என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
ப்ளிப்கார்ட் தளத்தில் வாடிக்கையாளர்கள் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு அந்நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
சோனி பிஎஸ் 5 கன்சோலை வாங்கிய பல்வேறு வாடிக்கையாளர்கள், ப்ளிப்கார்ட் தளத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தனர். கேமிங் கன்சோல்களை வாங்க ஆர்டர் செய்தவர்களை தொடர்பு கொண்டு ஆர்டரை கேன்சல் செய்ய ப்ளிப்கார்ட் வலியுறுத்துவதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு ப்ளிப்கார்ட் சார்பில் பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, ஆர்டர் செய்த வாடிக்கையாளர்களுக்கு கன்சோல் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்படும் என்றே தெரிவிக்கப்பட்டது என ப்ளிப்கார்ட் தெரிவித்து உள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமலில் இருப்பதே தாமதத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆர்டர்களை விரைவில் விநியோகம் செய்வதற்கான பணிகளை மேற்கொள்வதாக ப்ளிப்கார்ட் தெரிவித்து இருக்கிறது. மே 17 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற்ற பிஎஸ்5 விற்பனையில் இந்த பிரச்சினை எழுந்ததாக கூறப்படுகிறது.
`ப்ளிப்கார்ட் சார்பில் அழைப்புகள் வந்தது. அழைப்பை மேற்கொண்டவர், பிஎஸ்5 கன்சோலுக்கான ஆர்டரை கேன்சல் செய்தால் ரூ. 500 மதிப்புள்ள கூப்பன் வழங்குவதாக தெரிவித்தார்'. என பலர் தங்களின் சமூக வலைதள அக்கவுண்ட்களில் குற்றஞ்சாட்டினர்.
விநியோகம் செய்ய தாமதம் ஆகும், இதனால் ஆர்டரை கேன்சல் செய்யக் கோரி ப்ளிப்கார்ட் அனுப்பிய மின்னஞ்சல் ஸ்கிரீன்ஷாட்களும் வெளியாகி இருக்கின்றன.
வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் அனுப்பும் தகவல்களை மத்திய அரசு கவனிப்பதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.
வாட்ஸ்அப் செயலியில் அனுப்பப்படும் குறுந்தகவல்கள் நிலை டிக் மூலம் தெரிவிக்கப்படுகிறது. தற்போது வாட்ஸ்அப் செயலியில் அனுப்பப்படும் குறுந்தகவல்கள் மற்றவர்களுக்கு சென்றதும் இரண்டு டிக்குகள் காணப்படும். அதனை அவர்கள் படித்துவிட்டால் இரு டிக்குகளும் புளூ நிறத்திற்கு மாறிவிடும்.
இந்த நிலையில், வாட்ஸ்அப் டிக் முறையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக கூறும் தகவல் வாட்ஸ்அப் செயலியில் வலம்வருகிறது. அதன்படி, அனுப்பிய குறுந்தகவல்களுக்கு இரண்டு புளூ டிக் மற்றும் ஒரு ரெட் டிக் வந்தால் அரசு நடவடிக்கை எடுக்கும் என கூறப்படுகிறது. மேலும் மூன்று ரெட் டிக் வந்தால் அரசு சட்டப்படி வழக்கு தொடரும் என கூறப்படுகிறது.


இந்தியாவில் சமூக வலைதளம் மற்றும் ஓடிடி தளங்களில் பதிவிடப்படும் தகவல்களில் அதிகாரிகள் சர்ச்சைக்குரியது என சுட்டிக்காட்டும் பதிவுகளை நீக்குவது, சர்ச்சைக்குள்ளாகும் தகவலை முதலில் பதிவிட்டது யார் என்ற விவரங்களை சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமலாகி இருக்கின்றன.
