என் மலர்tooltip icon

    இது புதுசு

    • புதிய பிஎம்டபிள்யூ கார் மொத்தத்தில் 500 யூனிட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
    • இந்த காரில் 4.4 லிட்டர் வி8 டுவின் டர்போ ஹைப்ரிட் எஞ்சின் வழங்கப்படுகிறது.

    பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் எஸ்யுவி-இன் புது வெர்ஷனை அறிமுகம் செய்தது. புது வெர்ஷன் XM லேபெல் என அழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ. 3 கோடியே 15 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது பிஎம்டபிள்யூ XM ஸ்டாண்டர்டு வெர்ஷன் விலையை விட ரூ. 55 லட்சம் அதிகம் ஆகும்.

    புதிய பிஎம்டபிள்யூ XM லேபெல் எடிஷன் மாடல் உலகளவில் 500 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. இதில் இந்தியாவில் ஒரே யூனிட் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. புதிய காரின் கிட்னி கிரில், விண்டோ லைன், அலாய் வீல்கள், ரியர் டிஃப்யூசர்-ஐ சுற்றி சிவப்பு நிற ஹைலைட் செய்யப்பட்டு உள்ளது.

     


    வெளிப்புறம் பிஎம்டபிள்யூ இன்டிவிடியூவல் ஃபுரொஸென் கார்பன் பிளாக் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் 22 இன்ச் அலாய் வீல்களை கொண்டிருக்கிறது. உள்புறத்தில் 14.9 இன்ச் அளவில் கர்வ்டு டிஸ்ப்ளே, ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, மல்டி ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், கஸ்டமைஸ் செய்யக்கூடிய ஆம்பியன்ட் லைட்டிங், அடாப்டிவ் M சஸ்பென்ஷன்கள், பொயெர்ஸ் அன்ட் வின்கின்ஸ் 20-ஸ்பீக்கர் கொண்ட மியூசிக் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

    இதுவவரை பிஎம்டபிள்யூ உற்பத்தி செய்ததிலேயே மிகவும் சக்திவாய்ந்த கார் மாடல் என்ற பெருமையை புதிய பிஎம்டபிள்யூ XM லேபெல் பெற்றிருக்கிறது. இந்த காரில் 4.4 லிட்டர் வி8 டுவின் டர்போ ஹைப்ரிட் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    இந்த யூனிட் 748 ஹெச்பி பவர், 1000 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.8 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. 

    • கார்னிவல் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 2 லட்சம் ஆகும்.
    • இந்த கார் ஒற்றை வேரியண்டில் மட்டுமே விற்பனைக்கு வருகிறது.

    கியா இந்தியா நிறுவனத்தின் முற்றிலும் புதிய கார்னிவல் மாடல் கார் அடுத்த மாதம் முதல் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், புதிய கார்னிவல் மாடலுக்கான முன்பதிவு பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. புதிய கியா கார்னிவல் மாடலுக்கான முன்பதிவுகள் வருகிற 16 ஆம் தேதி துவங்க இருக்கிறது. இதைத் தொடர்ந்து விற்பனை அக்டோபர் 3 ஆம் தேதி துவங்குகிறது.

    ஏற்கனவே புதிய கியா கார்னிவல் மாடலுக்கான முன்பதிவுகள் விற்பனை மையங்கள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது கியா இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வ முன்பதிவுகள் செப்டம்பர் 16 ஆம் தேதி துவங்கவுள்ளன. புதிய கார்னிவல் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 2 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய கியா கார்னிவல் மாடல் இரண்டடுக்கு சன்ரூஃப், இருக்கைகளை எலெக்ட்ரிக் முறையில் அட்ஜஸ்ட் செய்யும் வசதி, வென்டிலேஷன் மற்றும் கால் வைக்கும் பகுதி, பவர் ஸ்லைடிங் கதவுகள், 12 ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ் சவுண்ட் சிஸ்டம், இரட்டை கர்வ்டு டிஸ்ப்ளேக்கள் மற்றும் ADAS சூட் வழங்கப்படுகிறது.

