என் மலர்tooltip icon

    கார்

    • டொயோட்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலின் விலை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றன.
    • புதிய இன்னோவா ஹைகிராஸ் எம்பிவி மாடலில் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது.

    டொயோட்டா நிறுவனம் முற்றிலும் புதிய இன்னோவா ஹைகிராஸ் எம்பிவி மாடலை கடந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. எனினும், இந்த மாடலின் விலை அறிவிக்கப்படாமல் முன்பதிவு மட்டும் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் ஆகும். இந்த நிலையில் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் விற்பனை மையங்களை வந்தடைந்தன.

    இந்திய சந்தையில் இன்னோவா ஹைகிராஸ் மாடல் இருவித பெட்ரோல், மூன்று வித பெட்ரோல் ஹைப்ரிட் வெர்ஷன்களில் கிடைக்கிறது. மேலும் இந்த கார் ஏழு மற்றும் எட்டு பேர் பயணம் செய்யும் இருக்கைகளுடன் கிடைக்கிறது. இதன் விற்பனை 2023 ஜனவரி மாத மத்தியில் துவங்கும் என தெரிகிறது.

    2023 டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் 172 ஹெச்பி பவர், 187 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுகத்துகிறது. இத்துடன் மைல்டு ஹைப்ரிட் மோட்டார் இணைக்கப்பட்டு இருக்கிறது. இது 111 ஹெச்பி பவர், 206 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இத்துடன் CVT, E-CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 9.5 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் லிட்டருக்கு 21.1 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது. மேலும் காரின் ஃபியூவல் டேன்க்-ஐ முழுமையாக நிரப்பினால் 1097 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கும் என டொயோட்டா தெரிவித்து இருக்கிறது.

    Photo Courtesy: Missautologs

    • மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வந்த அல்டுராஸ் G4 எஸ்யுவி விற்பனையை சமீபத்தில் நிறுத்தியது.
    • கடந்த மாதம் இந்தியாவில் மஹிந்திரா விற்பனை செய்த கார் மாடல்களின் விவரங்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    மஹிந்திரா நிறுவனம் கடந்த மாதம் (நவம்பர் 2022) இந்தியாவில் 61 ஆயிரத்து 140 யூனிட்களை உற்பத்தி செய்து இருக்கிறது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 36 ஆயிரத்து 087 யூனிட்களை விட அதிகம் ஆகும். இதில் கடந்த மாதம் 51 ஆயிரத்து 181 யூனிட்களை மஹிந்திரா விற்பனை செய்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் மஹிந்திரா நிறுவனம் 37 ஆயிரத்து 001 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    கடந்த மாத விற்பனையை பொருத்தவரை மஹிந்திரா நிறுவனம் 4 ஆயிரத்து 605 XUV700 டீசல் யூனி்ட்களை விற்பனை செய்தது. இத்துடன் 1,096 பெட்ரோல் யூனிட்கள் விற்பனை செய்தது. இதே போன்று ஸ்கார்பியோ சீரிஸ் (ஸ்கார்பியோ கிளாசிக் மற்றும் ஸ்கார்பியோ N) 4 ஆயிரத்து 181 பெட்ரோல் யூனிட்களும், 2 ஆயிரத்து 274 டீசல் யூனிட்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

    மஹிந்திரா தார் மாடலை பொருத்த வரை கடந்த மாதம் 3 ஆயிரத்து 759 டீசல் யூனிட்களும், 228 பெட்ரோல் யூனிட்களும் விற்பனையாகி இருக்கின்றன. XUV300 மாடலின் டீசல் மற்றும் பெட்ரோல் வெர்ஷன்கள் முறையே 3 ஆயிரத்து 108 மர்றும் 2 ஆயிரத்து 795 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

    இவை தவிர மஹிந்திரா பொலிரோ மாடலில் 7 ஆயிரத்து 984 யூனிட்களும், மராசோ மாடலில் 201 யூனிட்களும் விற்பனையாகின. கடந்த மாதத்தில் அல்டுராஸ் G4 மற்றும் KUIV100 Nxt பெட்ரோல் மாடல்கள் முறையே ஐந்து மற்றும் இரண்டு யூனிட்கள் விற்பனையாகின.

    • எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் புதிய கார் மாடலை அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • இந்திய சந்தையில் பல்வேறு கார் உற்பத்தியாளர்கள் தங்களின் வாகன விலையை உயர்த்தி வருகின்றன.

    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. இந்த விலை உயர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி அமலுக்கு வருகிறது. இம்முறை எம்ஜி கார்களின் விலை ரூ. 90 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட இருக்கிறது.

    இந்திய சந்தையில் எம்ஜி மோட்டார்ஸ் மட்டுமின்றி மாருதி சுசுகி, கியா இந்தியா, ரெனால்ட் இந்தியா, ஆடி இந்தியா, மெர்சிடிஸ் பென்ஸ், ஜீப் போன்ற நிறுவனங்களும் தங்களின் வாகன விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கின்றன. பெரும்பாலான கார் உற்பத்தியாளர்களும் ஆண்டு துவக்கத்திலேயே விலை உயர்வு அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளன. தொடர்ந்து அதிகரிக்கும் உற்பத்தி செலவீனங்கள், உதிரி பாகங்கள் விலையை உயர்வே வாகன விலை அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது.

    விலை உயர்வு தவிர எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஜனவரி 5 ஆம் தேதி புதிய மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த கார் எம்ஜி ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடலாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. இத்துடன் ஹெக்டார் பிளஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலும் அறிமுகம் செய்யப்படலாம். இரு கார்களை தொடர்ந்து எம்ஜி நிறுவனம் ஏர் EV எலெக்ட்ரிக் காரையும் அறிமுகம் செய்கிறது.

    புதிய எம்ஜி ஏர் EV இந்திய சந்தையில் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் மாடலாக இருக்கும். தற்போது எம்ஜி நிறுவனம் ZS EV எலெக்ட்ரிக் கார் மாடலை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. புதிய எம்ஜி ஏர் EV விலை இந்தியாவில் ரூ. 10 லட்சத்தில் தொடங்கி அதிகபட்சம் ரூ. 15 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த மாடல் டாடா டியாகோ EV மற்றும் சிட்ரோயன் eC3 கார்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

    • ஆடி நிறுவனத்தின் Q2 மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் சர்வதேச சந்தையில் இருந்து நீக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • ஆடி நிறுவனத்தின் Q3 மாடல் இந்தியாவில் அந்நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் எஸ்யுவி-ஆக மாறுகிறது.

    ஆடி இந்தியா நிறுவம் தனது Q2 ஆடம்பர காம்பேக்ட் எஸ்யுவி மாடலை சத்தமின்றி தனது வலைதளத்தில் இருந்து நீக்கி இருக்கிறது. இந்திய சந்தையில் ஆடி Q2 மாடல் சிபியு முறையில் கொண்டுவரப்பட்டது. இந்தியாவுக்காக ஒதுக்கப்பட்ட Q2 மாடல்கள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி உலக சந்தையிலும் ஆடி Q2 உற்பத்தி படிப்படியாக நிறுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

    வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து இந்தியாவில் ஆடி Q2 விற்பனை முடிவுக்கு வந்துள்ளது. மேலும் ஆடி நிறுவனம் முற்றிலும் புதிய Q3 மாடலை இந்திய சந்தையில் ஏற்கனவே அறிமுகம் செய்துவிட்டது. அந்த வகையில் புதிய தலைமுறை ஆடி Q3 மாடல் இந்திய சந்தையில் ஆடி நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் எஸ்யுவி-ஆக இருக்கும் என தெரிகிறது. முன்னதாக இந்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் ஆடி Q2 மாடல் நிறுத்தப்படும் என ஆடி ஏற்கனவே அறிவித்து இருந்தது.