இதை எதிர்த்து வாட்ஸ்அப் மற்றும் மத்திய அரசு இடையே சட்டப்போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வாட்ஸ்அப் உரையாடல்களை அரசு கவனிப்பதாக கூறி, புது டிக் முறை அமலுக்கு வந்துள்ளது என வைரல் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், வைரல் தகவல்களில் துளியும் உண்மையில்லை. ஏற்கனவே பலமுறை இதேபோன்ற தகவல் வைரலாகி இருக்கிறது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் வெளியீடு குறித்த புது தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் 2021 ஐபோன் சீரிஸ் மாடல்கள் திட்டமிட்டப்படி வெளியாகும் என கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் சிப் உற்பத்தியில் தாமதம் ஏற்படுவதால், ஐபோன் 13 சீரிஸ் வெளியீடு தாமதமாகும் என கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் வெளியீடு சில மாதங்கள் தாமதமாகின. ஆனால், இந்த ஆண்டு ஐபோன் 13 சீரிஸ் வெளியீடு தாமதமாகாது என தற்போது வெளியான தகவல்களில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட் உற்பத்தி துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதே சிப்செட் புதிய ஐபோன் 13 சீரிஸ் மாடல்களில் வழங்கப்பட இருக்கிறது. பிராசஸர் உற்பத்தி துவங்கிவிட்ட நிலையில், ஐபோன் 13 சீரிஸ் செப்டம்பர் மாத வாக்கில் வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்தியாவில் அமலுக்கு வந்துள்ள புதிய சமூக வலைதள விதிமுறைகள் குறித்து கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி கருத்து தெரிவித்தார்.
சமூக வலைதள நிறுவனங்கள் மற்றும் ஒடிடி தளங்களில் சா்ச்சைக்குரியதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டும் பதிவுகளை 36 மணி நேரங்களுக்குள் நீக்குவது உள்பட பல்வேறு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மத்திய அரசு அமலாக்கி இருக்கிறது. இதற்கு சில நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதுகுறித்து கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியதாவது..,
கூகுள் உள்ளூர் சட்ட விதிகளுக்கு உட்பட்டு, அரசாங்கங்கள் உடன் இணைந்து பொறுப்பான முறையில் செயல்படுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அரசாங்கங்கள் வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்திற்கு ஏற்ப ஒழுங்குமுறை நடைமுறைகளை அமலாக்குகின்றன, என கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

"எங்களின் உள்ளூர் அதிகாரிகள் கூகுள் இயங்கி வரும் ஒவ்வொரு நாட்டிலும், அந்நாட்டின் உள்ளூர் விதிகளுக்கு உட்பட்டு அவற்றுக்கு மதிப்பு அளிப்போம். அரசு கோரிக்கைகளை ஏற்கும் விவகாரங்கள் குறித்து எங்களிடம் வெளிப்படையான அறிக்கைகள் உள்ளன. அவற்றை நாங்கள் சம்மந்தப்பட்ட அறிக்கைகளில் குறிப்பிடுவோம்," என அவர் மேலும் தெரிவித்தார்.
"நிறுவனம் என்ற முறையில், சுதந்திரம் மற்றும் வெளிப்படையான இணைய சேவை மற்றும் அது வழங்கும் பலன்களுக்கு மதிப்பளிக்கிறோம். உலகம் முழுக்க ஒழுங்குமுறை ஆணையங்களுடன் இணைந்து பொறுப்பான முறையில் செயல்பட்டு வருகிறோம்," என அவர் தெரிவித்தார்.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மேக் மினி மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் சிலிகான் M1 பிராசஸரை அறிமுகம் செய்த போது, அதனை பயன்படுத்தும் முதல் மூன்று சாதனங்களில் ஒன்றாக மேக் மினி இருந்தது. தற்போது ஆப்பிள் மேம்பட்ட புது மேக் மினி மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய மேக் மினி M1X பிராசஸர், அதிக போர்ட்கள் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. புது மேக் மினி ரென்டர்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. ரென்டர்களின் படி புது மேக் மினி அளவில் மெல்லியதாக காட்சியளிக்கிறது.

