என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சக்திவாய்ந்த செட்டாக் ஸ்கூட்டரை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இந்நிலையில், பஜாஜ் நிறுவனம் சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கும் பணிகளை துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    புதிய சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கே.டி.எம். அல்லது ஹஸ்குவர்னா பிராண்டிங்கில் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் பற்றி அதிகளவு விவரங்கள் இல்லாத நிலையில், செட்டாக் பிளாட்ஃபார்மில் புதிய ஸ்கூட்டர் சக்திவாய்ந்த மாடலாக உருவாக்கப்படலாம் என கூறப்படுகிறது.

    பஜாஜ் செட்டாக்

    அதிக சக்திவாய்ந்த மாடல் என்பதால், இதில் செயல்திறன் மட்டுமின்றி அதிக தூரம் பயணிக்கும் வசதியும் வழங்கப்படலாம். இந்த ஸ்கூட்டரின் உற்பத்தி பணிகள் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலையும் அதிகமாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.

    கே.டி.எம். அல்லது ஹஸ்குவர்னா பிராண்டிங்கில் விற்பனை செய்யப்படும் என்பதால் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கூர்மையான வடிவமைப்பு, சிறப்பான ஹார்டுவேர் அம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.
    ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ கார் இந்திய விற்பனை துவங்கிய ஆறு மாதங்களில் 80,000 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.



    ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ கார் இந்தியாவில் 80,000 யூனிட்கள் விற்பனையை கடந்திருக்கிறது. இது விற்பனை துவங்கிய முதல் ஆறு மாதங்களுக்குள் ஹூண்டாய் எட்டியிருக்கிறது. இந்தியாவில் ஹூண்டாய் வென்யூ கார் இந்த ஆண்டு மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    அறிமுகமானது முதல் இந்திய சந்தையில் ஹூண்டாய் வென்யூ நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்திய சந்தையில் ஹூண்டாய் வென்யூ கார் விலை ரூ. 6.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    வென்யூ கார் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை எலைட் ஐ20 மற்றும் கிரெட்டா மாடல்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிதாக 1.0 லிட்டர் 3-சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.

    ஹூண்டாய் வென்யூ

    இந்த என்ஜின் 121 பி.ஹெச்.பி. பவர், 172 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு டி.சி.டி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    இந்தியாவில் ஹூண்டாய் வென்யூ கார் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு இகோஸ்போர்ட், மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 மற்றும் டாடா நெக்சான் கார்களுக்கு போட்டியாக அமைந்திருக்கிறது.
    ஜாவா நிறுவனத்தின் புதிய பெராக் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    ஜாவா நிறுவனம் பெராக் மோட்டார்சைக்கிள் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இதே மோட்டார்சைக்கிள் ரூ. 1.89 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் இது பி.எஸ். 6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு ரூ. 6000 விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    ஜாவா பெராக் மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு ஜனவரி 1, 2020 துவங்குகிறது. இதன் விநியோகம் ஏப்ரல் 2, 2020 துவங்கும் என ஜாவா நிறுவனம் தெரிவித்துள்ளது. முந்தைய ஜாவா மோட்டார்சைக்கிள்களும் இதேபோன்று தாமதமாகவே விநியோகம் செய்யப்பட்டது.

    ஜாவா பெராக்

    புதிய பெராக் மோட்டார்சைக்கிள் மேட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இது ஒற்றை இருக்கை கொண்ட மோட்டார்சைக்கிள் ஆகும். இதில் மிதக்கும் இருக்கை, பார்-எண்ட் கண்ணாடிகள், சாப்டு ஃபென்டர்கள், ஸ்டபி எக்சாஸ்ட் மஃப்ளர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ஜாவா பெராக் பாபர் மோட்டார்சைக்கிளில் பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்தும் 334சிசி, ஒற்றை சிலிண்டர், லிக்விட் கூல்டு, DOHC என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 30 ஹெச்.பி. பவர், 31 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் ஜாவா மற்றும் 42 மாடல்களில் உள்ளதை விட அளவில் பெரியதாக இருக்கிறது.