    ஆடி நிறுவனம் பெரிய பிரீமியம் கிராஸ்ஓவர் மற்றும் எஸ்யுவி மாடல்கள் மீது அதிக கவனம் செலுத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்திய சந்தையில் ஆடி Q2 மாடல் அக்டோபர் 2020 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எஸ்யுவி மாடல் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே என்ஜின் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டிகுவான் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 190 ஹெச்பி பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் வகையில் டியூன் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 6.5 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 228 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

    • சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய எலெக்ட்ரிக் காரின் பெயர் மற்றும் வெளியீடு பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

    சிட்ரோயன் இந்தியா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனத்திற்கான முதல் டீசரை வெளியிட்டு உள்ளது. இந்திய சந்தையில் சிட்ரோயன் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் சிட்ரோன் C3 ஹேச்பேக் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் சிட்ரோயன் eC3 எலெக்ட்ரிக் எனும் பெயரில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. மேலும் இந்த எலெக்ட்ரிக் கார் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

    தற்போதைய டீசரில் புதிய கார் பற்றிய வேறு விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை. எனினும், அதிக தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் வரும் வாரங்களில் புதிய சிட்ரோயன் காருக்கான மேலும் சில டீசர்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இதன் இந்திய வெளியீட்டு நிகழ்வு அடுத்த மாதம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. முந்தைய தகவல்களில் சிட்ரோயன் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் காரை மார்ச் 2023-க்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என கூறப்பட்டது.

    சிட்ரோயன் C3 ரெகுலர் மாடலை போன்றே புதிய ஆல்-எலெக்ட்ரிக் eC3 மாடலும் பிரீமியம் ஹேச்பேக் பிரிவில் நிலைநிறுத்தப்படும் என தெரிகிறது. மேலும் இந்த எலெக்ட்ரிக் காரின் ஸ்பை படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில், முன்னதாக இந்த கார் மகாராஷ்டிரா மாநிலத்தின் பூனே பகுதி அருகில் உள்ள சார்ஜிங் மையத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின.

    இதில் காரின் பின்புறம் மட்டுமே இடம்பெற்று இருந்தது. டெஸ்டிங் செய்யப்படும் காரில் எவ்வித மறைப்பும் செய்யப்படவில்லை. தோற்றத்தில் சிட்ரோயன் eC3 எலெக்ட்ரிக் மாடல் சிட்ரோயன் C3 பெட்ரோல் வெர்ஷனை போன்றே காட்சியளித்தது. இந்த எலெக்ட்ரிக் காரின் தொழில்நுட்ப விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனினும், புதிய சிட்ரோயன் eC3 எலெக்ட்ரிக் மாடல் இந்திய சந்தையில் குறைந்த விலை எலெக்ட்ரிக் காராக அறிமுகம் செய்யப்படலாம்.

    Photo Courtesy: teambhp

    • லேண்ட் ரோவர் நிறுவனத்தின் புதிய ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் இந்தியாவில் இருவித என்ஜின்கள், நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • புதிய ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடலின் இந்திய விலை ரூ. 1 கோடியே 64 லட்சத்தில் இருந்து துவங்குகிறது.

    ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் இந்த ஆண்டு தனது மாடல்களை அப்டேட் செய்தது. இதில் 2022 ரேன்ஜ் ரோவர் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் அறிமுகமானது. இந்திய சந்தையில் புதிய ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் இருவித என்ஜின், நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    இந்த நிலையில், 2022 ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடலின் டெலிவரி இந்தியாவில் துவங்கி விட்டதாக ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடலின் விலை ரூ. 1 கோடியே 64 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

    2022 ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடலில் மிக மெல்லிய எல்இடி ஹெட்லைட்கள், ஃபிலஷ் ஃபிட் டோர் ஹேண்டில்கள், கன்மெட்டல் ஃபினிஷ் செய்யப்பட்ட அலாய் வீல்கள், டூயல் டோன் பெயிண்ட் செய்யப்பட்டு இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை புது மாடலில் 13.1 இன்ச் பிவி ப்ரோ டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முழுமையான டிஜிட்டல் 13.7 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் பானரோமிக் சன்ரூஃப், ஆம்பியண்ட் லைட்டிங், பவர்டு கூல்டு/ஹீடெட் முன்புற இருக்கைகள், ஏர் பியூரிஃபயர், 23 ஸ்பீக்கர் கொண்ட மெரிடியன் ஸ்டீரியோ சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்போர்ட் மாடல் 3.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 3.0 டீசல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. செயல்திறனை பொருத்தவரை பெட்ரோல் என்ஜின் 394 ஹெச்பி பவர், 550 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    டீசல் என்ஜின் 346 ஹெச்பி பவர், 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இரு என்ஜின்களுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் டெரைன் ரெஸ்பான்ஸ் 2 ஆஃப்-ரோடு ஹார்டுவேர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய M340i ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஒட்டுமொத்தமாக கூர்மையான தோற்றம் கொண்டிருக்கிறது.
    • இதன் கேபின் முழுமையாக மாற்றப்பட்டு, புதிதாக வளைந்த ஸ்கிரீன் செட்டப் கொண்டிருக்கிறது.

