என் மலர்
கார்
- மஹிந்திரா நிறுவனத்தின் அல்டுராஸ் G4 எஸ்யுவி மாடல் முன்பதிவு திடீரென நிறுத்தப்பட்டு விட்டன.
- இது இந்திய சந்தையில் மஹிந்திரா நிறுவனத்தின் விலை உயர்ந்த கார் மாடல் ஆகும்.
மஹிந்திரா அல்டுராஸ் G4 மாடல் இந்திய விற்பனை நிறுத்தப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்த எஸ்யுவி மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டது. மேலும் இந்த காருக்கான முன்பதிவுகள் திடீரென நிறுத்தப்பட்டு விட்டது. இந்திய சந்தையில் 2018 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட அல்டுராஸ் G4 மாடல் CKD வழியே இந்தியா கொண்டுவரப்பட்டது.
அறிமுகம் செய்யப்பட்ட போது, இந்த கார் சங்யோங் ரெக்ஸ்டான் மாடலின் ரி-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனாகவே இருந்தது. பின் இந்த எஸ்யுவி மாடல் 2WD ஹை மற்றும் 4WD என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டது. இந்திய சந்தையில் இந்த காரின் விலை முறையே ரூ. 30 லட்சத்து 67 ஆயிரம் மற்றும் ரூ. 31 லட்சத்து 87 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஏராளமான அம்சங்களுடன் போட்டியை ஏற்படுத்தும் விலை கொண்டிருந்த போதிலும், இந்த எஸ்யுவி அதிக வாடிக்கையாளர்களை கவராத காரணத்தால் விற்பனை தொடர்ந்து குறைவாகவே இருந்து வந்துள்ளது. அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் வெண்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள், டூயல்-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் கொண்டிருக்கிறது.
இத்துடன் குரூயிஸ் கண்ட்ரோல், பவர்டு டெயில்கேட், ஒன்பது ஏர்பேக், TPMS, 8 வழிகளில் பவர் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனஎர் இருக்கை, எலெக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கார் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 178 ஹெச்பி பவர், 420 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
இந்திய சந்தையில் மஹிந்திரா அல்டுராஸ் G4 எஸ்யுவி டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டேவர் மற்றும் எம்ஜி குளோஸ்டர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக விளங்கியது. அல்டுராஸ் G4 நிறுத்தப்பட்டதை அடுத்து மஹிந்திரா XUV700 தற்போது அந்நிறுவனத்தின் விலை உயர்ந்த கார் என்ற பெருமையை பெறுகிறது.
- டொயோட்டா நிறுவனம் சமீபத்திய சர்வதேச மோட்டார் விழா ஒன்றில் இன்னோவா மாடலை சார்ந்த எலெக்ட்ரிக் எம்பிவி ப்ரோடோடைப்-ஐ காட்சிப்படுத்தி இருந்தது.
- புதிய ப்ரோடோடைப் மாடல் இன்னோவா க்ரிஸ்டா மாடல் பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்பட்டு வருகிறது.
ஜப்பான் நாட்டை சேர்ந்த ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் டொயோட்டா, இந்த ஆண்டு நடைபெற்ற இந்தோனேசியா சர்வதேச மோட்டார் விழாவில் இன்னோவா காரை சார்ந்து உருவாக்கப்பட்ட எலெக்ட்ரிக் எம்பிவி மாடலின் கான்செப்ட் ப்ரோடோடைப்-ஐ காட்சிப்படுத்தி இருந்தது. இந்த மாடல் தற்போது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் இன்னோவா க்ரிஸ்டா மாடல் போன்றே காட்சியளித்தது.
எனினும், சற்றே பழைய IMV2 லேடர்-ஆன்-ஃபிரேம் பிளாட்ஃபார்மில் எலெக்ட்ரிக் வாகனம் எதையும் அறிமுகம் செய்யப் போவதில்லை என டொயோட்டா நிறுவனம் ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டது. மேலும் இந்த எலெக்ட்ரிக் கான்செப்ட் எதிர்கால எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஆய்வு மற்றும் வளர்ச்சி பணிகளுக்காகவே உருவாக்கப்படுவதாக அறிவித்து இருக்கிறது.

