என் மலர்
- ஜூன் 1-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
- ஜூன் 2-ந்தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா வருகிற 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. விழாவையொட்டி வருகிற 22-ந்தேதி மாலை 5 மணிக்கு கோட்டார் இளங்கடை பட்டாரியர் சமுதாய ருத்ரபதி விநாயகர் செவ்விட்ட சாஸ்தா டிரஸ்ட் சார்பில் கொடிப்பட்டம் மரபுபடி விவேகானந்தபுரம் சந்திப்பில் இருந்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7 மணிக்கு கன்னியாகுமரியைச் சேர்ந்த கிறிஸ்தவ மீனவர்கள் கொடிமர கயிற்றை மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் ஒப்படைக்கிறார்கள்.
அதைத்தொடர்ந்து முதல் நாள் விழாவான 24-ந்தேதி காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் திருக்கொடியேற்றம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும், 9 மணிக்கு அம்மன் பூப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
விழா நாட்களில் தினமும் காலை 7 மணிக்கு பல்லக்கில் அம்மன் வீதி உலா வருதல், இரவு 7 மணிக்கு இன்னிசை கச்சேரி, 9 மணிக்கு பல்வேறு வாகனத்தில் அம்மன் வீதி உலா வருதல் ஆகியவை நடக்கிறது.
விழாவின் 9-ம் நாளான அடுத்த மாதம்(ஜூன்)1-ந்தேதி காலை 8.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் திருத்தேர் வடம் தொட்டு இழுக்கும் தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பால் வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் ஆகியோர் தேர்வடம் தொட்டு இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கிறார்கள்.
இதில் குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், விஜய்வசந்த் எம்.பி., தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள். தேர் நிலைக்கு நின்றதும் பகல் 12 மணிக்கு அன்னதானம், கஞ்சிதர்மம், மாலை 6.30 மணிக்கு மண்டகப்படி, இரவு 9 மணிக்கு வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதல் நடக்கிறது.
10-ம் நாள் விழாவில் காலை 9.30 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி, மாலை 5 மணிக்கு மண்டகப்படி, இரவு 9 மணிக்கு தெப்பத்திருவிழா, 11 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணைஆணையர் கவிதா பிரியதர்ஷினி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
- பக்தர்களுக்கு கிடாவெட்டி விருந்து போடப்பட்டது.
கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தை அடுத்த பூச்சியூரில் ஸ்ரீ வேட்ைடக்காரசாமி கோவிலில் பெரிய சுவாமி திருவிழா நடைபெற்றது. இந்த கோவிலில் பொன்னார், சங்கர், தங்காள், செல்லாண்டியம்மன் சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த பெரிய சுவாமி திருவிழா நடைபெறும்.
இந்த கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் பொன்னர் சங்கர் தங்காள் வீர வரலாறு உடுக்கை கதை, பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதைத்தொடர்ந்து பூச்சியூர் விநாயகர் கோவிலில் இருந்து சக்தி கரகம் அழைத்தல், சாம்புகன் சாமியை மேடைக்கு அழைத்து வருதல், தங்காளுக்கு கிளி பிடிக்க செல்லுதல், கொம்பனை சாம்புகன் சாமி மேடைக்கு அழைத்து வருதல், செம்மறி ஆட்டுகிடாவுடன் மேள தாளம் முழுங்க பறை சாற்றி வருதல், தங்காள் செல்லாண்டியம் மன் தீர்த்தம் எடுத்து வந்து தெளித்து அண்ணன்மார்களை எழுப்புதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதைத்தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். விழாவில் முக்கிய நிகழ்வாக கொம்பனை குறி வைத்தல் நிகழ்ச்சியில் பன்றியை வேல்கம்பு கொண்டு பூசாரி வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து சாம்புகன் பூஜை செய்து தீர்த்தம் வழங்கி கிடாவெட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் அதிகமான கிடாய்கள் வெட்டப்பட்டன.
இதையடுத்து சாமியை ஊர்வலமாக எடுத்து வந்து கங்கையில் விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு கிடாவெட்டி விருந்து போடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- 'மாய்ஸ்சுரைசர்' சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைத்து, பொலிவை அதிகரிக்க உதவும்.
