என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
மங்களகரமான மார்கழி மாதத்தில் வைகறைத் துயிலெழுந்து, பகவானைத் துதி செய்வதால் மற்ற எல்லா மாதங்களிலும் பகவானைப் பூஜித்த பலனைப் பெறலாம்.
மாதங்களுள் நான் மார்கழி என்று கண்ணபிரான் கீதையில் திருவாய் மலர்ந்து அருளியுள்ளார். இதை தனுர் மாதம் என்றும் கூறுவர். இம்மாதம் சிறந்த புண்ணிய காலமாகும்.
மார்கழி மாதம் தேவர்களுக்கு அருணோதய காலமாகிறது. அதனால் அம் மாதம் முழுவதும் பகவானைத் தியானிப்பதும், அவனைத் தோத்திரம் செய்வதும், அவனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதும் நமக்கு சகல சவுபாக்கியங்களையும் அளிக்கிறது.
நாம் நமது மனத்தைத் தெளிவுப்படுத்தி ஆன்மீக மார்க்கத்தில் லயிக்கச் செய்வதற்கு மார்கழி மாதம் மிகச் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. இம்மாதத்திலுள்ள ஒவ்வொரு நாளும் நித்ய விரத நாளாகக் கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீமந் நாராயணனின் கேசவ, நாராயண, கோவிந்தா, மாதவா, மது சூதனா, விஷ்ணு, த்ரிவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ரிஷிகேசா, பத்மனாபா, தாமோதரா என்ற பன்னிரெண்டு நாமங்களும் பன்னிரெண்டு மாதங்களாக கருதப்படுகின்றன. இதில் முதல் நாமமாக விளங்கும் கேசவா என்பது மாதங்களுக்கு மணிமகுடமான மார்கழியாக விளங்குகிறது.
ஆன்மீக மார்க்கத்திற்குச் செல்ல தலையான மாதமாகக் கருதப்படும் இம்மார்கழி மாதம் மார்க்சீர்ஷம் என்பர். அதுவே நாளடைவில் மருவி மார்கழி என்றானது.
இம்மாதத்தை கிரிபிரதஷிணத்துக்கு உகந்த மாதமாகக் கருதுகிறார்கள்.
இராம காதையில் இளையபெருமாள் ஸ்ரீராமபிரானிடம், ஸ்ரீ ராமா! உமக்கு ப்ரியமானதான காலம் வந்திருக்கிறது. இந்த மார்கழி மாதத்தினால் ஆண்டு முழுவதுமே அலங்கரிக்கப்பட்டது போல் விளங்குகிறது என்று கூறுகிறார்.
இம்மாதத்தில் மாதர்கள் வைகறைத் துயிலெழுந்து வீட்டிற்கு முன்னால் சுத்தமாக மெழுகி கோலமிட்டு, சாணத்தினைப் பிடித்து வைத்து அதன் மீது பரங்கி பூவை, மகுடம் வைத்தாற் போல் அழகுற வைப்பர். அதனைச்சுற்றி வித விதமான வகையில் வண்ண வண்ணப்பூக்களை கண்ணைக் கவரும் வண்ணம் அழகாக அடுக்குவர்.
இவ்வாறு வாயில் முன் புறத்தை அழகுற அலங்கரிக்கும் பழக்கம் பண்டையகாலம் தொட்டே நிலவி வருகின்றது. அதற்குக் காரணமான முக்கிய பாரதக் கதை ஒன்றுண்டு.
பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் போர் நடந்தது மார்கழி மாதத்தில் தான்! யுத்தத்தில் பாண்டவர்களில் மாண்டவர் சிலர், மீண்டவர் பலர்.
பாண்டவர்களின் வீட்டை அடையாளம் கண்டுகொள்வதற்காக வேண்டி, வியாசர், வீட்டு வாயிலில் சாணம் இட்டு மெழுகி ஊமத்தம் பூ வைப்பதற்கான ஏற்பாடு செய்தாராம்.
அந்த அடையாளத்தைக் கொண்டு யுத்த காலத்தில் பாண்டவர் சேனைகளின் வீடுகளை கவுரவர்களின் தாக்குதல் ஏற்படாமல், கண்ணன் பாதுகாப்பு கொடுத்து காப்பாற்றினார். அன்று முதல் இந்தப் பழக்கம் தொடர்ந்து வர ஆரம்பித்தது.
இம்மார்கழி மாதத்தில் பல வைஷ்ணவ ஆசாரியர்களும், சைவ பெரியார்களும், மாமன்னர்களும் தோன்றியுள்ளனர். இம்மாதத்தைச் சிறப்பித்துக் கொண்டாடுவதை மக்கள் பழக்கமாகக் கொள்ளலாயினர்.
இம்மாதத்தில் ஆண்களும், பெண்களும் திருப்பாவை. திருவெம்பாவை மற்றும் தோத்திரப் பாடல்களையும் பாடிப் பரவச முறுவர். ஸ்ரீ வைஷ்ணவ ஆலயங்களில் இராப்பத்து, பகல்பத்து என்ற முறையில் நாலாயிரத்திவ்ய பிரபந்தம் பாராயணம் செய்யப்படும்.
இம்மாதத்தில், எம்பெருமானுக்கு நெய் வழிய வழிய சர்க்கரைப் பொங்கல் செய்து நிவேதிப்பதனை கூடார வல்லி என்று வைஷ்ணவர்கள் மிகவும் விசேஷமாகக் கொண்டாடுகின்றனர்.
இதன் உண்மை தத்துவத்தை கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என்ற பாட்டால் பாவை ஆண்டாள் நமக்கு ஆழகுற மொழிகின்றாள். மார்கழி மாதத்தில் மதி மறைந்த நந்நாள் மூல நஷத்ரம் கூடிய சுப தினத்தில் ஆஞ்சநேயருடைய ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
இத்தகைய மங்களகரமான மார்கழி மாதத்தில் வைகறைத் துயிலெழுந்து, பகவானைத் துதி செய்வதால் மற்ற எல்லா மாதங்களிலும் பகவானைப் பூஜித்த பலனைப் பெறலாம்.
மார்கழி மாதம் தேவர்களுக்கு அருணோதய காலமாகிறது. அதனால் அம் மாதம் முழுவதும் பகவானைத் தியானிப்பதும், அவனைத் தோத்திரம் செய்வதும், அவனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதும் நமக்கு சகல சவுபாக்கியங்களையும் அளிக்கிறது.
நாம் நமது மனத்தைத் தெளிவுப்படுத்தி ஆன்மீக மார்க்கத்தில் லயிக்கச் செய்வதற்கு மார்கழி மாதம் மிகச் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. இம்மாதத்திலுள்ள ஒவ்வொரு நாளும் நித்ய விரத நாளாகக் கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீமந் நாராயணனின் கேசவ, நாராயண, கோவிந்தா, மாதவா, மது சூதனா, விஷ்ணு, த்ரிவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ரிஷிகேசா, பத்மனாபா, தாமோதரா என்ற பன்னிரெண்டு நாமங்களும் பன்னிரெண்டு மாதங்களாக கருதப்படுகின்றன. இதில் முதல் நாமமாக விளங்கும் கேசவா என்பது மாதங்களுக்கு மணிமகுடமான மார்கழியாக விளங்குகிறது.
ஆன்மீக மார்க்கத்திற்குச் செல்ல தலையான மாதமாகக் கருதப்படும் இம்மார்கழி மாதம் மார்க்சீர்ஷம் என்பர். அதுவே நாளடைவில் மருவி மார்கழி என்றானது.
இம்மாதத்தை கிரிபிரதஷிணத்துக்கு உகந்த மாதமாகக் கருதுகிறார்கள்.
இராம காதையில் இளையபெருமாள் ஸ்ரீராமபிரானிடம், ஸ்ரீ ராமா! உமக்கு ப்ரியமானதான காலம் வந்திருக்கிறது. இந்த மார்கழி மாதத்தினால் ஆண்டு முழுவதுமே அலங்கரிக்கப்பட்டது போல் விளங்குகிறது என்று கூறுகிறார்.
