என் மலர்
தொழில்நுட்பம்
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் 2022 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக உருவாகி வரும் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா 45 வாட் சார்ஜிங் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. சாம்சங் நிறுவனத்தின் முந்தைய பிளாக்ஷிப் மாடல்களில் அதிகபட்சம் 25 வாட் சார்ஜிங் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், அடுத்த ஆண்டு இந்த நிலையை மாற்ற சாம்சங் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
அதன்படி கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடலில் 45 வாட் சார்ஜிங் வழங்கப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக இதே தகவல் சீன வலைதளத்திலும் இடம்பெற்று இருந்தது. இத்துடன் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடலில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த மாடலில் உள்ள 45 வாட் சார்ஜிங் ஸ்மார்ட்போனினை 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 35 நிமிடங்கள் ஆகும். முந்தைய தகவல்களின்படி சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடலில் 6.8 இன்ச் 2கே அமோலெட் டிஸ்ப்ளே, 108 எம்.பி. பிரைமரி கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 898 சிப்செட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
ரியல்மி நிறுவனத்தின் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ரியல்மி 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 2022 வாக்கில் அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் வெளியீட்டுக்கு இரு மாதங்கள் உள்ள நிலையில், ரியல்மி 9 ப்ரோ பிளஸ் விவரங்கள் ஐ.எம்.இ.ஐ. வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் ஆர்.எம்.எக்ஸ்.3393 எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருகிறது.
ரியல்மி 9 மற்றும் ரியல்மி 9 ப்ரோ மாடல்களுடன் ஒப்பிடும் போது ரியல்மி 9 ப்ரோ பிளஸ் மாடலில் உயர்-ரக அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. ரியல்மி 9 ப்ரோ பிளஸ் விலை மற்றும் ஹார்டுவேர் அம்சங்கள் இதுவரை மர்மமாகவே உள்ளது. எனினும், இதன் வெளியீடு மட்டும் உறுதியாகி இருக்கிறது.

தற்போதைய தகவல்களின் படி ரியல்மி 9 ப்ரோ பிளஸ் மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், அதிக ரிப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. முந்தைய ரியல்மி 8 ப்ரோ மாடலில் புகைப்படங்களை எடுக்க 108 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருந்தது.
பேஸ்புக் நிறுவனம் தனது மெசன்ஜர் செயலியில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்து இருக்கிறது.
பேஸ்புக் நிறுவனம் மெசன்ஜர் வீடியோ கால் மற்றும் மெசன்ஜர் ரூம்சில் குரூப் எபெக்ட்ஸ் எனும் அம்சத்தை வழங்கி இருக்கிறது. குரூப் எபெக்ட்ஸ் ஏ.ஆர். பில்டர் மற்றும் எபெக்ட்களை வழங்குகிறது. பயனர்கள் வீடியோ கால் பேசும் போது இவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மெசன்ஜர் செயலியை தொடர்ந்து விரைவில் இன்ஸ்டாகிராம் சேவையிலும் இந்த அம்சம் வழங்கப்பட இருக்கிறது. வீடியோ கால் மேற்கொள்ளும் போது குரூப் எபெக்ட்ஸ் அம்சம் அனைவருக்கும் இயங்கும். இவை மல்டி பிளேயர் கேமிங் அனுபவத்தையும் வழங்குகிறது. முதற்கட்டமாக குரூப் எபெக்ட்ஸ் அம்சத்தில் 70-க்கும் அதிக எபெக்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

