என் மலர்tooltip icon

    கார்

    கடந்த ஜூலை மாதத்தில், டாப் 10 கார்கள் பட்டியலில் மாருதி சுசுகியின் 7 மாடல்களும், ஹூண்டாய் நிறுவனத்தின் 3 மாடல்களும் இடம் பெற்றுள்ளன. இதில் வேகன் ஆர் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது.
    ஜூலை மாதத்தில், டாப் 10 கார்களின் ஒட்டுமொத்த விற்பனை 21 சதவீதம் குறைந்து 1.07 லட்சம் கார்களாக இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 1.35 லட்சம் கார்களாக இருந்தது.

    மாருதி நிறுவனம் ஜூலை மாதத்தில் 15,062 வேகன் ஆர் கார்களை விற்பனை செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அது 14,339-ஆக இருந்தது. இதன்படி டாப் 10 கார்கள் பட்டியலில் இது முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது. மாருதி செடன் டிசையர் கார்கள் விற்பனை (25,647-ல் இருந்து) 12,923 கார்களாக குறைந்து இருக்கிறது. இது இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மாருதி சுவிப்ட் கார்கள் 3-வது இடத்திற்கு சென்றுள்ளது. இந்தக் கார் விற்பனை 12,677-ஆக இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் இதன் விற்பனை 19,993 கார்களாக இருந்தது.

    ஹூண்டாய் வென்யூ கார்கள்

    மாருதி ஆல்டோ கார்கள் விற்பனை 11,577-ஆக இருக்கிறது. இது நான்காவது இடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 23,371-ஆக இருந்தது. மாருதியின் பேலினோ கார்கள் 5-வது இடத்தில் உள்ளது. இந்தக் கார் விற்பனை (17,960-ல் இருந்து) 10,482-ஆக குறைந்துள்ளது. மாருதி ஈகோ கார்கள் விற்பனை 9,814-ஆக இருக்கிறது. இந்த பட்டியலில் இது ஆறாவது இடத்தில் இருக்கிறது. ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் வென்யூ கார்கள் விற்பனை 9,585-ஆக உள்ளது. டாப் 10 பட்டியலில் இந்தக் கார் 7-வது இடத்தை பிடித்துள்ளது.

    மாருதி எர்டிகா விற்பனை (4,764-ல் இருந்து) 9,222-ஆக அதிகரித்துள்ளது. எனவே இந்தக் கார்கள் எட்டாவது இடத்தில் இருக்கிறது. ஹூண்டாய் எலைட் ஐ20 கார்கள் (9-வது இடம்) விற்பனை 9,012 கார்களாக குறைந்து இருக்கிறது. மாருதியின் கிரெட்டா கார்கள் விற்பனை 6,585-ஆக குறைந்துள்ளது. டாப் 10 பட்டியலில் இந்தக் கார் 10-வது இடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் இதன் விற்பனை 10,423 கார்களாக இருந்தது.

    ரெனால்ட் நிறுவனத்தின் புத்தம் புதிய எம்.பி.வி.கார், டிரைபர் என்ற பெயரில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    ரெனால்ட் டிரைபர் எம்.பி.வி. சர்வதேச சந்தையில் கடந்த ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய டிரைபர் காரில் பல்வேறு அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் சந்தையில் முதல் முறையாக வழங்கப்பட்டுள்ளன. புதிய டிரைபர் கார் இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அந்த வகையில் ரெனால்ட் டிரைபர் கார் இந்தியாவில் பண்டிகை காலத்தில் அறிமுகமாகும் என அனைவரிடத்திலும் எதிர்பார்ப்பு இருந்தது. புதிய டிரைபர் காரில் பம்ப்பர் சற்று தடிமனாகவும், ஃபாக் லேம்ப் மற்றும் எல்.இ.டி. உள்ளிட்டவை அதிலேயே வழங்கப்பட்டுள்ளன. இதன் ஸ்வெப்ட்பேக் ஹெட்லேம்ப் பார்க்க பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது.

