என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    மறுமை என்ற மரணத்திற்கு பின் வரும் வாழ்க்கை, தீர்ப்பு நாள் ஆகும். நல்லவர்களுக்கு சொர்க்கம், தீயவர்களுக்கு நரகம் என்று இந்த பயணம் இறுதியாக முடிவு பெறுகிறது.
    மாலுமி இல்லாத கப்பல், ரேடார் இல்லாத விமானம், இலக்கு இல்லாத பயணி எப்படி இல்லையோ, அவ்வாறே நோக்கம் இல்லாத வாழ்க்கையும் இல்லை. வாழ்க்கை ஒரு பயணம். தாயின் கருவறை அதன் ஒரு நிலையம் என்றால் இவ்வுலகமும் ஒரு நிலையம்தான். எனவே பயணம் தொடர்கிறது.

    இவ்வுலகில் மனிதன் அமைதியாக வாழ உலக படைப்புகள் அவனுக்கு சேவை செய்கின்றன. நிலம், காற்று, நீர், கடல், இரவு, பகல், காலை, மாலை என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவைகள் அனைத்தும் மனிதனுக்கு சேவை செய்கின்றன என்றால் மனிதன் யாருக்கு சேவை செய்ய வேண்டும் என்ற இயல்பான, அடிப்படையான கேள்வி எழுகின்றது.

    திருக்குர் ஆன் கூறுகிறது: “நாம் இந்த வானத்தையும், பூமியையும், அவற்றிக்கிடையே உள்ள இந்த உலகத்தையும் வீணாகப் படைத்திடவில்லை”. (38:27)

    “நாம் இந்த வானத்தையும், பூமியையும், அவற்றிக்கிடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக படைக்கவில்லை”. (21:16)

    இறைவன் இவ்வுலகில் மனிதனைப் படைத்து, அவன் வாழ்வதற்குத் தேவையான எல்லா வாழ்க்கை வசதிகளையும் ஏற்படுத்தித் தந்திருக்கிறான். எல்லாவிதமான நற்பேறுகளையும், அருட்கொடைகளையும் அவனுக்கு கொடுத்திருக்கிறான். ஆக எல்லா படைப்புக்கும் நோக்கம் உண்டு. நமது வாழ்க்கைக்கும் நோக்கம் உண்டு. எதுவும் தற்செயலாக, நோக்கமில்லாமல் இயங்குவதில்லை. வீண் விளையாட்டிற்காகவும் அல்ல. எல்லா படைப்புகளும் மனிதனுக்காக, மனிதனோ படைத்த இறைவனை வணங்கி, அவன் வழிகாட்டல்படி வாழ்ந்து நன்றி செலுத்துவதற்காக.

    “என்னை அடிபணிவதற்க்கே மனிதர்களை நான் படைத்தேன்” என்று திருக்குர் ஆன் எடுத்துரைக்கிறது.

    இறைவன் நமக்குச் சிந்திக்கும் ஆற்றலைத் தந்திருக்கிறான். எது நல்லது? எது கெட்டது? என்பதைப் பிரித்தறியும் ஆற்றலைத் தந்திருக்கிறான். இதைப் புரிந்து கொண்டு நாம் நல்ல செயல்களில் ஈடுபட வேண்டும். இதுதான் இவ்வுலகில் இறைவன் புறத்திலிருந்து நாம் சந்திக்கும் சோதனையாகும்.

    “அவன் மரணத்தையும், வாழ்வையும் ஏற்படுத்தினான், உங்களில் யார் மிகச்சிறந்த செயல் புரியக்கூடியவர் என்று உங்களைச் சோதிக்கும் பொருட்டு! மேலும், அவன் வல்லமை மிக்கவனாகவும் பெரும் மன்னிப்பாளனாகவும் இருக்கின்றான்”. (திருக்குர் ஆன் 67:2).

    எனவே இறைவன் வைத்த சோதனையில் நாம் வெற்றி பெற வேண்டும். இவ்வுலக வாழ்க்கை ஒரு நிலையம் என்றால், மரணம் பிறிதொரு நிலையம். மறுமை என்ற மரணத்திற்கு பின் வரும் வாழ்க்கை, தீர்ப்பு நாள் ஆகும். நல்லவர்களுக்கு சொர்க்கம், தீயவர்களுக்கு நரகம் என்று இந்த பயணம் இறுதியாக முடிவு பெறுகிறது.

    நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்: “நாளை மறுமையில் ஐந்து கேள்விகளுக்கு மனிதன் பதில் சொல்லாத வரையில் அவன் அந்த இடத்தை விட்டு நகர முடியாது. அவை: 1. தனது வயதை எந்தச் செயல்களில் கழித்தான்?, 2. தன் இளமையை எதில் பயன்படுத்தினான்?, 3. செல்வத்தை எவ்வாறு சம்பாதித்தான்?, 4. சம்பாதித்த செல்வத்தை எவ்வாறு செலவழித்தான்?, 5. கற்ற கல்வியின்படி எந்த அளவுக்குச் செயல் புரிந்தான்?”

    எனவே, நோக்கம் அறிந்து வாழ்வோம், நமது பயணம் சுக பயணமாக அமையட்டுமாக!

    நசீர் அதாவுல்லாஹ், சென்னை.

    இதையும் படிக்கலாம்...நலிந்தவர்களின் நலன் காப்போம்.....
    இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் மலை உச்சியில் இருந்து மகா தீப கொப்பரை இறக்கப்பட்டு கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்படும்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் கடந்த 19-ந் தேதி கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மகா தீபம் ஏற்றப்பட்டது.

