என் மலர்
ஆட்டோ டிப்ஸ்
அன்றாடம் கார் பயன்படுத்துவோர் அதற்கு தேவைப்படும் எரிபொருளை சேமிக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. இதன் காரணமாக சொந்த வாகனங்களில் அலுவலகம் மற்றும் இதர இடங்களுக்கு சென்று வருவோர் எரிபொருளுக்கென தனி வருமானம் ஈட்ட வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது. இந்த சூழலில் கார் பயன்படுத்துவோர் அதற்கு தேவைப்படும் எரிபொருளை சேமிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
எரிபொருளை சிக்கனப்படுத்த கார் என்ஜினை ஸ்டார்ட் செய்த பின்பு, அதிக ஆக்சிலரேட் செய்யாமல் கியரை என்கேஜ் செய்து பின்பு மிதமாக ஆக்சிலரேட் கொடுத்து வாகனத்தை நகர்த்துவதன் மூலம் எரிபொருளை சேமிக்கலாம். என்ஜினின் வேகத்திற்கேற்ப கியர் மாற்றுவதை கடைபிடிப்பதன் மூலம் கியர் ரேஷியோ சரியாக இருக்கும், இதை சரியாக பின்பற்றுவதன் மூலம் மூலம் எரிபொருள் சேமிக்கலாம்.

சிக்னலில் வாகனம் நிற்கும் போது என்ஜினை ஆப் செய்து விட்டு பச்சை விளக்கு எறிய 15 நொடிகள் இருக்கும் போது என்ஜினை ஸ்டார்ட் செய்து பின்பு வாகனத்தை இயக்கலாம். வாகனம் ஓட்டும்போது கிளட்ச் பெடலின் மீது கால் வைத்து ஓட்டுவதைத் தவிர்த்து வந்தால் என்ஜினின் சக்தி வீணாவதை தவிர்க்க முடியும். அதோடு கிளட்சின் தேய்மானமும் குறையும்.
டயரின் காற்றழுத்தத்தை முறையாக பராமரிப்பதன் மூலம் என்ஜினின் சக்தி விரயமாவதை தவிர்க்க முடியும். அதோடு டயரின் ஆயுள் காலத்தையும் அதிகரிக்கலாம். குறிப்பிட்ட கால இடைவெளியில் தவறாமல் என்ஜின் ஆயில் மாற்றுவதையும், பியூவல் சிஸ்டத்தை சுத்தம் செய்வது, மாற்றுவதையும் தவறாமல் கடைப்பிடித்து வந்தால் எரிபொருள் வீணாவதை தவிர்க்க முடியும். என்ஜினின் சப்தமும் அதிகமாகாமல் இருக்கும்.
தேவையான போது மட்டும் ஏ.சி. உபயோகித்து மற்ற நேரங்களில் தவிர்த்து வந்தல் எரிபொருள் சேமிப்பாகும். மைலேஜும் கிடைக்கும். பிரேக் சிஸ்டத்தை முறையாக பராமரிப்பதன் மூலம் `வீல் ஜாம்’ ஆவதை தவிர்க்கலாம். வாகனத்தில் பயணம் செய்யும்போது இருக்கைக்கு ஏற்றவாறு ஆட்கள் பயணம் செய்ய வேண்டும். அதிகபடியான ஆட்கள் பயணம் செய்யும் போது என்ஜின் அதிக பாரம் இழுப்பதால், எரிபொருள் அதிகம் செலவாகும்.
டொயோட்டா நிறுவனத்தின் சப்-4 மீட்டர் எஸ்.யு.வி.-யான அர்பன் குரூயிசர் மாடல்கள் திரும்ப பெறப்படுகின்றன.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது சப்-4 மீட்டர் எஸ்.யு.வி.-யான அர்பன் குரூயிசர் மாடலை ரீகால் செய்வதாக அறிவித்து உள்ளது. ஜூலை 28, 2020 முதல் பிப்ரவரி 11, 2021 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 9,498 யூனிட்கள் ரீகால் செய்யப்படுகின்றன.

