என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஏர்டெல் நிறுவனம் 5ஜி தொழில்நுட்பத்தை விரைவில் வழங்க தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் 5ஜி சோதனையை ஐதராபாத் நகரில் வெற்றிகரமாக மேற்கொண்டது. இந்த சோதனை வர்த்தக நெட்வொர்க்கில் நடத்தப்பட்டது. வெற்றிகர சோதனையை தொடர்ந்து நாடு முழுக்க விரைவில் 5ஜி சேவையை வழங்க ஏர்டெல் தயாராகி வருகிறது.

    இதற்கென ஏர்டெல் நிறுவனம் Sub-6GHz NSA நெட்வொர்க் தளத்தை 1800MHz பேண்ட் பயன்படுத்தி இருக்கிறது. இதன் உபகரணம் 1800/2100/2300MHz மற்றும் sub-GHz பேண்ட்களான 800/900 MHz உள்ளிட்டவைகளுடன் இயங்கும் திறன் கொண்டது.

     கோப்புப்படம்

    ஆற்றல் மிக்க ஸ்பெக்ட்ரம் ஷேரிங் தொழில்நுட்பம் கொண்டு ஏர்டெல் நிறுவனம் ஒரே ஸ்பெக்ட்ரமில் 4ஜி மற்றும் 5ஜி நெட்வொர்க்களை இயக்க இருக்கிறது. இதன் காரணமாக இன்னும் சில மாதங்களில் ஏர்டெல் 5ஜி சேவைகளை துவங்க இருப்பதாக தெரிவித்து உள்ளது.

    4ஜி சேவையை போன்றே இந்த தொழில்நுட்பமும் படிப்படியாக பயனர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. முதற்கட்டமாக மெட்ரோ நகரங்களில் ஏர்டெல் 5ஜி சேவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போதைய சோதனைகளில் ஒப்போ ரெனோ5 ப்ரோ மற்றும் ஒப்போ பைண்ட் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் 3Gbps வேகத்தில் இணைய வசதி கிடைத்ததாக கூறப்படுகிறது. இது முன்கூட்டியே சோதனையை துவங்கிய ஜியோவின் 1Gbps-ஐ விட அதிகம் ஆகும்.
    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போன் ரூ. 7 ஆயிரம் பட்ஜெட்டில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 2 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது.

    முன்னதாக வெளியான தகவல்களில் புதிய கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் இதில் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி இரண்டாவது சென்சார், 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்படலாம்.

     கேலக்ஸி எம்02

    இத்துடன் மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 சார்ந்த ஒன்யுஐ கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் சாம்சங் கேலக்ஸி எம்02 விலை ரூ. 7 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இது அமேசான் மற்றும் சாம்சங் இந்தியா வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. 
    இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் வியாபாரங்கள் இருமடங்கு வளர்ச்சியை பதிவு செய்து இருக்கின்றன.

    டிசம்பர் 26 ஆம் தேதி வரையிலான காலாண்டு வாக்கில் இந்திய வியாபாரத்தில் ஆப்பிள் நிறுவனம் இருமடங்கு வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. இந்த தகவலை ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்து இருக்கிறார்.

    இத்துடன் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது ஆப்பிள் நிறுவன வருவாய் இதுவரை இல்லாத அளவு அதிகரித்து ரூ. 8,14,270 கோடியாக உள்ளது. இது சர்வதேச அளவில் முந்தைய ஆண்டை விட 21 சதவீதம் அதிகம் ஆகும். இந்த வளர்ச்சிக்கு ஐபோன் 12 சீரிஸ் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

     ஐபோன் 12

    இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் சில்லறை வியாபாரத்தை பிரத்யேக ஆன்லைன் ஸ்டோர் மூலம் துவங்கியது. இதுதவிர ஆப்லைன் ஸ்டோர்களை திறப்பதிலும் ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து திட்டமிட்டு அதற்கென கவனம் செலுத்தி வருகிறது.