    அன்றில் இருந்து தொடர்ந்து 11 நாட்கள் மலை உச்சியில் மகா தீபம் காட்சி அளிக்கும்.

    11-வது நாளான நேற்றுடன் மகா தீபம் தரிசனம் நிறைவு பெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் மலை உச்சியில் இருந்து மகா தீப கொப்பரை இறக்கப்பட்டு கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்படும்.
    சபரிமலையில் கடந்த 27-ந்தேதி வரை ரூ.12 கோடி நடை வருமானம் (காணிக்கை, அப்பம், அரவணை மற்றும் இதர வருவாய் உட்பட) வந்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 15-ந் தேதி திறக்கப்பட்டது. 16-ந் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, ஆரம்பத்தில் ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் தினசரி 30 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கூடுதலாக தினமும் 45 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

    நேற்றுமுன்தினம் வரை 2 லட்சத்து 31 ஆயிரத்து 20 பேர் தரிசனத்திற்கு முன்பதிவு செய்திருந்தனர். இதில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 682 பேர் சபரிமலையில் தரிசனம் செய்துள்ளனர். அதாவது 66 சதவீதம் பக்தர்கள் சபரிமலைக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பலத்த மழை, பம்பை ஆற்றில் குளிக்க தடை, சன்னிதானத்தில் ஓய்வெடுக்க கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பக்தர்களின் வருகை குறைவாக இருந்தது. இந்த நிலையில் நேற்று முதல் பக்தர்களின் வருகை அதிகரித்து உள்ளது.

    பக்தர்களின் வருகையை அதிகரிக்கும் வகையில் சன்னிதானத்தில் பக்தர்கள் ஓய்வெடுக்கவும், கூடாரங்கள் அமைத்து ஓய்வெடுக்கவும், அறைகள் எடுத்து தங்குவதற்கான நடவடிக்கைகளை திருவிதாங்கூர் தேவஸ்தானம் செய்து வருகிறது.

    சபரிமலையில் கடந்த 27-ந்தேதி வரை ரூ.12 கோடி நடை வருமானம் (காணிக்கை, அப்பம், அரவணை மற்றும் இதர வருவாய் உட்பட) வந்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    புதிய வகை உருமாறிய ஒமிக்ரான் கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து, சபரிமலை சன்னிதானம், பம்பை மற்றும் நிலக்கல்லில் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    பம்பையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் போலீஸ் உட்பட 2 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து அவர்களுடன் பணியாற்றிய போலீசார் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

    சபரிமலையில் நேற்று சென்னையை சேர்ந்த சந்திரமவுலி என்பவர் தலைமையில் திரிசூல காவடியுடன் வந்து பக்தர்கள் அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தினர்.
    நவம்பர் மாதம் 30-ம் தேதியில் இருந்து டிசம்பர் மாதம் 6-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    30-ம் தேதி செவ்வாய் கிழமை :

    * சர்வ ஏகாதசி
    * ஸ்ரீவில்லிபுத்தூ ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்
    * சந்திராஷ்டமம் - பூரட்டாதி, உத்திரட்டாதி

    1-ம் தேதி புதன் கிழமை :
     
    * சுபமுகூர்த்தம்
    * திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்
    * சந்திராஷ்டமம் - உத்திரட்டாதி, ரேவதி
     
    2-ம் தேதி வியாழக்கிழமை :

    * சுபமுகூர்த்தம்
    * பிரதோஷம்
    * மாத சிவராத்திரி
    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை
    * சந்திராஷ்டமம்- ரேவதி, அசுபதி

    3-ம் தேதி வெள்ளிக்கிழமை  :

    * தேய்பிறை சதுர்த்தசி
    * சித்தயோகம்
    * ஆழ்வார் திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் புறப்பாடு
    * கரிநாள்
    * சந்திராஷ்டமம் - அசுபதி, பரணி

    4-ம் தேதி சனிக்கிழமை :

    * சர்வ அமாவாசை
    * குச்சனூர் சனிபகவான் ஆராதனை
    * கருட தரிசனம் நன்று
    * சந்திராஷ்டமம் - பரணி, கார்த்திகை

    5-ம் தேதி ஞாயிற்று கிழமை :

    * சந்திர தரிசனம்
    * அமிர்த யோகம்
    * தந்திருணீ கௌரி விரதம்
    * கண்ணூறு கழித்தல், ஆரோக்கிய ஸ்நானம், சூரிய வழிபாடு நன்று
    * சந்திராஷ்டமம் - கார்த்திகை

    6-ம் தேதி திங்கள் கிழமை  :

    * சுபமுகூர்த்தம்
    * திருவெண்காடு, திருக்கழுகுன்றம், திருவாடானை, திருக்கடவூர் இத்தலங்களில் 1008 சங்காபிஷேகம்
    * சந்திராஷ்டமம் - ரோகிணி
    பிரசித்தி பெற்ற பெங்களூரு தொட்ட கணபதி கோவிலில் கடலைக்காய் திருவிழா நேற்று தொடங்கியது. நீண்ட வரிசையில் காத்து நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    பெங்களூரு பசவனகுடி பகுதியில் தொட்ட கணபதி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கடலைக்காய் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். 3 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த நிலையில் கடந்த ஆண்டு (2020) கொரோனா பரவல் காரணமாக கடலைக்காய் திருவிழாவை நடத்த மாநில அரசு, பெங்களூரு மாநகராட்சி அனுமதி வழங்கவில்லை. இந்த ஆண்டு மே மாதத்தில் கொரோனா பரவல் உச்சத்தை தொட்டது. இதனால் இந்த ஆண்டும் கடலைக்காய் திருவிழா நடைபெறுமா? என்று பக்தர்களிடம் கேள்வி எழுந்தது.