    ஜாவா மற்றும் 42 மாடல்கள் 27 ஹெச்.பி. பவர், 28 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. பெராக் மாடலில் வித்தியாசமான சப்-ஃபிரேம் மற்றும் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதில் மோனோஷாக் மற்றும் டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏ.பி.எஸ். வசதி வழங்கப்பட்டுள்ளது.
    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய 2020 ஸ்கார்பியோ காரில் டிரைவ் மோட் செலக்டர் அம்சம் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.



    2020 மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி புதிய காரில் டிரைவ் மோட் செலக்டர் எனும் அம்சம் வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. எனினும், இதில் எத்தனை டிரைவ் மோட்கள் வழங்கப்படும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

    இத்துடன் 2020 ஸ்கார்பியோ காரில் புதிய டேஷ்போர்டு வழங்கப்படுகிறது. இது தற்போதைய காரில் இருப்பதைவிட உயரமாகவும், அதிக வசதிகளையும் கொண்டிருக்கிறது. இது காருக்கு பிரீமியம் அனுபவத்தை வழங்கும் என தெரிகிறது. இதில் 9.0 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படலாம்.

    2020 மஹிந்திரா ஸ்கார்பியோ ஸ்பை படம்

    பெரும்பாலும் 9.0 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் டாப் எண்ட் மாடல்களில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பேஸ் வேரியண்ட்களில் 7.0 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படலாம்.

    2020 மஹிந்திரா ஸ்கார்பியோ மாடல் புதிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு பொருந்தும் வகையில் வெளியிடப்படும். அதன்படி இந்த காரில் புதிய லேடர் ஃபிரேம் சேசிஸ், புதிய பாடி பேனல்கள் வழங்கப்படலாம். இதில் நீண்ட வீல்பேஸ், கேபினில் அதிக இடவசதி வழங்கப்படலாம்.

    அடுத்த தலைமுறை ஸ்கார்பியோ காரில் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் 2.0 லிட்டர் டீசல் யூனிட் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 160 பி.ஹெச்.பி. பவர், 400 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கப்படலாம். இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    புகைப்படம் நன்றி: GaadiWaadi
    ஃபெராரி நிறுவனத்தின் புதிய ரோமா கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஃபெராரி நிறுவனம் முற்றிலும் புதிய ரோமா காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஃபெராரி ரோமா 2 பிளஸ் கூப் ஸ்போர்ட்ஸ் மாடலில் ஃபுல் எல்.இ.டி. அடாப்டிவ் ஹெட்லைட்கள், ஹாரிசான்டல் எல்.இ.டி. டி.ஆர்.எல்.களுடன் வருகிறது.

    இத்துடன் கார் நிறத்திற்கேற்ற கிரில், மெல்லிய எல்.இ.டி. டெயில் லைட்கள், நான்கு எக்சாஸ்ட் பைப்கள், பின்புற ஸ்பாயிலர், 20-இன்ச் ஐந்து ஸ்போக்களை கொண்ட அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. உள்புறம் 3-ஸ்போக் மற்றும் பல்வேறு அம்சங்களை இயக்க வழி செய்யும் ஸ்டீரிங் வீல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது.

    ஃபெராரி ரோமா

    புதிய ஸ்டீரிங் வீல் வாடிக்கையாளர்களை சாலையில் முழு கவனத்தை செலுத்த வழி செய்யும் அளவு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஓட்டுனர் கைகளை ஸ்டீரிங் வீலில் இருந்து எடுக்க வேண்டிய நிலை ஏற்படாது.

    புதிய ரோமா காரில் 3.9 லிட்டர் வி8 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 611 பி.ஹெச்.பி. பவர், 760 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 8-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.4 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 320 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

    ஃபெராரி புதிய ரோமா காரின் விலை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், இதன் விலை இரண்டு லட்சம் யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 1.58 கோடி) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
    ஸ்கோடா நிறுவனத்தின் ரேபிட் மாடல் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு அதிரடி சலுகை வழங்கப்படுகிறது.