    2020 ஆண்டு ஆப்பிள் நிறுவனம் 93 சதவீதம் வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்து உள்ளது. மேலும் டிசம்பர் மாதத்துடன் நிறைவுற்ற காலாண்டில் ஸ்மார்ட்போன் சந்தையில் தனது பங்குகளை இருமடங்கு அதிகரித்து இருக்கிறது. 
    சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்களுக்கு தணிக்கை கோரி தொடரப்பட்ட வழக்கில் யூடியூப், கூகுள், பேஸ்புக் நிறுவனங்கள் பதில் அளிக்க மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது.


    சென்னையில் தவறான வார்த்தைகளில் கேள்விகளை பொதுமக்களிடம் கேட்டு யூ-டியூப் சேனலில் வீடியோ பதிவிட்டதாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை போலீசார் கைது செய்து உள்ளனர். கடந்த 2012-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி இணையதளம் மூலம் மிரட்டுவதில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.

    தற்போது கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. குழந்தைகள் அதிகப்படியாக செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் குழந்தைகள் அதிக அளவில் சமூகவலைதளங்களை உபயோகிக்க வாய்ப்பு உள்ளது. 

    சமூக வலைதளங்களில் ஆபாசம் நிறைந்த படங்கள், வார்த்தைகள் நிறைய வருவதால் குழந்தைகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. யூடியூப்பில் ஆபாசமாக பதிவிட்ட சில பதிவுகள் நீக்கம் செய்திருந்தாலும் பல பதிவுகள் நீக்கம் செய்யப்படவில்லை. பலர் நூதன முறையில் ஆபாச வீடியோக்கள், பதிவுகளை வெளியிடுகின்றனர். 

    யூடியூப்பை பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் தடை செய்துள்ளன. வருமுன் காப்பதே சிறந்தது. எனவே சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் வீடியோக்கள், புகைப்படங்கள், கருத்துகளை தணிக்கை செய்ய வேண்டும்.

     கூகுள்

    மேலும் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் கருத்துகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கட்டுப்படுத்துதல், கண்காணித்தல் மற்றும் வழிமுறைப்படுத்தவும், ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். என நெல்லையை சேர்ந்த உமாமகேசுவரன், மதுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருக்கிறார்.

    இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது மத்திய அரசு வக்கீல் ஆஜராகி, “யூடியூப், பேஸ்புக், கூகுள் மற்றும் சமூக வலைதளங்கள் தங்களுக்கான தணிக்கையை தாங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும். புகார்கள் ஏதேனும் வரும் பட்சத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து நீதிபதிகள், யூடியூப், பேஸ்புக், கூகுள் ஆகிய நிறுவனங்கள் இந்த வழக்கு குறித்து பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.
    48 எம்பி பிரைமரி கேமரா, 6000 எம்ஏஹெச் பேட்டரியுடன் விரைவில் இந்தியா வரும் போக்கோ ஸ்மார்ட்போன் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    போக்கோ பிராண்டு இந்தியாவில் போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 2 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    போக்கோ எம்3 ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி டாட் டிராப் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 4 ஜிபி ரேம், அதிகபட்சம் 128 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 2 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார், முன்புறம் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் டு-டோன் டிசைன், பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

     போக்கோ எம்3

    போக்கோ எம்3 சிறப்பம்சங்கள்

    - 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ 19.5:9 LCD ஸ்கிரீன்
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்
    - அட்ரினோ 610 GPU
    - 4 ஜிபி LPPDDR4x ரேம்
    - 64 ஜிபி (UFS 2.1) / 128 ஜிபி (UFS 2.2) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம்
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 12
    - 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
    - 2 எம்பி டெப்த் கேமரா
    - 2 எம்பி 4cm மேக்ரோ கேமரா, f/2.4
    - 8 எம்பி செல்பி கேமரா, f/2.05
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 6000 எம்ஏஹெச் பேட்டரி
    - 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்

    இந்தியாவில் புதிய போக்கோ எம்3 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விவரங்கள் அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.
    நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு விவரங்களை இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    5ஜி வசதி கொண்ட புது நோக்கியா ஸ்மார்ட்போன்கள் 2021 ஆண்டின் முதல் காலாண்டு அல்லது இரண்டாம் காலாண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் நோக்கியா 1.4, நோக்கியா 6.4 5ஜி மற்றும் நோக்கியா 7.4 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்கள் 2021 இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. எனினும், நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றி ஹெச்எம்டி குளோபல் இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை.