    இந்த நிலையில் கொரோனா பரவல் வேகமாக குறைந்ததால் இந்த ஆண்டு கடலைக்காய் திருவிழாவை நடத்த மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியது. மேலும் நவம்பர் 29-ந் தேதி (அதாவது நேற்று) முதல் வருகிற 1-ந் தேதி வரை 3 நாட்கள் இந்த திருவிழா நடத்த அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதையடுத்து திருவிழாவுக்கான ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வந்தது. மேலும் திருவிழாவுக்கு அனுமதி வழங்கப்பட்டதால் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கோவிலின் முன்பு கடலைக்காய் வியாபாரம் நடத்த கடைகளையும் போட்டனர்.

    இந்த நிலையில் பிரசித்தி பெற்ற கடலைக்காய் திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. திருவிழாவை எடைக்கு எடை கடலைக் காயை துலா பாரமாக கொடுத்து மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா, எம்.எல்.ஏ.க்கள் ரவிசுப்பிரமணியா, உதய் கருடாச்சார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த திருவிழாவில் பெங்களூருவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தொட்ட கணபதி, சிக்க கணபதியை தரிசனம் செய்தனர். திருவிழாவையொட்டி தொட்ட கணபதி, சிக்க கணபதி சிலைகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் கடலைக்காயை உற்சாகமாக வாங்கி சென்றனர்.

    இளம்பெண்கள் கடலைக்காய் வாங்கியதை படத்தில் காணலாம்.

    திருவிழாவையொட்டி கோவில் அமைந்து இருக்கும் சாலை விழாக்கோலம் பூண்டது. எங்கு திரும்பினாலும் கடைகளே தென்பட்டன. கடலைக்காய் விற்பனை மும்முரமாக நடந்தது. ஒரு உலக்குக்கு ரூ.25 முதல் ரூ.30 வரை கடலைக்காய் விற்பனை செய்யப்பட்டது. அதை பக்தர்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். மேலும் அந்த தெருவில் இருந்த அனைத்து கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.

    திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். இதனால் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வருகிறார்களா என்பதை மாநகராட்சி மார்ஷல்கள் கண்காணித்தனர். முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்த மார்ஷல்கள் அவர்களுக்கு இலவசமாக முகக்கவசத்தையும் வழங்கினர்.

    தொட்ட கணபதி கோவில் அருகே ஒரு கல்லூரி இருக்கிறது. அந்த கல்லூரியில் படித்து வரும் மாணவ, மாணவிகள் திருவிழாவில் குவிந்தனர். அவர்கள் உற்சாகமாக செல்பி எடுத்து கொண்டனர். மேலும் விசில், பீப்பிகளை ஊதி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    கோவில் அருகே அமைக்கப்பட்டு இருந்த ராட்டினங்களில் ஏறி ஆடி மகிழ்ந்தனர். குழந்தைகளை கவரும் வகையிலான ராட்டினங்களும் இடம் பெற்று இருந்தன. திருவிழாவையொட்டி பசவனகுடியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. கோவிலுக்கு வந்தவர்கள் வாகனங்களை கோவிலின் அருகே உள்ள பூங்கா பகுதியில் நிறுத்தி சென்றனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் உண்டானது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. போலீசார் பரண் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
    சிறப்பு வாய்ந்தது கார்த்திகை மாதத்தின் தேய்பிறையில் வரும் ரமா ஏகாதசி விரதம். இந்த விரத்தை மேற்கொண்டால், மகாவிஷ்ணுவின் கருணையைப் பெற முடியும்.
    ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு ஏகாதசிகள் வரும். இப்படி வருடத்திற்கு 24 ஏகாதசிகள் உண்டு. சில வருடத்தில் 25 ஏகாதசிகளும் வருவதுண்டு. கார்த்திகை மாத தேய்பிறையில் வரும் ஏகாதசியை ‘ரமா’ ஏகாதசி என்பார்கள். இந்த ஏகாதசியின் பெருமையைப் பற்றி, பாண்டவர்களில் முதன்மையானவரான தருமருக்கு, கிருஷ்ண பகவான் எடுத்துரைத்துள்ளார். அவர் சொன்ன கதையை இங்கே பார்ப்போம்.

    புராண காலத்தில் முசுகுந்தன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவனுடைய ஆட்சியில் மக்கள் அனைவரும் இன்புற்று வாழ்ந்தனர். ஆகையால், மன்னனின் உத்தரவுகளை எதிர் கேள்வியின்றி மக்கள் நிறைவேற்றி வந்தனர். ‘நாட்டு மக்கள் அனைவரும் தவறாது ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள வேண்டும்’ என்பதும், நாட்டு மக்களுக்கு முசுகுந்த மன்னன் அறிவித்த உத்தரவுகளில் ஒன்று. அதை மக்களும் சிரத்தையுடன் செய்து வந்தனர்.

    முசுகுந்தனுக்கு, சந்திரபாகா என்று ஒரு மகள் இருந்தாள். அவளை, சந்திரசேனன் என்ற மன்னனின் மகன் சோபனுக்கு மணம் முடித்துக் கொடுத்திருந்தார். ஒரு முறை சந்திரபாகா தன்னுடைய கணவருடன், தந்தையைப் பார்க்க வந்திருந்தார். அப்போது கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசி (ரமா ஏகாதசி) வந்தது. தன்னுடைய நாட்டில் வசிக்கும் அனைவரும் அந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்பது மன்னனின் உத்தரவு. எனவே சோபனும், அந்த விரதத்தை மேற்கொள்ளும் நிலை உருவானது. ஆனால் விரதம் இருந்தால், அவனது உயிருக்கு ஆபத்து நேரிடும் என்ற நிலை இருந்தது.

