என் மலர்
கார்
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய குளோஸ்டர் மாடல் விற்பனையகம் வர துவங்கி உள்ளது.
எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் தனது நான்காவது கார் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடல் பண்டிகை காலக்கட்டத்தில் அறிமுகமாகும் என தெரிகிறது.
இந்நிலையில், எம்ஜி குளோஸ்டர் மாடல் விற்பனையகம் வர துவங்கி இருக்கிறது. இது அந்நிறுவனத்தின் முதல் லெவல் 1 ஆட்டோனோமஸ் எஸ்யுவி ஆகும். புதிய குளோஸ்டர் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இதற்கான முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் ஆகும்.

இந்திய சந்தையில் எம்ஜி குளோஸ்டர் சூப்பர், ஷார்ப், ஸ்மார்ட் மற்றும் டாப் எண்ட் சேவி என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. மேலும் இது 6 மற்றும் 7 இருக்கை என இருவித கான்பிகரேஷன்களில் கிடைக்கிறது.
எம்ஜி குளோஸ்டர் மாடலில் 2.0 லிட்டர் ட்வின் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இது 216 பிஹெச்பி பவர், 480 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இதுதவிர டர்போ வேரியண்ட் கிடைக்கிறது. இது 162 பிஹெச்பி பவர், 375 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
2021 ரேன்ஜ் ரோவர் மற்றும் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல்களின் விலை விவரங்கள் வெளியாகி உள்ளது.
2021 ரேன்ஜ் ரோவர் மற்றும் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல்களின் இந்திய விலை விவரங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி ரேன்ஜ் ரோவர் மாடல் விலை ரூ. 1.97 கோடியில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 4.09 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் விலை ரூ. 88.24 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் ரூ. 1.72 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

புதிய ரேன்ஜ் ரோவர் மாடலில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் என்ஜின் மற்றும் ஸ்போர்ட் மாடலில் 3.0 லிட்டர் 6 சிலிண்டர் என்ஜின் மற்றும் இரு மாடல்களிலும் 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.
இதன் 5.0 லிட்டர், பெட்ரோல் வி8 சூப்பர் சார்ஜ் செய்யப்பட்ட எஸ்விஆர் மாடல் விலை விவரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
மஹிந்திரா நிறுவனத்தின் 2020 தார் மாடலின் முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மஹிந்திரா நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை தார் மாடலுக்கான முன்பதிவு அக்டோபர் 2 ஆம் தேதி துவங்க இருப்பதாக தெரிவித்து உள்ளது. புதிய தார் மாடல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய மஹிந்திரா தார் மாடலில் எல்இடி டிஆர்எல்கள், வட்ட வடிவ ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில் லைட்கள், டெயில்கேட் மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பேர் வீல் மற்றும் புதிய 18 அங்குல அலாய் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன.
உள்புறம் கார்பன் ஃபைபர் ஃபினிஷ் செய்யப்பட்ட ஏர் கான் வென்ட்கள் மற்றும் ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய மஹிந்திரா தார் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

இவை முறையே 150 பிஹெச்பி, 320 என்எம் டார்க் மற்றும் 130 பிஹெச்பி பவர் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
2020 மஹிந்திரா தார் ஏஎக்ஸ் வேரியண்ட்டில் முன்புற இருக்கைகள் விரும்புவோர் தேர்வு செய்து கொள்ளும் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. இத்துடன் 7 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
ஹோண்டா கார்ஸ் நிறுவனம் இந்தியாவில் விர்ச்சுவல் ஷோரூம் தளத்தை அறிமுகம் செய்து இருக்கிறது.
ஹோண்டா கார்ஸ் நிறுவனம் விர்ச்சுவல் ஷோரூம் தளத்தை அறிமுகம் செய்துள்ளது. இது அந்நிறுவனத்தின் டிஜிட்டல் திட்டங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஹோண்டா விர்ச்சுவல் ஷோரூம் கொண்டு பயனர்கள் அவரவர் வீடுகளில் இருந்தபடி பிடித்த காரை வாங்கிக் கொள்ள முடியும். இந்த பிளாட்பார்ம் வாடிக்கையாளர்களுக்கு ஷோரூம் அனுபவத்தை வழங்குகிறது.

