என் மலர்
கார்
- ஹூண்டாய் நிறுவனம் தனது ஐ20 மாடலின் டீசல் வேரியண்ட் விற்பனையை நிறுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய புகை விதிகள் அமலுக்கு வர இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்தியாவில் புதிய பிஎஸ்6 புகை விதிகள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமலுக்கு வந்தது. இதன் காரணமாக பல்வேறு காம்பேக்ட் மற்றும் மிட்-சைஸ், சில ஆடம்பர வாகனங்களில் டீசல் என்ஜின்கள் நிறுத்தப்பட்டது. அதிக முதலீடு மற்றும் டீசல் திறன் வாகனங்களுக்கான மோகம் குறைவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதே போன்று அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி புதிய புகை விதிகள் அமலுக்க வர இருக்கிறது. அடுத்த ஆண்டு ரியல் டிரைவிங் எமிஷன் விதிகள் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக சிறிய டீசல் என்ஜின் கொண்ட வாகனங்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் அமலுக்கு வர இருக்கிறது.

இவ்வாறு புதிய புகை விதியில் பாதிக்கப்படும் முதல் கார் மாடலாக ஹூண்டாய் ஐ20 டீசல் இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது ஹூண்டாய் ஐ20 மற்றும் டாடா அல்ட்ரோஸ் என இரு ஹேச்பேக் கார்கள் மட்டும் டீசல் என்ஜின் ஆப்ஷனில் டைக்கின்றன. முன்னதாக ஹூண்டாய் நிறுவனம் கிராண்ட் ஐ10 நியோஸ், ஆரா மாடல்களின் டீசல் வேரியண்ட் விற்பனையை நிறுத்தியது.
இவற்றில் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட 75 பிஎஸ் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருந்தது. ஹூண்டாய் ஐ20 மாடலில் தற்போது இரண்டு விதமான பெட்ரோல் என்ஜின்கள் மற்றும் 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
- ஸ்கோடா நிறுவனத்தின் குஷக் ஸ்பெஷல் எடிஷன் கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
- புது மாடல் ஸ்கோடா குஷக் சீரிசில் இரண்டாவது ஸ்பெஷல் எடிஷன் மாடல் ஆகும்.
இந்தியாவில் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை அடுத்து கார் மற்றும் இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் அசத்தல் சலுகை மற்றும் புது மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றனர். இந்த வரிசையில் ஸ்கோடா குஷக் ஆனிவர்சரி எடிஷன் இணைந்துள்ளது.
ஏற்கனவே ஸ்கோடா குஷக் மாண்ட் கர்லோ எடிஷன் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், ஆனிவர்சரி எடிஷன் குஷக் சீரிசில் இரண்டாவது ஸ்பெஷல் எடிஷன் மாடலாக அமைந்துள்ளது. ஸ்கோடா குஷக் ஆனிவர்சரி எடிஷன்- கேண்டி வைட் மற்றும் கார்பன் ஸ்டீல் என இரண்டு விதமான நிறங்களில் உருவாகி இருப்பதை உறுதிப்படுத்தும் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது.

புதிய ஸ்பெஷல் எடிஷன் காரின் பக்கவாட்டு கிளாடிங், டோர் எட்ஜ் கார்டு உள்ளிட்டவைகளில் சில்வர் இன்சர்ட் மற்றும் சி பில்லர் டீக்கல் மீது ஆனிவர்சரி எடிஷன் எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இவை தவிர புதிய ஆனிவர்சரி எடிஷனில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. குஷக் ஸ்பெஷல் எடிஷன் மாடல் குஷக் டாப் எண்ட் ஸ்டைல் வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
ஸ்பெஷல் எடிஷன் மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், 17 இன்ச் அலாய் வீல்கள், ஸ்ப்லிட் டெயில் லேம்ப்கள், சில்வர் ரூப் ரெயில்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 10 இன்ச் டச் ஸ்கிரீன் வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.
தற்போது ஸ்கோடா குஷக் மாடல் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ மற்றும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ என இருவித என்ஜின், மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. விலையை பொருத்தவரை புதிய ஸ்கோடா குஷக் ஆனிவர்சி எடிஷன் ரூ. 15 லட்சத்து 59 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 19 லட்சத்து 09 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் தனது கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் பலன்களை அறிவித்து இருக்கிறது.
- தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு மட்டும் இந்த சலுகைகள் அக்டோபர் மாத இறுதி வரை வழங்கப்பட இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் விற்பனை மையங்களில் தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு சிறப்பு சலுகை, தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் இலவச அக்சஸரீ வடிவில் வழங்கப்படுகின்றன.
சலுகைகளை பொருத்தவரை மஹிந்திரா ஸ்கார்பியோ பழைய மாடலுக்கு ரூ. 1 லட்சத்து 75 ஆயிரம் வரை தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன. இதே போன்று XUV300 வாங்குவோருக்கு ரூ. 29 ஆயிரம் வரையிலான தள்ளுபடி, ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 4 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன.

