search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hindustan Motors"

    • இந்துஸ்தான் மோட்டார்ஸ் மீண்டும் இந்திய சந்தையில் களமிறங்குகிறது.
    • புதிய ஹெச்.எம். காண்டெசா எலெக்ட்ரிக் வெளியீடு பற்றி புது தகவல் வெளியாகி உள்ளது.

    இந்தியாவில் மீண்டும் களமிறங்கும் பணிகளில் இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் தீவிரப்படுத்தி உள்ளது. முன்னதாக எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் அதிக கவனம் செலுத்த இருப்பதாகவும், அம்பாசடார் மாடல் புது மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தது.

    அந்த வரிசையில், இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் காண்டெசா பிராண்டிற்கான் காப்புரிமை கோரி விண்ணப்பித்து உள்ளது. இதன் மூலம் இந்திய சந்தையில் மீண்டும் காண்டெசா பிராண்டு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1980-க்களில் இந்திய சந்தையில் அதிக பிரபலமான கார் மாடல்களில் ஒன்றாக காண்டெசா விளங்கியது குறிப்பிடத்தக்கது.


    அதன்படி காண்டெசா பிராண்டை தூசி தட்டி இம்முறை எலெக்ட்ரிக் வடிவில் காண்டெசா கார் அறிமுகம் செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. ஹெச்.எம். காண்டெசா முற்றிலும் புது பவர்டிரெயின் மற்றும் சேசிஸ் கொண்டிருக்கும். இதன் பாடி மற்றும் இண்டீரியர்களும் புதிய தோற்றம் பெற்று இருக்கும் என தெரிகிறது.

    புதிய கார் பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் பவர்டிரெயின் என இருவித வேரியண்ட்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. காண்டெசா மாடலின் பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன், இன்றைய பாதுகாப்பு வழிமுறைகளுக்கு பொருந்தும் வகையிலான டிசைன் கொண்டிருக்கும். மொத்தத்தில் ஹெச்.எம். காண்டெசா ரெட்ரோ-மாடன் ஸ்டைல் கொண்டு இருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய அம்பாசடர் மாடலை தொடர்ந்து ஹெச்.எம். காண்டெசா வெளியீடும் நடைபெறும் என கூறப்படுகிறது. புதிய ஹெச்.எம். அம்பாசடர் மாடல் 2023 அல்லது 2024 வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம்.

    பிரபல அம்பாசடர் கார்களை விற்பனை செய்து வந்த இந்துஸ்தான் மோட்டார்ஸ் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    உலகளவில் நீண்ட காலம் உற்பத்தி செய்யப்பட்டு வந்த கார்களில் ஒன்று இந்துஸ்தான் அம்பாசடர். 1956-இல் தொடங்கி 2014 வரை அம்பாசடார் மாடல் சந்தையில் இருந்தது. அதன் பின் இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட கடுமையான புகை விதிகளை அடுத்து அம்பாசடர் மாடல் இந்த சந்தையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது.

    தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்துஸ்தான் மோட்டார்ஸ் மீண்டும் களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் ஐரோப்பிய நிறுவனத்துடன் கூட்டணி அமைப்பதாக கூறப்படுகிறது. இரு நிறுவனங்கள் கூட்டணியில் புதிதாக எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.

     அம்பாசடர் கார்

    இது தொடர்பாக இரு நிறுவனங்களிடையே அடுத்த ஆண்டு அதிகாகரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது. கொல்கத்தாவை அடுத்த உத்தர்பாராவில் உள்ள இந்துஸ்தான் மோட்டார்ஸ் உற்பத்தி ஆலையில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்ய முதற்கட்டமாக ரூ. 600 கோடி முதலீடு செய்ய இந்கதுஸ்தான் மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.

    இது பற்றிய முழு தகவல்கள் அடுத்த ஆண்டு அறிவிக்கப்படும் என தெரிகிறது. இந்துஸ்தான் மோட்டார்ஸ் அதிக இடவசதி கொண்டிருப்பதால், ஆலையை மாற்றி அமைத்து புது எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியை இங்கேயே துவங்க இருக்கிறது. இந்துஸ்தான் மோட்டார்ஸ் மட்டுமின்றி ஐரோப்பிய நிறுவனமும் தன்பங்கிற்கு முதலீடு செய்யும் என கூறப்படுகிறது.

    எனினும், இதுபற்றி இரு நிறுவனங்கள் தரப்பில் இதுவரை இறுதியான முடிவு எட்டப்படவில்லை. இது பற்றிய தகவல்கள் அடுத்த ஆண்டு அறிவிக்கப்படலாம். 
    ×