என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
உற்பத்தியில் புதிய மைல்கல் கடந்த டாடா டியாகோ
Byமாலை மலர்23 Sep 2020 9:49 AM GMT (Updated: 23 Sep 2020 9:49 AM GMT)
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ மாடல் உற்பத்தியில் புதிய மைல்கல் கடந்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ மாடலின் 3 லட்சத்து யூனிட்டை வெளியிட்டுள்ளது. இது குஜராத்தில் உள்ள சனந்த் உற்பத்தி ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டது.
இம்பேக்ட் டிசைன் கொண்டு உருவான முதல் மாடலாக டாடா டியாகோ வெளியிடப்பட்டது. இந்த மாடலில் பல்வேறு முதல்முறை அம்சங்கள் வழங்கப்பட்டு இருந்தன. மேலும் குளோபல் என்கேப்-இன் பாதுகாப்பு தரத்தில் நான்கு நட்சத்திர குறியீடுகளை பெற்றது.
இந்த ஆண்டு துவக்கத்தில் டாடா மோட்டார்ஸ் டியாகோ பிஎஸ்6 பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்தது. இதல் பிஎஸ்6 ரக பெட்ரோல் என்ஜின், புதிய காஸ்மெடிக் மற்றும் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் டியாகோ பேஸ்லிப்ட் மாடலின் முன்புறம் புதிய கிரில் மற்றும் க்ரோம் ஸ்ட்ரிப் வழங்கப்பட்டு உள்ளது.
டாடா டியாகோ மாடலில் 1.2 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X