search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்தியாவில் தனது இரண்டாவது உற்பத்தி ஆலையை கட்டமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஓசூரில் தனது இரண்டாவது உற்பத்தி ஆலையை கட்டமைக்கிறது. ஏத்தர் 450 எக்ஸ் மற்றும் ஏத்தர் 450 பிளஸ் மாடல்களுக்கு கிடைத்திருக்கும் அமோக வரவேற்பு காரணமாக புதிய ஆலை கட்டமைக்கப்படுகிறது. 

    இந்த ஆலை முழு வீச்சில் செயல்பாட்டுக்கு வரும் போது ஏத்தர் நிறுவனத்தால் ஆண்டுக்கு நான்கு லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்ய முடியும். தற்போது ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஆண்டுக்கு 1,20,000 யூனிட்களை உற்பத்தி செய்து வருகிறது. இதே ஆலையில் லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தியில் கவனம் செலுத்தப்பட இருக்கிறது.

     ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    நவம்பர் 2020 முதல் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் மாதாந்திர விற்பனையில் 20 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து வருவதாக தெரிவித்து இருக்கிறது. நிர்வாகம் மற்றும் உற்பத்தி திறன் பிரிவுகளில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ரூ. 650 கோடிகளை முதலீடு செய்ய திட்டமிட்டு இருக்கிறது. மேலும் புது சந்தைகளில் களமிறங்கவும் ஏத்தர் எனர்ஜி திட்டமிட்டு இருக்கிறது.
    பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் கான்செப்ட் எக்ஸ்.எம். மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
     

    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் புதிய கான்செப்ட் கார் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த கார் கான்செப்ட் எக்ஸ்.எம். என அழைக்கப்படுகிறது. புதிய எலெக்ட்ரிக் கான்செப்ட் எஸ்.யு.வி. அடுத்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இந்த கார் பிளக்-இன் ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனமாக விற்பனைக்கு வர இருக்கிறது.

    பி.எம்.டபிள்யூ. கான்செப்ட் எக்ஸ்.எம். மாடலில் வி8 என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார்கள் உள்ளன. இவை இணைந்து 750 பி.ஹெச்.பி. திறன், 1000 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இதன் ஆல்-எலெக்ட்ரிக் ரேன்ஜ் அதிகபட்சம் 80 கிலோமீட்டர்கள் ஆகும். பி.எம்.டபிள்யூ. எம் வரலாற்றில் மிகவும் சக்திவாய்ந்த மாடல் இது ஆகும். 

     பி.எம்.டபிள்யூ. கான்செப்ட் எக்ஸ்.எம். இ.வி.

    பி.எம்.டபிள்யூ. கான்செப்ட் எக்ஸ்.எம். மாடலில் பெரிய கிட்னி கிரில்கள், மெல்லிய ஹெட்லேம்ப்கள், இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல், எல்.இ.டி. ஹெட்லைட்கள், 23 இன்ச் வீல்கள் உள்ளன. இதன் பின்புறம் நான்-மடங்கு எக்சாஸ்ட் டிப்கள் உள்ளன.

    மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.300 இ.வி. மாடல் இந்த பெயரில் விற்பனைக்கு அறிமுகமாகும் என கூறப்படுகிறது.


    மஹிந்திரா நிறுவனம் பல்வேறு பயணிகள் வாகனங்களை புதிதாக உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதில் 13 புதிய கார்கள், எட்டு எலெக்ட்ரிக் வாகனங்கள் அடங்கும். இவை அனைத்தையும் 2027 ஆம் ஆண்டுக்குள் அறிமுகம் செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

    இந்த நிலையில், மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 மாடலின் எலெக்ட்ரிக் வேரியண்ட் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார் எக்ஸ்.யு.வி.400 பெயரில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. 

     மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300

    மஹிந்திரா குழுமத்தின் ஆட்டோ மற்றும் ஃபார்ம் பிரிவு நிர்வாக இயக்குனர் ராஜேஷ் ஜெஜுரிக்கர் செய்தியாளர்களுடன் உரையாடும் போது எக்ஸ்.யு.வி.300 இ.வி. மாடல் எக்ஸ்.யு.வி.400 பெயரில் அறிமுகம் செய்வது பற்றி பரிசீலனை செய்யப்படுகிறது என தெரிவித்தார். எனினும், இதுபற்றிய இறுதி முடிவு எட்டப்படவில்லை.

