என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    • டொயோட்டா நிறுவனத்தின் புதிய பார்ச்சூனர் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • புது மாடலுக்கான சோதனை தற்போது நடைபெற்று வருகிறது.

    அடுத்த தலைமுறை டொயோட்டா பார்ச்சூனர் மாடல் தாய்லாந்தில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. ஸ்பை படங்களின் படி புதிய பார்ச்சூனர் மாடலின் வெளிப்புற தோற்றம் தற்போது விற்பனை செய்யப்படும் மாடை போன்று காட்சியளிக்கிறது.


    வெளிப்புற தோற்றத்தில் அதிகளவு மாற்றங்கள் இல்லாத நிலையில், இந்த மாடல் ஹைப்ரிட் பவர்டிரெயின் கொண்டிருக்கும் என தெரிகிறது. மேலும் இதில் இண்டகிரேடெட் ஸ்டார்ட்டர் ஜெனரேட்டர் மற்றும் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்படலாம். இத்துடன் பானரோமிக் சன்ரூப் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    இந்திய சந்தையில் புதிய தலைமுறை டொயோட்டா பார்ச்சூனர் மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். இங்கு புதிய தலைமுறை பார்ச்சூனர் மாடல் எம்.ஜி. குளோஸ்டர், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4, போக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷக் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    Source: Rushlane

    ஸ்கோடா நிறுவனம் விரைவில் தனது எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஸ்கோடா என்யாக் எலெக்ட்ரிக் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது.

    ஸ்கோடா ஆட்டோ இந்தியா தனது முதல் எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் இந்த எலெக்ட்ரிக் காரின் சோதனை துவங்கி நடைபெற்று வருகிறது. ஸ்கோடா என்யாக் iV எலெக்ட்ரிக் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 

    எவ்வித மறைப்பும் இன்றி சோதனை செய்யப்படும் ஸ்கோடா எலெக்ட்ரிக் கார், ஸ்கோடா என்யாக் iV 80X எலெக்ட்ரிக், டாப் எண்ட் வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது. இந்த கார் MEB ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது புதிய ஸ்கோடா ஆக்டேவியா மாடலை விட அளவில் சிறியதாக உருவாக்கப்பட்டு உள்ளது. எனினும், இதன் பூட் ஸ்பேஸ் ஸ்கோடா கோடியக் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஸ்கோடா என்யாக் iV
    Photo Courtesy:  Instagram | harshbhatt723

    ஸ்கோடா என்யாக் iV மாடல் பல்வேறு செயல்திறன் மற்றும் ரேன்ஜ் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. என்யாக் iV 55 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் கொண்ட மாடல் 146 ஹெச்.பி. பவர், 220 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 340 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. 

    இதே கார், 177 ஹெச்.பி. பவர், 310 நியூட்டன் மீட்டர் டார்க், 210 பி.ஹெச்.பி. பவர், 310 நியூட்டன் மீட்டர்டார்க் மற்றும் 261 பி.ஹெச்.பி. பவர், 425 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. ஸ்கோடா என்யாக் RS மாடல் iV வேரியண்ட் சக்திவாய்ந்த மாடல் ஆகும். 
    எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஆஸ்டர் எஸ்.யு.வி. மாடல் விலையை மாற்றியமைத்து உள்ளது. இந்திய சந்தையில் எம்.ஜி. ஆஸ்டர் மாடல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.


    எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஆஸ்டர் எஸ்.யு.வி. விலையை உயர்த்தி இருக்கிறது. இந்தியாவில் அக்டோபர் 2021 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஆஸ்டர் எஸ்.யு.வி. மாடல் விலை தற்போது ரூ. 46 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. 

    இந்திய சந்தையில் ஆஸ்டர் மாடல் ஸ்டைல், சூப்பர், ஷார்ப், ஸ்மார்ட் மற்றும் சேவி என ஐந்து வித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த மாடலின் 1.5 லிட்டர் என்ஜின் கொண்ட வேரியண்ட்களின் விலை ரூ. 30 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 46 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் 1.3 லிட்டர் கொண்ட ஸ்டைல் மற்றும் ஷார்ப் வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 30 ஆயிரம் மற்றும் ரூ. 40 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது.