     


    இந்த கார் ஒற்றை வேரியண்டில் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. முதற்கட்டமாக இந்த கார் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட உள்ளது. அதன்பிறகு, இந்த காரின் பாகங்கள் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு, இங்குள்ள ஆலையில் அசெம்பில் செய்யப்படுகிறது.

    புதிய கியா கார்னிவல் மாடலில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் வழங்கப்படும் என்று தெரிகிறது. சர்வதேச சந்தையில் இந்த கார் 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் ஹைப்ரிட் மற்றும் 3.5 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சினுடன் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் புதிய கியா கார்னிவல் மாடலின் விலை ரூ. 50 லட்சம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. கியா கார்னிவல் மாடலை தொடர்ந்து கியா EV9 மாடலின் விலையும் அறிவிக்கப்பட உள்ளது.

    • அந்நிறுவனத்தின் மூன்றாவது எலெக்ட்ரிக் கார் மாடலாக புதிய வின்ட்சர் அறிமுகம்.
    • எம்ஜி வின்ட்சர் மாடலில் 38 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.

    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது வின்ட்சர் EV மாடலை அறிமுகம் செய்தது. ரூ. 9.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள எம்ஜி வின்ட்சர் EV மூன்று வேரியண்ட்கள், நான்குவித நிறங்களில் கிடைக்கிறது. இந்திய சந்தையில் கொமெட் மற்றும் ZS EV மாடல்கள் வரிசையில், அந்நிறுவனத்தின் மூன்றாவது எலெக்ட்ரிக் கார் மாடலாக புதிய வின்ட்சர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய வின்ட்சர் மாடலின் வெளிப்புறம் எம்ஜி சிக்னேச்சர் ஹெட்லேம்ப்கள், பக்கவாட்டில் 18 இன்ச் அளவில் க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்ட அலாய் வீல்கள், ஃபுளோட்டிங் ரூஃப்லைன், பாப்-அவுட் டோர் ஹேண்டில்கள் வழங்கப்படுகிறது. பின்புறம் கனெக்டெட் டெயில் லேம்ப்கள், க்ரோம் கார்னிஷ் செய்யப்பட்டுள்ளது.


     



    உள்புறம் பிளாக் மற்றும் பெய்க் ஃபினிஷ் செய்யப்பட்ட இன்டீரியர், 15.6 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. கொமெட் மாடலில் உள்ள ஓஎஸ் புதிய வின்ட்சர் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்கள், பின்புற இருக்கைகளில் ஏசி வென்ட்கள், மத்தியில் ஆர்ம்ரெஸ்ட் வழங்கப்படுகிறது.

    புதிய வின்ட்சர் மாடலில் வயர்லெஸ் போன் மிரரிங், வயர்லெஸ் சார்ஜிங் வசதி, 360 டிகிரி கேமரா, கிளைமேட் கண்ட்ரோல், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், பின்புறம் ரிக்லைனிங் இருக்கை, பானரோமிக் சன்ரூஃப், வாய்ஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகள் உள்ளன.

    எம்ஜி வின்ட்சர் மாடலில் 38 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 331 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது. இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார்கள் 134 ஹெச்பி பவர், 200 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன.

    • புதிய செல்டோஸ் மாடல் இருவித எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    • புதிய செல்டோஸ் மாடல் 3 நிறங்களில் கிடைக்கிறது.

    கியா இந்தியா நிறுவனம் தனது செல்டோஸ், சொனெட் மற்றும் கரென்ஸ் மாடல்களின் கிராவிட்டி வேரியண்ட்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. செல்டோஸ் எஸ்யுவி மாடலில் இந்த வேரியண்ட் HTX வெர்ஷனின் மேல் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. இதன் விலை ரூ. 16 லட்சத்து 63 ஆயிரம் என துவங்குகிறது.

