என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன.


    கூகுள் நிறுவனம் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களை பால் நிகழ்வில் அறிமுகம் செய்தது. பிக்சல் 6 மாடலில் 6.4 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் ஒ.எல்.இ.டி. டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. பிக்சல் 6 ப்ரோ மாடலில் 6.7 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் ஒ.எல்.இ.டி. டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் வேரியபில் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இரு மாடல்களிலும் கூகுள் டென்சார் பிராசஸர், டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப், ஆண்ட்ராய்டு 12, ஐந்து ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட், மூன்று ஆண்டுகளுக்கு ஓ.எஸ். அப்டேட் வழங்கப்படுகிறது. இரு மாடல்களிலும் 50 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. பிக்சல் 6 ப்ரோ மாடலில் 48 எம்பி டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 

     கூகுள் பிக்சல் 6 ப்ரோ

    பிக்சல் 6 மாடலில் 8 எம்பி செல்பி கேமரா, பிக்சல் 6 ப்ரோ மாடலில் 11 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இவை முறையே கார்னிங் கொரில்லா கிளாஸ் 6, கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு கொண்டிருக்கின்றன. பேட்டரியை பொருத்தவரை பிக்சல் 6 மாடலில் 4614 எம்.ஏ.ஹெச். பேட்டரியும், பிக்சல் 6 ப்ரோ மாடலில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியும் வழங்கப்பட்டு உள்ளது.

    பிக்சல் 6 மாடல் ஸ்டாமி பிளாக், கைண்டா கோரல் மற்றும் சோர்டா சீபோம் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி + 128 ஜிபி விலை 599 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 44,970, 8 ஜிபி + 256 ஜிபி விலை 699 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 52,480 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    பிக்சல் 6 ப்ரோ மாடல் ஸ்டாமி பிளாக், சோர்டா சன்னி மற்றும் கிளவுடி வைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் 12 ஜிபி + 128 ஜிபி விலை 899 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 67,490 என்றும் 12 ஜிபி + 256 ஜிபி விலை 999 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 74,995 என்றும் 12 ஜிபி + 512 ஜிபி விலை 1099 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 82,500 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் தனது சாதனங்களை சுத்தம் செய்ய மென்மையான சிறு துணியை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.


    ஆப்பிள் நிறுவனம் அன்லீஷ்டு 2021 நிகழ்வில் புதிய சாதனங்களை அறிமுகம் செய்தது. இவற்றில் புதிய மேக்புக் ப்ரோ 14 இன்ச், 16 இன்ச் மேக்புக் ப்ரோ, ஏர்பாட்ஸ் 3 போன்ற சாதனங்கள் அடங்கும். விர்ச்சுவல் நிகழ்வு நிறைவுற்றதும் ஆப்பிள் துணி ஒன்றை தனது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தது.

    இந்த துணியை கொண்டு ஐபோன், ஐபேட், மேக்புக், ஏர்பாட்ஸ் மற்றும் இதர ஆப்பிள் நிறுவன சாதனங்களை சுத்தம் செய்ய முடியும். துணிக்கான விவர குறிப்பில் அனைத்து ஆப்பிள் சாதனங்களின் டிஸ்ப்ளேக்கள், நானோ-டெக்ஸ்ச்சர் கிளாஸ் சுத்தம் செய்யலாம் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     பாலிஷிங் துணி

    மென்மையான துணியின் மீது ஆப்பிள் லோகோ இடம்பெற்று இருக்கிறது. இந்தியாவில் இந்த துணியின் விலை ரூ. 1900 ஆகும். இது ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த துணியினை தற்போது சந்தையில் கிடைக்கும் அனைத்து ஆப்பிள் சாதனங்களிலும் பயன்படுத்தலாம் என ஆப்பிள் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடல் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்22 சீரிஸ் மாடல்களை அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறது. எனினும், புதிய சாம்சங் பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் சீரிஸ் பற்றிய விவரங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி வருகின்றன.

    அதன்படி தற்போது வெளியாகி இருக்கும் தகவலில், கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடல் வாட்டர் டிராப் நாட்ச் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. பின்புற கேமராக்கள் தற்போது விற்பனை செய்யப்படும் சில கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்களில் உள்ளதை போன்றே பொறுத்தப்படும் என தெரிகிறது.

