search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல் செய்திகள்

    தனது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயணித்து கொண்டிருக்கும் போது பாதி வழியில் உடைந்து விட்டதாக மற்றொரு வாடிக்கையாளர் புதிதாக குற்றம்சாட்டி உள்ளார்.


    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் S1ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஓடும் போதே பாதி வழியில் உடைந்து விழுந்துள்ளது. ஏற்கனவே இது போன்ற சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், தற்போது இதே பிரச்சினை குறித்து மற்றொரு வாடிக்கையாளரும் தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.

    வழக்கறிஞராக இருக்கும் பிரியண்கா பரத்வாஜ் தனது ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருக்கும் போது, ஸ்பீடு பிரேக்கர் ஒன்றின் மீது ஏறும் போது திடீரென உடைந்து விழுந்து என குற்றம்சாட்டி இருக்கிறார். இதோடு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்புற டையர் உடைந்த நிலையில் இருக்கும் புகைப்படங்களையும் பிரியண்கா தனது ட்விட்டர் பதிவில் இணைத்துள்ளார்.

     ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    “எனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்பீடு பிரேக்கரில் ஏற்றும் போது தானாக உடைந்து விட்டது. உடனே ஏதோ முறிந்தது போன்ற சத்தமும் கேட்டது. இதில் எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, ஆனால் எனது ஸ்கூட்டருக்கு அதிக சேதம் ஏற்பட்டு இருக்கிறது, தயவு செய்து இதனை விரைந்து சரி செய்து தாருங்கள். நன்றி,” என பிரியண்கா பரத்வாஜ் தனது ட்விட்டரில் தெரிவித்து உள்ளார். 

    இவரது ட்விட்டர் பதிவை பார்த்த பலர் ஓலா ஸ்கூட்டர் மூலம் தங்களுக்கு நேர்ந்த அனுபவம் பற்றி தெரிவித்தனர். மேலும் பலர் ஓலா ஸ்கூட்டர்களின் உற்பத்தி தரமற்று இருப்பதாக குற்றம்சாட்டினர். பிரியண்கா பரத்வாஜ் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த ஓலா எலெக்ட்ரிக், “இந்த பிரச்சினை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள நாங்கள் விரைவில் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்,” என தெரிவித்துள்ளது.
    இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை மெல்ல அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இந்தியாவில் நீண்ட ரேன்ஜ் வழங்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் எவை தெரியுமா?


    இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ. 100-ஐ கடந்து விட்டன. பெட்ரோல், டீசல் விலை பிரச்சினை மட்டுமின்றி பலர் இந்த வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு கேடானது என்பதை புரிந்து கொண்டுள்ளனர். இந்த ஆண்டு துவக்கம் முதலே பல்வேறு எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களும் தங்களின் எலெக்ட்ரிக் வாகன மாடல்களை அறிமுகம் செய்ய துவங்கி இருக்கின்றன.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை அடுத்து குறைந்த செலவில் அதிக தூரம் பயணிக்க எலெக்ட்ரிக் வாகனங்கள் சிறப்பானதா என ஆய்வு செய்ய துவங்கி உள்ளனர். மேலும் அதிக ரேன்ஜ் வழங்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கவே விரும்புகின்றனர். இந்தியாவில் அதிக ரேன்ஜ் வழங்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் எவை என தொடர்ந்து பார்ப்போம்.

     ஹீரோ Nyx Hx

    இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் கிடைக்கும் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றாக ஹீரோ Nyx Hx இருக்கிறது. இதன் விலை ரூ. 62 ஆயிரத்து 954 ஆகும். இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 165 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. மேலும் இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 42 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது.

    ஓலா நிறுவனத்தின் S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 181 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டரில் 3.97 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் ஓலா S1 ப்ரோ விலை ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 999 ஆகும்.

     சிம்பில் ஒன்

    பெங்களூரை சேர்ந்த சிம்பில் எனர்ஜி நிறுவனம் உருவாக்கி இருக்கும் சிம்பில் ஒன் ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 300-க்கும் அதிக கிலோமீட்டர்கள் வரை செல்லும். இந்த மாடலின் வினியோகம் அடுத்த மாதம் துவங்க இருந்த நிலையில், தற்போது வினியோகம் செப்டம்பர் மாதம் துவங்கும் என தெரிவித்து இருக்கிறது.

