என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சின்ன வயதில் இளையராஜா பாடிய பாட்டு பெண் குரலில் அமைந்தது! குரலைக் கேட்டு விட்டு, "பாடுவது பெண்'' என்று பந்தயம் கட்டியவர்கள் ஏமாந்தனர்.
    சின்ன வயதில் இளையராஜா பாடிய பாட்டு பெண் குரலில் அமைந்தது! குரலைக் கேட்டு விட்டு, "பாடுவது பெண்'' என்று பந்தயம் கட்டியவர்கள் ஏமாந்தனர்.

    கேரள முதல்-மந்திரி நம்பூதிரிபாடு, பாவலர் வரதராஜனை மேடைக்கு அழைத்து, "தனது மந்திரிசபை அமையக் காரணமானவர்'' என்று பாராட்டியதால் அவர் ஒரே நாளில் புகழின் உச்சிக்குப் போய்விட்டார்.

    "இந்த சம்பவம்தான் நான் இசை உலகில் அதிகமாக கால்பதிக்க காரணமாக அமைந்தது'' என்கிறார், இளையராஜா.

    அவர் கூறுகிறார்:-

    "கேரளாவில் நடந்த நிகழ்ச்சி மூலமாக பாவலரை அறிந்த கம்ïனிஸ்டு கட்சியினர் அவரை தங்கள் பகுதிகளிலும் பாட அழைத்தார்கள். அதில் முதல் அழைப்பு திருச்சி அருகே உள்ள திருவெறும்பூர் கம்ïனிஸ்டு தொழிலாளர் மாநாட்டுக் குழுவிடம் இருந்து வந்தது.

    அண்ணனும் பாட ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக விளம்பரமும் செய்தார்கள். ஆனால் பாட வேண்டிய மூன்று நாளைக்கு முன் அண்ணனுக்கு ஜ×ரம் வந்துவிட்டது. இரண்டொரு நாளில் ஜ×ரம் சரியாகி விடும் என்று பார்த்தால் அதிகமானதே தவிர, குறைந்த பாடில்லை.

    இதற்கிடையே நிகழ்ச்சிக்கு வரமுடியாத சூழ்நிலையை விளக்கி அண்ணன் தந்தி கொடுத்துவிட்டார். அப்படியும் அண்ணனை அழைத்து பாட வைத்தே ஆகவேண்டும் என்று ஆசைப்பட்ட நிகழ்ச்சி அமைப்பாளர்கள், நிகழ்ச்சிக்கு முதல் நாள் திருச்சியில் இருந்து காரை எடுத்துக்கொண்டு நேராகவே வீட்டுக்கு வந்துவிட்டார்கள்.

    அவர்களின் ஆர்வத்தை நேரில் பார்த்த அண்ணன், `அடாத ஜ×ரத்திலும் விடாது பாட' முடிவு செய்துவிட்டார். ஆர்மோனியம் சங்கரதாஸ், தபேலாக்காரர் சகிதம் அண்ணன் புறப்படவிருந்த நேரத்தில் அம்மா அண்ணனிடம் வந்தார். "உன்னுடன் தம்பி ராஜையாவையும் அழைத்துப் போனால், அவனையும் இடையிடையே இரண்டொரு பாட்டுப்பாட வைக்கலாமே. அவன் அப்படிப் பாடும்போது உனக்கும் `ரெஸ்ட்' கிடைத்த மாதிரி இருக்கும்'' என்றார்.

    ஜ×ரத்தில் பலவீனப்பட்ட நிலையில் அண்ணன் பாடப்போனால், அவருக்கு கொஞ்சமாவது ஓய்வு தேவை என்ற கண்ணோட்டத்தில்தான் அம்மா என்னை சிபாரிசு செய்தார். அதைப் புரிந்து கொண்ட அண்ணன், என்னைப் பார்த்தார். என்ன நினைத்தாரோ, "சரி நீயும் வா'' என்றார்.

