என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    ஆப்பிள் நிறுவனத்தின் WWDC 21 நிகழ்வில் மேக் ஒஎஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    ஆப்பிள் நிறுவனம் மென்பொருள் சார்ந்த புது அறிவிப்புகளை வெளியிடும் சர்வதேச டெவலப்பர்கள் (WWDC) நிகழ்வு துவங்கியது. ஆப்பிள் வழக்கப்படி அசத்தலான அறிமுக வீடியோவுடன் 2021 WWDC நிகழ்வு துவங்கியது.

     டிம் குக்

    ஆப்பிள் WWDC 21 நிகழ்வின் துவக்க உரையில் ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் மேற்கொண்டார். தொடக்க உரையில், ஆப்பிள் டெவலப்பர்களுக்கு வழங்கும் புது சேவைகளை பற்றி விளக்கினார். 

    துவக்க உரையை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்தின்  மென்பொருள் பொறியியல் பிரிவுக்கான மூத்த துணை தலைவர் க்ரியாக் ஃபெடரிகி ஐஒஎஸ் 15 வழங்கும் புது அம்சங்களை விவரித்தார்.

    அதன்படி ஐஒஎஸ் 15 தளத்தில் பேஸ்டைம் சேவை பல்வேறு புது அப்டேட்களை பெற்றுள்ளது. இம்முறை பேஸ்டைம் சேவையில் ஸ்பேஷியல் ஆடியோ அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் ஆடியோ அனுபவம் முன்பு இருந்ததை விட மேம்பட்டு இருக்கிறது. பேஸ்டைம் செயலியில் புதிதாக போர்டிரெயிட் மோட் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மேலும் பேஸ்டைம் அழைப்புகளை லின்க்குகளாக மாற்றும் வசதி வழங்கப்படுகிறது. 

     ஐமெசேஜ்

    இதேபோன்று புது ஐஒஎஸ் தளத்தின் மெசேஜஸ் சேவையில் புது அம்சங்கள் வழங்கப்படுகிறது. அதன்படி மெசேஜஸ் செயலியில் பல்வேறு வசதிகள் அடங்கிய (DND-Do Not Disturb) அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. போக்கஸ் என அழைக்கப்படும் புது அம்சம் எதுபோன்ற குறுந்தகவல்களுக்கு நோட்டிபிகேஷன் வரவேண்டும் என்பதை பயனர்களே முடிவு செய்ய அனுமதிக்கிறது.

     ஆப்பிள் மேப்ஸ்

    ஐஒஎஸ் 15 தளத்தில் ஆப்பிள் கீஸ் அம்சம் பல்வேறு புது கார்கள், தனியார் விடுதிகளில் வழங்கப்படுகிறது. இத்துடன் இந்த சேவையை விரிவுப்படுத்த பல்வேறு நிறுவனங்களுடன் ஆப்பிள் இணைந்துள்ளது. இதேபோன்று அடையாள சான்று மற்றும் இதர தனிப்பட்ட விவரங்கள் அடங்கிய கார்டுகளை ஆப்பிள் வாலெட் செயலியில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

    இவற்றுடன் ஆப்பிள் மேப், வெதர் செயலிகளிலும் பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. ஆப்பிள் மேப் சேவையில் முன்பு இருந்ததை விட அதிக நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. புது மேப் செயலியில் முகவரிகள் முற்றிலும் புது முறையில் அதிக தெளிவாக காட்சியளிக்கும்படி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஐஒஎஸ் 15 ஆப்பிள் ஏர்பாட்ஸ் சாதனத்தில் அதிக அம்சங்களை வழங்குகிறது. மேலும் இது ஆடியோ அனுபவத்தை முன்பு இருந்ததை விட அதிகளவு மேம்படுத்துகிறது. இது ஏர்பாட்ஸ் சாதனத்தில் ஸ்பேஷியல் ஆடியோ வசதி வழங்கப்படுகிறது.