    இத்துடன் புதிய அலாய் வீல்கள், கேரக்டர் லைன், ஃபிளேர்டு வீல் ஆர்ச்கள் மற்றும் ரூஃப் ரெயில்கள் வழங்கப்பட்டுள்ளது. காரின் பக்கவாட்டில் கருப்பு நிற கிளாடிங், பிளேர்டு வீல் ஆர்ச்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. காரின் பின்புறம் அழகிய தோற்றம் கொண்டிருக்கிறது. இதில் பிரத்யேக டெயில் லேம்ப்கள், சிக்னல் இன்டிகேட்டர்கள், ரிவர்ஸ் லேம்ப் வழங்கப்பட்டுள்ளன.

    ரெனால்ட் டிரைபர்

    ரெனால்ட் டிரைபர் கார் சி.எம்.எஃப்.-ஏ பிளாட்ஃபார்மை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. காரின் உள்புறம் டூயல் டோன் இன்டீரியர் செய்யப்பட்டுள்ளது. டேஷ்போர்டு, ஸ்டீரிங் வீல் மற்றும் டோர் பேனல்களில் சில்வர் ட்ரிம் செய்யப்பட்டிருப்பது காருக்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது.

    இத்துடன் 7.8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ரெனால்ட் டிரைபர் கார் 1.0 லிட்டர் என்ஜின் கொண்டிருக்கிறது. இதே என்ஜின் ரெனால்ட் க்ளியோ மற்றும் சான்ட்ரியோ போன்ற மாடல்களிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 71 பி.ஹெச்.பி. பவர், 96 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு ஈசி ஆர் ஏ.எம்.டி. கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ரெனால்ட் டிரைபர் இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது 4 வேரியண்டுகளில் வெளியாகியுள்ளது. இதன் விற்பனை விலை ரூ.4.95 லட்சம் முதல் ரூ.6.49 லட்சம் வரை ஆகும். இந்த காரின் வேரியண்டுகளின் விற்பனை விலை பின்வருமாறு:

    RXE -ரூ.4.95 லட்சம்

    RXL -ரூ.5.49 லட்சம்

    RXT -ரூ.5.99 லட்சம்

    RXZ -ரூ.6.49 லட்சம்

    டொயோட்டா நிறுவனத்தின் லெக்சஸ் எல்.சி. 500 ஹெச். ஹைபிரிட் கார் இந்தியாவில் விரைவில் அறிமுகமாக உள்ளது.
    கார் தயாரிப்பில் முன்னணியில் திகழும் ஜப்பானைச் சேர்ந்த டொயோட்டா நிறுவனம் சொகுசு மற்றும் பிரீமியம் கார்களை ‘லெக்சஸ்’ என்ற பெயரில் தயாரிக்கிறது. லெக்சஸ் தனி நிறுவனமாகவே செயல்படுகிறது. இந்நிறுவனம் தற்போது பிரீமியம் வரிசையில் ஹைபிரிட் காரை தயாரித்து வருகிறது.

    இது 3.5 லிட்டர் வி6 பெட்ரோல் என்ஜினைக் கொண்டது. 300 ஹெச்.பி. திறன் 348 நியூட்டன் மீட்டர் டார்க் விசையை வெளிப்படுத்த கூடியது. இதன் மொத்த திறன் 354 ஹெச்.பி. ஆகும். இது 4 கியர்களைக் கொண்டது. இந்த காரை ஸ்டார்ட் செய்த 4.7 வினாடிகளில் 100 கி.மீ. வேகத்தை எட்டிவிடும். இது மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடியது. இது 10 கியர்களைக் கொண்டது.

    லெக்சஸ் எல்.சி. 500 ஹெச். ஹைபிரிட் கார்

    இந்தக் காரின் வெளிப்புற மற்றும் உள்புற தோற்றங்கள் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளன. இதில் 10.3 அங்குல இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. 10 கோணங்களில் ஏற்ற இறக்கமாக டிரைவர் சீட்டை அட்ஜெஸ்ட் செய்ய முடியும். இந்த சொகுசு காரின் விலை சுமார் ரூ.1.5 கோடியாக இருக்கும் என தெரிகிறது.

    இந்த கார் ஜாகுவார் எப் டைப் 2.0 (விலை ரூ.90 லட்சம் முதல் ரூ.94 லட்சம் வரை), ஆடி ஆர்.எஸ். கூபே (ரூ.1.12 கோடி), பி.எம்.டபிள்யூ. 8 சீரிஸ் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கலாம். இதில் பி.எம்.டபிள்யூ. 8 சீரிஸ் ரகக் கார்கள் விரைவிலேயே இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
    ரெனால்ட் நிறுவனத்தின் பிரபலமான க்விட் ஹேட்ச்பேக் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.



    ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது க்விட் ஃபேஸ்லிஃப்ட் காரை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் க்விட் ஃபேஸ்லிஃப்ட் கார் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. புதிய க்விட் கார் தற்போதைய மாடல்களில் உள்ளதை போன்றே பி.எஸ்.4 ரக என்ஜின்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் க்விட் கே.இசட்.இ. எலெக்ட்ரிக் காரை தழுவிய வடிவமைப்பு கொண்டிருக்கும். க்விட் கே.இசட்.இ. போன்ற ஹெட்லேம்ப் செட்டப் புதிய க்விட் காரிலும் வழங்கப்படலாம் என தெரிகிறது.

    இத்துடன் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் கிரில் அருகில் பொருத்தப்படலாம் என்றும், ஹெட்லேம்ப் பம்ப்பரின் கீழ் இருக்கும் என கூறப்படுகிறது. இதன் டெயில் லேம்ப்களிலும் எல்.இ.டி.க்கள் வழங்கப்பட்டு, முன்புறம் மற்றும் பின்பக்கங்களில் புதிய வடிவமைப்பு கொண்ட பம்ப்பர் வழங்கப்படலாம் என தெரிகிறது.

    க்விட் கே.இசட்.இ.

    புதிய க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 800சிசி என்ஜின் வழங்கப்படலாம் என தெரிகிறது. இந்த என்ஜின் 54 ஹெச்.பி. பவர், 72 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. 1.0 லிட்டர் என்ஜின் 65 ஹெச்.பி. பவர், 91 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. முதற்கட்டமாக ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பி.எஸ்.4 ரக என்ஜின் வழங்கப்பட்டு, அதன்பின் பி.எஸ்.6 என்ஜின்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    பாதுகாப்பிற்கு புதிய க்விட் மாடலில் டூயல் ஏர்பேக் வழங்கப்படலாம் என தெரிகிறது. இது அக்டோபர் 2019 முதல் அமலாக இருக்கும் கிராஷ் டெஸ்ட் விதிகளை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. தற்சமயம் விற்பனை செய்யப்படும் க்விட் மாடலில் ஒற்றை ஏர்பேக் வழங்கப்பட்டிருக்கிறது.

    இந்தியாவில் அறிமுகமானதும் புதிய ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ மற்றும் அடுத்த மாதம் அறிமுகமாக இருக்கும் ஹேட்ச்பேக் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.
    ஆடி நிறுவனத்தின் ஏ8எல் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    சொகுசு கார்களைத் தயாரிக்கும் ஆடி நிறுவனம் தனது நான்காம் தலைமுறை ஏ8.எல். செடான் மாடல் காரை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. 2017-ம் ஆண்டு இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த மாடல் காரை தற்போது அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. 

    இதற்கான முன்பதிவுகளை இந்நிறுவனம் தொடங்கி உள்ளது. ஏ8.எல். மாடலின் நீளம் 5,302 மி.மீ., அகலம் 1,945 மி.மீ., உயரம் 1,488 மி.மீ. ஏற்கனவே உள்ள முந்தைய மாடலைக் காட்டிலும் இது 37 மி.மீ. நீளமும், 17 மி.மீ. உயரமும் அதிகம் கொண்டது. இதன் உள்புறம் 10.1 இன்ச் தொடுதிரை கொண்டது. இதன் இருக்கைகளில் மசாஜ் வசதி உண்டு.

    ஆடி ஏ8.எல்.

    இதனால் நீண்ட தூரம்சென்றாலும் களைப்பு ஏற்படாது. மேலும் பின் இருக்கை பயணிகளின் காலுக்கு மசாஜ் செய்யும் மசாஜர் இதில் உள்ளது. இந்த மாடலில் 3 லிட்டர் வி 6 டீசல் மற்றும் என்ஜின் மாடல் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது.

    இது டீசல் மாடல் 340 ஹெச்.பி. திறனும் பெட்ரோல் மாடல் 286 ஹெச்.பி. திறனும் கொண்டது. இது முழுவதும் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் என்று தெரிகிறது. இதன் விலை ரூ.1.30 கோடி முதல் ரூ.1.40 கோடி வரை இருக்கும்.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரபல கார் மாடலின் சில யூனிட்களை திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.