    அண்ணனின் இந்த அழைப்புதான் என் கலையுலக வாழ்க்கைப் பயணத்தின் தொடக்கம் என்று அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

    திருவெறும்பூர் மாநாட்டில் சுமார் ஐம்பதாயிரம் பேர் கூடிய கூட்டத்தில் நான் முதன் முதலில் பாடியபோது கிடைத்த கைதட்டல், உயர் படிப்பு குறித்து நான் கட்டியிருந்த மனக்கோட்டையைத் தகர்க்கப்போகிறது என்பதை நான் அறிந்திருக்கவில்லை.

    மூன்று நாட்கள் திருச்சியில் கச்சேரி. பாடும் நேரம் மாலைதானே. மற்ற நேரங்களில் பெரும்பாலும் திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவில், தாயுமானவர் கோவில் என்று நேரம் ஓடியது. மலைக்கோட்டையின் உச்சியில் இருந்து, காவிரியைப் பார்ப்பது கண்கொள்ளாக்காட்சி. ஸ்ரீரங்கம், திருவானைக் காவல் கோபுர தரிசனம் என்று, கண்களில் அதிசயங்கள் கண்டேன்.

    அதோடு காவிரியாற்றில் உற்சாகக் குளியல் போட்டபோது, அந்த மகிழ்ச்சி என்னை உறைïரைத் தலைநகராகக் கொண்டு சோழர்கள் ஆண்ட காலத்திற்கே கொண்டு போய்விட்டது.

    மூன்று நாட்கள் கழித்து பள்ளிக்கு வந்தால், மாணவ நண்பர்கள் என்னிடம், "என்ன ஆயிற்று? ஏன் ஸ்கூலுக்கு வரவில்லை?'' என்று விசாரிக்க ஆரம்பித்தார்கள். நானோ மூன்று நாளும் ஸ்கூலில் என்ன பாடம் நடந்திருக்கும் என்பதற்குப் பதிலாக, இந்த மூன்று நாளில் வெளியுலகில் என்ன பாடம் படித்தேன் என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். கூரை வேய்ந்த அந்த சின்னஞ்சிறிய வகுப்பறையின் தடுப்புச் சுவர்களுக்குள் இருந்தபடி மலைக்கோட்டையின் உச்சிக்கும் மேலே திறந்த வானவெளியிலே கற்பனை சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தேன்.

    அண்ணனுக்கு கச்சேரிகளுக்கு நிறைய அழைப்பு வந்தது. அவரோடு அவ்வப்போது கச்சேரிகளில் கலந்து கொண்டு படிப்பையும் தொடர்வது சாத்தியமாக இல்லை. அவ்வளவுதான். பள்ளிக்கூட கதவு அடைபட்டு விட்டது.

    அப்போது சிறிய வயது என்பதால் என் குரல் பெண் குரல் மாதிரி இருக்கும். அண்ணன் நான் பாடுவதற்கென்றே பாடல்களையும் எழுதிவிட்டார். அண்ணனுடன் பாட `டூயட்' பாடல்களும் தயாராயின! இப்படி அண்ணனின் இசைக்குழுவில் நானும் முக்கியமான பாத்திரமாகி விட்டேன்.

    இசை நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில், தொடக்கத்திலேயே மக்களை அண்ணன் தன் பக்கம் இழுத்து விடுவார். முதல் பாடல் முடிந்து, வந்திருக்கும் எல்லாருக்கும் `வணக்கம்' சொல்லும் பாடலிலேயே பத்து இடங்களில் கை தட்டல்கள் வாங்கி விடுவார். கூட்டம் முழுவதும் அவர் சிரித்தால் சிரிக்கும்; கோபித்தால் மக்கள் முகத்திலும் கனல் தெரியும். அழும் மாதிரி பேசினாலோ முன் வரிசையில் உட்கார்ந்திருப்பவர்களின் முகங்களில் கண்ணீர் வழியும்.

    இது, தினமும் நாங்கள் காணும் அன்றாட நிகழ்ச்சி.