    2022 பிஎம்டபிள்யூ M340i ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய பிஎம்டபிள்யூ M340i மாடலின் விலை ரூ. 69 லட்சத்து 20 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 2022 பிஎம்டபிள்யூ M340i ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ஸ்டைலிங் அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளது. இதன் கேபின் பகுதியும் மாற்றப்பட்டு, தற்போது அதிநவீன வளைந்த ஸ்கிரீன் லே-அவுட் கொண்டிருக்கிறது.

    இதில் இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீன் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய M340i மாடலுக்கான டெலிவரி ஜனவரி மாத வாக்கில் துவங்க இருக்கிறது. டிசைனை பொருத்தவரை புது கார் முன்பை விட அதிக மஸ்குலர் மற்றும் டிஸ்டிண்டிவ் தோற்றம் கொண்டுள்ளது. இதன் கிட்னி கிரில் கிளாஸி பிளாக் மற்றும் க்ரோம் ஃபிரேம், மெஷ் டிசைன் கொண்டிருக்கிறது.

    இதன் கிரில் பகுதியில் மெல்லிய ஹெட்லைட்கள், கூர்மையான எல்இடி டிஆர்எல்-கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் அடாப்டிவ் எல்இடி ஹெட்லைட்கள், புளூ அக்செண்ட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. முன்புற பம்ப்பர் ஸ்போர்ட் தோற்றம் மற்றும் ஏர் இண்டேக்குகளை கொண்டிருக்கிறது. டெயில் லைட்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    புதிய பிஎம்டபிள்யூ M340i ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 3.0 லிட்டர் இன்லைன் 6 சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் மற்றும் மைல்டு ஹைப்ரிட் அசிஸ்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 369ஹெச்பி பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் குறைந்த விலை ஹேச்பேக் காராக நானோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
    • டாடா நானோவின் எலெக்ட்ரிக் வடிவம் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் நானோ காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ரத்தன் டாடாவின் கனவு திட்டமாக உருவாக்கப்பட்ட கார் டாடா நானோ. இந்திய சந்தையில் டாடா நானோ கார் பல லட்சம் பேரின் கார் வாங்க வேண்டும் என்ற கனவை பூர்த்தி செய்த பெருமையை கொண்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் நானோ கார் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டு விட்டது.

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் நானோ காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. டாடா பாசஞ்சர் எலெக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையின் நான்கு சக்கரங்கள் பிரிவில் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. அந்த வகையில் பட்ஜெட் விலையில் எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    இதையொட்டி வெளியாகி இருக்கும் தகவல்களில் டாடா நானோ கார் அந்றுவனத்தின் எண்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் வாகனமாக அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. டாடா நானோ எலெக்ட்ரிக் வெர்ஷன் பற்றிய தகவல்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. எனினும், இம்முறை இது பற்றிய விவரங்கள் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

    டாடா நானோவின் X3 பிளாட்ஃபார்ம் கொண்டு அதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் உருவாக்கப்படும் என கூறப்படுகிறது. இதன் மோனோக் சேசிஸ் தற்போதைய பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட வேண்டும். சஸ்பென்ஷன் மற்றும் டயர் செட்டப் உள்ளிட்டவைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

    இது பற்றிய திட்டத்தில் ஆர்வம் செலுத்தும் பட்சத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழகத்தின் சென்னையில் உள்ள ஃபோர்டு மறைமலைநகர் ஆலையை கைப்பற்றுவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் கூறப்படுகிறது. "அனுமானம் மற்றும் எதிர்கால வாகனங்கள் பற்றி டாடா மோட்டார்ஸ் எவ்வித கருத்தையும் டாடா மோட்டார்ஸ் தெரிவிக்காது," என தனியார் செய்தி நிறுவன கேள்விக்கு டாடா நிறுவன செய்தி தொடர்பாளர் பதில் அளித்துள்ளார்.