    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பிரபல ஹேட்ச்பேக் மாடலாக இருக்கும் வாகனங்களில் ஒன்றாக வேகன்ஆர் இருக்கிறது. இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்ட வேகன்ஆர் மாடல்களில் 40,000 யூனிட்களை திரும்பப்பெறுவதாக மாருதி சுசுகி அறிவித்துள்ளது.

    திரும்பப்பெறப்படும் வாகனங்கள் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்ட வேரியண்ட் ஆகும். வாகனம் சீரற்ற முறையில் இயங்க வழி செய்யும் கோளாறுகள் கண்டறியப்பட்டால், வாகன உற்பத்தியாளர்கள் அவற்றை திரும்பப்பெற்றுக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு பிரச்சனையை சரி செய்து வழங்குவர்.

    அந்த வகையில் மாருதி சுசுகி நிறுவனம் சுமார் 40,618 வேகன்ஆர் யூனிட்களை திரும்பப்பெற்று கண்டறியப்பட்ட பிரச்சனையை சரி செய்ய இருக்கிறது. நவம்பர் 15, 2018 முதல் ஆகஸ்ட் 12, 2019 வரையிலான காலக்கட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட வேகன்ஆர் மாடல்களை மாருதி திரும்பப்பெறுகிறது.

    மாருதி வேகன்ஆர்

    கோளாறு கண்டறியப்பட்ட வாகன உரிமையாளர்களை விற்பனையாளர்கள் தொடர்பு கொண்டு வாகனத்தை சரிசெய்ய கொண்டு வர கோருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி இன்று (ஆகஸ்ட் 24) முதல் துவங்குகிறது. கண்டறியப்பட்ட கோளாறினை மாருதி சுசுகி இலவசமாக சரிசெய்து வழங்குவதாக தெரிவித்துள்ளது.

    முன்னதாக பலமுறை மாருதி சுசுகி நிறுவன வாகனங்கள் இவ்வாறு திரும்பப்பெறப்பட்டு இருக்கின்றன. முன்னதாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பலேனோ மாடல்களில் ஏ.பி.எஸ். மென்பொருளில் கோளாறு கண்டறியப்பட்டதால் வாகனங்கள் திரும்பப்பெறப்பட்டன. 

    இதேபோன்று இந்த ஆண்டு மே மாதத்திலும் புதிய ஸ்விஃப்ட் மற்றும் பலேனோ மாடல்கள் திரும்பப்பெறப்பட்டு, சரிசெய்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டன. பெரும்பாலும் திரும்பப்பெறப்படும் வாகனங்களில் கண்டறியப்பட்ட கோளாறுகள் சிறிய அளவில் இருந்திருக்கின்றன.
    ஹூன்டாய் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த வென்யூ கார் புதிய என்ஜின் ஆப்ஷனில் அறிமுகம் செய்யப்படுகிறது.



    ஹூன்டாய் வென்யூ கார் புதிதாக 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனில் அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய என்ஜின் ஆப்ஷன் ஏப்ரல் 2020-க்குள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    புதிய டீசல் என்ஜின் பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் அறிமுகம் செய்யப்படுகிறது. இது 1.5 லிட்டர் டர்போ டீசல், மற்றும் 1.5 லிட்டர் என இருவித டியூனிங்கில் வழங்கப்படுகிறது. இதன் டர்போ என்ஜின் 115 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் 1.5 லிட்டர் என்ஜின் 90 பி.ஹெச்.பி. பவர், 220 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    1.4 லிட்டர் டீசல் என்ஜின் 1.5 லிட்டர் பி.எஸ்.6 என்ஜினுக்கு மாற்றாக வழங்கப்படுகிறது. இதே என்ஜின் ஐ20 மாடலிலும் வழங்கப்படுகிறது. இதுதவிர ஹூன்டாய் கிரெட்டா மற்றும் வெர்னா மாடல்களில் உள்ள 1.6 லிட்டர் டீசல் என்ஜினுக்கு மாற்றாக 1.5 லிட்டர் VGT டீசல் என்ஜின் வழங்கப்படும் என ஹூன்டாய் தெரிவித்துள்ளது.

