என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
பிஎம்டபிள்யூ கார் விலையில் மாற்றம் - நவம்பர் 1 முதல் அமலாகிறது
Byமாலை மலர்5 Oct 2020 9:58 AM GMT (Updated: 5 Oct 2020 9:58 AM GMT)
இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ நிறுவன கார் மாடல்களின் விலை மாற்றப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிஎம்டபிள்யூ இந்தியா தனது கார் மாடல்களின் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்து உள்ளது. உதிரிபாகங்கள் விலை உயர்வு மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்டவை இந்த முடிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.
இந்தியாவுக்கான பிஎம்டபிள்யூ குழுமம் பிஎம்டபிள்யூ மற்றும் மினி கார் மாடல்களின் விலை உயர்வு நவம்பர் 1 ஆம் தேதி அமலாக இருக்கிறது. இந்நிறுவனம் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட 2 சீரிஸ் கிரான் கூப் மாடலை அக்டோபர் 15 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது.
தற்சமயம் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ, 5 சீரிஸ், 6 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ, 7 சீரிஸ், எக்ஸ்1, எக்ஸ்3, எக்ஸ்4, எக்ஸ்5, எக்ஸ்7 மற்றும் மினி கன்ட்ரிமேன் உள்ளிட்ட மாடல்களை இந்தியாவில் உற்பத்தி செய்கிறது.
பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் கிரான் கூப், எக்ஸ்6, இசட்4, எம்2 காம்படீஷன், எம்4 கூப், எம்5 காம்படீஷன் மற்றும் எம்8 கூப் உள்ளிட்டவை பிஎம்டபிள்யூ விற்பனையகங்களில் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. இவை சிபியு முறையில் இந்தியாவுக்கு கொண்டுவரப்படுகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X