search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல் செய்திகள்

    ஹூண்டாய் நிறுவனம் தெலுங்கானா மாநிலத்தில் ரூ. 1400 கோடி முதலீடு செய்ய இருக்கிறது. இதற்கான அறிவிப்பு தெலுங்கானா தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி முன்னிலையில் வெளியானது.


    ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் புதிதாக டெஸ்டிங் டிராக் அமைக்க தெலுங்கானா மாநிலத்திற்கு உதவி செய்ய இருக்கிறது. மாநில அரசின் மொபிலிட்டி வேலி எனும் திட்டத்தின் கீழ் புதிதாக டெஸ்டிங் டிராக்குகள் அமைக்கப்பட உள்ளன. இந்த திட்டத்தில் ஹூண்டாய் நிறுவனம் ரூ. 1,400 கோடி முதலீடு செய்ய இருக்கிறது. மேலும் இந்த திட்டத்தில் பங்குதாரர் ஆக ஹூண்டாய் நிறுவனம் இடம்பெற இருக்கிறது.

    முதலீடு பற்றிய அறிவிப்பின் போது ஹூண்டாய் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மூத்த அலுவலர் யாங்சோ சி மற்றும் தெலுங்கானா மாநிலத்துக்கான தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி கே.சி. ராமா ராவ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த அறிவிப்பு சுவிட்சர்லாந்தின் டாவோஸ் பகுதியில் நடைபெற்ற பொருளாதார சந்திப்பின் போது வெளியானது. 

     ஹூண்டாய்

    தெலுங்கானா மாநிலத்தின் போக்குவரத்து துறையை உறுதிப்படுத்த ஹூண்டாய் நிறுவனத்தின் பங்கு உதவியாக இருக்கும். தெலுங்கானாவில் அறிவிக்கப்பட்டு இருக்கும் மொபிலிட்டி வேலி என்ற திட்டம் நாட்டிலேயே முதல் முறையாக இங்கு தான் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் பற்றிய விரிவான தகவல்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. 

    இந்தியாவில் பல்வேறு ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் தங்களுக்கென சொந்தமாக டெல்டிங் டிராக்-களை வைத்துள்ளன. ஹூண்டாய் மோடடார், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா போன்ற நிறுவனங்கள் தங்களின் உற்பத்தி ஆலைக்கு மிக அருகில் டெஸ்டிங் டிராக்-களை அமைத்துள்ளன. 
    லேண்ட் ரோவர் நிறுவனம் புதிய டிபெண்டர் 130 மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மாடல் எட்டு பேர் அமரக்கூடிய இடவசதி கொண்டுள்ளது.

    லேண்ட் ரோவர் நிறுவனம் புதிய டிபெண்டர் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. இந்த மாடலில் 2+3+3 அடிப்படையில் முன்புறம் பார்த்த நிலையில் இருக்கைகள் பொருத்தப்பட்டு உள்ளன. எஸ்.யு.வி. மாடலின் நீண்ட வெர்ஷன் கொண்ட கார் டிபெண்டர் 130 ஆகும். இந்த மாடல் குடும்பத்துடன் ஆஃப் ரோடிங் செய்வதற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    டிபெண்டர் 130 மாடலில் 3022mm வீல்பேஸ், 340mm நீளமான ரியர் ஆக்சில் உள்ளது. இது காரின் மூன்றாவது அடுக்கு இருக்கைகளை வைக்க இடவசதி வழங்கி இருக்கிறது. மூன்றடுக்கு இருக்கைகளிலும் சவுகரியமாக கால்களை வைத்துக் கொள்ளும் வகையில் புதிய டிபெண்டர் 130 மாடல் உள்ளது. இத்துடன் இரண்டு மற்றும் மூன்றாம் அடுக்கு இருக்கைகளை மடித்துக் கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது.

    டிபெண்டர் 130

    புதிய டிபெண்டர் 130 மாடலில் பிரத்யேக செடோனா ரெட் நிற பெயிண்ட் மற்றும் குரோம் ட்ரிபம் பீஸ்கள் உள்ளன. புது மாடலின் நீளம் அதிகரித்து இருந்தாலும், ஆப் ரோடிங் திறன்களில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் புதிய டிபெண்டர் 130 மாடல் டிசைன் செய்யப்பட்டு உள்ளது. 