    நோக்கியா 1.4 என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் ஆகும். இதில் 6.51 இன்ச் ஹெச்டி எல்சிடி ஸ்கிரீன், 1 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி, மூன்று பிரைமரி கேமராக்கள், 5 எம்பி செல்பி கேமரா, 4000 எம்ஏஹெச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் வழங்கப்படலாம் என தெரிகிறது.

     நோக்கியா ஸ்மார்ட்போன்

    நோக்கியா 6.4 5ஜி மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா அல்லது 24 எம்பி சென்சார் மற்றும் 12 எம்பி அல்ட்ரா கேமரா, 2 எம்பி மேக்ரோ லென்ஸ், 2 எம்பி டெப்த் சென்சார், 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்படலாம்.

    நோக்கியா 7.3 மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 690 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 24 எம்பி செல்பி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ லென்ஸ் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
    இந்தியாவின் 72-வது குடியரசு தினத்தை முன்னிட்டு ட்விட்டர் சார்பில் சிறப்பு எமோஜி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


    இந்தியாவின் 72-வது குடியரசு தினத்தை முன்னிட்டு ட்விட்டரில் சிறப்பு எமோஜி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய எமோஜி இந்தியாவின் விமான படை மற்றும் தேசிய கொடியின் நிறங்களை பிரதிபலிக்கும் வகையில் அசத்தலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. 

    இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த எமோஜி கொண்டு ட்வீட் செய்து மக்கள் தேசிய ஒற்றுமை மற்றும் பாரம்பரியத்தை கொண்டாட அழைக்கிறார். மேலும் இந்திய வான்படை சார்பிலும் இந்த எமோஜி பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர ட்விட்டரில் குடியரசு தின ஹேஷ்டேக் பயன்படுத்துவோருக்கு இந்த எமோஜி தானாக சேர்ந்து கொள்ளும்.

     ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட்

    ட்விட்டரில் குடியரசு தின சிறப்பு எமோஜி ஜனவரி 30 ஆம் தேதி வரை கிடைக்கும். இது ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம், இந்தி, உருது, பஞ்சாபி, மராத்தி, பெங்காலி மற்றும் குஜராத்தி போன்ற மொழிகளிலும் கிடைக்கும். இந்திய குடியரசு தின சிறப்பு எமோஜி ஆறாவது முறையாக வழங்கப்படுகிறது.

    `இந்தியாவில் கொரோனாவைரஸ் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் காலக்கட்டத்தில் அணிவகுப்பை விர்ச்சுவல் தளத்திற்கு கொண்டுவர திட்டமிட்டோம். இந்த ஆண்டின் எமோஜி கடந்த கால பெருமைகளை சிறப்பிப்பதோடு இது மக்களை கொண்டாட்டத்திற்கு ஒன்று சேர்க்கும் சிறந்த வழியாக இருக்கிறது.' என ட்விட்டர் இந்தியா தெரிவித்து உள்ளது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் பட்ஸ் இசட் லிமிடெட் எடிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் ஒன்பிளஸ் பட்ஸ் இசட் ஸ்டீவன் ஹாரிங்டன் லிமிடெட் எடிஷன் வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. இதற்கென ஒன்பிளஸ் நிறுவனம் அமெரிக்க வடிவமைப்பாளர் ஸ்டீவன் ஹாரிங்டனுடன் கூட்டு சேர்ந்துள்ளது. 

    புதிய லிமிடெட் எடிஷன் இயர்பட்ஸ் ஸ்டீவன் ஹாரிங்டன் கைவண்ணத்தில் உருவான ஓவியங்கள் மற்றும் டிசைன்கள் இடம்பெற்று இருக்கின்றன. புதிய தோற்றம் தவிர லிமிடெட் எடிஷன் வயர்லெஸ் இயர்பட்ஸ் எந்த மாற்றமும் பெறாமல் வெளியாகி உள்ளது.