     சாம்சங் கேலக்ஸி எஸ்21 சீரிஸ்

    இவைதவிர புதிய கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா பற்றிய இதர விவரங்கள் மர்மமாகவே இருக்கின்றன. முந்தைய தகவல்களில் கேலக்ஸி எஸ்22 சீரிஸ் சாம்சங்கின் கேலக்ஸி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு மாற்றாக உருவாக்கப்படுகிறது என கூறப்பட்டது.
    விவோ நிறுவனத்தின் புதிய வை சீரிஸ் ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.


    விவோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்போனினை வை சீரிசில் அறிமுகம் செய்தது. இதில் 6.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஹாலோ புல்வியூ டிஸ்ப்ளே, 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்பி கேமரா, ஹீலியோ பி35 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

     விவோ வை3எஸ்

    விவோ வை3எஸ் அம்சங்கள் 

    - 6.51 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன்
    - ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர்
    - ஐ.எம்.ஜி. பவர் வி.ஆர். ஜிஇ8320 ஜிபியு
    - 2 ஜிபி ரேம்
    - 32 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் பன்டச் ஓ.எஸ். 11
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ்
    - 5 எம்பி செல்பி கேமரா
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - மைக்ரோ யு.எஸ்.பி. 
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 10 வாட் சார்ஜிங்

    விவோ வை3எஸ் ஸ்மார்ட்போன் ஸ்டேரி புளூ, பியல் வைட் மற்றும் மிண்ட் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 9490 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் விவோ இந்தியா இ ஸ்டோர், அமேசான், ப்ளிப்கார்ட் வலைதளங்கள் மற்றும் ஆப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் அன்லீஷ்டு நிகழ்வில் ஆப்பிள் சாதனங்கள் அப்டேட் செய்யப்பட்டன.


    ஆப்பிள் அன்லீஷ்டு நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. ஆப்பிள் மியூசிக் சேவையில் துவங்கி, ஏர்பாட்ஸ் 3, மேக்புக் ப்ரோ என புதிய இயர்பட்ஸ், பிராசஸர்களை ஆப்பிள் அறிமுகம் செய்தது.

    இத்துடன் ஆப்பிள் வாய்ஸ் பெயரில் புதிய சந்தா முறை அறிவிக்கப்பட்டது. இதில் சிரியை கொண்டு ஆப்பிள் மியூசிக் சேவையை இயக்க முடியும். 

    இத்துடன் ஹோம்பாட் மினி சார்ந்த அறிவிப்புகளும் வெளியாகின. அந்த வகையில் ஹோம்பாட் மினி கொண்டு ஆப்பிள் மியூசிக் சேவையை சிறப்பாக இயக்க முடியும். ஹோம்பாட் மினி புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டன. இதன் விலை ரூ. 9,900 ஆகும்.

    ஏர்பாட்ஸ் 3

    ஏர்பாட்ஸ் 3

    ஆப்பிள் நிகழ்வில் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்ட ஏர்பாட்ஸ் 3 அறிமுகம் செய்யப்பட்டது. இதில் உள்ள புதிய சென்சார்கள் இசையின் அனுபவத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. புதிய ஏர்பாட்ஸ் 3 அனைவரின் காதுகளிலும் கச்சிதமாக பொருந்தி கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

    இதில் அடாப்டிவ் இ.கியூ. அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஏர்பாட்ஸ் 3 விலை ரூ. 18,500 ஆகும். இத்துடன் ஏர்பாட்ஸ் ப்ரோ, மற்றும் ஏர்பாட்ஸ் ப்ரோ மேக்ஸ் மாடல்களில் புதிதாக ஸ்பேஷியல் ஆடியோ அம்சம் சேர்க்கப்படுவதாக ஆப்பிள் அறிவித்து இருக்கிறது.

     எம்1 சீரிஸ் பிராசஸர்

    எம்1 சீரிஸ் பிராசஸர்கள்

    ஆப்பிள் நிறுவனம் எம்1 மேக்ஸ் மற்றும் எம்1 ப்ரோ பெயரில் புதிய பிராசஸர்களை அறிமுகம் செய்து இருக்கிறது. எம்1 மேக்ஸ் மாடலில் 57 பில்லியன் டிரான்சிஸ்டர்கள் உள்ள. இதில் அதிகபட்சம் 64 ஜிபி யுனிபைடு மெமரி, நான்கு டிஸ்ப்ளேக்களை சப்போர்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த பிராசஸர் 5 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் 10 கோர்கள் கொண்ட சிபயு மற்றும் 32 கோர்கள் கொண்ட ஜிபியு வழங்கப்பட்டு உள்ளது. இதன் 16 கோர் நியூரல் என்ஜின் ஒரே நொடியில் பல கோடி செயல்களை புரியும் திறன் கொண்டிருக்கிறது.