    லேண்ட் ரோவர் டிபெண்டர் 130 மாடலின் டேஷ்போர்டில் 11.4 இன்ச் பிவி ப்ரோ டச் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இது மூன்று ஸ்கிரீன் செட்டப் ஆகும். இதில் ஆல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், செண்ட்ரல் அப்பர் டச் ஸ்கிரீன் மற்றும் செண்டர் லோயர் டச் ஸ்கிரீன் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது. இந்த மாடல் SE, HSE, X டைனமிக், X மற்றும் ஃபர்ஸ்ட் எடிஷன் ட்ரிம்களில் கிடைக்கிறது. 

    இந்த மாடலில் 3 லிட்டர், 6 சிலிண்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. மூன்று என்ஜின்களுடன் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் iAWD சிஸ்டம் வழங்கப்படுகிறது. இதே கார் சக்திவாய்ந்த வி8 என்ஜின் மற்றும் பிளக் இன் ஹைப்ரிட் பவர்டிரெயின் ஆப்ஷன்களிலும் கிடைக்கும் என தெரிகிறது. 
    ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய வென்யூ பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய வென்யூ பேஸ்லிப்ட் மாடலும் மூன்று வித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும்.


    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் வென்யூ பேஸ்லிப்ட் மாடலை ஜூன் 16 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. அறிமுக நிகழ்வுக்கு முன் இந்த மாடலுக்கான முன்பதிவை சில விற்பனையாளர்கள் துவங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இவை விற்பனையாளர்கள் தரப்பில் மேற்கொள்ளப்படுபவை ஆகும். ஹூண்டாய் தரப்பில் புதிய வென்யூ பேஸ்லிப்ட் மாடலுக்கான முன்பதிவு பற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. 

    2022 ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட் மாடலின் வெளிப்புற டிசைன் மாற்றப்பட்டு புது தோற்றம் கொண்டிருக்கும் என இதுவரை வெளியாகி இருக்கும் ஸ்பை படங்களில் தெரியவந்துள்ளது. அதன்படி இந்த மாடலில் குரோம் இன்சர்ட்கள் கொண்ட புதிய கிரில், முன்புறம் மற்றும் பின்புறம் புது பம்ப்பர்கள், புதிய அலாய் வீல்கள், ராப் அரவுண்ட் எல்.இ.டி. டெயில் லைட்கள், சில்வர் ஸ்கிட் பிலேட்கள் மற்றும் காண்டிராஸ்ட் கலர் ரூஃப் ரெயில்கள் வழங்கப்படுகின்றன.

     2022 ஹூண்டாய் வென்யூ

    புதிய ஹூண்டாய் பேஸ்லிப்ட் மாடலின் உள்புறம் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், இந்த மாடலில் புது வகை இருக்கைகள், ரிவைஸ்டு டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமண்ட் கிளஸ்டர், 4 ஸ்போக் ஸ்டீரிங் வீல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

    புதிய வென்யூ பேஸ்லிப்ட் மாடலில் தற்போதைய வேரியண்டில் உள்ளதை போன்றே 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 6 ஸ்பீடு மேனுவல், iMT மற்றும் DCT டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரு பெட்ரோல் என்ஜின்களுடன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம். 
    பவுன்ஸ் இன்பினிட்டி நிறுவனம் நாடு முழுக்க பேட்டரி மாற்றும் மையங்களை கட்டமைக்க திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக பெங்களூருவிலும் அதன்பின் 9 நகரங்களில் இவை அமைக்கப்படுகிறது.


    பவுன்ஸ் இன்பினிட்டி நிறுவனம் விரைவில் பேட்டரி மாற்றும் மையங்களை (battery swapping station) கட்டமைக்க இருக்கிறது. இதற்காக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்துடன் பவுன்ஸ் இன்பினிட்டி நிறுவனம் கூட்டணி அமைத்து இருக்கிறது. முதற்கட்டமாக இந்த திட்டத்தின் கீழ் 3 ஆயிரம் பேட்டரி மாற்றும் மையங்கள் கட்டமைக்கப்பட உள்ளன. 

