என் மலர்
கார்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹேரியர் காரை டூயல் டோன் ஃபினிஷில் அறிமுகம் செய்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் ஹேரியர் எஸ்.யு.வி. மாடலை டூயல் டோன் நிறங்களில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹேரியர் டூயல் டோன் நிறங்களின் விலை ரூ. 16.76 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் கிடைக்கிறது.
ஹேரியர் கார் தற்சமயம்: கலிஸ்டோ காப்பர் / பிளாக் மற்றும் ஆர்கஸ் வைட் / பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. ஹேரியர் கார் வழக்கமான ஒற்றை நிற வேரியண்ட்களுடன் டூயல் டோன் ஆப்ஷனும் கிடைக்கிறது. புதிய டூயல் ஃபினிஷ் டாடா ஹேரியர் 10,000 யூனிட்கள் விற்பனையை கொண்டாடும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் டாடா ஹேரியர் கார் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய டூயல் டோன் நிறங்கள் டாப் எண்ட் மாடலான ஹேரியர் XZ வேரியண்ட்டில் மட்டும் கிடைக்கிறது.

டாடா ஹேரியர் மாடல் அந்நிறுவனத்தின் புதிய OMEG பிளாட்ஃபார்மை சார்ந்து உருவாகி இருக்கிறது. புதிய ஹேரியர் எஸ்.யு.வி. இந்தியாவில் ஜீப் காம்பஸ் மற்றும் ஹூன்டாய் டக்சன் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். புதிய ஹேரியர் எஸ்.யு.வி. மாடலின் முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கிவிட்டது.
இந்தியாவில் டாடா ஹேரியர் எஸ்.யு.வி. மாடலின் துவக்க விலை ரூ. 12.99 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 16.55 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி இந்தியாவில் தனது இ டிரான் எலெக்ட்ரிக் கார் விவரங்களை வெளியிட்டுள்ளது.
ஜெர்மனி நாட்டு ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி தனது இ டிரான் எலெக்ட்ரிக் கார் விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த கார் ஜூலை 12 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஆடி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் நவம்பர் மாதத்தில் வெளியாக இருக்கிறது. இந்தியாவில் வெளியானதும் இ டிரான் கார் மெர்சிடிஸ் பென்ஸ் இ.கியூ.சி. மற்றும் ஜாகுவார் ஐ-பேஸ் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.
புதிய ஆடி இ டிரான் கார் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்.இ.பி. பிளாட்ஃபார்மில் உருவாகியுள்ளது. காரின் அளவு ஆடி கியூ5 மற்றும் கியூ7 மாடல்களுக்கு மத்தியில் இருக்கிறது. இ டிரான் காரில் அகலமான சில்வர் ஃபினிஷ் கிரில், டைனமிக் ஃபிளாப்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆடி இ டிரான் காரில் ஷார்ப் கட் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. காரின் பக்கவாட்டில் வழக்கமான ஆடி வடிவமைப்பு பின்பற்றப்பட்டுள்ளது. புதிய எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. கார் 20-இன்ச் கிரே வீல்களை கொண்டிருக்கிறது. இதன் ரியர்வியூ கண்ணாடிகள் பக்கவாட்டில் கேமராக்களாக வழங்கப்பட்டுள்ளன.
புதிய இ டிரான் காரின் முன்புறம் இடதுபக்க ஃபென்டரில் சார்ஜிங் சாக்கெட் பொருத்தப்பட்டுள்ளது. புதிய காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 432 செல்கள் 36 மாட்யூல்களில் வழங்கப்பட்டுள்ளது.
காரின் பின்புறம் மெல்லிய ஏரோ-ட்வீக் செய்யப்பட்ட எல்.இ.டி. டெயில்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளது. இவை எல்.இ.டி. லைட் ஸ்ட்ரிப்களால் இணைக்கப்பட்டுள்ளன. காட்சிக்கு வைக்கப்பட்ட ஆடி இ டிரான் கார் முற்றிலும் பிளாக் இன்டீரியர் மற்றும் பிரீமியம் லெதர் இருக்கைகளை கொண்டிருக்கிறது.
இந்தியாவில் எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஹெக்டார் காரை வாங்க ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்துள்ளனர்.
எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் வாகனம் இந்தியாவில் ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. புதிய எம்.ஜி. ஹெக்டார் கார் துவக்க விலை ரூ. 12.18 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் எம்.ஜி. ஹெக்டார் காரை வாங்க 23 நாட்களில் சுமார் 10,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதனை எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. புதிய ஹெக்டார் காரின் விநியோகம் ஜூலை மாத முதல் வாரத்தில் துவங்குகிறது.
புதிய ஹெக்டார் கார்: ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் டாப்-எண்ட் மாடல் விலை ரூ. 16.88 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய எம்.ஜி. ஹெக்டார் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 2.0 லிட்டர் எஃப்.சி.ஏ. டீசல் என்ஜின் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் 141 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் என இருவித டிரான்ஸ்மிஷன்களில் கிடைக்கிறது.
காரின் உள்புறம் 10.3 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது வோடபோனின் இசிம் தொழிலநுட்பத்தில் இணைய வசதியை வழங்குகிறது. எம்.ஜி. ஹெக்டார் டிஸ்ப்ளேவில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே போன்ற கனெக்டிவிட்டி வசதியும், எதிர்காலத்தில் டன்-பை-டன் நேவிகேஷன் வசதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய செல்டோஸ் எஸ்.யு.வி. கார் இந்திய வெளியீட்டு தேதியை தொடர்ந்து பார்ப்போம்.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது செல்டோஸ் எஸ்.யு.வி. காரை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. கியா செல்டோஸ் கார் இந்திய விற்பனை ஆகஸ்டு 22 ஆம் தேதி துவங்க இருக்கிறது. கியா செல்டோஸ் கார் சர்வதேச சந்தையில் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது.
கொரிய பிராண்டான கியா மோட்டார்ஸ் இந்தியாவில் வெளியிடும் முதல் வாகனமாக கியா செல்டோஸ் இருக்கிறது. தற்சமயம் கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியா முழுக்க விற்பனை மையங்களை கட்டமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
கியா செல்டோஸ் கார் முற்றிலும் புதிய வடிவமைப்பில் ஸ்போர்ட் தோற்றம் பெற்றிருக்கிறது. இதன் முன்புறம் டைகர் கிரில், எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள். வழங்கப்பட்டுள்ளன. முன்புற பம்ப்பரிஸ் ஸ்போர்ட் தீம் மற்றும் சென்ட்ரல் ஏர் இன்டேக் ஃபாக் லேம்ப்களில் வழங்கப்பட்டுள்ளது.

புதிய எஸ்.யு.வி. கார்: 115 பி.ஹெச்.பி. மற்றும் 144 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் 1.5 லிட்டர் ஸ்மார்ட்ஸ்டிரீம் பெட்ரோல் என்ஜின், 115 பி.ஹெச்.பி. மற்றும் 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் 1.5 லிட்டர் CRDi டீசல் யூனிட் மற்றும் 140 பி.ஹெச்.பி. மற்றும் 242 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் 1.4 லிட்டர் டி-ஜி.டி.ஐ. டர்போ-பெட்ரோல் என்ஜின் என மூன்று வித ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
அனைத்து என்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 6-ஸ்பீடு ஏ.டி., ஐ.வி.டி. மற்றும் 7-ஸ்பீடு டி.சி.டி. என மூன்று ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் வருகிறது.
எம்.ஜி. மோட்டார் நிறுவனம் இந்தியாவில் தனது ஹெக்டார் காரினை வெளியிட்டுள்ளது. இதன் விலை விவரங்களை பார்ப்போம்.