    ஸ்கோடா நிறுவனம் தனது ரேபிட் மாடல்: ஆக்டிவ் எம்.டி., ஆம்பிஷன் எம்.டி. மற்றும் இதர சில வேரியண்ட்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி வழங்குகிறது. இந்த சலுகைகள் நவம்பர் மாதம் வரை மட்டும் வழங்கப்படுவதாக ஸ்கோடா தெரிவித்துள்ளது.

    அதன்படி ஸ்கோடா ரேபிட் டீசல் ஆக்டிவ் எம்.டி. மாடலுக்கு ரூ. 1.6 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. தள்ளுபடியை தொடர்ந்து இந்த கார் ரூ. 9 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று ஆம்பிஷன் எம்.டி. மாடலின் விலை ரூ. 1.30 லட்சம் குறைக்கப்பட்டு ரூ. 10 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    ஸ்கோடா ரேபிட்

    ஸ்டைல் எம்.டி. மாடல் ரூ. 1.58 லட்சம் விலை குறைக்கப்படு ரூ. 12.74 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆம்பிஷன் எம்.டி. மாடலின் விலை ரூ. 1.14 லட்சம் குறைக்கப்பட்டு ரூ. 12.50 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஸ்டைல் ஏ.டி. வேரியண்ட் விலை ரூ. 1.56 லட்சம் குறைக்கப்பட்டு ரூ. 12.44 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
    கிரயான் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.



    டெல்லியை சேர்ந்த கிரயான் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. கிரயான் என்வி என அழைக்கப்படும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிநவீன வடிவமைப்பில், பல்வேறு புதிய அம்சங்களை கொண்டிருக்கிறது.

    அதன்படி ஸ்கூட்டரின் முன்புறம் டூயல் ஹெட்லேம்ப் டிசைன், எல்.இ.டி. இன்டிகேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இளைஞர்களை கவரும் வகையில் ஸ்கூட்டரில் கூர்மையான கோடுகளும், கிரீஸ்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் உள்ள இருக்கைகள் பெரிதாக இருப்பதால், ஓட்டுபவருக்கு அதிக சவுகரியத்தை வழங்குகிறது.

    கிரயான் என்வி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    அம்சங்களை பொருத்தவரை புதிய ஸ்கூட்டரில் கீலெஸ் ஸ்டார்ட், சென்ட்ரல் லாக்கிங், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ரிவர்ஸ் அசிஸ்ட் போன்றவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஜியோ-டேகிங், மொபைல் சார்ஜிங், சைடு ஸ்டான்டு சென்சார், அலாய் வீல் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

    கிரயான் என்வி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 250 வாட் BLDC மோட்டார் மற்றும் 48 வோலட் VRLA பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 60 வோல்ட் லித்தியம் அயன் பேட்டரி பேக் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 70 கிலோமீட்டர் வரை செல்லும்.

    இந்த ஸ்கூட்டரின் முன்புறம் டிஸ்க் பிரேக், பின்புறம் டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. கிரயான் என்வி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இ-ஏ.பி.எஸ். வசதியுடன் வருகிறது. இத்துடன் இந்த ஸ்கூட்டர் சூப்பர் வைட், சூத்திங் புளூ மற்றும் ஃபெய்ஸ்டி ஆரஞ்சு போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
    பி.எம்.டபுள்யூ. நிறுவனம் சர்வதேச சந்தையில் புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

    பிரீமியம் மோட்டார்சைக்கிள்களைத் தயாரிக்கும் பி.எம்.டபுள்யூ. நிறுவனம் மூன்று மாடல்களில் புதிய மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது. அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவையாக இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. எஸ்.1000எக்ஸ்.ஆர்., எஃப்.900ஆர் மற்றும் எஃப்.900எக்ஸ்.ஆர். ஆகிய மாடல்கள் இதில் வந்துள்ளன.

