search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல் செய்திகள்

    ஸ்கோடா நிறுவனம் விரைவில் தனது எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஸ்கோடா என்யாக் எலெக்ட்ரிக் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது.

    ஸ்கோடா ஆட்டோ இந்தியா தனது முதல் எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் இந்த எலெக்ட்ரிக் காரின் சோதனை துவங்கி நடைபெற்று வருகிறது. ஸ்கோடா என்யாக் iV எலெக்ட்ரிக் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 

    எவ்வித மறைப்பும் இன்றி சோதனை செய்யப்படும் ஸ்கோடா எலெக்ட்ரிக் கார், ஸ்கோடா என்யாக் iV 80X எலெக்ட்ரிக், டாப் எண்ட் வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது. இந்த கார் MEB ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது புதிய ஸ்கோடா ஆக்டேவியா மாடலை விட அளவில் சிறியதாக உருவாக்கப்பட்டு உள்ளது. எனினும், இதன் பூட் ஸ்பேஸ் ஸ்கோடா கோடியக் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஸ்கோடா என்யாக் iV
    Photo Courtesy:  Instagram | harshbhatt723

    ஸ்கோடா என்யாக் iV மாடல் பல்வேறு செயல்திறன் மற்றும் ரேன்ஜ் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. என்யாக் iV 55 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் கொண்ட மாடல் 146 ஹெச்.பி. பவர், 220 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 340 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. 

    இதே கார், 177 ஹெச்.பி. பவர், 310 நியூட்டன் மீட்டர் டார்க், 210 பி.ஹெச்.பி. பவர், 310 நியூட்டன் மீட்டர்டார்க் மற்றும் 261 பி.ஹெச்.பி. பவர், 425 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. ஸ்கோடா என்யாக் RS மாடல் iV வேரியண்ட் சக்திவாய்ந்த மாடல் ஆகும். 
    ஹூண்டாய் நிறுவனம் 2022 வென்யூ பேஸ்லிப்ட் மாடலின் முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாடலின் ஏராளமான கனெக்டெட் அம்சங்களை கொண்டிருந்தது.


    தென் கொரிய கார் உற்பத்தியாளரான ஹூண்டாய் பேஸ்லிப்ட் செய்யப்பட்ட வென்யூ காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலுக்கான முன்பதிவை துவங்கி உள்ளது. 2022 ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட் மாடலில் பல்வேறு ஹோம்-டு-கார் அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.

    புதிய பேஸ்லிப்ட் செய்யப்பட்ட ஹூண்டாய் வென்யூ மாடல் ஜூன் 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், புதிய 2022 ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்பதிவு ஹூண்டாய் விற்பனை மையங்கள் மற்றும் ஹூண்டாய் இந்திய க்ளிக் டு பை தளத்தில் நடைபெறுகிறது.

     ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட்

    ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட் மாடலில் பல்வேறு ஹோம் டு கார் அம்சங்கள் வழங்கப்படுகிறது. இதில் அமேசான் அலெக்சா மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் வாய்ஸ் கமாண்ட் வசதி வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் பல்வேறு கனெக்டெட் அம்சங்கள் புது வென்யூ மாடலில் வழங்கப்படுகிறது. 
     
    புதிய வென்யூ பேஸ்லிப்ட் மாடலில் தற்போதைய வேரியண்டில் உள்ளதை போன்றே 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 6 ஸ்பீடு மேனுவல், iMT மற்றும் DCT டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரு பெட்ரோல் என்ஜின்களுடன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம்.  
    நிசான் மோட்டார் இந்தியா தனது மேக்னைட் சப்காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலின் முன்பதிவுகள் புது மைல்கல் எட்டியுள்ளது. இந்த மாடலின் விற்பனை 2020 டிசம்பர் மாத வாக்கில் துவங்கியது.

    நிசான் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது மேக்னைட் சப்காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் இந்திய முன்பதிவில் ஒரு லட்சம் யூனிட்களை கடந்து இருப்பதாக அறிவித்து இருக்கிறது. 