    புதிய எம்1 ப்ரோ சிப்செட் அதிகபட்சம் 2 டிஸ்ப்ளேக்களை சப்போர்ட் செய்யும். இதில் 32 ஜிபி யுனிபைடு மெமரி  வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 33.7 பில்லியன் டிரான்சிஸ்டர்கள் உள்ளன. மேலும் இது 10 கோர் சிபியு மற்றும் 16 கோர் ஜிபியு கொண்டுள்ளது. இந்த பிராசஸரும் 5 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

     புதிய மேக்புக் ப்ரோ

    புதிய மேக்புக் ப்ரோ மாடல்கள்

    ஆப்பிள் நிறுவனம் புதிய மேக்புக் ப்ரோ மாடல்களை 14 இன்ச் மற்றும் 16 இன்ச் என இருவித அளவுகளில் அறிமுகம் செய்தது. இரு மாடல்களிலும் மேஜிக் கீபோர்டு, ஹெட்போன் ஜாக், மேக்சேப் வசதி, ரெட்டினா டிஸ்ப்ளே, மெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய மேக்புக் ப்ரோ எம்1 மேக்ஸ் மற்றும் எம்1 ப்ரோ சிப்செட்களுடன் கிடைக்கின்றன. இவை மேக்புக் ப்ரோ மாடல்களில் இதுவரை இல்லாத வகையில் சிறப்பான செயல்திறன் வழங்குகின்றன. மேலும் புதிய மேக்புக் ப்ரோ மாடலில் 1080 பிக்சல் பேஸ்டைம் ஹெச்.டி. கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இது தலைசிறந்த வீடியோ, ஸ்மார்ட் ஹெச்.டி.ஆர். போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

    புதிய மேக்புக் ப்ரோ மாடலில் லிக்விட் ரெட்டினா எக்ஸ்.டி.ஆர். டிஸ்ப்ளே, மினி எல்.இ.டி. தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. மேக் ஓ.எஸ். மான்டெரி மூலம் இயங்கும் புதிய மேக்புக் ப்ரோ அதிகபட்சம் 8 டிபி வரையிலான ஸ்டோரேஜ், அதிகபட்சம் 64 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மேக்புக் ப்ரோவில் உள்ள பேட்டரி அதிகபட்சம் 21 மணி நேர வீடியோ பிளேபேக் வழங்குகிறது.

    ஆப்பிள் அறிமுகம் செய்து இருக்கும் புதிய மேக்புக் ப்ரோ 14 இன்ச் மாடல் விலை இந்தியாவில் ரூ. 1,94,900 என்றும் ரூ. 2,39,900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 16 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல் விலை ரூ. 2,39,900, ரூ. 2,59,900 மற்றும் ரூ. 3,29,900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 
    ஆப்பிள் நிறுவனம் தனது சாதனங்களில் வழங்க இருக்கும் இரண்டு புதிய சக்திவாய்ந்த சிப்செட்களை அறிமுகம் செய்தது.


    ஆப்பிள் நிறுவனம் தனது புதிய சிப்செட்களை அறிமுகம் செய்தது. இவை எம்1 மேக்ஸ் மற்றும் எம்1 ப்ரோ என அழைக்கப்படுகிறன. எம்1 மேக்ஸ் மாடலில் 57 பில்லியன் டிரான்சிஸ்டர்கள் உள்ள. இதில் அதிகபட்சம் 64 ஜிபி யுனிபைடு மெமரி, நான்கு டிஸ்ப்ளேக்களை சப்போர்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த பிராசஸர் 5 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் 10 கோர்கள் கொண்ட சிபயு மற்றும் 32 கோர்கள் கொண்ட ஜிபியு வழங்கப்பட்டு உள்ளது. இதன் 16 கோர் நியூரல் என்ஜின் ஒரே நொடியில் பல கோடி செயல்களை புரியும் திறன் கொண்டிருக்கிறது.

