என் மலர்tooltip icon

    கார்

    • மஹிந்திரா நிறுவனத்தின் கார் மாடல்களுக்கு டிசம்பர் மாத சலுகை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    • சமீபத்தில் தான் மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ Z4 வேரியண்டின் வினியோகத்தை துவங்கி இருக்கிறது.

    இந்தியாவில் இயங்கி வரும் தேர்வு செய்யப்பட்ட சில மஹிந்திரா விற்பனை மையங்களில் இம்மாதம் முழுக்க அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இவற்றை வாடிக்கையாளர்கள் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் இலவச அக்சஸரீக்கள் வடிவில் பெற்றுக் கொள்ளலாம்.

    மஹிந்திரா XUV300 பெட்ரோல் மாடலுக்கு ரூ. 29 ஆயிரம் வரை தள்ளுபடி, ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 4 ஆயிரம் வரை கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் வரையிலான அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன. பொலேரோ மாடலை வாங்குவோர் ரூ. 6 ஆயிரத்து 500 தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 3 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் ரூ. 8 ஆயிரத்து 500 வரையிலான அக்சஸரீக்களை பெறலாம்.

    மஹிந்திரா XUV300 டர்போஸ்போர்ட் வேரியண்ட்களை வாங்கும் போது ரூ. 25 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் போனஸ் கிடைக்கும். மராசோ மாடலுக்கு ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரத்து 200 கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    இவை தவிர மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கிளாசிக், ஸ்கார்பியோ N, XUV700, தார் மற்றும் பொலிரோ நியோ போன்ற மாடல்களுக்கு எவ்வித சலுகையும் அறிவிக்கப்படவில்லை. மேலும் இங்கு குறிப்பிடப்பட்டு இருக்கும் சலுகை விவரங்கள் கார் மாடல், வேரியண்ட் மற்றும் விற்பனை மையங்களுக்கு ஏற்ப வேறுபடும்.

    • இந்திய சந்தையில் முன்னணி கார் உற்பத்தியாளராக இருக்கும் மாருதி சுசுகி தனது கார்களை ரிகால் செய்கிறது.
    • ரிகால் செய்யப்படும் கார்களில் உள்ள பிரச்சினைகள் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி சரி செய்யப்படுகிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் தனது கிராண்ட் விட்டாரா, பிரெஸ்ஸா, எர்டிகா, XL6 மற்றும் சியாஸ் கார்களின் 9 ஆயிரத்து 125 யூனிட்களை திரும்ப பெறுவதாக அறிவித்து இருக்கிறது. நவம்பர் 2 ஆம் தேதியில் இருந்து நவம்பர் 28 ஆம் தேதி வரை உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களை மட்டும் ரிகால் செய்வதாக மாருதி சுசுகி அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட கார்களின் முதல் இருக்கைகளில் உள்ள சீட் பெல்ட்களில் குறைபாடு ஏற்பட்டு இருக்கிறது.

    இந்த குறைபாடு மிகவும் அரிதான சம்பவங்களில் சீட் பெல்ட்-ஐ செயலிழக்க செய்து விடும். வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த ரிகால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட கார்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை மாருதி சுசுகி தனது அதிகாரப்பூர்வ விற்பனை மையங்கள் மூலம் தொடர்பு கொண்டு காரில் உள்ள பிரச்சினையை சரி செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    மேலும் பாதிக்கப்பட்ட கார்கள் அனைத்தும் கூடுதல் கட்டணம் இன்றி முற்றிலும் இலவசமாக சரி செய்யப்பட இருக்கிறது. மாருதி சுசுகி மட்டுமின்றி டொயோட்டா நிறுவனத்தின் அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாலிலும் இதே போன்று சீட் பெல்ட் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டொயோட்டா நிறுவனம் தனது ஹைரைடர் எஸ்யுவி-யின் 994 யூனிட்களை திரும்ப பெற்று இருக்கிறது.

    இரண்டு மாதங்களுக்கு முன் மாருதி சுசுகி நிறுவனம் தனது வேகன்ஆர், செலரியோ மற்றும் இக்னிஸ் மாடல்களை ரிகால் செய்து இருந்தது. அப்போது மூன்று கார்களிலும் ரியர் பிரேக் அசெம்ப்ளி பின் குறைபாடு கொண்டிருந்தது. இந்த கார்கள் ஆகஸ்ட் 3 ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 01 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்படவில்லை.

    • ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டைகுன் எக்ஸ்க்ளூசிவ் எடிஷன் மாடல் காஸ்மெடிக் மாற்றங்களை கொண்டிருக்கிறது.
    • புதிய ஸ்பெஷல் எடிஷன் டைகுன் மாடல் இந்தியாவில் இரண்டு விதமான நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    ஃபோக்ஸ்வேகன் பேசன்ஜர் கார்ஸ் இந்தியா நிறுவனம் டைகுன் எக்ஸ்க்ளூசிவ் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எக்ஸ்க்ளூசிவ் எடிஷன் மாடல் விலை ரூ. 33 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் பியூர் வைட் மற்றும் ஆரிக்ஸ் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    புதிய டைகுன் எக்ஸ்க்ளூசிவ் எடிஷன் மாடல் லோட் ஸ்டில் ப்ரோடெக்‌ஷன், 180இன்ச் செப்ரிங் ஸ்டெர்லிங் சில்வர் அலாய் வீல்கள், அலுமினியம் பெடல்கள், டைனமிக் ஹப்கேப் போன்ற அம்சங்கள் உள்ளன. இத்துடன் லிமிடெட் எடிஷன் எஸ்யுவி-இன் பூட்லிட் மேல்புறத்தில் "Exclusive Edition" பேட்ஜிங் செய்யப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் எல்இடி மேட்ரிஸ் ஹெட்லேம்ப்கள், 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆம்பியண்ட் லைட்டிங், 3-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், பானரோமிக் சன்ரூஃப், ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல், ஃபிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல், ஆறு ஏர்பேக், TPMS, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டிரைவர் அலர்ட் சிஸ்டம் போன்ற அம்சங்கள் உள்ளன.

    புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எக்ஸ்க்ளூசிவ் எடிஷன் மாடலில் 2.0 லிட்டர் TSI பெட்ரோல் என்ஜின், 7 ஸ்பீடு DSG டிரான்ஸ்மிஷன் மற்றும் 4 மோஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 187 ஹெச்பி பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த எஸ்யுவி லிட்டருக்கு 12.65 கிலோமீட்டர் வரையிலான மைலேஜ் வழங்கும் என ARAI சான்று பெற்று இருக்கிறது.

    • மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்கள் விலையை மாற்ற திட்டமிட்டுள்ளது.
    • கார் மாடல்களின் புதிய விலை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை ஜனவரி 2023 முதல் உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. விலை உயர்வு மாருதி சுசுகியின் அனைத்து கார்களுக்கும் பொருந்தும். சர்வதேச அளவில் உதிரிபாகங்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, பணவீக்கம் மற்றும் புதிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் விலை உயர்வு அறிவிக்கப்படுவதாக மாருதி சுசுகி அறிவித்து இருக்கிறது.

    விலை உயர்வு ஒவ்வொரு கார் மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும். தற்போது மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் மொத்தம் 15 கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இவற்றில் ஆல்டோ மாடல் விலை ரூ. 3 லட்சத்து 99 ஆயிரம் என துவங்குகிறது. மாருதி சுசுகி XL6 மாடல் விலை ரூ. 11 லட்சத்து 29 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    முன்னதாக இந்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் மாருதி சுசுகி நிறுவனம் தனது கார்களின் விலையை உயர்த்தியது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அமலுக்கு வர இருக்கும் மாருதி கார்களின் புதிய விலை விவரங்கள் வரும் வாரங்களில் அறிவிக்கப்படலாம். முன்னதாக மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது பலேனோ மற்றும் XL6 கார்களின் CNG வேரியண்டை அறிமுகம் செய்தது.

    புதிய மாருதி சுசுகி பலேனோ CNG மாடலின் விலை ரூ. 8 லட்சத்து 28 ஆயிரம் என துவங்குகிறது. புதிய XL6 CNG மாடல் விலை ரூ. 12 லட்சத்து 24 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மாருதி சுசுகியின் எண்ட்ரி லெவல் ஆல்டோ K10 மாடலும் CNG ஆப்ஷனில் கிடைக்கிறது.

