என் மலர்
ஆட்டோமொபைல் செய்திகள்
பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் செடான் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த காரின் வினியோகம் விரைவில் துவங்க இருக்கிறது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஃபிளாக்ஷிப் iX எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மற்றும் மினி கூப்பர் SE மாடல்களை அறிமுகம் செய்து விட்டது. இந்த வரிசையில் தற்போது i4 எலெக்ட்ரிக் செடான் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பி.எம்.டபிள்யூ. i4 மாடல் விலை ரூ. 69 லட்சத்து 90 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய பி.எம்.டபிள்யூ. i4 எலெக்ட்ரிக் செடான் மாடல் 4 சீரிஸ் கிரான் கூப் மாடலை போன்றே உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் தோற்றத்தில் மட்டும் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. இந்த காரின் உள்புறம் 14.9 இன்ச் டச் ஸ்கிரீன் கொண்ட இன்போடெயின்மண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே என டூயல் ஸ்கிரீன் செட்-அப், i டிரைவ் 8 யு.ஐ. வழங்கப்பட்டு இருக்கிறது.
பி.எம்.டபிள்யூ. i4 எலெக்ட்ரிக் காரில் 83.9 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த யூனிட் 335 ஹெச்.பி. திறன், 430 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 5.7 நொடிகளில் எட்டிவிடும். மேலும் முழு சார்ஜ் செய்தால் 590 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அவின்யா எலெக்ட்ரிக் கார் மாடல் ரெண்டர் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த கார் 2025 வாக்கில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய டாடா அவின்யா கான்செப்ட் மாடலை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. கான்செப்ட் மாடல் அறிமுகமானது முதல், புதிய அவின்யா மாடலின் ரெண்டர்கள் இணையத்தில் வெளியாக துவங்கி விட்டன. புதிய டாடா அவின்யா மாடல் 2025 ஆண்டு தான் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், புதிய மாடல் எப்படி இருக்கும் என்ற வாக்கில் பல ரெண்டர்கள் வெளியாகி விட்டன.
புதிய டாடா அவின்யா எலெக்ட்ரிக் கார் மாடல் ஜென் 3 ஸ்கேட்போர்டு ஆர்கிடெக்ச்சரில் உருவாகி வருகிறது. எலெக்ட்ரிக் வாகன சந்தையில் தொடர் வளர்ச்சியை பதிவு செய்து வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் 2025 வாக்கில் பத்து புது எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்து இருக்கிறது.

சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்த டாடா ஹேரியர், அல்ட்ரோஸ் மற்றும் டாடா பன்ச் மாடல்களை போன்றே தனது ப்ரோடக்ஷன் மாடல் அதன் ரோட்-லீகல் மாடலுக்கு இணையாக உருவாக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. புது எலெக்ட்ரிக் மாடலில் 18 அல்லது 19 இன்ச் வீல்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது இந்திய சாலைகளுக்கு ஏற்ற ஒன்றாக இருக்கும்.
புதிய டாடா அவின்யா மாடல் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 500 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என தெரிகிறது. அவின்யா மட்டும் இன்றி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா கர்வ் கூப் போன்ற எஸ்.யு.வி. மாடலை உருவாக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடலின் ப்ரோடக்ஷன் வெர்ஷன் 2024 வாக்கில் வெளியாகும் என தெரிகிறது.
ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய தலைமுறை ஹூண்டாய் டக்சன் காரை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது டக்சன் மாடலை அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து நீக்கி, முன்பதிவையும் அதிரடியாக நிறுத்தி இருக்கிறது. இந்தியாவில் புதிய ஹூண்டாய் டக்சன் மாடல் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய தலைமுறை ஹூண்டாய் டக்சன் மாடல் ஏராளமான மாற்றங்களை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
புதிய தலைமுறை ஹூண்டாய் டக்சன் மாடலில் முற்றிலும் புது டிசைன், ஏராளமான அம்சங்கள் மற்றும் அதீத சௌகரிய வசதிகள் வழங்கப்பட இருக்கிறது. இதே மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் முந்தைய வெர்ஷனை விட அதிக கூர்மையான தோற்றம் கொண்டிருக்கிறது. இதன் முன்புறத்தில் புதிய கிரில் இண்டகிரேட் செய்யப்பட்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், எல்.இ.டி. ஹெட்லைட்கள் மற்றும் புது பம்ப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது.