இந்த நிலையில், இன்னோவா க்ரிஸ்டா மாடலை சார்ந்து உருவாக்கப்பட்ட எலெக்ட்ரிக் எம்பிவி மாடல் சாலைகளில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் முதல் முறையாக இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. ஸ்பை படங்களில் காரின் முன்புறம், இன்னோவா க்ரிஸ்டா மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், பிளான்க்டு-அவுட் கிரில் டிசைன் மற்றும் புளூ அக்செண்ட்கள் செய்யப்பட்டு உள்ளது.
மற்ற காஸ்மெடிக் மாற்றங்களை பொருத்தவரை ரிடிசைன் செய்யப்பட்ட முன்புற பம்ப்பர், எல்இடி ஹெட்லேம்ப்களில் புளூ இன்சர்ட்கள், டி-பில்லர், புதிய பக்கவாட்டு டிகல்களில் "இன்னோவா EV" ஸ்டிக்கர்கள் மற்றும் பின்புறத்தில் EV பேட்ஜிங் இடம்பெற்று இருக்கிறது. இந்த கான்செப்ட் மாடலின் தொழில்நுட்ப விவரங்கள் அல்லது மற்ற விவரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இதன் காரணமாக இந்த காரின் பேட்டரி திறன், அதிகபட்ச ரேன்ஜ் மற்றும் பவர் அவுட்புட் பற்றிய விவரங்களும் மர்மமாகவே உள்ளது. இதுதவிர டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் தான் இன்னோவா ஹைகிராஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இன்னோவா எலெக்ட்ரிக் கான்செப்ட் மாடல் சாலைகளில் சோதனை செய்யப்பட்ட போதிலும், இது இந்தியாவில் அறிமுகமாகும் என்பது கேள்விக்குறியான விஷயம் தான்.
Photo Courtesy: Carwale
- இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது.
- ஏற்கனவே இந்த கார் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தியா வருகிறது.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் வாகனத்திற்கான முன்பதிவு இந்தியாவில் டிசம்பர் 20 ஆம் தேதி துவங்கும் என அறிவித்து இருக்கிறது. ஏற்கனவே இந்த காரின் டெஸ்டிங் இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. மேலும் புதிய ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் இந்திய விலை விவரங்கள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
கியா நிறுவனத்தின் EV6 மாடல் உருவாக்கப்பட்ட E-GMP பிளாட்ஃபார்மிலேயே புதிய ஐயோனிக் 5 மாடலும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் பானரோமிக் சன்ரூஃப், 20 இன்ச் அளவில் பாராமெட்ரிக் பிக்சல் டிசைன் அலாய் வீல்கள், முழு சார்ஜ் செய்தால் 412 கிலோமீட்டர் வரை செல்லும் ரேன்ஜ் கொண்டிருக்கிறது. இதன் உள்புறம் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பொருட்களால் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

டிசைனை பொருத்தவரை ஹூண்டாய் ஐயோனிக் 5 மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள், ஃபிளஷ்-ஃபிட்டிங் டோர் ஹேண்டில்கள், பிக்சலேட் டிசைன் கொண்ட எல்இடி டெயில் லைட்கள், இண்டகிரேடெட் ஸ்பாயிலர், ஷார்க்-ஃபின் ஆண்டெனா, ஃபௌக்ஸ் முன்புறம் மற்றும் பின்புற ஸ்கிட் பிளேட்கள் வழங்கப்படுகிறது.
காரின் உள்புறம் பெரிய கன்சோலில் ஒரு ஸ்கிரீன் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் போன்றும் மற்றொரு ஸ்கிரீன் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஃபுளோடிங் செண்டர் கன்சோல், 2-ஸ்போக் ஃபிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல், என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது.
சர்வதேச சந்தையில் 2023 ஹூண்டாய் ஐயோனிக் 5 மாடல் 58 கிலோவாட் ஹவர் மற்றும் 72.6 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக், RWD மற்றும் AWD வெர்ஷ்ன்களில் கிடைக்கிறது. இந்திய சந்தையில் இந்த இரு வேரியண்ட்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய ஐயோனிக் 5 மாடல் உள்நாட்டிலேயே அசெம்பில் செய்யப்படும் என தெரிகிறது.
- டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் மாடல் விலையை உயர்த்தி இருக்கிறது.
- விலை உயர்வு நெக்சான் மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் தனது நெக்சான் மாடல் விலையை உயர்த்த போவதாக அறிவித்து இருந்தது. அந்த வகையில், நெக்சான் மாடலின் புதிய விலை விவரங்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. விலை உயர்வின் படி சில வேரியண்ட்களின் விற்பனை நிறுத்தப்பட்டு இருக்கிறது. டாடா நெக்சான், XZ, XZA, XZ+ (O), XZA+ (O), XZ+ (O) டார்க் மற்றும் XZA + (O) டார்க் என ஆறு வேரியண்ட்கள் நிறுத்தப்பட்டு விட்டன.