    • மஹிந்திரா நிறுவனத்தின் கார் மாடல்களுக்கு டிசம்பர் மாத சலுகை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    • சமீபத்தில் தான் மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ Z4 வேரியண்டின் வினியோகத்தை துவங்கி இருக்கிறது.

    இந்தியாவில் இயங்கி வரும் தேர்வு செய்யப்பட்ட சில மஹிந்திரா விற்பனை மையங்களில் இம்மாதம் முழுக்க அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இவற்றை வாடிக்கையாளர்கள் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் இலவச அக்சஸரீக்கள் வடிவில் பெற்றுக் கொள்ளலாம்.

    மஹிந்திரா XUV300 பெட்ரோல் மாடலுக்கு ரூ. 29 ஆயிரம் வரை தள்ளுபடி, ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 4 ஆயிரம் வரை கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் வரையிலான அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன. பொலேரோ மாடலை வாங்குவோர் ரூ. 6 ஆயிரத்து 500 தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 3 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் ரூ. 8 ஆயிரத்து 500 வரையிலான அக்சஸரீக்களை பெறலாம்.

    மஹிந்திரா XUV300 டர்போஸ்போர்ட் வேரியண்ட்களை வாங்கும் போது ரூ. 25 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் போனஸ் கிடைக்கும். மராசோ மாடலுக்கு ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரத்து 200 கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    இவை தவிர மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கிளாசிக், ஸ்கார்பியோ N, XUV700, தார் மற்றும் பொலிரோ நியோ போன்ற மாடல்களுக்கு எவ்வித சலுகையும் அறிவிக்கப்படவில்லை. மேலும் இங்கு குறிப்பிடப்பட்டு இருக்கும் சலுகை விவரங்கள் கார் மாடல், வேரியண்ட் மற்றும் விற்பனை மையங்களுக்கு ஏற்ப வேறுபடும்.

    • இந்திய சந்தையில் முன்னணி கார் உற்பத்தியாளராக இருக்கும் மாருதி சுசுகி தனது கார்களை ரிகால் செய்கிறது.
    • ரிகால் செய்யப்படும் கார்களில் உள்ள பிரச்சினைகள் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி சரி செய்யப்படுகிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் தனது கிராண்ட் விட்டாரா, பிரெஸ்ஸா, எர்டிகா, XL6 மற்றும் சியாஸ் கார்களின் 9 ஆயிரத்து 125 யூனிட்களை திரும்ப பெறுவதாக அறிவித்து இருக்கிறது. நவம்பர் 2 ஆம் தேதியில் இருந்து நவம்பர் 28 ஆம் தேதி வரை உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களை மட்டும் ரிகால் செய்வதாக மாருதி சுசுகி அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட கார்களின் முதல் இருக்கைகளில் உள்ள சீட் பெல்ட்களில் குறைபாடு ஏற்பட்டு இருக்கிறது.

    இந்த குறைபாடு மிகவும் அரிதான சம்பவங்களில் சீட் பெல்ட்-ஐ செயலிழக்க செய்து விடும். வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த ரிகால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட கார்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை மாருதி சுசுகி தனது அதிகாரப்பூர்வ விற்பனை மையங்கள் மூலம் தொடர்பு கொண்டு காரில் உள்ள பிரச்சினையை சரி செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    மேலும் பாதிக்கப்பட்ட கார்கள் அனைத்தும் கூடுதல் கட்டணம் இன்றி முற்றிலும் இலவசமாக சரி செய்யப்பட இருக்கிறது. மாருதி சுசுகி மட்டுமின்றி டொயோட்டா நிறுவனத்தின் அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாலிலும் இதே போன்று சீட் பெல்ட் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டொயோட்டா நிறுவனம் தனது ஹைரைடர் எஸ்யுவி-யின் 994 யூனிட்களை திரும்ப பெற்று இருக்கிறது.

    இரண்டு மாதங்களுக்கு முன் மாருதி சுசுகி நிறுவனம் தனது வேகன்ஆர், செலரியோ மற்றும் இக்னிஸ் மாடல்களை ரிகால் செய்து இருந்தது. அப்போது மூன்று கார்களிலும் ரியர் பிரேக் அசெம்ப்ளி பின் குறைபாடு கொண்டிருந்தது. இந்த கார்கள் ஆகஸ்ட் 3 ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 01 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்படவில்லை.

    • ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டைகுன் எக்ஸ்க்ளூசிவ் எடிஷன் மாடல் காஸ்மெடிக் மாற்றங்களை கொண்டிருக்கிறது.
    • புதிய ஸ்பெஷல் எடிஷன் டைகுன் மாடல் இந்தியாவில் இரண்டு விதமான நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    ஃபோக்ஸ்வேகன் பேசன்ஜர் கார்ஸ் இந்தியா நிறுவனம் டைகுன் எக்ஸ்க்ளூசிவ் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எக்ஸ்க்ளூசிவ் எடிஷன் மாடல் விலை ரூ. 33 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் பியூர் வைட் மற்றும் ஆரிக்ஸ் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    புதிய டைகுன் எக்ஸ்க்ளூசிவ் எடிஷன் மாடல் லோட் ஸ்டில் ப்ரோடெக்‌ஷன், 180இன்ச் செப்ரிங் ஸ்டெர்லிங் சில்வர் அலாய் வீல்கள், அலுமினியம் பெடல்கள், டைனமிக் ஹப்கேப் போன்ற அம்சங்கள் உள்ளன. இத்துடன் லிமிடெட் எடிஷன் எஸ்யுவி-இன் பூட்லிட் மேல்புறத்தில் "Exclusive Edition" பேட்ஜிங் செய்யப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் எல்இடி மேட்ரிஸ் ஹெட்லேம்ப்கள், 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆம்பியண்ட் லைட்டிங், 3-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், பானரோமிக் சன்ரூஃப், ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல், ஃபிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல், ஆறு ஏர்பேக், TPMS, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டிரைவர் அலர்ட் சிஸ்டம் போன்ற அம்சங்கள் உள்ளன.

    புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எக்ஸ்க்ளூசிவ் எடிஷன் மாடலில் 2.0 லிட்டர் TSI பெட்ரோல் என்ஜின், 7 ஸ்பீடு DSG டிரான்ஸ்மிஷன் மற்றும் 4 மோஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 187 ஹெச்பி பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த எஸ்யுவி லிட்டருக்கு 12.65 கிலோமீட்டர் வரையிலான மைலேஜ் வழங்கும் என ARAI சான்று பெற்று இருக்கிறது.

    • மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்கள் விலையை மாற்ற திட்டமிட்டுள்ளது.
    • கார் மாடல்களின் புதிய விலை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை ஜனவரி 2023 முதல் உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. விலை உயர்வு மாருதி சுசுகியின் அனைத்து கார்களுக்கும் பொருந்தும். சர்வதேச அளவில் உதிரிபாகங்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, பணவீக்கம் மற்றும் புதிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் விலை உயர்வு அறிவிக்கப்படுவதாக மாருதி சுசுகி அறிவித்து இருக்கிறது.

    விலை உயர்வு ஒவ்வொரு கார் மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும். தற்போது மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் மொத்தம் 15 கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இவற்றில் ஆல்டோ மாடல் விலை ரூ. 3 லட்சத்து 99 ஆயிரம் என துவங்குகிறது. மாருதி சுசுகி XL6 மாடல் விலை ரூ. 11 லட்சத்து 29 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    முன்னதாக இந்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் மாருதி சுசுகி நிறுவனம் தனது கார்களின் விலையை உயர்த்தியது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அமலுக்கு வர இருக்கும் மாருதி கார்களின் புதிய விலை விவரங்கள் வரும் வாரங்களில் அறிவிக்கப்படலாம். முன்னதாக மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது பலேனோ மற்றும் XL6 கார்களின் CNG வேரியண்டை அறிமுகம் செய்தது.

    புதிய மாருதி சுசுகி பலேனோ CNG மாடலின் விலை ரூ. 8 லட்சத்து 28 ஆயிரம் என துவங்குகிறது. புதிய XL6 CNG மாடல் விலை ரூ. 12 லட்சத்து 24 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மாருதி சுசுகியின் எண்ட்ரி லெவல் ஆல்டோ K10 மாடலும் CNG ஆப்ஷனில் கிடைக்கிறது.

    ×