என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சூரியன் வழிபடும் சிவன் கோவில்
Byமாலை மலர்12 Jun 2021 8:43 AM GMT (Updated: 12 Jun 2021 8:43 AM GMT)
கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரேயில் உள்ள அம்ருதாபுரா அம்ருதேஸ்வரா கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ரத சப்தமி அன்று சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி வீசும் அதிசயம் நிகழ்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் ரத சப்தமி அன்று சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி வீசுகிறது. இத்தகைய அதிசயம் அம்ருதாபுரா அம்ருதேஸ்வரா கோவிலில் தான் நிகழ்கிறது. இது கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரேயில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது.
கி.பி.1196-ம் ஆண்டு ஒய்சாலா மன்னர் அமித்தையாவால் அழகிய சிற்பக்கலையுடன் இக்கோவில் கட்டப்பட்டது. கிழக்கு முகம் நோக்கி அமைந்துள்ள இந்த கோவிலின் நடுவில் சிவன் சன்னதியும், வலதுபக்கம் விஷ்ணு சன்னதியும், இடதுபக்கம் பிரம்மன் சன்னதியும் உள்ளது. கோவில் கருவறையில் குடிகொண்டிருக்கும் சிவன் சிலை மிகவும் பிரசித்திப்பெற்றது ஆகும்.
அதாவது அக்னி சிவன் எனப்படும் இந்த சிவன் சிலை மும்மூர்த்திகளின் சக்தி அடங்கியது என கூறப்படுகிறது. இந்த சிவன் சிலையானது நேபாளத்தில் உள்ள கன்டக்கி நதியில் இருந்து கொண்டு வரப்பட்டு, சங்கராந்தி (பொங்கல்) அன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு அம்ருதேஸ்வரா என்று பெயர் சூட்டப்பட்டது என்று தலவரலாறு கூறுகிறது.
கி.பி.1196-ம் ஆண்டு ஒய்சாலா மன்னர் அமித்தையாவால் அழகிய சிற்பக்கலையுடன் இக்கோவில் கட்டப்பட்டது. கிழக்கு முகம் நோக்கி அமைந்துள்ள இந்த கோவிலின் நடுவில் சிவன் சன்னதியும், வலதுபக்கம் விஷ்ணு சன்னதியும், இடதுபக்கம் பிரம்மன் சன்னதியும் உள்ளது. கோவில் கருவறையில் குடிகொண்டிருக்கும் சிவன் சிலை மிகவும் பிரசித்திப்பெற்றது ஆகும்.
அதாவது அக்னி சிவன் எனப்படும் இந்த சிவன் சிலை மும்மூர்த்திகளின் சக்தி அடங்கியது என கூறப்படுகிறது. இந்த சிவன் சிலையானது நேபாளத்தில் உள்ள கன்டக்கி நதியில் இருந்து கொண்டு வரப்பட்டு, சங்கராந்தி (பொங்கல்) அன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு அம்ருதேஸ்வரா என்று பெயர் சூட்டப்பட்டது என்று தலவரலாறு கூறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X