    • மஹிந்திரா நிறுவனத்தின் அல்டுராஸ் G4 எஸ்யுவி மாடல் முன்பதிவு திடீரென நிறுத்தப்பட்டு விட்டன.
    • இது இந்திய சந்தையில் மஹிந்திரா நிறுவனத்தின் விலை உயர்ந்த கார் மாடல் ஆகும்.

    மஹிந்திரா அல்டுராஸ் G4 மாடல் இந்திய விற்பனை நிறுத்தப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்த எஸ்யுவி மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டது. மேலும் இந்த காருக்கான முன்பதிவுகள் திடீரென நிறுத்தப்பட்டு விட்டது. இந்திய சந்தையில் 2018 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட அல்டுராஸ் G4 மாடல் CKD வழியே இந்தியா கொண்டுவரப்பட்டது.

    அறிமுகம் செய்யப்பட்ட போது, இந்த கார் சங்யோங் ரெக்ஸ்டான் மாடலின் ரி-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனாகவே இருந்தது. பின் இந்த எஸ்யுவி மாடல் 2WD ஹை மற்றும் 4WD என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டது. இந்திய சந்தையில் இந்த காரின் விலை முறையே ரூ. 30 லட்சத்து 67 ஆயிரம் மற்றும் ரூ. 31 லட்சத்து 87 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    ஏராளமான அம்சங்களுடன் போட்டியை ஏற்படுத்தும் விலை கொண்டிருந்த போதிலும், இந்த எஸ்யுவி அதிக வாடிக்கையாளர்களை கவராத காரணத்தால் விற்பனை தொடர்ந்து குறைவாகவே இருந்து வந்துள்ளது. அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் வெண்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள், டூயல்-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் கொண்டிருக்கிறது.

    இத்துடன் குரூயிஸ் கண்ட்ரோல், பவர்டு டெயில்கேட், ஒன்பது ஏர்பேக், TPMS, 8 வழிகளில் பவர் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனஎர் இருக்கை, எலெக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கார் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 178 ஹெச்பி பவர், 420 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

    இந்திய சந்தையில் மஹிந்திரா அல்டுராஸ் G4 எஸ்யுவி டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டேவர் மற்றும் எம்ஜி குளோஸ்டர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக விளங்கியது. அல்டுராஸ் G4 நிறுத்தப்பட்டதை அடுத்து மஹிந்திரா XUV700 தற்போது அந்நிறுவனத்தின் விலை உயர்ந்த கார் என்ற பெருமையை பெறுகிறது.

    • டொயோட்டா நிறுவனம் சமீபத்திய சர்வதேச மோட்டார் விழா ஒன்றில் இன்னோவா மாடலை சார்ந்த எலெக்ட்ரிக் எம்பிவி ப்ரோடோடைப்-ஐ காட்சிப்படுத்தி இருந்தது.
    • புதிய ப்ரோடோடைப் மாடல் இன்னோவா க்ரிஸ்டா மாடல் பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்பட்டு வருகிறது.

    ஜப்பான் நாட்டை சேர்ந்த ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் டொயோட்டா, இந்த ஆண்டு நடைபெற்ற இந்தோனேசியா சர்வதேச மோட்டார் விழாவில் இன்னோவா காரை சார்ந்து உருவாக்கப்பட்ட எலெக்ட்ரிக் எம்பிவி மாடலின் கான்செப்ட் ப்ரோடோடைப்-ஐ காட்சிப்படுத்தி இருந்தது. இந்த மாடல் தற்போது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் இன்னோவா க்ரிஸ்டா மாடல் போன்றே காட்சியளித்தது.

    எனினும், சற்றே பழைய IMV2 லேடர்-ஆன்-ஃபிரேம் பிளாட்ஃபார்மில் எலெக்ட்ரிக் வாகனம் எதையும் அறிமுகம் செய்யப் போவதில்லை என டொயோட்டா நிறுவனம் ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டது. மேலும் இந்த எலெக்ட்ரிக் கான்செப்ட் எதிர்கால எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஆய்வு மற்றும் வளர்ச்சி பணிகளுக்காகவே உருவாக்கப்படுவதாக அறிவித்து இருக்கிறது.

