என் மலர்tooltip icon
    TNLGanesh

    About author
    அச்சு ஊடக துறையில் 12 வதுஆண்டு பயணம். மலை பயணமும்,மழையில் பயணமும் பிடித்தமான ஒன்று. படைப்பியலில் அதிக ஆர்வம் . இயற்கையின் அழகை தனிமையில் ரசிக்க பிடிக்கும். நகர்வுகளை கண்டறிய பிடிக்கும். நான் தமிழின் மூத்த மகன் என்பதில் பெருமை.
      • தே.மு.தி.க. மாநில தேர்தல் பணி செயலாளர் தங்கமணி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
      • ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500 பேர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

      ஆலங்குளம்:

      தி.மு.க. அரசை கண்டித்தும், அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி தெற்கு, வடக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் தென்காசியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

      தென்காசி தெற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் பழனிசங்கர், வடக்கு மாவட்ட செயலாளர் சோலை கனகராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில தேர்தல் பணி செயலாளர் தங்கமணி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

      தெற்கு மாவட்ட அவை தலைவர் சுரண்டை சங்கரலிங்கம், வடக்கு மாவட்ட அவை தலைவர் கடையநல்லூர் சரவணன், பொருளாளர்கள் வக்கீல் சந்துரு சுப்பிரமணியன் (தெற்கு), ராமர் (வடக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட நகர செயலாளர் பேச்சி வரவேற்று பேசினார்.

      ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், அவைத் தலைவர்கள், பொருளாளர்கள், நிர்வாகிகள், நகர செயலாளர், பொருளாளர்கள், நிர்வாகிகள், பேரூர் நிர்வாகிகள் மற்றும் பிற அணி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட சுமார் 500 பேர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். முடிவில் தென்காசி தெற்கு மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சுடலைமணி நன்றி கூறினார்.

      • நீட் தேர்வில் 572 மதிப்பெண்கள் பெற்ற முருகராஜிக்கு விருதுநகர் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது.
      • முருகராஜிக்கு முதற்கட்டமாக தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

      சங்கரன்கோவில்:

      சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியம் நவநீதகிருஷ்ணாபுரம் கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளியான சண்முகச்சாமி-வள்ளியம்மாள் தம்பதியினரின் மகன் முருகராஜ் நீட் தேர்வில் 572 மதிப்பெண்கள் பெற்று விருதுநகர் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது. அதைத்தொடர்ந்து முருகராஜிக்கு முதற்கட்டமாக தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

      தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கல்வி செலவுக்காக ரூ.10 ஆயிரமும், மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை ரூ.10 ஆயிரமும், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் காசிராஜன் ரூ.5 ஆயிரமும் வழங்கினர். மேலும் வரும் காலங்களிலும் கல்வி உதவித்தொகை அளிக்கப்படும் என்பதையும் ராஜா எம்.எல்.ஏ. தெரிவித்து மருத்துவ கல்லூரி மாணவர் முருகராஜை ஊக்கப்படுத்தினார்.

      • பக்தர்கள் 10 நாட்கள் வரை கோவிலில் தங்கியிருந்து அய்யனாரை வழிபட்டு வருவது தொன்று தொட்டு இருந்து வருகிறது.
      • முந்தைய காலங்களில் எல்லாம் வனத்துறையினர் எந்த நெருக்கடியும் தராமல் சிறப்பு அனுமதி வழங்கி வந்துள்ளனர்.

      ஆலங்குளம்:

      ஆடி அமாவாசை திருவிழா விற்காக, காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு, உரிய அனுமதியும், பாதுகாப்பும் வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு, முன்னாள் எம்.பி. எஸ்.எஸ்.ராமசுப்பு கோரிக்கை விடுத்துள்ளார்.

      இதுகுறித்து அவர் நெல்லை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி யுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

      ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் மட்டுமன்றி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு வந்து, குடில் அமைத்து, அங்கே 5 முதல் 10 நாட்கள் வரை தங்கியிருந்து, ஆற்றில் புனித நீராடி, தங்கள் நேர்த்தி கடன்களை செலுத்தி அய்யனாரை வழிபட்டு வருவது தொன்று தொட்டு இருந்து வருகிறது.