எம்.ஜி. மோட்டார் நிறுவனம் இந்தியாவில் தனது ஹெக்டார் காரை வெளியிட்டது. புதிய ஹெக்டார் அந்நிறுவனத்தின் முதல் மாடல் ஆகும். இந்தியாவில் எம்.ஜி. ஹெக்டார் காரின் விலை ரூ. 12.18 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஹெக்டார் கார்: ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் டாப்-எண்ட் மாடல் விலை ரூ. 16.88 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் எம்.ஜி. ஹெக்டார் காருக்கான முன்பதிவு ரூ. 50,000 கட்டணத்தில் ஏற்கனவே துவங்கப்பட்டு விட்டது. எம்.ஜி. மோட்டார் விற்பனை மையங்களில் புதிய ஹெக்டார் கார் ஏற்கனவே வந்தடைந்து விட்டது. அந்த வகையில் இந்த காரின் விநியோகம் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய எம்.ஜி. ஹெக்டார் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 2.0 லிட்டர் எஃப்.சி.ஏ. டீசல் என்ஜின் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் 141 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் என இருவித டிரான்ஸ்மிஷன்களில் கிடைக்கிறது.
காரின் உள்புறம் 10.3 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது வோடபோனின் இசிம் தொழிலநுட்பத்தில் இணைய வசதியை வழங்குகிறது. எம்.ஜி. ஹெக்டார் டிஸ்ப்ளேவில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே போன்ற கனெக்டிவிட்டி வசதியும், எதிர்காலத்தில் டன்-பை-டன் நேவிகேஷன் வசதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளேவுடன் 8 ஸ்பீக்கர்கள் இணைக்கப்பட்டு ஒரு சப் ஊஃபர் மற்றும் ஆம்ப்ளிஃபையர் ஆடியோ செட்டப் வழங்கப்படுகிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை 360-டிகிரி கேமரா, குரூஸ் கண்ட்ரோல், கீ-லெஸ் எண்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் பல்வேறு இதர வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஜீப் இந்தியா நிறுவனத்தின் புதிய காம்பஸ் டிரெயில்ஹாக் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஜீப் இந்தியா நிறுவனம் காம்பஸ் டிரெயில்ஹாக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஜீப் காம்பஸ் டிரெயில்ஹாக் கார் விலை ரூ.26.8 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய டிரெயில்ஹாக் கார் தான் இந்தியாவில் காம்பஸ் எஸ்.யு.வி. மாடல்களில் தற்சமயம் டாப் எண்ட் மாடலாக இருக்கிறது.
ஜீப் காம்பஸ் டிரெயில்ஹாக் காரில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் புதிய பம்ப்பர்கள், அதிகளவு கிரவுண்ட் கிளியரன்ஸ், ஆண்டி-கிளேர் பிளாக் டீக்கல் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. காரின் இருபுறமும் முற்றிலும் புதிய பம்ப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.

காரின் உள்புறம் காம்பஸ் டிரெயில்ஹாக் கார் முற்றிலும் பிளாக் நிற ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் லெதர் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. காரின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், கியர் லீவர் மற்றும் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவற்றை சுற்றி சிவப்பு நிற அக்சென்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய ஜீப் காம்பஸ் டிரெயில்ஹாக் மாடலில் பி.எஸ். VI விதிகளுக்கு பொருந்தும் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 2.0 லிட்டர் யூனிட் போன்று 173 பி.ஹெச்.பி. பவர், 350 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 9-ஸ்பீடு AT கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் புதிய காரில் ராக் மோட் எனும் டிரைவிங் மோட் சேர்க்கப்பட்டுள்ளது. இத்துடன் 4x4 டிரைவ்டிரெயின் வழங்கப்பட்டுள்ளது. காரின் உள்புறம் 7.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஸ்டார்ட் / ஸ்டாப் வசதி, கீலெஸ் எண்ட்ரி உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஃபோர்டு நிறுவனம் தனது ஜி.டி. ஹார்டுகோர் எடிஷன் கார் டீசரினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த கார் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஃபோர்டு நிறுவனம் தனது ஜி.டி. காரின் ஹார்டுகோர் எடிஷனை 2019 குட்வுட் ஃபெஸ்டிவல் ஆஃப் ஸ்பீடு நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
புதிய கார் அறிமுகமாக இருப்பதையொட்டி காரின் டீசரை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது. டீசர் புகைப்படம் தவிர காரின் எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. எனினும், டீசரை பார்க்கும் போது இது வழக்கமான ஜி.டி. போன்று காட்சியளிக்கவில்லை.