    டூயட் பாடலில் அண்ணன், "காங்கிரசில சேரப்போறேண்டி பொம்பளே! கதரைப் போட்டு பார்க்கப் போறேண்டி' என்று பாட, பதிலுக்கு நான், "வெளிய சொல்லித் தொலைச்சுடாதீங்க மாப்பிளே! வீணா கெட்டுப் போயிடாதீங்க'' என்று பாடுவேன்.

    சிறு வயது என்பதால், என் குரல் பெண் குரல் போல ஒலிக்கும்.

    இதில் ஆச்சரியம் என்ன தெரியுமா? என்னைப் பார்க்காமல் வெளியில் என் குரலைக் கேட்டுவிட்டு "யாரோ ஒரு பெண் பாடுகிறாள்'' என்று எதிர்பார்த்து அப்புறமாய் நேரில் பார்க்க வந்து ஏமாந்து போனவர்கள் பலர்! குரலைக்கேட்டு நான் பெண்தான் என்று பந்தயம் கட்டி தோற்றவர்களும் ஏராளம்.

    1962-ல் பாண்டிச்சேரி தேர்தலில் அண்ணன் பாடிய பாட்டு ரொம்பவே பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் அண்ணனும் நானும் இப்படிப்

    பாடுவோம்:"ஒத்த ரூபா தாரேன் நான்

    ஒனப்பத் தட்டும் தாரேன்

    ஓட்டுப் போடுற பொண்ணே - கொஞ்சம்

    மாட்டப் பாத்து குத்து''

     - இது அண்ணன்.

    "ஒத்த ரூபாயும் வேணாம் ஒங்க

    ஒனப்பூத் தட்டும் வேணாம் - நீங்க

    ஊரை அழிக்கிற கூட்டம் - ஒங்கள

    ஒழிச்சிக் கட்டப் போறோம்''

    - இது நான்.

    இந்தப் பாட்டுக்கு எவ்வளவு கரகோஷம் தெரியுமா?

    இப்படி பாடி, நானும் ரசிகர்களுக்கு தெரிய வந்த நேரத்தில், "இனி நீ பாட வரவேண்டாம்'' என்று அண்ணன் சொன்னால் எப்படி

    இருக்கும்?படிப்புப் போச்சு; பாட்டும் போச்சு என்றால் எனக்கு எப்படி இருக்கும்?

    ‘தாதா 87’ படத்தில் கமல் பாடலுக்கு அவரது அண்ணன் சாருஹாசன் ரொமன்ஸ் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. #DhaDha87 #CharuHaasan #Kamal
    கலை சினிமாஸ் சார்பில் ம.கலைச்செல்வன் தயாரிக்கும் படம் ‘தாதா 87’. இதில் சாருஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவருடன் கீர்த்திசுரேசின் பாட்டி சரோஜா, ஜனகராஜ், மனோஜ்குமார், ஆனந்த்பாண்டி, ஜெனி பல்லவி, அனுலாவண்யா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

    விஜய் ஸ்ரீஜி இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் மார்ச் 1ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் 2 நிமிட காட்சி வெளியாகியுள்ளது.



    அதில் கமல் நடித்த ‘தேவர் மகன்’ படத்தில் இடம் பெறும் ‘இஞ்சி இடுப்பழகி...’ என்ற பாடலுக்கு சாருஹாசனும், சரோஜாவும் ரொமன்ஸ் செய்திருக்கிறார்கள். தற்போது இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


    இளம் பெண் இயக்குனர் நயனா சூரியன், திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் பிணமாக கிடந்துள்ளார். #NayanaSuryan
    மலையாள திரையுலகில் இளம்பெண் டைரக்டராக திகழ்ந்தவர் நயனாசூரியன், (வயது 28). திருவனந்தபுரம் வெள்ளையம்பலத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து நயனாசூரியன் வசித்து வந்தார்.

    இந்த குடியிருப்பில் நயனாசூரியன் மட்டும் தனியாக குடியிருந்து வந்தார். அங்கிருந்து காரில் தினமும் படப்பிடிப்பிற்கு சென்று விட்டு இரவு தனது குடியிருப்புக்கு திரும்பி விடுவார்.

