என் மலர்
கார்
ஹூன்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 கார் மாடலின் டீசல் வேரியண்ட் விற்பனை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹூன்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 விற்பனை நிறுத்தப்படமல், கிராண்ட் ஐ10 நியாஸ் மாடலுடன் சேர்த்தே விற்பனையாகும் என தகவல் வெளியானது. இந்நிலையில், ஹூன்டாய் கிராண்ட் ஐ10 மூன்று வேரியண்ட்களில் தொடர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
தற்சமயம் விற்பனை செய்யப்படும் கிராண்ட் ஐ10 மாடல் சான்ட்ரோ மற்றும் நியாஸ் மாடல்களுக்கிடையே நிலைநிறுத்தப்படும் என தெரிகிறது. இதைத் தொடர்ந்து ஹூன்டாய் கிராண்ட் ஐ10 டீசல் வேரியண்ட்களின் விற்பனையை நிறுத்துகிறது. அந்த வகையில், கிராண்ட் ஐ10 மாடல் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜினுடன் விற்பனை செய்யப்படும்.

எதிர்காலத்தில் இதன் பி.எஸ். 6 அப்கிரேடு மாடலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜினுடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வாங்க விரும்புவோருக்கு நியாஸ் மாடல் ஏற்றதாக இருக்கும். கிராண்ட் ஐ10 நியாஸ் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும்.
உபகரணங்களை பொருத்தவரை கிராண்ட் ஐ10 ஸ்போர்ட்ஸ் மாடலில் 7.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற கனெக்டிவிட்டி வழங்கப்படுகிறது. எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், ORVMகள், பின்புற ஏ.சி. வென்ட்கள், பார்க்கிங் சென்சார்கள், கேமரா, டூயல் ஏர்பேக், ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி. போன்றவை வழங்கப்படுகிறது.
ஹூன்டாய் நிறுவனம் தனது கிராண்ட் ஐ10 நியாஸ் காரை இந்தியாவில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய கிராண்ட் ஐ10 நியாஸ் முன்பதிவு செய்ய ரூ. 11,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் டிரைபர் எம்.பி.வி. காரின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ரெனால்ட் இந்தியா நிறுவனம் 4-மீட்டர்களுக்குள் உருவாக்கி இருக்கும் எம்.பி.வி. கார் மாடலான டிரைபர் இந்தியாவில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. புதிய காருக்கான முன்பதிவு ஆகஸ்ட் 17 ஆம் தேதி துவங்குகிறது.
முன்னதாக சர்வதேச சந்தையில் டிரைபர் கார் அறிமுகம் செய்தது. புதிய டிரைபர் முன்பதிவு செய்ய ரூ. 11,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு ஆன்லைன் மற்றும் நாடு முழுக்க இயங்கி வரும் ரெனால்ட் விற்பனையகங்களில் நடைபெறுகிறது.
4 மீட்டருக்குள்ளான 7 பேர் பயணிக்கும் வகையில் டிரைபர் எம்.பி.வி. அறிமுகமாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் பிரபலமான ரெனால்ட் க்விட் மாடலின் மேம்பட்ட ரகமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் இருக்கை வசதி பயணிகளின் வசதிக்கேற்ப மாற்றி அமைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 3 சிலிண்டர் 1 லிட்டர் என்ஜினைக் கொண்டது. இதில் 5 கியர்கள் மேனுவல் டிரான்ஸ் மிஷன் மற்றும் ஆட்டோமேடிக் ஆப்ஷனுடன் வருகிறது.
புதிய டிரைபர் காரில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. ஃபாக் லேம்ப்கள், க்ரோம் ஸ்டட் கிரில் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதன் உள்புறம் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பெரிய தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேம்பட்ட டியாகோ ஜெ.டி.பி. மற்றும் டிகோர் ஜெ.டி.பி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மேம்பட்ட டியாகோ மற்றும் டிகோர் ஜெ.டி.பி. மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 2019 டாடா டியாகோ ஜெ.டி.பி. விலை ரூ. 6.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்றும் டிகோர் ஜெ.டி.பி. விலை ரூ. 7.59 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஸ்டான்டர்டு மாடல்களை விட ஜெ.டி.பி. மாடல்கள் அதிக செயல்திறன் மற்றும் மெக்கானிக்கல் அப்கிரேடுகளை கொண்டிருக்கிறது. டாடா டியாகோ மற்றும் டிகோர் ஜெ.டி.பி. எடிஷன்கள் ஆட்டோ ஃபோல்டு ORVMகள், பியானோ பிளாக் ஷார்க் ஃபின் ஆன்டெனா வழங்கப்படுகிறது.