    பல கட்டங்களாக நிறுவப்பட இருக்கும் பேட்டரி மாற்றும் மையங்கள் முதலில் பெங்களூருவிலும், அதன்பின் ஒன்பது நகரங்களிலும் அமைக்கப்பட இருக்கிறது. ஸ்கூட்டர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பவுன்ஸ் ஸ்மார்ட்போன் செயலியை பயன்படுத்தி அவர்களுக்கு அருகாமையில் உள்ள பேட்டரி மாற்றும் மையத்தை அறிந்து கொள்ளலாம். 

     பவுன்ஸ் இன்பினிட்டி

    பவுன்ஸ் இன்பினிட்டி நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் E1-ஐ இரண்டு வேரியண்ட்களில் வழங்குகிறது. அதாவது ஒரு வேரியண்டில் பேட்டரியும் மற்றொரு வேரியண்டில் பேட்டரி இல்லாமலும் விற்பனை செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்கள் பேட்டரி இல்லாத ஸ்கூட்டர்களை வாங்கினால், பேட்டரி மாற்றும் மையங்களில் உள்ள பேட்டரிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு சந்தா முறையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

    இந்தியாவில் பவுன்ஸ் இன்பினிட்டி E1 மாடலை பேட்டரி இல்லாமல் வாங்கும் போது ரூ. 56 ஆயிரத்து 999 என்றும், பேட்டரியுடன் சேர்த்து வாங்கும் போது ரூ. 79 ஆயிரத்து 999 வரை செலுத்த வேண்டும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

    ஃபோர்டு இந்தியா உற்பத்தி ஆலையில் பவர்டிரெயின் உற்பத்தி மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்த ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் மூன்று லட்சம் யூனிட்கள் உற்பத்தி செய்ய முடியும்.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டாடா பாசஞ்சர் எலெக்ட்ரிக் மொபிலிட்டி பிரிவின் கீழ் ஃபோர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து குஜராத் அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் ஃபோர்டு நிறுவனம் குஜராத் மாநிலத்தின் சனந்த் பகுதியில் வைத்து இருக்கும் ஆலையை வாங்க டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது. 

     ஃபோர்டு உற்பத்தி ஆலை

    புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி டாடா பாசஞ்சர் எலெக்ட்ரிக் மொபிலிட்டி பிரிவு ஃபோர்டு இந்தியா உற்பத்தி ஆலையின் நிலம், கட்டிடங்கள் மற்றும் வாகன உற்பத்தி ஆலையை அதில் உள்ள இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுடன் விலைக்கு வாங்க இருக்கிறது. அதன்படி அந்த ஆலையில் பணியாற்றும் ஊழியர்களும் விரைவில் டாடா பாசஞ்சர் எலெக்ட்ரிக் மொபிலிட்டி பிரிவின் கீழ் பணியாற்றுவர்.

    எனினும், ஃபோர்டு இந்தியா நிறுவனம் தனது பவர்டிரெயின் உற்பத்தி ஆலையை தொடர்ந்து இயக்க முடிவு செய்துள்ளது. இதற்காக டாடா பாசஞ்சர் எலெக்ட்ரிக் மொபிலிட்டி பிரிவிடம் இருந்து ஆலையை லீசுக்கு எடுத்து பயன்படுத்த இருக்கிறது. வரும் மாதங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த ஆலையில் புது இயந்திரங்களை நிறுவி ஆலையின் உற்பத்தி திறனை ஆண்டுக்கு மூன்று லட்சமாக உயர்த்துகிறது. 
    ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய கிரெட்டா N லைன் மாடல் சோதனை துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் சர்வதேச வெளியீடு ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது.


    ஹூண்டாய் நிறுவனம் சர்வதேச சந்தையில் தனது N சீரிஸ் மாடல்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் இரண்டாவது N லைன் மாடலாக வென்யூ N லைன் காரை வரும் வாரங்களில் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஹூண்டாய் வென்யூ N மாடலுடன், கிரெட்டா N லைன் மாடலும் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய கிரெட்டா N லைன் மாடல் பிரீ-ப்ரோடக்‌ஷன் மாடல் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளது.