    முன்னதாக எக்ஸ்.யு.வி.400 பெயரில் மிட்-சைஸ் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்ய மஹிந்திரா திட்டமிட்டது. இந்த மாடல் போர்டு நிறுவனத்தின் பி பிளாட்பார்மில் உருவாகும் என்றும் கூறப்பட்டது. பின் மஹிந்திரா மற்றும் போர்டு நிறுவனங்கள் இடையிலான கூட்டணி அமையாத காரணத்தால், எக்ஸ்.யு.வி.300 இ.வி. மாடலை எக்ஸ்.யு.வி.400 பெயரில் அறிமுகம் செய்வது பற்றிய ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    கவாசகி நிறுவனம் அடுத்த ஆண்டில் மூன்று எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


    கவாசகி நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் கவாசகி நிறுவனம் மூன்று புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    இதைத் தொடர்ந்து 2025 ஆண்டு வாக்கில் மேலும் ஏழு எலெக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக கவாசகி நிறுவனம் தனது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் ப்ரோடோடைப் மாடல் வீடியோவை வெளியிட்டது. 

     கவாசகி எலெக்ட்ரிக் வாகனம்

    இதைத் தொடர்ந்து ஹைப்ரிட் சிஸ்டம் கொண்ட மாடலின் வீடியோவையும் கவாசகி வெளியிட்டு இருக்கிறது. இந்த ஆண்டு மே மாதத்தில் கவாசகி நிறுவனம் இ பூஸ்ட் எனும் பெயரை பயன்படுத்துவதற்கான காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
    சியோமி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய கார் உற்பத்தி ஆலையில் ஆண்டுக்கு 3 லட்சம் யூனிட்கள் உற்பத்தி செய்ய முடியும் என தகவல் வெளியாகி உள்ளது.


    சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி பீஜிங் நகரில் புதிதாக கார் உற்பத்தி ஆலையை கட்டமைத்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ஆலையில் சியோமி எலெக்ட்ரிக் கார்கள் உற்பத்தி செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 

    இரண்டு கட்டங்களாக சியோமி உற்பத்தி ஆலை உருவாக்கப்படுகிறது. இதுதவிர தலைமையகம், விற்பனை, ஆய்வு பணிகளுக்கான அலுவலகங்களை சியோமி கட்டமைக்க இருக்கிறது. 2024 ஆம் ஆண்டு இந்த ஆலை முழு வீச்சில் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது. 

    புதிய எலெக்ட்ரிக் கார் பிரிவில் சியோமி நிறுவனம் ஆயிரம் கோடி டாலர்களை முதலீடு செய்ய இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் புதிய வியாபரத்தை சியோமி பதிவு செய்தது.
    சுசுகி நிறுவனம் முற்றிலும் புதிய எஸ் கிராஸ் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.


    சுசுகி நிறுவனத்தின் புதிய எஸ் கிராஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் மேம்பட்ட குளோபல் சி பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது முந்தைய மாடலை விட அதிகளவு எஸ்.யு.வி. போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது.

    இந்த காரின் முன்புறம் கிளாஸ்-பிளாக் கிரில் மற்றும் எல்.இ.டி. ஹெட்லைட்கள் உள்ளன. இவை காரின் தோற்றத்தை பிரம்மாண்டமாக வெளிப்படுத்துகின்றன. பக்கவாட்டில் இந்த கார் முந்தைய மாடலை விட பெரிதாக காட்சியளிக்கிறது. பின்புறம் ராப்-அரவுண்ட் டெயில் லேம்ப்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட ரூப் ஸ்பாயிலர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. 