காரின் உள்புறம் 10.25 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, புளூ லின்க் கனெக்டட் கார் தொழில்நுட்பம், கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டத்திற்கு டச் கண்ட்ரோல், ஆம்பிண்ட் லைட்டிங், இ பார்க்கிங் பிரேக், ஸ்விட்ச் கியர்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
புதிய 2022 ஹூண்டாய் டக்சன் மாடலில் 2 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், ஆட்டோமேடிக் மற்றும் ஆல்-வீல் டிரைவ் போன்ற ஆப்ஷ்ன்கள் வழங்கப்படலாம்.
கிரெட்டா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
குஜராத்தை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான கிரெட்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்ஸ் நிறுவனம் கிரெட்டா ஹார்பர் ZX சீரிஸ் I எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மாடல் முற்றிலும் வித்தியாசமான பேமண்ட் திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் பயனர்கள் பேட்டரி மற்றும் சார்ஜரை அவரவர் விருப்பப்படி தேர்வு செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.
கிரெட்டா ஹார்பர் ZX சீரிஸ் I ஸ்கூட்டர் பேஸ் மாடல் விலை ரூ. 41 ஆயிரத்து 999, எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இந்த ஸ்கூட்டருடன் வரும் சார்ஜர் தொழில்நுட்பம் ஸ்கூட்டரை ஐந்து மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்து விடும். மேலும் மூன்று மணி நேரங்கள் சார்ஜ் செய்தால் 80 சதவீதம் வரை சார்ஜ் ஏறி விடும்.

இந்த ஸ்கூட்டர் BLDC மோட்டார் மற்றும் 48-60 வோல்ட் லி-அயன் பேட்டரி வேரியண்ட்களில் கிடைக்கிறது. பயனர்கள் 60 கிலோமீட்டர் முதல் 100 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் பேட்டரிகளை தேர்வு செய்து கொள்ளலாம். இவற்றின் விலை ரூ. 17 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 31 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பயனர் விருப்பப்படி சார்ஜர்களின் விலை ரூ. 3 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 5 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கிரெட்டா ஹார்பர் ZX சீரிஸ் I மாடல்களில் 3-ஸ்பீடு டிரைவ் மோட்களில் கிடைக்கிறது. இத்துடன் ரிவர்ஸ் மோட், எல்.இ.டி. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் டிஸ்ப்ளே, கீலெஸ் ஸ்டார்ட், குரூயிஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் கண்ட்ரோலர், ஹைவே லைட்கள், சைடு இண்டிகேட்டர் பஸர், எல்.இ.டி. மீட்டர், இக்னிஷன்/சைல்டு லாக், பார்க் மோட், பிக்சட் ரிவர்ஸ் ஸ்பீடு மோட், மேம்பட்ட செல் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.
போக்ஸ்வேகன் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் பல்வேறு புது மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளை துவங்கி, விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது.
போக்ஸ்வேகன் நிறுவனம் மிட்-லெவல் மற்றும் ஹை எண்ட் எலெக்ட்ரிக் வாகனங்களை பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் போக்ஸ்வேகன் தற்போது எண்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் வாகன மாடல்களில் தனது கவனத்தை திருப்பி இருக்கிறது. முதற்கட்டமாக இந்த மாடல் ஐரோப்பியா மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற முனிச் மோட்டார் விழாவில் போக்ஸ்வேகன் நிறுவனம் தனது குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் எப்படி காட்சியளிக்கும் என்ற விவரங்களை ID கான்செப்ட் வடிவில் அறிவித்து இருந்தது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் போக்ஸ்வேகன் நிறுவனம் தனது ID 4 மாடலின் ப்ரோடக்ஷன் வெர்ஷனை டிசைன் செய்ய துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் புது எலெக்ட்ரிக் கார் மெல்லிய தோற்றம், ஆங்குலர் முன்புறம் மற்றும் ID டிசைன் அம்சங்களை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. ஒட்டுமொத்தத்தில் இந்த எலெக்ட்ரிக் கார் போலோ மாடல் அளவில் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இது போக்ஸ்வேகன் நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் கார் மாடலாக அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிகிறது.
எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையமான சன்பியூவல் தனது முதல் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜரை கல்கா சிம்லா நெடுஞ்சாலையில் அமைக்க இருக்கிறது.
எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிறுவனம் சன்பியூவல் தனது முதல் 120 கிலோவாட் DC சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜரை கல்கா சிம்லா நெடுஞ்சாலையில் அமைக்க திட்டமிட்டு உள்ளது. சமீபத்தில் சன்பியூவல் அறிமுகம் செய்த “எக்ஸ்பிலஸ் மைல்ஸ்” திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலைகளில் சார்ஜிங் மையங்களை அமைக்க சன்பியூவல் திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் சன்பியூவல் நிறுவனம் முதற்கட்டமாக 70 120 கிலோவாட் CCS DC சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜர்கள் இந்தியா முழுக்க 35 நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட இருக்கின்றன. இவை அனைத்தும் இந்த நிதியாண்டிற்குள் செய்து முடிக்க சன்பியூவல் திட்டமிட்டு உள்ளது.
120 கிலோவாட் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜர்கள் நெடுஞ்சாலைகளில் அமைக்கப்படும். இவை ஆடம்பர எலெக்ட்ரிக் கார் பயன்படுத்துவோருக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கின்றன. எக்ஸ்பிரஸ் மைல்ஸ் திட்டத்தின் கீழ் முதல் அதிவேக எலெக்ட்ரிக் வாகன சார்ஜர் கல்கா சிம்லா நெடுஞ்சாலையில் அமைந்து இருக்கும் தி ஃபுட் ஸ்டிரீட் சோலன் அருகில் இன்ஸ்டால் செய்யப்பட உள்ளது.
கோமகி நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
டெல்லியை சேர்ந்த கோமகி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து உள்ளது. புது ஸ்கூட்டர்கள் கோமகி LY மற்றும் கோமகி DT 3000 என அழைக்கப்படுகின்றன. இவற்றின் விலை முறையே ரூ. 88 ஆயிரம் மற்றும் ரூ. 1 லட்சத்து 22 ஆயிரம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டில் மட்டும் கோமகி நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்த மூன்று மற்றும் நான்காவது மாடல் ஆகும். இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் ஹை-ஸ்பீடு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளன. இதன் மூலம் இந்திய சந்தையில் கோமகி நிறுவனம் 18 ஸ்மார்ட் மற்றும் ஹை ஸ்பீடு எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் இரண்டு எலெக்ட்ரிக் ரிக்ஷாக்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
கோமகி LY மாடலில் 62.9 வோல்ட் லித்தியம் ஃபெரோ பாஸ்பேட் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 70 முதல் 90 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. கோமகி DT 3000 மாடலில் 3000 62V52AH பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சமாக 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இது முழு சார்ஜ் செய்தால் 110 முதல் 180 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.
முன்னணி ஆடம்பர கார் உற்பத்தியாளரான போர்ஷே இந்தியாவில் பயன்படுத்திய கார்களை விற்பனை செய்யும் துறையில் களமிறங்க முடிவு செய்து உள்ளது.
ஆடம்பர கார் உற்பத்தியாளர்களில் முன்னணி நிறுவனம் போர்ஷே. இந்தியாவில் போர்ஷே நிறுவனம் பயன்படுத்திய கார்களை விற்பனை செய்யும் துறையில் களமிறங்குகிறது. போர்ஷே நிறுவனத்தின் முதல் பயன்படுத்திய கார்களை விற்பனை செய்யும் மையம் ஜூன் மாதம் 8 ஆம் தேதி கேரளா மாநிலத்தில் திறக்கப்பட இருக்கிறது. இந்த விற்பனை மையங்கள் ‘Porsche Approved' பெயரின் கீழ் இயங்க இருக்கின்றன.
போக்ஸ்வேகன் குழுமத்தின் அங்கமாக போர்ஷே அப்ரூவ்டு செண்டர், போக்வ்கேன் தாஸ் வெல்ட் ஆட்டோ மற்றும் ஆடி அப்ரூவ்டு பிளஸ் திட்டங்களின் வரிசையில் இணைகிறது. இதன் மூலம் சான்றளிக்கப்பட்ட பயன்படுத்திய கார்களை விற்பனை, வாங்குவது அல்லது எக்சேன்ஜ் செய்ய ஒற்றை தளமாக இவை மாறும்.