விர்ச்சுவல் ஷோரூம் சேவையை ஸ்மார்ட்போன் மற்றும் கம்ப்யூட்டர்களில் இயக்க முடியும். இந்த தளத்தில் கார்களின் வெளிப்புறம் மற்றும் உள்புற தோற்றம் 360 கோணத்தில் பார்க்க முடியும்.
இது புது வாகனத்தை ஷோரூமில் இருந்து பார்க்கும் அனுபவத்தை வீட்டிலேயே வழங்குவது ஆகும்.
லேண்ட் ரோவர் நிறுவனத்தின் புதிய டிபென்டர் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
லேண்ட் ரோவர் நிறுவனம் இந்தியாவில் தனது டிபென்டர் ஆஃப்-ரோட் எஸ்யுவி மாடலை அக்டோபர் 15 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்தியாவில் லேண்ட் ரோவர் நிறுவனம் டிபென்டர் மாடலை முதல் முறையாக அறிமுகம் செய்கிறது.
வேண்ட் ரோவர் டிபென்டர் 90 (மூன்று கதவு) மற்றும் 110 (ஐந்து கதவு) என இரண்டு மாடல்களில் கிடைக்கிறது. இரு மாடல்களும் ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கின்றன. லேண்ட் ரோவர் டிபென்டர் மாடல் விலை ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, இவற்றுக்கான முன்பதிவும் துவங்கி நடைபெற்று வருகிறது.

டிபென்டர் 90 மாடல் விலை ரூ. 69.99 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 81.30 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. டிபென்டர் 110 மாடல் விலை ரூ 76.57 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 86.27 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
லேண்ட் ரோவர் டிபென்டர் 110 மாடல் விநியோகம், அறிமுக நிகழ்வை தொடர்ந்து துவங்குகிறது. டிபென்டர் 90 மாடலின் விநியோகம் கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக தாமதம் ஆகும் என தெரிகிறது.
நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
நிசான் நிறுவனம் தனது மேக்னைட் காம்பேக்ட் எஸ்யுவி மாடலை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்திய சந்தையில் விற்பனையை அதிகரிக்க நிசான் புதிய மாடலை காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின்படி புதிய நிசான் மேக்னைட் மாடல் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் ஆகும் என கூறப்படுகிறது. முந்தைய தகவல்களில் மேக்னைட் மாடல் 2021 துவக்கத்தில் அறிமுகமாகும் என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதிய காரின் முன்புறம் பெரிய கிரில், மெல்லிய எல்இடி ஹெட்லேம்ப்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் பிளாக்டு-அவுட் பாடி கிளாடிங், டூயல் டோன் அலாய் வீல்கள், எல்இடி ஸ்பில்ட் டெயில் லைட்கள், ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்கள், ரூஃப் ரெயில்கள், சில்வர் அக்சென்ட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
நிசான் மேக்னைட் மாடலில் 1.0 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 71 பிஹெச்பி பவர், 96 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. மேலும் ஆப்ஷனல் ஏஎம்டி வசதி வழங்கப்படலாம் என தெரிகிறது.
ஃபோர்டு நிறுவனம் இந்திய சந்தையில் புத்தம் புதிய என்டேவர் ஸ்போர்ட் மாடலை அறிமுகம் செய்து உள்ளது.
ஃபோர்டு நிறுவனத்தின் புதிய என்டேவர் ஸ்போர்ட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 35.10 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
என்டேவர் ஸ்போர்ட் மாடலில் பிளாக்டு-அவுட் செய்யப்பட்ட காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது காருக்கு ஸ்போர்ட் தோற்றம் வழங்குகிறது. காரின் முன்புற கிரில், லோவர் பம்ப்பர், ORVM, பின்புற நேம் பிளேட் மற்றும் அலாய் வீல்களில் பிளாக்-அவுட் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த எஸ்யுவி மாடலில் ஆல்-எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டெயில் லேம்ப்கள், டிஆர்எல்கள் மற்றும் ஃபாக்லைட்கள் வழங்கப்பட்டு உள்ளது. இதே உபகரணங்கள் ஸ்டான்டர்டு மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. காரின் உள்புளம் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்பட்டுள்ளது.
புதிய என்டேவர் ஸ்போர்ட் மாடலில் 2.0 லிட்டர் இகோபுளூ டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 168 பிஹெச்பி பவர், 420 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 10 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ மாடல் உற்பத்தியில் புதிய மைல்கல் கடந்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ மாடலின் 3 லட்சத்து யூனிட்டை வெளியிட்டுள்ளது. இது குஜராத்தில் உள்ள சனந்த் உற்பத்தி ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டது.
இம்பேக்ட் டிசைன் கொண்டு உருவான முதல் மாடலாக டாடா டியாகோ வெளியிடப்பட்டது. இந்த மாடலில் பல்வேறு முதல்முறை அம்சங்கள் வழங்கப்பட்டு இருந்தன. மேலும் குளோபல் என்கேப்-இன் பாதுகாப்பு தரத்தில் நான்கு நட்சத்திர குறியீடுகளை பெற்றது.