    நிசான் நிறுவனத்தின் வாகன விற்பனையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் மாடலாக மேக்னைட் அமைந்தது. கடந்த டிசம்பர் 2020 வாக்கில் நிசான் மேக்னைட் மாடலின் விற்பனை துவங்கியது. விற்பனை துவங்கிய இரண்டறை ஆண்டுகளில் நிசான் மேக்னைட் மாடல் ஒரு லட்சம் யூனிட்களை கடந்துள்ளது.

     நிசான் மேக்னைட்

    இந்தியாவில் அறிமுகமான முதல் மாதத்திலேயே நிசான் மேக்னைட் மாடல் 32 ஆயிரம் முன்பதிவுகளை கடந்தது. இதை அடுத்து 2021 பிப்ரவரி மாதத்தில் நிசான் மேக்னைட் மாடலை வாங்க 40 ஆயிரம் பேர் முன்பதிவு செய்தனர். இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த மாடலை வாங்க சுமார் 78 ஆயிரம் பேர் முன்பதிவு செய்தனர். இன்றும் நிசான் மேக்னைட் மாடலை வாங்க சுமார் 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். 

    நிசான் மேக்னைட் மாடலின் விலை இந்தியாவில் ரூ. 4 லட்சத்து 99 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்பின் இந்த காரின் விலை பலமுறை மாற்றப்பட்டு தற்போது இதன் விலை ரூ. 5 லட்சத்து 88 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 10 லட்சத்து 56 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.  
    டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் அபாச்சி RR 310 மாடல் பந்தய களத்தில் புது சாதனையை படைத்து இருக்கிறது. இத்தகைய சாதனையை படைத்த முதல் மோட்டார்சைக்கிள் இது ஆகும்.


    டி.வி.எஸ். ஆசியா ஒன் மேக் சாம்பியன்ஷிப் தொடர் சமீபத்தில் நடைபெற்றது. இந்த தொடரில் பங்கேற்றவர்கள் அபாச்சி RR 310 OMC ரேஸ் பைக் கொண்டு பந்தய களத்தில் தங்களின் திறமையை வெளிப்படுத்தினர். சந்தையில் விற்பனை செய்யப்படும் டி.வி.எஸ். அபாச்சி RR 310 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் ரேசிங் பைக் செபாங் சர்வதேச சர்கியூட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    மலேசியாவில் உள்ள இந்த பந்தய களத்தில் டி.வி.எஸ். அபாச்சி RR 310 மாடல் மணிக்கு 201.2 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப் பாய்ந்தது. அந்த வகையில் இத்தகைய சாதனையை படைத்த முதல் இந்திய மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை அபாச்சி RR 310 பெற்று இருக்கிறது. டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் மோட்டார்ஸ்போர்ட் பிரிவு, டி.வி.எஸ். ரேசிங் இந்த மோட்டார்சைக்கிளை உருவாக்கியது,

     டி.வி.எஸ். அபாச்சி RR310, ரேஸ் பைக்

    நான்கு கட்டங்களில் நடைபெறும் ஒன் மேக் சாம்பியன்ஷிப் தொடரில் 16 பேர் பங்கேற்கின்றனர். அபாச்சி RR 310 ஆசியா OMC ரேஸ் பைக்கில் 312சிசி, DOHC, 4 வால்வுகள் கொண்ட லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது வழக்கமான அபாச்சி RR 310 மாடலை விட 38 சதவீதம் கூடுதல் திறன் வெளிப்படுத்துகிறது. 

    இதுதவிர டி.வி.எஸ். அபாச்சி RR 310 OMC ரேஸ் பைக்கில் குறைந்த எடை கொண்ட கார்பன் ஃபைபர் பாடிவொர்க், வீல்ஸ் மற்றும் சப்-ஃபிரேம் கொண்டிருக்கிறது. இத்துடன் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒலின்ஸ் சஸ்பென்ஷன் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது. 
    எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஆஸ்டர் எஸ்.யு.வி. மாடல் விலையை மாற்றியமைத்து உள்ளது. இந்திய சந்தையில் எம்.ஜி. ஆஸ்டர் மாடல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.


    எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஆஸ்டர் எஸ்.யு.வி. விலையை உயர்த்தி இருக்கிறது. இந்தியாவில் அக்டோபர் 2021 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஆஸ்டர் எஸ்.யு.வி. மாடல் விலை தற்போது ரூ. 46 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. 

    இந்திய சந்தையில் ஆஸ்டர் மாடல் ஸ்டைல், சூப்பர், ஷார்ப், ஸ்மார்ட் மற்றும் சேவி என ஐந்து வித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த மாடலின் 1.5 லிட்டர் என்ஜின் கொண்ட வேரியண்ட்களின் விலை ரூ. 30 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 46 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் 1.3 லிட்டர் கொண்ட ஸ்டைல் மற்றும் ஷார்ப் வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 30 ஆயிரம் மற்றும் ரூ. 40 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது.

     எம்.ஜி. ஆஸ்டர்

    எம்.ஜி. ஆஸ்டர் மாடலில் உள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 108.5 பி.ஹெச்.பி. திறன், 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 1.3 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 138 பி.ஹெச்.பி. திறன், 220 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இதன் 1.5 லிட்டர் என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 8 ஸ்பீடு சி.வி.டி. கியர்பாக்ஸ் பெறலாம். 1.3 லிட்டர் என்ஜினுடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    மாருதி சுசுகி நிறுவனம் புதிய மேம்பட்ட விட்டாரா பிரெஸ்ஸா மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடல் டாடா நெக்சான், நிசான் மேக்னைட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.


    மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் மேம்பட்ட விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடலை ஜூன் 30 ஆம் தேதி அறிமுகம் செய்வதாக மாருதி சுசுகி நிறுவனம் அறிவித்து உள்ளது. எர்டிகா மற்றும் XL6 பேஸ்லிப்ட் மாடல்களை தொடர்ந்து மாருதி சுசுகி அறிமுகம் செய்யும் மூன்றாவது பெரிய மாடலாக விட்டாரா பிரெஸ்ஸா அமைந்துள்ளது. 

    இந்திய சந்தையில் 2020 மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா மாடல் டாடா நெக்சான், நிசான் மேக்னைட், மஹிந்திரா XUV300 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றாக விட்டாரா பிரெஸ்ஸா இருக்கிறது. மற்ற மாடல்களுடன் ஒப்பிடும் போது இந்த காம்பேக்ட் எஸ்.யு,வி. மாடல் அதிக வருவாய் ஈட்டிக் கொடுக்கிறது.

    விட்டாரா பிரெஸ்ஸா

    புதிய விட்டாரா பிரெஸ்ஸா பேஸ்லிப்ட் மாடலின் வெளிப்புறம் மற்றும் உள்புற கேபினில் அதிகளவு மாற்றங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த காரின் முன்புற கிரில் மாற்றப்பட்டு, அதிக கூர்மையாக இருக்கும் என தெரிகிறது. இத்துடன் க்ரிஸ்ப் எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், இண்டகிரேட் செய்யப்பட்ட எல்.இ.டி. டேடைம் ரன்னிங் லைட்கள் உள்ளன. காரின் முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள் மாற்றப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இவை காருக்கு அதிக பிரீமியம் தோற்றத்தை வழங்கும்.

    காரின் உள்புறத்திலும் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கலாம். இதன் டேஷ்போர்டு மற்றும் ஓட்டுமொத்த லே-அவுட் மாற்றப்பட்டு, பல்வேறு புது அம்சங்கள் வழங்கப்படலாம். இதில் 9 இன்ச் டச் ஸ்கிரீன் வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, வெண்டிலேட் செய்யப்பட்ட சீட்கள், HUD டிஸ்ப்ளே, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங், ஆம்பியண்ட் லைட்டிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம்.
    கியா இந்தியா நிறுவனத்தின் புதிய EV6 எலெக்ட்ரிக் கார் விற்றுத் தீர்ந்தது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 528 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.


