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்காக காலை 6 மணியில் இருந்து பிற்பகல் 2 மணிவரை நேரத்தை நீட்டித்துள்ளது.

    இதனால் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே காலை 6 மணியில் இருந்து நண்பகல் 12 மணிவரை பக்தா்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இனிமேல் தினமும் காலை 6 மணியில் இருந்து மதியம் 1.30 மணி வரை பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்யலாம். கோவிலில் நடக்கும் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரணப் பூஜையில் பக்தர்கள் பங்கேற்கலாம். ஆனால் கோவிலில் நடக்கும் மற்ற ஆர்ஜித சேவைகள் அனைத்தும் பக்தர்கள் அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள், கடன், எதிரிகள் தொல்லை , முன் வினை, பித்ரு சாபம், கர்ம வினைகள் நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பரிகாரம் நல்ல பலனைத்தரும்.
    (1) தினசரி சுத்தமான பசு நெய்யினால் இஷ்ட தெய்வம் அல்லது குல தெய்வத்திற்க்கு விளக்கு.

    (2) தினசரி பசுவிற்கு சிறிது உணவு.

    (3) தினசரி மதியம் 12 மணிக்கு மேல் காகத்திற்கு சிறிது உணவு.

    (4) தினசரி ஒருவருக்கு சிறிது உணவோ அல்லது குழந்தைகளுக்கு இனிப்பு சிறிதேனும் வழங்குதல்.

    (5) தினசரி சிறிது சர்க்கரை எறும்புகளுக்கு.

    மேற்கண்டவை மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரங்களாக நமது முன்னோர்கள் வழங்கியவை ஆகும்
    திருப்பதிக்கு போகிறவர்கள் ஏழுமலையான் மட்டும் தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்து விடுகிறார்கள். ஆனால் திருப்பதியில் முதலில் இந்த தெய்வத்தை வழிபட்ட பின்னரே ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும்.
    திருப்பதிக்கு போகிறவர்கள் ஆன்லைனிலேயே முன்பதிவு செய்து, அவசர அவசரமாய் ஏழுமலையான் சந்நிதிக்குள் நுழைந்து தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்து விடுகிறார்கள்.

    இந்த வழிபாட்டு முறை சரியானது அல்ல. முதலில் நாம் செல்ல வேண்டியது திருச்சானூரிலுள்ள பத்மாவதி தாயார் கோயிலுக்குத் தான். இதை பெருமாளின் திருக்கரமே நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

    அவரது ஒரு கரம் கீழ்நோக்கி இருக்கிறது. என் முகத்தைப் பார்க்கும் முன் திருவடியைப் பார். திருவடியில் சரணாகதி அடை என்று சொல்வது போல் உள்ளதாக சிலர் இந்தக் கோலத்தைச் சொல்கிறார்கள்.

    இன்னொரு சாராரோ, நீ கீழே இருக்கும் லட்சுமியாகிய பத்மாவதியை பார்த்து விட்டு வந்துவிட்டாயா? அவள் சிபாரிசு செய்தால் தான், என் அருள் உனக்கு கிடைக்கும், என்று சொல்வது போல் உள்ளதாக விளக்கம் சொல்கிறார்கள்.

    பொதுவாக, பெருமாள் கோயில்களில் தாயாருக்கு தான் முதல் வணக்கம். பின்பே பெருமாளை வணங்க வேண்டும்.
    ×