ஓட்டுனர் இருக்கையுடன் வரும் ஏர்பேக் மாட்யூலில் கோளாறு இருக்கலாம் என்ற காரணத்தால் கார்கள் திரும்ப பெறப்படுவதாக டொயோட்டா இந்தியா நிறுவனம் அறிவித்து உள்ளது. இந்த பாதிப்பு கொண்ட வாகன உரிமையாளர்களை டொயோட்டா தொடர்பு கொண்டு வாகனத்தை இலவசமாக சரி செய்து வழங்கும்.
அர்பன் குரூயிசர் மாடலின் அனைத்து வேரியண்ட்களின் முன்புறம் இரட்டை ஏர் பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. டொயோட்டா அர்பன் குரூயிசர் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 103 பி.ஹெச்.பி. பவர், 138 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் 2021 ஆக்டேவியா மாடல் இந்திய வெளியீட்டு விவரங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஸ்கோடா இந்தியா நிறுவனம் தனது வாகனங்களை இதுவரை பிஎஸ்6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் அப்டேட் செய்யவில்லை. அந்நிறுவனத்தின் பிரபல செடான் மாடலான ஆக்டேவியா புது பொலிவுடன் விரைவில் இந்தியா வரும் என பலமுறை தகவல்கள் வெளியாகி வந்தது.
அந்த வரிசையில், புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா மாடல் இரண்டு மாதங்களில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் விற்பனை, சர்வீஸ் மற்றும் விளம்பர பிரிவு இயக்குனர் ஜாக் ஹாலின்ஸ் தெரிவித்து இருக்கிறார்.

முன்னதாக புதிய ஆக்டேவியா மாடலின் ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. மேலும் புதிய தலைமுறை ஆக்டேவியா மாடல் ஏற்கனவே பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இந்த மாடலின் முன்புறம் புது வடிவமைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இது பிஎஸ்4 மாடலைவிட மெல்லியதாக காட்சியளிக்கிறது.
இத்துடன் முன்புற பம்ப்பர் டிசைன் மாற்றப்பட்டு, புதிய மாடலில் அகலமான ஏர் டேம், எல்இடி பாக் லேம்ப் மற்றும் மெல்லிய குரோம் ஸ்ட்ரிப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ஹெட்லேம்ப்களும் மெல்லிய எல்இடி யூனிட்கள் ஆகும். பின்புறம் கூர்மையான பூட்-லிட் வழங்கப்படுகிறது. இத்துடன் புது அலாய் வீல் டிசைன் வழங்கப்படுகிறது.
சிட்ரோயன் நிறுவனம் தனது புதிய சி5 ஏர்கிராஸ் மாடலின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.
சிட்ரோயன் நிறுவனத்தின் சி5 ஏர்கிராஸ் மாடல் இந்தியாவில் ஏப்ரல் 7ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இந்திய சந்தையில் சி5 ஏர்கிராஸ், சிட்ரோயன் நிறுவனத்தின் முதல் மாடல் ஆகும். புதிய மிட்-சைஸ் எஸ்யுவி மாடலின் முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் ஆகும்.
புதிய சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடல்கள் இந்தியாவில் செயல்படும் பத்து லா மைசன் விற்பனையகங்கள் மூலம் விற்பனை செய்யப்பட இருக்கிறது. புதிய மாடல் ஷோரூம் ஆன் வீல்ஸ் மூலம் பல்வேறு நகரங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அறிமுகம் செய்யப்பட்டதும், இந்த எஸ்யுவி மாடலுக்கான வினியோகம் துவங்கும் என தெரிகிறது.