    புதிய செல்டோஸ் கிராவிட்டி மாடலில் டேஷ் கேமரா, 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வென்டிலேட்டெட் இருக்கைகள், போஸ் மியூசிக் சிஸ்டம், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ஆட்டோ ஹோல்டு, 17 இன்ச் அலாய் வீல்கள், ரியர் ஸ்பாயிலர், கிராவிட்டி பேட்ஜ் வழங்கப்படுகிறது.

    இந்த வேரியண்ட் கிளேசியர் வைட் பியல், அரோரா பிளாக் பியல் மற்றும் டார்க் கன் மெட்டல் ஆகிய நிறங்களில் மேட் ஃபினிஷ் உடன் கிடைக்கிறது. செல்டோஸ் கிராவிட்டி வேரியண்டில் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. டிரான்ஸ்மிஷனுக்கு 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் iMT யூனிட் வழங்கப்படுகிறது.

    • புதிய கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் ஏராளமான நிறங்களில் கிடைக்கிறது.
    • இந்த பைக்கிலும் 349சிசி சிங்கில் சிலிண்டர் எஞ்சின் கொண்டுள்ளது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் 2024 கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய கிளாசிக் 350 விலை ரூ. 2 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் புதிய நிறங்கள் மற்றும் அம்சங்களை கொண்டிருக்கிறது.

    2024 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மாடலில் முற்றிலும் புதிய எல்இடி ஹெட்லைட், பொசிஷன் லைட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது மோட்டார்சைக்கிளுக்கு ரெட்ரோ ஸ்டைல் தோற்றத்தை வழங்குகிறது. இத்துடன் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய கிளட்ச் பிரேக் லீவர்கள், கியர் பொசிஷன் இன்டிகேட்டர் மற்றும் யுஎஸ்பி டைப் சி சார்ஜர் வழங்கப்படுகிறது.

    இந்த மோட்டார்சைக்கிள் தற்போது எமிரால்டு, ஜோத்பூர் புளூ, கமாண்டோ சாண்ட், மெட்ராஸ் ரெட், மெடாலியன் பிரான்ஸ், சான்ட் கிரே மற்றும் ஸ்டெல்த் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதில் ஸ்டெல்த் பிளாக் நிற வேரியண்டில் மட்டுமே அலாய் வீல் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

    புதிய கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளிலும் 349சிசி, சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 20.2 ஹெச்பி பவர், 27 நியூட்டன் மீட்டன் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 

    • புது ஹெல்மெட் ப்ளூடூத் இன்டர்காம் சிஸ்டம் பிரீமியம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.
    • இதில் உள்ள பேட்டரியை முழு சார்ஜ் செய்தால் 16 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது.

    பெங்களூரை சேர்ந்த ஹார்டுவேர் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான ப்ளூஆர்மர் இந்திய சந்தையில் தனது அதிநவீன ஹெல்மெட் ப்ளூடூத் இன்டர்காம் சிஸ்டத்தை அறிமுகம் செய்தது. ப்ளூஆர்மர் C50 ப்ரோ என அழைக்கப்படும் புது இன்டர்காம் சிஸ்டம் டாப் என்ட் மாடல் என்பதால் பிரீமியம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

    அம்சங்களை பொருத்தவரை புதிய ப்ளூஆர்மர் C50 ப்ரோ மாடல் அனைத்து விதமான வானிலைகளின் போதும் பயன்படுத்தலாம். பிரத்யேக டிசைன், மவுன்டிங் பாயிண்ட் கொண்டிருக்கும் புது ஹெல்மெட் உறுதியான இன்டர்காம் சிஸ்டத்தை வழங்குகிறது. இதில் உள்ள மேக்டாக் சிஸ்டத்தில் பயனர்கள் மெயின் யூனிட்-ஐ மவுன்ட் செய்து கொள்ளலாம்.