    தன் கணவனின் நிலையை அறிந்த சந்திரபாகா, அவனை ஏகாதசி விரதம் முடியும் வரை வேறு எங்காவது சென்று தங்கியிருக்கும்படி அறிவுறுத்தினாள். அதற்கு சோபன் மறுத்து விட்டான். “விரதம் இருந்தால், எனக்கு இறப்பு உறுதி என்பதை நான் அறிவேன். ஆனால் வேறு தேசத்தில் போய் தங்கியிருந்தால், விரதத்திற்கு பயந்து போய்விட்டதாக அனைவரும் எள்ளி நகையாடுவர். எனவே விரத்தை நானும் மேற்கொள்கிறேன்” என்று கூறினான்.

    அதன்படியே கார்த்திகை தேய்பிறை ஏகாதசி விரதத்தை மேற்கொண்டான். பசியும், தாகமும் அவனை மிகவும் வருத்தியது. அன்றைய இரவு அவனுக்கு மிகவும் வேதனையாக கடந்தது. மறுநாள் பூஜைக்குப் பிறகே உணவு சாப்பிட முடியும். ஆனால் சூரியன் உதிக்கும் முன்பாகவே சோபனின் உயிர் பிரிந்துவிட்டது. இதை அறிந்த முசுகுந்த மன்னன், சோபனின் உடலை நதியில் விட்டு விட்டார். பின்னர் மகளிடம், “உடன்கட்டை ஏற வேண்டாம். ஏகாதசி விரதத்தை நல்ல முறையில் முடி. விஷ்ணுவின் கருணை உன் மீது பதியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது” என்றார்.

    ஆனால் சோபன் மேற்கொண்ட ரமா ஏகாதசி விரதத்தின் பயனாக, அவனது உடல் உயிர்பெற்றது. அவன் விஷ்ணுவின் கருணையால், அனைத்து ஐஸ்வர்யங்களும் நிறைந்த, தேவபுரம் என்னும் நகரத்தின் அபதியாக ஆனான். தங்கம், வைரம், வைடூரியம் உள்ளிட்ட விலைஉயர்ந்த மணிகள் பதிக்கப்பட்ட சிம்மாசனத்தில், அழகிய ஆடை ஆபரணங்களுடன் வீற்றிருந்தான், சோபன். கந்தர்வர்களும், அப்சரஸ்களும், நாட்டியமாடி, இசைபாடி சோபனின் புகழ் பாடினர்.

    அதே நேரம் சோபன், தான் இருந்த ஏகாதசி விரதத்தை தெய்வ பக்தி இல்லாமல் செய்த காரணத்தால், அவன் அதிபதியான நகரம் நிலையற்ற தன்மை கொண்டதாக இருந்தது. இந்த நிலையில் ஒரு முனிவரின் மூலமாக, தன் கணவனின் நிலையை அறிந்த சந்திரபாகா, தான் மேற்கொண்ட ஏகாதசி விரதத்தின் பலனைக் கொண்டு, சோபன் ஆளும் நகரத்தை நிலையானதாக மாற்ற உறுதிகொண்டாள். அதன்படியே, தன்னுடைய எட்டு வயது முதல் இதுவரை மேற்கொண்டு வந்த ஏகாதசி விரதங்களின் பலனைக் கொண்டு, சோபனின் நகரத்தை பிரளய காலம் வரை அழியாதபடிக்கு நிலையானதாக மாற்றினாள். பின்னர், தன்னுடைய கணவனுடன் சேர்ந்து அந்த நகரத்தின் ராணியாக வீற்றிருந்து இன்புற்று வாழ்ந்தாள்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்தது, கார்த்திகை மாதத்தின் தேய்பிறையில் வரும் ரமா ஏகாதசி விரதம். இந்த விரத்தை மேற்கொண்டால், மகாவிஷ்ணுவின் கருணையைப் பெற முடியும்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் விழா நாட்களில் கோவில் அனுமதி சீட்டு வைத்திருந்த பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
    பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இங்கு நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 23-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் தீபத் திருவிழா நிறைவடைந்தது. விழா நாட்களில் கோவில் அனுமதி சீட்டு வைத்திருந்த பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    24-ந் தேதி முதல் வழக்கம் போல் பக்தர்கள் சாதாரணமாக வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தீபத் திருவிழா நிறைவடைந்ததை தொடர்ந்து வந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதற்கிடையில் நேற்று திருவண்ணாமலையில் காலையில் இருந்து தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது.

    மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கோவிலுக்குள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வழக்கமாக கோவிலில் சாமி மற்றும் அம்மன் சன்னதியில் பெரும்பாலானோர் அமர்வு தரிசனம் செய்வார்கள்.