ஃபோர்டு ஜி.டி. ஹார்டுகோர் எடிஷன் பார்க்க கிட்டத்தட்ட எல்.எம். ஜி.டி.இ. ப்ரோ ரேஸ் கார் போன்றே காட்சியளிக்கிறது. எல்.எம்.பி.1யை தொடர்ந்து எஃப்.ஐ.ஏ. வொர்ல்டு எண்டியூரன்ஸ் சேம்பியன்ஷிப் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு நிறுவனங்கள் போட்டியில் கலந்து கொள்வது பற்றிய தங்களது முடிவினை அறிவிக்காமல் இருக்கிறது.
டொயோட்டா நிறுவனம் போட்டியில் கலந்து கொள்வதாக சமீபத்தில் அறிவித்த நிலையில், ஆஸ்டன் மார்டின் தனது வேல்கைரி மாடலை களமிறக்குவது பற்றி எவ்வித தகவலும் இல்லை. ஃபோர்டு நிறுவனம் தனது ஜி.டி. ஹார்டுகோர் எடிஷன் கொண்டு வொர்ல்டு என்டியூரன்ஸ் சேம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள தயாராகி இருக்கிறது.
புதிய கார் அறிமுகமாக இருப்பதையொட்டி காரின் டீசரை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது. டீசர் புகைப்படம் தவிர காரின் எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. எனினும், டீசரை பார்க்கும் போது இது வழக்கமான ஜி.டி. போன்று காட்சியளிக்கவில்லை.
காரின் பின்புறம் ரியர் விங் பொருத்தப்பட்டிருக்கிறது. இதுதவிர புதிய காரில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. எனினும், மாற்றங்கள் பற்றிய முழு விவரங்கள் குட்வுட் நிகழ்வில் தான் தெரியவரும். பின்புறம் பிரம்மாண்ட ரியர் விங் மற்றும் ரூஃப் ஸ்கூப் உள்ளிட்டவை இந்த கார் ஃபோர்டு நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் செயல்திறன் வழங்கும் மாடலாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது.

டொயோட்டா நிறுவனம் போட்டியில் கலந்து கொள்வதாக சமீபத்தில் அறிவித்த நிலையில், ஆஸ்டன் மார்டின் தனது வேல்கைரி மாடலை களமிறக்குவது பற்றி எவ்வித தகவலும் இல்லை. ஃபோர்டு நிறுவனம் தனது ஜி.டி. ஹார்டுகோர் எடிஷன் கொண்டு வொர்ல்டு என்டியூரன்ஸ் சேம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள தயாராகி இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி. 300 காரின் ஏ.எம்.டி. வெர்ஷன் விவரங்கள் வெளியாகியுள்ளது.
எஸ்.யு.வி. மாடல்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் மஹிந்திரா நிறுவனத் தயாரிப்புகளுள் ஒன்றாக எக்ஸ்.யு.வி300 இருக்கிறது. இந்த மாடலில் மஹிந்திரா ஆட்டோமேடிக் கியர் டிரான்ஸ்மிஷன் வசதியை (ஏ.எம்.டி.) அறிமுகம் செய்கிறது. டீசல் மாடலில் ஏ.எம்.டி. வசதியோடு எக்ஸ்.யு.வி 300 அறிமுகமாகிறது.
இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 கார் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில்தான் அறிமுகமானது. அப்போதே ஏ.எம்.டி. வசதி கொண்ட மாடல் பின்னர் அறிமுகமாகும் என மஹிந்திரா தெரிவித்தது. இந்த மாடல் பெருமளவு வரவேற்பு பெற்றுள்ளது. இதனால் இதில் ஏ.எம்.டி. வெர்ஷனை மஹிந்திரா அறிமுகம் செய்கிறது.
இந்த மாடல் தவிர மஹிந்திராநின் மராசோ மாடலிலும், மரேலி ஆட்டோமேடட் மானுவல் டிரான்ஸ்மிஷன் (ஏ.எம்.டி.) வசதியை வழங்க முடிவு செய்யப்பட்டது.

இந்த காரின் 110 ஹெச்.பி., 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 117 ஹெச்.பி., 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆகிய இரு மாடல்களிலுமே மானுவல் கியர் டிரான்ஸ்மிஷன் வசதி தான் வழங்கப்பட்டிருந்தது. இவை இரண்டுமே 6 கியர்களைக் கொண்டிருந்தன. தற்போது இந்த மாடலில் ஏ.எம்.டி. வசதி வழங்கப்படுகிறது.
