search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
    X
    ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    இரண்டாவது உற்பத்தி ஆலையை கட்டமைக்கும் ஏத்தர் எனர்ஜி

    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்தியாவில் தனது இரண்டாவது உற்பத்தி ஆலையை கட்டமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஓசூரில் தனது இரண்டாவது உற்பத்தி ஆலையை கட்டமைக்கிறது. ஏத்தர் 450 எக்ஸ் மற்றும் ஏத்தர் 450 பிளஸ் மாடல்களுக்கு கிடைத்திருக்கும் அமோக வரவேற்பு காரணமாக புதிய ஆலை கட்டமைக்கப்படுகிறது. 

    இந்த ஆலை முழு வீச்சில் செயல்பாட்டுக்கு வரும் போது ஏத்தர் நிறுவனத்தால் ஆண்டுக்கு நான்கு லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்ய முடியும். தற்போது ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஆண்டுக்கு 1,20,000 யூனிட்களை உற்பத்தி செய்து வருகிறது. இதே ஆலையில் லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தியில் கவனம் செலுத்தப்பட இருக்கிறது.

     ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    நவம்பர் 2020 முதல் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் மாதாந்திர விற்பனையில் 20 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து வருவதாக தெரிவித்து இருக்கிறது. நிர்வாகம் மற்றும் உற்பத்தி திறன் பிரிவுகளில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ரூ. 650 கோடிகளை முதலீடு செய்ய திட்டமிட்டு இருக்கிறது. மேலும் புது சந்தைகளில் களமிறங்கவும் ஏத்தர் எனர்ஜி திட்டமிட்டு இருக்கிறது.
    Next Story
    ×