இம்மாதத்தில் மாதர்கள் வைகறைத் துயிலெழுந்து வீட்டிற்கு முன்னால் சுத்தமாக மெழுகி கோலமிட்டு, சாணத்தினைப் பிடித்து வைத்து அதன் மீது பரங்கி பூவை, மகுடம் வைத்தாற் போல் அழகுற வைப்பர். அதனைச்சுற்றி வித விதமான வகையில் வண்ண வண்ணப்பூக்களை கண்ணைக் கவரும் வண்ணம் அழகாக அடுக்குவர்.
இவ்வாறு வாயில் முன் புறத்தை அழகுற அலங்கரிக்கும் பழக்கம் பண்டையகாலம் தொட்டே நிலவி வருகின்றது. அதற்குக் காரணமான முக்கிய பாரதக் கதை ஒன்றுண்டு.
பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் போர் நடந்தது மார்கழி மாதத்தில் தான்! யுத்தத்தில் பாண்டவர்களில் மாண்டவர் சிலர், மீண்டவர் பலர்.
பாண்டவர்களின் வீட்டை அடையாளம் கண்டுகொள்வதற்காக வேண்டி, வியாசர், வீட்டு வாயிலில் சாணம் இட்டு மெழுகி ஊமத்தம் பூ வைப்பதற்கான ஏற்பாடு செய்தாராம்.
அந்த அடையாளத்தைக் கொண்டு யுத்த காலத்தில் பாண்டவர் சேனைகளின் வீடுகளை கவுரவர்களின் தாக்குதல் ஏற்படாமல், கண்ணன் பாதுகாப்பு கொடுத்து காப்பாற்றினார். அன்று முதல் இந்தப் பழக்கம் தொடர்ந்து வர ஆரம்பித்தது.
இம்மார்கழி மாதத்தில் பல வைஷ்ணவ ஆசாரியர்களும், சைவ பெரியார்களும், மாமன்னர்களும் தோன்றியுள்ளனர். இம்மாதத்தைச் சிறப்பித்துக் கொண்டாடுவதை மக்கள் பழக்கமாகக் கொள்ளலாயினர்.
இம்மாதத்தில் ஆண்களும், பெண்களும் திருப்பாவை. திருவெம்பாவை மற்றும் தோத்திரப் பாடல்களையும் பாடிப் பரவச முறுவர். ஸ்ரீ வைஷ்ணவ ஆலயங்களில் இராப்பத்து, பகல்பத்து என்ற முறையில் நாலாயிரத்திவ்ய பிரபந்தம் பாராயணம் செய்யப்படும்.
இம்மாதத்தில், எம்பெருமானுக்கு நெய் வழிய வழிய சர்க்கரைப் பொங்கல் செய்து நிவேதிப்பதனை கூடார வல்லி என்று வைஷ்ணவர்கள் மிகவும் விசேஷமாகக் கொண்டாடுகின்றனர்.
இதன் உண்மை தத்துவத்தை கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என்ற பாட்டால் பாவை ஆண்டாள் நமக்கு ஆழகுற மொழிகின்றாள். மார்கழி மாதத்தில் மதி மறைந்த நந்நாள் மூல நஷத்ரம் கூடிய சுப தினத்தில் ஆஞ்சநேயருடைய ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
இத்தகைய மங்களகரமான மார்கழி மாதத்தில் வைகறைத் துயிலெழுந்து, பகவானைத் துதி செய்வதால் மற்ற எல்லா மாதங்களிலும் பகவானைப் பூஜித்த பலனைப் பெறலாம்.
தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார்கோவில் கள்ளர் வெட்டு திருவிழாவில் இன்று முதல் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடுகள் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புனித மணல் எடுக்க பக்தர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
திருச்செந்தூர் வட்டம் குதிரைமொழி கிராமம் செம்மணல் தேரியில் உள்ள தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் கள்ளர் வெட்டு திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு காரணமாக பக்தர்கள் இல்லாமல், கடந்த 2 நாட்களாக கள்ளர் வெட்டு நிகழ்ச்சி நடந்தது.
நேற்று நடந்த திருவிழாவில் பக்தர்களுக்கு முழு நேரமும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் கோவில் வளாகப் பகுதிக்கு வராமல் பல்வேறு இடங்களில் போலீசார் தடுப்புகளை அமைத்து இருந்தனர். ஆனால் கோவிலில் வழக்கமான பூஜைகள் சிறப்பாக நடந்தது.
இன்று(சனிக்கிழமை) முதல் வழக்கம் போல காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் மொட்டைபோடுதல் காதுகுத்தல், ஆடு. கோழி போன்ற நேர்த்திக் கடன் செலுத்தி, படையல் போட்டு வழிபாடு செய்ய முழுஅனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே, இன்று முதல் தங்களது நேர்த்திக்கடன் செலுத்தி புனித மணல் பிரசாதத்தை பெற்று கொள்ள பக்தர்கள் குடும்பத்துடன் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நேற்று நடந்த திருவிழாவில் பக்தர்களுக்கு முழு நேரமும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் கோவில் வளாகப் பகுதிக்கு வராமல் பல்வேறு இடங்களில் போலீசார் தடுப்புகளை அமைத்து இருந்தனர். ஆனால் கோவிலில் வழக்கமான பூஜைகள் சிறப்பாக நடந்தது.
இன்று(சனிக்கிழமை) முதல் வழக்கம் போல காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் மொட்டைபோடுதல் காதுகுத்தல், ஆடு. கோழி போன்ற நேர்த்திக் கடன் செலுத்தி, படையல் போட்டு வழிபாடு செய்ய முழுஅனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே, இன்று முதல் தங்களது நேர்த்திக்கடன் செலுத்தி புனித மணல் பிரசாதத்தை பெற்று கொள்ள பக்தர்கள் குடும்பத்துடன் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலய 9-ம் நாள் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) இரவு 8 மணிக்கு வாணவேடிக்கையும், இரவு 9 மணிக்கு புனித சூசையப்பர் தங்கத் தேர் பவனியும் நடைபெறுகிறது.
குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலமும் ஒன்று. இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவை முன்னிட்டு தினமும் திருப்பலி, மறையுரை, திரு இருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனை, ஜெபமாலை போன்றவை நடைபெற்றது.
9-ம் நாள் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) இரவு 8 மணிக்கு வாணவேடிக்கையும், இரவு 9 மணிக்கு புனித சூசையப்பர் தங்கத் தேர் பவனியும் நடைபெறுகிறது. 10-ம் திருவிழாவான நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் தங்கத்தேர் திருப்பலியும், காலை 6 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலியும், 8 மணிக்கு ஆங்கில திருப்பலியும் நடைபெறுகிறது. பின்னர் 9 மணிக்கு மாதா, சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தேர் பவனி நடைபெறுகிறது.
10.30 மணிக்கு மலையாள திருப்பலியும், நண்பகல் 12 மணிக்கு தமிழில் திருப்பலியும், மாலை 6 மணிக்கு திருக்கொடியிறக்கம், நற்கருணை ஆசீர் போன்றவை நடைபெறுகிறது. திருவிழாவில் பங்கேற்கும் மக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பங்கேற்குமாறு பங்கு பேரவை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் ஆண்டனி அல்காந்தர், துணை பங்கு தந்தைகள் ஜேக்கப், மெர்ஜின், கிங்ஸ்லின் மற்றும் பங்கு பேரவை துணைத் தலைவர் செல்வராணி ஜோசப், செயலாளர் சேசுசுமன், துணைச் செயலாளர் பினோலின், பொருளாளர் தீபக் மற்றும் பங்கு பேரவையினர், அருட்சகோதரிகள், அனைத்து அன்பிய ஒருங்கிணைப்பாளர்கள், பங்கு மக்கள் செய்துள்ளனர்.
திருவிழாவை முன்னிட்டு தினமும் திருப்பலி, மறையுரை, திரு இருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனை, ஜெபமாலை போன்றவை நடைபெற்றது.
9-ம் நாள் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) இரவு 8 மணிக்கு வாணவேடிக்கையும், இரவு 9 மணிக்கு புனித சூசையப்பர் தங்கத் தேர் பவனியும் நடைபெறுகிறது. 10-ம் திருவிழாவான நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் தங்கத்தேர் திருப்பலியும், காலை 6 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலியும், 8 மணிக்கு ஆங்கில திருப்பலியும் நடைபெறுகிறது. பின்னர் 9 மணிக்கு மாதா, சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தேர் பவனி நடைபெறுகிறது.