     எம்.ஜி. ஆஸ்டர்

    எம்.ஜி. ஆஸ்டர் மாடலில் உள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 108.5 பி.ஹெச்.பி. திறன், 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 1.3 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 138 பி.ஹெச்.பி. திறன், 220 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இதன் 1.5 லிட்டர் என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 8 ஸ்பீடு சி.வி.டி. கியர்பாக்ஸ் பெறலாம். 1.3 லிட்டர் என்ஜினுடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    கியா இந்தியா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கியா EV6 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் முதற்கட்டமாக 100 யூனிட்களே விற்பனை செய்யப்பட உள்ளன.


    கியா இந்தியா நிறுவனம் தனது கியா EV6 எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய கியா EV6 மாடலுக்கான முன்பதிவு மே 26 ஆம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. புதிய கியா EV6 விலை ரூ. 59.95 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    முதற்கட்டமாக இந்த காரின் 100 யூனிட்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. கியா EV6 மாடல் RWD மற்றும் AWD என இரண்டு வேரியண்ட்களிலும் கிடைக்கிறது. கியா EV6 மாடலில் 77.4 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. 

     கியா EV6

    சர்வதேச சந்தையில் இந்த கார் 58 கிலோவாட் ஹவர் மற்றும் 77.4 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும், இந்தியாவில் ஒரு வேரியண்ட் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் மணிக்கு 528 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. 

    மேலும் இந்த கார் 320 ஹெச்.பி. பவர், 605 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. கியா EV6 மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 5.2 நொடிகளில் எட்டிவிடும். இதனுடன் வழங்கப்படும் அல்ட்ரா பாஸ்ட் சார்ஜிங் பயன்படுத்தும் போது காரை 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 18 நிமிடங்களே ஆகும். 

    கியா EV6 எலெக்ட்ரிக் கார் மாடல் நார்மல், ஸ்போர்ட் அல்லது இகோ என மூன்று வித டிரைவிங் மோட்களில் கிடைக்கிறது. ஒவ்வொரு மோடிற்கு ஏற்ப காரின் செயல்திறன் வேறுபடுவதோடு, பிரத்யேக டிரைவர் இண்டர்பேஸ் கொண்டுள்ளது. 

    ஹூண்டாய் நிறுவனம் தெலுங்கானா மாநிலத்தில் ரூ. 1400 கோடி முதலீடு செய்ய இருக்கிறது. இதற்கான அறிவிப்பு தெலுங்கானா தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி முன்னிலையில் வெளியானது.


    ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் புதிதாக டெஸ்டிங் டிராக் அமைக்க தெலுங்கானா மாநிலத்திற்கு உதவி செய்ய இருக்கிறது. மாநில அரசின் மொபிலிட்டி வேலி எனும் திட்டத்தின் கீழ் புதிதாக டெஸ்டிங் டிராக்குகள் அமைக்கப்பட உள்ளன. இந்த திட்டத்தில் ஹூண்டாய் நிறுவனம் ரூ. 1,400 கோடி முதலீடு செய்ய இருக்கிறது. மேலும் இந்த திட்டத்தில் பங்குதாரர் ஆக ஹூண்டாய் நிறுவனம் இடம்பெற இருக்கிறது.

    முதலீடு பற்றிய அறிவிப்பின் போது ஹூண்டாய் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மூத்த அலுவலர் யாங்சோ சி மற்றும் தெலுங்கானா மாநிலத்துக்கான தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி கே.சி. ராமா ராவ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த அறிவிப்பு சுவிட்சர்லாந்தின் டாவோஸ் பகுதியில் நடைபெற்ற பொருளாதார சந்திப்பின் போது வெளியானது. 

     ஹூண்டாய்

    தெலுங்கானா மாநிலத்தின் போக்குவரத்து துறையை உறுதிப்படுத்த ஹூண்டாய் நிறுவனத்தின் பங்கு உதவியாக இருக்கும். தெலுங்கானாவில் அறிவிக்கப்பட்டு இருக்கும் மொபிலிட்டி வேலி என்ற திட்டம் நாட்டிலேயே முதல் முறையாக இங்கு தான் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் பற்றிய விரிவான தகவல்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. 