     ஐபேட் ஒஎஸ் 15

    ஐபேட் ஒஎஸ் 15

    ஐபேட் ஒஎஸ் 15 விட்ஜெட்களில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விட்ஜெட்களை பொழுதுபோக்கு, விளையாட்டு என பல விதங்களில் பிரித்து அவற்றை மிக அழகாக ஒருங்கிணைத்து அடுக்கி வைத்துக் கொள்ளலாம். ஆப் லைப்ரரி அம்சத்தில் அனைத்து செயலிகளையும் விட்ஜெட் மூலம் பார்க்கலாம்.

    இதில் உள்ள மல்டி டாஸ்கிங் அம்சம் கொண்டு ஒரே சமயத்தில் இரு செயலிகளை பயன்படுத்த முடியும். செயலியின் தன்மைக்கு ஏற்ப அவற்றின் அளவை திரையில் மாற்றியமைத்துக் கொள்ளலாம். இந்த அம்சம் ஒவ்வொரு செயலிக்கு ஏற்ப அசத்தலான வசதிகளை வழங்குகிறது.

    இதன் டிரான்ஸ்லேட் அம்சம் கடந்த ஆண்டை விட இம்முறை அதிக வசதிகளை வழங்குகிறது. வருடாந்திர அடிப்படையில் ஆப்பிள் டிரான்ஸ்லேட் பயனர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து இருக்கிறது. மேலும் ஸ்விப்ட் பிளே கிரவுண்ட் தளமும் அதிகளவு மாற்றப்பட்டது. 

    இதில் செயலிகளுக்கு குறியீடு எழுதும் போதே அவற்றை சோதனை செய்யும் வசதியும், அவற்றை உடனடியாக ஆப் ஸ்டோரில் பதிவேற்றம் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. 

    பிரைவசி

    இன்றைய உரையில் ஆப்பிள் நிறுவனம் பிரைவசி சார்ந்த அம்சங்களை அறிவித்தது. அதன்படி மெயில் பிரைவசி ப்ரோடெக்ஷன் அறிமுகமாகிறது. இது ஐபி முகவரிகளை மறைக்கும். மேலும் சபாரி பிரவுசரில் டிராக் செய்வோரிடம் இருந்தும் ஐபி முகவரிகளை மறைக்கிறது. இத்துடன் செயலிகள் எவ்வாறு பிரைவசி செட்டிங்களை பயன்படுத்திகின்றன என்பதை அறிந்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது.

     வாட்ச் ஒஎஸ் 8

    வாட்ச் ஒஎஸ் 8

    புதிய வாட்ச் ஒஎஸ் 8 புதுவிதமான அனிமேஷன்களை கொண்டுள்ளது. இவை பயனர்கள் மனநிலையை ஒரே தன்மையில் வைத்துக் கொள்ள உதவுகிறது. இதுதவிர மன உளைச்சல் ஏற்படும் வாய்ப்பை வெகுவாக குறைக்கிறது. மேலும் பயனர் சுவாச அளவில் மாற்றம் ஏற்பட்டால் உடனே அதுபற்றிய நோட்டிபிகேஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் பல்வேறு உடற்பயிற்சிகள் வாட்ச் ஒஎஸ்-இல் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் ஆப்பிள் வாட்ச் சாதனத்தில் அதிக பிரபலமான வாட்ச் பேஸ் புது ஒஎஸ்-இல் மாற்றப்பட்டு இருக்கிறது. புது தளத்தில் வாட்ச் பேஸ் முன்பை விட அதிக விவரங்களை வழங்குகிறது. இத்துடன் புதிதாக போட்டோஸ் ஆப் சேர்க்கப்பட்டு உள்ளது. வாட்ச் ஒஎஸ் கொண்டு குறுந்தகவல் அனுப்பும் வசதியில் அசத்தலான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

     மேக் ஒஎஸ்

    மேக் ஒஎஸ் 

    மேக் ஒஎஸ் மான்ட்ரெ தளத்தில் யுனிவர்சல் கண்ட்ரோல் எனும் புது அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மேக் கீபோர்டு மற்றும் மவுஸ் கொண்டு ஐபேட் சாதனத்தையும் இயக்க முடியும். இதே போன்று ஐமேக் மவுஸ் மற்றும் கீபோர்டு கொண்டு ஐபேட் மற்றும் ஐமேக் சாதனங்களை இயக்கலாம்.  