    கிராவ்டன் குவாண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3 கிலோவாட் BLDC மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 320 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இது இந்தியாவின் நீண்ட ரேன்ஜ் வழங்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும்.
    ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் சஸ்பென்ஷன் உடைந்து விழுந்த சம்பவங்களுக்கு அந்நிறுவனம் விளக்கம் அளித்து இருக்கிறது.


    ஓலா எலெக்ட்ரிக் நிறுவன ஸ்கூட்டர் மாடல்களின் முன்புற சஸ்பென்ஷன் உடைந்து போவது சமீபத்தில் பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தி இருந்தது. பலர் தங்களின் ஓலா ஸ்கூட்டரில் பயணிக்கும் போது பாதி வழியிலேயே சஸ்பென்ஷன் இயங்காததால் விபத்தில் சிக்கியதாக குற்றம்சாட்டி வந்தனர். 

    இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் விபத்துக்கள் தான் சஸ்பென்ஷன் இயங்காமல் போனதற்கு காரணம் என தெரிவித்து இருக்கிறது. 

     ஓலா

    “வாகன பாதுகாப்பு மற்றும் தரம் ஓலா நிறுவனத்தின் மிக முக்கிய குறிக்கோள்களில் ஒன்று. இன்று ஓலா நிறுவனத்தின் 50 ஆயிரம் ஸ்கூட்டர்கள் சாலையில் சென்று வருகின்றன. இதுவரை ஓலா ஸ்கூட்டர்கள் 45 மில்லியன் கிலோமீட்டர்கள் பயணம் செய்துள்ளன. முன்புற போர்க் உடைந்து போவதாக சமீபத்திய சம்பவங்களுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்திய விபத்துக்கள் தான் காரணம். எங்களின் ஸ்கூட்டர்கள் மிக கடினமான பரிசோதனைகளை பல்வேறு சூழல் மற்றும் இந்தியாவின் வித்தியாசமான சாலைகளில் எதிர்கொள்கின்றன.” என்று ஓலா எலெக்ட்ரிக் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    முன்னதாக, ஸ்கூட்டரில் பயணித்துக் கொண்டிருந்த போது, திடீரென முன்புற சஸ்பென்ஷன் யூனிட் இயங்காமல் போனது என குற்றம் சாட்டி உள்ளார். இதை அடுத்து ஸ்கூட்டர் விபத்தில் சிக்கி இருக்கிறது. ஓலா எலெக்ட்ரிக் வாடிக்கையாளரான ஸ்ரீநாத் மேனன் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சஸ்பென்ஷன் வேலை செய்யவில்லை என வாடிக்கையாளர் ஒருவர் தனது ட்விட்டரில் தெரிவித்தார்.  
    ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய கிரெட்டா N லைன் மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் இந்திய வெளியீடு பற்றி விரைவில் அறிவிக்கப்படலாம்.


    ஹூண்டாய் நிறுவனம் சர்வதேச சந்தையில் தனது கிரெட்டா N மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் டீசரையும் ஹூண்டாய் வெளியிட்டு உஎள்ளது. புதிய ஹூண்டாய் கிரெட்டா N லைன் மாடலுக்கான டீசர் படங்கள் ஹூண்டாய் பிரேசில் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. 

     ஹூண்டாய் கிரெட்டா N லைன் டீசர்

    சர்வதேச சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் N லைன் வேரியண்ட்கள்: i10, i20, i30, எலாண்ட்ரா, கோனா மற்றும் டக்சன் போன்ற மாடல்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. எனினும், இந்தியாவில் ஹூண்டாய் i20 ஹேச்பேக் மாடலில் மட்டுமே N லைன் வேரியண்ட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஹூண்டாய் வென்யூ N லைன் வேரியண்ட் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஹூண்டாய் கிரெட்டா N லைன் மாடலில் i20 N லைன் ஹேச்பேக் மாடலில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுடனேயே அறிமுகமாகும் என கூறப்படுகிறது. அதன்படி முன்புற கிரில் மீது N லைன் பேட்ஜ், காண்டிராஸ்ட் ரெட் நிறம் மற்றும் ஸ்போர்ட் டிசைன் எலிமண்ட்கள் வழங்கப்படலாம்.
    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது M பிரிவின் 50 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு புதிதாக ஸ்பெஷல் எடிஷன் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.

    பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் 50 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு M3 மற்றும் M4 கார்களின் M50 ஜாரெ எடிஷன் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. உயர் ரக ஸ்போர்ட்ஸ் கார் மாடல்களில் பிரத்யேக அப்டேட்கள் செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே விற்பனைக்கு வருகிறது. இது மட்டுமின்றி பி.எம்.டபிள்யூ. 1 சீரிஸ் மற்றும் 2 சீரிஸ் கிரான் கூப் மாடல்களையும் எடிஷன் கலர் விஷனில் அறிமுகம் செய்துள்ளது.

    புதிய ஸ்பெஷல் எடிஷன் M4 50 ஜாரெ எடிஷன் மாடல்கள் - சான் மரினோ புளூ, கார்பன் பிலாக், இமோலா ரெட், மேகோ புளூ மற்றும் ஹேட்ச் கிரே போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் முன்புறம் 19 இன்ச் M ஃபோர்ஜ்டு அலாய் வீல்கள், பின்புறம் 20 இன்ச் 2 ஸ்போக் டிசைன் கொண்ட வீல் வழங்கப்பட்டுள்ளது. முதல் முறையாக இந்த வீல்களை கோல்டு பிரான்ஸ் மேட் மற்றும் ஆர்பிட் மேட் பினிஷ் கொண்டுள்ளன.

     பி.எம்.டபிள்யூ. M50 ஜாரெ எடிஷன்

    உள்புறம் M4 ஜாரெ எடிஷன் ஸ்டாண்டர்டு M4 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு உள்ளது. எனினும், உள்புறங்களில் விசேஷமாக ஸ்பெஷல் எடிஷனை குறிக்கும் பேட்ஜிங் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரில் ஸ்டாண்டர்டு M ஸ்போர்ட் ஹெட்ரெஸ்ட், ஆப்ஷனல் கார்பன் பைபர் பக்கெட் முன்புற இருக்கைகள் உள்ளன. 

    M3 ஜாரெ ஸ்பெஷல் எடிஷன் கார் அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த கார் மொத்தத்தில் 500 யூனிட்களே விற்பனை செய்யப்பட உள்ளன. பி.எம்.டபிள்யூ. M3 ஜாரெ எடிஷன் மாடல் ஐந்து பிரத்யேக நிறங்களில் கிடைக்கிறது. இந்த கார்- லைம்ராக் கிரே, சினிபார் ரெட், டெக்னோ வைலண்ட், ஃபயர் ஆரஞ்சு மற்றும் இண்டர்லகோஸ் புளூ ஷேட்களில் கிடைக்கிறது. 
    கீவே நிறுவனம் இந்திய சந்தையில் புதிய சிக்ஸ்டீஸ் 300i ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்தது. இதில் எல்.இ.டி. லைட்டிங் எல்.சி.டி. ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.


    இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் புதுவரவு நிறுவனம் கீவே புதிதாக சிக்ஸ்டீஸ் 300i பெயரில் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கீவே சிக்ஸ்டீஸ் 300i மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது இந்திய சந்தையில் கிடைக்கும் சக்திவாய்ந்த ஸ்கூட்டர் ஆகும். 

    புதிய கீவே சிக்ஸ்டீஸ் 300i மாடல் அதிநவீன-ரெட்ரோ பாடி வொர்க் கொண்டிருக்கிறது. இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பாகங்கள் வளைந்த நிலையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இத்துடன் எல்.இ.டி. லைட்டிங் மற்றும் எல்.சி.டி. போன்ற அம்சங்கள் உள்ளன. இந்த ஸ்கூட்டரில் 278.2சிசி சிங்கில் சிலிண்டர் லிக்விட் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது.

     கீவே சிக்ஸ்டீஸ் 300i

    இந்த என்ஜின் 18.7 பி.ஹெச்.பி. பவர், 22 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதே என்ஜின் விஸ்டி 300 மேக்சி ஸ்கூட்டரிலும் வழங்கப்பட்டு உள்ளது. சஸ்பென்ஷனிற்கு கீவே சிக்ஸ்டீஸ் 300i மாடலில் டெலிஸ்கோபிக் போர்க், டூயல் ரியர் ஸ்ப்ரிங் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் 230mm ஒற்றை டிஸ்க் பிரேக், பின்புறம் 220mm டிஸ்க் பிரேக் உள்ளது.