மற்றபடி கிளாஸ் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்ட கிரில், ஜெ.டி.பி. பேட்ஜ், காண்டிராஸ்ட் பிளாக் ஃபினிஷ் ரூஃப், டைமண்ட் கட் அலாய் வீல்கள், ஃபாக்ஸ் ஹூட் ஸ்கூப்கள், மேம்பட்ட பம்ப்பர் வழங்கப்படுகிறது.

காரின் உள்புறம் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ஹார்மன் 7-இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வசதிகள் வழங்கப்படுகின்றன. முன்னதாக இந்த அம்சம் ஸ்டான்டர்டு டியாகோ மாடலில் வழங்கப்பட்டது.
டாடா டியாகோ ஜெ.டி.பி. மற்றும் டிகோர் ஜெ.டி.பி. மாடல்களில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 112 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 150 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் வாகனங்கள் விற்பனை தொடர்ந்து சரிவு நிலையை சந்தித்து வருகின்றன.
இந்தியாவில் வாகனங்கள் விற்பனை தொடர்ந்து சரிந்து வருகிறது. தொடர்ச்சியாக கடந்த மூன்று காலாண்டுகளிலும் வாகன விற்பனை சரிந்து வருகிறது. இந்நிலையில் ஆட்டோமொபைல் சந்தையில் வாகன விற்பனை இரு தசாப்தங்களில் இல்லாத அளவு சரிவை சந்தித்துள்ளது.
பயணிகள் வாகன விற்பனை 30.98 சதவிகிதம் சரிந்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 2,90,391 வாகனங்கள் விற்பனையாகி இருந்த நிலையில், இந்த மாதம் 2,00,790 யூனிட்களே விற்பனையாகி இருக்கின்றன. பயணிகள் கார் விற்பனை 35.95 சதவிகிதம் சரிந்து 1,22,955 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 1,91,979 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது.
யு.வி. பிரிவு வாகனங்கள் 15.22 சதவிகிதம் சரிந்துள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 67,030 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 79,063 யூனிட்கள் விற்பனையாகின.

வேன்கள் பிரிவு அதிகபட்சமாக 45.58 சதவிகிதம் சரிந்துள்ளது. இந்த ஆண்டு ஜூலையில் 10,804 யூனி்ட்கள் விற்பனையாகியுள்ள நிலையில், கடந்த ஆண்டு இதே மாதத்தில் 19,889 யூனிட்கள் விற்பனையாகின. இதே போன்று நிலமை 2008 டிசம்பரில் ஏற்பட்டது. அந்த சமயத்தில் பி.வி. பிரிவு வாகனங்கள் 35 சதவிகிதமும், பயணிகள் கார் பிரிவு 39.86 சதவிகிதம் சரிந்தது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புதிய புகை விதிகள் மற்றும் பாதுகாப்பு விதிகள் அமலாக இருக்கும் நிலையில், வாகன விற்பனையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டுள்ளது. பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் புதிய புகை விதிகளுக்கு ஏற்ப வாகனங்களை மேம்படுத்த இதுவரை ரூ. 80,000 கோடிகளை முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாகன விற்பனை சரிவு மீளாத பட்சத்தில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பெரும் சரிவை சந்திக்க நேரிடும்.
போர்ஷ் நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பின் இந்தியாவில் புதிய மெக்கான் கார் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
ஏறக்குறைய ஓராண்டுக்குப் பிறகு போர்ஷ் நிறுவனம் தனது பிரபல மெக்கான் பிராண்டில் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் கொண்ட காரை அறிமுகம் செய்துள்ளது. நான்கு சிலிண்டர்களைக் கொண்ட இந்த மாடல் காரின் விலை ரூ.69.98 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வி6 என்ஜினைக் கொண்ட மெக்கான் எஸ் மாடல் விலை ரூ.85.03 லட்சம் ஆகும். கோடீஸ்வரர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் வாங்கும் வகையில் காரின் விலையை நிர்ணயித்து உள்ளது இந்நிறுவனம்.