உலகம் முழுக்க குரூப் எபெக்ட்ஸ் அம்சம் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. எனினும், அனைவருக்கும் இந்த அம்சம் கிடைக்க சில காலம் ஆகும் என்றே தெரிகிறது. இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறதா என்பதை அறிய மெசன்ஜர் செயலியில் வீடியோ கால் அல்லது ரூம் ஸ்டார்ட் செய்து எபெக்ட்ஸ் பகுதியில் உள்ள ஸ்மைலி முகத்தை க்ளிக் செய்ய வேண்டும். இங்கு குரூப் எபெக்ட்ஸ் ஆப்ஷன் இருக்கும்.
ஐகூ நிறுவனம் ஆண்ட்ராய்டு 12 பீட்டா அப்டேட் பெற இருக்கும் ஸ்மார்ட்போன் விவரங்களை வெளியிட்டு உள்ளது.
ஐகூ நிறுவனம் தனது ஐகூ 7, ஐகூ 7 லெஜண்ட், ஐகூ இசட்3, ஐகூ இசட்5 மற்றும் ஐகூ 3 போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 12 பீட்டா வழங்கப்படும் என அறிவித்து இருக்கிறது. இவற்றில் பெரும்பாலான மாடல்களுக்கு டிசம்பர் 2021 வாக்கில் இந்த அப்டேட் கிடைத்துவிடும்.
எனினும், ஐகூ 3 மாடலுக்கு இந்த அப்டேட் 2022 மார்ச் மாத வாக்கில் தான் வழங்கப்படும். ஆண்ட்ராய்டு 12 பீட்டா இந்த ஸ்மார்ட்போன்களில் மேம்பட்ட அனுபவத்தை வழங்கும் என ஐகூ தெரிவித்து இருக்கிறது. பீட்டா வெளியீடு படிப்படியாக நடைபெறும். இதனால் அனைவருக்கும் இந்த அப்டேட் கிடைக்க சில காலம் ஆகும்.

முன்னதாக விவோ நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 12 எப்போது கிடைக்கும் என்ற விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. வரும் நாட்களில் மேலும் பல்வேறு நிறுவனங்கள் புது அப்டேட் பற்றிய அறிவிப்பை வெளியிடலாம்.
ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஜிடிஏ டிரைலஜி டிபெனிடிவ் எடிஷன் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனம் ரி-மாஸ்டர் செய்யப்பட்ட கிராண்ட் தெப்ட் ஆட்டோ கேம்களை வெளியிட இருப்பதாக நீண்ட காலமாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், ஜிடிஏ 3, ஜிடிஏ வைஸ் சிட்டி மற்றும் ஜிடிஏ சான் ஆண்ட்ரியஸ் போன்ற கேம்கள் புது கிராபிக்ஸ் உடன் அடுத்த மாதம் வெளியாக இருக்கின்றன.
இந்த கேம்கள் ஜிடிஏ டிரைலஜி டெபனிடிவ் எடிஷன் பெயரில் நவம்பர் 11 ஆம் தேதி அறிமுகமாகிறது. ரி-மாஸ்டர் செய்யப்பட்ட ஜிடிஏ கேம்கள் பிளே ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், பிசி மற்றும் நிண்டென்டோ போன்ற சாதனங்களில் வெளியாகிறது. டிரைலஜியின் டிஜிட்டல் வெர்ஷன் மற்றும் சிடி வெர்ஷன் டிசம்பர் 7 ஆம் தேதி வெளியாகிறது.

அடுத்த ஆண்டு ஜிடிஏ டிரைலஜி மொபைல் சாதனங்களுக்கும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்தியாவில் கணினிக்கான ஜிடிஏ டிரைலஜி டிபெனிடிவ் எடிஷன் விலை ரூ. 4994.99 ஆகும். கிராண்ட் தெப்ட் ஆட்டோ 3 வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவை ஒட்டி டிரைலஜி டிபெனிடிவ் எடிஷன் வெளியாகிறது.
சாம்சங் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களின் விற்பனைக்கு திடீர் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் மாடல்கள் விற்பனைக்கு மாஸ்கோ நீதிமன்றம் தடை விதித்து இருக்கிறது. மொத்தம் 61 கேலக்ஸி போன் மாடல்களின் விற்பனையை நிறுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த பட்டியலில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி இசட் ப்ளிப் 3 மாடலும் இடம்பெற்று இருக்கிறது.
பட்டியலில் உள்ள ஸ்மார்ட்போன்களின் இறக்குமதி மற்றும் விற்பனைக்கு நீதிமன்றம் தடை விதித்து உள்ளது. விற்பனை நிறுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட்போன்கள் சுவிட்சர்லாந்தை பூர்விகமாக கொண்டு இயங்கி வரும் ஸ்க்வின் எஸ்.ஏ. எனும் நிறுவனத்தின் காப்புரிமைகளை மீறியது கண்டறியப்பட்டு இருக்கிறது.
சாம்சங் பே சேவை ஸ்க்வின் எஸ்.ஏ. நிறுவனத்தின் எலெக்டிரானிக் பேமண்ட் சிஸ்டத்தை சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. சாம்சங் தனது எலெக்டிரானிக் பேமண்ட்ஸ் சிஸ்டம் உருவாக்கும் போது ஸ்க்வின் நிறுவனம் காப்புரிமை செய்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கிறது.