சி5 ஏர்கிராஸ் மாடலில் கிராஸ்ஓவர் போன்ற ஸ்டான்ஸ், ட்வின்-ஸ்லாட் முன்புற கிரில், டூயல் பீம் எல்இடி ஹெட்லைட்கள், எல்இடி டிஆர்எல்கள், எல்இடி பாக் லேம்ப், 18 இன்ச் டூயல் டோன் அலாய் வீல், குரோம் பாக்ஸ் டூயல் எக்சாஸ்ட் பைப் மற்றும் எல்இடி டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 175 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடல் பீல் மற்றும் ஷைன் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும். இத்துடன் பியல் வைட், குமுலஸ் கிரே, டிஜூசா புளூ மற்றும் பெர்லா நெரா பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும்.
கேடிஎம் நிறுவனத்தின் புதிய ஆர்சி200 மோட்டார்சைக்கிள் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
கேடிஎம் நிறுவனம் தனது ஆர்சி200 மாடலை மேம்படுத்த திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய கேடிஎம் ஆர்சி200 மாடல் சிறு மாற்றங்களுடன் அறிமுகமாகும் என தெரிகிறது. அதன்படி புது மாடலில் காஸ்மெடிக் மற்றும் மெக்கானிக்கல் என இருவிதங்களில் மாற்றங்கள் செய்யப்படலாம்.
முன்னதாக புது ஆர்சி200 ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கும் நிலையில், தற்போது பூனேவில் எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளது. ஸ்பை படங்களில் உள்ள புது ஆர்சி200 முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது.
மாற்றங்களை பொருத்தவரை புது மாடலில் ஹாலோஜன் ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல் உள்ளிட்டவை டியூக் 200 மாடலில் உள்ளதை போன்று வழங்கப்படுகிறது. இத்துடன் அழகிய தோற்றம் கொண்ட டிஎப்டி டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இது கேடிஎம் 250 அட்வென்ச்சர் மாடலில் உள்ளதை போன்று வழங்கப்படலாம்.
இத்துடன் புது மாடலில் எல்இடி டெயில் லைட்கள், தற்போதைய மாடலில் உள்ளதை போன்ற இன்டிகேட்டர்கள் வழங்கப்படுகின்றன. இந்த மாடல் டிரெலிஸ் சப்-பிரேம் மற்றும் புதிய அலாய் வீல்களை கொண்டிருக்கிறது. சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் செட்டப்களில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கலாம்.
புதிய மாடலிலும் 199சிசி சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு யூனிட் வழங்கப்படுகிறது. இந்த யூனிட் 25 பிஹெச்பி பவர், 19 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலையை மாற்றுவதாக அறிவித்து இருக்கிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் விலையை உயர்த்தி இருக்கிறது. பஜாஜ் செட்டாக் மாடல் அர்பேன் மற்றும் பிரீமியம் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் புதிய விலை முறையே ரூ. 1.15 லட்சம் மற்றும் ரூ. 1.20 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இது முந்தைய விலையை விட முறையே ரூ. 15 ஆயிரம் மற்றும் ரூ. 5 ஆயிரம் அதிகம் ஆகும். தற்போது செட்டாக் எலெக்ட்ரிக் மாடல் பூனே மற்றும் பெங்களூரு நகரங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் நாட்டின் மற்ற நகரங்களிலும் இதன் விற்பனை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை உயர்வு தவிர இந்த மாடலில் வேறு மாற்றமும் செய்யப்படவில்லை.

செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் எல்இடி லைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, பெரிய சீட் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. பஜாஜ் செட்டாக் மாடலில் 4Kw எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 3kWh லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த மோட்டார் 16 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 95 கிலோமீட்டர் வரை செல்கிறது. இது ஸ்டான்டர்டு மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கிடைக்கிறது. இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணி நேரங்கள் ஆகும்.
எலெக்ட்ரிக் சார்ஜிங் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது குறித்து டெஸ்லா மற்றும் டாடா பவர் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெஸ்லா இன்க் மற்றும் டாடா பவர் நிறுவனங்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் இரு நிறுவனங்கள் இடையே வியாபார கூட்டணி அமைய இருப்பதாக கூறப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் டெஸ்லா நிறுவனம் எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்கான ஆலையை துவங்க இருக்கிறது. இந்த நிலையில் டாடா பவர் மற்றும் டெஸ்லா நிறுவனங்கள் முதற்கட்ட பேச்சுவார்த்தையை துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பேச்சுவார்த்தை குறித்து இருநிறுவனங்கள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