     ஒன்பிளஸ் பட்ஸ் இசட் லிமிடெட் எடிஷன்

    ஒன்பிளஸ் பட்ஸ் இசட் இயர்பட் 40 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது. இதன் சார்ஜிங் கேசில் 450 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. கனெக்டிவிட்டிக்கு ப்ளூடூத் 5 வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இது ஐபி55 தர ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதுதவிர பாஸ்ட் சார்ஜிங் வசதி, யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் மூன்று மணி நேரத்திற்கு ஆடியோ பிளேபேக் கிடைக்கிறது.

    இந்தியாவில் புதிய ஒன்பிளஸ் பட்ஸ் இசட் ஸ்டீவன் ஹாரிங்டன் லிமிடெட் எடிஷன் மாடலின் விலை ரூ. 3699 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய லிமிடெட் எடிஷன் மாடல் டூ-டோன் பர்ப்பிள் மற்றும் மிண்ட் நிறத்தில் கிடைக்கிறது. மேலும் இதற்கு ஏற்ற நிறத்தில் சார்ஜிங் கேஸ் வழங்கப்படுகிறது.

    ரியல்மி நிறுவனத்தின் புதிய எக்ஸ்7 சீரிஸ் இந்திய வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    ரியல்மி நிறுவனம் புதிய எக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டை கடந்த வாரம் உறுதிப்படுத்தியது. இந்நிலையில், புதிய ரியல்மி எக்ஸ்7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரி 4 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த சீரிசில் ரியல்மி எக்ஸ்7 மற்றும் எக்ஸ்7 ப்ரோ என இரு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய எக்ஸ் சீரிஸ் இந்திய வெளியீடு பற்றி ரியல்மி இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை. 

    தற்போதைய தகவலில் ரியல்மி எக்ஸ்7 சீரிஸ் வெளியீட்டு தேதி கொண்ட அழைப்பிதழ் ட்விட்டரில் வெளியாகி உள்ளது. அழைப்பிதழின் படி பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் ரியல்மி எக்ஸ7 மற்றும் ரியல்மி எக்ஸ்7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

     ரியல்மி எக்ஸ்7

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ரியல்மி எக்ஸ்7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர், 6.4 இன்ச் ஸ்கிரீன், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 64 எம்பி குவாட் கேமரா சென்சார், 32 எம்பி செல்பி கேமரா உள்ளிட்டவை வழங்கப்படலாம்.

    ரியல்மி எக்ஸ்7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 1000 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 64 எம்பி குவாட் கேமரா, 32 எம்பி செல்பி கேமரா, 4500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்களுக்கு அதிரடி தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 சீரிஸ், ஐபோன் 11 சீரிஸ் மற்றும் இதர ஐபோன் மாடல்களுக்கு ரூ. 16 ஆயிரம் வரையிலான சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகை மேபிள் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. 

    சலுகையின் படி ஐபோன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மேபிள் உடனடி தள்ளுபடி அதிகபட்சம் ரூ. 8 ஆயிரமும், தனியார் வங்கி கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சம் ரூ. 9 ஆயிரம் வரையிலான கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    ஒவ்வொரு ஐபோன் மாடலுக்கும் தனித்தனி தள்ளுபடி வழங்கப்படுகிறது. தள்ளுபடி மட்டுமின்றி எக்சேன்ஜ் சலுகையும் வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் ஐபோன் வாங்குவோர் ரூ. 16 ஆயிரம் வரை சேமிக்க முடியும். எக்சேன்ஜ் சலுகை மேபிள் ஸ்டோர்களில் மட்டும் பொருந்தும். 