ஸ்க்வின் எஸ்.ஏ. நிறுவனம் தனது பேமண்ட் சிஸ்டத்திற்கான காப்புரிமையை எட்டு ஆண்டுகளுக்கு முன்பே ரஷ்யாவில் பதிவு செய்ததாக தெரிவித்து இருக்கிறது. சாம்சங் தனது பேமண்ட் சிஸ்டத்தை 2015 ஆம் ஆண்டு அறிமுகம் செய்து ரஷ்யாவில் இதனை 2016 வாக்கில் பயன்பாட்டிற்கு வழங்கியது.
நீதிமன்ற உத்தரவு படி 2017 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஜெ5 மாடலில் துவங்கி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி இசட் போல்டு 3 மற்றும் ப்ளிப் 3 போன்ற மாடல்கள் இடம்பெற்றுள்ளன.
ஆப்பிள் நிறுவனம் சத்தமின்றி உருவாக்கி வரும் ஐபோன் எஸ்.இ.3 எல்.சி.டி. டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்.இ.3 எல்.சி.டி. டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. சக்திவாய்ந்த ஏ13 பயோனிக் சிப் மற்றும் குறைந்த விலை காரணமாக ஐபோன் எஸ்.இ. 2020 இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றது.
அந்த வரிசையில், ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எஸ்.இ.3 மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. முந்தைய ஐபோன் எஸ்.இ.2 ஐபோன் 8 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருந்தது.

புதிய ஐபோன் எஸ்.இ.3 ஐபோன் எக்ஸ்.ஆர். போன்ற டிசைன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த மாடல் நாட்ச் டிஸ்ப்ளே மற்றும் வளைந்த பிரேம் கொண்டிருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதில் பேஸ் ஐ.டி. அம்சம் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதன் கைரேகை சென்சார் போனின் பக்கவாட்டில் பொறுத்தப்பட்டு இருக்கும் என தெரிகிறது.
விவோ நிறுவனம் பன்டச் ஓ.எஸ். சார்ந்த ஆண்ட்ராய்டு 12 அப்டேட் பெறும் ஸ்மார்ட்போன்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது.
ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஓ.எஸ். பீட்டா பில்டுகளை வெளியிடும் பணிகளை ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் துவங்கி உள்ளன. விவோ நிறுவனம் பன்டச் ஓ.எஸ். சார்ந்த ஆண்ட்ராய்டு 12 பீட்டா அப்டேட் பெறும் விவோ ஸ்மார்ட்போன்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது.
விவோ நிறுவனத்தின் எக்ஸ், வி, வை மற்றும் எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு முக்கிய அப்டேட்டிற்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த பட்டியலில் விவோ நிறுவனத்தின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் மாடல்களும் இடம்பெற்று இருக்கின்றன.
விவோ எக்ஸ்70 ப்ரோ பிளஸ் மாடலுக்கு நவம்பர் மாத இறுதியில் புது அப்டேட் வழங்கப்படுகிறது.

விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ், எக்ஸ்60 ப்ரோ மற்றும் எக்ஸ்60 மாடல்களுக்கு டிசம்பர் இறுதியில் அப்டேட் கிடைக்கும்.
விவோ எக்ஸ்70 ப்ரோ, வி21இ, வி20 2021, வி20, வை21, வை51ஏ மற்றும் வை31 மாடல்களுக்கு ஜனவரி 2022 வாக்கில் அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.
விவோ எக்ஸ்50 ப்ரோ, எக்ஸ்50, வி20 ப்ரோ, வி20 எஸ்.இ., வை33எஸ், வை20ஜி, வை53 எஸ் மற்றும் வை12 எஸ் மாடல்களுக்கு மார்ச் 2022 இறுதியில் அப்டேட் கிடைக்கும்.
விவோ எஸ்1 மற்றும் வை19 மாடல்களுக்கு ஏப்ரல் 2022 துவக்கத்தில் புது அப்டேட் வழங்கப்படுகிறது.
விவோ வி17 ப்ரோ, வி17, எஸ்1 ப்ரோ, வை73, வை51, வை20, வை20ஐ மற்றும் வை30 ஸ்மார்ட்போன்களுக்கு ஏப்ரல் 2022 இறுதியில் ஆண்ட்ராய்டு 12 அப்டேட் வழங்கப்படுகிறது.
மோட்டோரோலா நிறுவனம் உருவாக்கி வரும் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் அம்சங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போன் அம்சங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் நவம்பர் மாத வாக்கில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருந்தன.
அதன்படி மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போன் எக்ஸ்.டி.2171-1 எனும் மாடல் நம்பரில் உருவாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சிப்ரஸ் 5ஜி எனும் குறியீட்டு பெயர் கொண்டிருக்கிறது. மேலும் மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போன் எப்.ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படலாம்.