     சுசுகி எஸ் கிராஸ்

    புதிய சுசுகி எஸ் கிராஸ் மாடலில் 1.4 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் மற்றும் மைல்டு-ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 125.2 பி.ஹெச்.பி. திறன், 235 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

    இந்த காரில் 360 டிகிரி சரவுண்ட்-வியூ கேமரா, 9 இன்ச் இன்போடெயின்மெண்ட் யூனிட், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, முன்புறம் ஹீட்டெட் சீட்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் உள்ளன. 

    இத்துடன் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம், டிரைவர் அசிஸ்டன்ஸ், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட், கிராஸ்-டிராபிக் அலெர்ட், எமர்ஜென்சி ஆட்டோனோமஸ் பிரேக்கிங் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
    நிசான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் இந்திய விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளது.


    நிசான் நிறுவனத்தின் மேக்னைட் எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் 30 ஆயிரம் யூனிட்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிசான் மேக்னைட் மாடலை வாங்க இதுவரை சுமார் 72 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

    விற்பனை மைல்கல்லை கொண்டாடும் வகையில், மேக்னைட் எஸ்.யு.வி. மாடலின் 30 ஆயிரத்து யூனிட்டை நிசான் நிறுவன மூத்த அதிகாரி குயிலாம் கார்டியர் வாடிக்கையாளரிடம் வழங்கினார். நிசான் மேக்னைட் மாடல் சி.எம்.எப். ஏ பிளஸ் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

     நிசான் மேக்னைட்

    இந்த பிரிவில் மிகவும் எடை குறைந்த கார் என்ற போதிலும் நிசான் மேக்னைட் ஏ.எஸ்.இ.ஏ.என். என்.சி.ஏ.பி. பாதுகாப்பு சோதனையில் நான்கு நட்சத்திர குறியீடுகளை பெற்று அசத்தியது. நிசான் மேக்னைட் மாடல் 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின், டர்போ சார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய ஸ்கிராம் 411 மோட்டார்சைக்கிள் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.


    ராயல் என்பீல்டு நிறுவனம் அடுத்த சில மாதங்களில் பல்வேறு புது மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அடுத்த மாடல் ஹிமாலயன் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை தழுவி உருவாகி இருக்கும் சற்றே குறைந்த விலை/ரோடு சார்ந்த வேரியண்ட் என கூறப்படுகிறது.

    புதிய ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாடல் ஸ்கிராம் 411 எனும் பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. 

     ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்

    ஸ்கிராம் 411 மாடலை தொடர்ந்து மேலும் சில புதிய மாடல்களை 2022 ஆண்டில் அறிமுகம் செய்ய ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. தோற்றத்தில் ஸ்கிராம் 411 மாடல் ஹிமாலயன் அட்வென்ச்சர் மாடலை போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது.
    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் அசத்தல் நிதி சலுகைகளை வழங்க வங்கியுடன் கூட்டணி அமைத்துள்ளது.


    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இண்டஸ்இண்ட் வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. அதன்படி டொயோட்டா வாடிக்கையாளர்களுக்கு இண்டஸ்இண்ட் வங்கி சார்பில் அசத்தலான நிதி சலுகைகள் வழங்கப்பட இருக்கின்றன.

    இண்டஸ்இண்ட் வங்கி டொயோட்டா கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையின் பேரில் மிக குறைந்த வட்டி வழங்குகிறது. இந்த சலுகை தனியார் மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கான கார்களுக்கும் பொருந்தும். இண்டஸ்இண்ட் டொயோட்டா விற்பனையாளர்களுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு நிதி சலுகைகளை வழங்குகிறது.

     டொயோட்டா கார்

    "கிளான்சா மற்றும் அர்பன் குரூயிசர் மாடல்களால் பி பிரிவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதிகரித்து வரும் வரவேற்பை தொடர்ந்து வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்த டொயோட்டா வாகனங்களை நாடு முழுக்க கொண்டு சேர்க்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்," என டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவன விற்பனை மற்றும் விளம்பர பிரிவு இணை மேலாளர் வைஸ்லைன் சிகாமணி தெரிவித்தார்.
    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஆஸ்டர் மிட்-சைஸ் எஸ்.யு.வி. மாடல் வினியோக திட்டத்தில் மாற்றம் செய்து இருக்கிறது.


    எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது ஆஸ்டர் மிட்-சைஸ் எஸ்.யு.வி. மாடல் விலையை அக்டோபர் 11 ஆம் தேதி அறிவித்தது. இந்த மாடலுக்கான முன்பதிவுகள் அக்டோபர் 21 ஆம் தேதி துவங்கியது. இந்த காரில் மிட்-சைஸ் எஸ்.யு.வி. பிரிவில் பல்வேறு முதல் முறை அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    சர்வதேச சந்தையில் நிலவும் சிப் மற்றும் செமிகண்டக்டர்களுக்கான தட்டுப்பாடு காரணமாக எம்ஜி ஆஸ்டர் வினியோகம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை விட தாமதம் ஆகும் என எம்ஜி மோட்டார் இந்தியா மூத்த அதிகாரி கவுரவ் குப்தா தெரிவித்தார். 

     எம்ஜி ஆஸ்டர்

    இந்தியாவில் எம்ஜி ஆஸ்டர் ஸ்டைல் மற்றும் சூப்பர் வேரியண்ட்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்து இருக்கிறது. புதிய ஆஸ்டர் மாடல் வினியோகம் பற்றிய அப்டேட்களை மை எம்ஜி ஆப் அல்லது அருகாமையில் உள்ள விற்பனை மையங்களில் அறிந்து கொள்ளலாம். 

    எம்ஜி மோட்டார் நிறுவனம் முதற்கட்டமாக 5 ஆயிரம் ஆஸ்டர் யூனிட்களை இந்த ஆண்டு இறுதிக்குள் வினியோகம் செய்ய திட்டமிட்டு இருந்தது. எனினும், இவை அடுத்த ஆண்டு தான் வினியோகம் செய்யப்படும் என தெரிகிறது.

    வோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல் விலையை திடீரென உயர்த்தி இருக்கிறது.


    வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டைகுன் எஸ்.யு.வி. மாடல் விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் வோக்ஸ்வேகன் டைகுன் மாடல்- கம்ஃபர்ட்லைன், ஹைலைன், டாப்லைன், ஜிடி மற்றும் ஜிடி பிளஸ் என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது. 

    இவற்றில் கம்ஃபர்ட்லைன் வேரியண்ட் விலை ரூ. 5200 உயர்த்தப்பட்டு இருக்கிறது. மற்ற வேரியண்ட்களின் விலை ரூ. 4300 உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக வோக்ஸ்வேகன் டைகுன் மாடல் இந்திய சந்தையில் 18 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகளை கடந்ததாக வோக்ஸ்வேகன் அறிவித்து இருந்தது. 

    வோக்ஸ்வேகன் டைகுன்

    இந்தியாவில் புதிய வோக்ஸ்வேகன் காரை பெற குறைந்தபட்சம் இரண்டு மாதங்களுக்கும் மேல் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வோக்ஸ்வேகன் டைகுன் மாடல் எம்.கியூ.பி. ஏ.ஒ. ஐ.என். பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. 

    டைகுன் மாடல் 1 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை 147 பி.ஹெச்.பி. திறன், 178 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் 1.5 லிட்டர் என்ஜின் 148 பி.ஹெச்.பி. திறன், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
    பவுன்ஸ் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    பவுன்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - இன்பினிட்டி பெயரில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய பவுன்ஸ் இன்பினிட்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டிசம்பர் 2 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.

    இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் அறிமுக நிகழ்வை தொடர்ந்து துவங்க இருக்கிறது. வினியோகம் அடுத்த ஆண்டு துவங்குககிறது. புதிய பவுன்ஸ் இன்பினிட்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

     பவுன்ஸ் இன்பினிட்டி

    பவுன்ஸ் நிருவனம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் ஆலையை ராஜஸ்தான் மாநிலத்தில் கட்டமைத்து இருக்கிறது. தென்னிந்தியாவில் மற்றொரு ஆலையை கட்டமைத்து உற்பத்தியை அதிகப்படுத்தவும் பவுன்ஸ் திட்டமிட்டு இருக்கிறது.
    ×