    கடந்த வாரம் கிரெட்டா N லைன் மாடல் உருவாக்கப்பட்டு வருவதாகவும், இதன் விற்பனை முதற்கட்டமாக தென் அமெரிக்காவில் துவங்கும் என ஹூண்டாய் நிறுவனம் அறிவித்து இருந்தது. தற்போது வெளியாகி இருக்கும் ஸ்பை படங்களில் கிரெட்டா N லைன் பிரீ-ஃபேஸ்லிப்ட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் அகலமான முன்புற கிரில், கிரில் இன்சர்ட்களில் டார்க்
    க்ரோம் செய்யப்பட்டு உள்ளது.
     ஹூண்டாய் கிரெட்டா N லைன்
    Photo Courtesy: ShortsCar

    பக்கவாட்டுகளில் கிரெட்டா N லைன் மாடல் ஸ்டாண்டர்டு எஸ்.யு.வி. போன்றே காட்சியளிக்கிறது. எனினும், அலாய் வீல் டிசைன், வித்தியாசமான ஸ்டைலிங் கொண்ட கிளாடிங் மற்றும் க்ரோம் இன்சர்ட்கள் உள்ளன. பின்புறம் வித்தியாசமான பம்ப்பர், ஃபௌக்ஸ் டிப்யுசர் தோற்றம் கொண்டிருக்கிறது. 

    தென் அமெரிக்க சந்தையில் கிரெட்டா மாடல் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அல்லது 2.0 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கும் என தெரிகிறது. கிரெட்டா N மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கும் என்றே கூறப்படுகிறது.  
    மஹிந்திரா நிறுவனம் புதிய ஸ்கார்பியோ N மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடலுக்கான டீசர்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

    மஹிந்திரா நிறுவனம் புதிய ஸ்கார்பியோ N மாடலுக்கான உற்பத்தி பணிகள் ஜூன் மாதத்தில் துவங்கும் என அறிவித்து இருக்கிறது. தற்போது பிரீ-ப்ரோடக்‌ஷன் யூனிட்கள் ஆலையில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், இதன் ப்ரோடக்‌ஷன் ரெடி வெர்ஷன் ஜூன் 27 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது.

     மஹிந்திரா ஸ்கார்பியோ N

    முற்றிலும் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் ஜூன் 20 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. புதிய ஸ்கார்பியோ N அறிமுகம் செய்யப்பட்டாலும், பழைய மாடல், ஸ்கார்பியோ கிளாசிக் எனும் பெயரில் விற்பனை செய்யப்படும் என மஹிந்திரா அறிவித்து உள்ளது. 

    புதிய 2022 மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடலில் 2.0 லிட்டர் M-ஸ்டேலியன் டர்போ பெட்ரோல் என்ஜின், 2.2 லிட்டர் M-ஹாக் டீசல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்பட இருக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல்களில் 4x4 வெர்ஷனும் வழங்கப்படலாம். 
    சிம்பில் எனர்ஜி நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலின் டெஸ்ட் ரைடு பற்றி புது தகவல் தெரிவித்து உள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் மாதம் துவங்க இருக்கிறது.


    எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட் அப் நிறுவனமான சிம்பில் எனர்ஜி தனது முதல் பிளாக்‌ஷிப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்- சிம்பில் ஒன் டெஸ்ட் ரைடுகள் ஜூலை 20 ஆம் தேதி நாட்டின் 13 நகரங்களில் துவங்கும் என தெரிவித்து உள்ளது. முதற்கட்டமாக டெஸ்ட் ரைடுகள் பெங்களூருவிலும் அதன் பின் சென்னை, ஐதராபாத், மும்பை, பூனே, பனாஜி மற்றும் இதர நகரங்களில் துவங்குகிறது.

    டெஸ்ட் ரைடுகள் செப்டம்பர் மாதம் வரை நடைபெற இருக்கின்றன. முன்னதாக சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவரி தாமதமாக துவங்கும் என சிம்பில் எனர்ஜி அறிவித்து இருந்தது. அந்த வகையில், டெஸ்ட் ரைடுகளை தொடர்ந்து சிம்பில் ஒன் மாடல்களின் வினியோகம் துவங்கும். 

     சிம்பில் ஒன்

    இந்தியாவில் சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 999 என துவங்குகிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 203 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும். இதன் லாங் ரேன்ஜ் மாடல் முழு சார்ஜ் செய்தால் 300 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. இதன் விலை ரூ. 1 லட்சத்து 44 ஆயிரத்து 999 ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தமிழ் நாட்டின் ஓசூர் பகுதியில் அமைந்துள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இத்துடன் சிம்பில் எனர்ஜி நிறுவனத்தின் இரண்டாவது ஆலை தமிழ் நாட்டின் தருமபுரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் 12.5 மில்லியன் யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன. 