    எஃப்.900ஆர். மற்றும் எஃப்.900எக்ஸ்.ஆர். மாடல்கள் சாகசப் பயணத்துக்கு ஏற்றவை. இரட்டை சிலிண்டரைக் கொண்டவை. இவற்றில் ஒன்று 895 சி.சி. திறனும் மற்றொன்று 853 சி.சி. திறனும் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்று 105 ஹெச்.பி. திறனை 8,750 ஆர்.பி.எம். வேகத்தில் வெளிப்படுத்தக் கூடியது. இதன் செயல்திறன் 92 என்.எம். டார்க் ஆகும். இது உலோக ஃபிரேமைக் கொண்டது. இதில் 13 லிட்டர் பெட்ரோல் கொள்ளளவு கொண்ட டேங்க் உள்ளது. டைனமிக் டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஏ.பி.எஸ். புரோ, டைனமிக் பிரேக் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

     பி.எம்.டபுள்யூ. எஸ்.1000எக்ஸ்.ஆர்.


    எஸ்.1000எக்ஸ்.ஆர். மாடலில் புதிய ரக என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. முந்தைய மாடலில் உள்ளதைக் காட்டிலும் எடை குறைவான அதேசமயம் செயல்திறன் மிக்கதாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இதன் எடை முந்தைய மாடலைக் காட்டிலும் 10 கிலோ குறைந்து 226 கிலோவாக உள்ளது. இது 165 ஹெச்.பி. திறனை 11,000 ஆர்.பி.எம். வேகத்திலும் 114 என்.எம். டார்க் @ 9,250 ஆர்.பி.எம். செயல்திறனை வெளிப்படுத்தக் கூடியது.

    டைனமிக் இ.எஸ்.ஏ., ரைடிங் மோட் புரோ, ஏ.பி.எஸ். புரோ, டி.டி.சி., ஹில் ஸ்டார்ட் கண்ட்ரோல் புரோ உள்ளது. நான்கு வித ஓட்டும் நிலைகள் உள்ளன. இதில் 6.5 அங்குல தொடுதிரை உள்ளது. சர்வதேச சந்தையைத் தொடர்ந்து இந்தியாவில் விரைவில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்படும் என இந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ராஸ் கார் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.



    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் கார் சோதனை செய்யப்படும் ஸ்பை படங்கள் மீண்டும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

    முன்னதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அல்ட்ராஸ் காரை ஜெனீவா மோட்டார் விழாவில் காட்சிப்படுத்தியது. ஏற்கனவே இந்த காரின் ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகின. புதிய ஸ்பை படங்களில் காரின் தோற்றம் ஜெனீவாவில் காட்சிப்படுத்தப்பட்ட மாடலை போன்றே இருக்கிறது.

    புதிய ஹேட்ச்பேக் மாடலில் ஷார்க் நோஸ் போன்ற முன்புறமும், ரேக்கெட் ஹணிகொம்ப் மெஷ் கிரில், மெல்லிய ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. டாடா அல்ட்ராஸ் பம்ப்பரில் ஃபாக் லேம்ப்கள், கீழ்புறம் பிளாக்டு-அவுட் செய்யப்பட்டுள்ளது. டாடாவின் இம்பேக்ட் 2.0 வடிவமைப்பில் அல்ட்ராஸ் கார் உருவாக்கப்பட்டுள்ளது.

    டாடா அல்ட்ராஸ் ஸ்பை படம்

    புதிய அல்ட்ராஸ் மாடலில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டிஜிட்டல் மல்டி-இன்ஃபோ டிஸ்ப்ளே, குரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேடிக் ஹெட்லேம்ப்கள் வழங்கப்படுகின்றன. பாதுகாப்பிற்கு டூயல் ஏர்பேக், ஏ.பி.எஸ்., இ.பி.டி., பின்புற பார்க்கிங் சென்சார்கள், ஹை-ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம் மற்றும் சீட் பெல்ட் வார்னிங் சிஸ்டம் போன்றவை வழங்கப்படுகிறது.

    அல்ட்ராஸ் காரில் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் வழங்கப்படலாம். இந்த என்ஜின்கள் ஏற்கனவே டியாகோ மற்றும் நெக்சான் கார்களில் வழங்கப்பட்டிருக்கிறது. 