     ஆப்பிள் எம்1 ப்ரோ

    புதிய எம்1 ப்ரோ சிப்செட் அதிகபட்சம் 2 டிஸ்ப்ளேக்களை சப்போர்ட் செய்யும். இதில் 32 ஜிபி யுனிபைடு மெமரி  வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 33.7 பில்லியன் டிரான்சிஸ்டர்கள் உள்ளன. மேலும் இது 10 கோர் சிபியு மற்றும் 16 கோர் ஜிபியு வழங்கப்பட்டு உள்ளது. இந்த பிராசஸரும் 5 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஏர்பாட்ஸ் 3 அடாப்டிவ் இ.கியூ. எனும் அம்சம் கொண்டிருக்கிறது.


    ஆப்பிள் நிறுவனத்தின் அன்லீஷ்டு நிகழ்வில் ஆப்பிள் மியூசிக் மற்றும் ஹோம்பாட் பற்றிய அறிவிப்புகளை தொடர்ந்து ஏர்பாட்ஸ் 3 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. 

    ஏர்பாட்ஸ் ப்ரோ, மற்றும் ஏர்பாட்ஸ் ப்ரோ மேக்ஸ் மாடல்களில் புதிதாக ஸ்பேஷியல் ஆடியோ அம்சம் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்ட ஏர்பாட்ஸ் 3 அறிமுகம் செய்யப்பட்டது. இதில் உள்ள புதிய சென்சார்கள் இசையின் அனுபவத்தை மேம்படுத்துகிறது. 

     ஆப்பிள், ஆப்பிள் ஏர்பாட்ஸ் 3

    மேலும் இது வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. புதிய ஏர்பாட்ஸ் 3 அனைவரின் காதுகளிலும் கச்சிதமாக பொருந்தி கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் அடாப்டிவ் இ.கியூ. அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஏர்பாட்ஸ் 3 விலை 129 டாலர்கள் என துவங்குகிறது. 
    நோக்கியா எக்ஸ்.ஆர்.20 ரக்கட் 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் கொண்டிருக்கிறது.


    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா எக்ஸ்.ஆர்.20 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதில் 6.67 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 5ஜி பிராசஸர், ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஓசோ ஸ்பேஷியல் ஆடியோ, புதிய ஸ்பீடுவார்ப் மோட் உள்ளது. 

     நோக்கியா எக்ஸ்.ஆர்.20

    புதிய நோக்கியா எக்ஸ்.ஆர்.20 ஸ்மார்ட்போன் 4630 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. பேட்டரியை சார்ஜ் செய்ய 18 வாட் வயர்டு பாஸ்ட் சார்ஜிங், 15 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார், கூகுள் அசிஸ்டண்ட் பட்டன், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் வழங்கப்பட்டுள்ளது.

    நோக்கியா எக்ஸ்.ஆர்.20 ஸ்மார்ட்போன் கிராணைட் மற்றும் அல்ட்ரா புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 46,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு அக்டோபர் 20 முதல் அக்டோபர் 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விற்பனை அக்டோபர் 30 ஆம் தேதி துவங்குகிறது.
    டி.சி.எல். நிறுவனம் பல்வேறு ஸ்மார்ட் அம்சங்கள் நிறைந்த கண்ணாடியை அறிமுகம் செய்து இருக்கிறது.


    டி.சி.எல். தண்டர்பேர்டு ஸ்மார்ட் கிளாஸ் பாயினீர் எடிஷன் சீன சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட் கிளாஸ்களில் மைக்ரோ எல்.இ.டி. டிஸ்ப்ளே, டி.சி.எல். உருவாக்கிய வேவ்-கைடு வழங்கப்பட்டு இருக்கிறது. 

    தோற்றத்தில் இந்த ஸ்மார்ட் கிளாஸ் சாதாரன கண்ணாடிகளை போன்றே காட்சியளிக்கிறது. இதில் இன்பில்ட் கேமரா உள்ளது. இந்த கண்ணாடி ஒரே சமயத்தில் பல்வேறு ஸ்கிரீன்களை ஒளிபரப்பும். இந்த ஸ்மார்ட் கிளாஸ் அழைப்புகளை மேற்கொள்வது, ஆக்மென்டெட் ரியாலிட்டியில் நேவிகேஷன் மற்றும் புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்டுள்ளது.