- வீட்டில் இருக்கும் இயற்கையான பொருட்களையே மாய்ஸ்சுரைசராக பயன்படுத்தும் முறையை பார்க்கலாம்.
பப்பாளியில் சருமத்தைப் பொலிவாக்கும் மூலக்கூறுகள் உள்ளன. சூரிய ஒளியால் ஏற்படும் தோல் அழற்சியை குணப்படுத்தும். பப்பாளியை தொடர்ந்து உபயோகித்து வந்தால் சரும வறட்சி நீங்கும். 'மாய்ஸ்சுரைசர்' சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைத்து, பொலிவை அதிகரிக்க உதவும். ஒரு சில மாய்ஸ்சுரைசர்களில் இருக்கும் ரசாயனக் கலவைகள் சருமத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இதைத் தவிர்க்க, வீட்டில் இருக்கும் இயற்கையான பொருட்களையே மாய்ஸ்சுரைசராக பயன்படுத்தும் முறைகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
தேங்காய் எண்ணெய், தேன்: தேங்காய் எண்ணெய்யில் இருக்கும் நிறைவுற்ற கொழுப்புகள், சருமத்துக்கு ஈரப்பதத்தைக் கொடுத்து அதை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும். முகப்பரு பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் இதை பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். தேன் சிறந்த மாய்ஸ்சுரைசராக செயல்படுகிறது. இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆன்டி செப்டிக் பண்புகள் முகப்பருக்களை குணமாக்கும்.
பயன்படுத்தும் முறை: தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாகக் கலந்து, முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவவும். 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும். தேங்காய் எண்ணெய்க்கு மாற்றாக, ஆலிவ் எண்ணெய்யையும் பயன்படுத்தலாம்.
பாலாடை, வாழைப்பழம்: காய்ச்சி ஆறவைத்த பாலில் இருந்து உருவாகும் 'பாலாடை' (பிரஷ் கிரீம்) சிறந்த மாய்ஸ்சுரைசிங் பண்புகளைக் கொண்டுள்ளது. பழங்காலத்தில் இருந்தே பாலாடையை சரும பராமரிப்புக்காக பயன்படுத்தி வருகின்றனர். இதை வாழைப்பழத்துடன் கலந்து பயன்படுத்தும்போது, அதன் பலன் இரட்டிப்பாகும். பாலாடை மற்றும் வாழைப்பழம் சேர்ந்த கலவை சருமத்துக்கு ஈரப்பதத்தை மட்டுமில்லாமல் தேவையான ஊட்டச்சத்துக்களையும் தருகிறது. கடுமையான குளிர் கால நாட்களில், சருமத்தை ஆரோக்கியமாக பராமரிப்பதற்கும் இது உதவும்.
பயன்படுத்தும் முறை: பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து, பிசைந்து கொள்ளவும். அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு பாலாடையை சேர்க்கவும். இதை மிருதுவான பசை போல கலந்து முகத்தில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான தண்ணீரில் சுத்தமான துணியை நனைத்து முகத்தை துடைக்கவும். வாழைப்பழத்தை சேர்க்க விரும்பாதவர்கள், பாலாடையை மட்டும் பயன்படுத்தலாம்.
பப்பாளி டோனர்: பப்பாளியில் சருமத்தைப் பொலிவாக்கும் மூலக்கூறுகள் உள்ளன. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள், சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் பராமரிக்க உதவும். பப்பாளி, சூரிய ஒளியால் ஏற்படும் தோல் அழற்சியை குணப்படுத்தும். பப்பாளியை தொடர்ந்து உபயோகித்து வந்தால் சரும வறட்சி நீங்கும்.