    ஹூன்டாய் வென்யூ

    புதிய ஹூன்டாய் வென்யூ கார் இந்தியாவின் முதல் கனெக்ட்டெட் கார் ஆகும். இதில் புளு லின்க் கனெக்டிவிட்டி ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. ஹூன்டாயின் புளு லின்க் கனெக்டிவிட்டியில் 33 அம்சங்கள் வழங்கப்படுகிறது. 

    வடிவமைப்பை பொருத்தவரை வென்யூ எஸ்.யு.வி. மாடலில் ஹெக்சாகோனல் முன்புற கிரில், டூயல் ஹெட்லேம்ப் கிளஸ்டர், முன்புறம் மெல்லிய இன்டிகேட்டர், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளன.

    காரின் பக்கவாட்டு மற்றும் பின்புறம் ஹூன்டாயின் வடிவமைப்பு கிரெட்டா மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் டைமண்ட்-கட் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. பின்புறம் ஸ்குவாரிஷ் எல்.இ.டி. டெயில் டைல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பின்புற பம்ப்பர்களில் ரிஃப்லெக்டர்கள் மற்றும் ஸ்கிட் பிளேட்கள் வழங்கப்பட்டுள்ளன.
    எம்.ஜி.ஹெக்டார் எஸ்.யு.வி காரின் புதிய சலுகைக்காக, இதனை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர்.
    எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனம் தனது முதல் காரான ஹெக்டார் எஸ்.யு.வி. மாடலை சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. ஹெக்டார் காருக்கான முன்பதிவு கடந்த ஜூன் மாதம் 4 ஆம் தேதி துவங்கியது. இந்தியாவில் ஹெக்டார் எஸ்.யு.வி. மாடலின் துவக்க விலை ரூ. 12.18 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டது.

    முன்பதிவு துவங்கியது முதல் இதுவரை சுமார் ஆயிரக்கணக்கானோர் ஹெக்டார் காரை வாங்க முன்பதிவு செய்துள்ளனர். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் வகையில், எம்.ஜி. மோட்டார் இந்திய சந்தையில் ஹெக்டார் காருக்கான முன்பதிவுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உள்ளது.

    இந்த காருக்காக வாடிக்கையாளர்கள் காத்திருப்பு காலம் 3 முதல் 4 மாதங்கள் வரை உள்ளது. இந்நிலையில், ஹெக்டார் நிறுவனம்  ‘வொர்த் வெய்ட்டிங் ஃபார்’ எனும் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டத்தினை ஏற்கனவே இருக்கும் அனைத்து ஹெக்டார் வாடிக்கையாளர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    எம்.ஜி.ஹெக்டார் கார்

    இந்த திட்டத்தின் மூலம், கார் டெலிவரிக்கு வரும் வரை வாடிக்கையாளர்களுக்கு, வாரத்திற்கு 1000 புள்ளிகள் வழங்கப்படும். இந்த புள்ளிகள் பிற்காலத்தில் இலவச கார் பாகங்கள், ப்ரீபெய்ட் பராமரிப்பு தொகுப்பு ஆகியவற்றிற்கு பயன்படும்.

    இதனைத்தொடர்ந்து எம்.ஜி.ஹெக்டார் நிறுவனம் நாட்டில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடனும் இணைந்துள்ளது. ஏற்கனவே இந்நிறுவனம் ஒவ்வொரு 2 வார காத்திருப்பு காலத்திலும், ஒரு பெண் குழந்தைக்கு இலவச கல்வி வழங்கப்படும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


    மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய எம்.பி.வி. கார் எக்ஸ்.எல்.6 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.



    மாருதி சுசுகி நிறுவனத்தின் எக்ஸ்.எல். 6 எம்.பி.வி. கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்து. இந்தியாவில் புதிய எக்ஸ்.எல்.6 துவக்க விலை ரூ9.79 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) துவங்குகிறது. இது ஆல்ஃபா மற்றம் சீட்டா என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. மாருதி சுசுகி எக்ஸ்.எல்.6 ஆல்ஃபா விலை ரூ. 11.46 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மாருதி சுசுகி எக்ஸ்.எல்.6 ஆறு பேர் பயணிக்கக்கூடிய பிரீமியம் எம்.பி.வி. கார் ஆகும். இது எர்டிகா மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. பிரீமியம் எம்.பி.வி. காரின் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் அதிகளவு அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அதன் படி காரின் முன்புறம் புதிய கிரில், க்ரோம் ஸ்ட்ரிப் லைன்கள் இட்மபெற்றிருக்கிறது. 

