என் மலர்tooltip icon

    கார்

    கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய செல்டோஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

    கியா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகமானது. இந்நிறுவனம் செல்டோஸ் காம்பேக்ட் எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் தனது முதல் வாகனமாக அறிமுகம் செய்தது. 

    தற்சமயம் இந்நிறுவனம் தனது செல்டோஸ் காரின் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இது அனிவர்சரி எடிஷன் என அழைக்கப்பட இருக்கிறது. புதிய ஸ்பெஷல் எடிஷன் செல்டோஸ் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

     கியா செல்டோஸ்

    அதன்படி புதிய ஸ்பெஷல் எடிஷன் செல்டோஸ் ஹெச்டிஎக்ஸ் ட்ரிமில் மட்டும் கிடைக்கும் என்றும் இந்த கார் வெளிப்புளம் மற்றும் உள்புறங்களில் மாற்றம் செய்யப்படும் என தெரியவந்துள்ளது. இது நான்குவித நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    கியா செல்டோஸ் ஹெச்டிஎக்ஸ் வேரியண்ட்டில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இவை முறையே 113 பிஹெச்பி மற்றும் 144 என்எம் டார்க் செயல்திறன், 113 பிஹெச்பி மற்றும் 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    இந்தியாவில் ஹூண்டாய் நிறுவன கார் மாடலின் சிஎன்ஜி வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டது.


    ஹூண்டாய் நிறுவனம் தனது என்ட்ரி லெவல் சான்ட்ரோ ஹேட்ச்பேக் மாடலை இரண்டு சிஎன்ஜி வேரியண்ட்களில் அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் சான்ட்ரோ மாடல் தற்சமயம் மேக்னா சிஎன்ஜி மற்றும் ஸ்போர்ட்ஸ் சிஎன்ஜி வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    புதிய சிஎன்ஜி வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 5.87 லட்சம் மற்றும் ரூ. 6 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

     ஹூண்டாய் சான்ட்ரோ

    இரண்டு சிஎன்ஜி வேரியண்ட்களிலும் 1.1 லிட்டர் நான்கு சிலிண்டர் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. சிஎன்ஜியில் இந்த என்ஜின் 60 பிஹெச்பி பவர், 85 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்குகிறது.

    இதே என்ஜின் பெட்ரோலில் இயக்கும் போது 69 பிஹெச்பி பவர், 99 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனில் கிடைக்கிறது. 
    ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா மாடல் கார் முன்பதிவில் 1.15 லட்சம் யூனிட்களை கடந்துள்ளது.


    ஹூண்டாய் கிரெட்டா எஸ்யுவி மாடல் இந்திய சந்தை முன்பதிவில் 1.15 லட்சம் யூனிட்களை கடந்து இருக்கிறது. மார்ச் மாத வாக்கில் புதிய கிரெட்டா மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    இந்நிலையில், மே முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் அதிகம் விற்பனையான எஸ்யுவி மாடலாக கிரெட்டா இருந்தது என ஹூண்டாய் தெரிவித்து உள்ளது. 2015 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கிரெட்டா மாடல் இதுவரை 5.2 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

     ஹூண்டாய் கிரெட்டா

    கிரெட்டா மாடலை வாங்கியவர்களில் 60 சதவீதம் பேர் டீசல் வேரியண்ட்டை தேர்வு செய்துள்ளதாக ஹூண்டாய் தெரிவித்து இருக்கிறது. மேலும் க்ளிக் டு பை தளத்தில் சுமார் 1100 முன்பதிவுகளை கிரெட்டா பெற்று இருக்கிறது.
    ஆடி நிறுவனத்தின் புதிய கியூ2 மாடல் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஆடி நிறுவனம் தனது விலை குறைந்த எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய கார் அக்டோபர் 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த காருக்கான அறிமுக நிகழ்வு விரச்சுவல் முறையில் நடைபெற இருக்கிறது.

    கியூ2 மாடல் எம்க்யூபி பளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இதே பிளாட்பார்ம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டி ராக் மாடலிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அளவில் இந்த கார் 4191எம்எம் நீளம், 1794எம்எம் அகலம், 1508எம்எம் உயரமாக இருக்கிறது. இதன் வீல்பேஸ் 2601எம்எம் ஆக இருக்கிறது.

     ஆடி கியூ2

    ஆடி கியூ2 மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 188 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    இத்துடன் புதிய மாடலில் சிங்கில் பிரேம் கிரில், எல்இடி ஹெட்லேம்ப்கள், சில்வர் ஸ்கிட் பிளேட்கள், பிளாக் பாடி கிளாடிங், பிளாக்டு அவுட் பி பில்லர், ஷார்க் பின் ஆன்டெனா, எல்இடி டெயில் லைட்கள் மற்றும் டூயல் டிப் எக்சாஸ்ட்கள் வழங்கப்படுகின்றன.

    மாருதி சுசுகி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா மாடல் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளது.


    மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் விட்டாரா பிரெஸ்ஸா மாடலை 2016 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்தது. அறிமுகமானது முதல் விட்டாரா பிரெஸ்ஸா கணிசமான விற்பனையை பதிவு செய்து வருகிறது.

    அந்த வகையில் இந்த மாடல் குறுகிய காலக்கட்டத்தில் 5.5 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக மாருதி சுசுகி தெரிவித்து உள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் விட்டாரா பிரெஸ்ஸா புது மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஆறு மாதங்களில் சுமார் 32 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

     விட்டாரா பிரெஸ்ஸா

    இந்திய சந்தையில் புதிய விட்டாரா பிரெஸ்ஸா மாடல் விலை ரூ. 7.34 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.40 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
    லேண்ட் ரோவர் நிறுவனத்தின் புதிய டிபென்டர் மாடல் கார் இந்தியா வந்தடைந்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    லேண்ட் ரோவர் நிறுவனம் 2020 டிபென்டர் மாடல் காரை இந்தியா கொண்டுவந்துள்ளது. முதற்கட்ட டிபென்டர் மாடல்கள் மும்பையில் உள்ள ஜவகர்லால் நேரு துறைமுகம் வந்தடைந்து இருக்கின்றன. லேண்ட் ரோவர் நிறுவனத்தின் டிபென்டர் ஆஃப்-ரோட் எஸ்யுவி மாடலை அக்டோபர் 15 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது.

     லேண்ட் ரோவர் டிபென்டர்

    வேண்ட் ரோவர் டிபென்டர் 90 (மூன்று கதவு) மற்றும் 110 (ஐந்து கதவு) என இரண்டு மாடல்களில் கிடைக்கிறது. இரு மாடல்களும் ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கின்றன. லேண்ட் ரோவர் டிபென்டர் மாடல் விலை ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, இவற்றுக்கான முன்பதிவும் துவங்கி நடைபெற்று வருகிறது. 

    டிபென்டர் 90 மாடல் விலை ரூ. 69.99 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 81.30 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. டிபென்டர் 110 மாடல் விலை ரூ 76.57 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 86.27 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தார் மாடல் முன்பதிவில் புதிய மைல்கல் கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    மஹிந்திரா & மஹிந்திரா லிமிட்டெட் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய தார் எஸ்யுவி முன்பதிவில் 9 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் அக்டோபர் 2 ஆம் தேதி அறிமுகமான தார் மாடல் தற்சமயம் 18 நகரங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்திய சந்தையில் புதிய எஸ்யுவி மாடல் லைப்ஸ்டைல் பிரிவில் அதிக முன்பதிவுகளை கடந்த மாடலாக இருக்கிறது. புதிய தார் மாடல் கன்வெர்டிபில் டாப் வசதி வழங்கப்படும் என மஹிந்திரா அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    புதிய மஹிந்திரா தார் மாடலில் எல்இடி டிஆர்எல்கள், வட்ட வடிவ ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில் லைட்கள், டெயில்கேட் மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பேர் வீல் மற்றும் புதிய 18 அங்குல அலாய் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன. 

     மஹிந்திரா தார்

    உள்புறம் கார்பன் ஃபைபர் ஃபினிஷ் செய்யப்பட்ட ஏர் கான் வென்ட்கள் மற்றும் ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மேம்பட்ட ஸ்டீரிங் வீல், ஆடியோ மற்றும் டெலிபோன் கண்ட்ரோல் வழங்கப்பட்டுள்ளது. 

    புதிய மஹிந்திரா தார் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இவை முறையே 150 பிஹெச்பி, 320 என்எம் டார்க் மற்றும் 130 பிஹெச்பி பவர் வழங்குகிறது. 

    இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    ஹூண்டாய் நிறுவனம் தனது கிரெட்டா மாடலின் புதிய பேஸ் வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.


    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது கிரெட்டா மாடலின் புதிய பேஸ் வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடல் கிரெட்டா பெட்ரோல் இ என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் புதிய கிரெட்டா பெட்ரோல் இ வேரியண்ட் விலை ரூ. 9.81 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    முன்னதாக ஹூண்டாய் கிரெட்டா இ வேரியண்ட் டீசல் என்ஜின் ஆப்ஷனில் மட்டுமே கிடைத்தது. கிரெட்டா இ வேரியண்ட் அடிப்படை அம்சங்களை கொண்டிருக்கிறது. இதில் மேனுவல் ஏர்-கான், மின்சக்தியில் இயங்கும் ORVM, டூயல் டோன் இன்டீரியர், ப்ரோஜக்டர் ஹெட்லேம்ப் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்படுகிறது.

     ஹூண்டாய் கிரெட்டா

    பாதுகாப்பிற்கு இந்த மாடலில் முன்புறம் ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி, பின்புறம் பார்க்கிங் சென்சார்கள், லேன் சேன்ஜ்டு இன்டிகேட்டர், டூயல் ஹாரன், சென்ட்ரல் லாக்கிங் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    கிரெட்டா இ வேரியண்ட் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. 

    இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ நிறுவன கார் மாடல்களின் விலை மாற்றப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


    பிஎம்டபிள்யூ இந்தியா தனது கார் மாடல்களின் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்து உள்ளது. உதிரிபாகங்கள் விலை உயர்வு மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்டவை இந்த முடிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.

    இந்தியாவுக்கான பிஎம்டபிள்யூ குழுமம் பிஎம்டபிள்யூ மற்றும் மினி கார் மாடல்களின் விலை உயர்வு நவம்பர் 1 ஆம் தேதி அமலாக இருக்கிறது. இந்நிறுவனம் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட 2 சீரிஸ் கிரான் கூப் மாடலை அக்டோபர் 15 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது.

     பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூப்

    தற்சமயம் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ, 5 சீரிஸ், 6 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ, 7 சீரிஸ், எக்ஸ்1, எக்ஸ்3, எக்ஸ்4, எக்ஸ்5, எக்ஸ்7 மற்றும் மினி கன்ட்ரிமேன் உள்ளிட்ட மாடல்களை இந்தியாவில் உற்பத்தி செய்கிறது. 

    பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் கிரான் கூப், எக்ஸ்6, இசட்4, எம்2 காம்படீஷன், எம்4 கூப், எம்5 காம்படீஷன் மற்றும் எம்8 கூப் உள்ளிட்டவை பிஎம்டபிள்யூ விற்பனையகங்களில் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. இவை சிபியு முறையில் இந்தியாவுக்கு கொண்டுவரப்படுகின்றன.
    கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் மாடல் கார் 12 நாட்களில் இத்தனை யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


    கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சொனெட் மாடல் கார் இந்திய சந்தையில் அறிமுகமான 12 நாட்களில் 9,266 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. செப்டம்பர் 2020 மாதத்தில் மட்டும் கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் 18,676 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது.

    கடந்த மாதம் விற்பனையில், அதிக யூனிட்களை கடந்த இரண்டாவது மாடலாக கியா சொனெட் இருக்கிறது. கடந்த மாதத்தில் மட்டும் கியா சொனெட் 9,079 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

     கியா சொனெட்

    கியா சொனெட் மாடலை வாங்க இதுவரை சுமார் 35 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்து இருப்பதாக கியா மோட்டார்ஸ் தெரிவித்து உள்ளது. இந்தியா மட்டுமின்றி சர்வதேச சந்தைகளிலும் கியா மோட்டார்ஸ் தனது வாகனங்களை ஏற்றுமதி செய்து வருகிறது.

    அடுத்த 12 மாதங்களில் சுமார் 50 ஆயிரம் யூனிட்களை வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்ய கியா மோட்டார்ஸ் திட்டமிட்டு இருக்கிறது. பண்டிகை காலக்கட்டத்தில் வாகன விற்பனை மேலும் அதிகரிக்கும் என கியா மோட்டார்ஸ் எதிர்பார்ப்பு தெரிவித்து உள்ளது.
    டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் 2020 செப்டம்பர் மாதத்தில் சுமார் 8 ஆயிரம் கார்களை விற்பனை செய்துள்ளது.


    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனம் 2020 செப்டம்பர் மாதத்தில் மட்டும் 8116 யூனிட்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. கொரோனாவைரஸ் பாதிப்பை தொடர்ந்து வாகன விற்பனை சந்தை மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

     டொயோட்டா யாரிஸ்

    இந்நிலையில், 2020 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது செப்டம்பர் மாத விற்பனையில் டொயோட்டா நிறுவனம் 46 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து உள்ளது. 2019 செப்டம்பரில் டொயோட்டா நிறுவனம் 10,203 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. 

    கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடும் போது, முன்பதிவு சதவீதம் 14 முதல் 18 சதவீதம் வரை அதிகரித்து இருப்பதாக டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் தெரிவித்து இருக்கிறது. 
    ரெனால்ட் நிறுவனம் தனது இரு கார் மாடல்களின் விலையை திடீரென மாற்றி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    ரெனால்ட் நிறுவனம் டிரைபர் மற்றும் க்விட் மாடல் கார்களின் விலையை திடீரென உயர்த்தி இருக்கிறது. அந்த வகையில் ரெனால்ட் டிரைபர் மாடல் ரூ. 13 ஆயிரம், க்விட் வேரியண்ட்களுக்கு ரூ. 3510 வரை உயர்த்தப்பட்டு உள்ளது.

    விலை உயர்வின் படி ரெனால்ட் டிரைபர் மாடல் துவக்க விலை ரூ. 5.12 லட்சம் என மாறி இருக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 7.34 லட்சம் என மாறி இருக்கிறது. ரெனால்ட் க்விட் மாடல் துவக்க விலை ரூ. 3.07 லட்சம் என்றும் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 5.20 லட்சம் என மாறி இருக்கிறது.

     ரெனால்ட் டிரைபர்

    ரெனால்ட் டிரைபர் மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. ரெனால்ட் க்விட் மாடல் 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 

    இதன் சிறிய என்ஜின் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. பெரிய பெட்ரோல் என்ஜின் மேனுவல் மற்றும் ஏஎம்டி என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    ×