    கியா இந்தியா நிறுவனம் 2022 ஆண்டிற்கான கியா EV6 மாடல்கள் விற்றுத் தீர்ந்ததாக அறிவித்து இருக்கிறது. இதுபற்றிய அறிவிப்பை கியா EV6 வெளியீட்டு நிகழ்வில் கியா இந்தியா மேற்கொண்டது. இந்தியாவில் புதிய கியா EV6 மாடலின் விலை ரூ. 59 லட்சத்து 95 ஆயிரம் என துவங்குகிறது. இந்த ஆண்டிற்கு விற்பனை செய்ய கியா நிறுவனம் மொத்தத்தில் 100 யூனிட்களையே கொண்டு வருவதாக அறிவித்து இருந்தது.

    அதின்படி இந்த ஆண்டிற்கான 100 கியா EV6 யூனிடிகளும் விற்றுத் தீர்ந்தன. இந்த மாடலுக்கான முன்பதிவு மே 26 ஆம் தேதி தொடங்கியது. முன்பதிவு கட்டணம் ரூ. 10 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. கடந்த சில நாட்களாக கியா EV6 மாடலை வாங்க 335 முன்பதிவுகள் பெறப்பட்டதாக கியா இந்தியா அறிவித்து உள்ளது.

    கியா EV6

    சர்வதேச சந்தையில் இந்த கார் 58 கிலோவாட் ஹவர் மற்றும் 77.4 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும், இந்தியாவில் ஒரு வேரியண்ட் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் மணிக்கு 528 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. 

    மேலும் இந்த கார் 320 ஹெச்.பி. பவர், 605 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. கியா EV6 மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 5.2 நொடிகளில் எட்டிவிடும். இதனுடன் வழங்கப்படும் அல்ட்ரா பாஸ்ட் சார்ஜிங் பயன்படுத்தும் போது காரை 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 18 நிமிடங்களே ஆகும். 
    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் எண்ட்ரி கொடுக்க இருக்கிறது. இந்நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகன வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.


    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விரைவில் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்க இருக்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஏற்கனவே புதிய துணை பிராண்டை விடா பெயரில் அறிமுகம் செய்து இருக்கிறது. அதன்படி விடா பிராண்டிங்கில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. 

    முந்தைய தகவலின் படி ஜூலை 1, 2022 அன்று விடா பிராண்டிங்கில் முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. எனினும், இந்த திட்டம் தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் விடா பிராண்டின் முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் இந்த ஆண்டு பண்டிகை காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

     ஹீரோ எலெக்ட்ரிக் வாகனம்

    சர்வதேச சந்தையில் ஏற்பட்டு இருக்கும் செமி கண்டக்டர் குறைபாடு காரணமாகவே எலெக்ட்ரிக் இருசக்கர வாகன வெளியீடு தாமதம் ஆகி இருக்கிறது. தற்போதைய அறிவிப்பை சேர்த்து இதுவரை இரண்டு முறை ஹீரோ எலெக்ட்ரிக் வாகன வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. முதன் முதலில் ஹீரோ எலெக்ட்ரிக் வாகனம் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு பின், இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

    ஹீரோவின் முதல் எலெக்ட்ரிக் வாகனம், பெரும்பாலும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகவே இருக்கும் என கூறப்படுகிறது. இதே தகவலை உறுதிப்படுத்தும் வகையில் ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் புகைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் இணையத்தில் லீக் ஆகி இருந்தது.

    கியா இந்தியா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கியா EV6 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் முதற்கட்டமாக 100 யூனிட்களே விற்பனை செய்யப்பட உள்ளன.