    இதில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் எல்.இ.டி. டி.ஆர்.எல்.களும் வழங்கப்பட்டுள்ளன. காரின் பின்புறம் மற்றும் பக்கவாட்டுகளில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படவில்லை. எனினும், புதிய அலாய் வீல் வடிவமைப்பு மற்றும் எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    மாருதி சுசுகி எக்ஸ்.எல்.6,

    மாருதி சுசுகி எக்ஸ்.எல்.6 கார் ஒற்றை என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கிறது. இது பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் 1.5 லிட்டர் K15 சீரிஸ் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இதே என்ஜின் சமீபத்திய எர்டிகா எம்.பி.வி. மாடலிலும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த எந்ஜின் 104 பி.ஹெச்.பி. @6000 ஆர்.பி.எம். மற்றும் 138 என்.எம். டார்க் @4400 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. 

    புதிய எக்ஸ்.எல்.6 எம்.பி.வி. காரில் 7.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் எல்.இ.டி. ஃபாக் லேம்ப்கள், ஹெட்லைட்கள், டி.ஆர்.எல்.கள். டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. 

    பாதுகாப்பிற்கென டூயல் ஏர்பேக், ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., ஹில்-ஹோல்டு அசிஸ்ட், இ.எஸ்.பி., சீட்-பெல்ட் ரிமைன்டர், ஹை-ல்பீடு அலெர்ட், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய காருக்கான முன்பதிகள் துவங்கியுள்ளன. முன்பதிவு கட்டணம் ரூ. 25,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் வினியோகம் உடனடியாக துவங்கும் என தெரிவிக்கப்பட்டது.
    இந்தியாவில் ஹூன்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 நியோஸ் ஹேட்ச்பேக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.



    கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனத் தயாரிப்புகளில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது ஐ10 மாடலாகும். இந்த மாடலில் தயாரான கார்கள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற மாடலாகத் திகழ்கிறது. இந்த மாடலுக்கு உலகம் முழுவதும் சுமார் 27 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். 

    ஹூன்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் துவக்க விலை ரூ. 4.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கார் இரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆஸ்டா என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் கிராண்ட் ஐ10 நியோஸ் ஆஸ்டா விலை ரூ. 7.99 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதன் வெற்றியைத் தொடர்ந்து இதில் மூன்றாவது தலைமுறை மாடலை இந்நிறுவனம் கிராண்ட் ஐ 10 நியோஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. ஹேட்ச்பேக் மாடல் கார்களில் இது முன்னோடியாகத் திகழும் என்று நிறுவனம் உறுதியாக நம்புகிறது.

    ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்

    முதலில் ஐ10 மாடலும், அதைத் தொடர்ந்து கிராண்ட் ஐ10 மாடலும் வந்தன. தற்போது மூன்றாவது தலைமுறை மாடலாக கிராண்ட் ஐ10 நியோஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 6 கண்கவர் வண்ணங்களில் (பியரி ரெட், போலார் ஒயிட், டைபூன் சில்வர், டைட்டன் கிரே, அக்வா டீல் மற்றும் ஆல்பா புளூ) வெளிவந்துள்ளது.

    பி.எஸ்6. புகை விதிமுறைகளுக்கேற்ப இது தயாரிக்கப்பட்டுள்ளது. 83 ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தக் கூடிய 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினும், டீசல் என்ஜின் மாடலும் வெளிவந்துள்ளன. 

    இவை இரண்டிலுமே மானுவல் கியர் டிரான்ஸ்மிஷன் வசதி மற்றும் ஆட்டோமேடிக் கியர் மாற்றும் வசதி கொண்டது. இந்த மாடல் கார் மாருதி சுசுகி ஸ்விஃப்ட், ஃபோர்டு ஃபிகோ ஆகிய கார்களுக்குப் போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது.
    மாருதி சுசுகி நிறுவனம் தனது வாகனங்களில் சில மாடல்ளுக்கு ஐந்து ஆண்டுகள், ஒரு லட்சம் கிலோமீட்டர் வாரண்டி வழங்குவதாக அறிவித்துள்ளது.