மஹிந்திரா பொலிரோ வாங்குவோருக்கு ரூ. 6 ஆயிரத்து 500 தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 3 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 8 ஆயிரத்து 500 மதிப்புள்ள அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன. மஹிந்திரா மராசோ மாடலுக்கு ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை, ரூ. 5 ஆயிரத்து 200 கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
அக்டோபர் மாதத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய ஸ்கார்பியோ N, ஸ்கார்பியோ கிளாசிக், XUV700 மற்றும் தார் உள்ளிட்ட மாடல்களுக்கு எந்த விதமான சலுகளோ, பலன்களோ அறிவிக்கப்படவில்லை.
- ஹூண்டாய் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவைகளை அறிவித்து இருக்கிறது.
- சிறப்பு சலுகை மற்றும் பலன்கள் ஹூண்டாய் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு வழங்கப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனம் தனது தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு அக்டோபர் மாதத்திற்கான சலுகை விவரங்களை அறிவித்து இருக்கிறது. அதன்படி ஹூண்டாய் கார் மாடல்களுக்கு ரூ. 1 லட்சம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. கோனா எலெக்ட்ரிக் எஸ்யுவி, ஆரா செடான், கிராண்ட் ஐ10 நியோஸ் மற்ரும் ஐ20 ஹேச்பேக் கார் மாடல்களுக்கு ஹூண்டாய் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
அக்டோபர் மாதத்திற்கான சலுகைகள் எக்சேன்ஜ் போனஸ், தள்ளுபடி மற்றும் கார்ப்பரேட் பலன்கள் வடிவில் வழங்கப்படுகிறது. இதில் கோனா எலெக்ட்ரிக் மாடலுக்கு தள்ளுபடி சலுகை மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த காரை வாங்குவோருக்கு எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை. கோனா எலெக்ட்ரிக் காரை வாங்கும் போது ரூ. 1 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலை வாங்கும் போது ரூ. 48 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த கார் மூன்று விதமான பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை 100 ஹெச்பி பவர் வழங்கும் 1.0 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் என்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 83 ஹெச்பி பவர் வழங்கும் 1.2 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் அல்லது AMT கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹூண்டாய் ஆரா மாடலை வாங்குவோருக்கு ரூ. 33 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 3 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் ஆரா மாடல் மாருதி சுசுகி டிசையர் மற்றும் ஹோண்டா அமேஸ் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
ஹூண்டாய் ஐ20 வாங்கும் போது ரூ. 20 ஆயிரம் வரை பலன்கள் கிடைக்கும். இதில் ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. தள்ளுபடி சலுகை ஐ20 மாடலின் மேக்ரனா மற்றும் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் ஐ20 மாடல் மாருதி சுசுகி பலேனோ, டாடா அல்ட்ரோஸ் மற்றும் டொயோட்டா கிளான்சா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
- நிசான் நிறுவனத்தின் முற்றிலும் புதிய X டெரியில் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
- இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புது கார்கள் பற்றிய தகவல்களை நிசான் வெளியிட்டு உள்ளது.
நிசான் இந்தியா நிறுவனம்- நிசான் ஜூக், நிசான் கஷ்கெய் மற்றும் நிசான் X டிரெயில் என மூன்று சர்வதேச மாடல்களை காட்சிப்படுத்தி இருக்கிறது. இவற்றில் இரு மாடல்கள் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்படும் என நிசான் அறிவித்து இருக்கிறது. இவை இந்திய சந்தைக்கு ஏற்ற மாடல்களாக இருக்குமா என்ற ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்திய சந்தையில் எட்டு ஆண்டுகளுக்கு பின் ரி-எண்ட்ரி கொடுக்கும் நிசான் X டிரெயில் பல்வேறு விஷயங்களில் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி புதிய X டிரெயில் மாடல் பெட்ரோல் மற்றும் ஹைப்ரிட் என்ஜின் ஆப்ஷன்களில் வாங்கிட முடியும். இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 161 ஹெச்பி பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