    இதில் வழங்கப்பட்டுள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 16 மணி நேர்திற்கான பேக்கப் வழங்குகிறது. இதில் 2-ம் தலைமுறை மெஷ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது பயணங்களின் போது தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்துகிறது. இதில் கோப்ரோ சாதனத்திற்கு ஏற்ற வகையில் மல்டி-பாயிண்ட் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஹெல்மெட்டில் ரைடு ஆரா எனும் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் இரு லைட்களை கொண்டுள்ளது. இதனை சதாாரண லைட்களாகவும், எச்சரிக்கை லைட்களாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சிஸ்டத்திற்கு ஓவர் தி ஏர் அப்டேட்களும் வழங்க முடியும்.

    இந்திய சந்தையில் புதிய ப்ளூஆர்மர் C50 ப்ரோ மாடலின் விலை ரூ. 25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே ப்ளூஆர்மர் C30 மாடலை பயன்படுத்துவோர், அதனை கொடுத்துவிட்டு புதிய C50 ப்ரோ மாடலை வாங்கும் போது ரூ. 11 ஆயிரம் மட்டுமே செலுத்தினால் போதுமானது. இந்த சலுகை செப்டம்பர் 1 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்வோருக்கு மட்டுமே பொருந்தும். 

    • தார் ராக்ஸ் மாடல் இருவித எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    • தார் ராக்ஸ் மாடல் ஆட்டோமேடிக், மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தார் ராக்ஸ் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய 5 கதவுகள் கொண்ட தார் ராக்ஸ் மாடலின் விலை ரூ. 12 லட்சத்து 99 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டீசல் வேரியண்ட் விலை ரூ. 13 லட்சத்து 99 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய தார் ராக்ஸ் மாடலில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட எம்-ஸ்டேலியன் டர்போ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 160 ஹெச்பி பவர், 330 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

    இத்துடன் 2.2 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட, எம்ஹாக் டீசல் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த யூனிட் 150 ஹெச்பி பவர், 330 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இரு மாடல்களுடன் 6 ஸ்பீடு மஏனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

     


    2024 மஹிந்திரா தார் ராக்ஸ் மாடலில் புதிய கிரில், சி வடிவம் கொண்ட எல்இடி டிஆர்எல்கள், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், வட்ட வடிவம் கொண்ட ஃபாக் லைட்கள், டூயல் டோன் அலாய் வீல்கள், பின்புறம் எல்இடி டெயில் லைட்கள், டெயில்கேட்டில் ஸ்பேர் வீல் பொருத்தப்பட்டு இருக்கிறது.

    உள்புறம் புதிய 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, டிஜிட்டல் கலர் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வென்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள், பானரோமிக் சன்ரூஃப், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், பின்புற ஏசி வென்ட்கள் வழங்கப்படுகின்றன.

    இந்திய சந்தையில் புதிய தார் ராக்ஸ் மாடல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஹோண்டா எலிவேட், எம்ஜி ஆஸ்டர், மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா ஹைரைடர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • சிட்ரோயன் பசால்ட் மாடல் இருவித எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    • பசால்ட் மாடல் ஏராளமான வசதிகளை கொண்டுள்ளது.

    சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது பசால்ட் மாடலை அறிமுகம் செய்தது. புதிய பசால்ட் கூப் எஸ்யுவி விலை ரூ. 7 லட்சத்து 99 ஆயிரம் என துவங்குகிறது. இது அறிமுக விலை என சிட்ரோயன் தெரிவித்துள்ளது. இந்த காருக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 11,001 ஆகும்.

    புதிய பசால்ட் கூப் எஸ்யுவி மாடலின் அறிமுக விலை அக்டோபர் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 2024 சிட்ரோயன் பசால்ட் மாடலில் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் NA மற்றும் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வடிவங்களில் வழங்கப்படுகிறது.