    இந்த நிலையில் நேற்று காலை நயனாசூரியனின் செல்போனுக்கு அவரது தோழிகள் போன் செய்தனர். பலமுறை முயற்சி செய்தபோதும், அவரை தொடர்பு கொள்ள முடிய வில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அவரது தோழிகள் இதுபற்றி திருவனந்தபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், நயனாசூரியன் வசித்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று பார்த்தபோது கதவு பூட்டப்பட்டிருந்தது.

    கதவை தட்டியபோது, திறக்கப்படாததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அப்போது அங்கு படுக்கை அறையில் டைரக்டர் நயனாசூரியன் பிணமாக கிடந்தார்.



    அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு அவரது உடல் திருவனந்தபுரம் மானவீயம் பகுதியில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    ஏராளமான திரையுலகினர் அங்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இதை தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. நயனாசூரியன் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தோழிகள் கூறி உள்ளனர். இதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நயனாசூரியன், பிரபல மலையாள டைரக்டர்கள் லெனின் ராஜேந்திரன், ஜித்து ஜோசப், பிஜு ஜோசப் ஆகியோரிடம் பல படங்களில் உதவி டைரக்டராக பணியாற்றி உள்ளார். பிரபல நடிகர் மம்முட்டி நடித்த படத்திலும் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். 2017-ம் ஆண்டு மைதிலி-விஜய்பாபு நடித்த படத்தையும் இயக்கி உள்ளார். சமீபத்தில் பக்ஷி களுடே மணம் என்ற சினிமாவுக்கு திரைக்கதை எழுதி இயக்கினார்.

    இவரது சொந்த ஊர் கொல்லம் அருகே உள்ள கருநாகப்பள்ளி ஆகும்.
    முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வயது பற்றி கவலை இல்லை என்று கூறியிருக்கிறார். #KajalAggarwal
    இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடன் நடிப்பதை ஆர்வமுடன் எதிர்பார்த்த காஜல் அகர்வால், அந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளி போவதால் சற்று வருத்தம் அடைந்துள்ளார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் ‘எந்த துறையை சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் அவர்களிடம் உங்கள் வயது என்ன என்று கேட்டால் சொல்ல தயங்குவார்கள்.

    அதிலும் குறிப்பாக நடிகைகள் வயதை பற்றி பேசவே மாட்டார்கள். நான் அப்படி கிடையாது. என் நிஜ வயதை மறைக்க விரும்பவில்லை. வயதை வெளிப்படையாக சொல்வதில் எனக்கு தயக்கம் இல்லை. படங்களில் தங்களை மிகவும் வயது குறைந்தவர்கள் போன்று காட்ட நடிகைகள் கஷ்டப்படுகிறார்கள். என்னிடம் வயதை கேட்டால் நிஜத்தை விட கூடுதலாக 10 ஆண்டை சேர்த்து சொல்லவும் நான் தயார்.



    சினிமாவில் நான் 10 ஆண்டுகளாக இருந்ததால் நிறைய அனுபவம் கிடைத்துள்ளது. வேறு எந்த துறையிலும் இந்த அளவுக்கு அனுபவம் கிடைக்காது. எனக்கு 30 ஆண்டு கால அனுபவம் 10 ஆண்டுகளில் கிடைத்துள்ளது. அதனால் வயது பற்றி கவலை இல்லை. எந்த பிரச்சனை வந்தாலும் பதட்டப்படாமல் நிதானமாக யோசித்து தீர்வு காணும் பக்குவம் வந்துவிட்டது.’ என்று கூறியுள்ளார்.
    ஸ்ரீதேவியின் புடவையை ஏலத்தில் விட்டு, அதில் வரும் பணத்தை தொண்டு நிறுவனத்துக்கு வழங்க ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். #Sridevi #BoneyKapoor
    தமிழ் படங்களில் அறிமுகமாகி இந்தி சினிமா வரை சென்று கலக்கியவர் ஸ்ரீதேவி. இந்திய அளவில் முன்னணி நடிகையாக விளங்கிய ஸ்ரீதேவி இந்தி தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார்.

    கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி ஸ்ரீதேவி துபாயில் உயிர் இழந்தார். இதையொட்டி கடந்த பிப்ரவரி 14-ந்தேதியன்று சென்னை சி.ஐ.டி. நகரில் உள்ள போனி கபூர் இல்லத்தில் ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் அஜித் குமார், அவரது மனைவி ஷாலினி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நேற்று ஸ்ரீதேவியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    இதையொட்டி ஸ்ரீதேவியின் விருப்பமான புடவைகளில் ஒன்றான கோட்டா வகை புடவையை ஏலத்துக்கு விட்டு, அதில் கிடைக்கும் பணத்தைத் தொண்டு நிறுவனத்துக்கு வழங்க ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரும், அவரது குடும்பத்தினரும் முடிவு செய்திருந்தனர்.



    இந்த ஏலத்தை நடத்து வதற்கு பரிசேரா இணைய தளத்தை ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் தேர்வு செய்தனர். ஏலத்தில் புடவைக்கு ஆரம்ப விலையாக ரூ.40,000 நிர்ணயிக்கப்பட்டது. இந்த புடவைக்கு அதிகபட்சமாக ரூ.1.30 லட்சத்துக்கு விலை கேட்கப்பட்டது. இந்த விலையே இறுதி செய்யப்பட்டு விட்டதாக இணையதளம் தெரிவித்துள்ளது.

    இந்த ஏலத்தில் கிடைக்கும் பணத்தை ‘கன்சர்ன் இந்தியா பவுண்டே‌ஷன்’ என்ற தொண்டு நிறுவனத்துக்கு வழங்க ஸ்ரீதேவி குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். பெண்கள், குழந்தைகள், முதியோர், ஏழைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக இந்தப் பணம் பயன் படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தமிழ் சினிமாவில் கமல், சரத்குமார், அர்ஜுன் ஆகியோரின் மகள்களை தொடர்ந்து, பல நடிகர்களின் மகள்கள் அறிமுகமாக இருக்கிறார்கள். #Kamal #Sarathkumar
    சினிமாவில் அறிமுகமாக வாரிசு என்ற பின்புலம் உதவியாக இருக்கும். ஒரு நடிகரின் மகன் வாரிசாக அறிமுகமானால் அந்த நடிகரை மனதில் வைத்து வாரிசு நடிகரிடமும் எதிர்பார்ப்பு ஏற்படும். மகனை சினிமாவில் நடிக்க வைக்க விரும்பும் சினிமா பிரபலங்கள் பெரும்பாலும் தங்கள் மகள்களை வாரிசுகளாக அறிமுகப்படுத்தவோ படங்களில் நடிக்க வைக்கவோ யோசிப்பார்கள்.

    தற்போது அந்த நிலை மாறிவருகிறது. தமிழ் சினிமாவை வாரிசு நடிகைகள் ஆக்கிரமித்து வருகிறார்கள். கமல்ஹாசனின் மகள்கள் சுருதி ஹாசன், அக்‌‌ஷரா ஹாசன், ராதா மகள்களான கார்த்திகா, துளசி, சரத்குமார் மகள் வரலட்சுமி, அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா, ரவிசந்திரனின் பேத்தி தான்யா, மேனகா சுரேஷ் மகள் கீர்த்தி சுரேஷ் என கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமான வாரிசு நடிகைகள் அறிமுகமாகியுள்ளனர்.