போர்ஷே அப்ரூவ்டு மையங்கள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குவது, விற்பனை செய்வது மற்றும் எக்சேன்ஜ் செய்வது போன்ற பணிகள் நடைபெறும். இதன் மூலம் செகண்ட் ஹேண்ட் கார்களுக்கு மிகவும் போட்டியை ஏற்படுத்தும் விலையில் வழங்குவதோடு, ஒரிஜினல் அக்சஸரீ, இன்சூரன்ஸ் மற்றும் நிதியுதவி உள்ளிட்டவைகளை வழங்கவும் போர்ஷே முடிவு செய்துள்ளது.
போர்ஷே கார்களை புதிய முறையில் அனுபவிக்க வழி வகுக்கும் படி இந்த விற்பனை மையங்கள் செயல்படும் என போர்ஷே நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இது குறித்த மற்ற தகவல்கள் விற்பனை மையம் துவங்கப்படும் போது அறிவிக்கப்படும் என போர்ஷே தெரிவித்துள்ளது.
டிரையம்ப் நிறுவனத்தின் 2022 டைகர் 1200 மாடல் GT மற்றும் ரேலி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. பெயருக்கு ஏற்றார் போல் ரேலி என்பது ஆப் ரோடு சார்ந்த மாடல் ஆகும்.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த 2022 டிரையம்ப் டைகர் 1200 மோட்டார்சைக்கிள் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. 2022 டிரையம்ப் டைகர் 1200 மாடல் இரண்டு வேரியண்ட் மற்றும் நான்கு ட்ரிம்களில் கிடைக்கிறது.
2022 டிரையம்ப் டைகர் 1200 மாடல் விலை ரூ. 19.19 லட்சம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 21.69 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

புதிய 2022 டிரையம்ப் டைகர் 1200 மாடலில் 1160சிசி, இன்லைன், 3 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 147 பி.ஹெச்.பி. பவர், 130 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் ஷாப்ட் டிரைவ் சிஸ்டம், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய டிரையம்ப் டைகர் 1200 மாடல் டிரையம்ப் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் அட்வென்ச்சர் ரக மோட்டார்சசைக்கிள் ஆகும். இந்திய சந்தையில் புதிய டிரையம்ப் மோட்டார்சைக்கிள் பி.எம்.டபிள்யூ. R 1250 GS மற்றும் டுகாட்டி மல்டிஸ்டிராடா V4 மோட்டாரைச்கிள் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய டிரையம்ப் டைகர் 1200 மோட்டார்சைக்கிள் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. வினியோகம் அடுத்த மாதம் துவங்க இருக்கிறது.
விலை விவரங்கள்:
2022 டிரையம்ப் டைகர் 1200 GT ப்ரோ ரூ. 19 லட்சத்து 19 ஆயிரம்
2022 டிரையம்ப் டைகர் 1200 GT எக்ஸ்ப்ளோரர் ரூ. 20 லட்சத்து 69 ஆயிரம்
2022 டிரையம்ப் டைகர் 1200 ரேலி ப்ரோ ரூ. 20 லட்சத்து 19 ஆயிரம்
2022 டிரையம்ப் டைகர் 1200 ரேலி எக்ஸ்ப்ளோரர் ரூ. 21 லட்சத்து 69 ஆயிரம்
அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
கியா இந்தியா நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் இது கியா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும்.
கியா இந்தியா நிறுவனம் தனது கியா EV6 எலெக்ட்ரிக் கார் மாடல் ஜூன் 2 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது. புதிய கியா EV6 மாடலுக்கான முன்பதிவு மே 26 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், புதிய எலெக்ட்ரிக் கார் மாடலின் வெளியீட்டு தேதியை கியா இந்தியா அறிவித்து இருக்கிறது.
இந்திய சந்தையில் புதிய கியா EV6 மாடலின் விலை ரூ. 50 முதல் ரூ. 60 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்த காரின் 100 யூனிட்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட இருக்கின்றன. கியா EV6 மாடல் RWD மற்றும் AWD என இரண்டு வேரியண்ட்களிலும் கிடைக்கும்.