10.30 மணிக்கு மலையாள திருப்பலியும், நண்பகல் 12 மணிக்கு தமிழில் திருப்பலியும், மாலை 6 மணிக்கு திருக்கொடியிறக்கம், நற்கருணை ஆசீர் போன்றவை நடைபெறுகிறது. திருவிழாவில் பங்கேற்கும் மக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பங்கேற்குமாறு பங்கு பேரவை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் ஆண்டனி அல்காந்தர், துணை பங்கு தந்தைகள் ஜேக்கப், மெர்ஜின், கிங்ஸ்லின் மற்றும் பங்கு பேரவை துணைத் தலைவர் செல்வராணி ஜோசப், செயலாளர் சேசுசுமன், துணைச் செயலாளர் பினோலின், பொருளாளர் தீபக் மற்றும் பங்கு பேரவையினர், அருட்சகோதரிகள், அனைத்து அன்பிய ஒருங்கிணைப்பாளர்கள், பங்கு மக்கள் செய்துள்ளனர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டமும், நாளை மறுநாள்(திங்கட்கிழமை) ஆருத்ரா தரிசன விழாவும் சிறப்பாக நடைபெற உள்ளது.
சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டமும், நாளை மறுநாள்(திங்கட்கிழமை) ஆருத்ரா தரிசன விழாவும் சிறப்பாக நடைபெற உள்ளது.
இந்த திருவிழா குறித்து ஏற்கனவே நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கொடியேற்றம், ஆருத்ரா தரிசன விழா உள்ளிட்டவற்றில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டது. மேலும் தேரோட்டத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. ஆனால் கடந்த 11-ம் தேதி நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்றனர். மேலும் தினந்தோறும் சாமி வீதி உலாவும், 5-ம் நாள் உற்சவமான தெருவடைச்சான் உற்சவமும் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதிலும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடராஜர் கோவில் தேரோட்டம் மற்றும் ஆருத்ரா தரிசன விழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கோட்டாட்சியர் ரவி தலைமை தாங்கினார்.
இதில் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், தாசில்தார்ஆனந்த், ஆணையாளர் அஜிதா பர்வீன் மற்றும் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் நடராஜர் கோவிலில் தேர்திருவிழா ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும் ஆயிரக்கால் மண்டபத்தில் நடராஜ பெருமானும், சிவகாமசுந்தரி அம்மனும் வைக்கப்பட்டு, அன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கலாம்.
அதே போல் ஆருத்ரா தரிசனத்தில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது. ஆனால் தரிசனம் முடிந்த பிறகு மாலை 4 மணியிலிருந்து இரவு 10 மணி வரை பக்தர்கள் நடராஜரை தரிசனம் செய்ய கீழ சன்னதி வழியாக, அனுமதிக்கப்படுவார்கள் என முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இதற்கான உத்தரவை கோட்டாட்சியர் ரவி பிறப்பித்தார்.
இந்த திருவிழா குறித்து ஏற்கனவே நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கொடியேற்றம், ஆருத்ரா தரிசன விழா உள்ளிட்டவற்றில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டது. மேலும் தேரோட்டத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. ஆனால் கடந்த 11-ம் தேதி நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்றனர். மேலும் தினந்தோறும் சாமி வீதி உலாவும், 5-ம் நாள் உற்சவமான தெருவடைச்சான் உற்சவமும் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதிலும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடராஜர் கோவில் தேரோட்டம் மற்றும் ஆருத்ரா தரிசன விழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கோட்டாட்சியர் ரவி தலைமை தாங்கினார்.
இதில் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், தாசில்தார்ஆனந்த், ஆணையாளர் அஜிதா பர்வீன் மற்றும் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் நடராஜர் கோவிலில் தேர்திருவிழா ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும் ஆயிரக்கால் மண்டபத்தில் நடராஜ பெருமானும், சிவகாமசுந்தரி அம்மனும் வைக்கப்பட்டு, அன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கலாம்.
அதே போல் ஆருத்ரா தரிசனத்தில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது. ஆனால் தரிசனம் முடிந்த பிறகு மாலை 4 மணியிலிருந்து இரவு 10 மணி வரை பக்தர்கள் நடராஜரை தரிசனம் செய்ய கீழ சன்னதி வழியாக, அனுமதிக்கப்படுவார்கள் என முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இதற்கான உத்தரவை கோட்டாட்சியர் ரவி பிறப்பித்தார்.
மார்கழி மாதத்தில் வரும் “ பௌர்ணமி” தினத்தின் சிறப்புகளும், இன்று விரதம் இருந்தால் தீரும் பிரச்சனைகளை பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
புரட்டாசி மாதம் எப்படி பெருமாளின் வழிபாட்டிற்குரிய ஒரு மாதமாக இருக்கிறதோ, அதே போன்று மார்கழி மாதமும் சிவன் மற்றும் விஷ்ணு ஆகிய இரு மூர்த்திகளையும் வழிபடுவதற்குரிய சிறந்த மாதமாக இருக்கிறது. அதிலும் மார்கழி மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் இந்த இரு தெய்வங்களையும் வழிபடுவதால் சகல நன்மைகளும் உண்டாகும்.
மார்கழி பௌர்ணமியான இன்று அதிகாலை எழுந்து குளித்து முடித்து விட்டு உங்கள் விருப்பத்தை பொறுத்து சிவன் கோவிலுக்கோ அல்லது விஷ்ணு கோவிலுக்கோ சென்று வழிபட வேண்டும். இன்று விரதமிருக்க விரும்புபவர்கள் சாப்பிடாமல் இருப்பதை காட்டிலும் மூன்று வேளையும் பால், பழங்கள் சாப்பிட்டு விரதமிருக்கலாம். மாலையிலும் சிவன் அல்லது விஷ்ணு கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். பொதுவாக மார்கழி பௌர்ணமி தினத்தில் காலையில் சிவன் கோவிலுக்கு சென்று வழிபட்டவர்கள், மாலை பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடுவதும், காலையில் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டவர்கள் மாலையில் சிவன் கோவிலுக்கு சென்று வழிபடுவதும் சாலாச் சிறந்ததாகும்.
மார்கழி பௌர்ணமி தினத்தில் இந்த முறையில் வழிபடுபவர்களுக்கு உடல், மனம், ஆன்மாவினால் செய்த பாவங்கள் இறைவனின் அருளால் நீங்கும். மனோதிடம் பெருகும். மனதில் சிறந்த சிந்தனைகளும், எண்ணங்களும் எப்போதும் தோன்றும். பெருமாளின் அருட்கடாட்சம் கிடைத்து வீட்டில் வளங்கள் பெருகும். மனதில் இருக்கின்ற பயங்கள், கவலைகள் போன்றவை நீங்கும். உங்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
மார்கழி பௌர்ணமியான இன்று அதிகாலை எழுந்து குளித்து முடித்து விட்டு உங்கள் விருப்பத்தை பொறுத்து சிவன் கோவிலுக்கோ அல்லது விஷ்ணு கோவிலுக்கோ சென்று வழிபட வேண்டும். இன்று விரதமிருக்க விரும்புபவர்கள் சாப்பிடாமல் இருப்பதை காட்டிலும் மூன்று வேளையும் பால், பழங்கள் சாப்பிட்டு விரதமிருக்கலாம். மாலையிலும் சிவன் அல்லது விஷ்ணு கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். பொதுவாக மார்கழி பௌர்ணமி தினத்தில் காலையில் சிவன் கோவிலுக்கு சென்று வழிபட்டவர்கள், மாலை பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடுவதும், காலையில் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டவர்கள் மாலையில் சிவன் கோவிலுக்கு சென்று வழிபடுவதும் சாலாச் சிறந்ததாகும்.
மார்கழி பௌர்ணமி தினத்தில் இந்த முறையில் வழிபடுபவர்களுக்கு உடல், மனம், ஆன்மாவினால் செய்த பாவங்கள் இறைவனின் அருளால் நீங்கும். மனோதிடம் பெருகும். மனதில் சிறந்த சிந்தனைகளும், எண்ணங்களும் எப்போதும் தோன்றும். பெருமாளின் அருட்கடாட்சம் கிடைத்து வீட்டில் வளங்கள் பெருகும். மனதில் இருக்கின்ற பயங்கள், கவலைகள் போன்றவை நீங்கும். உங்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆஞ்சநேயர் வழிபாடு வந்ததே ஆச்சர்யமான ஒரு நிகழ்வாகத் தான் உள்ளது. அதனை இங்கே பார்ப்போம்.