    மேக் சாதனங்களுக்கான ஏர்பிளே அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இருப்பதை போன்றே ஏர்பிளே அம்சம் ஐமேக் தளங்களிலும் இயங்கும். புதிய மான்ட்ரெ தளத்தில் ஷார்ட்கட்ஸ் மற்றும் ஷார்ட்கட் எடிட்டர் அம்சங்கள் உள்ளன. இது மேக் சாதனங்களின் பல்வேறு செயலிகளில் இயங்கும். 

    உலகின் அதிவேக பிரவுசராக இருக்கும் சபாரி பயனர் விவரங்களை பாதுகாப்பதில் தலைசிறந்த அம்சங்களை கொண்டிருக்கிறது. இதன் தோற்றம் முற்றிலுமாக மாற்றப்பட்டு டேப்கள் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் சர்ச் டேப் முன்பைவிட சிறியதாக இருக்கிறது. இதுமட்டுமின்றி பல்வேறு இதர டேப்களும் அளவில் சிறியதாக இருக்கின்றன. 

    புதிய சபாரி பிரவுசர் மேக், ஐமேக், ஐபேட் என அனைத்து சாதனங்களிலும் ஒரே மாதிரி காட்சியளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஐபோனில் சர்ச் பார் திரையில் மென்மையாக க்ளிக் செய்தால் தோன்றும். இதனால் சிறு திரையிலும் பெரிய பிரவுசர் அனுபவம் கிடைக்கும்.

    ஆப் ஸ்டோர் துவங்கியது முதல் ஆப்பிள் டெவலப்பர்களுக்காக மேற்கொண்ட நடவடிக்கைகளை க்ரியாக் விவரித்தார். மேலும் இன்று அறிவிக்கப்பட்ட புது ஒஎஸ் பீட்டா வெர்ஷன் இன்று முதல் கிடைக்கும் என டிம் குக் தெரிவித்தார். இவற்றின் பொது பீட்டா அடுத்த மாதமும், இதைத் தொடர்ந்து அனைவருக்குமான ஸ்டேபில் ஒஎஸ் சில மாதங்களில் வெளியாகும் என கூறி நிகழ்வை டிம் குக் நிறைவு செய்தார்.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 5ஜி போன் விலை மற்றும் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்கள் கூட்டணியில் 5ஜி ஸ்மார்ட்போன் உருவாகி வருவது  அனைவரும் அறிந்ததே. புதிய 5ஜி மாடல் விவரங்கள் ஜூன் 24 ஆம் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஜியோ 5ஜி மாடல் 2021 தீபாவளி வாக்கில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.  

    கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து 5ஜி ஸ்மார்ட்போன் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கடந்த வாரம் தெரிவித்து இருந்தார். எனினும், இதன் வெளியீடு குறித்து எந்த தகவலையும் வழங்கவில்லை. 

     ஜியோ 5ஜி

    தற்போதைய தகவல்களின் படி ஜியோ 5ஜி மாடல் தீபாவளி காலக்கட்டத்தில் அதாவது அக்டோபர் - நவம்பர் மாத வாக்கில் வெளியாகும் என கூறப்படுகிறது. புது மாடல் வெளியீடு பற்றி இரு நிறுவனங்கள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

    புது 5ஜி மாடல் விலை 50 டாலர்களுக்கும் கீழ் நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் இதன் விலை ரூ. 3500 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் ப்ரோ மாடல் அம்சங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
     

    ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் ப்ரோ மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புது ஐபேட் மாடல் கிளாஸ் பேக் டிசைன் கொண்டிருக்கும் என்றும் இதில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

     ஐபேட் ப்ரோ

    ஐபேட் மினி சீரிசை மேம்படுத்தி, புதிதாக என்ட்ரி-லெவல் ஐபேட் மாடல் ஒன்றை அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீப காலங்களில் வெளியாகும் ஐபோன்களில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. 