    1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 83 பி.ஹெச்.பி. பவர், 114 என்.எம். டார்க் செயல்திறனும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் 98 பி.ஹெச்.பி. பவர், 140 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களுடன் 1.5 லிட்டர் டீசல் என்ஜன் ஆப்ஷனும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புகைப்படம் நன்றி: ZigWheels
    ஜீப் நிறுவனம் காம்பஸ் மாடல் காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1.6 லட்சம் வரையிலான சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.



    ஜீப் நிறுவனம் தனது காம்பஸ் காரின் வேரியண்ட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையை வழங்குவதாக தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் வேரியண்ட்களுக்கு ஏற்ப ஜீப் காம்பஸ் மாடலுக்கு ரூ. 1.6 லட்சம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.

    ஜீப் காம்பஸ் என்ட்ரி லெவல் ஸ்போர்ட் ட்ரிம் 4x2 டீசல் மாடலை வாங்குவோருக்கு ரூ. 1.6 லட்சம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதன் பெட்ரோல் வேரியண்ட்டை வாங்குவோருக்கு ரூ. 70,000 மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படுகிறது. ஸ்போர்ட் பிளஸ் டீசல் மாடலை வாங்குவோருக்கு ரூ. 1.1 லட்சமும், பெட்ரோல் மாடலுக்கு ரூ. 50,000 பலன்கள் வழங்கப்படுகிறது.

    ஜீப் காம்பஸ்

    இதேபோன்று லாங்கிடியூட் மற்றும் லிமிட்டெட் ட்ரிம் டீசல் மேனுவல் 4x2 மாடலுக்கு ரூ. 1.4 லட்சம், லிமிட்டெட் மாடலுக்கு ரூ. 1.40 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் லிமிட்டெட் பிளஸ், லிமிட்டெட் பிளஸ் 4x4 மற்றும் டிரெயில்ஹாக் மாடல்களுக்கு பொருந்தாது.

    ஜீப் காம்பஸ் மாடல்: 173 ஹெச்.பி. செயல்திறன் வழங்கும் 2.0 லிட்டர் டர்போ டீசல், 163 ஹெச்.பி. செயல்திறன் வழங்கும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என இரு என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த பி.எஸ். 4 என்ஜின்களுக்கு 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. பி.எஸ். 6 வேரியண்ட் 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் யூனிட் கொண்டிருக்கிறது.

    அடுத்த ஆண்டு வாக்கில் ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பி.எஸ். 6 டீசல் என்ஜினுடன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் டிரெயில்ஹாக் வேரியண்ட்களுக்கு 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம். இதேபோன்று 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் பி.எஸ். 6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
    ஹோண்டா நிறுவனம் சர்வதேச சந்தையில் இரண்டு புதிய பிரீமயிம் மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது.



    இரு சக்கர வாகன உற்பத்தியில் சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் ஜப்பானைச் சேர்ந்த ஹோண்டா நிறுவனம் இத்தாலியின் மிலான் நகரில் நடைபெறும் சர்வதேச கண்காட்சியில் (இ.ஐ.சி.எம்.ஏ.) தனது இரண்டு மாடல் மோட்டார்சைக்கிள் மாடல்களை காட்சிப்படுத்தியுள்ளது. 

    சி.பி.ஆர்.1000ஆர்.ஆர்.ஆர். பயர்பிளேட் மற்றும் பயர்பிளேட் எஸ்.பி. மாடல் மோட்டார் சைக்கிள்கள் காண்போரை வெகுவாக கவர்ந்திழுத்தது. பொதுவாக இதுபோன்ற சர்வதேச கண்காட்சிகளில் காட்சிப்படுத்தப்படும் புதிய மாடல் மோட்டார்சைக்கிள்கள் விரைவில் சந்தைக்கு வரும் என்பதால் இதைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    முந்தைய மாடலைக் காட்டிலும் இதன் முன்புறம் மிகச் சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. சிறிய இரட்டை ஹெட்லைட் அதன் நடுப்பகுதியில் காற்று சென்று திரும்பும் வகையிலான வடிவமைப்பு, சாவி தேவைப்படாத அதாவது பொத்தானை இயக்குவதன் மூலம் செயல்படும் வகையில் இந்த மோட்டார்சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. 

