என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஒப்போ நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது.


    ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ கே9எஸ் ஸ்மார்ட்போன் அக்டோபர் 20 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்தது. முன்னாக இதே ஸ்மார்ட்போன் விவரங்கள் சீன வலைதளம் ஒன்றில் இடம்பெற்று இருந்தது.

    அதன்படி புதிய ஒப்போ கே9எஸ் மாடலில் 6.59 இன்ச் புல் ஹெச்.டி. பிளஸ் 120 ஹெர்ட்ஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. 

     ஒப்போ கே9எஸ்

    இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த் அல்லது மேக்ரோ லென்ஸ், 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது.

    புதிய ஒப்போ ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 30 வாட் வூக் 4.0 பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பர்பில், நியான் சில்வர் மற்றும் அப்சிடியன் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. 
    ஒப்போ நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இசட் போல்டு 3 மாடலுக்கு போட்டியாக உருவாக்கப்படுகிறது.


    ஒப்போ நிறுவனம் புதிதாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 3 மற்றும் கேலக்ஸி இசட் ப்ளிப் 3 மாடலுக்கு போட்டியாக அமைகிறது.

    புதிய ஒப்போ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 7.8 இன்ச் திரை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 50 எம்பி பிரைமரி கேமரா, 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

     ஒப்போ ஸ்மார்ட்போன் கோப்புப்படம்

    இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார், கலர் ஓ.எஸ். 12 மற்றும் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. ஒப்போவின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய இதர விவரங்கள் வரும் வாரங்களில் வெளியாகலாம்.
    வாட்ஸ்அப் செயலியை இரவு நேரங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.


    இந்தியா முழுக்க இரவு நேரம் வாட்ஸ்அப் செயலியை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறும் தகவல் வாட்ஸ்அப் செயலியில் வலம்வருகிறது. பேஸ்புக்கின் வாட்ஸ்அப் செயலி இரவு 11.30 மணி முதல் காலை 6.00 மணி வரை முடக்கப்படுவதாக வைரல் தகவலில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இந்த தகவலை மற்றவர்களுக்கு பார்வேர்டு செய்யவில்லை எனில், பயனர்களின் அக்கவுண்ட்கள் டி-ஆக்டிவேட் செய்யப்படும். டி-ஆக்டிவேட் ஆன வாட்ஸ்அப் அக்கவுண்ட்-ஐ இயக்க மாதம் ரூ. 500 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த தகவலை சரியாக மற்றவர்களுக்கு பார்வேர்டு செய்வோருக்கு புதிதாக பாதுகாப்பான அக்கவுண்ட் ஆக்டிவேட் செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட்

    வைரல் தகவல் குறித்த இணைய தேடல்களில் மத்திய அரசு இதுபோன்று எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை என தெரியவந்துள்ளது. மேலும் வாட்ஸ்அப் சார்பிலும் இதுகுறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அந்த வகையில் வைரல் தகவலில் உள்ளது போன்று வாட்ஸ்அப் இரவு நேரங்களில் முடக்கப்படாது என்பது உறுதியாகிவிட்டது.
    அசத்தல் அம்சங்கள் நிறைந்த நோக்கியா எக்ஸ்.ஆர்.20 ரக்கட் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.


    ஹெச்.எம்.டி. குளபோல் நிறுவனம் நோக்கியா எக்ஸ்.ஆர்.20 ஸ்மார்ட்போனினை அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் ஜூலை மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு அக்டோபர் 20 ஆம் தேதி துவங்குகிறது.

    இந்த ஸ்மார்ட்போன் கிரானைட் மற்றும் அல்ட்ரா புளூ நிறங்களில் கிடைக்கிறது. அம்சங்களை பொருத்தவரை நோக்கியா எக்ஸ்.ஆர்.20 மாடலில் 6.67 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர், அட்ரினோ 619 ஜி.பி.யு. வழங்கப்படுகிறது.

     நோக்கியா எக்ஸ்.ஆர்.20

    இத்துடன் 6 ஜிபி + 128 ஜிபி மெமரி, ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 11, 48 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 8 எம்பி செல்பி கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், வாட்டர் ரெசிஸ்டண்ட், 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப் சி, 4630 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 13 சீரிஸ் மாடல்களின் உற்பத்தியை நிறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ஆப்பிள் தனது சாதனங்களுக்கு சிறந்த முறையில் உதிரிபாகங்களை பெறுவதில் பிரசித்தி பெற்ற நிறுவனம் ஆகும். எனினும், தற்போது உலக சந்தையில் ஏற்பட்டுள்ள சிப்செட் குறைபாடு பிரச்சினையில் ஆப்பிள் நிறுவனமும் சிக்கியுள்ளது. சிப்செட் குறைபாடு காரணமாக ஆப்பிள் ஐபோன் உற்பத்தியை நிறுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பிராட்காம் மற்றும் டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் போன்ற நிறுவனங்களிடம் இருந்து உதிரிபாகங்களை பெறுவதில் ஆப்பிள் நிறுவனம் சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. ஐபோன் 13 சீரிசுக்கு கடும் வரவேற்பு கிடைப்பதை தொடர்ந்து இரு நிறுவனங்களால் ஆப்பிளுக்கு தேவையான உதிரிபாகங்களை வினியோகம் செய்ய முடியவில்லை என தெரிகிறது.