பின்புறம் புதிய மேக் மினி மாடலில் 4 தண்டர்போல்ட் போர்ட்கள், 2 யுஎஸ்பி டைப் ஏ போர்ட்கள், ஈத்தர்நெட் போர்ட் மற்றும் HDMI போர்ட் வழங்கப்படுகிறது. இத்துடன் காந்த சக்தி கொண்ட பவர் கனெக்டர் வழங்கப்படும் என தெரிகிறது. இதே போன்ற கனெக்டர் சமீபத்திய ஐமேக் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஆப்பிள் மேக் மினி மாடல், மேம்பட்ட மேக்புக் ப்ரோ லேப்டாப்களுடன் ஜூன் 7 ஆம் தேதி துவங்கி நடைபெற இருக்கும் WWDC 2021 நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
யுஎஸ்பி சி பெற்று இருக்கும் புது அப்கிரேடு மூலம் சாதனங்களை விரைவில் 240W வேகத்தில் சார்ஜ் செய்ய முடியும்.
யுஎஸ்பி டைப் சி போர்ட் முந்தைய தலைமுறை வெர்ஷனில் இருந்து வந்த பல்வேறு பிரச்சினைகளை சரி செய்தது. மேலும் பல்வேறு புது வசதிகளை வழங்கியது. யுஎஸ்பி சி கொண்டு அதிகபட்சம் 100W திறனில் சாதனங்களை சார்ஜ் செய்ய முடிகிறது.

தற்போது யுஎஸ்பி சி கனெக்டர் புது வெர்ஷன் அதிகபட்ச சார்ஜிங் திறனை 100W-இல் இருந்து 240W ஆக அதிகரித்து இருக்கிறது. புதிய 240W சார்ஜிங் திறன் EPR அதாவது Extended Power Range என அழைக்கப்படுகிறது. இதை கொண்டு அதிக திறன் தேவைப்படும் பல்வேறு பெரிய சாதனங்களை சார்ஜ் செய்ய முடியும்.
யுஎஸ்பி சி 2.1 வெர்ஷன் சார்ஜிங்கை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. எதிர்காலத்தில் 240W திறன் கொண்ட கேபில்களில், இதனை தெரிவிக்கும் பிரத்யேக ஐகான் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதை கொண்டு கேமிங் லேப்டாப்கள், 4K மாணிட்டர்கள், லேசர் ப்ரின்டர், பெரிய பவர் பேங்க் உள்ளிட்டவைகளை சார்ஜ் செய்யலாம்.
மத்திய அரசு பிறப்பித்து இருக்கும் புது விதிகளை ஏற்பது குறித்து பேஸ்புக் நிறுவன செய்தி தொடர்பாளர் பதில் அளித்து இருக்கிறார்.
மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் சமூக வலைதள நிறுவனங்ங்கள், ஓடிடி தளங்களுக்கு புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகளை வெளியிட்டது. இதன்படி, சமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்களில் சா்ச்சைக்குரியதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டும் பதிவுகளை 36 மணி நேரங்களுக்குள் நீக்க வேண்டும்.
மேலும், குறைகளை உடனக்குடன் நிவா்த்தி செய்ய சமூக ஊடக நிறுவனங்கள் இந்தியாவில் ஒரு அதிகாரி தலைமையில் குறைதீர்க்கும் முறையை செயல்படுத்த வேண்டும். அதுபோல, அவதூறான செய்தியை முதலில் பரப்பும் நபரை சமூக வலைதளங்கள் கண்டறிய வேண்டும்.

புதிய விதிமுறைகளை பின்பற்ற மத்திய அரசு சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மூன்று மாதங்கள் கால அவகாசம் அளித்தது. இதற்கான காலக்கெடு இன்று (மே 25) நிறைவுக்கு வருகிறது. விதிகளுக்கு இணங்காத நிறுவனங்கள் தடை செய்யப்படும் அல்லது சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என மத்திய அரசு எச்சரித்து இருந்தது.