கியா EV6 மாடலில் 77.4 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட இருக்கிறது. சர்வதேச சந்தையில் இந்த கார் 58 கிலோவாட் ஹவர் மற்றும் 77.4 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும், இந்தியாவில் ஒரு வேரியண்ட் மட்டுமே அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இந்த எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் மணிக்கு 425 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. மேலும் இந்த கார் 320 ஹெச்.பி. பவர், 605 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
மொத்தம் 741 பண்டைய தமிழ் எழுத்துக்களால் உருவான அசத்தலான உருவப்படம். தமிழரை பாராட்டி ஆனந்த் மஹிந்திரா வெளியிட்ட ட்விட் வைரலாகி வருகிறது.
தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த நபர் வரைந்த ஓவியம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கனேஷ் என்ற நபர் மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திராவின் உருவ படத்தை மிக வித்தியாசமாக வரைந்து அசத்தி இருக்கிறார்.
ஓவியத்தில் கணேஷ் பண்டைய தமிழ் எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார். இதனை உற்று பார்க்கும் போது உருவப்படத்தில் தமிழ் எழுத்துக்கள் மட்டுமே தெரியும். ஓவியத்தில் ஆனந்த் மஹிந்திரா உருவப்படத்தை வரைய கணேஷ் மொத்தம் 741 பண்டை கால தமிழ் எழுத்துக்களை பயன்படுத்தி இருக்கிறார்.

கணேஷ் இந்த உருவப்படத்தை வரைந்த போது எடுத்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டு அதில் ஆனந்த் மஹிந்திரா மற்றும் மஹிந்திரா குழும நிறுவனங்களையும் டேக் செய்து இருக்கிறார். இதை கவனித்த ஆனந்த் மஹிந்திரா கணேஷ் ட்விட்-ஐ ரி-ஷேர் செய்தார். மேலும் இந்த வரைபடத்தின் பிரேம் செய்யப்பட்ட நகலை தனக்கு வழங்குமாறு ஆனந்த் மஹிந்திரா கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வரைபடத்தை தனது அறையில் வைத்து அலங்கரிக்க விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதுகுறித்து ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் பதிவில், “ஆஹா, என் உருப்படம் 741 பழமையான தமிழ் எழுத்துக்களால் வடிவானது, நான் வியக்கிறேன். தமிழ் மொழி பிரம்மாண்டத்தின் பொருட்டு, உருவாக்கியவரின் பாராட்டாக, உருவ படத்தை என் வீட்டில் வைக்க விருப்பபடுகிறேன்..” என குறிப்பிட்டு இருக்கிறார்.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் ஒற்றை வாடிக்கையாளருக்காக புது கார் மாடலை உருவாக்கி இருக்கிறது. இதனை யார் வாங்கி இருக்கிறார்கள் என்பதை அந்நிறுவனம் அறிவிக்கவில்லை.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் இரண்டவாது போட் டெயில் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் இத்தாலியில் நடைபெற்ற 2022 கான்கார்சோ எலிகன்ஸ் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. தன் குடும்பம், தந்தையின் வரலாற்றை போற்றும் வகையில், வாடிக்கையாளர் ஒருவர் இந்த காரை வாங்க ஆர்டர் கொடுத்து இருக்கிறார். மதர் ஆஃப் பியல் டிசைனில் இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய போட் டெயில் மாடல் விலை 28 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 217 கோடி வரை இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. ஆனாலும், இது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. முந்தைய போட் டெயில் மாடலுடன் ஒப்பிடும் போது, புது மாடலில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த காரை யார் உருவாக்க சொன்னார்கள் என ரோர்ஸ் ராய்ஸ் இதுவரை தெரிவிக்கவில்லை.
ஏராளமான பாரம்பரிய கார் மாடல்களை வாங்கி குவித்து வைத்து இருக்கும் நபர் தான் இந்த காரை வாங்கி இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. இவர் தனியார் அருங்காட்சியகத்தை வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த வாடிக்கையாளரின் தந்தை முத்துக்களை சேகரிப்பதில் ஆர்வம் மிக்கவர். இவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் தான் புதிய போட் டெயில் மாடலை மதர் ஆப் பியல் தீமில் உருவாக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.