புகைப்படங்களை எடுக்க 50 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 13 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
பேஸ்புக் நிறுவனத்தின் பெயர் விரைவில் மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சமூக வலைதளங்களில் உலகின் முன்னணி நிறுவனமாக பேஸ்புக் இருக்கிறது. உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர் பேஸ்புக் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். சில வாரங்களுக்கு முன் தொழில்நுட்ப கோளாறு காரணமாக உலகம் முழுவதும் பேஸ்புக் மற்றும் அந்நிறுவன சேவைகள் முடங்கின.
இந்த நிலையில் பேஸ்புக்கின் பெயரை மாற்ற அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றிய அறிவிப்பு அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெற இருக்கும் பேஸ்புக்கின் வருடாந்திர இணைப்பு மாநாட்டில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் பிரபல தொழில்நுட்ப வலைதளம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. இது பற்றிய கேள்விக்கு யூகங்கள், வதந்திகளுக்கு பதிலளிக்க முடியாது என பேஸ்புக் தெரிவித்துள்ளது. அதன்படி புதிய பெயர் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என்றே இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நோக்கியா நிறுவனத்தின் புதிய சி சீரிஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகி இருக்கிறது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா சி30 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதில் 6.82 இன்ச் ஹெச்.டி. ஸ்கிரீன், யுனிசாக் எஸ்.சி.9863ஏ பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11, இரண்டு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ், 2 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. பாலிகார்பனைட் பாடி கொண்டிருக்கும் நோக்கியா சி30 ஸ்மார்ட்போன் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

நோக்கியா சி30 அம்சங்கள்
- 6.82 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் வி நாட்ச் எல்.சி.டி. ஸ்கிரீன்
- 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் யுனிசாக் எஸ்.சி.9863ஏ பிராசஸர்
- ஐ.எம்.ஜி.8322 ஜி.பி.யு.
- 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
- 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ரய்டு 11
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ்
- 2 எம்பி டெப்த் சென்சார்
- 5 எம்பி செல்பி கேமரா
- பின்புறம் கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2
- மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட்
- 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 10 வாட் சார்ஜிங்
நோக்கியா சி30 ஸ்மார்ட்போன் கிரீன் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி + 32 ஜிபி விலை ரூ. 10,999 என்றும் 4 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 11,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
அசத்தல் அம்சங்களுடன் உருவாகி இருக்கும் ரெட்மி நோட் 11 சீரிஸ் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
சியோமியின் ரெட்மி பிராண்டு ரெட்மி நோட் 11 சீரிஸ் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. இதில் ரெட்மி நோட் 11 மற்றும் ரெட்மி நோட் 11 ப்ரோ மாடல்கள் அக்டோபர் 28 ஆம் தேதி சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதற்கான டீசர்களையும் சியோமி வெளியிட்டு உள்ளது.
டீசரின்படி புதிய ஸ்மார்ட்போன் மேட் பினிஷ் செய்யப்பட்ட பிரேம் கொண்டிருக்கிறது. இத்துடன் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஐ.ஆர். சென்சார், இரண்டாவது ஸ்பீக்கர் வெண்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் புகைப்படங்களை எடுக்க மூன்று பிரைமரி கேமராக்கள், பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, சற்றே வளைந்த திரை, பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.
ரெட்மி நோட் 11 ப்ரோ மாடலில் 67 வாட் சார்ஜர் வழங்கப்படும் என தெரிகிறது. சீன சந்தையில் புதிய ரெட்மி நோட் சீரிஸ் விற்பனை நவம்பர் 1 ஆம் தேதி துவங்குகிறது. வரும் நாட்களில் இந்த ஸ்மார்ட்போனின் இதர விவரங்கள் வெளியாகும் என தெரிகிறது.