எனினும், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற நிறுவனங்கள் மத்திய அரசின் புதிய விதிகளுக்கு இதுவரை இணங்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து பேஸ்புக் செய்தி தொடர்பாளர் கூறும் போது, "தகவல் தொழில்நுட்ப துறையின் புதிய விதிகளுக்கு இணங்குவதை நோக்கமாக கொண்டுள்ளோம். எனினும், சில விஷயங்கள் குறித்து தொடர்ந்து விவாதித்து வருகிறோம். இவை குறித்து அரசுடன் கூடுதலாக ஆலோசிக்க வேண்டியுள்ளது."
"தகவல் தொழில்நுட்ப விதிகளை பின்பற்றுவதோடு, செயல்பாட்டு நடைமுறைகளை அமல்படுத்துவது, செயல்திறனை மேம்படுத்துவது தொடர்பாக பணியாற்றி வருகிறோம். எங்களது தளத்தில் மக்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் வெளிப்படுத்த வேண்டும் என்பதில் பேஸ்புக் உறுதியாக உள்ளது”என்றார்.
பயனர்கள் எங்களை புரிந்து கொண்டு பிரைவசி பாலிசையை ஏற்கும் வரை தொடர்ந்து நினைவூட்டுவோம் என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
ஆண்டு துவக்கம் முதலே வாட்ஸ்அப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தவிக்கிறது. மேம்பட்ட பிரைவசி பாலிசி விவகாரத்தில் வாட்ஸ்அப் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. கடந்த வாரம் மத்திய அரசு புது பிரைவசி பாலிசி திட்டத்தை கைவிட வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்தது.

தற்போது வாட்ஸ்அப் மத்திய அரசுக்கு பதில் அளித்துள்ளது. மேலும் புது பிரைவசி பாலிசியை பின்பற்றுவதில் உறுதியாக இருப்பதாகவும், இதன் மூலம் அனைத்து சாட்களும் பாதுகாப்பாக இருக்கும் என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்களின் பிரைவசி தான் எங்களின் மிகமுக்கிய குறிக்கோள் ஆகும்.
புது பிரைவசி பாலிசி மூலம் பயனர்களின் தனிப்பட்ட குறுந்தகவல்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதன் மூலம் பயனர் விரும்பினால் அவர்கள் எவ்வாறு வியாபார நிறுவனங்களை தொடர்பு கொள்ளலாம் என்பதை அறிந்து கொள்ளலாம். மேலும் புது பிரைவசி பாலிசியை ஏற்காதவர்கள் தொடர்ந்து அனைத்து அம்சங்களை இயக்க முடியும்.
டாமினோஸ் இந்தியா சர்வெரில் இருந்த சுமார் 18 கோடி பயனர் விவரங்கள் திருடப்பட்டு இருக்கின்றன.
கடந்த மாதம் டாமினோஸ் இந்தியா சர்வெரில் இருந்த 13 டிபி அளவு விவரங்கள் திருடப்பட்டன. இதில் பெயர்கள், மொபைல் போன் நம்பர்கள், மின்னஞ்சல் முகவரி, பேமண்ட் விவரங்கள் மற்றும் சுமார் பத்து லட்சம் கிரெடிட் கார்டு விவரங்கள் இடம்பெற்று இருந்தது.

தற்போது டாமினோஸ் இந்தியாவின் பீட்சா ஆர்டர் விவரங்கள் திருடப்பட்டுள்ளன. இவற்றில் பெயர், மின்னஞ்சல் முகவரி, ஜிபிஎஸ் லொகேஷன் மற்றும் பல்வேறு விவரங்கள் தற்போது ஹேக்கர்கள் வசம் உள்ளன. சுமார் 18 கோடி பயனர் விவரங்கள் இம்முறை திருடப்பட்டு இருக்கிறது.