    இந்த நிலையில் கோவிலில் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளது என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் இதுகுறித்து கோவிலின் முக்கிய பகுதிகளில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பால் விசேஷ நாட்கள் முடிந்து விட்டதால் இனி சாமியை அமர்வு தரிசனத்திற்கு சென்று கண்குளிர காணலாம் என்று வந்த பக்தர்கள் பெரும்பாலானோர் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் வரிசையில் வந்த பக்தர்கள் வேகமாக சாமி தரிசனம் செய்தனர்.
    பாதாள பொன்னியம்மன் கோயில், நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் அமையப்பெற்றது. இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சென்னையில் உள்ள அம்மன் கோயில்களில் கீர்த்தி வாய்ந்தது பாதாள பொன்னியம்மன் கோயில், நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் அமையப்பெற்றது.  இந்த அம்மன் பாதாளத்தில் மறைந்திருந்து பக்தர்களைக் காப்பதற்காக தானே வெளிப்பட்ட சுயம்பு சக்திதேவி. இந்த வடிவை சிந்தாமணிதேவி என்ற சிற்ப சாஸ்திர நூலான சிற்ப விவேக சூடாமணி தெரிவிக்கிறது. நூறுஆண்டுகட்கு முன்பு, இந்த அம்மனின் உற்சவர் ஊர்வலம் போனால் ஆலயத்திற்கு திரும்பத் திருமேனி ஆறு மாதமாகுமாம்! சென்னையைச் சுற்றியுள்ள சுமார் எழுபது கிராமங்களுக்கு இந்த அம்மன் வீதிஉலா சென்றதாலேயே இத்தனை காலம்! கோயிலைச் சுற்றி ஏழு திருக்குளங்கள் இருந்தனவாம். வீதி உலா செல்லும் அம்மன் தங்குவதற்கு வழிநெடுக அறுபத்தி நான்கு மண்டகப்படி இருந்தனவாம்.

    அம்மனுக்கு அலங்காரமும் நைவேத்தியமும் அந்தந்த கிராம மக்களே செய்வார்கள். நேர்த்திக் கடன்களையும் செலுத்துவார்கள். சென்னையைச் சேர்ந்த பல லட்சம் மக்களுக்கு இந்த பாதாள பொன்னியம்மனே குலதெய்வமாக விளங்கியிருக்கிறாள். இந்த அம்மன் கோயிலுக்கு ஏழு இடங்களில் தோரண வாயில் அமைந்திருந்தனவாம். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகள் தொண்டை மண்டலம் என்றழைக்கப்பட்டன.  இந்த மண்டலத்தை பல்வேறு தொண்டைமான்கள் ஆண்டனர். பின்னர் சிறிது காலம், நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த ராயர்கள் ஆட்சி. விஜய நகர சாம்ராஜ்யத்தை சேர்ந்த தளபதிகள் நாயக்கர் எனப்பட்டனர். அவர்களின் ஒருவர் சென்னப்ப நாயக்கர். அவரிடம் குத்தகைக்கு நிலத்தைப் பெற்று ஆங்கிலேயர்கள் இந்த பகுதியில் ஆட்சியுரிமை செலுத்திவந்தனர். அப்பொழுது புரசைவாக்கம் பகுதியில் மாந்தோப்புகளும், பூவரச மரங்களும் நிறைந்திருந்தது.

    காய்கறிகள், பழங்கள் பயிரிடப்பட்டன. இருநூறு ஆண்டுகளுக்கு முன் விவசாய பாசனத்திற்கு நீர் அதிகம் தேவைப்பட்டது. தோட்டத்தின் வடக்கு மூலையில் நீர் சுரப்பதை அறிந்து, கூலி ஆட்கள் உதவியுடன், கிணறு வெட்டத் தொடங்கினர். ஏழடி தோண்டினாலே நீர் கிடைக்கும் இந்த பகுதியில், தொடர்ந்து முப்பதடி ஆழம் தோண்டியும் நீர் வரவில்லை. நிலச்சொந்தக்காரரும், வேலையாட்களும் சோர்ந்து விட்டனர். ஆனாலும் சக்தி அம்மாவை வேண்டியபடி கடப்பாரையை மேலும் இறக்க, அது ஒரு பாறைமீது பட்டு, தீப்பொறி வந்தது, அதைத் தொடர்ந்து தண்ணீரும் பீறிட்டு அடித்தது. சுற்றியிருந்த மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பாறையை நெம்பி எடுக்க, கடப்பாரையால் தோண்ட, அனைவரும் ‘சிலை, சிலை’ என்று கூச்சலிட்டனர். அது அபூர்வமான அம்மன் சிலை அமர்ந்தக் கோலத்தில் காட்சியளித்தது. அம்மன் சிலையை வெளியே எடுத்தபோது, அதற்குக் கீழே ஐம்பொன் விக்கிரகம் ஒன்றும் கிடைத்தது. அனைவரும் ஒன்றுகூடி இரு சிலைகளுக்கும் அபிஷேகம், ஆராதனை, நைவேத்யம் செய்து வழிபட்டனர்.

    அப்போது ஒரு பெண்மணிமீது அருள்வாக்கு வந்தது: ‘‘என் பிரிய பக்தர்களே, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நான் இங்கு கோயில் கொண்டிருந்தேன். ஞானிகளும், முனிவர்களும் என்னை வழிபட்டனர். பின்னர் மன்னர்கள் எனக்கு ஆலயம் அமைத்தனர். காலச்சுழற்சியில், இந்த பகுதி அழிந்துவிட, நான் பாதாளத்தில் வாழ்ந்தேன். வெளிப்படவேண்டிய நேரம் வந்ததால் நான் வெளிப்பட்டேன். எனக்கு ஆலயம் கட்டி என்னை வழிபடுங்கள். என் பிள்ளைகளான அனைத்து பக்தர்களையும் காப்பேன்.’’  அதன்படி, முதலில் கீற்றுக் கொட்டகை அமைத்து மூலவராக கல் விக்கிரகத்தையும், உற்சவராக ஐம்பொன் விக்கிரகத்தையும் ஸ்தாபித்தனர். பாதாளத்திலிருந்து கிடைத்ததால் பாதாள பொன்னியம்மன் என்று பெயரும் வைத்தனர். கிணறு தோண்டிய வேலையாட்களின் பரம்பரையினரே இன்றுவரை ஆடி மாத வீதி ஊர்வலத்தின்போது இந்த பாதாள பொன்னியம்மனுக்கு தாய் வீட்டுச் சீர் செய்கின்றனர்.