சுசீந்திரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தாணுமாலய சுவாமியை எந்த அளவுக்கு மனமுருகி வேண்டுகிறார்களோ, அதேபோல அங்குள்ள 18 அடி உயர ஆஞ்சநேயரையும் வழிபடுகிறார்கள். இந்த கோவிலில் ஆஞ்சநேயர் வழிபாடு வந்ததே ஆச்சர்யமான ஒரு நிகழ்வாகத் தான் உள்ளது. அதனை இங்கே பார்ப்போம்.
சுமார் 258 ஆண்டுகளுக்கு முன்பு படையெடுத்து வந்த சந்தாசாகிப் சுசீந்திரம் கோவிலுக்குள் நுழைந்தார். படைகள் வருவதை ஏற்கனவே அறிந்த ஊர் மக்கள் மற்றும் ஆலயத்தில் பொறுப்பு வகித்தவர்கள் முன்னேற்பாடாக முக்கிய மூலஸ்தானங்களை சுவர் கட்டி அடைத்தும், ஆபரணங்கள் மற்றும் உடைமைகளை அப்புறப்படுத்தியும் பாதுகாத்தனர்.
அப்படி பாதுகாக்கப்பட்ட 22 அடி உயர பக்த ஆஞ்சநேயரும் ஒருவர் ஆவார். படையினரால் சிலைக்கு சேதம் வந்திடாவண்ணம் காக்க கோவிலின் திருக்கிணறு அருகே சுமார் 23 அடி நீளத்தில் பூமியை தோண்டி சிலையின் உருவம் மண்ணுக்குள் இருக்கும் விதத்தில் குப்புற படுக்க வைத்து நீளமான சாதாரண கல்தூணின் மேல்பாகம் தெரிகின்ற அளவில் சிலையை பாதுகாத்தனர்.
பல ஆண்டுகளுக்கு மேல் பொறுமையாக மண்ணிலே புதைந்து கிடந்த ஆஞ்சநேயர், தனது லீலா வினோதங்களை சிறிது, சிறிதாக காட்டத் தொடங்கினார். நெடுநீள கல் தூண் போல இருந்ததின் மீது சின்னஞ்சிறுவர்கள் ஏறி வதும், இதில் பல பேர் கீழே விழுந்து ரத்தகாயங்கள் அடிக்கடி ஏற்படுவதும், கோவிலுக்கு தரிசனத்துக்கு வருபவர்கள் இந்த கல்லின் மீது உட்கார்ந்து இளைப்பாறும் போது எதையோ கண்டு பயந்து ஓடுவது போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.
இதுபோன்று தொடர்ந்த சம்பவங்கள் விஸ்வரூபம் எடுத்தது. திருவிதாங்கூர் மன்னராக இருந்த ஸ்ரீசித்திரை திருநாள் மகாராஜா காதுக்கும் செய்தி எட்டியது. சுசீந்திரம் கோவில் அவரது கட்டுப்பாட்டில் இருந்ததால் புகழ்பெற்ற மலையாள ஜோதிடர்களை வைத்து தேவபிரசன்னம் நடத்தி அவர்கள் அறிவுரைப்படி பொதுமக்கள் ஒத்துழைப்புடன் புதையுண்டு கிடந்த 22 அடி உயரம் கொண்ட நீளமான கல் தூணை அதாவது ஆஞ்சநேயர் சிலையை புரட்டி பார்த்தனர். அப்போது அது ஆஞ்சநேயர், சீதாதேவிக்கு அசோகவனத்தில் காண்பித்த விஸ்வரூப தரிசன கோலம் என்பதை அவர்களால் உணர முடிந்தது.
ஆகமவிதிகளின்படி அஷ்டபந்தனம் நடத்தி பிரதிஷ்டை செய்யாத காரணத்தால் யார் வேண்டுமானாலும் சிலையை தொட்டு வணங்கி கொள்ளலாம். சிரஞ்சீவி வரம் பெற்றவர் ஸ்ரீஆஞ்சநேயர். பிரதிஷ்டை பூஜை நடத்தினால் அதன் சக்தி மேலும் கூடி விடும். மூலவிக்ரகங்களுக்கு (பிரதிஷ்டை சிலைகளுக்கு) சக்தி குறைந்து விடும் என்று சாஸ்திர விதிமுறை கற்றவர்கள் கூறுகின்றனர்.
22 அடி உயரங்கொண்டதும், ஒரே கல்லில் செதுக்கப்பட்டதுமான ஸ்ரீஆஞ்சநேயர் சிலை பாதத்தின் கீழே உள்ள 4 அடி பூமிக்குள் பதித்து வைக்கப்பட்டுள்ளது. நாம் பார்ப்பது 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயரை மட்டும் தான். பாதத்தில் இருந்து உச்சி வரை எந்தவித பிடிப்பும் இல்லாமல் நிற்கிறது. சுசீந்திரம் கோவிலில் மண்ணில் கிடைத்த மாணிக்கமாக திகழ்கிறார் ஆஞ்சநேயர்.
சாஸ்திரமுறைப்படி பிரதிஷ்டை செய்யாமலேயே நாளுக்கு நாள் இவரது சக்தி வல்லமை பெருகி வருகிறது. தின வழிபாடுகளிலும், காணிக்கை வசூலிலும் இத்திருக்கோவிலில் முதலிடம் வகிப்பவர் இவரே. ஆஞ்சநேயர் சன்னதிக்கு எதிர்புறம் அமையப் பெற்றுள்ள ராமர் சன்னதியில் ராமபிரான் அமர்ந்த திருக்கோலத்தில் சின் முத்திரையோடு உபதேசம் செய்யும் பாவனையில் சீதாதேவியுடன் அருள்புரிகிறார். அவரை வணங்குவது போல ஆஞ்சநேயர் சிலையும் உள்ளது.
சுமார் 258 ஆண்டுகளுக்கு முன்பு படையெடுத்து வந்த சந்தாசாகிப் சுசீந்திரம் கோவிலுக்குள் நுழைந்தார். படைகள் வருவதை ஏற்கனவே அறிந்த ஊர் மக்கள் மற்றும் ஆலயத்தில் பொறுப்பு வகித்தவர்கள் முன்னேற்பாடாக முக்கிய மூலஸ்தானங்களை சுவர் கட்டி அடைத்தும், ஆபரணங்கள் மற்றும் உடைமைகளை அப்புறப்படுத்தியும் பாதுகாத்தனர்.
அப்படி பாதுகாக்கப்பட்ட 22 அடி உயர பக்த ஆஞ்சநேயரும் ஒருவர் ஆவார். படையினரால் சிலைக்கு சேதம் வந்திடாவண்ணம் காக்க கோவிலின் திருக்கிணறு அருகே சுமார் 23 அடி நீளத்தில் பூமியை தோண்டி சிலையின் உருவம் மண்ணுக்குள் இருக்கும் விதத்தில் குப்புற படுக்க வைத்து நீளமான சாதாரண கல்தூணின் மேல்பாகம் தெரிகின்ற அளவில் சிலையை பாதுகாத்தனர்.
பல ஆண்டுகளுக்கு மேல் பொறுமையாக மண்ணிலே புதைந்து கிடந்த ஆஞ்சநேயர், தனது லீலா வினோதங்களை சிறிது, சிறிதாக காட்டத் தொடங்கினார். நெடுநீள கல் தூண் போல இருந்ததின் மீது சின்னஞ்சிறுவர்கள் ஏறி வதும், இதில் பல பேர் கீழே விழுந்து ரத்தகாயங்கள் அடிக்கடி ஏற்படுவதும், கோவிலுக்கு தரிசனத்துக்கு வருபவர்கள் இந்த கல்லின் மீது உட்கார்ந்து இளைப்பாறும் போது எதையோ கண்டு பயந்து ஓடுவது போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.