திருடப்பட்ட தகவல்கள் அனைத்தும் டார்க் வெப் தளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக சைபர்செக்யூரிட்டி ஆய்வாளர் தெரிவித்து இருக்கிறார். இந்த சம்பவத்தில் வாடிக்கையாளர்களின் நிதி சார்ந்த விவரங்கள் எதுவும் திருடப்படவில்லை என இந்தியாவுக்கான டாமினோஸ் பிரான்சைஸ் வைத்திருக்கும் ஜூபிலன்ட் புட்வொர்க்ஸ் தெரிவித்து இருக்கிறது.
சியோமி நிறுவனம் தனது எம்ஐ ஹாரிசான் எடிஷன் ஸ்மார்ட் டிவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
சியோமி நிறுவனம் எம்ஐ டிவி 4ஏ ஹாரிசான் எடிஷன் மாடல்களை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த சீரிசில் 32 இன்ச் ஹெச்டி ரெடி மற்றும் 43 இன்ச் புல் ஹெச்டி மாடல்கள் இடம்பெற்று இருந்தது.

இந்த நிலையில், தற்போது புதிய 40 இன்ச் அளவில் ஹாரிசான் எடிஷன் மாடலை ஜூன் 1 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து உள்ளது. புதிய ஸ்மார்ட் டிவி ஹாரிசான் டிஸ்ப்ளே மற்றும் பெசல் லெஸ் டிசைன் கொண்டிருக்கும் என சியோமி உறுதிப்படுத்தி இருக்கிறது.
முந்தைய ஹாரிசான் எடிஷன் மாடல்களில் விவிட் பிக்ச்சர் என்ஜின் வழங்கப்பட்டு இருந்தது. புது மாடலிலும் இந்த அம்சம் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் அதிக ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, 20 வாட் ஸ்பீக்கர்கள், டிடிஎஸ் ஆடியோ மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படலாம்.
உலகின் எந்த பகுதியில் இருந்தாலும், இந்த செயலியை கொண்டு ஒருவர் இருக்கும் பகுதியை மிக துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.
இங்கிலாந்தில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்கு சென்ற ஜெஸ் டின்ஸ்லி மற்றும் அவர்களின் நண்பர்கள் ஐந்து கிலோமீட்டர்கள் வட்ட பாதையில் தனியாக சென்று மீண்டும் இணைய திட்டமிட்டனர். ஞாயிற்றுக் கிழமையின் மாலை வேளையில் திட்டம் தீட்டிய நிலையில், இரவு நேரம் நெருங்கும் போது நியூடன் அகில்ப் மட்டும் காட்டினுள் தனியாக சிக்கிக் கொண்டார்.
காட்டினுள் சிக்கிக் கொண்ட நிலையில், போன் சிக்னல் கிடைக்கும் பகுதியை நியூடன் அடைந்தார். அங்கிருந்து தனது போனில் அவசர உதவி எண்ணை தொடர்பு கொண்டு உதவி வேண்டும் என தெரிவித்தார். மறுபுறம் அழைப்பை எடுத்தவர் நியூடனிடம் மொபைலில் what3words எனும் செயலியை இன்ஸ்டால் செய்ய கூறினார்.
செயலி இன்ஸ்டால் செய்த சில நிமிடங்களில் காவல் துறையினர் நியூடன் மற்றும் அவர்களது நண்பர்கள் இருந்த பகுதியை கண்டறிந்து அவர்களை மீட்டனர். what3words செயலி ஒருவர் இருக்கும் இடத்தை மிகத்துல்லியமாக மற்றவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்த செயலியை உருவாக்கிய டெவலப்பர்கள் பூமி பந்தை 57,00,000 கோடி சதுரங்கங்களாக பிரித்து ஒவ்வொன்றிற்கும் பிரத்யேக பெயர் சூட்டி இருக்கின்றனர். அதாவது ஒவ்வொரு பகுதியும் பரப்பளவில் பத்துக்கு பத்து சதுர அடி நிலம் ஆகும். இவை ஒவ்வொன்றுக்கும் மூன்று வார்த்தைகள் கொண்ட பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு பூமி பந்து முழுக்க பத்துக்கு பத்து சதுர அடி வீதம் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு பெயர் சூட்டப்பட்டு இருப்பதால், ஒருவர் எங்கிருந்தாலும் மிக எளிமையாக கண்டுபிடிக்க முடியும். இந்த சேவை தற்போது மெர்சிடிஸ் பென்ஸ் வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது 40 மொழிகளில் கிடைக்கிறது.