    இந்த நிலையில், இன்னோவா க்ரிஸ்டா மாடலை சார்ந்து உருவாக்கப்பட்ட எலெக்ட்ரிக் எம்பிவி மாடல் சாலைகளில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் முதல் முறையாக இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. ஸ்பை படங்களில் காரின் முன்புறம், இன்னோவா க்ரிஸ்டா மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், பிளான்க்டு-அவுட் கிரில் டிசைன் மற்றும் புளூ அக்செண்ட்கள் செய்யப்பட்டு உள்ளது.

    மற்ற காஸ்மெடிக் மாற்றங்களை பொருத்தவரை ரிடிசைன் செய்யப்பட்ட முன்புற பம்ப்பர், எல்இடி ஹெட்லேம்ப்களில் புளூ இன்சர்ட்கள், டி-பில்லர், புதிய பக்கவாட்டு டிகல்களில் "இன்னோவா EV" ஸ்டிக்கர்கள் மற்றும் பின்புறத்தில் EV பேட்ஜிங் இடம்பெற்று இருக்கிறது. இந்த கான்செப்ட் மாடலின் தொழில்நுட்ப விவரங்கள் அல்லது மற்ற விவரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

    இதன் காரணமாக இந்த காரின் பேட்டரி திறன், அதிகபட்ச ரேன்ஜ் மற்றும் பவர் அவுட்புட் பற்றிய விவரங்களும் மர்மமாகவே உள்ளது. இதுதவிர டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் தான் இன்னோவா ஹைகிராஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இன்னோவா எலெக்ட்ரிக் கான்செப்ட் மாடல் சாலைகளில் சோதனை செய்யப்பட்ட போதிலும், இது இந்தியாவில் அறிமுகமாகும் என்பது கேள்விக்குறியான விஷயம் தான்.

    Photo Courtesy: Carwale

    • இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது.
    • ஏற்கனவே இந்த கார் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தியா வருகிறது.

    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் வாகனத்திற்கான முன்பதிவு இந்தியாவில் டிசம்பர் 20 ஆம் தேதி துவங்கும் என அறிவித்து இருக்கிறது. ஏற்கனவே இந்த காரின் டெஸ்டிங் இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. மேலும் புதிய ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் இந்திய விலை விவரங்கள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

    கியா நிறுவனத்தின் EV6 மாடல் உருவாக்கப்பட்ட E-GMP பிளாட்ஃபார்மிலேயே புதிய ஐயோனிக் 5 மாடலும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் பானரோமிக் சன்ரூஃப், 20 இன்ச் அளவில் பாராமெட்ரிக் பிக்சல் டிசைன் அலாய் வீல்கள், முழு சார்ஜ் செய்தால் 412 கிலோமீட்டர் வரை செல்லும் ரேன்ஜ் கொண்டிருக்கிறது. இதன் உள்புறம் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பொருட்களால் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    டிசைனை பொருத்தவரை ஹூண்டாய் ஐயோனிக் 5 மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள், ஃபிளஷ்-ஃபிட்டிங் டோர் ஹேண்டில்கள், பிக்சலேட் டிசைன் கொண்ட எல்இடி டெயில் லைட்கள், இண்டகிரேடெட் ஸ்பாயிலர், ஷார்க்-ஃபின் ஆண்டெனா, ஃபௌக்ஸ் முன்புறம் மற்றும் பின்புற ஸ்கிட் பிளேட்கள் வழங்கப்படுகிறது.

    காரின் உள்புறம் பெரிய கன்சோலில் ஒரு ஸ்கிரீன் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் போன்றும் மற்றொரு ஸ்கிரீன் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஃபுளோடிங் செண்டர் கன்சோல், 2-ஸ்போக் ஃபிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல், என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    சர்வதேச சந்தையில் 2023 ஹூண்டாய் ஐயோனிக் 5 மாடல் 58 கிலோவாட் ஹவர் மற்றும் 72.6 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக், RWD மற்றும் AWD வெர்ஷ்ன்களில் கிடைக்கிறது. இந்திய சந்தையில் இந்த இரு வேரியண்ட்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய ஐயோனிக் 5 மாடல் உள்நாட்டிலேயே அசெம்பில் செய்யப்படும் என தெரிகிறது. 