மெக்கான் மாடல் 2 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜினைக் கொண்டிருக்கிறது. இது 252 ஹெச்.பி. திறன், 370 என்.எம். டார்க் செயல்திறன் கொண்டது. மெக்கான் எஸ் மாடல் 3 லிட்டர் டர்போ சார்ஜ்டு வி6 பெட்ரோல் என்ஜினைக் கொண்டுள்ளது. இது 354 ஹெச்.பி. திறன், 480 என்.எம். டார்க் இழுவிசையைக் கொண்டிருக்கிறது.
இந்த மாடல் கார் மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5.3 வினாடிகளில் எட்டி விடும். இதில் மணிக்கு 254 கி.மீ. தூரம் பயணிக்க முடியும். இதில் எல்.இ.டி. விளக்கு வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது. பம்பரும் முகப்பு விளக்கும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
போர்ஷ் மெக்கான் கார்: கரும்பச்சை மெட்டாலிக், டோலமைட் சில்வர் மெட்டாலிக், மியாமி புளூ, கிரேயான் போன்ற புதிய நிறங்களில் கிடைக்கிறது. இது இண்டர்நெட் இணைப்பு கொண்ட வாகனமாகும். இதில் 10.9 அங்குல தொடுதிரை வழங்கப்பட்டுள்ளது.
போர்ஷ் நிறுவனம் இந்த மாடலில் பேட்டரி காரை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மெக்கான் மாடல் பேட்டரி கார் 2021-ல் வெளியாகும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 2020-ம் ஆண்டில் இந்நிறுவனத்தின் டேகான் மாடல் கார் பேட்டரியில் ஓடும் வகையில் அறிமுகப்படுத்தப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
மெக்கான் மாடல் 2 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜினைக் கொண்டிருக்கிறது. இது 252 ஹெச்.பி. திறன், 370 என்.எம். டார்க் செயல்திறன் கொண்டது. மெக்கான் எஸ் மாடல் 3 லிட்டர் டர்போ சார்ஜ்டு வி6 பெட்ரோல் என்ஜினைக் கொண்டுள்ளது. இது 354 ஹெச்.பி. திறன், 480 என்.எம். டார்க் இழுவிசையைக் கொண்டிருக்கிறது.

போர்ஷ் மெக்கான் கார்: கரும்பச்சை மெட்டாலிக், டோலமைட் சில்வர் மெட்டாலிக், மியாமி புளூ, கிரேயான் போன்ற புதிய நிறங்களில் கிடைக்கிறது. இது இண்டர்நெட் இணைப்பு கொண்ட வாகனமாகும். இதில் 10.9 அங்குல தொடுதிரை வழங்கப்பட்டுள்ளது.
போர்ஷ் நிறுவனம் இந்த மாடலில் பேட்டரி காரை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மெக்கான் மாடல் பேட்டரி கார் 2021-ல் வெளியாகும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 2020-ம் ஆண்டில் இந்நிறுவனத்தின் டேகான் மாடல் கார் பேட்டரியில் ஓடும் வகையில் அறிமுகப்படுத்தப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மாருதி சுசுகி நிறுவனத்தின் எக்ஸ்.எல்.6 கார் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய பிரீமியம் எம்.பி.வி. கார் எக்ஸ்.எல்.6 மாடலுக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளன. மாருதி சுசுகி எக்ஸ்.எல்.6 இந்தியாவில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
இந்நிலையில், வெளியீட்டிற்கு முன் எக்ஸ்.எல்.6 முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. புதிய காரை முன்பதிவு செய்ய விரும்புவோர் ரூ. 11,000 கட்டணம் செலுத்த வேண்டும். வாடிக்கையாளர்கள் ஆன்லைன் அல்லது நெக்சா விற்பனையகங்களில் புதிய எக்ஸ்.எல்.6 காரை வாங்க முன்பதிவு செய்யலாம்.