இதுபோன்று தொடர்ந்த சம்பவங்கள் விஸ்வரூபம் எடுத்தது. திருவிதாங்கூர் மன்னராக இருந்த ஸ்ரீசித்திரை திருநாள் மகாராஜா காதுக்கும் செய்தி எட்டியது. சுசீந்திரம் கோவில் அவரது கட்டுப்பாட்டில் இருந்ததால் புகழ்பெற்ற மலையாள ஜோதிடர்களை வைத்து தேவபிரசன்னம் நடத்தி அவர்கள் அறிவுரைப்படி பொதுமக்கள் ஒத்துழைப்புடன் புதையுண்டு கிடந்த 22 அடி உயரம் கொண்ட நீளமான கல் தூணை அதாவது ஆஞ்சநேயர் சிலையை புரட்டி பார்த்தனர். அப்போது அது ஆஞ்சநேயர், சீதாதேவிக்கு அசோகவனத்தில் காண்பித்த விஸ்வரூப தரிசன கோலம் என்பதை அவர்களால் உணர முடிந்தது.
ஆகமவிதிகளின்படி அஷ்டபந்தனம் நடத்தி பிரதிஷ்டை செய்யாத காரணத்தால் யார் வேண்டுமானாலும் சிலையை தொட்டு வணங்கி கொள்ளலாம். சிரஞ்சீவி வரம் பெற்றவர் ஸ்ரீஆஞ்சநேயர். பிரதிஷ்டை பூஜை நடத்தினால் அதன் சக்தி மேலும் கூடி விடும். மூலவிக்ரகங்களுக்கு (பிரதிஷ்டை சிலைகளுக்கு) சக்தி குறைந்து விடும் என்று சாஸ்திர விதிமுறை கற்றவர்கள் கூறுகின்றனர்.
22 அடி உயரங்கொண்டதும், ஒரே கல்லில் செதுக்கப்பட்டதுமான ஸ்ரீஆஞ்சநேயர் சிலை பாதத்தின் கீழே உள்ள 4 அடி பூமிக்குள் பதித்து வைக்கப்பட்டுள்ளது. நாம் பார்ப்பது 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயரை மட்டும் தான். பாதத்தில் இருந்து உச்சி வரை எந்தவித பிடிப்பும் இல்லாமல் நிற்கிறது. சுசீந்திரம் கோவிலில் மண்ணில் கிடைத்த மாணிக்கமாக திகழ்கிறார் ஆஞ்சநேயர்.
சாஸ்திரமுறைப்படி பிரதிஷ்டை செய்யாமலேயே நாளுக்கு நாள் இவரது சக்தி வல்லமை பெருகி வருகிறது. தின வழிபாடுகளிலும், காணிக்கை வசூலிலும் இத்திருக்கோவிலில் முதலிடம் வகிப்பவர் இவரே. ஆஞ்சநேயர் சன்னதிக்கு எதிர்புறம் அமையப் பெற்றுள்ள ராமர் சன்னதியில் ராமபிரான் அமர்ந்த திருக்கோலத்தில் சின் முத்திரையோடு உபதேசம் செய்யும் பாவனையில் சீதாதேவியுடன் அருள்புரிகிறார். அவரை வணங்குவது போல ஆஞ்சநேயர் சிலையும் உள்ளது.
மார்கழி திருவிழாவில் குமரி மாவட்டத்தில் இருந்து மட்டுமல்லாது, பக்கத்து மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தாணுமாலயனை தரிசித்து விட்டுச் செல்வார்கள்.
தாணுமாலய சுவாமி கோவிலில் நடைபெறும் விழாக்களில் பெரிய மற்றும் முக்கிய விழா என்று சொல்லப்படுவது மார்கழி திருவிழா தான். முதல் நாளில் கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த 10 நாட்களும் சுசீந்திரம் மட்டுமல்லாமல் குமரி மாவட்டம் முழுக்க களை கட்டியிருக்கும்.
மார்கழி திருவிழா மகத்துவம் நிறைந்தது. இதில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஏதாவது ஒன்றை உணர்த்துவதை போலவே திருவிழா அமைந்திருக்கும். திருவிழா தொடங்கும் முன்பு 10 ஊர் பிடாகைகளை கோவிலுக்கு அழைத்து மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி நடத்தப்படும். முதலில் அவர்களுக்கு விழா அழைப்பிதழ் கொடுக்கப்படும். அதன்பிறகே திருவிழா தொடங்கும். இந்த ஆண்டுக்கான திருவிழா 11-ந்தேதி தொடங்கியது.
திருவிழாவுக்கு முந்திய நாள் (10-ந்தேதி) காலை 9.15 மணிக்கு திருவிழாவுக்கான மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 4 மணிக்கு நாகர்கோவில் கோட்டார் இடலாக்குடி ருத்ரபதி விநாயகர் கோவிலில் இருந்து மரபுப்படி பட்டாரியார் சமுதாயத்தினர் கொடிப்பட்டத்தை மேளதாளத்துடன் முத்துக்குடை ஏந்தி வந்து கோவில் அதிகாரியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
1-ம் திருவிழா: 1-ம் திருவிழாவான 11-ந்தேதி காலை 6 மணிக்கு மாணிக்கவாசர் பூஜை. 7.30 மணிக்கு தாணுமாலயன் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் தெற்குமண்மடம் ஸ்தானிகர் கொடியேற்றி வைத்தார். வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் சிறப்பு பூஜைகளை செய்தார். பின்னர் பக்தி இன்னிசையும், திருமுறை பெட்டக ஊர்வலமும் நடைபெற்றது.
2-ம் திருவிழா: 12-ந்தேதி காலை 4 மணிக்கு விநாயகர் மூஷிக வாகனத்தில் திருவீதி உலா வருதல், தொடர்ந்து 8 மணிக்கு பூங்கோவில் வாகனத்தில் சந்திரசேகர் திருவீதி உலா வருதல், இரவு 9.30 மணிக்கு புஷ்பக விமான வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருதல்.
3-ம் திருவிழா: 13-ந்தேதி காலை 8 மணிக்கு புஷ்பக விமான வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருதல், இரவு 10 மணிக்கு கற்பகவிருட்ச வாகனத்தில் சுவாமி திருவீதிஉலா வருதல் நிகழ்ச்சி, 10.30 மணிக்கு மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி. தாணுமாலயனுக்கு நடைபெறும் விழாவை காண மக்கள்மார்களான கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி மற்றும் வேளிமலை குமாரசுவாமி ஆகியோர் வருகிறார்கள்.
4-ம் திருவிழா: 14-ந்தேதி காலை 8 மணிக்கு பூதவாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருதல், இரவு 10.30 மணிக்கு பறங்கி நாற்காலி வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருதல்.
5-ம் திருவிழா: 15-ந்தேதி காலை 5 மணிக்கு பஞ்சமூர்த்தி தரிசனம், ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருதல், காலை 6 மணிக்கு வீரமார்த்தாண்ட விநாயகர் கோவில் முன்பு சுவாமி, அம்பாள், பெருமாள் மூர்த்திகளை கருடன் வலம் வரும் அற்புதக் காட்சி. மாலை 5.30 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து சாமிக்கு அஷ்டாபிஷேகம், இரவு 10 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருதல் நிகழ்ச்சி.
6-ம் திருவிழா: 16-ந்தேதி காலை 8 மணிக்கு பூங்கோவில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருதல், இரவு 10 மணிக்கு இந்திர வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி.
7-ம் திருவிழா: 17-ந்தேதி காலை 5 மணிக்கு பல்லக்கில் சுவாமி திருவீதி உலா வருதல், மாலை 4.30 மணிக்கு நடராஜர் சுவாமிக்கு திருச்சாந்து சாத்துதல். மாலையில் யானை ஸ்ரீபலி, இரவு 10.30 மணிக்கு கைலாச பர்வத வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருதல்.
8-ம் திருவிழா: 18-ந்தேதி காலை 5 மணிக்கு சிதம்பரேசுவரர் திருவீதி உலா வருதல், காலையும், மாலையும் அலங்கார மண்டபத்தில் நடராஜ பெருமானுக்கும், சிவகாமி அம்மனுக்கும் அஷ்டாபிஷேகம். இரவு 8 மணிக்கு சிதம்பரேசுவரர் திருவீதி உலா வருதல்.
