search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "search engine"

    • பட்டியலில், பண்டிகை கால உணவு தயாரிப்புகள் முதல் பத்தில் இடம் பெற்றன
    • மாங்காயை பலவிதங்களில் உணவுக்கு சுவை சேர்க்க மக்கள் பயன்படுத்துகின்றனர்

    உலகெங்கும் பிரபலமான கூகுள் (Google) தேடுதல் எந்திரத்தைத்தான் இணையதளங்களில் தங்கள் தகவல் தேடுதலுக்கு பெரும்பான்மையான பயனர்கள் நம்புகிறார்கள்.

    இதில் பயனர்கள் தேடும் தகவல்களின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் அவர்களால் அதிகம் தேடப்பட்ட சொல் அல்லது சொற்றொடர் எது என கூகுள் நிறுவனம் வெளியிடும். இதில் பல்வேறு துறை சார்ந்த சொற்களின் பட்டியல் அடங்கும்.

    அதன்படி, 2023 ஆண்டிற்கான பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டது. இதில் உணவு தயாரிப்புகள் குறித்து அதிகம் தேடப்பட்ட சொற்றொடர்கள் பட்டியல் வழக்கமாக இந்தியர்களால் ஆர்வத்துடன் பார்க்கப்படும்.

    இப்பட்டியலில் தெலுங்கு வருட பிறப்பு கொண்டாட்டத்தில் பரிமாறப்படும் உகாடி பச்சிடி, வினாயக சதுர்த்தி அன்று தயாரிக்கப்படும் கொழுக்கட்டை, திருவாதிரை களி, வட இந்திய உணவான தனியா பஞ்சிரி, பஞ்சாமிர்தம் என பல பொருட்கள் முதல் 10 சொற்களில் இடம் பிடித்துள்ளன.

    ஆனால், இவையெல்லாவற்றையும் கடந்து அதிகம் பேரால் தேடப்பட்ட உணவு சொற்றொடர் எனும் புகழை பெற்று "மாங்காய் ஊறுகாய்" முதலிடம் பிடித்துள்ளது. இத்தகவல் சமூக வலைதளங்களில் பயனர்களால் சுவாரஸ்யமாக விவாதிக்கப்படுகிறது.

    தமிழர்களின் அன்றாட உணவு பட்டியலில் மாங்காய்களுக்கு தனி இடம் உண்டு.


    நீரில் சுத்தம் செய்து கடித்து உண்ணுதல், துண்டு துண்டாக நறுக்கி உப்பு சேர்த்து உண்ணுதல், வெயிலில் காய வைத்து உலர்த்தி உப்பு கலந்து உண்ணுதல், உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து உண்ணுதல் ஆகியவை மட்டுமல்லாமல் பலவித வழிமுறைகளில் ஊறுகாயாக உருவாக்கி சிற்றுண்டி, மதிய மற்றும் இரவு உணவுகளுக்கும், விருந்தோம்பலுக்கும் பயன்படுத்தப்பட கூடிய ஒரு சிறப்பிடம் மாங்காய்க்கு உண்டு.

    மேலும், சிறுவர்கள், பெரியவர்கள், கர்ப்பிணிகள் என பலருக்கும் மாங்காய் ஊறுகாய் விருப்பமான ஒன்று என்பதால் அதை உருவாக்கும் முறை, இணைய தேடலில் முதலிடம் பிடித்தது எதிர்பார்க்க கூடியதுதான் என பயனர்கள் தெரிவிக்கின்றனர்.

    • உலகில் பிங்க், டக்டக்கோ என பல தேடுதல் எந்திரங்கள் உள்ளன
    • செலவிடும் தொகைக்கு மேல், கூகுள் வருவாயை ஈட்டுகிறது

    வணிக நிறுவனங்கள் ஒன்றுடன் ஒன்று நேர்வழியில் போட்டியிடவும், முறையற்ற வழியில் ஏகபோக முன்னிடத்தை ஒரு நிறுவனம் பெறுவதை தடுக்கவும், அமெரிக்காவில் "ஆன்டி-டிரஸ்ட்" சட்டங்கள் உருவாக்கப்பட்டன. இச்சட்டத்தை மீறியதாக உலகின் முன்னணி மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனமான அல்ஃபாபெட் (Alphabet) மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு விசாரணை நேற்று தொடங்கியது.

    இணையத்தில் தகவல்களை தேட விரும்புபவர்களுக்கு, அவர்கள் தேடும் தகவல்ளை உள்ளடக்கிய இணைய பக்கங்களை உடனடியாக எடுத்து தருவது "ஸெர்ச் எஞ்சின்" எனப்படும் மென்பொருள். தேடுதல் எந்திரமாக பயன்படுத்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிங்க் (Bing), டக்டக்கோ (DuckDuckGo) உட்பட பல மென்பொருள்கள் இருந்தாலும், பலரும் நாடுவது அமெரிக்காவின் அல்ஃபாபெட் நிறுவனத்தின் கூகுள் (Google) ஆகும்.

    இத்துறையில் உலக சந்தையில் 90 சதவீதம் கூகுளின் வசம் உள்ளது. இதன்மூலம் உலகிலேயே முன்னணி தேடுதல் எஞ்சினாக இருப்பதுடன், அத்தேடுதலின் போது வெளியிடப்படும் விளம்பரங்களினால் தினமும் பல கோடிகளை வருமானமாக ஈட்டுகிறது. ஆனால், இந்நிறுவனம் குறுக்கு வழியில் முறையற்று ஏகபோக நிலையை அடைந்ததாக வழக்கு நடக்கிறது.

    "ஆண்ட்ராய்டு (கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமானது) மற்றும் ஐஓஎஸ் (ஆப்பிள் நிறுவனத்திற்கு சொந்தமானது) ஆகியவை எப்போதும் பயனர்களுக்கு கூகுளையே முன்னிறுத்தும் வகையில் ஆல்ஃபாபெட் நிறுவனம் வருடந்தோறும் 10 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் செலவிட்டு வருகிறது.

    இதனால் எளிதாக அந்நிறுவனம் சந்தையில் தங்களை நிலைநிறுத்தி கொள்ள முடிகிறது. இதில் கிடைக்கும் ஏகபோக அந்தஸ்தினால், அது செலவிடும் தொகையை விட பெரும் வருவாயை ஈட்ட முடிகிறது. இது சங்கிலித்தொடர் போல் கூகுள் நிறுவனத்திற்கே சாதகமாக இருப்பதால் மற்ற நிறுவனங்களின் தேடுதல் எஞ்சின்கள் களத்திலேயே இறங்க முடிவதில்லை," என கூகுள் நிறுவனத்திற்கு எதிராக வாதிடும் அமெரிக்க நீதித்துறை வழக்கறிஞர் கென்னத் டின்சர் தெரிவித்தார்.

    இக்குற்றச்சாட்டுகளை மறுக்கும் கூகுள், "எங்கள் உயர்ந்த தரத்தினாலும், நாங்கள் செய்துள்ள அவசியமான முதலீடுகளினாலும்தான் இத்துறையில் முன்னணியில் உள்ளோம்" என தெரிவித்துள்ளது.

    இவ்வழக்கு விசாரணை முடிய 3 மாதங்களுக்கு மேலாகலாம் என்றும் தீர்ப்பு எவ்வாறு இருந்தாலும் இரு தரப்பினரும் மேல்முறையீட்டுக்கு செல்ல வாய்ப்புள்ளதால் பல வருடங்கள் இவ்வழக்கு தொடரும் என்றும் இணைய வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

    ×