    மஹிந்திரா நிறுவனத்தின் eXUV300 எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் வெளியீடு பற்றி அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏற்கனவே இந்த மாடல் ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது.


    மஹிந்திரா நிறுவனம் தனது முழு எலெக்ட்ரிக் மாடலான eXUV300 இந்தியாவில் தற்போதைய நிதியாண்டின் மூன்று அல்லது நான்காவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது. அதன்படி மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஆல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் 2023 முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

    முன்னதாக மஹிந்திரா தனது ஆல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலை 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் பிரீ-ப்ரோடக்‌ஷன் வடிவில் காட்சிப்படுத்தி இருந்தது. மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்ட எலெக்ட்ரிக் வாகனங்கள் பட்டியலில் eXUV300 அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அடுத்த ஏழு ஆண்டுகளில் மஹிந்திரா நிறுவனம் 16 புது எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கடந்த ஆண்டு அறிவித்து இருந்தது. 

     மஹிந்திரா eXUV300

    புது வாகனங்களில் எட்டு எலெக்ட்ரிக் எஸ்.யு.வி.க்கள், எட்டு இலகு ரக வர்த்தக வாகனங்கள் இடம்பெற்று இருக்கிறது. இதுதவிர மேலும் மூன்று எலெக்ட்ரிக் எஸ்.யு.வி.க்களை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருப்பதாக மஹிந்திரா சமீபத்திய டீசரில் அறிவித்து இருந்தது. இத்துடன் போக்ஸ்வேகன் நிறுவனத்தின் MEB பிளாட்பார்ம் உபகரணங்களை தனது வாகனங்களில் பயனபடுத்த மஹிந்திரா நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது.

    முந்தைய கான்செப்ட் மாடல்களின் படி மஹிந்திரா eXUV300 மாடல் அதன் பெட்ரோல், டீசல் வேரியண்ட்களுடன் ஒப்பிடும் போது காஸ்மெடிக் மாற்றங்களை மட்டுமே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 
    இந்திய சந்தையில் கார் மாடல்கள் விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. எனினும், கார் உற்பத்தியாளர்கள் தங்களது வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றனர்.


    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடந்த சில ஆண்டுகளாக கார் மாடல்களின் விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. உதிரி பாகங்களுக்கான தட்டுப்பாடு மற்றும் செலவீனங்கள் அதிகரிப்பது போன்ற காரணங்களால் கார் உற்பத்தியாளர்கள் கார்களின் விலையை உயர்த்தி வருகின்றன. 

    இவ்வாறு கார்களின் விலை உயர்த்தப்பட்டாலும், வாகன விற்பனையை அதிகப்படுத்த கார் உற்பத்தியாளர்கள் தங்களின் கார்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவைகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடியில் கிடைக்கும் கார் மாடல்களை தொடர்ந்து பார்ப்போம்.

     கார்

    மாருதி சுசுகி ஆல்டோ 800- இந்திய சந்தையில் அதிக பிரபலமான ஹேச்பேக் மாடல் ஆல்டோ 800. இதன் விலை ரூ. 3 லட்சத்து 40 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. தற்போது மாருதி ஆல்டோ 800 மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் மற்றும் ரூ. 3 ஆயிரம் வரை ஸ்பெஷல் சலுகை வழங்கப்படுகிறது.

    மாருதி எஸ் பிரெஸ்ஸோ- மைக்ரோ எஸ்.யு.வி. மாடலான எஸ் பிரெஸ்ஸோ வாங்குவோருக்கு மொத்தத்தில் ரூ. 18 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இவை எக்ஸ்சேன்ஜ் போனஸ், சிறப்பு சலுகை மற்றும் கூடுதல் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகிறது. 

    மாருதி சுசுகி வேகன்ஆர்- இந்தியாவில் வேகன்ஆர் மாடலுக்கென தனி வாடிக்கையாளர் கூட்டம் இருக்கிறது. இந்த மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 38 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகிறது. 