     ஐபோன் 13 ப்ரோ

    செப்டம்பரில் விற்பனைக்கு வந்த ஐபோன் 13 ப்ரோ மாடல்கள் தற்போதைய சூழலில், அக்டோபர் மாத இறுதியில் தான் வினியோகம் செய்யப்படும் என்ற நிலையில் உள்ளது. பெரும்பாலான ஆப்பிள் ஸ்டோர்களில் ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் பட்டியலிடப்படவே இல்லை.
    ரியல்மி நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் கொண்டிருக்கிறது.


    ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 6.62 இன்ச் புல் ஹெச்.டி. பிளஸ் இ4 அமோலெட் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.2, யு.எஸ்.பி. டைப் சி மற்றும் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 65 வாட் அல்ட்ரா பாஸ்ட் பிளாஷ் சார்ஜிங் கொண்டிருக்கிறது.

    ரியல்மி ஜிடி நியோ 2

    புதிய ரியல்மி ஜிடி நியோ 2 மாடல் நியோ கிரீன், நியோ புளூ மற்றும் நியோ பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 31,999 என்றும் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 35,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    எனினும், பண்டிகை கால விற்பனையில் இந்த ஸ்மார்ட்போன் முறையே ரூ. 24,999 மற்றும் ரூ. 28,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சலுகை குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது.
    சியோமி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.


    சியோமி நிறுவனம் புதிய சிவி சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இது சியோமியின் சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன் ஆகும். தற்போது சியோமியின் எம்.ஐ. 12 சீரிஸ் மாடல்கள் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

    புதிய சியோமி எம்.ஐ. 12 மாடல் முந்தைய ஸ்மார்ட்போன்களை விட எடை குறைவாக இருக்கும் என்றும் இதன் அம்சங்கள் முன்பை விட மேம்பட்டு இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 898 பிராசஸர் கொண்டிருக்கும். இந்த பிராசஸர் கொண்டு வெளியாகும் உலகின் முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 

     சியோமி ஸ்மார்ட்போன்

    மற்ற அம்சங்களை பொருத்தவரை 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, மிக மெல்லிய பாடி, வளைந்த டிஸ்ப்ளே, அதிக ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, 50 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் அன்லீஷ்டு நிகழ்வு தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஆப்பிள் நிறுவனம் அக்டோபர் 18 ஆம் தேதி அன்லீஷ்டு நிகழ்வு நடைபெறும் என அறிவித்து இருக்கிறது. இந்த நிகழ்வில் புதிய எம்1எக்ஸ் பிராசஸர் கொண்ட மேக்புக் ப்ரோ மாடல்கள், புதிய ஏர்பாட்ஸ் போன்ற சாதனங்கள் அறிமுகம் செய்யப்படலாம். 

    இத்துடன் மேக்ஓ.எஸ். மாண்டெரி பற்றிய விவரங்களும் அறிவிக்கப்படலாம். முன்னதாக இந்த ஓ.எஸ். 2021 டெவலப்பர்கள் நிகழ்வில் அறிவிக்கப்பட்டது. புதிய எம்1எக்ஸ் 10 சி.பி.யு. கோர்கள் மற்றும் 16 சி.பி.யு. கோர்கள் என இரண்டு வெர்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. 



    முந்தைய தகவல்களின்படி புதிய மேக்புக் ப்ரோ 14 இன்ச் மற்றும் 16 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் மேம்பட்ட இண்டஸ்ட்ரியல் டிசைன், அதிக ஹெச்.டி.எம்.ஐ. மற்றும் எஸ்டி கார்டு போர்ட்கள், மினி எல்.இ.டி. டிஸ்ப்ளே வழங்கப்படலாம். 

    மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி புதிய இ சீரிஸ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது.


    மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் மோட்டோ இ40 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் மேக்ஸ்விஷன் டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், யுனிசாக் டி700 பிராசஸர், 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ லென்ஸ், 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் மோட்டோ இ40 மாடலில் கூகுள் அசிஸ்டண்ட் பட்டன், ஐ.பி. 52 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.