பயன்படுத்தும் முறை: ஒரு பப்பாளிப் பழத்துண்டை பொடிதாக நறுக்கவும். பின்னர் அதை மிக்சியில் போட்டு கூழாக அரைக்கவும். முகத்தை நன்றாக சுத்தம் செய்த பின்பு, பப்பாளி கூழை பஞ்சில் நனைத்து முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் தடவவும். இவற்றை தவிர ஆலிவ் எண்ணெய், ஷியா வெண்ணெய், கற்றாழை ஜெல், அவகேடோ பழம், சூரியகாந்தி எண்ணெய், பாதாம் எண்ணெய், வெள்ளரி காய், மோர், தயிர், விளக்கெண்ணெய், ரோஜாவில் இருந்து தயாரிக்கப்பட்ட பன்னீர் ஆகியவற்றையும் மாய்ஸ்சுரைசர்களாக உபயோகிக்கலாம்.
- திருவிழா நாளை தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
- 27-ந்தேதி ஆடம்பர தேர்பவனி நடக்கிறது.
ரீத்தாபுரம் புனித ரீத்தம்மாள் ஆலய திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் முதல் நாளான காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 5 மணிக்கு அன்பிய கொடி பவனி நெடுவிளை சந்திப்பிலிருந்து இரும்பிலி அரசு ஆரம்பபள்ளி, ஆலயம் வரை நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு செபமாலை, புனித ரீத்தம்மாள் புகழ்மாலை, மாலை 6.30 மணிக்கு திருவிழா கொடியேற்றம், திருப்பலி நடைபெறும். திருப்பலிக்கு பாண்டிச்சேரி-கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்டு தலைமை தாங்கி மறையுரை ஆற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு அன்பிய கலை விழா நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.
விழா நாட்களில் தினமும் மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
விழாவில் 21-ந்தேதி காலை 8 மணிக்கு நாகர்கோவில் ஆயர் இயக்குனர் அருட்பணியாளர் ஜெரேமியாஸ் தலைமை தாங்கி முதல் திருவிருந்து திருப்பலியை நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் மரிய செல்வன் மறையுரையாற்றுகிறார்.
விழாவில் 27-ந்தேதி காலை 7 மணிக்கு வாணியகுடி பங்கு அருட்பணியாளர் சகாய ஆனந்த் தலைமையில் முதியோர், நோயுற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கான திருப்பலி நிறைவேற்றி ம்றையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமை தாங்கி ஆடம்பர மாலை ஆராதனை நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு ஆடம்பர தேர்பவனி நடக்கிறது.
விழாவின் நிறைவு நாளான 28-ந்தேதி தூய ஆவியார் பெருவிழா பங்கின் குடும்ப பெருவிழா, காலை 6.30 மணிக்கு முதல் திருப்பலியை ரீத்தாபுரம் பங்குபணியாளர் ஜேசுதாசன் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். 8.30 மணிக்கு பெருவிழா ஆடம்பர திருப்பலியை பார்வதிபுரம் பங்கு பணியாளர் ஹிலாரியுஸ் நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார். 10.30 மணிக்கு தேர்பவனி, மாலை 5.30 மணிக்கு நற்கருணை ஆசீர், கொடி இறக்கம், 6.30 மணிக்கு மறைகல்வி மன்ற ஆண்டுவிழா ஆகியவை நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குமக்கள், பங்கு அருட்பணி பேரவை, நிதிக்குழு, தணிக்கைகுழு, திருச்சிலுவை அருட்சகோதரிகள், பங்கு அருட்பணியாளர்கள் இணைந்து செய்து வருகிறார்கள்.
- 23-ந்தேதி தர்மர் பட்டாபிஷேகம் நடக்கிறது.
- 24-ந்தேதி விடையாற்றியுடன் விழா நிறைவு பெறுகிறது
கீழ்வேளூர் அருகே இலுப்பூர் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்றுமுன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து அம்மன் வீதியுலாவும், பூச்சொரிதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 22-ந்தேதி காலை தீமிதி திடலில் படுகளமும், அம்மன் கூந்தல் முடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
அன்று மாலை தீமிதி திருவிழா நடைபெறுகிறது. 23-ந் தேதி தர்மர் பட்டாபிஷேகம் நடைபெற்று கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
24-ந்தேதி விடையாற்றியுடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
- கிரீன் டீ பருகுவது தற்போது அதிகரித்துள்ளது.