    பக்தர்களின் எண்ணிக்கையும், காணிக்கையும் பெருகப் பெருக ஆலயமும் விரிவடைந்தது. அடுத்து அண்ணன்மார் சிலைகள் தனி கருவறையில் காவல் தெய்வங்களாக வைக்கப்பட்டன. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, விநாயகர், முருகன் சிற்றாலயங்கள் கட்டப்பட்டன. அரசமர மேடை நாகர் சிலைகளும், நவகிரக சந்நதியும் கட்டப்பட்டன. கருவறை கோட்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் காட்சியளிக்கிறார்கள். மிகப்பெரிய நூற்றுக்கால் மகா மண்டபமும் உள்ளது. அம்மன் சிலை கிடைத்த விவரத்தை தூணில் படைப்புச் சிற்பமாக செதுக்கியுள்ளனர். பாதாள பொன்னியம்மன் கற்சிலை வெகு அபூர்வமானது. அம்மன் வலது கையில் சூலமும், இடது கையில் அன்னப் பாத்திரமும் ஏந்தியுள்ளாள்; சாந்த சொரூபிணியாகத் திகழ்கிறாள்.

    வலதுப்புற வெளிப்பிராகாரத்தில் தனிச் சந்நதியில் நான்கு கைகளுடன் பாசம், அங்குசம், மோதகம், ஏக தந்தம் ஆகியன ஏந்தி மூன்றரை அடி விக்கிரமாக அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார் விநாயகர். இடது புறத்தில் நின்றகோல முருகனுக்கும் தனிச் சந்நதி. அபய-வரதம் அருளும் கைகளுடன் ஐந்தடி விக்ரமாகக் காட்சி தருகிறார். இவரிடம் வேல் ஆயுதம் உள்ளது. அடுத்து துர்கா தேவி நின்ற கோலத்தில் நான்கு கைகளுடன் சங்கு, சக்கரம் ஏந்தி காட்சி தருகிறாள். பாதாள பொன்னியம்மனின் கருவறை எதிரே நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத் தூணில் புடைப்பு சிற்பங்களாக கணபதி, முருகன், சிவன், பார்வதி, தட்சிணாமூர்த்தி, நடராஜர், துர்க்கை, அனுமன், விஷ்ணு, பிரம்மா, கால பைரவர் ஆகியோர் காணப்படுகின்றனர். நவராத்திரி மண்டப மேல்விதானத்தில் சக்கர வேலைப்பாடுகள் காட்சியளிக்கின்றன.

    அம்மன் சந்நதி எதிரே உள்ள நவராத்திரி மண்டபத்தினுள் அண்ணன்மார் சந்நதி உள்ளது. இங்குள்ள நீளமான கருங்கல் மேடையில் புடைப்புச் சிற்பமாக  ஆண் வீரர்கள் எழுவரின் சிலைகள் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றன. இவர்கள் அனைவரும், இடது கையில் கேடயம் வைத்துள்ளனர். வலது கையில், கத்தி, கோடரி, தண்டம், அரிவாள், கதை, சூலம், வாள் முதலியவற்றை வைத்துள்ளனர். இவர்கள் அம்மனின் படைவீரர்கள் என்றும், பரிவார தேவதைகள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். சென்னையில் கீழ்ப்பாக்கம் பகுதியில் அமைந்திருக்கும் இக்கோயிலுக்கு கோயம்பேடு, பாரிமுனை, எழும்பூர் பகுதிகளிலிருந்து பேருந்து வசதி உள்ளது.
    இணையதளத்தில் வெளியிட்ட 16 நிமிடத்தில் அனைத்து இலவச தரிசன டிக்கெட்டுகளையும் பக்தர்கள் முன்பதிவு செய்து விட்டதாக, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    திருப்பதி ஏழுமலையானை இலவச தரிசனத்தில் சென்று வழிபடும் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட் நேரில் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, ஆன்லைன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் அடுத்த மாதம் (டிசம்பர்) பக்தர்களுக்கு 3 லட்சத்து 10 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட் நேற்று திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டது. வெளியிட்ட 16 நிமிடத்தில் அனைத்து இலவச தரிசன டிக்கெட்டுகளையும் பக்தர்கள் முன்பதிவு செய்து விட்டதாக, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    மனம் திரும்பத் தேவையில்லாத தொன்னூற்று ஒன்பது நீதிமான்களை விட, மனம் திரும்பிய ஒரு பாவியைக் குறித்து விண்ணகம் மகிழும்’
    இயேசுவின் போதனைகள் தொடர்ந்து கொண்டே இருந்தன. தன்னுடைய போதனைகளுக்கு இயேசு தேர்ந்தெடுத்த ஆயுதம் கதைகள். கதைகள் மூலமாக வாழ்க்கையைக் குறித்த கேள்விகளையும், ஆன்மீகம், நிலைவாழ்வு குறித்த விளக்கங்களைக் கொடுப்பதையுமே அவர் தன்னுடைய போதனைகளின் பாணியாகக் கொண்டிருந்தார். அதற்காக அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் எல்லாம் அன்றைய வாழ்க்கை சார்ந்த கதைகளாகவே இருந்தன. அவருடைய கதைகளில் உலவும் கதாநாயகனும், வில்லனும் எல்லோரும் கதையைக் கேட்கும் மக்களுக்குப் பரிச்சயமானவர்களாகவே இருந்தார்கள். எனவே அவருடைய கதைகள் மக்களிடம் நேரடியாகச் சென்று சேர்ந்தன.