    மாருதி சுசுகி நிறுவனம் நான்கு டீசல் மாடல்களுக்கு ஐந்து ஆண்டுகள் மற்றும் ஒரு லட்சம் கிலோமீட்டர் வாரண்டி வழங்குவதாக அறிவித்துள்ளது.

    மாருதி டிசையர், எஸ்-கிராஸ், ஸ்விஃப்ட் மற்றும் விடாரா பிரெஸ்ஸா போன்ற மாடல்களுக்கு புதிய வாரண்டி சலுகை பொருந்தும். இச்சலுகை மாருதியின் நெக்சா மற்றும் அரீனா விற்பனையகங்களில் இந்த வாகனங்களை முன்பதிவு செய்வோருக்கு எவ்வித கூடுதல் கட்டணம் இன்றி வழங்கப்படுகிறது. 

    இந்தியா முழுக்க 1893 பகுதிகளில் நெக்சா மற்றும் அரீனா விற்பனையகங்கள் இயங்கி வருகின்றன. வாரண்டியில் வாகனங்களின் பல்வேறு பாகங்களை சரி செய்வது மற்றும் அவற்றை மாற்றிக் கொடுக்கப்படுகிறது. இதில் ஹை-பிரெஷர் பம்ப், கம்ப்ரெஸர், எலெக்டிராணிக் கண்ட்ரோல் மாட்யூல், டர்போசார்ஜர் அசெம்ப்ளி, க்ரிடிக்கல் என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் பாகங்கள் அடங்கும். 

    மாருதி சுசுகி

    இதுதவிர ஸ்டீரிங் அசெம்ப்ளி மற்றும் சஸ்பென்ஷன் ஸ்ட்ரட்களும் வாரண்டியில் சரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சலுகை புதிதாக கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் ஏற்கனவே வாகனங்களை வாங்கியவர்களுக்கு இச்சலுகை பொருந்தாது.

    இத்திட்டத்தில் பொருந்தும் அனைத்து வாகனங்களிலும் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. முன்னதாக சிறிய டீசல் என்ஜின்கள் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்படாது என மாருதி சுசுகி அறிவித்துவிட்டது. இதனால் இவை விரைவில் நிறுத்தப்படலாம் என தெரிகிறது.
    நிசான் மற்றும் டேட்சன் நிறுவன வாகனங்களுக்கு விரைவில் புதிய அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.



    ஆட்டோமொபைல் சந்தையில் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட வாகனங்கள் அதிக பிரபலமாக பார்க்கப்படுகின்றன. இதன் காரணமாக பல்வேறு நிறுவனங்களும் தங்களின் வாகனங்களுக்கு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கி வருகின்றன. அந்த வரிசையில் தற்சமயம் நிசான் இணைந்துள்ளது.

    நிசான் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கிக்ஸ் மாடலுக்கு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட இருக்கிறது. டேட்சன் கோ மற்றும் டேட்சன் கோ பிளஸ் வேரியண்ட்களிலும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட இருக்கிறது.

    டேட்சன் கோ மற்றும் டேட்சன் கோ பிளஸ் மாடல்களுக்கு சி.வி.டி. ஆப்ஷன் இந்த ஆண்டு பண்டிகை காலத்திற்கு முன் வழங்கப்பட்டு விடும். நிசான் கிக்ஸ் மாடலுக்கு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் இந்த ஆண்டு இறுதிக்குள் வழங்கப்படும் என நிசான் இந்தியாவின் விற்பனை பிரிவு தலைவர் ஹர்தீப் சிங் தெரிவித்தார்.

    டேட்சன் கோ

    நிசான் நிறுவனம் டேட்சன் கோ மற்றும் டேட்சன் கோ பிளஸ் மாடல்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்தது. இரு வாகனங்களிலும் 1.2 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 67 பி.ஹெச்.பி. பவர், 104 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    நிசான் கிக்ஸ் கார் இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எஸ்.யு.வி.யில் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் K9K டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 104 பி.ஹெச்.பி. பவர், 142 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. டீசல் என்ஜின் 108 பி.ஹெச்.பி. பவர், 240 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    ×