    அந்த வகையில் புதிய ஐபேட் மாடல்களிலும் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை ஆப்பிள் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. ஐபேட் ப்ரோ மாடலில் வயர்லெஸ் சார்ஜிங் மட்டுமின்றி ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை வழங்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
    கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புவோர் கோவின் தளத்தை பிராந்திய மொழிகளில் இயக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    கொரோனாவைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள இந்தியாவில் கோவின் தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இதுவரை கோவின் தளம் ஆங்கில மொழியில் மட்டுமே இயக்க முடியும். தற்போது பிராந்திய மொழிகளில் இயக்கும் வசதி சேர்க்கப்பட்டு இருக்கிறது.

     ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட்

    அந்த வகையில் கோவின் தளம் இந்தி, அசாமீஸ், கன்னடா, பெங்காலி, ஒடியா, மலையாளம், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி போன்ற மொழிகளில் இயக்க முடியும். கோவின் தளத்தில் பிராந்திய மொழிகளுக்கான வசதி வழங்கப்பட்டு இருப்பதை மத்திய சுகாதார துறை தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்து இருக்கிறது.

    கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள கோவின் தளம் மட்டுமின்றி உமாங் அல்லது ஆரோக்ய சேது போன்ற செயலிகளிலும் முன்பதிவு செய்ய முடியும். 
    சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் மாற்றியமைக்கப்பட்டு இருக்கிறது.

    சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக ரெட்மி நோட் 10, ரெட்மி நோட் 10 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் ரெட்மி நோட் 10எஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்தியாவில் அறிமுகமான இரண்டு மாதங்களில் சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 10 ப்ரோ விலையை உயர்த்தி இருக்கிறது. முன்னதாக ஏப்ரல் மாத வாக்கில் ரெட்மி நோட் 10 விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரெட்மி நோட் 10 மாடல் விலை ரூ. 500 வரை உயர்த்தப்பட்டது.

    அந்த வகையில் தற்போது, ரெட்மி நோட் 10 ப்ரோ மாடல் விலையும் ரூ. 500 உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலை உயர்வு 6 ஜிபி + 128 ஜிபி மாடலுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விலை உயர்வை தொடர்ந்து இதன் புதிய விலை ரூ. 17,499 என மாறி இருக்கிறது.
    ட்விட்டர் சமூக வலைதளத்தில் துவங்கப்பட இருக்கும் புது சேவை குறித்த விவரங்கள் கூகுள் பிளே ஸ்டோர் தளத்தில் இடம்பெற்று இருக்கிறது.

    ட்விட்டர் நிறுவனம் ட்விட்டர் புளூ எனும் பெயரில் புது சந்தா முறையை உருவாக்கி வருவதாக பலமுறை இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தது. இது குறித்த விவரங்கள் ஐஒஎஸ் தளத்துக்கான ஆப் ஸ்டோரிலும் இடம்பெற்றது. தற்போது ட்விட்டர் புளூ விவரங்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இடம்பெற்று இருக்கிறது. 

    சமீபத்திய ட்விட்டர் பீட்டா பதிப்புக்கான கூகுள் பிளே ஸ்டோர் பட்டியலில் ஆப் பர்சேஸ் இடம்பெற்று இருக்கிறது. இதில் சேவைக்கான கட்டணம் 2.99 டாலர்கள் முதல் துவங்குகிறது. இதே விலை ட்விட்டர் புளூ சேவைக்கு நிர்ணயிக்கப்படுவதாக தகவல் வெளியாகி இருந்தது. 

     கோப்புப்படம்

    ட்விட்டர் புளூ சேவையில் பயனர் பதிவிட்ட ட்விட்களை திரும்ப பெறும் வசதி, செயலியை பல நிறங்கள் அடங்கிய தீம்கள் மூலம் கஸ்டமைஸ் செய்வது என ஏராளமான அம்சங்கள் வழங்கப்படுகின்றன. தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் இடம்பெற்று இருப்பதால், விரைவில் இந்த சேவை துவங்கப்படும் என கூறப்படுகிறது. 

    புதிய ட்விட்டர் புளூ சேவை பல்வேறு சந்தா முறைகளில் கிடைக்கும். இவற்றில் அதிக விலை கொண்ட சந்தாவில் அதிக அம்சங்கள் வழங்கப்படும். ட்விட்டர் புளூ சேவைக்கான ஆரம்ப விலை மாதம் 2.99 டார்கள், இந்திய மதிப்பில் ரூ. 218 வரை நிர்ணயிக்கப்படலாம்.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் பயனர்கள் புது அப்டேட் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.