     


    இவற்றில் டர்போ வெர்ஷன் 109 ஹெச்பி பவர், 190 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. NA பெட்ரோல் யூனிட் 80 ஹெச்பி பவர், 115 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இதில் NA பெட்ரோல் யூனிட் உடன் 5-ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இந்த காரில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், இரட்டை அடுக்கு கிரில், சில்வர் ஸ்கிட் பிலேட்கள், வட்ட வடிவ ஃபாக் லைட்கள், பிளாக்டு அவுட் ORVM-கள், B-பில்லர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் டூயல் டோன் அலாய் வீல்கள், ஸ்லோபிங் ரூஃப்லைன், ராப்-அரவுண்ட் டெயில் லைட்கள், ஷார்க் ஃபின் ஆன்டெனா வழங்கப்படுகிறது.

    அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • இதில் 7 இன்ச் TFT டிஸ்ப்ளே, ஆப்பிள் கார்பிளே வசதிகள் உள்ளன.
    • இந்த பைக்கில் 1890சிசி, V-டுவின் எஞ்சின் உள்ளது.

    இந்தியன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் 2024 ரோட்மாஸ்டர் எலைட் மாடல் ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த மாடல் இந்தியாவில் வெளியாகி உள்ளது. லிமிட்டெட் எடிஷன் மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த பைக் 1904 இந்தியன் கேமல்பேக்-ஐ பறைசாற்றும் வகையில் உள்ளது.

    புதிய இந்தியன் ரோட்மாஸ்டர் எலைட் விலை ரூ. 71 லட்சத்து 82 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில், இது நாட்டின் விலை உயர்ந்த மோட்டார்சைக்கிள் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த பைக் உலகம் முழுக்க 350 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ளன.

     

    இந்த பைக் பிரத்யேக 3-டோன் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. இதில் ஸ்டிரைக்கிங் ரெட் மற்றும் பிளாக் அக்சென்ட்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த பைக்கின் பியூவல் டேன்க், எஞ்சின் மற்றும் ஃபூட் ரெஸ்ட் ஆகியவற்றில் எலைட் பிரான்டிங் இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் கிளாஸ் பிளாக் டேஷ், பிளாக்டு அவுட் வின்ட்ஸ்கிரீன், கைகளால் பெயின்ட் செய்யப்பட்ட சிவப்பு நிற ஸ்டிரைப்கள் உள்ளன.

    புதி ரோட்மாஸ்டர் பைக்கில் 10-ஸ்போக்குகள் கொண்ட டைமன்ட் கட் அலாய் வீல்கள், மெட்சீலர் குரூயிஸ்டெக் டயர்களை கொண்டிருக்கின்றன. இதில் 7 இன்ச் TFT டிஸ்ப்ளே, ஆப்பிள் கார்பிளே, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், எல்இடி லைட்டிங் சிஸ்டம், எல்இடி கார்னெரிங் லைட்கள், 12 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    2024 ரோட்மாஸ்டர் எலைட் மாடலில் 1890சிசி, V-டுவின் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. இது 170 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த பைக் 412 கிலோ எடை கொண்டுள்ளது. 

    • இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சந்தையில் களமிறங்கியது.
    • இந்தியா தவிர மற்ற நாடுகளில் விற்பனை செய்து வந்தது.

    பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் வெளியிட்டது. இதன் விலை ரூ. 14 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் மூலம் பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சந்தையில் களமிறங்கி இருக்கிறது.

    இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வரும் பிஎம்டபிள்யூ தனது முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை மட்டும் தற்போதுதான் வெளியிட்டுள்ளது. பிஎம்டபிள்யூ CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்தியா தவிர மற்ற நாடுகளில் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    புதிய CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 31 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார் 41 ஹெச்பி பவர், 61 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தை 2.6 நொடிகளில் எட்டிவிடும். மேலும், மணிக்கு அதிகபட்சம் 120 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும்.