    இந்தியாவில் பல்வேறு ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் தங்களுக்கென சொந்தமாக டெல்டிங் டிராக்-களை வைத்துள்ளன. ஹூண்டாய் மோடடார், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா போன்ற நிறுவனங்கள் தங்களின் உற்பத்தி ஆலைக்கு மிக அருகில் டெஸ்டிங் டிராக்-களை அமைத்துள்ளன. 
    ஃபோர்டு இந்தியா உற்பத்தி ஆலையில் பவர்டிரெயின் உற்பத்தி மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்த ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் மூன்று லட்சம் யூனிட்கள் உற்பத்தி செய்ய முடியும்.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டாடா பாசஞ்சர் எலெக்ட்ரிக் மொபிலிட்டி பிரிவின் கீழ் ஃபோர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து குஜராத் அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் ஃபோர்டு நிறுவனம் குஜராத் மாநிலத்தின் சனந்த் பகுதியில் வைத்து இருக்கும் ஆலையை வாங்க டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது. 

     ஃபோர்டு உற்பத்தி ஆலை

    புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி டாடா பாசஞ்சர் எலெக்ட்ரிக் மொபிலிட்டி பிரிவு ஃபோர்டு இந்தியா உற்பத்தி ஆலையின் நிலம், கட்டிடங்கள் மற்றும் வாகன உற்பத்தி ஆலையை அதில் உள்ள இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுடன் விலைக்கு வாங்க இருக்கிறது. அதன்படி அந்த ஆலையில் பணியாற்றும் ஊழியர்களும் விரைவில் டாடா பாசஞ்சர் எலெக்ட்ரிக் மொபிலிட்டி பிரிவின் கீழ் பணியாற்றுவர்.

    எனினும், ஃபோர்டு இந்தியா நிறுவனம் தனது பவர்டிரெயின் உற்பத்தி ஆலையை தொடர்ந்து இயக்க முடிவு செய்துள்ளது. இதற்காக டாடா பாசஞ்சர் எலெக்ட்ரிக் மொபிலிட்டி பிரிவிடம் இருந்து ஆலையை லீசுக்கு எடுத்து பயன்படுத்த இருக்கிறது. வரும் மாதங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த ஆலையில் புது இயந்திரங்களை நிறுவி ஆலையின் உற்பத்தி திறனை ஆண்டுக்கு மூன்று லட்சமாக உயர்த்துகிறது. 
    இந்திய சந்தையில் கார் மாடல்கள் விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. எனினும், கார் உற்பத்தியாளர்கள் தங்களது வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றனர்.


    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடந்த சில ஆண்டுகளாக கார் மாடல்களின் விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. உதிரி பாகங்களுக்கான தட்டுப்பாடு மற்றும் செலவீனங்கள் அதிகரிப்பது போன்ற காரணங்களால் கார் உற்பத்தியாளர்கள் கார்களின் விலையை உயர்த்தி வருகின்றன. 

    இவ்வாறு கார்களின் விலை உயர்த்தப்பட்டாலும், வாகன விற்பனையை அதிகப்படுத்த கார் உற்பத்தியாளர்கள் தங்களின் கார்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவைகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடியில் கிடைக்கும் கார் மாடல்களை தொடர்ந்து பார்ப்போம்.

     கார்

    மாருதி சுசுகி ஆல்டோ 800- இந்திய சந்தையில் அதிக பிரபலமான ஹேச்பேக் மாடல் ஆல்டோ 800. இதன் விலை ரூ. 3 லட்சத்து 40 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. தற்போது மாருதி ஆல்டோ 800 மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் மற்றும் ரூ. 3 ஆயிரம் வரை ஸ்பெஷல் சலுகை வழங்கப்படுகிறது.

    மாருதி எஸ் பிரெஸ்ஸோ- மைக்ரோ எஸ்.யு.வி. மாடலான எஸ் பிரெஸ்ஸோ வாங்குவோருக்கு மொத்தத்தில் ரூ. 18 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இவை எக்ஸ்சேன்ஜ் போனஸ், சிறப்பு சலுகை மற்றும் கூடுதல் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகிறது. 

    மாருதி சுசுகி வேகன்ஆர்- இந்தியாவில் வேகன்ஆர் மாடலுக்கென தனி வாடிக்கையாளர் கூட்டம் இருக்கிறது. இந்த மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 38 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகிறது. 