செயலியை பயன்படுத்துவது எப்படி?
- செயலியை இன்ஸ்டால் செய்ததும், அதனை திறந்து சர்ச் பாக்ஸ் பகுதியில் தெருவின் பெயரை பதிவிட வேண்டும்.
- தெருவின் பெயரை பதிவிட்டதும் அந்த பகுதிக்கான மூன்று வார்த்தைகள் கொண்ட முகவரி தெரியும்.
- பின் அங்கு சென்றடைய நேவிகேட் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
- ஒவ்வொரு முறை பயன்படுத்தும் மூன்று வார்த்தைகள் கொண்ட முகவரி செயலியின் டேஷ்போர்டு பகுதியில் சேமிக்கப்படும்.
- ஒருவர் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ள செயலியை திறந்து திரையில் காணப்படும் சதுரங்களில் தேர்வு செய்யப்பட்டிருக்கும் சதுரங்கத்தை க்ளிக் செய்ய வேண்டும்.
- இவ்வாறு செய்ததும், அந்த பகுதிக்கான மூன்று வார்த்தைகள் அடங்கிய பெயரை காண முடியும்.
- இந்த செயலியை ஆப்லைன் மோடில் பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.
ஏர்டெல் நிறுவன தலைமை செயல் அதிகாரி தனது சந்தாதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பி இருக்கிறார்.
இந்தியாவில் ஆன்லைன் பரிமாற்றங்கள் வரலாறு காணாத அளவு அதிகரித்து வருவதால், சைபர் குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக ஏர்டெல் தலைமை செயல் அதிகாரி கோபால் விட்டல், அந்நிறுவன பயானர்களிடம் தெரிவித்து இருக்கிறார்.
ஏர்டெல் சந்தாதாரர்களுக்கு இதுகுறித்து அவர் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில் தற்போது இந்தியாவில் இரண்டு முக்கிய வழிகளில் ஆன்லைன் திருட்டு நடைபெறுவதாக குறிப்பிட்டு இருக்கிறார். முதலில் ஏமாற்றுவோர் ஏர்டெல் ஊழியர்கள் என கூறி பயனர்களுக்கு அழைப்பு மேற்கொள்கின்றனர். மற்றொரு புறம் வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் பேமன்ட் செய்யும் போது சைபர் குற்றங்கள் அரங்கேற்றப்படுகின்றன.
`கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை மிகத்தீவிரம் அடைந்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதன் காரணமாக ஆன்லைன் பரிவரத்தனைகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதே போன்று சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகிறது,' என விட்டல் தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

ஏர்டெல் ஊழியர்கள் என கூறிக்கொண்டு பயனர்களின் KYC விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை என கூறி, டீம் வீவர் மூலம் குவிக் சப்போர்ட் எனும் செயலியை இன்ஸ்டால் செய்து பயனரின் சாதனத்தை இயக்கும் வசதியை திருடர்கள் பெற்று விடுகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
இத்துடன் ஏர்டெல் ஊழியர் என கூறி அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் மூலம் மிகமுக்கிய விஐபி எண்களை குறைந்த விலையில் வழங்குவதாக பயனர்களிடம் தெரிவித்து, முன்பணம் செலுத்த கூறுகின்றனர்.
ஏர்டெல் விஐபி எண்களை அழைப்புகளின் மூலம் விற்பனை செய்வதில்லை. மேலும் மூன்றாம் தரப்பு செயலிகளை இன்ஸ்டால் செய்ய ஏர்டெல் எப்போதும் வலியுறுத்தாது என விட்டல் தெரிவித்தார்.