- ஒரு சில உடல் நிலைக்கு கிரீன் டீயைத் தவிர்ப்பது நல்லது.
உடல் எடையைக் குறைப்பது உள்ளிட்ட பிறநன்மைகளின் காரணமாக, கிரீன் டீ பருகுவது தற்போது அதிகரித்துள்ளது. 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்பதுபோல, ஒரு நாளுக்கு 2 முதல் 3 கப்புக்கு மேல் கிரீன் டீ குடிப்பது உடலுக்கு தீங்கு தரும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், ஒரு சில உடல் நிலைக்கு கிரீன் டீயைத் தவிர்ப்பது நல்லது. அவ்வாறு, யாரெல்லாம் கிரீன் டீ பருகக்கூடாது என்று இங்கே பார்ப்போம்.
கிரீன் டீயில் இருக்கும் காபின், காட்ஸின் மற்றும் டானின் போன்ற மூலக்கூறுகள் கர்ப்பிணிகளுக்கும், கருவில் இருக்கும் குழந்தைக்கும் பாதிப்பை உண்டாக்கக்கூடும். இவை பால் சுரப்பை குறைக்கும் தன்மை கொண்டவை. இதனால் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்கள் கிரீன் டீயைத் தவிர்ப்பது நல்லது. கிரீன் டீயில் இருக்கும் 'காட்ஸின்', உணவில் இருக்கும் இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதைத் தடுக்கும்.
எனவே ரத்த சோகை மற்றும் இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் கிரீன் டீயைத் தவிர்க்க வேண்டும். வயிறு மற்றும் செரிமானக்கோளாறு உள்ள நபர்கள் கிரீன் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும். இதில் இருக்கும் 'டானின்' என்ற மூலக்கூறு வயிற்றில் அமிலச் சுரப்பை அதிகரிக்கும். இதனால் வயிற்று வலி, வாந்தி உணர்வு, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகள் உண்டாகும்.
உள் உறுப்புகளின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதால் இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தை களுக்கு கிரீன் டீ கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். 'குளூக்கோமா' எனும் கண் தொடர்பான பிரச்சினை உள்ளவர்கள் கிரீன் டீ பருகக்கூடாது. இது கண்களின் அழுத்தத்தை அதிகரிக்கும்.
இதுமட்டுமில்லாமல் பதற்ற நோய் உள்ளவர்கள், ரத்தப்போக்கு பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள், இதய நோயாளிகள், கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள், ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சினை உள்ளவர்கள் கிரீன் டீயைத் தவிர்க்க வேண்டும்.
- 25-ந்தேதி அக்னிசட்டி எடுத்து ஆடுதல் நடக்கிறது.
- 27-ந்தேதி மறுபூஜையுடனும் விழா நிறைவு பெறுகிறது.
கோவை ராமநாதபுரம் பூசாரி மாரியப்பன் வீதியில் ஸ்ரீமகா சக்தி பூலோகநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 17-வது ஆண்டு திருக்கல்யாண திருவிழா நேற்று காலை மகா கணபதி ஹோமம், கொடியேற்றுதலுடன் தொடங்கியது. இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 23-ந் தேதி வரை தினமும் அபிஷேக பூஜை, அலங்கார பூஜை, அம்மன் திருவீதி உலா, அக்னி சட்டி எடுத்து வருதல் நடக்கிறது.
24-ந் தேதி காலை 9 மணிக்கு சீர் எடுத்து வருதல், ஸ்ரீபூலோக நாயகீஸ்வரன், ஸ்ரீமகா சக்தி பூலோக நாயகி அழைத்து வருதல், 6.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் திருக்கல்யாண விழா நடைக்கிறது. இரவு 8.30 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.