    கியா இந்தியா நிறுவனம் தனது கியா EV6 எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய கியா EV6 மாடலுக்கான முன்பதிவு மே 26 ஆம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. புதிய கியா EV6 விலை ரூ. 59.95 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    முதற்கட்டமாக இந்த காரின் 100 யூனிட்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. கியா EV6 மாடல் RWD மற்றும் AWD என இரண்டு வேரியண்ட்களிலும் கிடைக்கிறது. கியா EV6 மாடலில் 77.4 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. 

     கியா EV6

    சர்வதேச சந்தையில் இந்த கார் 58 கிலோவாட் ஹவர் மற்றும் 77.4 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும், இந்தியாவில் ஒரு வேரியண்ட் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் மணிக்கு 528 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. 

    மேலும் இந்த கார் 320 ஹெச்.பி. பவர், 605 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. கியா EV6 மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 5.2 நொடிகளில் எட்டிவிடும். இதனுடன் வழங்கப்படும் அல்ட்ரா பாஸ்ட் சார்ஜிங் பயன்படுத்தும் போது காரை 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 18 நிமிடங்களே ஆகும். 

    கியா EV6 எலெக்ட்ரிக் கார் மாடல் நார்மல், ஸ்போர்ட் அல்லது இகோ என மூன்று வித டிரைவிங் மோட்களில் கிடைக்கிறது. ஒவ்வொரு மோடிற்கு ஏற்ப காரின் செயல்திறன் வேறுபடுவதோடு, பிரத்யேக டிரைவர் இண்டர்பேஸ் கொண்டுள்ளது. 

    பி.எம்டபிள்.யூ. நிறுவனம் 2022 X1 மாடலுடன் புதிய iX1 எலெக்ட்ரிக் காரையும் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மாடல் 468 கி.மீ. ரேன்ஜ் வழங்குகிறது.

    பி.எம்டபிள்.யூ. நிறுவனம் புதிய X1 மாடலை அறிமுகம் செய்ததோடு, பி.எம்டபிள்.யூ. iX1 எலெக்ட்ரிக் மாடலையும் அறிமுகம் செய்து இருக்கிறது. சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து புதிய பி.எம்டபிள்.யூ. கார் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 2022 பி.எம்டபிள்.யூ. X1 மாடலுடன் iX1 மாடலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    2022 பி.எம்.டபிள்.யூ. X1 மாடல் இரண்டு விதமான பெட்ரோல், இரண்டு வித டீசல் என்ஜின், ஒற்றை ஆல் எலெக்ட்ரிக் iX1 ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் பிளக் இன் ஹைப்ரிட் மாடல் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 

     பி.எம்.டபிள்யூ. iX1

    புதிய எலெக்ட்ரிக் பி.எம்.டபிள்.யூ. iX1 மாடலில் 64.7 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 438 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்த பேட்டரி 11கிலோவாட் AC சார்ஜிங் மற்றும் 22 கிலோவாட் AC சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது.

    புதிய பி.எம்.டபிள்யூ. X1 மற்றும் iX1 மாடல்களின் விலை விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. முதற்கட்டமாக சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வர இருக்கும் புது பி.எம்.டபிள்யூ. கார் இந்த ஆண்டு இறுதியில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
    ஹோண்டா கார்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவை இம்மமாதம் 30 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.


    ஜூன் மாதத்தில் கார் மாடல்கள் விற்பனையை அதிகப்படுத்த ஹோண்டா கார்ஸ் நிறுவனம் அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. சிறப்பு சலுகைகள் ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் பெரும்பாலான மாடல்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது சில கார் மாடல்களுக்கான சலுகை பலன்கள் குறைக்கப்பட்டு உள்ளன. 

    எனினும், சில மாடல்களுக்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சிறப்பு சலுகைகள், தள்ளுபடி உள்ளிட்டவை வேரியண்ட், கிரேடு மற்றும் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப வேறுபடும். இவை ஜூன் 30 ஆம் தேதி வரை வழங்கப்பட இருக்கின்றன.