     கார்

    நிசான் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கிக்ஸ் எஸ்.யு.வி. மாடலுக்கு ரூ. 19 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ. 45 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் ஆன்லைன் முன்பதிவு சலுகையாக ரூ. 2 ஆயிரத்தில் இருந்து ரூ. 5 ஆயிரம் வரையி சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் அல்கசார் மாடல் பெரும் எதிர்பார்ப்புடன் விற்பனைக்கு வந்தது. இந்த கார் வாங்குவோருக்கு அதிகபட்சம் 100 சதவீதம் வரையிலான ஆன் ரோடு நிதி சலுகை, மாத தவணைக்கு 7.25 சதவீத வட்டியில் வழங்கப்படுகிறது.
    இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை மெல்ல அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இந்தியாவில் நீண்ட ரேன்ஜ் வழங்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் எவை தெரியுமா?


    இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ. 100-ஐ கடந்து விட்டன. பெட்ரோல், டீசல் விலை பிரச்சினை மட்டுமின்றி பலர் இந்த வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு கேடானது என்பதை புரிந்து கொண்டுள்ளனர். இந்த ஆண்டு துவக்கம் முதலே பல்வேறு எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களும் தங்களின் எலெக்ட்ரிக் வாகன மாடல்களை அறிமுகம் செய்ய துவங்கி இருக்கின்றன.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை அடுத்து குறைந்த செலவில் அதிக தூரம் பயணிக்க எலெக்ட்ரிக் வாகனங்கள் சிறப்பானதா என ஆய்வு செய்ய துவங்கி உள்ளனர். மேலும் அதிக ரேன்ஜ் வழங்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கவே விரும்புகின்றனர். இந்தியாவில் அதிக ரேன்ஜ் வழங்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் எவை என தொடர்ந்து பார்ப்போம்.

     ஹீரோ Nyx Hx

    இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் கிடைக்கும் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றாக ஹீரோ Nyx Hx இருக்கிறது. இதன் விலை ரூ. 62 ஆயிரத்து 954 ஆகும். இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 165 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. மேலும் இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 42 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது.

    ஓலா நிறுவனத்தின் S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 181 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டரில் 3.97 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் ஓலா S1 ப்ரோ விலை ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 999 ஆகும்.

     சிம்பில் ஒன்

    பெங்களூரை சேர்ந்த சிம்பில் எனர்ஜி நிறுவனம் உருவாக்கி இருக்கும் சிம்பில் ஒன் ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 300-க்கும் அதிக கிலோமீட்டர்கள் வரை செல்லும். இந்த மாடலின் வினியோகம் அடுத்த மாதம் துவங்க இருந்த நிலையில், தற்போது வினியோகம் செப்டம்பர் மாதம் துவங்கும் என தெரிவித்து இருக்கிறது.

    கிராவ்டன் குவாண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3 கிலோவாட் BLDC மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 320 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இது இந்தியாவின் நீண்ட ரேன்ஜ் வழங்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும்.
    ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் சஸ்பென்ஷன் உடைந்து விழுந்த சம்பவங்களுக்கு அந்நிறுவனம் விளக்கம் அளித்து இருக்கிறது.


    ஓலா எலெக்ட்ரிக் நிறுவன ஸ்கூட்டர் மாடல்களின் முன்புற சஸ்பென்ஷன் உடைந்து போவது சமீபத்தில் பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தி இருந்தது. பலர் தங்களின் ஓலா ஸ்கூட்டரில் பயணிக்கும் போது பாதி வழியிலேயே சஸ்பென்ஷன் இயங்காததால் விபத்தில் சிக்கியதாக குற்றம்சாட்டி வந்தனர். 

    இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் விபத்துக்கள் தான் சஸ்பென்ஷன் இயங்காமல் போனதற்கு காரணம் என தெரிவித்து இருக்கிறது. 