மாருதி சுசுகி எக்ஸ்.எல்.6 ஆறுபேர் பயணிக்கக்கூடிய எம்.பி.வி. மாடல் ஆகும். இது அந்நிறுவனத்தின் பிரபல எர்டிகா மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய எக்ஸ்.எல்.6 நெக்சா விற்பனையகங்களில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. எனினும், இது மாருதி சுசுகி அரினா விற்பனையகங்களில் கிடைக்கும்.

புதிய மாருதி சுசுகி எக்ஸ்.எல்.6 மேம்பட்ட முன்புற வடிவமைப்பு, புதிய கிரில், அப்டேட் செய்யப்பட்ட ஹெட்லேம்ப் கிளஸ்டர்கள், பிளாக் இன்சர்ட் மற்றும் புதிய எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்படுகின்றன.
காரின் உள்புறம் கேபின், டேஷ்போர்டு பிளாக்டு-அவுட் செய்யப்பட்டு சில்வர் அக்சென்ட் வழங்கப்படுகிறது. மற்ற அம்சங்கள் எர்டிகா டாப்-எண்ட் மாடலில் உள்ளதை போன்று வழங்கப்படுகின்றன.
மாருதி சுசுகி எக்ஸ்.எல். 6 மாடலில் 1.5 லிட்டர் பி.எஸ். 6 ரக கே15-சீரிஸ் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 104 பி.ஹெச்.பி. பவர், 138 என்.எம். டார்க் வழங்கப்படுகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 4-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் வெளியாகும் முன் கியா செல்டோஸ் கார் முன்பதிவில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது முதல் எஸ்.யு.வி. காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறதரு. புதிய எஸ்.யு.வி. இந்தியாவில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி துவங்குகிறது. இதற்கான முன்பதிவு ஜூலை 16 ஆம் தேதி துவங்கியது. இந்நிலையில், வெளியீட்டிற்கு முன் செல்டோஸ் காரை வாங்க சுமார் 23,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
இதில் முதல் நாளில் மட்டும் சுமார் 6000 பேர் முன்பதிவு செய்தனர். தற்சமயம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்.யு.வி. மாடலாக செல்டோஸ் இருக்கிறது. புதிய செல்டோஸ் வெளியீட்டிற்கு 14 நாட்கள் இருக்கும் நி்லையில், முன்பதிவு எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடக்கும் என எதிர்பார்க்கலாம்.

புதிய செல்டோஸ் காரை வாங்க கியா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ரூ. 25,000 முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்யலாம். கியா செல்டோஸ் கார்: டெக்-லைன் மற்றும் ஜி.டி.-லைன் என இரு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் மூன்று சப்-வேரியண்ட்களும் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
கியா செல்டோஸ் கார் 115 பி.ஹெச்.பி. பவர், 144 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் 1.5 லிட்டர் என்.ஏ. பெட்ரோல் என்ஜின், 115 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் ஜி.டி.ஐ. என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 140 பி.ஹெச்.பி. பவர், 242 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
மூன்று என்ஜின்களும் ஸ்டான்டர்டு 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வருகிறது. இந்த எஸ்.யு.வி. மூன்று ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன்கள்: CVT, IVT மற்றும் DCT-களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.
டொயோட்டா நிறுவனத்தின் வெல்பயர் ஆடம்பர் எம்.பி.வி. ரக கார் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த டொயோட்டா நிறுவனம் சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள தனது வெல்பயர் மாடல் எம்.பி.வி. காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. 6 பேர் பயணிக்கும் வகையிலான சொகுசு மாடல் காரை அறிமுகம் செய்யப் போவதாக தகவல்கள் வந்துள்ளன.
முழுவதும் அசெம்பிள் செய்யப்பட்ட காராக (சி.பி.யு.) இங்கு இறக்குமதி செய்து விற்பனை செய்ய டொயோட்டா திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.80 லட்சம் வரை இருக்கும் என்று தெரிகிறது.