    ஐஒஎஸ் 14.6 அப்டேட் செய்ததில் இருந்து ஐபோன் பேட்டரி வெகு விரைவில் தீர்ந்து போவதாக பயனர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த அப்டேட் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. புது அப்டேட் ஆப்பிள் கார்டு பேமிலி, ஆப்பிள் பாட்காஸ்ட் சந்தா, ஏர்டேக் மற்றும் பல்வேறு அம்சங்களை வழங்கியது.

     ஐஒஎஸ்

    புது அம்சங்கள் தவிர சில பிழை திருத்தங்களையும் இந்த அப்டேட் வழங்கியது. எனினும், சமீபத்திய அப்டேட் ஐபோனின் பேட்டரியை விரைவில் தீர்ந்து போக செய்கிறது. பேட்டரி பிரச்சினையை ஐபோன் பயனர்கள் ஆப்பிள் சப்போர்ட் போரம் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர். 

    ஐபோன் XS பயனர் ஒருவர் தனது மொபைலில் உறங்கும் முன் முழு சார்ஜ் செய்த போதும், காலையில் பேட்டரி அளவு 30 சதவீதம் வரை குறைந்ததாக தெரிவித்துள்ளார். ஐபோனினை பயன்படுத்தாத நிலையிலும் 70 சதவீத சார்ஜ் காலியானதாக அவர் தெரிவித்தார்.
    நாங்க அந்த சேவையை வழங்குவதில்லை, இதனால் அதற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூகுள் தெரிவித்துள்ளது.


    அமெரிக்காவை சேர்ந்த கூகுள் நிறுவனம் புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் எங்களுக்கு பொருந்தாது என தெரிவித்துள்ளது. இணையத்தில் உள்ள தரவை நீக்க டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு கூகுள் இவ்வாறு பதில் அளித்து இருக்கிறது. 

    கோப்புப்படம்

    பெண் ஒருவரின் ஆபாச புகைப்படங்கள் ஆபாச வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதும், புகைப்படங்கள் இணையத்தில் இருந்து நீக்கமுடியாத சூழல் நிலவுகிறது. இதுகுறித்து நீதிபதி ஜோதி சிங் மத்திய அரசு, டெல்லி அரசு, இணைய சேவை வழங்குநர் ஆணையம், பேஸ்புக் உள்ளிட்டவைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    இந்த விவகாரத்தில் கூகுள் தெரிவித்து இருக்கும் கருத்துக்கு பதில் அளிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூகுள் சமூக வலைதள நிறுவனம் இல்லை என தெரிவித்ததால், நீதிமன்றம் இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை. கூகுள் சமூக வலைதள நிறுவனங்களுக்கு பாலமாக விளங்குவதாக நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறது.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் குறைந்த விலை பிரீபெயிட் சலுகை மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 98 பிரீபெயிட் சலுகையை மீண்டும் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும். இதில் தினமும் 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும்  ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்துவதற்கான சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

     கோப்புப்படம்

    கடந்த  ஆண்டு 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ. 98 பிரீபெயிட் சலுகையை ரிலையன்ஸ் ஜியோ நிறுத்தியது. இம்முறை இதன் வேலிடிட்டி பாதியாக குறைக்கப்பட்டு மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அன்றாடம் வழங்கப்படும் அதிவேக டேட்டா தீர்ந்ததும், டேட்டா வேகம் 64Kbps ஆக குறைக்கப்பட்டுவிடும்.

    ஜியோ ரூ. 101 சலுகையில் அதிகபட்சம் 12 ஜிபி டேட்டா, 1362 ஐயுசி நிமிடங்களுக்கான டாக்டைம் வழங்கப்படுகிறது. ஜியோவின் புது அறிவிப்பை தொடர்ந்து, ஏர்டெல், வி மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்கள் ரூ. 98 விலையில் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் சேவையை வழங்குகின்றன.
    சியோமி நிறுவனம் ஹைப்பர்சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    சியோமி 200 வாட் ஹைப்பர்சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இது 4000 எம்ஏஹெச் பேட்டரியை 8 நிமிடங்களுக்குள் முழுமையாக சார்ஜ் செய்துவிடும். இத்துடன் 120 வாட் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. 



