என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
இரண்டாவது உற்பத்தி ஆலையை கட்டமைக்கும் ஏத்தர் எனர்ஜி
Byமாலை மலர்30 Nov 2021 9:59 AM GMT (Updated: 30 Nov 2021 9:59 AM GMT)
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்தியாவில் தனது இரண்டாவது உற்பத்தி ஆலையை கட்டமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஓசூரில் தனது இரண்டாவது உற்பத்தி ஆலையை கட்டமைக்கிறது. ஏத்தர் 450 எக்ஸ் மற்றும் ஏத்தர் 450 பிளஸ் மாடல்களுக்கு கிடைத்திருக்கும் அமோக வரவேற்பு காரணமாக புதிய ஆலை கட்டமைக்கப்படுகிறது.
இந்த ஆலை முழு வீச்சில் செயல்பாட்டுக்கு வரும் போது ஏத்தர் நிறுவனத்தால் ஆண்டுக்கு நான்கு லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்ய முடியும். தற்போது ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஆண்டுக்கு 1,20,000 யூனிட்களை உற்பத்தி செய்து வருகிறது. இதே ஆலையில் லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தியில் கவனம் செலுத்தப்பட இருக்கிறது.
நவம்பர் 2020 முதல் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் மாதாந்திர விற்பனையில் 20 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து வருவதாக தெரிவித்து இருக்கிறது. நிர்வாகம் மற்றும் உற்பத்தி திறன் பிரிவுகளில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ரூ. 650 கோடிகளை முதலீடு செய்ய திட்டமிட்டு இருக்கிறது. மேலும் புது சந்தைகளில் களமிறங்கவும் ஏத்தர் எனர்ஜி திட்டமிட்டு இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X