search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் சாவு
    X

    பலியான விஜய்.

    சிவகிரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் சாவு

    • விஜய், தனது அண்ணன் மருதுபாண்டியை சிவகிரி சர்ச் பஸ் நிறுத்தம் அருகே இறக்கிவிட்டு, மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
    • சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், விஜய்யை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சிவகிரி:

    சிவகிரி அருகே ராமநாதபுரம் மேட்டுப்பட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் தங்கமாரி. இவரது மனைவி முனியம்மாள். இவர்களுக்கு வீரபாண்டி (வயது 28), மருதுபாண்டி(23), விஜய்(22) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் 3 பேரும் கூலி வேலை செய்து வருகிறார்கள்.

    நேற்று இரவு விஜய், தனது அண்ணன் மருதுபாண்டியை சிவகிரி சர்ச் பஸ் நிறுத்தம் அருகே இறக்கிவிட்டு, மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அவர் சிவகிரி வெற்றிலை மண்டபம் அருகே வந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த சிவகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜய்யை மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், விஜய் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×