ஏற்கனவே டொயோட்டா நிறுவனம் ‘அல்பார்டு’ என்ற பெயரிலான காரை அறிமுகம் செய்திருந்தது. அதில் சில மாறுதல்கள் செய்யப்பட்டு ‘வெல்பயர்’ என்ற பெயரில் அறிமுகமானது. இந்த ஆல்பார்டு மாடல் 2018-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. இது சில மாற்றங்களுடன் இந்தியாவில் வெல்பயர் என்ற பெயரில் அறிமுகமாக உள்ளது.

இதில் ஸ்பிளிட் எல்.இ.டி. முகப்பு விளக்கு மற்றும் பகலில் எரியும் டி.ஆர்.எல். விளக்கு ஆகியன உள்ளன. பனியில் ஒளி வீசும் பாக் விளக்கு ஆகியன இதன் சிறப்பம்சங்களாக இருக்கின்றன. இது பெட்ரோலில் இயங்கும் ஹைபிரிட் மாடலாகும். 150 ஹெச்.பி. திறன் கொண்ட 2.5 லிட்டர் என்ஜினைக் கொண்டது.
இத்துடன் 143 ஹெச்.பி. எலெக்ட்ரிக் மோட்டாரும் உள்ளது. இவை ஒன்றிணைந்து 145 ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தக் கூடியவை. இதில் இரண்டு மேற்கூரை உள்ளன. இதனால் பின் வரிசையில் அமர்ந்திருப்போரும் தேவைப்படும் போது மேற்கூரையை விலக்கி இயற்கைக் காட்சிகளை ரசிக்க முடியும்.
இதன் பக்கவாட்டில் சாத்தக் கூடிய ஸ்லைடிங் கதவுகள் உள்ளன. 3 விதமான கிளைமேட் கண்ட்ரோல் வசதி உள்ளது. இதில் 7 இன்ச் அளவுல் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மிகச் சிறப்பான பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டிருக்கிறது.
அதேபோல பின் இருக்கை பயணிகள் பொழுதைக் கழிக்க வசதியாக 10.2 அங்குல டி.வி.க்கள் உள்ளன. தொடக்கத்தில் 200 கார்களை இறக்குமதி செய்து இங்கு அறிமுகம் செய்து, சந்தை நிலவரத்துக்கேற்ப படிப்படியாக இறக்குமதி செய்வது அல்லது இங்கேயே தயாரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது நெக்சான் காரின் புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது நெக்சான் காரை அப்டேட் செய்துள்ளது. டாடா நெக்சான் எக்ஸ்.டி. பிளஸ் மற்றும் எக்ஸ்.இசட். வேரியண்ட்கள் தற்சமயம் டி.ஆர்.எல்.-கள், ஃபாக் லேம்ப்களை கொண்டிருக்கின்றன.
இத்துடன் எக்ஸ்.டி. பிளஸ் வேரியண்ட்டில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ஓட்டுனர் இருக்கை உயரத்தை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வசதி, எட்டு ஸ்பீக்கர் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. நெக்சான் எக்ஸ்.டி. பிளஸ் மாடலில் கனெக்ட்நெக்ஸ்ட் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், அலாய் வீல் உள்ளிட்ட வசதிகள் இம்முறையும் வழங்கப்படவில்லை.
இரண்டு வேரியண்ட்களிலும் கிளைமேட் கண்ட்ரோல் அம்சங்களை பயனர் மாற்றிக் கொள்ளலாம். எனினும், எக்ஸ்.இசட் பிளஸ் மற்றும் எக்ஸ்.இசட்.ஏ. பிளஸ் மாடல்களில் இது தானியங்கி முறையில் செயல்படும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

புதிய அப்கிரேடுகள் மூலம் நெக்சான் எக்ஸ்.டி. மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களின் விலை முறையே ரூ. 8.02 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் ரூ. 8.87 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாடா நெக்சான் எக்ஸ்.இசட், எக்ஸ்.இசட் பிளஸ் மற்றும் எக்ஸ்.இசட்.ஏ. பிளஸ் வேரியண்ட்களில் தொடர்ந்து கனெக்ட்நெக்ஸ்ட் தொழில்நுட்பம் மற்றும் 7-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
புதிய 7-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது. இத்துடஎன் குரல்வழி அங்கீகார வசதி, நேவிகேஷன், போன் அழைப்புகள், மியூசிக் உள்ளிட்டவற்றை ஒரே க்ளிக் மூலம் வழங்குகிறது. குரல் கமாண்ட்களின் மூலம் குறுந்தகவல்களுக்கும் பதில் அளிக்க முடியும்.