    ஹோண்டா சிட்டி (5th Gen) - இந்தியாவில் ஹோண்டா சிட்டி மாடலுக்கு ரூ. 27 ஆயிரத்து 396 வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் ரூ. 5 ஆயிரம் கேஷ் தள்ளுபடி, ரூ. 5 ஆயிரத்து 396 மதிப்புள்ள இலவச அக்சஸரீக்கள், கார் எக்சேன்ஜ் சலுகையில் ரூ. 5 ஆயிரம், லாயல்டி போனஸ் ரூ. 7 ஆயிரம் மற்றும் ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

     ஹோண்டா கார்

    ஹோண்டா WR-V - மே மாதத்துடன் ஒப்பிடும் போது இந்த மாதம் ஹோண்டா WR-V மாடலுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படுகிறது. அதன்படி கார் எக்சேன்ஜ் சலுகையில் ரூ. 10 ஆயிரம், லாயல்டி போனஸ் ரூ. 5 ஆயிரம் மற்றும் ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் ஹோண்டா கார் எக்சேன்ஜ் சலுகையாக ரூ. 7 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

    ஹோண்டா ஜாஸ் - இந்தியாவில் புதிய ஹோண்டா ஜாஸ் மாடலுக்கு ரூ. 33 ஆயிரத்து 158 வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ. 5 ஆயிரம் கேஷ் தள்ளுபடி அல்லது ரூ. 5 ஆயிரத்து 947 மதிப்புள்ள இலவச அக்சஸரீக்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் கார் எக்சேன்ஜ் சலுகையாக ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் ரூ. 7 ஆயிரம், லாயல்டி போனஸ் ரூ. 5 ஆயிரம், ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

     ஹோண்டா கார்

    ஹோண்டா சிட்டி (4th Gen) - 4th Gen ஹோண்டா சிட்டி மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ், ரூ. 7 ஆயிரம் ஹோண்டா கார் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. 

    ஹோண்டா அமேஸ்- ஹோண்டா அமேஸ் மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ், ரூ. 8 ஆயிரம் தள்ளுபடி மற்றும் ரூ. 3 ஆயிரம் காரப்பரேட் தள்ளுபடி உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது.
    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் விற்பனை 85 சதவீதம் அதிகரிப்பு. சமீபத்தில் டி.வி.எஸ். நிறுவனம் புதிய ஐகியூப் இ ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.

    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் மே மாத விற்பனையில் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. இந்திய சந்தையில் கடந்த மாதத்தில் மட்டும் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் 2 லட்சத்து 87 ஆயிரம் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து இருப்பதாக அறிவித்து உள்ளது. 

    கடந்த ஆண்டு மே மாதத்தில் மட்டும் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் 1 லட்சத்து 54 ஆயிரம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் விற்பனையில் 85 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. 

    டி.வி.எஸ். நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 1 லட்சத்து 91 ஆயிரம் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டு மே மாதத்தில் டி.வி.எஸ். நிறுவனம் 52 ஆயிரத்து 084 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

     டி.வி.எஸ். ஐகியூப்

    உள்நாட்டு விற்பனையில் அமோக வளர்ச்சி ஏற்பட்ட நிலையில் ஏற்றுமதியில் சரிவை சந்தித்து இருக்கிறது. கடந்த ஆண்டு மே மாதத்தில் டி.வி.எஸ். நிறுவனம் 1 லட்சத்து 02 ஆயிரம் யூனிட்களை ஏற்றுமதி செய்திருந்த நிலையில், கடந்த மாதம் 95 ஆயிரத்து 576 யூனிட்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டன. 

    டி.வி.எஸ். மோட்டார்சைக்கிள் விற்பனை கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும் போது 18.6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. டி.வி.எஸ். ஸ்கூட்டர்களை பொருத்தவரை கடந்த ஆண்டு மே மாதம் 19 ஆயிரத்து 627 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த மாதம் ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. 

    ×