      முந்தைய காலங்களில் எல்லாம் வனத்துறையினர் எந்த நெருக்கடியும் தராமல் சிறப்பு அனுமதி வழங்கி வந்துள்ளனர். பொதுமக்களும் காட்டுப் பகுதிகளில் எந்த சேதமும், அங்கு வாழும் மிருகங்களுக்கு எந்த பங்கமும் ஏற்படுத்தவில்லை.

      எனவே, வழக்கம்போல் பொதுமக்கள் கோவிலுக்கு சென்று தங்கி இருந்து சுவாமி தரிசனம் செய்து வர உரிய அனுமதி வழங்கவும், உரிய பாதுகாப்பும் வழங்க வேண்டும்.

      இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

      • சுப்பிரமணியன் தனது மொபட்டில் நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
      • விபத்தில் தூக்கி வீசப்பட்ட சுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார்.

      தென்காசி:

      தென்காசி அருகே உள்ள வேட்டைக்காரன் குளத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 50). கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை தனது மொபட்டில் நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை யில் சென்று கொண்டிருந்தார்.

      அப்போது எதிரே வந்த தென்காசியில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு சொந்தமான வேன், சுப்பிரமணியன் மொபட் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சுப்பிரமணியன் படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் ஓட்டி வந்த மொபட்டும் பலத்த சேதம் அடைந்தது. இதுகுறித்து அறிந்த குற்றாலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பள்ளி வேன் டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

      • முருகன் உடல்நலக்குறைவு தொடர்பாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
      • பெற்றோர், உறவினர்கள் கோவிலுக்கு சென்றுவிட்டதால், முருகன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

      சிவகிரி:

      சிவகிரி கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் கனியப்பன். இவரது மனைவி காளியம்மாள். இவர்களது 2-வது மகன் முருகன்(வயது 30). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் உடல்நலக்குறைவு தொடர்பாக நெல்லையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

      இந்நிலையில் நேற்று அவரது பெற்றோர், உறவினர்கள் கோவிலுக்கு சென்றுவிட்டதால், முருகன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மாலையில் பெற்றோர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது முருகன் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். தகவல் அறிந்த சிவகிரி போலீசார் அங்கு விரைந்து சென்று முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

      • ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கான அரசாணை கடந்த 7.12.2022-ம் ஆண்டு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
      • பரிந்துரைக்கப்பட்ட இடத்தில் நீதிமன்றமும், நீதிபதிகள் குடியிருப்பும் அமைவதற்கு ஆவணம் செய்ய வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

      தென்காசி:

      தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கலெக்டர் ரவிச்சந்திரனை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

      தென்காசி மாவட்டத்தில் அமைய இருக்கிற ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் மற்றும் குடியிருப்புககுக்கான இடம் ஆய்க்குடி கிராமம் சர்வே எண் 84-ல் 5.54 ஹெக்டேர் மற்றும் சர்வே எண் 97-ல் 1.95 ஹெக்டேர் ஆக மொத்தம் 18.5 ஏக்கர் நிலம் நீதிமன்றம் கட்டிடம் கட்டுவதற்காக பரிந்துரைக்கப்பட்டது. ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கான அரசாணை கடந்த 7.12.2022-ம் ஆண்டு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசாணை எண் 917 ஆகும்.

      தற்போது நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்கு பரிந்துரைக்கப்பட்ட இடத்தில் பிற கட்டிடங்கள் கட்டுவதற்கு பரிந்துரைக்கப்பட்டதாக அறிகிறோம். ஏற்கனவே மேற்கண்ட இடத்தில் நீதிமன்றமும், நீதிபதிகள் குடியிருப்பும் அமைவதற்கு ஆவணம் செய்ய வேண்டும்.

      இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

      இது சம்பந்தமாக கலெக்டரிடம் சிவபத்மாதன் கூறுகையில், ஏற்கனவே பாதை பிள்ளையான் கட்டளைக்கு பாத்தியப்பட்ட இடத்தை இந்த இடத்திற்கு செல்வதற்கு வழிப்பாதை அமைத்து கொடுக்க வேண்டும் என்று ஏற்கனவே இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் குமரகுருபரனை சந்தித்து மனுக்களையும் வழங்கி இருக்கிறோம். அன்றைய தினத்தில் பொறுப்பில் இருந்த மாவட்ட கலெக்டர் ஆகாஷ், இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் வழிப்பாதை சம்பந்தமாக சில விதிமுறை கள் இருப்பதை சுட்டிக்காட்டி யதாக கூறினார்.

      அப்போது தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை, கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை, மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் வேலுச்சாமி, வக்கீல்கள் சங்கத் தலைவர் புகழேந்தி, கைலாசம், மாட கண்ணு, வீரமணி கண்டன், ராஜா முத்துக்குமாரசாமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

      • விஜய், தனது அண்ணன் மருதுபாண்டியை சிவகிரி சர்ச் பஸ் நிறுத்தம் அருகே இறக்கிவிட்டு, மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
      • சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், விஜய்யை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

      சிவகிரி:

      சிவகிரி அருகே ராமநாதபுரம் மேட்டுப்பட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் தங்கமாரி. இவரது மனைவி முனியம்மாள். இவர்களுக்கு வீரபாண்டி (வயது 28), மருதுபாண்டி(23), விஜய்(22) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் 3 பேரும் கூலி வேலை செய்து வருகிறார்கள்.

      நேற்று இரவு விஜய், தனது அண்ணன் மருதுபாண்டியை சிவகிரி சர்ச் பஸ் நிறுத்தம் அருகே இறக்கிவிட்டு, மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அவர் சிவகிரி வெற்றிலை மண்டபம் அருகே வந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

      இதுகுறித்து தகவல் அறிந்த சிவகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜய்யை மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், விஜய் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • இளையராஜாவுக்கும், செல்லச்சாமிக்கும் இடம் சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்துள்ளது.
      • செல்லச்சாமி அருகில் இருந்த மண்வெட்டியால் இளையராஜாவை தலையில் தாக்கியுள்ளார்.

      புளியங்குடி:

      தென்காசி மாவட்டம் புளியங்குடியை அடுத்த சிந்தாமணி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் வீராசாமி. இவரது மகன் இளையராஜா(வயது 19). இவர் அதே பகுதியில் தனது தாய் மற்றும் தங்கையுடன் வசித்து வருகிறார்.

      இடப்பிரச்சினை

      இளையராஜாவுக்கும் அவரது சித்தப்பாவான செல்லச்சாமிக்கும்(35) இடம் சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் இளையராஜா வேலைக்கு கிளம்பி கொண்டிருந்தார்.

      அப்போது செல்லச்சாமிக்கும், இளைய ராஜாவுக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது செல்லச்சாமி அருகில் இருந்த மண்வெட்டியால் இளையராஜாவை தலையில் தாக்கியுள்ளார். இதில் இளையராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே செல்லச்சாமி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

      போலீசார் விசாரணை

      இளையராஜா கொலை செய்யப்பட்டதை அறிந்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் இளையராஜா உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்த தகவலின் பேரில் புளியங்குடி போலீசார் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்றனர்.

      அவர்கள், இளையராஜா உடலைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். மேலும் தப்பி ஓடிய அவரது சித்தப்பா செல்லச் சாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

      • தென்காசி வடக்கு மாவட்டத்திற்கு 20 சார்பு அணிகளுக்கான நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
      • சார்பு அணிகள் கட்சி தலைமை அறிவித்துள்ள தீர்மானங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

      சங்கரன்கோவில்:

      தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வடக்கு மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் ஆலோசனை கூட்டம் மேலரதவீதியில் உள்ள கோகுலம் மண்டபத்தில் நடந்தது.

      நிர்வாகிகளுக்கு ஆலோசனை

      கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பத்மநாதன் தலைமை தாங்கினார். மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் முத்துச்செல்வி, மாவட்ட துணைச் செயலாளர்கள் மனோகரன், ராஜதுரை, புனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலநீலிதநல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வெற்றி விஜயன் வரவேற்றார்.

      குருவிகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் கடற்கரை, வடக்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் அன்புமணி கணேசன் ஆகியோர் சார்பு அணி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர். இதில் கலந்து கொண்ட தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. 20 சார்பு அணி நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி பேசினார். அப்பொழுது அவர் பேசியதாவது:-

      40 தொகுதியிலும் வெற்றி

      தி.மு.க.வில் 23 சார்பு அணிகள் உள்ளன. தற்போது தென்காசி வடக்கு மாவட்டத்திற்கு 20 சார்பு அணிகளுக்கான நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். சார்பு அணி பதவி என்பது கட்சியின் வளர்ச்சிக்காக உழைப்பதற்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ள பதவி ஆகும். சார்பு அணி நிர்வாகிகள் அந்தந்த பகுதி ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். அவர்கள் கூறும் ஆலோசனைகளை கேட்டு அதன்படி செயல்பட வேண்டும்.

      சார்பு அணி நிர்வாகிகள் மாதம் ஒருமுறை கூட்டம் நடத்தி அது குறித்து மாவட்ட அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். மேலும் சார்பு அணிகள் கட்சி தலைமை அறிவித்துள்ள தீர்மானங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். கட்சித்தலைவர் அறிவித்துள்ளது போல 100 பேச்சாளர்களை உருவாக்க வேண்டும். அந்தந்த அணி களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பணிகளை செய்து வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. 40 தொகுதிகளிலும் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும்.

      இல்லம் தேடி கல்வி

      மேலும் தலைமைக் கழகம் மற்றும் மாவட்ட கழகம் அறிவிக்கும் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அனைத்து சார்பு பணி நிர்வாகிகளும் அந்தந்த பகுதியில் உள்ள ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்களுடன் ஆலோசித்து இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை பணியை துரிதமாக செயல்படுத்த வேண்டும்.

      இவ்வாறு அவர் பேசினார்.

      கலந்து கொண்டவர்கள்

      இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் வெள்ளத்துரை, தேவா என்ற தேவதாஸ், பராசக்தி, வேல்சாமி பாண்டியன், மகேஸ்வரி, ஒன்றிய செயலாளர்கள் லாலா சங்கரபாண்டியன், பெரியதுரை, ராமச்சந்திரன், மதிமாரிமுத்து, கிறிஸ்டோபர், சேர்மத்துரை, புளியங்குடி நகர செயலாளர் அந்தோணிசாமி, பேரூர் கழகச் செயலாளர்கள் குருசாமி, ரூபி பாலசுப்பிரமணியன், மாரிமுத்து, நகராட்சி சேர்மன்கள் சங்கரன்கோவில் உமாமகேஸ்வரி சரவணன், புளியங்குடி விஜயா சவுந்தரபாண்டியன், வாசுதேவநல்லூர் லாவண்யா,

      மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் இளைஞர் அணி முகேஷ், மகளிர் அணி சிவசங்கரி, ஆதிதிராவிடர் நலக்குழு அணி கே.எஸ்.எஸ். மாரியப்பன், அயலக அணி அமைப்பாளர் அமிதாப், விளையாட்டு மேம்பாட்டு அணி காசிராஜன், துணை அமைப்பாளர் கேபிள் கணேசன், நெசவாளர் அணி சந்திரன், இலக்கிய அணி குரு வசந்த், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சரவணன், ராஜ், செய்யது இப்ராஹிம், உதயா, நகரத் துணை செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

      முடிவில் சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.

      • சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த7 பேர் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
      • விசாரணையில் அவர்கள் விற்பனைக்காக 2 கிலோ 400 கிராம் அளவிலான கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

      ஆலங்குளம்:

      தென்காசி மாவட்டத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தை ஒழிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவின் பேரில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தனிப்படை போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து மேற்கொண்டு வருகிறார்கள்.