ஹைப்ரிட் வெர்ஷன் "இ-பவர்" என்ற பெயரில் அழைக்கப்பட இருக்கிறது. இதில் மூன்று சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் இயங்கும் போது, வீல்களில் இருந்து பேட்டரி சார்ஜ் செய்யப்படும். முன்புற வீல் மற்றும் ஆல்-வீல் டிரைவ் ஆப்ஷன்களில் இந்த வேரியண்ட் கிடைக்கும்.
இதன் முன்புற வீல் டிரைவ் மாடல் 201 ஹெச்பி பவர், 330 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. ஆல்-வீல் டிரைவ் வேரியண்ட் 210 ஹெச்பி பவர், 525 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. ஸ்டைலிங்கை பொருத்தவரை இந்த மாடலில் வி மோஷன் முன்புற கிரில், பம்ப்பரில் மவுண்ட் செய்யப்பட்ட எல்இடி ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய நிசான் X டிரெயில் மாடல் இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். மேலும் இந்த கார் ஐந்து மற்றும் ஏழு பேர் பயணம் செய்யும் வகையில் இருவித இருக்கை அமைப்புகளுடன் வெளியிடப்படும் என தெரிகிறது.
- ஜீப் நிறுவனத்தின் புதிய கிராண்ட் செரோக்கி எஸ்யுவி விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
- புதிய தலைமுறை ஜீப் கிராண்ட் செரோக்கி கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஐந்தாம் தலைமுறை ஜீப் கிராண்ட் செரோக்கி எஸ்யுவி இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஜீப் இந்தியா நிறுவனம் புதிய எஸ்யுவி வெளியீட்டை உணர்த்தும் டீசரை முதல் முறையாக வெளியிட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் புதிய தலைமுறை கிராண்ட் செரோக்கி மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது.
புதிய ஜீப் கிராண்ட் செரோக்கி மாடலில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. எனினும், இதன் ஒட்டுமொத்த டிசைனில் அதிக மாற்றங்கள் செய்யப்படவில்லை. தோற்றத்தில் இந்த எஸ்யுவி பாக்ஸ் வடிவ டிசைன், கூர்மையான கோடுகள், புதிய கிரில், 7 இன்ச் ஸ்லாட் பேட்டன், சதுரங்க வடிவ வீல் ஆர்ச்கள், மெல்லிய ஹெட்லைட், டெயில் லைட் மற்றும் எல்இடி யூனிட்கள் வழங்கப்பட்டுள்ளன.

மற்ற அப்டேட்களுடன் இந்த காரில் ஆப் ரோடிங் சார்ந்த அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த மாடலில் 10.1 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 10 இன்ச் ஹெட்-அப் டிஸ்ப்ளே, 10.25 இன்ச் ஸ்கிரீன், யுகனெக்ட் யுஐ உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.
சர்வதேச சந்தையில் கிடைக்கும் ஜீப் கிராண்ட் செரோக்கி மாடல் 3.6 லிட்டர் பெண்டாஸ்டார் வி6 பெட்ரோல் என்ஜின், 5.7 லிட்டர் ஹெமி வி8 மற்றும் புதிய 4xe பிளக்-இன் ஹைப்ரிட் வெர்ஷன் என பல்வேறு என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய ஜீப் கிராண்ட் செரோக்கி மாடலின் பெட்ரோல் என்ஜின் கொண்ட வெர்ஷன் மட்டுமே அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.
- மாருதி சுசுகி நிறுவனத்தின் மற்றொரு காரின் சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
- புதிய சிஎன்ஜி கார் அதன் ஸ்டாண்டர்டு வேரியண்டை விட ரூ. 95 ஆயிரம் வரை விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய சிஎன்ஜி காரை அறிமுகம் செய்து இருக்கிறது. இம்முறை எஸ் பிரெஸ்ஸோ சிஎன்ஜி மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் துவக்க விலை ரூ. 5 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.
இந்த கார் LXi மற்றும் VXi என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய எஸ் பிரெஸ்ஸோ சிஎன்ஜி விலை அதன் ஸ்டாடர்டு மாடல் விலை ரூ. 95 ஆயிரம் அதிகம் ஆகும். இந்தியாவில் மாருதி சுசுகி அறிமுகம் செய்து இருக்கும் பத்தாவது சிஎன்ஜி மாடலாக எஸ் பிரெஸ்ஸோ சிஎன்ஜி அமைந்துள்ளது.