மற்ற வேரியண்ட்களான ஜெட், காசிரங்கா மற்றும் டார்க் எடிஷன் முன்பை போன்றே தொடர்ந்து விற்பனை செய்யப்படுகின்றன. நிறுத்தப்பட்ட வேரியண்ட்களுக்கு மாற்றாக XZ+ (HS), XZ+ (L), XZ+ (P), XZA+ (HS), XZA+ (L) மற்றும் XZA+ (P) போன்ற வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புது வேரியண்ட்களில் எந்த விதமான புது அம்சங்களும் சேர்க்கப்படவில்லை.

விலை உயர்வின் படி டாடா நெக்சான் பெட்ரோல் வேரியண்ட் விலை குறைந்த பட்சமாக ரூ. 6 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 18 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. நெக்சான் டீசல் வேரியண்ட்களின் விலை குறைந்தபட்சமாக ரூ. 10 ஆயிரம் துவங்கி அதிகபட்சம் ரூ. 18 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி டாடா நெக்சான் பெட்ரோல் மாடல் விலை தற்போது ரூ. 7 லட்சத்து 69 ஆயிரத்து 900 என துவங்குகிறது.
டாடா நெக்சான் பெட்ரோல் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 12 லட்சத்து 62 ஆயிரத்து 900 ஆகும். டாடா நெக்சான் டீசல் வேரியண்ட் விலை ரூ. 9 லட்சத்து 99 ஆயிரத்து 900 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 14 லட்சத்து 17 ஆயிரத்து 900 என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- எம்ஜி மோட்டார் நிறுவனம் மேம்பட்ட ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- புதிய ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீட்டை ஒட்டி இந்த காருக்கான டீசர்கள் வெளியாகி வருகின்றன.
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடலை டிசம்பர் 20 ஆம் தேதி அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மேம்பட்ட புதிய எஸ்யுவி ஏராளமான மாற்றங்களுடன், புது ஸ்டைலிங் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். இத்துடன் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கலாம். இந்த காரில் மெக்கானிக்கல் அம்சங்கள் எதுவும் மேற்கொள்ளப்படாது என்றே தெரிகிறது.
புதிய எம்ஜி ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வெளிப்புறம் ஸ்டைலிங் அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இதன் முன்புற கிரில் ரிடிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் பின்புற தோற்றம் தற்போதைய மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. முந்தைய ஸ்பை படங்களின் படி ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன்புறம் அதிக மாற்றங்களுடன் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் அளவில் பெரிய டைமண்ட் மெஷ் கிரில், க்ரோம் சரவுண்ட்கள் உள்ளது.

இத்துடன் அதிரடியாக காட்சியளிக்கும் பம்ப்பர்கள், புதிய முக்கோன வடிவம் கொண்ட ஹெட்லேம்ப் ஹவுசிங் உள்ளது. இதே போன்ற செட்டப் ஹெக்டார் பிளஸ் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யுவி-யில் தற்போதைய மாடலில் இருப்பதை போன்ற டேடைம் ரன்னிங் லேம்ப்கள் உள்ளன. இவை புதிய முன்புற கிரிலின் மேல்புறத்தில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யுவி-யில் புதிய எல்இடி டெயில்லைட்கள், மேம்பட்ட அலாய் வீல்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
இந்த காரில் மேம்பட்ட டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS), ஏராளமான ஏர்பேக், ABS, EBD, சீட் பெல்ட் ரிமைண்டர் என பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகிறது. புதிய ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடல் 143 ஹெச்பி பவர் கொண்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 143 ஹெச்பி பவர் கொண்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் ஹைப்ரிட் மற்றும் 170 ஹெச்பி பவர் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.
- பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்அப் புது எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது.
- இது அந்நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் என்பதோடு முழு சார்ஜ் செய்தால் 500 கிமீ ரேன்ஜ் வழங்குகிறது.
பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்அப் பிரவைக் தனது முதல் எலெக்ட்ரிக் எஸ்யுவி - டெஃபி-யை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய பிரவைக் டெஃபி எஸ்யுவி விலை ரூ. 39 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
பிரவைக் டெஃபி அந்நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகனம் ஆகும். மேலும் இந்த கார் பவர், ஸ்பீடு மற்றும் ரேன்ஜ் உள்ளிட்டவைகளில் அதிரடி நம்பர்களை குறி வைத்து எட்டியிருக்கிறது. இது போன்ற செயல்திறன் கொண்ட தயாரிப்புகளை ஜெர்மனி மற்றும் தென் கொரிய நிறுவனங்கள் மட்டுமே இந்திய சந்தையில் வழங்கி வருகின்றன.

புதிய பிரவைக் டெஃபி மாடலில் 402 ஹெச்பி பவர் மற்றும் 620 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் திறன் இரு ஆக்சில்களுக்கும் சமமாக பிரித்து வழங்கப்படுகிறது. மேலும் புதிய டெஃபி மாடல் ஆல் வீல் டிரைவ் வசதி கொண்டிருக்கிறது.
இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.9 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 210 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. பிரவைக் டெஃபி மாடலில் உள்ள 90.2 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் முழு சார்ஜ் செய்தால் 500-க்கும் அதிக கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது.
- டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இன்னோவா ஹைகிராஸ் மாடல் லிட்டருக்கு 21.1 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.
- புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலின் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
டொயோட்டா நிறுவனத்தின் 2023 இன்னோவா ஹைகிராஸ் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் அடுத்த ஆண்டு டெல்லியில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் வெளியிடப்பட இருக்கிறது. புதிய தலைமுறை இன்னோவா மாடல் மோனோக் சேசிஸ் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் முன்புற டிரைவ் லே-அவுட் கொண்டுள்ளது.
இன்னோவா ஹைகிராஸ் மாடலின் முன்பதிவு துவங்கிவிட்டது. முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் ஆகும். இதன் விற்பனை 2023 ஜனவரி மாத மத்தியில் துவங்க இருக்கிறது. இந்த கார் இருவித பெட்ரோல், மூன்று வித பெட்ரோல் ஹைப்ரிட் வெர்ஷன்களில் கிடைக்கிறது. மேலும் இந்த கார் ஏழு மற்றும் எட்டு பேர் பயணம் செய்யும் இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது.

2023 டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் 172 ஹெச்பி பவர், 187 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுகத்துகிறது. இத்துடன் மைல்டு ஹைப்ரிட் மோட்டார் இணைக்கப்பட்டு இருக்கிறது. இது 111 ஹெச்பி பவர், 206 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் CVT, E-CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 9.5 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் லிட்டருக்கு 21.1 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது. மேலும் காரின் ஃபியூவல் டேன்க்-ஐ முழுமையாக நிரப்பினால் 1097 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கும் என டொயோட்டா தெரிவித்து இருக்கிறது. இந்த காரின் அளவீடுகள் 4755 மில்லிமீட்டர் நீளம், 1850 மில்லிமீட்டர் அகலம், 1795 மில்லிமீட்டர் உயரம், வீல்பேஸ் 2850 மில்லிமீட்டராக உள்ளது.

புதிய டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடலில், முற்றிலும் புதிய முன்புற தோற்றம் கொண்டுள்ளது. இந்த காரில் புதிய முன்புற கிரில், க்ரோம் அண்டர்லைன், ஸ்வெப்ட்பேக் எல்இடி ஹெட்லேம்ப்கள், புதிய முன்புற பம்ப்பர், எல்இடி ஃபாக் லைட்களை கொண்டிருக்கிறது. இதன் முன்புற கதவுகளில் ஹைப்ரிட் பேட்ஜிங் இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் 18 இன்ச் அளவில் அலாய் வீல்கள், பிளாக்டு அவுட் B மற்றும் C பில்லர்கள், பாடி கிலாடிங் வழங்கப்பட்டுள்ளது.
பின்புறம் டூ-பீஸ் எல்இடி டெயில் லைட்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட ஸ்பாயிலர்கள், ஷார்க் ஃபின் ஆண்டெனா, புதிய பின்புற பம்ப்பர், இண்டகிரேட் செய்யப்பட்ட ரிஃப்ளெக்டர்கள், டெயில்-கேட்டில் மவுண்ட் செய்யப்பட்ட நம்பர் பிளேட் ரிசெஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார்- சூப்பர் வைட், பிலாட்டினம் வைட் பியல், சில்வர் மெட்டாலிக், அட்டிட்யூட் பிளாக் மைகா, ஸ்பார்க்லிங் பிளாக் பியல் க்ரிஸ்டல், ஷைன், அவாண்ட்கார்ட் பிரான்ஸ் மெட்டாலிக் மற்றும் பிளாகிஷ் அகெஹா கிலாஸ் ஃபிளேக் என ஏழு விதமான நிறங்களில் கிடைக்கிறது.