டாடா நெக்சான் காரில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசர் என்ஜின்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன்களுடன் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 110 பி.ஹெச்.பி. பவர், 170 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. டீசல் என்ஜின் 110 பி.ஹெச்.பி. பவர், 260 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
ஹூன்டாய் வென்யூ எஸ்.யு.வி. கார் இந்திய விற்பனையில் தொடர்ந்து அசத்துகிறது. இந்த மாடல் விற்பனையில் கடந்த புதிய மைல்கல் விவரங்களை பார்ப்போம்.
ஹூன்டாய் இந்தியா நிறுவனம் 4-மீட்டர்களுக்குள் உருவான தனது முதல் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலை இந்தியாவில் மே மாத வாக்கில் அறிமுகம் செய்தது. அன்று முதல் ஹூன்டாய் வென்யூ இந்திய சந்தையில் பிரபல மாடலாக இருக்கிறது. இதுவரை சுமார் 55,000 பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில், 18,000 யூனிட்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.
தற்சமயம் ஹூன்டாய் வென்யூ இந்தியாவில் விற்பனையாகும் முன்னணி எஸ்.யு.வி. எனும் பெருமையை பெற்றிருக்கிறது. முன்னதாக மாருதி சுசுகி விடாரா பிரெஸ்ஸா மாடல் அதிகம் விற்பனையாகும் முன்னணி எஸ்.யு.வி.-யாக இருந்தது. ஹூன்டாய் நிறுவனம் ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 9,585 வென்யூ யூனிட்களை விற்பனை செய்துள்ளது.

இதே காலக்கட்டத்தில் மாருதி சுசுகி விடாரா பிரெஸ்ஸா மாடல் 5,302 யூனிட்களே விற்பனையாகி இருக்கிறது. ஹூன்டாய் தனது வென்யூ காரை எலைட் ஐ20 மற்றும் கிரெட்டா மாடல்களுக்கு மத்தியில் நிலை நிறுத்தியிருக்கிறது.
இதுதவிர ஹூன்டாய் வென்யூ எஸ்.யு.வி. இந்தியாவின் முதல் கனெக்ட்டெட் கார் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. இந்தியாவில் இதன் துவக்க மாடல் விலை ரூ. 6.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் முதல் இரு இடங்களில் ஹூன்டாய் வென்யூ மற்றும் கிரெட்டா மாடல்கள் பிடித்துள்ளன. ஹூன்டாய் கிரெட்டா விற்பனையும் விட்டாரா பிரெஸ்ஸா மாடலை விட அதிகமாகி இருக்கிறது. ஹூன்டாய் கிரெட்டா மாடல் மொத்தம் 6,585 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இது வென்யூ மாடலை விட 3000 குறைவு ஆகும்.
ஹூன்டாய் நிறுவனத்தின் புதிய வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனம் தனது வெர்னா மாடலில் பல மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை புகுத்தி அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே உள்ள வெர்னா மாடலைக் காட்டிலும் இது வடிவமைப்பில் முற்றிலுமாக மாறுபட்டுள்ளது. மிகப் பெரிய முகப்பு விளக்கு, கிரில்லுடன் இணைந்த வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
வெளிப்புறம் குரோம் , புரொஜெக்டர் லைட், பார்க்கிங் விளக்கு மற்றும் இன்டிகேட்டர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய காரின் பம்பர் முற்றிலும் புதிய வடிவமைப்பை கொண்டிருக்கிறது. அலாய் சக்கரங்களில் டியூயல் டோன் டயமன்ட் கட் டிசைனுடன் இருப்பது இதற்கு பிரீமியம் தோற்றத்தை அளிக்கிறது.