     மோட்டோ இ40

    புதிய மோட்டோ இ40 ஸ்மார்ட்போன் பின்க் கிளே மற்றும் கார்பன் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 9,499 ஆகும். இது ப்ளிப்கார்ட் தளத்தில் அக்டோபர் 17 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.
    விவோ நிறுவனத்தின் புதிய வை சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். கொண்டிருக்கிறது.


    விவோ நிறுவனம் இந்திய சந்தையில் வை20டி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் 6.51 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஹாலோ புல் வியூ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 6 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.

    இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 8 எம்பி செல்பி கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார், பன்டச் ஒ.எஸ்.11.1 மற்றும் ஆண்ட்ராய்டு 11 வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.

     விவோ வை20டி

    விவோ வை20டி ஸ்மார்ட்போன் அப்சிடியன் பிளாக் மற்றும் பியூரிஸ்ட் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ. 15,490 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    ப்ளிப்கார்ட் வலைதளத்தில் பண்டிகை காலத்தை ஒட்டி அசத்தல் தள்ளுபடிகளுடன் சிறப்பு விற்பனை நடைபெற்றது.


    ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை நேற்று (அக்டோபர் 10) நிறைவுற்றது. சிறப்பு விற்பனை மாபெரும் வெற்றி பெற்றதோடு, பல்வேறு சாதனைகளை படைத்தது என ப்ளிப்கார்ட் அறிவித்து இருக்கிறது. விற்பனையை வெற்றிபெற செய்ததற்கு வாடிக்கையாளர்களுக்கு ப்ளிப்கார்ட் நன்றி தெரிவித்தது.

    மேலும் வாரம் முழுக்க நடைபெற்ற சிறப்பு விற்பனையில் வாடிக்கையாளர்கள் ரூ. 11,500 கோடியை சேமித்துள்ளனர். இதுதவிர விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களை ஒன்றன்மேல் ஒன்று அடுக்கினால் ஆயிரம் புர்ஜ் கலிபா கட்டிடங்களை விட உயரமாக இருக்கும் என ப்ளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

     ப்ளிப்கார்ட் ஸ்கிரீன்ஷாட்

    சிறப்பு விற்பனையில் மொத்தம் 3.75 லட்சம் விற்பனையாளர்கள் பங்கேற்றனர். இந்த விற்பனையின் ஒவ்வொரு இரண்டு நொடிகளுக்கும் ஒரு வாட்ச் விற்பனையாகி இருக்கிறது. ஒரு மணி நேரத்தில் விற்பனையான தேநீர் தூள் கொண்டு 50 லட்சம் கோப்பை தேநீர் போட முடியும். 

    மேலும் 24 மணி நேரத்தில் 1.2 லட்சம் சாக்லேட்கள் விற்பனையாகி இருக்கின்றன. சிறப்பு விற்பனையின் போது விற்ற ஷூ பெட்டிகளை ஒன்றன் மீது ஒன்று அடுக்கினால் இமய மலையை விட 100 மடங்கு உயரமாக இருக்கும். இதில் விற்பனையான எண்ணெய் கொண்டு 9 லட்சம் பிரென்ச் பிரைஸ் செய்ய முடியும். 

    ஐகூ நிறுவனம் உருவாக்கி வரும் புதிய இசட் சீரிஸ் ஸ்மார்ட்போன் சீனாவில் சான்று பெற்று இருக்கிறது.


    ஐகூ நிறுவனத்தின் இசட்5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் சீனாவின் டி.இ.என்.ஏ.ஏ. வலைதளத்தில் சான்று பெற்று இருக்கிறது. அதன்படி புதிய ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் ரக எல்.சி.டி. ஸ்கிரீன், மீடியாடெக் டிமென்சிட்டி 900 பிராசஸர், 50 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்டிருக்கும் என தெரிகிறது.

     ஐகூ இசட்5

    ஐகூ இசட்5எக்ஸ் 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

    - 6.58 இன்ச் 2408x1080 பிக்சல் எப்.ஹெச்.டி. பிளஸ் 120 ஹெர்ட்ஸ் எல்.சி.டி. ஸ்கிரீன்
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 900 பிராசஸர்
    - மாலி ஜி68 எம்.சி.4 ஜிபியு
    - 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
    - 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒரிஜின் ஓ.எஸ். 1.0
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 50 எம்பி பிரைமரி கேமரா 
    - 2 எம்பி மேக்ரோ கேமரா
    - 16 எம்பி செல்பி கேமரா
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர், ஹை-ரெஸ் ஆடியோ
    - 5ஜி எஸ்.ஏ. / என்.எஸ்.ஏ., டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2
    - யு.எஸ்.பி. டைப் சி
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 44 வாட் பாஸ்ட் சார்ஜிங்
    ×