காரின் உள்புறம் பானரோமிக் சன்ரூஃப், 10.1 இன்ச் ஃபுளோடிங் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, வெண்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள், மல்டி-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 9 ஸ்பீக்கர்கள் கொண்ட ஜெபிஎல் மியூசிக் சிஸ்டம், டூயல் டோன் பிலாக்-பிரவுன் தீம், ஏசி-க்கு டிஜிட்டல் கண்ட்ரோல், புதிய ஸ்டீரிங் வீல், இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், குரூயிஸ் கண்ட்ரோல், எலெக்ட்ரிக் பார்கிங் பிரேக், ஆம்பியண்ட் லைட்டிங் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் ADAS, டொயோட்டா i-கனெக்ட், கேப்டன் இருக்கைகள், ரூஃப் மவுண்ட் செய்யப்பட்ட ஏசி வெண்ட்கள், ரிக்லைனிங் 2-ரோ இருக்கைகள், இரண்டாம் அடுக்கு இருக்கையில் அமர்வோருக்காக 2 ஸ்கிரீன், பவர்டு டெயில்கேட், 6 ஏர்பேக் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
- டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகன எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- சமீபத்தில் தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2022 டிகோர் EV மாடல் இந்திய சந்சதையில் அறிமுகம் செய்யப்பட்டது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது குறைந்த விலை எலெக்ட்ரிக் வாகனம், டாடா டியாகோ EV 20 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகளை பெற்று இருப்பதாக அறிவித்து இருக்கிறது. கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய டாடா டியாகோ EV எலெக்ட்ரிக் ஹேச்பேக் காரை அறிமுகம் செய்தது. இதன் முன்பதிவு அக்டோபர் 10 ஆம் தேதி துவங்கியகது.
இந்திய சந்தையில் புதிய டாடா டியாகோ EV மாடலின் விலை ரூ. 8 லட்சத்து 49 ஆயிரம் என துவங்குகிறது. இந்த விலை காரை முதலில் முன்பதிவு செய்யும் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பொருந்தும். முன்பதிவு துவங்கிய முதல் நாளே காரை வாங்க சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டாடா டியாகோ EV மாடலை முன்பதிவு செய்தனர் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்து இருந்தது.

புதிய டாடா டியாகோ EV மாடலின் வினியோகம் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் துவங்க இருக்கிறது. இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் டாடா மோட்டார்ஸ் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 2020 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்த நெக்சான் EV மாடல் இந்தியாவில் தொடர்ந்து அதிக யூனிட்கள் விற்பனையாகி வருகிறது. இதைத் தொடர்ந்து நெக்சான் EV மேக்ஸ், டிகோர் EV ஃபேஸ்லிஃப்ட் மற்றும் டியாகோ EV போன்ற மாடல்களை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்து வருகிறது.
இந்திய சந்தையின் எலெக்ட்ரிக் பயணிகள் வாகன பிரிவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 89 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. முன்னதாக தனது 50 ஆயிரமாவது எலெக்ட்ரிக் வாகனத்தை டாடா மோட்டார்ஸ் வெளியிட்டு இருந்தது. வரும் ஆண்டுகளில் மேலும் அதிக எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய டாடாட மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.
- டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
- புதிய டாடா எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் 315 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2022 டாடா டிகோர் EV மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய டாடா டிகோர் EV விலை ரூ. 12 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. 2022 டாடா டிகோர் EV மாடல் புதிய நிறத்தில் கிடைக்கிறது. மேலும் இந்த கார் முன்பை விட அதிக ரேன்ஜ் வழங்குகிறது.