முன்னதாக ஜனவரி மாத வாக்கில் அமெரிக்க எலெக்ட்ரிக் கார் உற்பத்தியாளரான டெஸ்லா, பெங்களூரு நகரில் டெஸ்லா மோட்டார்ஸ் இந்தியா எனர்ஜி பிரைவேட் லிமிடெட் பெயரில் நிறுவனத்தை பதிவு செய்தது.
இரு நிறுவனங்கள் இடையே கூட்டணி அமைவதாக வெளியான தகவல்களுக்கு கடந்த வாரம் டாடா மோட்டார்ஸ் லிமிடெட் பதில் அளித்தது. அதில் இரு நிறுவனங்கள் கூட்டணி குறித்து வெளியான தகவலில் உண்மையில்லை என தெரிவித்தது.
ஹோண்டா நிறுவனம் தனது பிரீமியம் மோட்டார்சைக்கிள் மாடலை ரீகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் பிரீமியம் 350சிசி குரூயிசர் மாடலை ரீகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. நவம்பர் 25, 2020 முதல் டிசம்பர் 12, 2020 வரையிலான தேதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட ஹோண்டா ஹைனெஸ் சிபி350 யூனிட்களை ரீகால் செய்கிறது.
ஹைனெஸ் சிபி350 மாடலின் கியர்பாக்சில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் மூலப்பொருள் தொடர் பயன்பாட்டில் கோளாறை ஏற்படுத்தலாம் என ஹோண்டா கண்டறிந்து இருக்கிறது. இதுவரை இதுபோன்ற கோளாறு எந்த மாடலிலும் கண்டறியப்படவில்லை. அந்த வகையில் இது முன்கூட்டியே மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என தெரிகிறது.

ரீகால் வழிமுறைகள் மார்ச் 23 ஆம் தேதி துவங்குகிறது. ரீகால் செய்ய வேண்டிய யூனிட்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை ஹோண்டாவின் பிங்விங் விற்பனையாளர்கள் நேரடியாக அழைப்பு, மின்னஞ்சல், எஸ்எம்எஸ் மூலம் நேரடியாக தகவல் தெரிவித்து வருகின்றனர்.
ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பிங்விங் வலைதளம் சென்று தங்களின் வாகன குறியீட்டு எண்ணை பதிவிட்டு வாகனம் இந்த பட்டியலில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை பட்டியலில் இருப்பின் வாடிக்கையாளர்கள் விருப்பம் போல் சர்வீஸ் செய்வதற்கான முன்பதிவை செய்யலாம்.
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய அல்காசர் மாடல் கார் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் புத்தம் புதிய அல்தாடர் எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இது கிரெட்டா எஸ்யுவி-யின் 7 சீட்டர் வேரியண்ட் ஆகும். இந்த மாடல் கிரெட்டா மற்றும் டக்சன் மாடல்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்படுகிறது. புதிய ஹூண்டாய் கார் ஸ்பை படங்கள் மீண்டும் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஸ்பை படங்களில் அல்காசர் மாடல் முற்றிலும் மறைக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இந்த மாடலில் டைமண்ட் கட் அலாய் வீல், டூயல் டிப் எக்சாஸ்ட், ராப்-அரவுண்ட் டெயில் லேம்ப் மற்றும் ஸ்ப்லிட் எல்இடி ஹெட்லேம்ப் போன்ற அம்சங்கள் வழங்கப்படுவது தெரியவந்துள்ளது.
முந்தைய ஸ்பை படங்களின்படி ஹூண்டாய் அல்காசர் மாடலில் இரண்டு மற்றும் மூன்றாம் அடுக்கு இருக்கைகள் தவிர வேறு எந்த விவரமும் வெளியாகவில்லை. முன்புற டேஷ்போர்டு மற்றும் லே-அவுட் ஹூண்டாய் கிரெட்டாவில் இருந்ததை போன்றே வழங்கப்பட இருப்பது தெரியவந்தது.
டொயோட்டா நிறுவனம் எக்ஸ் ப்ரோலாக் எலெக்ட்ரிக் கார் டீசரை வெளியிட்டு இருக்கிறது.
உலகின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான டொயோட்டா தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. புதிய எலெக்ட்ரிக் கார் எக்ஸ் ப்ரோலாக் எனும் பெயர் கொண்டுள்ளது. இந்த கார் மார்ச் 17 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