      இந்நிலையில் சுரண்டை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் 7 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

      அதில் அவர்கள் சுரண்டை சிவ குருநாத புரத்தை சேர்ந்த காசிராஜன் (வயது 26), ஜோசப் (27), ராம்குமார் (23), வெனிஷ் (22), மதன் (22), மைக்கேல் பவின் (24) மற்றும் ஒரு சிறுவன் என்பது தெரியவந்தது. அவர்கள் விற்பனைக்காக 2 கிலோ 400 கிராம் அளவிலான கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

      இதைத்தொடர்ந்து 7 பேரையும் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தார்.

      • திருமணம் ஆகாத ஆண், பெண் இருபாலரும் இப்பணிக்கான தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
      • தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே உடற்தகுதி தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

      தென்காசி:

      தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

      2023-24-ம் ஆண்டில் இந்திய விமான படையால் நடத்தப்பட உள்ள அக்னிவீர் வாயு தேர்வில் கலந்து கொள்வதற்கு கடந்த 27-ந் தேதி முதல் வருகிற 17-ந் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என இந்திய விமானப்படை விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      திருமணம் ஆகாத ஆண், பெண் இருபாலரும் இப்பணிக்கான தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 27.06.2003 தேதி முதல் 27.12.2006 தேதி வரை பிறந்தவராக இருக்க வேண்டும். பிளஸ்-2 வகுப்பில் ஆங்கிலம் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடப்பிரிவுகள் எடுத்து 50 சதவீத மதிப்பெண்க ளுடன் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது 3-ம் ஆண்டு டிப்ளமோ படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடை யவர் ஆவர்.

      இத்தேர்வில் கலந்து கொள்வதற்கு முதற்கட்டமாக ஆன்லைன் வாயிலாக https:// agnipathvayu.cdac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்து அக்டோபர் மாதத்தில் ஆன்லைன் வாயிலாக நடத்தப்படும் தேர்வில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. தேர்வு கட்டணம் ரூ.250 ஆகும்.

      இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விமானப்படை ஆட்சேர்ப்பு முகாமில் நடைபெறும் உடற்தகுதி தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இத்தேர்வு தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்தை 6380089119 என்ற தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு பயனடையலாம்.

      இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      • கடந்த சில நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஒரு சாக்கு மூட்டையை ஏற்றி வந்தது தெரிய வந்தது.
      • சமீபத்தில் மாயமான இளம் பெண்களின் பட்டியலை சேகரித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

      கடையநல்லூர்:

      தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள வலசை கிராமத்தில் பயன்பாடு இல்லாத தரைமட்ட கிணறு ஒன்று உள்ளது.

      இளம்பெண் கொலை

      இந்த கிணற்றில், ஒரு இளம்பெண் கொலை செய்யப்பட்டு உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சாக்கு மூட்டையை கயிறு கட்டி மேலே எடுத்து இளம்பெண் உடலை மீட்டனர்.

      கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் வலது கையில் எம்.வி. என்று ஆங்கிலத்திலும், காதலை குறிக்கும் வகையில் 'ஹார்டின்' படமும் பச்சை குத்தப்பட்டிருந்தது. பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

      சி.சி.டி.வி. காட்சிகள் ஆய்வு

      தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் சேகரித்து ஆய்வு செய்தனர். அதில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஒரு சாக்கு மூட்டையை ஏற்றி வந்தது தெரிய வந்தது. எனவே அவர்கள் தான் அந்த பெண்ணை கொலை செய்து உடலை கிணற்றில் வீசி சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.

      ஆனால் அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? கொலை செய்யப்பட்ட பெண் யார்? எதற்காக அந்த பெண்ணை கொலை செய்தார்கள்? என்பது தெரியவில்லை.

      2 தனிப்படை

      இதுதொடர்பாக விசாரணை நடத்து வதற்காக டி.எஸ்.பி. அசோக் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ராஜா, சப்- இன்ஸ்பெக்டர்கள் கருப்பசாமி, கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்ப ட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் சமீபத்தில் மாயமான இளம் பெண்களின் பட்டியலை சேகரித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

      மேலும் அழுகிய நிலையில் காணப்படும் அந்த பெண்ணின் புகைப்படம் மற்றும் கையில் உள்ள குறியீடு ஆகியவற்றை பக்கத்து மாவட்ட போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

      ×