    ஹோண்டா சி.பி.ஆர்.1000 ஆர்.ஆர். ஃபயர்பிளேட்

    இந்த மோட்டார்சைக்கிளில் 999.9 சி.சி. திறன் கொண்ட லிக்விட் கூல்டு, நான்கு சிலிண்டர் என்ஜின் உள்ளது. இது 214 பி.ஹெச்.பி. @ 14,500 ஆர்.பி.எம்., 113 என்.எம். டார்க் @ 12,500 ஆர்.பி.எம். செயல்திறனை வெளிப்படுத்தக் கூடியது. முந்தைய மாடலைக் காட்டிலும் இதன் எடை 5 கிலோ அதிகரித்து தற்போது 201 கிலோவாக உள்ளது. இதில் அக்ரபோவிக் சைலன்ஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    இது வித்தியாசமான சத்தத்தை ஏற்படுத்தும் வகையிலானது. இதன் என்ஜின் வடிவமானது மோட்டோ ஜி.பி. பைக்குகளில் உள்ளதைப் போன்று உள்ளது. இது 81 மி.மீ. மற்றும் 48.5 மி.மீ. அளவினதாக உருவாக்கப்பட்டுள்ளது. இது 6 கியர்களைக் கொண்டுள்ளது. இதன் சேஸிஸ் அலுமினியத்தால் ஆனது. ஸ்திரமாக ஓடுவதற்கு வசதியாக 1,455 மி.மீ. விட்டமுடைய சக்கரங்களைக் கொண்டுள்ளது.

    முன்புறம் பி.பி.எஃப். ஃபோர்க் மற்றும் பி.எஃப்.ஆர்.சி. மோனோ ஷாக் அப்சார்பர்களைக் கொண்டுள்ளது. இரண்டு சக்கரங்களுமே டிஸ்க் பிரேக் வசதி கொண்டவையாகும். 9 நிலைகளிலான டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஏ.பி.எஸ். வசதி உள்ளது. இதன் முன்புறம் 5 அங்குல தொடு திரை உள்ளது. இந்த இரு மாடலுமே கண்கவர் வண்ணத்தில் வெளிவர உள்ளன. 

    முதலில் சர்வதேச சந்தையிலும், அதைத் தொடர்ந்து இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அறிமுகத்தின்போது விலை விவரங்கள் வெளியிடப்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
    எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் புதிய கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



    சீன ஆட்டோமொபைல் நிறுவனமான எம்.ஜி. மோட்டார் ரீ-பிராண்டு செய்யப்பட்ட டி90 எஸ்.யு.வி. மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், இந்த கார் சோதனை செய்யப்படும் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

    புதிய எம்.ஜி. டி90 மேக்சஸ் டி60 பிக்கப் டிரக் வாகனத்தை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஸ்பை படங்களின் படி புதிய டி90 காரில் இன்வெர்ட் செய்யப்பட்ட ஹெக்சாகோனல் முன்புற கிரில், எல்.இ.டி. ஹெட்லேம்ப், ஃபாக் லேம்ப் கிளஸ்டர், மல்டி-ஸ்போக் அலாய் வீல், பின்புறம் கிடைமட்டமாக பொருத்தப்பட்ட எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    எம்.ஜி. டி90 ஸ்பை படம்

    எம்.ஜி. டி90 மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்படலாம். இவை முறையே 223 பி.ஹெச்.பி. பவர், 360 என்.எம். டார்க் மற்றும் 175 பி.ஹெச்.பி. பவர், 400 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகின்றன. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மற்றும் 4-வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படலாம்.

    காரின் உள்புறத்தில் 12.3 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி, பானரோமிக் சன்ரூஃப், 3-சோன் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பாதுகாப்பிற்கு எம்.ஜி. டி90 மாடலில் ஏ.பி.எஸ். இ.பி.டி., ஹில் அசிஸ்ட் சிஸ்டம், ஐசோஃபிக்ஸ் சைல்டு லாக், ஆறு ஏர்பேக், 360 டிகிரி கேமரா, ஜியோ ஃபென்சிங் போன்ற வசதிகள் வழங்கப்படலாம்.

    புகைப்படம் நன்றி: Team-BHP
    ×