    பெரும்பாலும் மலைப்பகுதிகளிலோ, ஏரிகளின் ஓரத்திலோ, ஏரியில் படகில் அமர்ந்து கரையில் இருக்கும் மக்களை நோக்கியோ தன்னுடைய போதனையைச் செய்வதையே இயேசு வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். அவருடைய எளிய கதைகள் இதுவரை மக்கள் அறிந்திராத சட்டநூல்களின் கடின பாகங்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டின. வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டியவற்றை மிக எளிமையாக விளக்கின.

    அவருடைய போதனையின் முக்கியமான நோக்கம் தெளிவு படுத்துதல். மக்களுக்குப் புரியாத சட்டங்களையும், உண்மைகளையும், தன்னை நோக்கி வீசப்படும் கேள்விகளையும், சந்தேகங்களையும் தெளிவுபடுத்துதல். எது உண்மை எதை கடைபிடிக்கவேண்டும் என்பதை சட்டென்று புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாய் எடுத்துரைத்தல். இது தான் இயேசுவின் போதனைகள் மீதான ஆர்வத்தை மக்களிடம் தூண்டின. இதற்கு முன் வந்த இறைவாக்கினர்கள் பலர் செய்யாத செயல் இது ! எனவே இயேசு அதிகமாகக் கவனிக்கப்பட்டார்.

    அவற்றிலும் சில போதனைகள் கதைகளின் வழியாகப் பயணித்து புரியாத ஒரு செய்தியை நோக்கிய கேள்விகளை எழுப்பின. எனவே தான் பல வேளைகளில் இயேசுவின் சீடர்களே இயேசு சொன்ன கதைகளுக்கான விளக்கங்களை தனியே இயேசுவிடம் கேட்க நேர்ந்தது.

    அவருடைய கதைகளில் விவசாயிகள், ஏழைகள், தோட்டம் வைப்பவர்கள், கூலி வேலை செய்பவர்கள், பயணிகள் இவைகளைச் சார்ந்தே இருந்தன. இவையெல்லாம் மக்களுக்குப் பரிச்சயமான களங்கள்.

    இயேசுவை நோக்கிக் கேள்விகள் வீசப்படும் போதெல்லாம் பெரும்பாலும் கதைகளாலேயே விளக்கம் கொடுத்தார் இயேசு.

    மறைநூல் வல்லுனர்களும், குருக்களும் இயேசுவைப் பார்த்து, ‘இறைவாக்கினர்கள் என்பவர்கள் மிகவும் தூய்மையானவர்கள். அவர்கள் தூய்மை முறைகள் அனைத்தையும் கடைபிடிக்கவேண்டும். அதை விடுத்து பாவிகளோடும், ஒதுக்கப்பட்டவர்களோடும் உணவருந்துவதும், உரையாடுவதும் முறையற்ற செயல்’ என்று குற்றம் சுமத்தினார்கள்.

    இயேசு அவர்களைப் பார்த்து,‘ஒருவருக்கு நூறு ஆடுகள் இருக்கின்றன. அதை அவர் மேய்ச்சலுக்காகக் கூட்டிப் போகிறார். மேய்ச்சலை முடித்து விட்டு மாலையில் ஆடுகளை வீட்டுக்கு ஓட்டி வரும்போது ஒரு ஆடு குறைவு படுகிறது என்றால் அவன் என்ன செய்வான் ? அந்த தொன்னூற்று ஒன்பது ஆடுகளையும் அங்கேயே விட்டு விட்டு, காணாமல் போன ஒரு ஆட்டைத் தேடிப் போக மாட்டானா ? அதைக் கண்டு பிடித்தபின். ஆஹா… வழி தவறிப்போயிருந்த ஆட்டை கூட்டி வந்து விட்டேன் என்று ஆனந்தப் படமாட்டானா ? அந்த ஆட்டைத் தூக்கித் தோளில் போட்டு விட்டு மற்ற ஆடுகள் இருக்கும் இடத்துக்கு ஆனந்தமாய் ஓடி வர மாட்டானா ?’ என்று கேட்டார்.

    ‘வருவான்… ‘ அவர்கள் பதில் சொன்னார்கள்.

    ‘அதன் பின் அண்டை வீட்டாரையெல்லாம் அழைத்து. வாருங்கள் என்னோடு மகிழுங்கள் காணாமல் போயிருந்த ஆட்டைக் கண்டுபிடித்துவிட்டேன். என்று சொல்வான் இல்லையா ?’

    ‘ஆமாம். அதற்கென்ன ?’

    ‘அதே போலத் தான், மனம் திரும்பத் தேவையில்லாத தொன்னூற்று ஒன்பது நீதிமான்களை விட, மனம் திரும்பிய ஒரு பாவியைக் குறித்து விண்ணகம் மகிழும்’

    இயேசு கதையை முடித்தார்.