9-ம் திருவிழா: 19-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு கங்காள நாதர் பிட்சாடனராக திருவீதி உலா வருதல், 7.30 மணிக்கு தேரோட்டம். 60 அடி உயரத்தில் 5 அடுக்கு கொண்ட சுவாமி தேர், 40 அடி உயரம் கொண்ட அம்மன் தேர், 14 அடி உயரம் கொண்ட இந்திரன் தேர் மற்றும் 28 அடி உயர பிள்ளையார் தேரும் சுசீந்திரம் ரத வீதிகளில் வலம் வருதல். மாலை 6 மணிக்கு சுவாமி மண்டகப்படிக்கு தந்தப்பல்லக்கில் எழுந்தருளல். நள்ளிரவு 11 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருதல், தொடர்ந்து திருவிழா பார்க்க வந்த மக்கள் மார்கள் பிரிந்து செல்லும் சப்தாவர்ண காட்சி.
10-ம் திருவிழா: 20-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனம், நடராஜமூர்த்திக்கு அஷ்டாபிஷேகம், மாலை 5 மணிக்கு நடராஜமூர்த்தி திருவீதி உலா வருதல், இரவு 9 மணிக்கு ஆராட்டு நிகழ்ச்சி. இத்துடன் திருவிழா நிறைவுபெறும்.
மார்கழி திருவிழாவில் குமரி மாவட்டத்தில் இருந்து மட்டுமல்லாது, பக்கத்து மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தாணுமாலயனை தரிசித்து விட்டுச் செல்வார்கள். தேரோட்டத்தன்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்படும். பல்வேறு இடங்களில் இருந்து சுசீந்திரத்துக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.
மார்கழி திருவிழா மகத்துவம் நிறைந்தது. இதில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஏதாவது ஒன்றை உணர்த்துவதை போலவே திருவிழா அமைந்திருக்கும். திருவிழா தொடங்கும் முன்பு 10 ஊர் பிடாகைகளை கோவிலுக்கு அழைத்து மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி நடத்தப்படும். முதலில் அவர்களுக்கு விழா அழைப்பிதழ் கொடுக்கப்படும். அதன்பிறகே திருவிழா தொடங்கும். இந்த ஆண்டுக்கான திருவிழா 11-ந்தேதி தொடங்கியது.
திருவிழாவுக்கு முந்திய நாள் (10-ந்தேதி) காலை 9.15 மணிக்கு திருவிழாவுக்கான மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 4 மணிக்கு நாகர்கோவில் கோட்டார் இடலாக்குடி ருத்ரபதி விநாயகர் கோவிலில் இருந்து மரபுப்படி பட்டாரியார் சமுதாயத்தினர் கொடிப்பட்டத்தை மேளதாளத்துடன் முத்துக்குடை ஏந்தி வந்து கோவில் அதிகாரியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
1-ம் திருவிழா: 1-ம் திருவிழாவான 11-ந்தேதி காலை 6 மணிக்கு மாணிக்கவாசர் பூஜை. 7.30 மணிக்கு தாணுமாலயன் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் தெற்குமண்மடம் ஸ்தானிகர் கொடியேற்றி வைத்தார். வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் சிறப்பு பூஜைகளை செய்தார். பின்னர் பக்தி இன்னிசையும், திருமுறை பெட்டக ஊர்வலமும் நடைபெற்றது.
2-ம் திருவிழா: 12-ந்தேதி காலை 4 மணிக்கு விநாயகர் மூஷிக வாகனத்தில் திருவீதி உலா வருதல், தொடர்ந்து 8 மணிக்கு பூங்கோவில் வாகனத்தில் சந்திரசேகர் திருவீதி உலா வருதல், இரவு 9.30 மணிக்கு புஷ்பக விமான வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருதல்.
3-ம் திருவிழா: 13-ந்தேதி காலை 8 மணிக்கு புஷ்பக விமான வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருதல், இரவு 10 மணிக்கு கற்பகவிருட்ச வாகனத்தில் சுவாமி திருவீதிஉலா வருதல் நிகழ்ச்சி, 10.30 மணிக்கு மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி. தாணுமாலயனுக்கு நடைபெறும் விழாவை காண மக்கள்மார்களான கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி மற்றும் வேளிமலை குமாரசுவாமி ஆகியோர் வருகிறார்கள்.
4-ம் திருவிழா: 14-ந்தேதி காலை 8 மணிக்கு பூதவாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருதல், இரவு 10.30 மணிக்கு பறங்கி நாற்காலி வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருதல்.
5-ம் திருவிழா: 15-ந்தேதி காலை 5 மணிக்கு பஞ்சமூர்த்தி தரிசனம், ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருதல், காலை 6 மணிக்கு வீரமார்த்தாண்ட விநாயகர் கோவில் முன்பு சுவாமி, அம்பாள், பெருமாள் மூர்த்திகளை கருடன் வலம் வரும் அற்புதக் காட்சி. மாலை 5.30 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து சாமிக்கு அஷ்டாபிஷேகம், இரவு 10 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருதல் நிகழ்ச்சி.
6-ம் திருவிழா: 16-ந்தேதி காலை 8 மணிக்கு பூங்கோவில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருதல், இரவு 10 மணிக்கு இந்திர வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி.
7-ம் திருவிழா: 17-ந்தேதி காலை 5 மணிக்கு பல்லக்கில் சுவாமி திருவீதி உலா வருதல், மாலை 4.30 மணிக்கு நடராஜர் சுவாமிக்கு திருச்சாந்து சாத்துதல். மாலையில் யானை ஸ்ரீபலி, இரவு 10.30 மணிக்கு கைலாச பர்வத வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருதல்.
8-ம் திருவிழா: 18-ந்தேதி காலை 5 மணிக்கு சிதம்பரேசுவரர் திருவீதி உலா வருதல், காலையும், மாலையும் அலங்கார மண்டபத்தில் நடராஜ பெருமானுக்கும், சிவகாமி அம்மனுக்கும் அஷ்டாபிஷேகம். இரவு 8 மணிக்கு சிதம்பரேசுவரர் திருவீதி உலா வருதல்.
9-ம் திருவிழா: 19-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு கங்காள நாதர் பிட்சாடனராக திருவீதி உலா வருதல், 7.30 மணிக்கு தேரோட்டம். 60 அடி உயரத்தில் 5 அடுக்கு கொண்ட சுவாமி தேர், 40 அடி உயரம் கொண்ட அம்மன் தேர், 14 அடி உயரம் கொண்ட இந்திரன் தேர் மற்றும் 28 அடி உயர பிள்ளையார் தேரும் சுசீந்திரம் ரத வீதிகளில் வலம் வருதல். மாலை 6 மணிக்கு சுவாமி மண்டகப்படிக்கு தந்தப்பல்லக்கில் எழுந்தருளல். நள்ளிரவு 11 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருதல், தொடர்ந்து திருவிழா பார்க்க வந்த மக்கள் மார்கள் பிரிந்து செல்லும் சப்தாவர்ண காட்சி.
10-ம் திருவிழா: 20-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனம், நடராஜமூர்த்திக்கு அஷ்டாபிஷேகம், மாலை 5 மணிக்கு நடராஜமூர்த்தி திருவீதி உலா வருதல், இரவு 9 மணிக்கு ஆராட்டு நிகழ்ச்சி. இத்துடன் திருவிழா நிறைவுபெறும்.
மார்கழி திருவிழாவில் குமரி மாவட்டத்தில் இருந்து மட்டுமல்லாது, பக்கத்து மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தாணுமாலயனை தரிசித்து விட்டுச் செல்வார்கள். தேரோட்டத்தன்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்படும். பல்வேறு இடங்களில் இருந்து சுசீந்திரத்துக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.
முருகனின் அருள் பெற ஏழு நாட்களிலும் சொல்ல வேண்டிய படைவீட்டு ஸ்லோகங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் இந்த மந்திரங்களை உச்சரித்து வந்தால் சகல வளங்களையும் பெற முடியும்.
தமிழ் கடவுளுளாகிய முருக பெருமானை நாள் தோறும் பூஜிப்பது வாழ்க்கையில் பல நலன்களை பெற உதவும். முருகனின் அருள் பெற ஏழு நாட்களிலும் சொல்ல வேண்டிய படைவீட்டு ஸ்லோகங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் முருகனை வழிபட்டு இந்த மந்திரங்களை உச்சரித்து வந்தால் சகல வளங்களையும் பெற முடியும்.