25-ந் தேதி காலை 10.30 மணிக்கு சக்திகரகம், பூவோடு, பால்குடம், அலகுத்தி வருதல், நண்பகல் 12.30 மணிக்கு அக்னிசட்டி எடுத்து ஆடுதல், 1.30 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு மாவிளக்கு அலங்கார பூஜை, மாலை 6.30 மணிக்கு நாட்டிய நிகழ்ச்சி, 26-ந் தேதி காலை 11 மணிக்கு அபிஷேக பூஜை, நண்பகல் 12 மணிக்கு மஞ்சள் நீர், சுவாமி திருவீதி உலா நடக்கிறது. 27-ந் தேதி காலை 11 மணிக்கு அபிஷேக பூஜை, மறுபூஜையுடனும் விழா நிறைவு பெறுகிறது.
- சனிபகவான், குரு பகவான், சூரிய பகவான் ஆகிய இந்த 3 கிரகங்களை திருப்தி செய்ய வேண்டும்.
- நல்ல வேலை கிடைக்காதவர்களுக்கு நிரந்தரமான கை நிறைய சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.
வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நாம் சென்று கொண்டே இருக்க வேண்டும் என்பது நாம் எல்லோருடைய கனவாக இருக்கின்றது. ஆனால் நாம் நினைத்த மாதிரி சம்பள உயர்வு, பதவி உயர்வு, நினைத்த வேலை கிடைப்பது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. இருக்கின்ற வேலையை தக்க வைத்துக் கொள்வதே இன்றைய சூழ்நிலையில் ரொம்ப பெரிய விஷயமாக இருக்கிறது. இந்த பிரச்சனைகள் தீர இந்த பரிகாரங்களை முழுமனதுடன் செய்தால் பலன் கிடைப்பது நிச்சயம்.
வாரம் தோரும் வரக்கூடிய வியாழக்கிழமை அன்று உங்கள் கையால் பசுவிற்கு வாழைப்பழங்கள் வாங்கி கொடுக்க வேண்டும். உங்களுடைய வீதிகளில் பசுமாடு நல்ல வெயில் சமயத்தில் நடந்து வரும்போது, உங்கள் வீட்டில் வடித்த கஞ்சி தண்ணீர் இருக்கும் அல்லவா. அதை தண்ணீரோடு கலந்து, கொஞ்சமாக உப்பு போட்டு கரைத்து பசு மாட்டிற்கு தாகத்திற்கு குடிக்க கொடுக்க வேண்டும்.
வியாழக்கிழமை இந்த பரிகாரத்தை செய்தால் குருவின் அருள் முழுமையாக நமக்கு கிடைக்கும். ஆனால் இது பரிகாரத்திற்காக சொல்லப்பட்ட விஷயம். வியாழக்கிழமை அல்லாமல் உங்களால் இப்படிப்பட்ட விஷயங்களை எப்போதெல்லாம் முடியுமோ, அப்போதெல்லாம் செய்வதினால் பலன் பல மடங்கு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.
பெரும்பாலும் நம் வீட்டின் அருகில் இருக்கக் கூடிய கோவில்களில் குளங்கள் இருக்காது. ஆனால் இன்னமும் பெரிய பெரிய பழமையான கோவில்களில் குளங்கள் இருக்கிறது. அதில் தண்ணீரும் இருக்கிறது. அதில் மீன்கள் வாழ்கின்றது. இப்படி எங்காவது கோவிலுக்கு செல்லும் போது அந்த குளத்தில் இருக்கும் மீனுக்கு பொரி வாங்கிப் போடலாம். வீட்டிலிருந்து செல்லும்போது கோதுமை மாவில் கொஞ்சமாக தண்ணீர் விட்டு பிசைந்து சிறிய சிறிய உருண்டைகளாக தயார் செய்து எடுத்துச் செல்ல வேண்டும். இந்த கோதுமை உருண்டைகளை மீனுக்கு உணவாக போட்டால் நம் குடும்பத்திற்கு ரொம்ப ரொம்ப நல்லது. இதன் மூலம் சூரிய பகவானின் ஆசிர்வாதம் நமக்கு கிடைக்கும். நல்ல வேலை கிடைக்காதவர்களுக்கு நிரந்தரமான கை நிறைய சம்பளத்துடன் வேலை கிடைக்கும். பிரமோஷன் கிடைக்கும்.
ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யலாம். நடக்க முடியாத ஊனமுற்றவருக்கு ஒரு செருப்பு வாங்கி கொடுத்தால் கோடான கோடி புண்ணியம். (காலில் நடக்க முடியாத அளவுக்கு பிரச்சனை இருக்கும். அவர்களுக்கு இந்த ஸ்பெஷல் ஆக டிசைன் செய்யப்பட்ட காலணிகள் விற்கும் அல்லவா அது.) நடக்க முடியாதவருக்கு ஒரு ஹேண்ட் ஸ்டிக் வாங்கி கொடுத்தீர்கள் என்றால், உங்களை சனி பகவான் எதுவுமே செய்ய மாட்டார். பெரிய கஷ்டத்தை கொடுத்தால் கூட அதில் பெரிய அளவில் பாதிப்பு நமக்கு வராமல் சனி பகவானே பார்த்துக் கொள்வார்.
சனிபகவான், குரு பகவான், சூரிய பகவான், இந்த 3 கிரகங்களையும் திருப்தி செய்ய வேண்டும். இந்த மூன்று கிரகங்களும் உங்களுடைய ஜாதக கட்டத்தில் சரியாக அமரவில்லை, வாழ்க்கையில் அடுத்தடுத்து பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது என்பவர்கள் மேல் சொன்ன பரிகாரத்தை செய்தாலே போதும். வாழ்வில் வளம் பெறலாம்.
- ஜூன் 12-ந் தேதி சந்தனம் பூசம் நிகழ்ச்சி நடைபெறும்.
- ஜூன் 19-ந்தேதி கொடியிறக்கம் நடைபெறும்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உலக பிரசித்தி பெற்ற மஹான் சுல்தான் செய்யது இபுராகிம் ஷஹீத் ஒலியுல்லாஹ் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக சந்தனக்கூடு திருவிழா நடைபெறும்.
விழாவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான யாத்திரீர்கள் வந்து செல்வது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டு 849-ம் ஆண்டின் சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக மே 21-ந் தேதி தர்கா மண்டபத்தில் தர்கா ஹக்தார்கள் முன்னிலையில் மவுலீது ஷரிப் (புகழ் மாலை) தொடங்கப்பட உள்ளது.
அதனைத் தொடர்ந்து வருகிற 31-ந் தேதி பாதுஷா நாயகத்தின் பச்சை வர்ணக்கொடி யானை மேல் வைத்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கொடியேற்றம் நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியாக சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழா ஜூன் 12-ந் தேதி மாலை தொடங்கி ஜூன் 13-ந் தேதி அதிகாலை மேள தாளங்களுடன் யானைகள் அணிவிக்க, நாட்டிய குதிரைகள் நாட்டிய மாட, சந்தனக்கூடு பவனி வர அனைத்து சமுதாயத்தினரும் அணிவகுக்க, தர்கா மக்பராவில் சந்தனம் பூசம் நிகழ்ச்சி நடைபெறும்.
இதனை தொடர்ந்து ஜூன் 19-ந்தேதி நிறைவு நிகழ்ச்சியான அஸர் தொழுகைக்குப் பின் கொடியிறக்கம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து அன்று இரவு 7 மணிக்கு தப்ரூக் எனும் நெய் சோறு நேர்சை வழங்கப்பட்டு மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நிறைவு பெறும்.
இந்த தகவலை ஏர்வாடி தர்கா ஹக்தார் கமிட்டினர் தெரிவித்துள்ளனர்.
- பேபி கார்னில் கலோரிகள் குறைவாக உள்ளது.
- பேபி கார்னில் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது.
தேவையான பொருட்கள்
பேபி கார்ன் - 6
இஞ்சி (பொடிதாக நறுக்கியது) - 1 டீஸ்பூன்
பூண்டு (பொடிதாக நறுக்கியது) - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை (பொடிதாக நறுக்கியது) - 1 டேபிள் ஸ்பூன்
முட்டைக்கோஸ் (பொடிதாக நறுக்கியது) - 2 டேபிள் ஸ்பூன்
குடைமிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 2 டேபிள் ஸ்பூன்
காளான் (பொடிதாக நறுக்கியது) - 2 டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
சோளமாவு - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 5 கப்
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு
செய்முறை:
பேபி கார்னை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
பின்பு அதில் பேபி கார்ன், குடைமிளகாய், காளான், மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு மேலும் 3 நிமிடங்கள் வதக்கவும்.