தற்போதைய தகவல்களில் புதிய எக்ஸ் ப்ரோலாக் மாடல் e-TNGA பிளாட்பார்மில் உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது. இந்த பிளாட்பார்ம் பிரண்ட்-வீல் டிரைவ், ரியர்-வீல் டிரைவ் மற்றும் ஆல்-வீல் டிரைவ் வசதியை வழங்கும். மேலும் இதை கொண்டு பெரிய அளவில் கிராஸ்ஒவர், மினிவேன் மற்றும் செடான் உள்ளிட்டவைகளை வடிவமைக்க முடியும். இவை அனைத்தும் புதிய பெயர் கொண்டிருக்கும்.
டீசரின்படி எக்ஸ் ப்ரோலாக் மாடலில் சி வடிவ எல்இடி லைட் வழங்கப்படும் என தெரிகிறது. இதுதவிர இந்த கார் அதிநவீன தோற்றம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த கார் உருவாகும் e-TNGA பிளாட்பார்ம் பல்வேறு அளவு கொண்ட பேட்டரிகள் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் அவுட்-புட்களை கையாளும் திறன் வழங்குகிறது.
வால்வோ நிறுவனம் தனது புதிய எஸ்60 மாடலின் வினியோகத்தை இந்த தேதியில் துவங்குவதாக தெரிவித்து இருக்கிறது.
வால்வோ நிறுவனம் தனது எஸ்60 மாடலை ஜனவரி 2021 வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய எஸ்60 மாடல் துவக்க விலை ரூ. 45.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது. முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் ஆகும்.
இந்த நிலையில், புதிய வால்வோ எஸ்60 மாடலை மார்ச் 18 ஆம் தேதி முதல் வினியோகம் செய்வதாக அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது. புதிய வால்வோ எஸ்60 அந்நிறுவனத்தின் சமீபத்திய வடிவமைப்பில் உருவாகி இருக்கிறது. இதில் அகலமான கிரில், நடுவில் வால்வோ லோகோ இடம்பெற்று இருக்கிறது. பக்கவாட்டுகளில் மெல்லிய எல்இடி தார் ஹேமர் ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டு உள்ளது.

முன்புற பம்ப்பரில் பெரிய ஏர் இன்டேக் வழங்கப்பட்டு உள்ளது. பக்கவாட்டில் குறைந்த அளவு வடிவமைப்பு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் பெரிய டூயல்-டோன் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. பின்புறம் சி வடிவ எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
2021 வால்வோ எஸ்60 செடான் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 187 பிஹெச்பி பவர், 300 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. தற்சமயம் இந்த மாடலில் டீசல் என்ஜின் வழங்கப்படவில்லை.
போர்டு நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது இகோஸ்போர்ட் எஸ்இ மாடலை அறிமுகம் செய்தது.
போர்டு இந்தியா இகோஸ்போர்ட் எஸ்இ மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட் விலை முறையே ரூ. 10.49 லட்சம் மற்றும் ரூ. 10.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

புதிய மாடலின் வெளிப்புறம் டெயில் கேட் பகுதியில் மவுன்ட் செய்யப்பட்டு இருந்த ஸ்பேர் வீல் நீக்கப்பட்டு, பூட் பகுதியில் நம்பர் பிளேட் உள்ளது. இதன் அம்சங்கள் டைட்டானியம் வேரியண்டில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி பன்ச்சர் சரி செய்வதற்கான கிட், சன்ரூப், சின்க் 3 இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
போர்டு இகோஸ்போர்ட் எஸ்இ வேரியண்டில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை முறையே 121 பிஹெச்பி பவர், 149 என்எம் டார்க் செயல்திறன் மற்றும் 99 பிஹெச்பி பவர், 215 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகின்றன. இவற்றுடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.