ஞாயிற்றுக்கிழமை.
தாயினும் இனிமையாகத் தண்ணருள் செய்வாய் போற்றி!
சேயென ஆள்வாய் ஞானத் திருமுருகேச போற்றி!
மீயுயள் பரங்குன்றில் மேவிய வேலா போற்றி!
ஞாயிறு வாரம் வந்து நலமெலாம் அருள்வாய் போற்றி!
திங்கட்கிழமை.
துங்கத் தமிழால் உனைத் தொழுவோர்க்கு அருள் வேலவ போற்றி!
சிங்க முகனை வதைத்த அருட்செல்வத் திருநாயக போற்றி!
சங்கப்புலவோர் தமக்கென்றும் தலைவா சிவதேசிக போற்றி!
திங்கட்கிழமை வந்தருள்வாய் செந்தில்பதி நின்பதன் போற்றி!
செவ்வாய்க்கிழமை.
செவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய்
எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றி!
தெய்வாதனை இல்லாத பரயோகியர் சிவதேசிக போற்றி!
செவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநிகுக போற்றி!
புதன்கிழமை.
மதவாரணமுகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப்
பதவாழ்வு அருள்வாய் பரனே! அரனார் பாலகனே
உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே
புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி!
வியாழக்கிழமை.
மயானம் உறையும் இறையான மகேசன் பெற்ற குகேசன் எனத்
தியானப் பொருளாம் திருமுருகா தேவே மாவேதிய போற்றி!
தயாளசீலா தணிகை முதல் தவர்வாழ் குன்றுதொறும் வாழ்வாய்
வியாழக்கிழமை வந்தருள்வாய் வேலா கோலாகலா போற்றி!
வெள்ளிக்கிழமை.
அள்ளி வழங்கும் ஆறுமுகுத்தரசே விரைசேர் கடம்பணிந்த
வள்ளிக் கணவா வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வே!
வெள்ளிமலைதேர் வியன் ஞானம் மேவு பழமார் சோலையனே
வெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி!
சனிக்கிழமை.
கனிவாய் வள்ளி தெய்வானைக் கணவா உணர்வோர் கதிர்வேலா
முனிவாய் எனில் நான் எங்கடைவேன் முத்தா அருணை முனிக்கு அரசே
இனிவாதனையால் அடிநாயேன் என்றும் குன்றா வணம் வாழ்
சனிவாரமதில் வந்தருள்வாய் தயவார் வயலூர்ப்பதி போற்றி!
ஞாயிற்றுக்கிழமை.
தாயினும் இனிமையாகத் தண்ணருள் செய்வாய் போற்றி!
சேயென ஆள்வாய் ஞானத் திருமுருகேச போற்றி!
மீயுயள் பரங்குன்றில் மேவிய வேலா போற்றி!
ஞாயிறு வாரம் வந்து நலமெலாம் அருள்வாய் போற்றி!
திங்கட்கிழமை.
துங்கத் தமிழால் உனைத் தொழுவோர்க்கு அருள் வேலவ போற்றி!
சிங்க முகனை வதைத்த அருட்செல்வத் திருநாயக போற்றி!
சங்கப்புலவோர் தமக்கென்றும் தலைவா சிவதேசிக போற்றி!
திங்கட்கிழமை வந்தருள்வாய் செந்தில்பதி நின்பதன் போற்றி!
செவ்வாய்க்கிழமை.
செவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய்
எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றி!
தெய்வாதனை இல்லாத பரயோகியர் சிவதேசிக போற்றி!
செவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநிகுக போற்றி!
புதன்கிழமை.
மதவாரணமுகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப்
பதவாழ்வு அருள்வாய் பரனே! அரனார் பாலகனே
உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே
புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி!
வியாழக்கிழமை.
மயானம் உறையும் இறையான மகேசன் பெற்ற குகேசன் எனத்
தியானப் பொருளாம் திருமுருகா தேவே மாவேதிய போற்றி!
தயாளசீலா தணிகை முதல் தவர்வாழ் குன்றுதொறும் வாழ்வாய்
வியாழக்கிழமை வந்தருள்வாய் வேலா கோலாகலா போற்றி!
வெள்ளிக்கிழமை.
அள்ளி வழங்கும் ஆறுமுகுத்தரசே விரைசேர் கடம்பணிந்த
வள்ளிக் கணவா வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வே!
வெள்ளிமலைதேர் வியன் ஞானம் மேவு பழமார் சோலையனே
வெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி!
சனிக்கிழமை.
கனிவாய் வள்ளி தெய்வானைக் கணவா உணர்வோர் கதிர்வேலா
முனிவாய் எனில் நான் எங்கடைவேன் முத்தா அருணை முனிக்கு அரசே
இனிவாதனையால் அடிநாயேன் என்றும் குன்றா வணம் வாழ்
சனிவாரமதில் வந்தருள்வாய் தயவார் வயலூர்ப்பதி போற்றி!
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மாலையில் 10 ஆயிரம் விளக்குகள் வீதம் வருகிற 25-ந் தேதி வரை 1 லட்சம் திருவிளக்குகள் ஏற்றி வழிபாடு நடைபெற உள்ளது.
தஞ்சை அருகே புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை, அரண்மனை தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் 17-ம் ஆண்டு லட்சதீப திருவிழா நேற்றுமாலை தொடங்கியது. அரண்மனை தேவஸ்தான மேற்பார்வையாளர் செந்தில்குமரன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதா தனசேகர் முதல் திருவிளக்கை ஏற்றி தொடங்கி வைத்தார்.
இதையடுத்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு திருவிளக்கை ஏற்றி வைத்தனர். முதல் நாளில் 10 ஆயிரம் விளக்குகள் ஏற்றப்பட்டன. முன்னதாக அம்மனுக்கு மீனாட்சி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் விழாக்குழு தலைவர் முருகேசன், துணைத் தலைவர்கள் தனசேகர், மேத்தா, அமைப்பு செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் வேணு.கண்ணன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக மங்கள இசையும், மாணவிகளின் பரதநாட்டியமும் நடந்தது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மாலையில் 10 ஆயிரம் விளக்குகள் வீதம் வருகிற 25-ந் தேதி வரை 1 லட்சம் திருவிளக்குகள் ஏற்றி வழிபாடு நடைபெற உள்ளது. வருகிற 26-ந் தேதி மகாலட்சுமி ஹோமம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை லட்சதீப வழிகாட்டுக்குழுவினர் செய்துள்ளனர்.
இதையடுத்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு திருவிளக்கை ஏற்றி வைத்தனர். முதல் நாளில் 10 ஆயிரம் விளக்குகள் ஏற்றப்பட்டன. முன்னதாக அம்மனுக்கு மீனாட்சி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் விழாக்குழு தலைவர் முருகேசன், துணைத் தலைவர்கள் தனசேகர், மேத்தா, அமைப்பு செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் வேணு.கண்ணன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக மங்கள இசையும், மாணவிகளின் பரதநாட்டியமும் நடந்தது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மாலையில் 10 ஆயிரம் விளக்குகள் வீதம் வருகிற 25-ந் தேதி வரை 1 லட்சம் திருவிளக்குகள் ஏற்றி வழிபாடு நடைபெற உள்ளது. வருகிற 26-ந் தேதி மகாலட்சுமி ஹோமம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை லட்சதீப வழிகாட்டுக்குழுவினர் செய்துள்ளனர்.
உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் சூரிய ஒளியானது மூலவரின் மீது விழும் அதிசய நிகழ்வு நடைபெறும்.
தமிழகத்தில் உள்ள பழமை வாய்ந்த சிவாலயங்களில் நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலும் ஒன்றாகும். மூலவர் சுயம்புவாக தோன்றிய இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் சூரிய ஒளியானது மூலவரின் மீது விழும் அதிசய நிகழ்வு நடைபெறும்.
மார்கழி மாதத்தின் முதல் நாளான நேற்று அதிகாலையில் சூரிய உதயத்தை தொடர்ந்து கோவில் மூலவரின் மீது சூரிய ஒளி விழுந்தது. சுமார் 10 நிமிடம் வரை நீடித்த இந்த நிகழ்வை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்து சாமி தரிசனம் செய்தனர். சிவபெருமானை சூரிய பகவான் வழிபடுவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக மார்கழி மாத பிறப்பையொட்டி, அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், திருப்பள்ளி எழுச்சி, உதயமார்த்தாண்ட பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் செய்திருந்தார்.