     ஓலா

    “வாகன பாதுகாப்பு மற்றும் தரம் ஓலா நிறுவனத்தின் மிக முக்கிய குறிக்கோள்களில் ஒன்று. இன்று ஓலா நிறுவனத்தின் 50 ஆயிரம் ஸ்கூட்டர்கள் சாலையில் சென்று வருகின்றன. இதுவரை ஓலா ஸ்கூட்டர்கள் 45 மில்லியன் கிலோமீட்டர்கள் பயணம் செய்துள்ளன. முன்புற போர்க் உடைந்து போவதாக சமீபத்திய சம்பவங்களுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்திய விபத்துக்கள் தான் காரணம். எங்களின் ஸ்கூட்டர்கள் மிக கடினமான பரிசோதனைகளை பல்வேறு சூழல் மற்றும் இந்தியாவின் வித்தியாசமான சாலைகளில் எதிர்கொள்கின்றன.” என்று ஓலா எலெக்ட்ரிக் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    முன்னதாக, ஸ்கூட்டரில் பயணித்துக் கொண்டிருந்த போது, திடீரென முன்புற சஸ்பென்ஷன் யூனிட் இயங்காமல் போனது என குற்றம் சாட்டி உள்ளார். இதை அடுத்து ஸ்கூட்டர் விபத்தில் சிக்கி இருக்கிறது. ஓலா எலெக்ட்ரிக் வாடிக்கையாளரான ஸ்ரீநாத் மேனன் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சஸ்பென்ஷன் வேலை செய்யவில்லை என வாடிக்கையாளர் ஒருவர் தனது ட்விட்டரில் தெரிவித்தார்.  
    கார் பயன்படுத்துவோர் அதன் மைலேஜை அதிகப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்ற விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரத் தொடங்கியதில் இருந்தே பொது மக்கள் எரிபொருளை மிச்சம் பிடிக்கும் வழிமுறைகளை பற்றி ஆய்வு செய்ய தொடங்கி உள்ளனர். அந்த வகையில் பெட்ரோல், டீசல் சார்ந்து இயங்கும் வாகனங்களை பயன்படுத்துவோர் அதில் அதிக மைலேஜ் பெற என்ன செய்ய வேண்டும் என தேட தொடங்கியுள்ளனர்.

    அந்த வகையில், கார் பயன்படுத்துவோர் தங்களின் மைலேஜை அதிகப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்ற விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். 

    - கார் மைலேஜை அதிப்படுத்த முதலில் திராட்டிலில் கவனம் செலுத்த துவங்க வேண்டும். அந்த வகையில் திராட்டில் செய்யும் போது மென்மையாக செயல்பட வேண்டும். சட்டென திராட்டிலை முடுக்கும் போது காரின் மைலேஜ் குறையும். இதன் காரணமாக காரின் மைலேஜ் குறைய தொடங்கி விடும். கார் அக்செல்லரேட் செய்யும் போது, மென்மையாக திராட்டில் கொடுத்தால் காரின் எரிபொருள் குறைவாக எடுக்கப்பட்டு, காரில் அதிக மைலேஜ் கிடைக்கும்.

     கார்

    - சமீபத்திய அதிநவீன கார் மாடல்களில் ஸ்டார்ட் / ஸ்டாப் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது கார் நீண்ட நொடிகள் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டால், என்ஜின் தானாக ஆப் ஆகி விடும். கார் பயன்படுத்துவோரில் பலர் இந்த அம்சத்தை தவிர்த்து கார்களை ஐடிலில் வைக்கின்றனர். இவ்வாறு செய்யும் போது காரின் எரிபொருள் வழக்கத்தை விட அதிகமாக செலவாகும்.

    - கார் பயன்படுத்துவோரில் பலர் கார்களை எடுத்து கொண்டு நீண்ட தூர பயணம் செல்லும் போது தான், டையர் பிரெஷர் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்கின்றனர். ஆனால் இது முற்றிலும் தவறான செயல். கார்களின் டையர் பிரெஷரை சீரான இடைவெளியில் சரிபார்க்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் காற்றை சரியான அளவில் நிரப்பிக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும் போது கார்கள் அதிக மைலேஜ் வழங்கும். 

     கார்

    - கார்களின் மைலேஜை அதிகப்படுத்த முடிந்த வரை காரினை அதிகபட்ச கியரில் ஓட்ட வேண்டும். குறைந்த கியரில் வாகனம் ஓட்டும் போது அதிக எரிபொருள் செலவாகும். இது தவிர பெட்ரோல் கார்களின் ஆர்.பி.எம். அளவை 2 ஆயிரத்திலும், டீசல் கார்களில் ஆர்.பி.எம். அளவை 1,500-இல் தொடங்கி 1,700 வரை செட் செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்யும் போது கார் மைலேஜ் அதிகரிக்கும்.