தற்சமயம் சந்தையில் கிடைக்கும் ஃபோர்டு இகோ ஸ்போர்ட், ஹூன்டாய் வென்யூ, டாடா நெக்சான், மாருதி விடாரா பிரெஸ்ஸா ஆகிய மாடல்களின் டீசல் வெர்ஷனில் ஏ.எம்.டி. வசதி கிடையாது. அந்த வகையில் எக்ஸ்.யு.வி300 மிகச் சிறந்த வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்தியாவில் ஏ.எம்.டி. வெர்ஷன் விலை வழக்கமான மாடலை விட ரூ.50 ஆயிரம் வரை அதிகமாக இருக்கும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது.
ஆடி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஆடி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் ஆடி இ-டிரான் மாடல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் இந்த கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் ஆடி இ-டிரான் கார் ஜூன் 27 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் விற்பனை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
சர்வதேச சந்தையில் களமிறங்கும் ஆடி நிறுவனத்தின் முதல் ஆடம்பர கார் மாடல் ஆகும். ஆடி இ-டிரான் காரில் கூர்மையான வடிவமைப்பு காரின் தோற்றத்தை அழகாக வெளிப்படுத்துகிறது. முன்புற கிரில் ஆக்டாகோனல் வடிவமைப்பில் வழங்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் பார்க்கும் போது இ-டிரான் எஸ்.யு.வி. கிராஸ்ஓவர் சில்ஹௌட் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் புதிய இ-டிரான் கார் ஆடி கியூ5 மற்றும் கியூ7 மாடல்களுக்கு மத்தியில் நிலைநிறுத்தப்படும் என தெரிகிறது. காரின் பின்புறம் ஸ்லோபிங் ரூஃப் லைன், எல்.இ.டி. டெயில்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. காரின் ஒட்டுமொத்த வடிவமைப்பு கியூ ரக மாடல்களை போன்று கட்சியளிக்கிறது.

ஆடி இ-டிரான் எஸ்.யு.வி. மாடல் ஒவ்வொரு ஆக்சில்களிலும் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்களுடன் வருகிறது. முன்புற மோட்டார் 125 கிலோவாட் திறனும், பின்புற மோட்டார் 14 கிலோவாட் திறனும் வெளிப்படுத்துகிறது. இதன் செயல்திறன் 355 பி.ஹெச்.பி. மற்றும் 561 என்.எம். டார்க் கொண்டிருக்கிறது.
இதுதவிர இந்த காரில் பீஸ்ட் மோட் வசதியும் வழங்கப்படுகிறது. இது காரின் செயல்திறனை 300 கிலோவாட் வரை அதிகரிக்கும். ஆடி இ-டிரான் கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 200 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
மேலும் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6.6 நொடிகளில் எட்டிவிடும். பூஸ்ட் மோடில் இந்த வேகத்தை வெறும் 5.7 நொடிகளில் செல்லும். இந்தியாவில் ஆடி இ-டிரான் கார் விலை ரூ.1.5 கோடி (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் தனது டிசையர் காரின் பி.எஸ். VI வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் விற்பனையாகும் வாகனங்களில் பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்துவதற்கான புதிய விதிமுறைகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலாக இருக்கின்றன. இதனையொட்டி பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களது வாகனங்களில் அதிநவீன பாதுகாப்பு உபகரணங்களை பொருத்தி அறிமுகம் செய்து வருகின்றன.
இதனால் மஹிந்திரா நிறுவனம் தனது வாகனங்களின் விலையை சமீபத்தில் ரூ.36,000 வரை அதிகரித்தது. இதேபோன்று மாருதி சுசுகி நிறுவனம் தனது வாகனங்களில் பாதுகாப்பு உபகரணங்களை பொருத்தி வருகிறது. முன்னதாக மாருதி நிறுவனம் தனது ஸ்விஃப்ட் மற்றும் வேகன் ஆர் மாடல்களை பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம் செய்தது.