மார்கழி மாதத்தின் முதல் நாளான நேற்று அதிகாலையில் சூரிய உதயத்தை தொடர்ந்து கோவில் மூலவரின் மீது சூரிய ஒளி விழுந்தது. சுமார் 10 நிமிடம் வரை நீடித்த இந்த நிகழ்வை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்து சாமி தரிசனம் செய்தனர். சிவபெருமானை சூரிய பகவான் வழிபடுவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக மார்கழி மாத பிறப்பையொட்டி, அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், திருப்பள்ளி எழுச்சி, உதயமார்த்தாண்ட பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் செய்திருந்தார்.
உலகில் வேறு எங்கும் காண இயலாத வகையில் தலைகீழாய் அமர்ந்து சிரசாசனத்தில் காட்சி தரும் அதிசய கோவில் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ளது.
இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிய பல கோலங்கள் பூண்டு அதிசயிக்கும் வண்ணம் உருவங்களை மாற்றி காட்சி தருவார். அந்த வகையில் உலகில் வேறு எங்கும் காண இயலாத வகையில் தலைகீழாய் அமர்ந்து சிரசாசனத்தில் காட்சி தரும் அதிசய கோவில் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ளது. அதன் பெயர் யனமதுரு ஸ்ரீ பார்வதி அம்பிகா சமேத சக்தீஸ்வரர் ஆலயம்.
இங்கே கருவறையில் இறைவன் தலைகீழாய் லிங்கம் இன்றி உருவமாக காட்சி தருகிறார். அதாவது சிரசை பூமியில் பதித்து பாதத்தை மேலே தூக்கி நிறுத்தி சிரசாசனத்தில் காட்சி தருகிறார். அருகிலேயே அன்னை வேறு எங்கும் இல்லாத வண்ணம் குழந்தை முருகனை மடியில் கிடத்திக் கொண்டு தாய்மையே வடிவாக பார்வதி தேவி காட்சி அளிக்கிறார்.
எமன் பூஜித்த தலம் ஆதலால் ஜாதகத்தில் அபமிருத்யு தோஷம் உள்ளவர்கள், ஜாதகத்தில் கண்டம் உள்ளவர்கள் இங்கு வந்து இறைவனையும் அம்பிகையையும் ஒரு சேர தரிசித்து செல்ல எம பயம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. நவகிரகங்களால் ஏற்படும் பிரச்சினைகள், திருமண தடை, குழந்தையின்மை போன்ற குறைபாடுகளை நீக்கும் தலமாகவும் விளங்குகிறது.
ஆந்திர மாநிலம் பீமாவரத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள எனமதுரு கிராமத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
இங்கே கருவறையில் இறைவன் தலைகீழாய் லிங்கம் இன்றி உருவமாக காட்சி தருகிறார். அதாவது சிரசை பூமியில் பதித்து பாதத்தை மேலே தூக்கி நிறுத்தி சிரசாசனத்தில் காட்சி தருகிறார். அருகிலேயே அன்னை வேறு எங்கும் இல்லாத வண்ணம் குழந்தை முருகனை மடியில் கிடத்திக் கொண்டு தாய்மையே வடிவாக பார்வதி தேவி காட்சி அளிக்கிறார்.
எமன் பூஜித்த தலம் ஆதலால் ஜாதகத்தில் அபமிருத்யு தோஷம் உள்ளவர்கள், ஜாதகத்தில் கண்டம் உள்ளவர்கள் இங்கு வந்து இறைவனையும் அம்பிகையையும் ஒரு சேர தரிசித்து செல்ல எம பயம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. நவகிரகங்களால் ஏற்படும் பிரச்சினைகள், திருமண தடை, குழந்தையின்மை போன்ற குறைபாடுகளை நீக்கும் தலமாகவும் விளங்குகிறது.
ஆந்திர மாநிலம் பீமாவரத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள எனமதுரு கிராமத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, இன்றும் (வெள்ளிக்கிழமை) கோவிலுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. எனினும் கோவிலில் வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே காயாமொழியை அடுத்த தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் ஆண்டுதோறும் கள்ளர்வெட்டு திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
கோவிலில் இந்த ஆண்டு கள்ளர் வெட்டு திருவிழா கடந்த மாதம் 17-ந் தேதி சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. விழாவில் தினமும் மாலையில் வில்லிசையும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது. நேற்று முன்தினம் சிறப்பு அபிஷேக ஆராதனை, உற்சவர் வீதி உலா நடைபெற்றது.
விழாவின் சிகர நாளான நேற்று கள்ளர் வெட்டு திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. காலையில் தாமிரபரணி ஆற்றில் புனிதநீர் எடுத்து வரப்பட்டது. பின்னர் கற்குவேல் அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன.
மாலை 4.45 மணியளவில் கோவிலுக்கு பின்புறம் உள்ள செம்மணல் தேரியில் கள்ளர் என்ற இளநீரை வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, தொடர்ந்து 2-வது ஆண்டாகவும் பக்தர்கள் பங்கேற்பின்றி கள்ளர்வெட்டு திருவிழா நடந்தது. கோவில் பணியாளர்கள், பூசாரிகள் உள்ளிட்ட சிலர் மட்டுமே நேற்று அனுமதிக்கப்பட்டனர்.கள்ளர் என்ற இளநீரை பூசாரி வெட்டியதும், அதில் இருந்து சிதறிய தண்ணீர் தெறித்து செம்மணலில் விழுந்தது. அந்த புனித மணலை கோவில் பணியாளர்கள் சேகரித்தனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, இன்றும் (வெள்ளிக்கிழமை) கோவிலுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. எனினும் கோவிலில் வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும்.
நாளை (சனிக்கிழமை) முதல் பக்தர்கள் வழக்கம்போல் சாமி தரிசனம் செய்யலாம். கோவில் அலுவலகத்தில் கள்ளர் வெட்டு புனித மணல் பிரசாதம் நாளை முதல் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் காந்திமதி, தக்கார் அஜீத், உதவி ஆணையர் ரோஜாலி சுமதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
கோவிலில் இந்த ஆண்டு கள்ளர் வெட்டு திருவிழா கடந்த மாதம் 17-ந் தேதி சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. விழாவில் தினமும் மாலையில் வில்லிசையும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது. நேற்று முன்தினம் சிறப்பு அபிஷேக ஆராதனை, உற்சவர் வீதி உலா நடைபெற்றது.
விழாவின் சிகர நாளான நேற்று கள்ளர் வெட்டு திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. காலையில் தாமிரபரணி ஆற்றில் புனிதநீர் எடுத்து வரப்பட்டது. பின்னர் கற்குவேல் அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன.
மாலை 4.45 மணியளவில் கோவிலுக்கு பின்புறம் உள்ள செம்மணல் தேரியில் கள்ளர் என்ற இளநீரை வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, தொடர்ந்து 2-வது ஆண்டாகவும் பக்தர்கள் பங்கேற்பின்றி கள்ளர்வெட்டு திருவிழா நடந்தது. கோவில் பணியாளர்கள், பூசாரிகள் உள்ளிட்ட சிலர் மட்டுமே நேற்று அனுமதிக்கப்பட்டனர்.கள்ளர் என்ற இளநீரை பூசாரி வெட்டியதும், அதில் இருந்து சிதறிய தண்ணீர் தெறித்து செம்மணலில் விழுந்தது. அந்த புனித மணலை கோவில் பணியாளர்கள் சேகரித்தனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, இன்றும் (வெள்ளிக்கிழமை) கோவிலுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. எனினும் கோவிலில் வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும்.
நாளை (சனிக்கிழமை) முதல் பக்தர்கள் வழக்கம்போல் சாமி தரிசனம் செய்யலாம். கோவில் அலுவலகத்தில் கள்ளர் வெட்டு புனித மணல் பிரசாதம் நாளை முதல் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் காந்திமதி, தக்கார் அஜீத், உதவி ஆணையர் ரோஜாலி சுமதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.