2022 டிகோர் EV மாடலில் 26 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இது முந்தைய காரை விட 15 கிலோமீட்டர் வரை அதிக ரேன்ஜ் வழங்குகிறது. இந்த கார் தற்போது முழு சார்ஜ் செய்தால் 315 கிலோமீட்டர் வரை செல்லும் என சான்று பெற்று இருக்கிறது. இதன் செயல்திறன் அளவில் எவ்வித மாற்றமும் இல்லை. அந்த வகையில் இந்த கார் 74 ஹெச்பி பவர், 170 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

மேம்பட்ட டாடா டியாகோ EV மாடலில் லெதர் இருக்கை மேற்கவர்கள், குரூயிஸ் கண்ட்ரோல், ஆட்டோ ஹெட்லேம்ப்கள், ரெயின் சென்சிங் வைப்பர்கள், லெதர் ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல் வழங்கப்பட்டு இருக்கிறது. பாதுகாப்பிற்கு இந்த எலெக்ட்ரிக் செடான் மாடலில் டாடாவின் Z கனெக்ட் கனெக்டட் கார் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. ஏற்கனவே டிகோர் EV XZ மற்றும் XZ+ மாடல்களை பயன்படுத்துவோருக்கு இதற்கான அப்டேட் டிசம்பர் 20 ஆம் தேதி முதல் வழங்கப்பட இருக்கிறது.
டாடா டிகோர் EV XZ+ லக்ஸ் இந்த சீரிசில் டாப் எண்ட் மாடலாக உள்ளது. இந்த வேரியண்ட் டாடா டிகோர் EV XZ+ வேரியண்டின் மேல் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. புதிய டாடா டிகோர் EV XZ+ லக்ஸ் மாடலின் விலை ரூ. 13 லட்சத்து 75 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- எம்ஜி மோட்டார் நிறுவனம் புதிய ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடல் முற்றிலும் புதிய முகப்பு தோற்றம் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
எம்ஜி ஹெக்டார் மாடல் இந்திய சந்தையில் பிரபலமான மிட்-சைஸ் எஸ்யுவி மாடலாக விளங்குகிறது. டாடா ஹேரியர், ஹூண்டாய் கிரெட்டா, மஹிந்திரா XUV700, கியா செல்டோஸ் போன்ற கார்களுக்கு எம்ஜி ஹெக்டார் போட்டியாக அமைகிறது. புதிய ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் வெளியீட்டை சமீபத்தில் தான் எம்ஜி மோட்டார்ஸ் உறுதிப்படுத்தியது. மேலும் இந்த கார் பற்றிய விவரங்கள் தொடர்ந்து வெளியாகும் என தெரிகிறது.
இந்த நிலையில், புதிய ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் புது ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த முறை ஹெக்டார் மாடல் எவ்வித மறைப்பும் இன்றி தெளிவாக காட்சியளிக்கிறது. அதன்படி ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன்புறம் அதிக மாற்றங்களுடன் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் அளவில் பெரிய டைமண்ட் மெஷ் கிரில், க்ரோம் சரவுண்ட்கள் உள்ளது.

இத்துடன் அதிரடியாக காட்சியளிக்கும் பம்ப்பர்கள், புதிய முக்கோன வடிவம் கொண்ட ஹெட்லேம்ப் ஹவுசிங் உள்ளது. இதே போன்ற செட்டப் ஹெக்டார் பிளஸ் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யுவி-யில் தற்போதைய மாடலில் இருப்பதை போன்ற டேடைம் ரன்னிங் லேம்ப்கள் உள்ளன. இவை புதிய முன்புற கிரிலின் மேல்புறத்தில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யுவி-யில் புதிய எல்இடி டெயில்லைட்கள், மேம்பட்ட அலாய் வீல்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
உள்புறம் புதிய ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 14 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, எம்ஜி நிறுவனத்தின் நெக்ஸ்ட்-ஜென் ஐ ஸ்மார்ட் டெக் வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ரிவைஸ்டு டேஷ்போர்டு லே-அவுட், D-வடிவ ஏசி வெண்ட்கள் வழங்கப்படுகிறது.
இந்த காரில் மேம்பட்ட டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS), ஏராளமான ஏர்பேக், ABS, EBD, சீட் பெல்ட் ரிமைண்டர் என பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகிறது. புதிய ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடல் 143 ஹெச்பி பவர் கொண்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 143 ஹெச்பி பவர் கொண்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் ஹைப்ரிட் மற்றும் 170 ஹெச்பி பவர் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.
Photo Courtesy: MotorBeam
- டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தொடர்ந்து புது கார்களை அறிமுகம் செய்து வருகிறது.