அந்த வரிசையில் தற்சமயம் டிசையர் மாடலில் ஏ.ஐ.எஸ். 145 விதிகளுக்கு பொருந்தும் வகையில் அப்டேட் செய்திருக்கிறது. இந்தியாவில் பி.எஸ். VI ரக டிசையர் பெட்ரோல் மாடல் விலை ரூ.5.82 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ.9.57 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டிசையர் மாடல் கார்களில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் டீசல் என்ஜின் இன்னும் பி.எஸ். VI விதிகளுக்கு ஏற்ப மாற்றப்படவில்லை. இதற்கான காலக்கெடு மார்ச் 31, 2020 அன்று நிறைவுற இருக்கிறது.
புதிய பாதுகாப்பு விதிகளின் கீழ் கார்களில் ஏர்பேக், சீட் பெல்ட் ரிமைன்டர்கள், ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், சென்ட்ரல் லாக்கிங், ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி. உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனம் தனது வாகனங்களின் விலையை மாற்றியமைத்தாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மஹிந்திரா நிறுவனம் தனது வாகனங்களின் விலையை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. புதிய விலை ஜூலை 1 ஆம் தேதி முசதல் அமலாகிறது.
புதிய விலை மாற்றத்தால் மஹிந்திரா நிறுவனத்தின் அனைத்து வாகனங்களின் விலை ரூ.36,000 வரை அதிகரிக்கிறது. இந்தியாவில் மஹிந்திராவின் அனைத்து வாகனங்களிலும் ஏ.ஐ.எஸ். 145 பாதுகாப்பு வழிமுறைகளை வழங்கி இருப்பதால் விலை அதிகரிக்கப்படுகிறது.
ஜூலை 1, 2019 ஆம் தேதி முதல் வாகனங்களில் டிரைவர் ஏர்பேக், சீட் பெல்ட் ரிமைன்டர், ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் ஸ்பீடு அலெர்ட் போன்ற பாதுகாப்பு வசதிகளை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
மஹிந்திராவின் புதிய எக்ஸ்.யு.வி. 300 மாடலில் அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று அல்டுராஸ் ஜி4 மாடலிலும் பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன. இந்த மாடல்களின் விலையும் அதிகரிக்கும் என தெரிகிறது.
தார் மாடல் காரின் விற்பனை நிறுத்தப்பட்டு, தார் 700 ஸ்பெஷல் எடிஷன் மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய எஸ்.யு.வி. மாடலில் பல்வேறு பிரத்யேக அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய தார் 700 விலை ரூ.9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்ட டாடா டிகோர் காரை அறிமுகம் செய்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் டிகோர் காரின் ஏ.எம்.டி. (ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன்) வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது.
புதிய டிகோர் ஏ.எம்.டி. கார்: XMA மற்றும் XZA பிளஸ் என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ.6.39 லட்சம் மற்றும் ரூ.7.24 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. காரின் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வி மாற்றமும் செய்யப்படவில்லை.
இதனால் புதிய டிகோர் ஏ.எம்.டி. மாடலில் 1.2 லிட்டபர் 3 சிலிண்டர் ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதே என்ஜின் டாடா டியாகோ ஏ.எம்.டி. மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது.
டாப் எண்ட் XZA பிளஸ் மாடலில் 7 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி மற்றும் ஹார்மன் டியூன் செய்யப்பட்ட 8 ஸ்பீக்கர் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 15 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், ஆட்டோ-ஃபோல்டு விங் மிரர்கள், இன்டகிரேட்டெட் எல்.இ.டி. உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

டாடா டிகோர் கார் 1.1 லிட்டர் 3-சிலிண்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. இந்த என்ஜின் 70 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 140 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
டீசல் என்ஜின் வேரியண்ட்டில் ஆட்டோமேடிக் வேரியண்ட்டை அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இதற்கு மாற்றாக டாடா நிறுவனம் டிகோர் ஜெ.டி.பி. எனும் அதிக செயல்திறன் கொண்ட மாடலை வழங்குகிறது.
இந்த காரில் 1.2 லிட்டர் ரெவோடிரான் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 114 பி.ஹெச்.பி. பவர், 150 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. டிகோர் ஜெ.டி.பி. கார் விலை ரூ.7.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.