     ஐபோன்

    ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் 128ஜிபி மாடலுக்கு ரூ. 8 ஆயிரம் தள்ளுபடி மற்றும் தனியார் வங்கி கார்டுகளுக்கு ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஐபோன் 12 ப்ரோ மாடலுக்கு ரூ. 3 ஆயிரத்து 500 தள்ளுபடி, ரூ. 5 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஐபோன் 12 மாடலுக்கு ரூ. 3 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 6 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 

    ஐபோன் 12 மினி மாடலுக்கு ரூ. 3 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 9 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. மேலும் ஐபோன் 12 மினி வாங்குவோர் பழைய ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 48,900 வரையிலான தள்ளுபடி பெறலாம். இவைதவிர ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 11, ஐபோன் XR, ஐபோன் எஸ்இ 2020 போன்ற மாடல்களுக்கும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    எல்ஜி நிறுவனம் இந்தியாவில் ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் குவாட் கேமரா சென்சார் கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.


    எல்ஜி நிறுவனம் இந்தியாவில் புதிய கே சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன் கே42 என அழைக்கப்படுகிறது. எல்ஜி கே42 ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் ஹெச்டி பிளஸ் புல்விஷன் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் எல்ஜி கே42 அமெரிக்க ராணுவ தர-MIL-STD-810G சான்று பெற்று இருக்கிறது. இதில் பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் வழங்கப்பட்டு உள்ளது.

     எல்ஜி கே42

    எல்ஜி கே42 சிறப்பம்சங்கள்

    - 6.6 இன்ச் 1600x720 பிக்சல் 20:9 ஹெச்டி பிளஸ் புல் விஷன் டிஸ்ப்ளே
    - 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
    - 650MHz IMG PowerVR GE8320 GPU
    - 3 ஜிபி ரேம்
    - 64 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 10
    - 13 எம்பி பிரைமரி கேமரா
    - 5 எம்பி 115° அல்ட்ரா வைடு சென்சார்
    - 2 எம்பி மேக்ரோ சென்சார்
    - 2 எம்பி டெப்த் சென்சார்
    - 8 எம்பி செல்பி கேமரா
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
    - MIL-STD 810G சான்று
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 4000 எம்ஏஹெச் பேட்டரி

    எல்ஜி கே42 ஸ்மார்ட்போன் கிரீன் மற்றும் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் எல்ஜி கே42 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 10,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஜனவரி 26 ஆம் தேதி துவங்குகிறது.
    ஆப்பிள் நிறுவனம் மெல்லிய, எடை குறைந்த மேக்புக் ஏர் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


    ஆப்பிள் நிறுவனம் தனது மேக்புக் ஏர் மாடலின் குறைந்த எடையில், மெல்லிய வடிவமைப்பில் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய மேக்புக் ஏர் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

    புதிய மேக்புக் ஏர் ஆப்பிள் நிறுவனத்தின் மேக்சேப் சார்ஜிங் தொழில்நுட்பம் மற்றும் அடுத்த தலைமுறை மேக் பிராசஸர்களை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. 13 இன்ச் மேக்புக் ஏர் மாடலின் ஸ்கிரீனை சுற்றியுள்ள பகுதிகளின் அளவை குறைக்கவும் ஆப்பிள் திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

     மேக்புக்

    புதிய மாடலில் 4 யுஎஸ்பி போர்ட்கள் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இது தற்சமயம் விற்பனை செய்யப்படும் மேக்புக் ஏர் மாடலின் உயர் ரக வெர்ஷனாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் தற்போதைய வெர்ஷன் என்ட்ரி-லெவல் மாடலாக இருக்கும்.

    முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாத்தில் ஆப்பிள் தனது சாதனங்களில் இன்டெல் பிராசஸர்களுக்கு மாற்றாக தனது சொந்த எம்1 மேக் சிப்களை வழங்கியது. ஆப்பிள் வரலாற்றில் பழைய சாதனமாக மேக் இருக்கிறது. இதனை ஆப்பிள் சரியாக அப்டேட் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு நலவி வந்தது. 

    தற்சமயம் புது மேக்புக் ஏர் மாடலுன் ஆப்பிள் மேக்புக் ப்ரோ மாடலை மிகப்பெரிய அப்டேட் செய்ய இருக்கிறது. மேலும் புதிய மேக்புக் ப்ரோ மாடல்களில் முன்பை போன்றே எஸ்டி கார்டு ஸ்லாட்களை வழங்கவும் ஆப்பிள் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
    ×