இந்த மாடலில் 1.0 லிட்டர் டூயல் ஜெட், டூயல் விவிடி பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 56 ஹெச்பி பவர், 82.1 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. புதிய எஸ் பிரெஸ்ஸோ சிஎன்ஜி மாடல் லிட்டருக்கு 32.73 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
புதிய சிஎன்ஜி காரில் சிஎன்ஜி டேன்க் மட்டுமின்றி எஸ் பிரெஸ்ஸோ மாடலின் சஸ்பென்ஷன் செட்டப் ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் டியூன் செய்யப்பட்டு உள்ளது. புதிய மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ VXi சிஎன்ஜி மாடலின் விலை ரூ. 6 லட்சத்து 10 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.
- டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ EV கார் இந்திய முன்பதிவு அமோகமாக நடைபெற்று வருகிறது.
- புதிய டியாகோ EV மாடல் முன்பதிவில் 10 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய டாடா டியாகோ EV மாடலை ரூ. 8 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் எனும் துவக்க விலையில் கடந்த மாதம் அறிமுகம் செய்தது. முன்னதாக இந்த விலை அறிமுக சலுகையாக முதல் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த சலுகை 20 ஆயிரம் வாடிக்கையாளர்கள் வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய டியாகோ EV மாடலுக்கான முன்பதிவு சில நாட்களுக்கு முன் துவங்கியது. புதிய எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. முதல் நாள் முன்பதிவின் போது ஏராளமான பிரச்சினைகள் ஏற்பட்டதாக பலர் குற்றம்சாட்டினர். எனினும், முதல் நாளில் புதிய டியாகோ EV காரை வாங்க 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்தனர்.

புதிய டாடா டியாகோ EV மாடல் நான்கு வேரியண்ட்கள், இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றில் நீண்ட ரேன்ஜ் வழங்கும் 24 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்ட மாடலை முதலில் வினியோகம் செய்ய டாடா மோட்டார்ஸ் முன்னுரிமை அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய டியாகோ EV மாடல் இந்த மாதம் துவங்கி முன்னணி நகரங்களில் காட்சிக்கு வைக்கப்படுகிறது.
டிசம்பர் 2022 வாக்கில் டியாகோ EV மாடலுக்கான டெஸ்ட் டிரைவ்கள் துவங்க உள்ளன. இந்த காரின் வினியோகம் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் துவங்கும் என தெரிகிறது. இந்திய சந்தையில் புதிய டாடா டியாகோ EV மாடல் 19.2 கிலோவாட் ஹவர் மற்றும் 24 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றுடன் வழங்கப்பட்டு இருக்கும் மோட்டார்கள் முறையே 60 ஹெச்பி பவர் மற்றும் 74 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன.
இவை முறையே 250 கிலோமீட்டர் மற்றும் 315 கிலோமீட்டர் வரை ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்றுள்ளன. இவற்றுடன் 3.3 கிலோவாட் ஏசி வால் பாக்ஸ் சார்ஜர் வழங்கப்படுகிறது. டாடா டியாகோ EV XZ+ மற்றும் XZ+ டெக் லக்ஸ் வேரியண்ட்களை வாங்குவோருக்கு 7.2 கிலோவாட் ஏசி சார்ஜர் வழங்கப்படுகிறது.
- சீன எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான பிஒய்டி இந்திய சந்தையில் புதிய அட்டோ 3 காரை சமீபத்தில் அறிமுகம் செய்தது.
- புதிய பிஒய்டி அட்டோ 3 முழு சார்ஜ் செய்தால் 521 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்டுள்ளது.
சீனாவை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர் பிஒய்டி ஐந்து கதவுகள் கொண்ட அட்டோ 3 எலெக்ட்ரிக் எஸ்யுவி-யை இந்தியாவில் சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த கார் யூரோ என்கேப் கிராஷ் டெஸ்டில் ஐந்து நட்சத்திர குறியீடுகளை பெற்று இருக்கிறது. இந்த முடிவுகள் வலதுபுறம் மற்றும் இடதுபுற டிரைவ் கொண்ட இரு வேரியண்ட்களுக்கும் பொருந்தும்.
குளோபல் என்கேப் போன்றே யூரோ என்கேப் அட்டோ 3 காரின் பேஸ் வேரியண்டை சோதனை செய்தது. இந்த காரில் ஏழு ஏர்பேக், சீட் பெல்ட் பிரிடென்ஷனர்கள், ஐசோபிக்ஸ் ஆன்க்கர், ADAS அம்சங்களான ஆட்டோனோமஸ் எமர்ஜன்சி பிரேக்கிங், லேன் கீப் அசிஸ்ட், ஸ்பீடு அசிஸ்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. அனைத்து அம்சங்களும் இந்திய மாடலிலும் உள்ளது.