     



    இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பல ரைடிங் மோட்கள், 10.25 இன்ச் டிஎப்டி ஸ்கிரீன், டிராக்ஷன் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 8.5 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய பிஎம்டபிள்யூ CE 04 முழு சார்ஜ் செய்தால் 130 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டருடன் ஸ்டான்டர்டு மற்றும் ஃபாஸ்ட் சார்ஜர் ஆப்ஷன்களை பிஎம்டபிள்யூ வழங்குகிறது. ஸ்டான்டர்டு சார்ஜர் 4 மணி நேரத்திலும், பாஸ்ட் சார்ஜர் 1 மணி 40 நிமிடங்களிலும் பேட்டரியை சார்ஜ் ஏற்றிவிடும்.

    தற்போதைக்கு இந்த ஸ்கூட்டர் ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. இது இம்பீரியல் புளூ மற்றும் லைட் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கிய நிலையில், வினியோகம் விரைவில் துவங்கும் என்று தெரிகிறது.

    • பசால்ட் எஸ்யுவிக்கு முன்பதிவை எடுத்து வருகின்றனர்.
    • குரூயிஸ் கண்ட்ரோல் வசதி வழங்கப்படும்.

    சிட்ரோயன் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய கூப் எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய மாடல் பசால்ட் என்று அழைக்கப்படுகிறது. சிட்ரோயன் பசால்ட் மாடல் இந்தியாவில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    புதிய பசால்ட் கூப் எஸ்யுவி மாடல் வெளியீட்டுக்கு முன் இந்த காருக்கான முன்பதிவுகள் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது தேர்வு செய்யப்பட்ட விற்பனையாளர்கள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பசால்ட் எஸ்யுவிக்கு முன்பதிவை எடுத்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

     


    அதன்படி வாடிக்கையாளர்கள் ரூ. 25 ஆயிரம் முன்பணம் செலுத்தி புதிய சிட்ரோயன் பசால்ட் எஸ்யுவி-யை முன்பதிவு செய்து கொள்ளலாம். சமீபத்தில் இந்த காருக்கான டீசர்கள் வெளியிடப்பட்டன. அதில் புதிய கூப் எஸ்யுவி மாடலில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனள், 10.25 இன்ச் அளவு கொண்ட டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சில்டம், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் வசதிகள் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதேபோன்று புதிய காரில் வயர்லெஸ் சார்ஜர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி, டைப் சி சார்ஜிங் போர்ட்கள் மற்றும் குரூயிஸ் கண்ட்ரோல் வசதிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    புதிய சிட்ரோயன் பசால்ட் மாடலில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது. இது 109 ஹெச்பி பவர், 215 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

    இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் புதிய சிட்ரோயன் பசால்ட் மாடல் டாடா கர்வ் மாடலுக்கு போட்டியாக அமையும்.

    • குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முதலில் அறிமுகம் செய்யும் என தகவல்.
    • வாகனங்கள் எண்ணிக்கையை விரிவுப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. ஹீரோ நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் சந்திப்பின் போது அந்நிறுவன தலைமை அதிகாரி ஒருவர் இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.

    என்ட்ரி லெவல் பிரிவில், குறைந்த விலை மாடல், மிட் ரேஞ்ச் மாடல் உள்ளிட்டவைகளால் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் தனது வாகனங்கள் எண்ணிக்கையை விரிவுப்படுத்த உள்ளதாக அந்நிறுவன அதிகாரி தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதில் ஹீரோ நிறுவனம் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முதலில் அறிமுகம் செய்து, அதன்பிறகு மிட் ரேஞ்ச் மாடலை அறிமுகப்படுத்தும் என்று தெரிகிறது. புதிய மாடல் அந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் விடா வி1 பிளஸ் மாடலை விட குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    தற்போது இந்திய சந்தையில் ஓலா நிறுவனம் மட்டும்தான் குறைந்தவிலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (S1 X) விற்பனை செய்கிறது. இதைத் தொடர்ந்து பஜாஜ் செட்டாக் மற்றும் டிவிஎஸ் ஐகியூப் போன்ற மாடல்கள் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் முதல் மூன்று இடங்களில் உள்ளன.

    ஹீரோ நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்யும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை தற்போதுள்ள மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விட குறைவாக நிர்ணயம் செய்யப்படுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    ×