பின்னர் அதில் 4 கப் தண்ணீர் ஊற்றி கலந்து நன்றாகக் கொதித்தவுடன் தீயைக் குறைக்கவும்.
சோளமாவை 1 கப் தண்ணீரில் கட்டியில்லாமல் கரைக்கவும்.
அதை பேபி கார்ன் கலவையில் ஊற்றி, சூப் நன்றாகக் கொதித்து கெட்டியாகும் வரை கிளறவும்.
பின்னர் அதில் முட்டைக்கோஸைப் போட்டுக் கிளறி இறக்கவும்.
இப்போது சூடான பேபி கார்ன் சூப் தயார்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- பிரம்மோற்சவ விழா 31-ந்தேதி தொடங்கி ஜூன் 8-ந்தேதி வரை நடக்கிறது.
- 7-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
திருப்பதி மாவட்டம் அப்பலாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 31-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஜூன்) 8-ந்தேதி வரை நடக்கிறது.
முக்கிய விழாவாக ஜூன் 3-ந்தேதி கல்யாணோற்சவம், 4-ந்தேதி கருட சேவை, 7-ந்தேதி தேரோட்டம், 8-ந்தேதி சக்கர ஸ்நானம் ஆகியவை நடக்கிறது.
- இந்த மாதத்தில் புண்ணிய நதிகளில் நீராடினால் ஏழேழு ஜென்மங்களிலும் செய்த பாவங்கள் கூட நீங்கும்
- இந்த மாதத்தில் வரும் முக்கிய விரத நாட்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
தமிழ் மாதங்களில் இரண்டாவது மாதமான வைகாசி மாதம் வைகாசம் மாதம் என்றும், மாதவ மாதம் என்றும் போற்றப்படுகிறது. இந்த மாதத்தில் சூரிய பகவான், மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசியில் தனது பயணத்தை துவங்குவார்.
இந்த மாதத்தில் கங்கை போன்ற புண்ணிய நதிகளில் நீராடினால் ஏழேழு ஜென்மங்களிலும் செய்த பாவங்கள் கூட நீங்கும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. 2023 ம் ஆண்டில் வைகாசி மாதமானது மே 15 ம் தேதி துவங்கி, ஜூன் 15 ம் தேதி வரை நீடிக்கிறது.
இந்த மாதத்தில் வரும் முக்கிய விரத நாட்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
வைகாசி மாத விசேஷ, விரத நாட்கள் :
வைகாசி 01 (மே 15) திங்கட்கிழமை - ஏகாதசி
வைகாசி 03 (மே 17) புதன்கிழமை - பிரதோஷம்
வைகாசி 05 (மே 19) வெள்ளிக்கிழமை - அமாவாசை
வைகாசி 09 (மே 23) செவ்வாய்கிழமை - சதுர்த்தி
வைகாசி 11 (மே 25) வியாழக்கிழமை - வளர்பிறை சஷ்டி
வைகாசி 17 (மே 31) புதன்கிழமை - ஏகாதசி
வைகாசி 18 (ஜூன் 01) வியாழக்கிழமை - பிரதோஷம்
வைகாசி 19 (ஜூன் 02) வெள்ளிக்கிழமை - வைகாசி விசாகம்
வைகாசி 20 (ஜூன் 03) சனிக்கிழமை - பெளர்ணமி
வைகாசி 24 (ஜூன் 07) புதன்கிழமை - சங்கடஹர சதுர்த்தி
வைகாசி 25 (ஜூன் 08) வியாழக்கிழமை - திருவோணம்
வைகாசி 26 (ஜூன் 09) வெள்ளிக்கிழமை - தேய்பிறை சஷ்டி
வைகாசி 31 (ஜூன் 14) புதன்கிழமை - ஏகாதசி
வைகாசி 32 (ஜூன் 15) வியாழக்கிழமை - கிருத்திகை, பிரதோஷம்.