பெரியவர்கள் பயணிக்கும் பிரிவில் அட்டோ 3 மாடல் 91 சதவீத புள்ளிகளை பெற்று அசத்தி இருக்கிறது. இந்த கார் 38-இல் 34.7 புள்ளிகளை பெற்றுள்ளது. இந்த கார் ஓட்டுனர் மற்றும் பயணிகளுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கி இருக்கிறது. பக்கவாட்டு டெஸ்டிங்கிலும் அதிக புள்ளிகளை அட்டோ 3 பெற்றுள்ளது.
குழந்தைகள் பயணிக்கும் போது எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் அனைத்து விட டெஸ்டிங்கிலும் அதிக புள்ளிகளை பெற்று இருக்கிறது. ஆறு வயது முதல் பத்து வயதுடைய குழந்தைகளுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும் என கிராஷ் டெஸ்டிங்கில் உறுதியாகி இருக்கிறது. இந்த கார் 49-க்கு 44 புள்ளிகளை பெற்றுள்ளது.
- லெக்சஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ES300h மாடல் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது.
- முன்னதாக 2020 வாக்கில் லெக்சஸ் ES சீரிஸ் இந்தியாவில் முதன் முதலில் உற்பத்தி செய்ய ஆரம்பிக்கப்பட்டது.
லெக்சஸ் இந்தியா நிறுவனம் மேட்-இன்-இந்தியா ES300h மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய லெக்சஸ் ES300h விலை ரூ. 59 லட்சத்து 71 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 2020 ஆண்டு லெக்சஸ் நிறுவனம் ES சீரிஸ் மாடல்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய துவங்கியது. அந்த வகையில் புதிய ES300h லெக்சஸ் இந்தியாவில் உற்பத்தி செய்யும் நான்கவாது மாடலாக அமைந்துள்ளது.
மேட்-இன்-இந்தியா லெக்சஸ் ES300h மாடல்- எக்ஸ்குசிட் மற்றும் லக்சரி என இரண்டு வெர்ஷன்களில் கிடைக்கிறது. புது மாடலில் அதநவீன டச் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி, குரல் மூலம் அம்சங்களை இயக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ES மாடலின் செண்டர் கன்சோல் ரி-டிசைன் செய்யப்பட்டு கூடுதலாக ஸ்டோரேஜ் ஸ்பேஸ் வழங்கப்பட்டுள்ளது.

புதிய லெக்சஸ் ES300h மாடலில் 2.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 88 கிலோவாட், 202 நியூட்டன் மீட்டர் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 175 ஹெச்பி பவர், 221 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. என்ஜின் மற்றும் ஹைப்ரிட் சிஸ்டம் இணைந்து 215 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. இத்துடன் e-CVT ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் புதிய லெக்சஸ் ES300h லக்சரி வேரியண்ட் விலை ரூ. 65 லட்சத்து 81 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது பேஸ் வேரியண்டை விட ரூ. 6 லட்சம் வரை விலை அதிகம் ஆகும்.
- டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ EV கார் இந்திய முன்பதிவு நேற்று துவங்கியது.
- முன்பதிவின் போது ஏராளமான பிரச்சினைகள் ஏற்பட்டதாக பலர் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டி வந்தனர்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய டாடா டியாகோ EV மாடலை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் புதிய டியாகோ EV கார் விலை ரூ. 8 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.
இந்த விலை அறிமுக சலுகையாக முதல் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. புதிய டியாகோ EV மாடலுக்கான முன்பதிவு இந்தியாவில் நேற்று துவங்கியது. புதிய எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