     கார்

    நிசான் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கிக்ஸ் எஸ்.யு.வி. மாடலுக்கு ரூ. 19 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ. 45 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் ஆன்லைன் முன்பதிவு சலுகையாக ரூ. 2 ஆயிரத்தில் இருந்து ரூ. 5 ஆயிரம் வரையி சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் அல்கசார் மாடல் பெரும் எதிர்பார்ப்புடன் விற்பனைக்கு வந்தது. இந்த கார் வாங்குவோருக்கு அதிகபட்சம் 100 சதவீதம் வரையிலான ஆன் ரோடு நிதி சலுகை, மாத தவணைக்கு 7.25 சதவீத வட்டியில் வழங்கப்படுகிறது.
    பிரபல அம்பாசடர் கார்களை விற்பனை செய்து வந்த இந்துஸ்தான் மோட்டார்ஸ் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    உலகளவில் நீண்ட காலம் உற்பத்தி செய்யப்பட்டு வந்த கார்களில் ஒன்று இந்துஸ்தான் அம்பாசடர். 1956-இல் தொடங்கி 2014 வரை அம்பாசடார் மாடல் சந்தையில் இருந்தது. அதன் பின் இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட கடுமையான புகை விதிகளை அடுத்து அம்பாசடர் மாடல் இந்த சந்தையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது.

    தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்துஸ்தான் மோட்டார்ஸ் மீண்டும் களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் ஐரோப்பிய நிறுவனத்துடன் கூட்டணி அமைப்பதாக கூறப்படுகிறது. இரு நிறுவனங்கள் கூட்டணியில் புதிதாக எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.

     அம்பாசடர் கார்

    இது தொடர்பாக இரு நிறுவனங்களிடையே அடுத்த ஆண்டு அதிகாகரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது. கொல்கத்தாவை அடுத்த உத்தர்பாராவில் உள்ள இந்துஸ்தான் மோட்டார்ஸ் உற்பத்தி ஆலையில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்ய முதற்கட்டமாக ரூ. 600 கோடி முதலீடு செய்ய இந்கதுஸ்தான் மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.

    இது பற்றிய முழு தகவல்கள் அடுத்த ஆண்டு அறிவிக்கப்படும் என தெரிகிறது. இந்துஸ்தான் மோட்டார்ஸ் அதிக இடவசதி கொண்டிருப்பதால், ஆலையை மாற்றி அமைத்து புது எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியை இங்கேயே துவங்க இருக்கிறது. இந்துஸ்தான் மோட்டார்ஸ் மட்டுமின்றி ஐரோப்பிய நிறுவனமும் தன்பங்கிற்கு முதலீடு செய்யும் என கூறப்படுகிறது.

    எனினும், இதுபற்றி இரு நிறுவனங்கள் தரப்பில் இதுவரை இறுதியான முடிவு எட்டப்படவில்லை. இது பற்றிய தகவல்கள் அடுத்த ஆண்டு அறிவிக்கப்படலாம். 
    ஹூண்டாய் நிறுவனம் தனது வென்யூ மாடலுக்கான முன்பதிவை நிறுத்தி இருக்கிறது. முன்னதாக வென்யூ பேஸ்லிப்ட் மாடல் ஸ்பை படங்கள் பலமுறை வெளியாகி இருக்கின்றன.


    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது வென்யூ காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலை அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து நீக்கி இருக்கிறது. இது குறித்து ஹூண்டாய் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என தெரிகிறது. கடந்த சில மாதங்களாக ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட் மாடலின் ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

    அந்த வகையில், இந்த மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதோடு புதிய வென்யூ பேஸ்லிப்ட் மாடலின் டிசைன் விவரங்களு்ம இணையத்தில் லீக் ஆகி இருந்தது. இந்த நிலையில், ஹூண்டாய் தனது வென்யூ மாடலுக்கான முன்பதிவை நிறுத்தி இருக்கிறது.

     ஹூண்டாய் வென்யூ

    தற்போது இந்திய சந்தையில் ஹூண்டாய் வென்யூ மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் 82 ஹெச்.பி. பவர், 114 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் 118 ஹெச்.பி. பவர், 172 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 6 ஸ்பீடு மேனுவல், iMT மற்றும் DCT டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இவை தவிர ஹூண்டாய் வென்யூ டீசல் வேரியண்டில் 99 ஹெச்.பி. பவர், 240 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின், 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    ×