    - கார்களில் உள்ள குளிர்சாதன வசதி காரின் எரிபொருளை பெருமளவு குடிக்கும். ஆனால் ஏ.சி. இன்றி கண்ணாடியை திறந்த நிலையில், கார் ஓட்டும் போது மைலேஜ் குறைவதோடு அதன் இண்டீரியரும் பாதிக்கப்படும். முடிந்த வரை காரின் ஏ.சி.யை அதன் மிக குளிர்ந்த நிலையில் இயக்காமல் தேவைக்கு ஏற்ற அளவில் வைக்க வேண்டும். 
    ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் வென்யூ மாடல் இந்திய விற்பனையில் புது மைல்கல் எட்டி உள்ளதாக அறிவித்து இருக்கிறது.


    ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது வென்யூ மாடல் இந்திய விற்பனையில் மூன்று லட்சம் யூனிட்களை கடந்து இருப்பதாக அறிவித்து உள்ளது. இந்தியாவில் 2019 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் வெனஅயூ 2021 வாக்கில் 1 லட்சத்து 08 யூனிட்கள் வரை விற்பனையாகி இருந்தது. 

    அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுவரை விற்பனை செய்யப்பட்டு உள்ள வென்யூ மாடல்களில் 18 சதவீத யூனிட்கள் புளூ லின்க் கனெக்டெட் கார் தொழில்நுட்பம் கொண்டு இருக்கிறது. 2021 ஆண்டு ஹூண்டாய் நிறுவனம் 2 லட்சத்து 50 ஆயிரம் எஸ்.யு.வி.க்களை விற்பனை செய்து இருந்தது. இதில் 42 சதவீத யூனிட்கள் ஹூண்டாய் வென்யூ மாடல் ஆகும். மேலும் இந்திய சந்தையில் இந்த பிரிவில் வென்யூ மாடல் மட்டும் 16.9 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது.

    இந்திய சந்தையில் ஹூண்டாய் வென்யூ மாடல் 1.2 லிட்டர் NA பெட்ரோல் யூனிட், 1.5 லிட்டர் டீசல் யூனிட் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என மூன்று விதமான என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், iMT யூனிட், 7 ஸ்பீடு DCT யூனிட், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் யூனிட் போன்ற டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 
    பறக்கும் கார் மாடல்களுக்கான பிரத்யேக விமான நிலையம் உலகில் முதல் முறையாக திறக்கப்பட்டு இருக்கிறது.

    பறக்கும் கார் மாடல்கள் இன்றும் சுவாரஸ்ய கனவாகவே இருந்து வருகிறது. விரைவில் பறக்கும் கார்கள் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பறக்கும் கார் மற்றும் டிரோன்கள் தரையிறங்கி, டேக் ஆஃப் ஆக உலகின் முதல் விமான நிலையம் லண்டனில் திறக்கப்பட்டு உள்ளது. 

     விமான நிலையம்

    லண்டனை சேர்ந்த அர்பன் ஏர் போர்ட் லிமிடெட் நிறுவனம் இந்த விமான நிலையத்தை பறக்கும் திறந்துள்ளது. இந்த விமான நிலையம் ஏர் ஒன் என அழைக்கப்படுகிறது. விமான நிலையத்தின் ஒட்டு மொத்த பணிகள் அடுத்த 15 மாதங்களில் முழுமையாக நிறைவு பெற்று விடும். இந்த விமான நிலையம், லண்டனில் இருந்து 155 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்து உள்ளது.  

    ஏர் ஒன் விமான நிலையத்தில் இருந்து காற்று மாசு ஏற்படுத்தாத பறக்கும் எலெக்ட்ரிக் வாகனங்கள், ஏர் டாக்சிக்கள் மற்றும் டிரோன்கள் டேக் ஆஃப் செய்து, தரையிறங்க முடியும். பறக்கும் கார் மற்றும் டிரோன்களுக்கான விமான நிலையம், எப்போது வேண்டுமானாலும் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×