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் மாடல் விலையை உயர்த்தி இருக்கிறது.
    • விலை உயர்வு நெக்சான் மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் தனது நெக்சான் மாடல் விலையை உயர்த்த போவதாக அறிவித்து இருந்தது. அந்த வகையில், நெக்சான் மாடலின் புதிய விலை விவரங்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. விலை உயர்வின் படி சில வேரியண்ட்களின் விற்பனை நிறுத்தப்பட்டு இருக்கிறது. டாடா நெக்சான், XZ, XZA, XZ+ (O), XZA+ (O), XZ+ (O) டார்க் மற்றும் XZA + (O) டார்க் என ஆறு வேரியண்ட்கள் நிறுத்தப்பட்டு விட்டன.

    மற்ற வேரியண்ட்களான ஜெட், காசிரங்கா மற்றும் டார்க் எடிஷன் முன்பை போன்றே தொடர்ந்து விற்பனை செய்யப்படுகின்றன. நிறுத்தப்பட்ட வேரியண்ட்களுக்கு மாற்றாக XZ+ (HS), XZ+ (L), XZ+ (P), XZA+ (HS), XZA+ (L) மற்றும் XZA+ (P) போன்ற வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புது வேரியண்ட்களில் எந்த விதமான புது அம்சங்களும் சேர்க்கப்படவில்லை.

    விலை உயர்வின் படி டாடா நெக்சான் பெட்ரோல் வேரியண்ட் விலை குறைந்த பட்சமாக ரூ. 6 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 18 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. நெக்சான் டீசல் வேரியண்ட்களின் விலை குறைந்தபட்சமாக ரூ. 10 ஆயிரம் துவங்கி அதிகபட்சம் ரூ. 18 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி டாடா நெக்சான் பெட்ரோல் மாடல் விலை தற்போது ரூ. 7 லட்சத்து 69 ஆயிரத்து 900 என துவங்குகிறது.

    டாடா நெக்சான் பெட்ரோல் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 12 லட்சத்து 62 ஆயிரத்து 900 ஆகும். டாடா நெக்சான் டீசல் வேரியண்ட் விலை ரூ. 9 லட்சத்து 99 ஆயிரத்து 900 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 14 லட்சத்து 17 ஆயிரத்து 900 என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • எம்ஜி மோட்டார் நிறுவனம் மேம்பட்ட ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீட்டை ஒட்டி இந்த காருக்கான டீசர்கள் வெளியாகி வருகின்றன.

    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடலை டிசம்பர் 20 ஆம் தேதி அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மேம்பட்ட புதிய எஸ்யுவி ஏராளமான மாற்றங்களுடன், புது ஸ்டைலிங் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். இத்துடன் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கலாம். இந்த காரில் மெக்கானிக்கல் அம்சங்கள் எதுவும் மேற்கொள்ளப்படாது என்றே தெரிகிறது.

    புதிய எம்ஜி ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வெளிப்புறம் ஸ்டைலிங் அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இதன் முன்புற கிரில் ரிடிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் பின்புற தோற்றம் தற்போதைய மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. முந்தைய ஸ்பை படங்களின் படி ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன்புறம் அதிக மாற்றங்களுடன் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் அளவில் பெரிய டைமண்ட் மெஷ் கிரில், க்ரோம் சரவுண்ட்கள் உள்ளது.

    இத்துடன் அதிரடியாக காட்சியளிக்கும் பம்ப்பர்கள், புதிய முக்கோன வடிவம் கொண்ட ஹெட்லேம்ப் ஹவுசிங் உள்ளது. இதே போன்ற செட்டப் ஹெக்டார் பிளஸ் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யுவி-யில் தற்போதைய மாடலில் இருப்பதை போன்ற டேடைம் ரன்னிங் லேம்ப்கள் உள்ளன. இவை புதிய முன்புற கிரிலின் மேல்புறத்தில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யுவி-யில் புதிய எல்இடி டெயில்லைட்கள், மேம்பட்ட அலாய் வீல்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    இந்த காரில் மேம்பட்ட டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS), ஏராளமான ஏர்பேக், ABS, EBD, சீட் பெல்ட் ரிமைண்டர் என பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகிறது. புதிய ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடல் 143 ஹெச்பி பவர் கொண்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 143 ஹெச்பி பவர் கொண்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் ஹைப்ரிட் மற்றும் 170 ஹெச்பி பவர் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    • பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்அப் புது எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இது அந்நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் என்பதோடு முழு சார்ஜ் செய்தால் 500 கிமீ ரேன்ஜ் வழங்குகிறது.

    பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்அப் பிரவைக் தனது முதல் எலெக்ட்ரிக் எஸ்யுவி - டெஃபி-யை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய பிரவைக் டெஃபி எஸ்யுவி விலை ரூ. 39 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    பிரவைக் டெஃபி அந்நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகனம் ஆகும். மேலும் இந்த கார் பவர், ஸ்பீடு மற்றும் ரேன்ஜ் உள்ளிட்டவைகளில் அதிரடி நம்பர்களை குறி வைத்து எட்டியிருக்கிறது. இது போன்ற செயல்திறன் கொண்ட தயாரிப்புகளை ஜெர்மனி மற்றும் தென் கொரிய நிறுவனங்கள் மட்டுமே இந்திய சந்தையில் வழங்கி வருகின்றன.

    புதிய பிரவைக் டெஃபி மாடலில் 402 ஹெச்பி பவர் மற்றும் 620 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் திறன் இரு ஆக்சில்களுக்கும் சமமாக பிரித்து வழங்கப்படுகிறது. மேலும் புதிய டெஃபி மாடல் ஆல் வீல் டிரைவ் வசதி கொண்டிருக்கிறது.

    இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.9 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 210 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. பிரவைக் டெஃபி மாடலில் உள்ள 90.2 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் முழு சார்ஜ் செய்தால் 500-க்கும் அதிக கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது.

    • டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இன்னோவா ஹைகிராஸ் மாடல் லிட்டருக்கு 21.1 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.
    • புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலின் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

    டொயோட்டா நிறுவனத்தின் 2023 இன்னோவா ஹைகிராஸ் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் அடுத்த ஆண்டு டெல்லியில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் வெளியிடப்பட இருக்கிறது. புதிய தலைமுறை இன்னோவா மாடல் மோனோக் சேசிஸ் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் முன்புற டிரைவ் லே-அவுட் கொண்டுள்ளது.

    இன்னோவா ஹைகிராஸ் மாடலின் முன்பதிவு துவங்கிவிட்டது. முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் ஆகும். இதன் விற்பனை 2023 ஜனவரி மாத மத்தியில் துவங்க இருக்கிறது. இந்த கார் இருவித பெட்ரோல், மூன்று வித பெட்ரோல் ஹைப்ரிட் வெர்ஷன்களில் கிடைக்கிறது. மேலும் இந்த கார் ஏழு மற்றும் எட்டு பேர் பயணம் செய்யும் இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது.

    2023 டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் 172 ஹெச்பி பவர், 187 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுகத்துகிறது. இத்துடன் மைல்டு ஹைப்ரிட் மோட்டார் இணைக்கப்பட்டு இருக்கிறது. இது 111 ஹெச்பி பவர், 206 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் CVT, E-CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 9.5 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் லிட்டருக்கு 21.1 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது. மேலும் காரின் ஃபியூவல் டேன்க்-ஐ முழுமையாக நிரப்பினால் 1097 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கும் என டொயோட்டா தெரிவித்து இருக்கிறது. இந்த காரின் அளவீடுகள் 4755 மில்லிமீட்டர் நீளம், 1850 மில்லிமீட்டர் அகலம், 1795 மில்லிமீட்டர் உயரம், வீல்பேஸ் 2850 மில்லிமீட்டராக உள்ளது.

    புதிய டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடலில், முற்றிலும் புதிய முன்புற தோற்றம் கொண்டுள்ளது. இந்த காரில் புதிய முன்புற கிரில், க்ரோம் அண்டர்லைன், ஸ்வெப்ட்பேக் எல்இடி ஹெட்லேம்ப்கள், புதிய முன்புற பம்ப்பர், எல்இடி ஃபாக் லைட்களை கொண்டிருக்கிறது. இதன் முன்புற கதவுகளில் ஹைப்ரிட் பேட்ஜிங் இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் 18 இன்ச் அளவில் அலாய் வீல்கள், பிளாக்டு அவுட் B மற்றும் C பில்லர்கள், பாடி கிலாடிங் வழங்கப்பட்டுள்ளது.