    தற்போது இந்த வரிசையில் இயக்குனர் பிரியதர்‌ஷனின் மகள் கல்யாணி பிரியதர்‌ஷன், நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தியும் இணைந்துள்ளனர். கல்யாணி பிரியதர்‌ஷன் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மித்ரன் இயக்கும் படத்தில் அறிமுகமாகிறார். கீர்த்தி அருண் பாண்டியன் புதுமுகம் தர்‌ஷனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
    பிரியதர்ஷினி இயக்கும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை படம் பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #JayalalithaBioPic
    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பாரதிராஜா, லிங்குசாமி, பிரியதர்ஷினி ஆகியோர் படமாக எடுக்கப்போவதாக அறிவித்தனர். கவுதம் மேனன் இணைய தொடராக எடுத்து வருகிறார்.

    பிரியதர்ஷினி இயக்கும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்துக்கு ‘த அயர்ன் லேடி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ஜெயலலிதா நினைவு நாளான கடந்த டிசம்பர் 5-ந்தேதி வெளியிடப்பட்டது. ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்கிறார். இந்த படத்துக்கு தீவிர ஆராய்ச்சிகள் செய்து பிரியதர்ஷினி திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்.

    இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 20-ந்தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக அறிவித்தார். படத்துக்கான திரைக்கதை புத்தகத்தையும் பதிவிட்டுள்ளார்.

    கவுதம் மேனன் இயக்கும் இணைய தொடரில் ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்கிறார். சசிகலாவாக விஜி சந்திரசேகர் நடிக்கிறார். விஜய் இயக்கும் படத்துக்கு ‘தலைவி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். பாகுபலி படத்தின் கதையாசிரியர் விஜயேந்திர பிரசாத் இணை கதாசிரியராக இணைந்திருக்கிறார்.
    புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சுப்பிரமணியனின் குடும்பத்திற்கு நடிகர் ஹரிஷ் கல்யாண் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். #HarishKalyan #PulwamaAttack
    வெற்றி படங்களில் நடித்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் ‘பியார் பிரேமம் காதல்’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியை சேர்ந்த ராணுவ வீரர் சுப்பிரமணியனின் இல்லத்திற்கு நேரில் சென்றிருக்கிறார். 

    அங்கு சுப்பிரமணியனின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின், அவரது மனைவி பிரியா மற்றும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.



    அப்போது பேசிய அவர், “தீவிரவாதத்திற்கு எதிராக ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைய வேண்டும்” என்று கூறினார். #HarishKalyan #PulwamaAttack
    பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து, ராஜமவுலி இயக்கி வரும் புதிய படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். #Rajamouli #RRR
    ‘பாகுபலி’ படத்தைத் தொடர்ந்து ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. முதல்கட்டப் படப்பிடிப்பில் பிரம்மாண்டமான சண்டைக் காட்சி ஒன்றை படமாக்கினார். சுமார் 300 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகும் இப்படத்தை டி.வி.வி. தான்யா தயாரித்து வருகிறார்.

    தற்போது ராம்சரண் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் முக்கியமான கவுரவ கதாபாத்திரத்தில் இந்தி திரையுலகின் முன்னணி நடிகர் அஜய் தேவ்கன் நடிக்க உள்ளார். இதற்கான படப்பிடிப்பு விரைவில் நடைபெறவுள்ளது. ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க மறுத்த அஜய் தேவ்கன், ராஜமவுலி இயக்கும் படத்தை மட்டும் ஒப்புக் கொண்டுள்ளார்.



    கவுரவ கதாபாத்திரம் தான் என்பதால் மட்டுமே ஒப்புக் கொண்டுள்ளதாக அஜய் தேவ்கன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘நான் ஈ’ இந்தி பதிப்புக்கு பின்னணிக் குரல் கொடுத்தவர் அஜய் தேவ்கன். அந்த படத்திலிருந்தே ராஜமவுலி, அஜய் தேவ்கன் இருவரும் நட்பாகப் பழகி வருகிறார்கள்.
    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் - ஷ்ரத்தா ஸ்ரீநாத், வித்யா பாலன் நடிப்பில் உருவாகும் தல 59 படத்தில் நடிக்க பிரபல மூத்த நடிகர் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Thala59 #AjithKumar
    அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அபிராமி வெங்கடாசலம் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

    தற்போது இந்த கூட்டணியில் நடிகர் டெல்லி கணேஷ் இணைகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ‘ஜனா’, ‘பகைவன்’, ‘தொடரும்‘ ஆகிய படங்களில் டெல்லி கணேஷ் மற்றும் அஜித் சேர்ந்து நடித்துள்ளனர். தற்போது, ‘தல 59’ படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.