    புதிய கீவே சிக்ஸ்டீஸ் 300i ஸ்கூட்டருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு பெனலி விற்பனை மையங்களில் நடைபெறுகிறது. வினியோகம் அடுத்த மாதம் துவங்குகிறது.  
    கார் பயன்படுத்துவோர் அதன் மைலேஜை அதிகப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்ற விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரத் தொடங்கியதில் இருந்தே பொது மக்கள் எரிபொருளை மிச்சம் பிடிக்கும் வழிமுறைகளை பற்றி ஆய்வு செய்ய தொடங்கி உள்ளனர். அந்த வகையில் பெட்ரோல், டீசல் சார்ந்து இயங்கும் வாகனங்களை பயன்படுத்துவோர் அதில் அதிக மைலேஜ் பெற என்ன செய்ய வேண்டும் என தேட தொடங்கியுள்ளனர்.

    அந்த வகையில், கார் பயன்படுத்துவோர் தங்களின் மைலேஜை அதிகப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்ற விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். 

    - கார் மைலேஜை அதிப்படுத்த முதலில் திராட்டிலில் கவனம் செலுத்த துவங்க வேண்டும். அந்த வகையில் திராட்டில் செய்யும் போது மென்மையாக செயல்பட வேண்டும். சட்டென திராட்டிலை முடுக்கும் போது காரின் மைலேஜ் குறையும். இதன் காரணமாக காரின் மைலேஜ் குறைய தொடங்கி விடும். கார் அக்செல்லரேட் செய்யும் போது, மென்மையாக திராட்டில் கொடுத்தால் காரின் எரிபொருள் குறைவாக எடுக்கப்பட்டு, காரில் அதிக மைலேஜ் கிடைக்கும்.

     கார்

    - சமீபத்திய அதிநவீன கார் மாடல்களில் ஸ்டார்ட் / ஸ்டாப் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது கார் நீண்ட நொடிகள் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டால், என்ஜின் தானாக ஆப் ஆகி விடும். கார் பயன்படுத்துவோரில் பலர் இந்த அம்சத்தை தவிர்த்து கார்களை ஐடிலில் வைக்கின்றனர். இவ்வாறு செய்யும் போது காரின் எரிபொருள் வழக்கத்தை விட அதிகமாக செலவாகும்.

    - கார் பயன்படுத்துவோரில் பலர் கார்களை எடுத்து கொண்டு நீண்ட தூர பயணம் செல்லும் போது தான், டையர் பிரெஷர் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்கின்றனர். ஆனால் இது முற்றிலும் தவறான செயல். கார்களின் டையர் பிரெஷரை சீரான இடைவெளியில் சரிபார்க்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் காற்றை சரியான அளவில் நிரப்பிக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும் போது கார்கள் அதிக மைலேஜ் வழங்கும். 

     கார்

    - கார்களின் மைலேஜை அதிகப்படுத்த முடிந்த வரை காரினை அதிகபட்ச கியரில் ஓட்ட வேண்டும். குறைந்த கியரில் வாகனம் ஓட்டும் போது அதிக எரிபொருள் செலவாகும். இது தவிர பெட்ரோல் கார்களின் ஆர்.பி.எம். அளவை 2 ஆயிரத்திலும், டீசல் கார்களில் ஆர்.பி.எம். அளவை 1,500-இல் தொடங்கி 1,700 வரை செட் செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்யும் போது கார் மைலேஜ் அதிகரிக்கும்.

    - கார்களில் உள்ள குளிர்சாதன வசதி காரின் எரிபொருளை பெருமளவு குடிக்கும். ஆனால் ஏ.சி. இன்றி கண்ணாடியை திறந்த நிலையில், கார் ஓட்டும் போது மைலேஜ் குறைவதோடு அதன் இண்டீரியரும் பாதிக்கப்படும். முடிந்த வரை காரின் ஏ.சி.யை அதன் மிக குளிர்ந்த நிலையில் இயக்காமல் தேவைக்கு ஏற்ற அளவில் வைக்க வேண்டும். 
    ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் வென்யூ மாடல் இந்திய விற்பனையில் புது மைல்கல் எட்டி உள்ளதாக அறிவித்து இருக்கிறது.


    ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது வென்யூ மாடல் இந்திய விற்பனையில் மூன்று லட்சம் யூனிட்களை கடந்து இருப்பதாக அறிவித்து உள்ளது. இந்தியாவில் 2019 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் வெனஅயூ 2021 வாக்கில் 1 லட்சத்து 08 யூனிட்கள் வரை விற்பனையாகி இருந்தது. 

    அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுவரை விற்பனை செய்யப்பட்டு உள்ள வென்யூ மாடல்களில் 18 சதவீத யூனிட்கள் புளூ லின்க் கனெக்டெட் கார் தொழில்நுட்பம் கொண்டு இருக்கிறது. 2021 ஆண்டு ஹூண்டாய் நிறுவனம் 2 லட்சத்து 50 ஆயிரம் எஸ்.யு.வி.க்களை விற்பனை செய்து இருந்தது. இதில் 42 சதவீத யூனிட்கள் ஹூண்டாய் வென்யூ மாடல் ஆகும். மேலும் இந்திய சந்தையில் இந்த பிரிவில் வென்யூ மாடல் மட்டும் 16.9 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது.

    இந்திய சந்தையில் ஹூண்டாய் வென்யூ மாடல் 1.2 லிட்டர் NA பெட்ரோல் யூனிட், 1.5 லிட்டர் டீசல் யூனிட் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என மூன்று விதமான என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், iMT யூனிட், 7 ஸ்பீடு DCT யூனிட், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் யூனிட் போன்ற டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 
    மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய பொலிரோ சிட்டி பிக் அப் டிரக் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.


    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய பொலிரோ பிக் அப் டிரக் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய பொலிரோ சிட்டி பிக் அப் டிரக் விலை ரூ. 7 லட்சத்து 97 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பொலிரோ சிட்டி பிக்அப் மாடலில் 1500 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டுள்ளது. 

     மஹிந்திரா பொலிரோ பிக் அப் டிரக்

    இதன் முந்தைய மாடலை விட புதிய பொரிலோ சிட்டி பிக்அப் டிரக் மாடலில் சிறிய பொனெட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் பிக்அப் டிரக்-ஐ குறுகிய பகுதிகளிலும் சிறப்பாக கொண்டு செல்ல முடியும். புதிய பொலிரோ சிட்டி மாடலில் 2.5 லிட்டர் m2Di டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 65 பி.ஹெச்.பி. பவர், 195 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த பிக்அப் டிரக் லிட்டருக்கு 17.2 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.

    மஹிந்திரா பொலிரோ சிட்டி பிக்அப் டிரக் மாடலின் ஓட்டுனர் இருக்கை அருகில் அகலமான இருக்கை வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடலுக்கு மூன்று ஆண்டுகள் அல்லது ஒரு கிலோமீட்டர் வரையிலான வாரண்டி கொண்டிருக்கிறது. 
    கியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய EV6 மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. இந்த கார் 528 கிலோமீட்டர் ரேன்ஜ் கொண்டிருக்கிறது.

    கியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் கார் கியா EV6 மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. கியா EV6 மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 3 லட்சம் ஆகும். கியா EV6 முன்பதிவு நாட்டின் 12 நகரங்களில் உள்ள 15 விற்பனை மையங்களில் நடைபெற்று வருகிறது. 

    கியா EV6 மாடலில் 77.4 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட இருக்கிறது. சர்வதேச சந்தையில் இந்த கார் 58 கிலோவாட் ஹவர் மற்றும் 77.4 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும், இந்தியாவில் ஒரு வேரியண்ட் மட்டுமே அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

    கியா EV6

    இந்த எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் மணிக்கு 425 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. மேலும் இந்த கார் 320 ஹெச்.பி. பவர், 605 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

    இந்திய சந்தையில் புதிய கியா EV6 மாடலின் விலை ரூ. 50 முதல் ரூ. 60 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்த காரின் 100 யூனிட்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட இருக்கின்றன. கியா EV6 மாடல் RWD மற்றும் AWD என இரண்டு வேரியண்ட்களிலும் கிடைக்கும். 
    ஓலா எலெக்ட்ரிக் நிறுவன ஸ்கூட்டர் மாடல் ஓடிக் கொண்டு இருக்கும் போதே பாதி வழியில் உடைந்து விழு சம்பவங்கள் அரங்கேறி இருகிறது.


    ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மெக்கானிக்கல் கோளாறு ஏற்பட்டு இருக்கிறது. முன்னதாக ஓலா ஸ்கூட்டரில் பேட்டரி தீப்பிடித்து எரிவது மற்றும் வாடிக்கையாளர்களை விபத்தில் சிக்க வைத்தது என பல்வேறு பிரச்சினைகளில் ஓலா எலெக்ட்ரிக் சிக்கித் தவித்து வருகிறது. இதை அடுத்து ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உறுதித் தன்மை குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. 

    வாடிக்கையாளர் ஒருவர் ஸ்கூட்டரில் பயணித்துக் கொண்டிருந்த போது, திடீரென முன்புற சஸ்பென்ஷன் யூனிட் இயங்காமல் போனது என குற்றம் சாட்டி உள்ளார். இதை அடுத்து ஸ்கூட்டர் விபத்தில் சிக்கி இருக்கிறது. ஓலா எலெக்ட்ரிக் வாடிக்கையாளரான ஸ்ரீநாத் மேனன் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சஸ்பென்ஷன் வேலை செய்யவில்லை என ட்விட்டரில் தெரிவித்தார். 

     ஓலா  எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    இதை அடுத்து மற்றொரு பயனர், தனக்கும் இதே பிரச்சினை ஏற்பட்டது என தெரிவித்து இருக்கிறார். இவரின் ட்விட்டர் பதிவில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் சென்று கொண்டு இருந்த போது, சஸ்பென்ஷன் வேலை செய்யாமல் போனதை அடுத்து சுவரில் மோதியது என குறிப்பிட்டுள்ளார். 

    இத்துடன் சஸ்பென்ஷன் இயங்காமல் போனதை தெரிவிக்கும் புகைப்படங்களை ஒருவர் வெளியிட்டு இருக்கிறார். ஓலா ஸ்கூட்டரின் முன்புற சஸ்பென்ஷன் இயங்காமல் போனது என குற்றம்சாட்டி இருந்தார். அதன்படி முன்புற சஸ்பென்ஷன் இயங்காததால், முன்னே சென்று கொண்டு இருந்த வாகனத்தில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மோதியது. 

    இதுவரை மூன்று முறை ஓலா ஸ்கூட்டரின் முன்புற சஸ்பென்ஷன் இயங்காமல் போனது பற்றி ஓலா நிறுவனம் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. 
    பறக்கும் கார் மாடல்களுக்கான பிரத்யேக விமான நிலையம் உலகில் முதல் முறையாக திறக்கப்பட்டு இருக்கிறது.

    பறக்கும் கார் மாடல்கள் இன்றும் சுவாரஸ்ய கனவாகவே இருந்து வருகிறது. விரைவில் பறக்கும் கார்கள் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பறக்கும் கார் மற்றும் டிரோன்கள் தரையிறங்கி, டேக் ஆஃப் ஆக உலகின் முதல் விமான நிலையம் லண்டனில் திறக்கப்பட்டு உள்ளது. 

     விமான நிலையம்

    லண்டனை சேர்ந்த அர்பன் ஏர் போர்ட் லிமிடெட் நிறுவனம் இந்த விமான நிலையத்தை பறக்கும் திறந்துள்ளது. இந்த விமான நிலையம் ஏர் ஒன் என அழைக்கப்படுகிறது. விமான நிலையத்தின் ஒட்டு மொத்த பணிகள் அடுத்த 15 மாதங்களில் முழுமையாக நிறைவு பெற்று விடும். இந்த விமான நிலையம், லண்டனில் இருந்து 155 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்து உள்ளது.  

    ஏர் ஒன் விமான நிலையத்தில் இருந்து காற்று மாசு ஏற்படுத்தாத பறக்கும் எலெக்ட்ரிக் வாகனங்கள், ஏர் டாக்சிக்கள் மற்றும் டிரோன்கள் டேக் ஆஃப் செய்து, தரையிறங்க முடியும். பறக்கும் கார் மற்றும் டிரோன்களுக்கான விமான நிலையம், எப்போது வேண்டுமானாலும் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×