இந்த ஆண்டு துவக்கத்தில் டாடா மோட்டார்ஸ் டியாகோ பிஎஸ்6 பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்தது. இதல் பிஎஸ்6 ரக பெட்ரோல் என்ஜின், புதிய காஸ்மெடிக் மற்றும் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் டியாகோ பேஸ்லிப்ட் மாடலின் முன்புறம் புதிய கிரில் மற்றும் க்ரோம் ஸ்ட்ரிப் வழங்கப்பட்டு உள்ளது.
டாடா டியாகோ மாடலில் 1.2 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் தனது டிரைபர் மாடல் விலையை மீண்டும் மாற்றி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ரெனால்ட் நிறுவனம் தனது டிரைபர் மாடல் காரை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்தது. அறிமுகமானது முதல் டிரைபர் மாடலின் விலை பலமுறை மாற்றப்பட்டு விட்டது.
அந்த வரிசையில், ரெனால்ட் டிரைபர் மாடலின் விலை நான்காவது முறையாக உயர்த்தப்பட்டு உள்ளது. முந்தைய விலை உயர்வின் போது, பேஸ் வேரியண்ட்டின் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. எனினும், இந்த முறை அனைத்து வேரியண்ட்களின் விலையும் உயர்த்தப்பட்டு உள்ளது.

தற்சமயம் ரெனால்ட் டிரைபர் மாடலின் விலை ரூ. 11,500 முதல் ரூ. 13 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அறிமுகமானது முதல் டிரைபர் மாடல் சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.
விலை உயர்வின் படி ரெனால்ட் டிரைபர் மாடல் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 5.12 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 7.34 லட்சம் என மாறி உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
டாடா நெக்சான் எலெக்ட்ரிக் மாடல் காருக்கு குறுகிய காலக்கட்டத்திற்கு மாத சந்தா சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.
டாடா நெக்சான் எலெக்ட்ரிக் மாடலுக்கு நவம்பர் 30 ஆம் தேதி வரை விசேஷ சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது. எனினும், இந்த சலுகை முதல் 100 சந்தாதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
புதிய சலுகையின் கீழ் வாடிக்கையாளர்கள் நெக்சான் இவி மாடலை நிர்ணயிக்கப்பட்ட மாத வாடகையில் காரை பெற்றுக் கொள்ள முடியும். அனைத்து கட்டணங்கள் மற்றும் வாடகை சேர்த்து மாதம் ரூ. 34,900 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்களது சந்தாவை 12 மாதங்களில் துவங்கி அதிகபட்சம் 24 மற்றும் 36 மாதங்கள் வரை பயன்படுத்த முடியும். இந்த சேவை தற்சமயம் டெல்லி, மும்பை, பூனே, ஐதராபாத் மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் வழங்கப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் செலுத்தும் மாத வாடகையில் 24x7 ரோடு சைடு அசிஸ்டண்ஸ், இலவச பராமரிப்பு மற்றும், குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸ் மற்றும் ஹோம் டெலிவரி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
டாடா அல்ட்ரோஸ் மாடல் டீசல் வேரியண்ட்டிற்கு திடீர் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பிஎஸ்6 அல்ட்ரோஸ் மாடல் விலையை சத்தமில்லாமல் மாற்றி அமைத்தது. அதன்படி அல்ட்ரோஸ் மாடலின் அனைத்து வேரியண்ட்களின் விலை ரூ. 15 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது. எனினும் பேஸ் மாடலின் விலையில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
தற்சமயம் அல்ட்ரோஸ் மாடல் எக்ஸ்எம், எக்ஸ்டி, எக்ஸ்இசட் மற்றும் எக்ஸ்இசட் (ஒ) வேரியண்ட்களின் விலை ரூ. 40 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு உள்ளது.

டாடா அல்ட்ரோஸ் டீசல் வேரியண்ட்களின் விலை தற்சமயம் ரூ. 6.99 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 9.09 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
பிஎஸ்6 அல்ட்ரோஸ் பெட்ரோல் வேரியண்ட் விலை ரூ. 5.44 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 7.89 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் மாடல் விநியோகம் துவங்கி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த சொனெட் காம்பேக்ட் எஸ்யுவி மாடலின் விநியோகத்தை துவங்கி உள்ளது. முதற்கட்டமாக சொனெட் மாடலை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் துவங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் கியா சொனெட் மாடல் செப்டம்பர் 18 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 6.71 லட்சத்தில் துவங்கி ரூ. 11.99 லட்சம் என நிர்ணம் செய்யப்பட்டு இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தற்சமயம் கியா சொனெட் டாப் எண்ட் மாடல்களான ஜிடிஎக்ஸ் பிளஸ் டிசிடி மற்றும் டீசல் ஆட்டோமேடிக் வேரியண்ட்களின் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை.
அறிமுக நிகழ்வில் கியா சொனெட் மாடல் முன்பதிவில் 25 ஆயிரம் யூனிட்களை கடந்ததாகவும், முதல் நாளில் மட்டும் 6 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகளை கடந்ததாக கியா மோட்டார்ஸ் தெரிவித்து இருந்தது.