டியூயல் டோன் அலாய் சக்கரங்கள் சமீபத்தில் இந்நிறுவனம் அறிமுகம் செய்த வென்யூ மாடல் காரில்தான் முதல் முறையாக அறிமுகமானது. தற்போது அது மேம்படுத்தப்பட்ட வெர்னா மாடலுக்கும் வழங்கப்பட்டுள்ளது. பின்புற பம்பரின் தோற்றத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
காரின் உள்புற அமைப்பில் குறிப்பாக தொடு திரையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட எலன்ட்ரா மாடலில் உள்ளதைப் போன்றே தொடுதிரை இதில் வழங்கப்படுகிறது. மேலும் இதில் கனெக்டட் கார் வசதியும் இடம்பெருகிறது.
இது 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினைக் கொண்டதாக வெளி வர இருக்கிறது. இந்த மாடல் பி.எஸ்6. புகை சான்று விதிகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது 128 ஹெச்.பி. திறன் கொண்டது. இதன் டார்க் அளவு 260 நியூட்டன் மீட்டராக உள்ளது.
புதிய மாடலில் 48 வோல்ட் ஹைபிரிட் சிஸ்டம் உள்ளது. இது வாடிக்கையாளரின் விருப்ப தேர்வாக இருக்கும். புதிய மாடல் ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ், டொயோட்டா யாரிஸ், ஸ்கோடா ராபிட், போக்ஸ்வேகன் வென்டோ ஆகிய மாடல் கார்களுக்குப் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூன்டாய் இந்தியா நிறுவனம் தனது கிரெட்டா ஸ்போர்ட்ஸ் எடிஷன் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
ஹூன்டாய் இந்தியா நிறுவனம் கிரெட்டா ஸ்போர்ட்ஸ் எடிஷன் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய கிரெட்டா ஸ்போர்ட்ஸ் எடிஷன் மாடலின் துவக்க விலை ரூ. 12.78 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய லிமிட்டெட் எடிஷன் காரில் காஸ்மெடிக் மாற்றங்கள் மற்றும் புதிய உபகரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
காஸ்மெடிக் அப்டேட்களை பொருத்தவரை புதிய கிரெட்டா ஸ்போர்ட்ஸ் எடிஷனில் முன்புற ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்பில் ஸ்மோக்டு எஃபெக்ட் கொண்டிருக்கிறது. முன்புற கிரில் டார்க் க்ரோம் ஃபினிஷ், ஃபாக்ஸ் டூயல் எக்சாஸ்ட் பைப்கள், சில்வர் ரூஃப் ரெயில்கள், ஸ்கிட் பிளேட்கள் வழங்கப்பட்டுள்ளது.
உள்புறம் ஆல்-பிளாக் இன்டீரியர், கிரெட்டா பேட்ஜிங் கொண்ட கருப்பு நிற ஃபேப்ரிக் சீட்கள், ஸ்டீரிங் வீலில் லெதர் சுற்றப்பட்டுள்ளது. ஏ.சி. வென்ட்களை சுற்றி சில்வர் அக்சென்ட்கள் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் எலெக்ட்ரிக் சன்ரூஃப், இருக்கை, ஸ்டீரிங் வீல் மற்றும் கியர் லீவர்களில் காண்டிராஸ்ட் ஸ்டிட்ச் செய்யப்பட்டுள்ளது.

புதிய கிரெட்டா ஸ்போர்ட்ஸ் எடிஷன் கிரெட்டா எஸ்.எக்ஸ். வேரியண்ட்டை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், 7.0 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், குரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங், ஏ.பி.எஸ்., டூயல் ஏர்பேக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
புதிய ஹூன்டாய் கிரெட்டா ஸ்போர்ட்ஸ் எடிஷனில் 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களை கொண்டிருக்கிறது. இதன் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 122 பி.ஹெச்.பி. பவர், 151 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் 1.6 லிட்டர் டீசல் என்ஜின் 126 பி.ஹெச்.பி. பவர், 260 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கின்றன. இத்துடன் ஆட்டோமேடிக் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.
புதிய ஹூன்டாய் கிரெட்டா ஸ்போர்ட்ஸ் எடிஷன்: ஃபேண்டம் பிளாக் மற்றும் போலார் வைட்/ஃபேண்டம் பிளாக் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஹூன்டாய் கிரெட்டா ஸ்போர்ட்ஸ் எடிஷன் விலை ரூ. 55,000 அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.