- டாடா நிறுவத்தின் புதிய CNG மாடல் விலை விவரங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ NRG i-CNG வெர்ஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய டியாகோ NRG i-CNG விலை ரூ. 7 லட்சத்து 40 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இது இந்தியாவின் முதல் டஃப் ரோடர் CNG என டாடா மோட்டார்ஸ் தெரிவித்து இருக்கிறது. புதிய டாடா டியாகோ NRG i-CNG மாடல் XT மற்றும் XZ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
டாடா டியாகோ NRG i-CNG மாடலில் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 72 ஹெச்பி பவர், 95 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

இத்துடன் புதிய டியாகோ NRG i-CNG மாடலின் வெளிப்புறம் பிளாக் பாடி கிலாடிங் செய்யப்பட்டு இருக்கிறது. முன்புறம் மற்றும் பின்புறத்தில் புதிதாக ஃபௌக்ஸ் ஸ்கிட் பிலேட்கள், பிளாக் ரூஃப், ORVM-கள், ரூஃப் ரெயில்கள், ஃபாக் லைட்கள், டெயில் கேட் மீது பிளாஸ்டிக் கிலாடிங், டூயல் டோன் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த கார் கிளவுடி கிரே, ஃபயர் ரெட், போலார் வைட் மற்றும் ஃபாரெஸ்டா கிரீன் என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது.
காரின் உள்புறத்தில் சார்கோல் பிளாக் தீம், 7 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 8 ஸ்பீக்கர்கள் கொண்ட சரவுண்ட் சவுண்ட் மியூசிக் சிஸ்டம், ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள், கூல்டு குளோவ் பாக்ஸ், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ஃபிலாட் பாட்டம் ஸ்டீரிங் வீல், என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன், ஓட்டுனர் இருக்கை உயரத்தை அடஜஸ்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
விலை விவரங்கள்:
டாடா டியாகோ NRG i-CNG XT ரூ. 7 லட்சத்து 40 ஆயிரம்
டாடா டியாகோ NRG i-CNG XZ ரூ. 7 லட்சத்து 80 ஆயிரம்
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
- மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் S-CNG பொருத்தப்பட்ட கார்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகப்படுத்தி வருகிறது.
- சமீபத்தில் மாருதி சுசுகி பலேனோ மற்றும் XL6 கார்களின் S-CNG வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
மாருதி சுசுகி நிறுவனம் புதிய ஆல்டோ K10 S-CNG வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஆல்டோ K10 S-CNG விலை ரூ. 5 லட்சத்து 94 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஆல்டோ K10 S-CNG சேர்த்தால் இந்திய சந்தையில் மாருதி சுசுகி நிறுவனம் மொத்தத்தில் 13 S-CNG கார்களை விற்பனை செய்து வருகிறது. இவை அனைத்தும் ஃபேக்டரி ஃபிட் செய்யப்பட்டே வழங்கப்படுகின்றன.
புதிய மாருதி சுசுகி ஆல்டோ K10 S-CNG மாடலில் 1.0 லிட்டர், K சீரிஸ் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 56 ஹெச்பி பவர், 82.1 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் யூனிட் வழங்கப்படுகிறது. மேலும் இந்த கார் லிட்டருக்கு 33.85 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.

"ஆல்டோ பிராண்டு எப்போதும், மாருதி சுசுகி வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் கனவுகளுக்கு ஏற்ப எப்படி தங்களை மாற்றிக் கொண்டுள்ளது என்பதை வெளிப்படுத்தும் அடையாளம். ஆல்டோ மாடல் இந்திய சந்தையில் தொடர்ச்சியாக 16 ஆண்டுகளுக்கு அதிகம் விற்பனையாகும் கார் மாடல் என்ற பெருமையை பெற்று இருக்கிறது. மேலும் புதிய S-CNG மாடல் இதன் விற்பனையை மேலும் அதிகப்படுத்தும்."
"இதுவரை சுமார் பத்து லட்சத்திற்கும் அதிக S-CNG வாகனங்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து இருக்கிறோம். புதிய ஆல்டோ K10 மாடலில் S-CNG கிட் வழங்கி இருப்பதை அடுத்து, பலர் இந்த காரை வாங்க விரும்புவர். எஹ்கலின் S-CNG பிரிவு மிகவும் விசேஷமைக டிசைன் செய்யப்பட்டு, இந்திய சாலைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டு இருக்கிறது." என்று மாருதி சுசுகி நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பர பிரிவு மூத்த நிர்வாக அலுவலர் சஷான்க் ஸ்ரீவஸ்தவா தெரிவித்து இருக்கிறார்.