    பின்புறம் டூ-பீஸ் எல்இடி டெயில் லைட்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட ஸ்பாயிலர்கள், ஷார்க் ஃபின் ஆண்டெனா, புதிய பின்புற பம்ப்பர், இண்டகிரேட் செய்யப்பட்ட ரிஃப்ளெக்டர்கள், டெயில்-கேட்டில் மவுண்ட் செய்யப்பட்ட நம்பர் பிளேட் ரிசெஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார்- சூப்பர் வைட், பிலாட்டினம் வைட் பியல், சில்வர் மெட்டாலிக், அட்டிட்யூட் பிளாக் மைகா, ஸ்பார்க்லிங் பிளாக் பியல் க்ரிஸ்டல், ஷைன், அவாண்ட்கார்ட் பிரான்ஸ் மெட்டாலிக் மற்றும் பிளாகிஷ் அகெஹா கிலாஸ் ஃபிளேக் என ஏழு விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    காரின் உள்புறம் பானரோமிக் சன்ரூஃப், 10.1 இன்ச் ஃபுளோடிங் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, வெண்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள், மல்டி-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 9 ஸ்பீக்கர்கள் கொண்ட ஜெபிஎல் மியூசிக் சிஸ்டம், டூயல் டோன் பிலாக்-பிரவுன் தீம், ஏசி-க்கு டிஜிட்டல் கண்ட்ரோல், புதிய ஸ்டீரிங் வீல், இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், குரூயிஸ் கண்ட்ரோல், எலெக்ட்ரிக் பார்கிங் பிரேக், ஆம்பியண்ட் லைட்டிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் ADAS, டொயோட்டா i-கனெக்ட், கேப்டன் இருக்கைகள், ரூஃப் மவுண்ட் செய்யப்பட்ட ஏசி வெண்ட்கள், ரிக்லைனிங் 2-ரோ இருக்கைகள், இரண்டாம் அடுக்கு இருக்கையில் அமர்வோருக்காக 2 ஸ்கிரீன், பவர்டு டெயில்கேட், 6 ஏர்பேக் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகன எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • சமீபத்தில் தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2022 டிகோர் EV மாடல் இந்திய சந்சதையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது குறைந்த விலை எலெக்ட்ரிக் வாகனம், டாடா டியாகோ EV 20 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகளை பெற்று இருப்பதாக அறிவித்து இருக்கிறது. கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய டாடா டியாகோ EV எலெக்ட்ரிக் ஹேச்பேக் காரை அறிமுகம் செய்தது. இதன் முன்பதிவு அக்டோபர் 10 ஆம் தேதி துவங்கியகது.

    இந்திய சந்தையில் புதிய டாடா டியாகோ EV மாடலின் விலை ரூ. 8 லட்சத்து 49 ஆயிரம் என துவங்குகிறது. இந்த விலை காரை முதலில் முன்பதிவு செய்யும் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பொருந்தும். முன்பதிவு துவங்கிய முதல் நாளே காரை வாங்க சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டாடா டியாகோ EV மாடலை முன்பதிவு செய்தனர் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்து இருந்தது.

    புதிய டாடா டியாகோ EV மாடலின் வினியோகம் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் துவங்க இருக்கிறது. இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் டாடா மோட்டார்ஸ் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 2020 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்த நெக்சான் EV மாடல் இந்தியாவில் தொடர்ந்து அதிக யூனிட்கள் விற்பனையாகி வருகிறது. இதைத் தொடர்ந்து நெக்சான் EV மேக்ஸ், டிகோர் EV ஃபேஸ்லிஃப்ட் மற்றும் டியாகோ EV போன்ற மாடல்களை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்து வருகிறது.

    இந்திய சந்தையின் எலெக்ட்ரிக் பயணிகள் வாகன பிரிவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 89 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. முன்னதாக தனது 50 ஆயிரமாவது எலெக்ட்ரிக் வாகனத்தை டாடா மோட்டார்ஸ் வெளியிட்டு இருந்தது. வரும் ஆண்டுகளில் மேலும் அதிக எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய டாடாட மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

    ×