     டி.சி.எல். தண்டர்பேர்டு ஸ்மார்ட் கிளாஸ்

    தண்டர்பேர்டு ஸ்மார்ட் கிளாஸ் பாயினீர் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இதன் விலை மற்றும் விற்பனை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. இந்த ஸ்மார்ட் கிளாஸ் முதற்கட்டமாக சீனாவிலும் அதன் பின் சர்வதேச சந்தைகளிலும் விற்பனைக்கு வருகிறது.
    பி.எஸ்.என்.எல். நிறுவன வாடிக்கையாளர்களுக்கு இலவச பிராட்பேண்ட் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பாரத் பைபர் மற்றும் டி.எஸ்.எல். சந்தாதாரர்களுக்கு அதிகபட்சம் நான்கு மாதங்களுக்கு இலவச பிராட்பேண்ட் சேவையை வழங்குகிறது. இதே சலுகை பி.எஸ்.என்.எல். லேண்ட்லைன் மற்றும் பிராட்பேண்ட் ஓவர் வைபை சந்தாதாரர்களுக்கும் வழங்கப்படுகிறது.

    அந்தமான் நிகோபர் தீவுகள் தவிர்த்து நாடு முழுக்க ஒரே கட்டண முறையை பி.எஸ்.என்.எல். வழங்கி வருகிறது. பாரத் பைபர் சேவையில் பைபர்-டுஹோம் பிராட்பேண்ட் சேவை வழங்கப்படுகிறது. இதற்கான மாதாந்திர கட்டணம் ரூ. 449 முதல் துவங்குகிறது.

     கோப்புப்படம்

    நான்கு மாதங்களுக்கான இலவச சேவையை பெற பாரத் பைபர், டி.எஸ்.எல்., லேண்ட்லைன் மற்றும் பிராட்பேண்ட் ஓவர் வைபை வாடிக்கையாளர்கள் ஒரே கட்டமாக 36 மாதங்களுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். அதன்படி 36 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்யும் போது 40 மாதங்களுக்கு சேவையை பயன்படுத்தலாம்.

    36 மாதங்கள் மட்டுமின்றி 24 மாதங்களுக்கு கட்டணம் செலுத்தும் போது மூன்று மாதங்களும், 12 மாதங்களுக்கு கட்டணம் செலுத்தும் போது கூடுதலாக ஒரு மாதத்திற்கும் இலவச பிராட்பேண்ட் சேவையை பெறலாம். இந்த சலுகையை பெற 1800003451500 என்ற எண்ணிற்கு அழைப்பை மேற்கொள்ள வேண்டும்.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    ஒன்பிளஸ் 9ஆர்.டி. ஸ்மார்ட்போனின் இந்திய விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. வரும் வாரங்களில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிகிறது. 

    புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 9ஆர் மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக அறிமுகமாகிறது. ஒன்பிளஸ் 9ஆர்.டி. மாடலில் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 120 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

     ஒன்பிளஸ் 9ஆர்.டி.

    இந்தியாவில் ஒன்பிளஸ் 9ஆர்.டி. விலை ரூ. 40 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 44 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் ரூ. 42,999 துவக்க விலையில் அறிமுகமானது. சீனாவில் ஒன்பிளஸ் 9ஆர்.டி. விலை இந்திய மதிப்பில் ரூ. 38,400 என துவங்குகிறது.
    நத்திங் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய சாதனம் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.


    லண்டனை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான நத்திங் தனது இயர் 1 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்தது. அறிமுகமான இரண்டு மாதங்களில் இந்த இயர்பட்ஸ் ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. 

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் நத்திங் நிறுவனம் புதிதாக ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. நத்திங் நிறுவனத்தின் இணை நிறுவனர் கார்ல் பெய் எசென்ஷியல் நிறுவன காப்புரிமைகளை நத்திங் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக ஏற்கனவே தெரிவித்து இருந்தார். 

     நத்திங் குவால்காம்

    அதன்படி எசென்ஷியல் காப்புரிமைகளை கொண்டு நத்திங் ஸ்மார்ட்போன் உருவாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என தெரிகிறது. சில தினங்களுக்கு முன் குவால்காம் நிறுவன சிப்செட்களை தனது புதிய சாதனங்களில் பயன்படுத்த இருப்பதாக நத்திங் அறிவித்தது.

    ஸ்மார்ட்போன் மட்டுமின்றி பவர் 1 பெயரில் பவர் பேங்க் ஒன்றை நத்திங் உருவாக்கி வருவதாகவும், வரும் வாரங்களில் இது அறிமுகமாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    ×