    இது 4000 எம்ஏஹெச் பேட்டரியை 15 நிமிடங்களுக்குள் முழுமையாக சார்ஜ் செய்துவிடும். முன்னதாக சியோமி அறிமுகம் செய்த எம்ஐ 10 அல்ட்ரா மாடலில் 80 வாட் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டது. புது அறிவிப்பின் மூலம் 100 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியை அறிமுகம் செய்த முதல் நிறுவனமாக சியோமி இருக்கிறது. 

    200 வாட் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை சியோமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தது. பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்கும் வீடியோவையும் சியோமி வெளியிட்டு இருக்கிறது. வீடியோவில் 4000 எம்ஏஹெச் பேட்டரி 10 சதவீதம் சார்ஜ் ஆக 44 நொடிகளே ஆகிறது. மேலும் மூன்று நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ் ஆகிவிடும். 
    புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை ஏற்கும் வகையில் இந்தியாவுக்கான அதிகாரி நியமிக்கப்பட்டு இருப்பதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    ட்விட்டர் நிறுவனம் மத்திய அரசு பிறப்பித்து இருக்கும் புதிய விதிமுறைகளை ஏற்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது. விதிகளை ஏற்கும் விவகாரம் குறித்து வழக்கறிஞர் அமித் ஆச்சார்யா தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரேகா பள்ளி அரசு மற்றும் ட்விட்டர் நிறுவனங்கள் பதில் அளிக்க உத்தரவிட்டார். 

     ட்விட்டர்

    மனுதாரின் மனுவில், `ட்விட்டரில் நான் எதிர்கொண்ட பதிவு குறித்து குறைதீர்க்கும் அதிகாரியை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் அவரின் தொடர்பு விவரங்களை கண்டறிய இயலவில்லை. ட்விட்டர் நிறுவனம் அமெரிக்கரை அதிகாரியாக நியமித்து இருக்கிறது. ஆனால் இது சமீபத்திய தகவல் தொழில்நுட்ப விதிகளை முறையாக ஏற்கும் வகையில் இல்லை,' என குறிப்பிட்டு இருக்கிறார்.

    நீதிமன்ற உத்தரவுக்கு பதில் அளித்த ட்விட்டர், அரசு விதித்த புது கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளை ஏற்கும் வகையில் குறைதீர்க்கும் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்து இருக்கிறது. இந்த வழக்கு விசாரணை ஜூலை 6 ஆம் தேதிக்கு  ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. 
    ட்விட்டர் தளத்தில் பேஸ்புக்கில் உள்ளது போன்ற எமோஜி ரியாக்ஷன்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ட்விட்டர் தளத்தில் எமோஜி ரியாக்ஷன்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் பேஸ்புக்கில் உள்ளது போன்று விரைவில் ட்வீட்களுக்கும் ரியாக்ஷன் கொடுக்கலாம். தற்போது ட்வீட்களுக்கு லைக் மூலமாகவே விருப்பம் தெரிவிக்கும் முறை அமலில் உள்ளது.

    விரைவில் லைக்ஸ், சீர்ஸ், ஹூம், சேட் மற்றும் ஹாஹாஹா போன்ற ரியாக்ஷன்களை வழங்க ட்விட்டர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஐகான்கள் எமோஜிக்கள் போன்றே காட்சியளிக்கிறது. சில ரியாக்ஷன்களுக்கு ஐகான்களை உறுதிப்படுத்தும் பணிகளில் ட்விட்டர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.



    புது ரியாக்ஷன்கள் பேஸ்புக்கில் எமோஜிக்கள் உள்ளது போன்றே காட்சியளிக்கிறது. யார் யார் எந்த எமோஜி மூலம் ரியாக்ஷன் கொடுத்துள்ளனர் என்ற விவரங்களை ட்விட்டர் வழங்கும் என தெரிகிறது.
    ×