முன்பதிவின் போது ஏராளமான பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், முன்பதிவு செய்ய முடியவில்லை என்றும் பலர் குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில், முதல் நாளில் புதிய டியாகோ EV காரை வாங்க 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்து இருக்கிறது.
புதிய டாடா டியாகோ EV மாடல் நான்கு வேரியண்ட்கள், இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றில் நீண்ட ரேன்ஜ் வழங்கும் 24 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்ட மாடலை முதலில் வினியோகம் செய்ய டாடா மோட்டார்ஸ் முன்னுரிமை அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய டியாகோ EV மாடல் இந்த மாதம் துவங்கி முன்னணி நகரங்களில் காட்சிக்கு வைக்கப்படுகிறது.
டிசம்பர் 2022 வாக்கில் டியாகோ EV மாடலுக்கான டெஸ்ட் டிரைவ்கள் துவங்க உள்ளன. இந்த காரின் வினியோகம் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் துவங்கும் என தெரிகிறது. இந்திய சந்தையில் புதிய டாடா டியாகோ EV மாடல் 19.2 கிலோவாட் ஹவர் மற்றும் 24 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றுடன் வழங்கப்பட்டு இருக்கும் மோட்டார்கள் முறையே 60 ஹெச்பி பவர் மற்றும் 74 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன.
இவை முறையே 250 கிலோமீட்டர் மற்றும் 315 கிலோமீட்டர் வரை ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்றுள்ளன. இவற்றுடன் 3.3 கிலோவாட் ஏசி வால் பாக்ஸ் சார்ஜர் வழங்கப்படுகிறது. டாடா டியாகோ EV XZ+ மற்றும் XZ+ டெக் லக்ஸ் வேரியண்ட்களை வாங்குவோருக்கு 7.2 கிலோவாட் ஏசி சார்ஜர் வழங்கப்படுகிறது.
டாடா டியாகோ EV மாடல் டாடா டியாகோ காரை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் லெதரெட் இருக்கைகள், டிரை-ஆரோ பேட்டன், புஷ் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன், கூல்டு கிளவ்பாக்ஸ், எலெக்ட்ரிக் போல்டபில் மிரர்கள், பெரிய தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 8 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
- டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் இந்திய முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.
- புதிய டாடா எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடல் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் வினியோகம் செய்யப்பட உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த மாதம் இந்திய சந்தையில் டாடா டியாகோ EV மாடலினை அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் விலை ரூ. 8 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இந்த கார் மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய டாடா டியாகோ EV மாடல் நான்கு வேரியண்ட்கள், இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றில் நீண்ட ரேன்ஜ் வழங்கும் 24 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்ட மாடலை முதலில் வினியோகம் செய்ய டாடா மோட்டார்ஸ் முன்னுரிமை அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய டியாகோ EV மாடல் இந்த மாதம் துவங்கி முன்னணி நகரங்களில் காட்சிக்கு வைக்கப்படுகிறது.

டிசம்பர் 2022 வாக்கில் டியாகோ EV மாடலுக்கான டெஸ்ட் டிரைவ்கள் துவங்க உள்ளன. இந்த காரின் வினியோகம் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் துவங்கும் என தெரிகிறது. இந்திய சந்தையில் புதிய டாடா டியாகோ EV மாடல் 19.2 கிலோவாட் ஹவர் மற்றும் 24 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றுடன் வழங்கப்பட்டு இருக்கும் மோட்டார்கள் முறையே 60 ஹெச்பி பவர் மற்றும் 74 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன.
இவை முறையே 250 கிலோமீட்டர் மற்றும் 315 கிலோமீட்டர் வரை ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்றுள்ளன. இவற்றுடன் 3.3 கிலோவாட் ஏசி வால் பாக்ஸ் சார்ஜர் வழங்கப்படுகிறது. டாடா டியாகோ EV XZ+ மற்றும் XZ+ டெக் லக்ஸ் வேரியண்ட்களை வாங்குவோருக்கு 7.2 கிலோவாட் ஏசி சார்ஜர் வழங்கப்படுகிறது.
டாடா டியாகோ EV மாடல் டாடா டியாகோ காரை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் லெதரெட் இருக்கைகள், டிரை-ஆரோ பேட்டன், புஷ் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன், கூல்டு கிளவ்பாக்ஸ், எலெக்ட்ரிக் போல்டபில் மிரர்கள், பெரிய தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 8 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.