    பாவிகளோடு தான் பழகுவதற்குக் காரணம் அவர்களுடைய பாவ வாழ்க்கையை சரிசெய்வதற்கே என்பதை இயேசு விளக்குகையில் கூட்டத்தினர் புரிந்து கொள்கிறார்கள். ஏனென்றால் ஆடு மேய்ப்பது அங்கே வழக்கமான செயல். ஒரு ஆடு காணாமல் போனாலும் மற்ற ஆடுகளை மேய்ப்பன் ஒரு இடத்தில் நிற்க வைத்துவிட்டு தொலைந்த ஆட்டைத் தேடிப் போவான் என்பது அனைவருக்கும் தெரிந்த செயல், எனவே இயேசு தன்னுடைய பணியை ஒரு மேய்ப்பனுடன் ஒப்பிடுகையில் மக்கள் கூட்டம் புரிந்து கொள்கிறது.
    கொரோனா பிரச்சினையால் பக்தர்கள் கோவில் சன்னிதானத்தில் இரவு நேரத்தில் தங்க கூடாது என்று ஏற்கனவே கூறப்பட்டிருந்தது. தற்போது இந்த தடையையும் விலக்கி கொள்ள கோவில் நிர்வாகம் முன்வந்துள்ளது.
    கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா தொடங்கி நடந்து வருகிறது.

    கொரோனா பிரச்சினை யால் கடந்த ஆண்டு பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்ததால் கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வு அறிவிக்கப்பட்டது.

    அதன்படி கோவிலுக்கு தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். வருகிற 1-ந்தேதி முதல் 40 ஆயிரம் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இது தவிர உடனடி முன்பதிவு மூலம் மேலும் 5 ஆயிரம் பக்தர்களும் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

    சபரிமலை செல்லும் பக்தர்கள் ஐயப்பனை வேண்டி வெடி வழிபாடு நடத்துவது வழக்கம். கொரோனா பிரச்சினையால் இந்த வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. நேற்று முதல் இந்த தடை விலக்கப்பட்டு, பக்தர்கள் கோவிலில் வெடி வழிபாடு நடத்தலாம் என அறிவிக்கப்பட் டுள்ளது.

    தினமும் அதிகாலை 4 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் பக்தர்கள் வெடி வழிபாடு நேர்ச்சை நடத்திக் கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.

    கொரோனா பிரச்சினையால் பக்தர்கள் கோவில் சன்னிதானத்தில் இரவு நேரத்தில் தங்க கூடாது என்று ஏற்கனவே கூறப்பட்டிருந்தது. தற்போது இந்த தடையையும் விலக்கி கொள்ள கோவில் நிர்வாகம் முன்வந்துள்ளது.

    மாலையில் மலையேறும் பக்தர்கள், இரவில் சன்னிதானத்தில் உள்ள அறைகளில் தங்குவதற்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக சன்னிதானத்தில் பக்தர்கள் தங்கும் அறைகள் சீரமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. ஓரிரு நாளில் இதற்கான அனுமதி வழங்கப்படும் என தெரிகிறது.

    சபரிமலை கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 15-ந்தேதி திறக்கப்பட்டது. 16-ந்தேதி முதல் பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டார்கள். நடை திறந்து 11 நாட்களில் கோவிலுக்கு 1 லட்சத்து 19 ஆயிரத்து 238 பக்தர்கள் தரிசனத்திற்கு சென்றுள்ளனர்.

    இந்த எண்ணிக்கை இனி வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 11 நாட்களில் கோவில் வருமானம் ரூ.10 கோடியை கடந்து உள்ளது.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலில் வழங்கப்படும் அப்பம், அரவணை பிர சாதங்களை வாங்கிச் செல்வார்கள். கோவிலுக்கு வராத பக்தர்களுக்கு தபால் மூலம் பிரசாதம் அனுப்ப கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி 3 வகை கட்டணத்தில் பிரசாதம் வழங்கப்படுகிறது.

    ஒரு அரவணை மற்றும் அர்ச்சனை பிரசாதம் ரூ.450-க் கும், 4 அரவணை, அர்ச்சனை பிரசாதம் ரூ.830-க்கும், 10 டின் அரவணை அடங்கிய பாக்கெட் ரூ.1510-க்கும் வழங்கப்படுகிறது.

    நாளை (செவ்வாய்க்கிழமை) காலையில் மகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரை மலையில் இருந்து இறக்கப்பட்டு அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்படும்.
    பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் கடந்த 19-ந் தேதி 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது.

    அன்று முதல் தொடர்ந்து 11 நாட்கள் மகா தீபம் காட்சி அளிக்கும். இதற்காக கோவிலில் இருந்து தினமும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட திரி மற்றும் நெய் மலைக்கு கொண்டு செல்லப்பட்டு மாலை 6 மணிக்கு ஏற்றப்படுகிறது.

    தீபத்திருவிழாவின் போது ஏற்றப்படும் மகா தீபத்தை அன்று நேரில் வந்து பார்க்க இயலாத பக்தர்கள் மகா தீபம் காட்சி அளிக்கும் மற்ற நாட்களில் திருவண்ணாமலைக்கு வருகை தந்து மகா தீபத்தை தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று 10-வது நாளாக மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டபோது சாலையில் நின்ற பக்தர்கள் மகா தீபத்தை தரிசனம் செய்து வணங்கினர். தொடர்ந்து மலை மீது ஏற்றப்பட்ட மகா தீபம் 11-வது நாளான இன்று (திங்கட்கிழமை) இரவுடன் நிறைவு பெறுகிறது.

    இதையடுத்து நாளை (செவ்வாய்க்கிழமை) காலையில் மகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரை மலையில் இருந்து இறக்கப்பட்டு அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்படும். பின்னர் கோவிலில் தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்படும்.

    இதைத்தொடர்ந்து வருகிற 20-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தின்போது ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளும் நடராஜருக்கு தீப மை வைக்கப்படும்.

    பின்னர் நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் மூலம் தீப மை வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகிகள் ெதரிவித்தனர்.
    ×