    இந்த படம் மே1-ந் தேதி அஜித்தின் பிறந்தநாள் அன்று ரிலீசாகும் என்று செய்திகள் வருகின்றன. மே 1-ந் தேதி சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்த `மிஸ்டர்.லோக்கல்' படமும் ரிலீசாக இருக்கிறது. இதன் மூலம் அஜித், சிவகார்த்திகேயன்  படங்கள் நேரடியாக மோதும் வாய்ப்பு உருவாகி உள்ளது. #Thala59 #AjithKumar #ThalaAjith #VidyaBalan #ShraddhaSrinath #DelhiGanesh

    ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `பூமராங்' படத்தின் முன்னோட்டம். #Boomerang #Atharvaa #MeghaAkash #Indhuja
    மசாலா பிக்ஸ் நிறுவனம் சார்பில் கண்ணன் தயாரித்துள்ள படம் `பூமராங்'.

    அதர்வா நாயகனாகவும், மேகா ஆகாஷ் நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில் இந்துஜா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், சுஹாசினி மணிரத்னம், மகேந்திரன், உபேன் பட்டேல், நாராயண் லக்கி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இசை - ரதன், ஒளிப்பதிவு - பிரசன்ன எஸ்.குமார், படத்தொகுப்பு - ஆர்.கே.செல்வா, கலை - சிவ யாதவ், சண்டைப்பயிற்சி - ஸ்டண்ட் சில்வா, பாடல்கள் - விவேக், நடனம் - பிருந்தா, ஆடை வடிவமைப்பு - பூர்னிமா, தயாரிப்பு - ஆர்.கண்ணன், எழுத்து, இயக்கம் - ஆர்.கண்ணன்.



    படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஆர்.கண்ணன் பேசியதவது, “கடைக்குட்டி சிங்கம் படத்துக்கு பிறகு விவசாயத்தை பற்றிய ஒரு படம் பூமராங். 130 கோடி மக்கள் இருந்தும் நஷ்டத்தில் போகிற ஒரு துறை விவசாய துறை தான். அதை படம் பேசும். இது கமர்சியல் படமாகவும், நல்ல கருத்தை சொல்லும் படமாகவும் இருக்கும். அதர்வா இந்த படத்தில் அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்“.

    அதர்வா பேசும்போது “நாம் நல்லதோ, கெட்டதோ எது செய்தாலும் அது ஒரு நாள் நம்மை வந்து சேரும் என்பதுதான் பூமராங். கண்ணன் தயாரிப்பாளர்களின் இயக்குநர் என்பது உண்மை தான் என்றார். #Boomerang #Atharvaa #MeghaAkash

    பூமராங் டிரைலர்:

    பி.எஸ்.மித்ரன் இயக்கும் எஸ்.கே.15 படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் ஒப்பந்தமான நிலையில், மற்றொரு நடிகையும் ஒப்பந்தமாகி இருக்கிறார். #SK15 #Sivakarthikeyan #KalyaniPriyadharsan
    `மிஸ்டர்.லோக்கல்' படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த படத்தில் நடித்து வருகிறார். 

    அடுத்ததாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் அரசியல் கலந்த த்ரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். சிவகார்த்திகேயனின் 15-வது படமாக உருவாகும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவிருக்கிறார். இந்த நிலையில், இந்த படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவானா ஒப்பந்தமாகியிருக்கிறார். இவர் ஏற்கனவே நாச்சியார் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவானாவின் பிறந்தநாளான இன்று இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அர்ஜூன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார். #SK15 #Sivakarthikeyan #PSMithran #KalyaniPriyadharsan #Ivana

    ×